ஒரு காலத்தில் ட்ராவல் செய்யப் போகிறோம் என்றாலே வீட்டிலிருந்து தூக்குசட்டியில் உணவு எடுத்துப் போன காலம் உண்டு. கடந்த இருபது வருடங்களில் ஹைவே உணவங்கள் மிக பிரபலமாக, பல உணவகங்கல் நல்ல தரத்துடன் இருக்க, பயணங்களில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லாமல் போனது. பயணங்களில் வெஜ் உணவுதான் சேஃப் என்ற ஒரு எண்ணத்தை ஒரு சில உணவங்கள் மாற்ற ஆரம்பித்தது. அப்படியான ஒரு உணவகம் தான் இந்த டி.கே மாப்பிள்ளை மெஸ். இனி நாம் நல்ல நல்ல நான் -வெஜ் உணவுக்காக 99-100 கி.மிட்டர் எல்லாம் பயணப்பட தேவையில்லை. சென்னையிலிருந்து திருச்சி ரோட்டில் சரியாய் 77வது கி.மீட்டரில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. நல்ல இண்டீரியருடன் ஏசி உணவகம். உள்ளே நுழைந்ததும் அவர்கள் போட்டிருந்த அறிவுப்பு போர்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தியது.அஜினோமோட்டோ என்கிற சேர்க்கையே அவர்களின் உணவுகளில் கிடையாது என்றிருந்தார்கள். அதே போல பார்ப்பிக்யூ உணவுகளை சமைப்பதற்கு சல்பர் சார்க்கோல் உபயோகிக்காமல் சமைக்கிறோம். எல்லா உணவுகளை அவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தான் சமைக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். சாப்பிட வருகிறவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம...
Comments
‘போட்டோ’ கூட பேசறது.., ‘போன்’ கூட பேசறது... மாதிரி ‘சினிமா’தனமான சீன் இல்லாம... ஒரு 12-13 நிமிசத்துல முடிஞ்சி இருந்தா... இன்னும் effective-ஆ இருந்து இருக்கும்-ஙறது என்னோட அபிப்ராயம்.
17 நிமிச படத்துக்கு... ஏகப்பட்ட கோணங்கள்-ல shot வச்சி கலக்கி இருக்கீங்க...!!!
அதுக்காக... செந்தில்-க்கு ஒரு சபாஷ். ஹீரோ-வை சரியா வேலை வாங்காததுக்கு.. உங்களுக்கு ஒரு சின்ன குட்டு...!! :-))))
தலைக்கவசம் அணிவது, சுய குறிப்புகளை வைத்துக் கொள்வது போன்ற அதிமுக்கியம் வாய்ந்த தகவல்களையும் தருகிறது உங்கள் குறும்படம்.
ஆனால் உண்மையில் 4 நிமிடம் முடியும் முன்பே நான் கணித்து விட்டேன். ஏனெனில், அந்த போட்டோவில் இருக்கும் படத்தை காட்டவே இல்லை என்பதால் எனக்குள் அந்த முடிவு ஏற்பட்டது. ஆனால், நல்லா இருந்திச்சு.
மருத்துவமனையில் மருத்துவர் சிவாவிடம் அவரின் மனித நேயத்தை பற்றி சொல்லும் போது சிவா யாரோ யாரிடமோ எதையோ சொல்வது போல் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் அவருக்கு ஒரு குளோஸ்-அப் இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
புதுமனைவியாக நடித்தவர் ஆசை, காதல், தவிப்பை ஓரளவு நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன்.
கேட் வழியே சினிமா தியேட்டர்,'மீசையும் ஆளையும் பாரு' என்று கூறும் போது சட்டென்று வாய்க்கும் கண்களுக்கும் காட்சி மாறுவது என கோணங்கள் படம் பிடித்த இடம் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்..!