Posts

Showing posts from August, 2008

தாம்-தூம்- திரை விமர்சனம்

Image
இயக்குனர் ஜீவா இருந்திருந்து அவரின் படத்தை பார்த்திருந்தால் அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார். மிக அருமையாக வந்திருக்க வேண்டிய ஓரு திரில்லர் படத்தை, போட்டு குழப்பி,தவறான காஸ்டிங்கினாலும், திரைக்கதையினாலும் சொதப்பிவிட்டிருப்பது பரிதாபம். சென்னையின் ஓரு பிரபல மருத்துவ்ரின் மகனான கெளதம் சுப்ரமணியம் ஓரு கான்பரன்ஸ் விஷயமாய் ரஷ்யா போக, அங்கே நட்பாகும் ஓரு ரஷ்ய பெண் அவரது அறையில் கொல்லப்பட, அதனால் அவர் கைதாக, இங்கே அவரின் காதலி பொள்ளாச்சியில் திருமணத்திற்காக காத்திருக்க, அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. படிக்கும் போது மிக இண்ட்ரஸ்டான ஓரு திரில்லர் திரைக்கதைக்கான அத்தனை அம்சங்களும் இருந்தும், படம் ஆமை வேகத்தில் நகர்கிறது. ரஷ்யாவிற்கும், பொள்ளாச்சிக்குமாய் அலைபாயும், திரைக்கதை படத்தின் வேகத்தை கூட்டுவதற்கு பதிலாக, மேலும் சுருதியை குறைக்கிறது. பொள்ளாச்சி காதலியாக, கங்கணா ராவத், கொஞ்சமும் பொறுந்தாத டிசைனர் அவுட்பிட்களுடன் கிராமத்து சுட்டிப் பெண்ணாக வருவதும், அவரின் அப்பா ஏதோ மிகப் பெரிய ஆள் என்பது வசனதிலேயே பில்டப் செயவதும், ரவியின் மாமாவிற்கும் அவருக்கும் ஏதோ ஓரு பிரச்சனை என்பது போல பில்...

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-3

ஆங்... எங்க விட்டேன்.. ஆ நெல்சன் மாணிக்கம் ரோடுல போய் பர்ஸ்ட் ப்ளோர்ல இருக்கிற அந்த அலுவலகத்துக்கு போனேன். மிக அமைதியா இருந்தது.. அங்க போனவுடனே அங்கிருந்த வாட்ச்மேன்.. (வாட்ச்மேனா?.. வேற என்ன பேர் அவருக்கு?} ஓரு சிலிப் கொடுத்து ஓரு தனி அறையில உட்காரவைத்தார். சில அரை மணிகளுக்கு பிறகு என்னுடய டர்ன் வந்த்தும், ஏதோ .. பிரதமர் அறைக்கு கூப்பிடற மாதிரி.. தனியா கிட்ட வந்து சார் அடுத்து நீங்க.. என்றார். வாட்ச்மேன்... அங்கே போனதும், அங்கிருந்தது பெண்ணிடம் எல்லாவற்றையும் சொன்னேன்.. அவள் மெதுவாக என்னை ஏறிட்டுப்பார்த்து " ஓகே... ஓரு லெட்டர் எழுதிக்கொடுங்க... அதுக்கப்புறம் தான் நாங்க உங்களூக்கு ப்ரிக்ளோசிங் அமொளண்ட் தருவோம்..என்றாள். நான் சலித்துக் கொண்டே.. எழுதிக் கொடுக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்து வாங்கிட்டு, கம்ப்யூட்டரில் ஏதோ தட்டி கீழே குனிந்து, ஓரு ப்ரிண்ட் அவுட்டை எடுத்து.. இதோ இதில இருக்கிற அமொளண்ட கட்டிடுங்க.. " என்றவுடன்.. நான் என் பாக்கடினில் கையைவிட்டு பணத்தை எடுக்க முற்பட, " " சார்.. இங்க் பணம் கட்ட கூடாது.." "பின்ன செகண்ட் ப்ளோர்ல தான் கட்டணுமா? அவள் ச...

நாயகன் - ஓரு நிஜ விமர்சனம்

Image
நாயகன் பழைய கமல் நடித்த படத்தின் பெயரை வைத்து மக்கள் மனதில் ஈஸியாக மார்கெட்டிங் செய்தாகிவிட்டது. ஏற்கனவே பல பேர் எடுத்து கிழித்து விட்ட ஆங்கில படமான “செல்லூலர்” திரைபடத்தின் அப்பட்டமான காப்பி என்று தெரிந்து வந்திருந்த பலரின் புருவங்களை உயர்த்திய படம். ஜே.கே.ரித்தீஷின் புண்ணியத்தால் ஏற்கனவே பப்ளிசிட்டியில் குறையில்லாததால். தியேட்டரில் ஹவுஸ்புல் ஆனது ஓண்றும் ஆச்சர்யமில்லை. ரமணா,சங்கீதா,ஆனந்தராஜ், போன்றவர்களீன் நடிப்பு இயல்பாக இருக்கிறது. படத்தின் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஜே.கே.ரித்தீஷீன் நடிப்பு, அப்படி ஓன்றும் நக்கலாய் சிரிக்கிறமாதிரியில்லை. அவரை பற்றி ஓரு கிண்டலான எண்ணம் கொண்டவர்கள் கூட படம் முடிந்து வெளிவரும் போது பெரிதாக அவரை கிண்டல் செய்ய முடியவில்லை. சில சமயம் ரஜினி ரேஞ்சுக்கு அவர் தரும் பில்டப்பை பார்க்கும்போது சிரிப்பாக் இருந்தாலும், தேவையில்லாமல் படத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் அந்த பில்டப் இருப்பதால் ஓண்றும் பெரிதாக தெரியவில்லை. ஷாவின் கேமரா படத்தின் வேகத்திற்கு ஈடாக உழைத்திருக்கிறது. ஆங்கில படத்தில் வரும் லொகேஷன்களை போலவே தேடி பிடித்திருக்கிறார்கள். ரித்தீஷை பல இடங...

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்-2

அந்த ஏ.சி அறையில் எனக்கு வேர்த்து கொண்டிருந்த்து, அவ்வளவு கோபம்,சும்மா ஜிவு,ஜிவுவென்று விஜய்காந்த் போல கண்கள் சிவந்து, உடலெல்லாம் சூடாகி,கன்னத்து சதை எல்லாம் ஹைஸ்பீடில் ஆடததுதான் பாக்கி, " காம் டவுன்.. சங்கர்... காம்டவுன்.." என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவ்வளவு கோபத்திற்க்கும் காரணமிருக்கிறது. அந்த தனியார் வங்கியில் கார் ஒவர் டிராப்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்கும்போதுக்கூட நான் இவ்வளவு கஷ்டப்படவில்லை..விடாது கருப்பு போல விடாமல் என்னை போனில் துரத்தி, அதுவும் தேன் குரலில் " சார்...ப்ளீஸ் சார்... நீங்க பேப்பர் கொடுத்திட்டா இந்த மாசம் என் டார்கட் முடிஞ்சிடும்... ப்ளீஸ்.." எனும் போதிக்கப்பட்ட தேன்குரலின் சொடக்கிற்க்கு மயங்கி " சரி நாளைக்கு சாயங்காலம் வந்து வாங்கிக்கங்க" என்றதும் , அட்ரஸ் வாங்கி, வீடு தேடி வந்து பேங்க மற்றும் அடையாள விஷயங்களை அவர்களே ஜெராக்ஸ் எடுத்து சென்ற மறுநாளே விடிந்தும், விடியாத காலையில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, யாரென்று பார்த்தால்.. " சார்... நான் ... பேங்கிலேர்ந்து வர்றேன்.. வெரிபிகேஷன்.." என்று ஆரம்பித்து, நான் கொடுத்த பே...

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்

என்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா? கிரெடிட் கார்ட் வேணுமா? ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க? நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எவ்வளவு லோன் போவுது? மாசம் உங்க சம்பளம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா? யார் பேர்ல இருக்கு?ன்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு? சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா? உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா? மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல் 1முதல் சுரண்டல் லோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ர...

முதன் முதலாய் பார்த்த படம் ?

எல்லாரும் படம் பார்க்கிறோம், ஆனால் முதல் முதலாக பார்த்த திரைப்ப்டம் எது என்று பலருக்கும் ஞாபகம் இருக்குமா?. அந்த படங்களை திரும்பவும் பார்க்கும் போது நமக்கு மலரும் நினைவுகள் நிறைய மலரும். எனக்கு நினவு தெரிந்து என் தாத்தா ஜெமினி லேபில் செக்கூரிட்டி ஆபிசாராக இருந்த போது, அங்கே இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சிவாஜி கணேசன் நடித்த "அந்தமான் காதலி" என்ற பட்த்தை பார்த்ததை அங்கிங்கே ப்ளாஷ் கட் போல, கலரிலும், ப்ளாக் & வொயிட்டிலும் அந்த படத்தை எப்போதாவது டிவியில் பார்க்கும்போது, வரும். திரும்ப திரும்ப யோசித்து பார்த்ததில், எம்.ஜி.ஆர். ந்டித்த, "பல்லாண்டு வாழ்க" என்ற திரைப்படமும் வ்ந்து, வந்து, போகிறது, ஆக இந்த இரண்டில் ஓன்றைத்தான் நான் பார்திருக்க வேண்டும், அப்போது எனக்கு இந்த் இரண்டில் பிடித்த படம்,, வழக்கம்போல் "பல்லாண்டு வாழ்க" தான் இப்போது வளர்ந்த பிறகு எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்றாலும், அப்போது ஏன் பிடித்த்து என்று யோசித்து கொண்டிருக்கும் போது, என் அம்மா அந்த படத்தின் கிளைமாக்ஸில் யானை எல்லாம் வரும் அதனால் உனக்கு ரொம்ப பிடிச்சது என்றாள். இது போல் நீங...

குறும்படம்ன்னா????

குறும்படம்ன்னா என்ன? இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க.. எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து. மேலும் சில குறும்படங்களூக்கு சங்கர் நாராயண்

சூரியன் FM "லாஸ்ட்ல பர்ஸ்டு"

சூரியன் FM தமிழகத்தின் நெ.1 FM ஆன்னு சர்வே எடுத்ததுக்கு மக்கள் இல்ல "லாஸ்ட்ல பர்ஸ்டுன்னு சொல்லிட்டாங்க . இதோ உங்க் ரிப்போர்டு.. வந்து ஓட்டு போட்டவங்க :75 பேர் நெ.1ன்னு சொன்னவங்க :12 பேர் நெ.2ன்னு சொன்னவங்க :4 பேர் நெ.3ன்னு சொன்னவங்க :10 பேர் மவுசு போயிடுச்சு : 49 பேர் ஸோ... சூரியன் FM "லாஸ்டுல பர்ஸ்டாயிடுச்சு" இன்னமும் நாங்க தான் நெ.1ன்னு சொல்லாம நிஜமாவே நெ.1 ஆக டிரை பண்ணுங்க..

விகடனை இனிமே எப்படி மாத்தலாம்?

புது விகடனை பிடிக்கல, மாத்த சொல்லுங்கன்னு சொல்லிட்டிங்க,, சரி எப்படி மாத்தனும்னு சொன்னீங்கன்னா அவங்களுக்கும் உபயோகமா இருக்குமில்ல..

எல்லோரும் கடைசியா "குடி"ச்சுக்கங்க....

ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை ந...

சதயம்: ஓரு நிஜ விமர்சனம்

Image
"சட்டமும் சாமியும் ஓண்ணு. சாமிதான் கண்ணை குத்தணும், சட்டம் தான் கடமையை செய்யணும்"ங்கற ஓரு அருமையான குழந்தைத்தனமான ஓரு கருத்தை 25கோடி ரூபாய் செலவு செஞ்சு நம்ம வெறுப்பேத்தியிருக்காங்க. சின்சியரான போலீஸ் ஆபீசர் சத்யமாக விஷால். உடலை நன்றாக கட்டுப்கோப்பாக வைத்திருக்கிறார். விறைப்பாக நிற்கிறார். ரோபோ போல் அங்கும், இங்கும் திருமபுகிறார். இயக்குனர் ராஜசேகர் இவரை ஏத்தி விட்டே படம் வாங்கியிருக்கார் போலருக்கு படத்துல ஹீரோவுக்கு ஓரு பந்தாவான அறிமுக காட்சி இருந்து பார்த்து இருக்கோம். ஆனா படத்தில் முதல் பாகத்தில் முக்கால் வாசி நேரம் அறிமுக காட்சி போலவே பத்து சீன் வந்தா.. ஆவ்... நயந்தாரா.. விஷால் போலவே அவரும் நல்லா உடம்பை மெயின்டென்யின் பண்ணியிருக்காரு. அவங்களோட சம்பளத்தை ஏத்தியிருக்காங்க, அத தவிர நடிப்புல எந்த ஏத்தத்தையும் காணோம். அதுசரி கதையில் அவருக்கு ஏதாவது கொடுத்தாதானே ஏத்திக்கறத்துக்கு. படத்துல வில்லன் போல வரும் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா.. சூப்பர். அவருடைய பாடி லேங்குவேஜூம், நடையும், சிம்பிளீ சூப்பர். அதோட அவரோட கேரக்டருக்கு கொடுத்திருக்கும் அழுத்தத்தை விஷாலுக்கு கொடுத்திருந்தா...

டாஸ்மாக் கொள்ளை

சமீபத்திய தினசரியில் டாஸ்மாக்கின் ஓரு நாள் வருமானம் முப்பது கோடியை தொடுகிறது என்றது.அரசாங்கம் நடத்தும் கடைகளில் MRP ரேட்டில் தான் விற்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் ஓவ்வோரு பீர் பாட்டிலுக்கும் 2 முதல் 5 வரை அவர், அவர் இஷ்டப்படி விற்கிறார்கள்.கேட்டால், கூலாக தருவதால் அந்த ரேட் என்கின்றனர். ஓவ்வொரு முறையும், நான் போராடித்தான் அந்த 2 ரூபாயோ அல்லது 5 சண்டை போட்டு வாங்கிவிடுவேன். இப்போதெல்லாம் அவர்கள் பீருக்கு மட்டுமில்லாமல் மற்ற வகைகளூக்கும் 2 முத்ல் 5 ரூபாய் வரை ஏற்றி விற்கிறார்கள். கேட்டால் பாட்டில் ஹாண்டிலிங் சார்ஜ் என்கிறார்கள். ஓரு முறை என் நண்பர் ஓருவர் கடைக்கு சென்று பீரையும் , ஹாட் டிரிங்கையும் வாங்கிய போது 13 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வாங்கியிருக்க, ஏன் கொடுக்க வேண்டும் இது கவர்ண்மெண்ட் கடை தானே? என்று கேட்டதற்கு, இல்லை இது ப்ரைவேட் கடை என்று நக்கலாக பதில் சொல்ல, மேலும் வாக்குவாதமாக, கடைக்காரன் அவரை தாக்க முற்பட, அந்த சமயத்தில் எனது நண்பரின் நண்பர் என்னுடய போனுக்கு சமயோசிதமாக போன் செய்து "சார், நான் தான் பேசறேன்.. நீங்க சொன்னா மாதிரி இங்க அப்படி...

யூத்புல் விகடனும் , கவுண்டமணியும்...

சமீபத்தில் நான் பதிவில் போட்ட விகடனின் டிசைன் பற்றிய போலை வந்து சொடுக்கி போன 119 பேர்களுக்கு என் நன்றி. இதனால் விகடனாருக்கு சொல்கிறது என்னன்னா... தயவு செஞ்சு உங்க பாழா போன யூத் டிசைன்னு சொல்லிக்கிற உங்க டிசைனை மாத்துங்கோ.. இல்லேன்னா உங்க யாவாரம் பூட்ட கேஸாயிடும். நீங்க யூத்புல் விகடன்னு மாறினது எப்படி இருக்குதுன்னா.. கவுண்டமணி யூத் கெட்டப் போட்டாப்ல இருக்கு. நாங்க உங்கள எல்லாம் எங்க வச்சிருக்கோம் தெரியுமா? அதனால தயவு செஞ்சு மாத்திடுங்க.. போல் ரிசல்ட் வந்தவர்கள் :119 சூப்பர்ன்னு சொன்னவங்க:19 ஓகேன்னு சொன்னவங்க : 26 சே.சேன்னு சொன்னவங்க: 13 மாத்த சொல்லுங்கப்பா : 66 பேர் மொத்தத்துல 55 சதவிகிதம் பேர் மாத்த சொல்லிட்டாங்க..விகடனாரே உங்களுக்கு மக்களீன் பல்ஸ் தெரியும்னு நினைக்கிறேன்.

"தரிசனம்"

"தரிசனம்" என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து "என்ன நீங்கள் .... உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க... நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க..." என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து "சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்... மேல வந்து படு..." என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் ...

கமலின் 'தசாவதார்" எப்போது?

தமிழிலும், தெலுங்கிலும் , இந்தியிலும் ஓரே நேரத்தில் வெளீயிட ஏற்பாடாகியிருந்த தசாவதாரம் திரைப்படம், தவிர்க முடியாத காரணத்தினால், இந்தியில் வியாபாரம் முடியாத காரணத்தினாலும் வெளீயிட முடியவில்லை, தற்போது, தமிழிலும், தெலுங்கிலும் வெற்றி பெற்றுக் கூட இன்னமும் வெளீய்டப் படாமல் இருக்கிறது. உங்களில் யாருக்காவது அது எப்போது வெளியாகும் என்று தெரியுமா? ஹிந்தியில் வெளியிடுவதற்க்காகத் தான் ஹிமேஷ் ரேஷ்மையாவை இசையமைப்பாளராக நியமித்தார்கள். இந்தியில் பாடல்கள் கூட வெளியாகிவிட்டது. ஆஸ்கார் சார்.. ஓருவேளை போட்ட துக்கு மேலே நாலு மடங்கு வந்துவிட்டதனால் சும்மா இருக்காறோ..?

சூரியன் FM தமிழகத்தின் நெ.1 FM ஆ?

சூரியன் fM எப்போதும் தன் அறிவிப்பினில் தமிழகத்தின் நெ.1 பண்பலை அலைவரிசை என்று தன்னை முன்னிருத்திக் கொள்கிறது. தயவு செய்து உங்கள் voteகளை பதிவுசெய்ய்யுங்கள்

வைரமுத்துவின் "ஜயிட்டம்" பாட்டு

Image
நான் சமீபத்தில் தான் இந்த பாடலை தமிழில் கேட்டேன். மணிரத்னத்தின் 'குரு" திரைப்டத்தில் வரும் "மய்யா..மய்யா" என்ற பாடலை ஹிந்தி யில் கேட்டிருக்கிறேன். அதை தமிழில் சில நாள் முன்பு கேட்டு, வைரமுத்துவின் வார்த்தை ஜாலங்களையும், அவரின் இலக்கிய செரிவையும் கண்டு அசந்துவிட்டேன். ஓரு ஐயிட்டம் சாங்கில் இப்படி எழுதியிருக்கிறாறே ? இந்த பாடலை அளித்தமைக்காக எல்லோரும் வைரமுத்துவிக்கு ஓரு "ஓ" போடுங்க. இதோ அந்த பாடல். நான் முத்தம் தின்பவள் ஒரு முரட்டுப் பூ இவள் தினம் ஆடை சந்தையிலே முதலில் தோற்பவள் இரு குறையட்டும் திரு விளக்கு நீ இடஞ்சுட்டி பொருள் விளக்கு அட!! கடவுளை அடையும் வழிகள் என் மேல் எழுதிருக்கு மய்யா மய்யா நிலாவை வண்ணம் பூசி வைத்துக்கொள் மய்யா மய்யா என் உடம்பினில் ஒளிவிட்ட மலர்களும் பொய்யா பொய்யா… என்னா பாட்டு பா.. சோக்காகீது..

'ஆக்ஸிடெண்ட்"

நான் இயக்கிய குறும்படமான "ஆக்ஸிடெண்ட்" படத்தை பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். மேலும் சில குறும்படங்களூக்கு www.shortfilmindia.net

பி.வாசுவின் அடுத்த டார்கெட்??

ரொம்ப நாளா தமிழ் சினிமாவிலிருந்து விலக்கப்பட்டிருந்த வாசுவை ரஜினி கன்னட சந்திரமுகிய பார்த்து தமிழுக்கு கூட்டிக்கிட்டு வர,நம்மளோட கெட்ட நேரம் அங்கிருந்துதான் ஆரம்பிச்சது. வழக்கமா உல்டா பண்ணியே படம் எடுக்க தெரிந்த வாசுவுக்கு. சந்திரமுகி தமிழ், தெலுங்குன்னு ஹிட்டானதும் என்ன செய்யறதுன்னு புரியாம அடுத்த நல்ல கதை எதை உல்டா பண்ணலாம்னு யோசிச்சார். நம்ம ரஜினிய காலி பண்ண்றதுக்கு முன்னாடியே.. தெலுங்குல ரஜினியின் குளோஸ் பிரண்டான மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவை வச்சு ஓரு படம் ரிலீஸ் பண்ணிட்டாரு. அந்த பையன் பாவம் இருந்து இருந்து நாலு ப்ளாப்பை கொடுத்திட்டு அப்படி இப்படி வாசு போலவே தெலுங்குல ஓரு டைரக்டர் சீனுவைத்லான்னு ஓருத்தர் "தீ"ன்னு ஓரு படத்தை வாசுவோட சின்னத்தம்பிய உல்டா பண்ணி ஹிட் ஆகியிருக்க, வாசுக்கு எப்படி மூக்குல வேர்த்துச்சோ..உடனே அந்த பையனையும், நாகர்ஜூனையும் வைத்து, நம்ம ஜிம் கேரி நடித்த "புரூஸ் ஆல்மைட்டி" படத்தையும், தன்னோட சின்னதம்பியையும், உல்டா பண்ணி பாணிபூரிக்கு பிசைந்த உருளைகிழங்கு கணக்கா பிசைஞ்சு, அந்த பையனோட கொஞ்சம், நஞ்சம் இருந்த மார்கெட்டையும் காலி பண்ணிட்டாரு. ஏதோ...

எல்லாத்துக்கும் ஓரு முதல் முறை

என்னை வச்சு உன்னையும், உன்னை வச்சு என்னையும் நாமே போட்டுக்கிற வலைதான் காதல்... எப்படி என் கவிதை??????? ஹீ..ஹீ..ஹீ

புதிய விகடன் பிடிச்சுருக்கா..?

புதிய விகடனின் டிசைன் மற்றும் கண்டெண்ட் பிடிச்சிருக்கா? உடனே உங்கள் கருத்துகளை கிளிக் செய்யுங்க.

எஸ்கேபான கமலும்,மண் ஓட்டாத "குசேலனும்"

"பெண்கள் ஆடி மாத திருவிழாக்களுக்கு சென்றதால் குசேலன் படம் பார்க்க வரவில்லை, ஆடி மாதம் முடிவதால் மக்கள் மீண்டும் குசேலனை பார்பதற்காக தியேட்டருக்கு வருவார்கள்" என்று கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டாத கதையாய் இயக்குனர் வாசு இன்றைய செய்திதாள்களில் கூறியிருக்கிறார். எல்லா பத்திரிக்கைகளிலும்,மீடியாக்களீலும், ஆகா, ஓகோ என்று பாராட்டினாலும், தியேட்டரில் மக்கள் நொந்து போய் வெளீயே போய் யாரும் பார்க்காதீங்க என்று பாராட்ட, அதனால் தியேட்டர் எல்லாம் காலியாக இருக்கும் காட்சியை கண்ணால் கண்டு வயிற்றெறிந்து போயிருக்கும் தியேட்டர் அதிபர்கள் எல்லாம் இந்த பேட்டியை கண்டு சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று புரியாமல் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் "பத்து நாட்களூக்குள் எந்த படத்தின் வெற்றியையும் கணிக்கமுடியாது என்று ஓரு புதிய கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார்.இயக்குனர்.அதெல்லாம் அந்த காலம், ஓரே சமயத்தில் 1000பிரிண்டுகள் வரை வெளீயிடப்படும் இம்மாதிரி பெரிய படங்கள் எல்லாம் பத்து நாட்களுக்கு பிறகு பிக் அப் ஆவதற்கு முன்னே பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டு டங்குவார் கிழிந்து போய்விடும். அவர் சொல்வதெல்ல...

"சத்யம்" -சக்ஸஸ் ரகசியம்

சத்யம் விஷால், நயன் தாரா நடிக்திருக்கும் படம். மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படம் மிக அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த பதிவு அதை பற்றியல்ல. சத்யம் திரையரங்கத்தை பற்றியது. எல்லா தியேட்டரிலும் விட அதிக வசூலை எப்படி இந்த தியேட்டர் வளாகம் மட்டும் கொடுக்கிறது? அதிலும் விலை அதிகமுள்ள டிக்கெட்டுகள் இருந்தும் எப்படி இது சாத்தியம். இந்த பதிவு சத்யம் வளாகத்துக்கான விளம்பரம் அல்ல, உண்மை. நான் எப்போதும் சத்யம் தியேட்டரிலேயே பட்ம் பார்பதை விரும்புவன். ஏனென்றால் அதி நவின இண்டீரியஸ், சிறந்த சவுண்ட், டிஜிட்டல் ப்ரொசக்ஷன், எல்லாவற்றிக்கும் மேலாக, சிறந்த உபசரிப்பு. சமீபத்தில் "கிஸ்மத் கனெக்ஷன்" என்ற இந்தி படத்தை பார்க சென்றிருந்தேன். படம் ஆரம்பித்து ஓரு பத்து நிமிடங்களீல் திடீரென்று தேய்ந்து போன ரிக்கார்ட் கணக்காய் படம் ப்ரீஸ் ஆகி "மறுக்கா.. மறுக்கா" அதே டயலாக்கில் நின்று போனது. படம் நின்று போனதற்க்கு காரணம் டிஜிட்டல் சர்வர் டவுன் ஆனது தான். இந்த மாதிரி படம் நின்று போனால் தியேட்டரில் விசில், கத்தல் எல்லாம் நடக்கும் ஆனால் அது எதுவும் நடக்கவில்லை, படம் நின்ற...

"சோனா"- ஓரு பத்து பத்து திரை விமர்சனம்

நான் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம் பத்து பத்து. அதில் நடித்த ஓரு நடிகர் என்னையும் என் நண்பர்களையும் அழைத்துச் சென்றார். இரண்டாவது நாளான அன்று மாலை காட்சியில் சுமார் 400க்கும் அதிகமான நபர்கள் தியேட்டரில் இருந்தது குறித்து ஆச்சர்யப்பட்டேன். எதை எதிர்பார்த்து இவ்வளவு கூட்டம்? ஹீரோ ஹீரோயின் இல்லாத படம் என்று விளம்பரபடுத்தியதாலா? அல்லது வித்யாசமான படமாய் இருக்கும் என்ற எண்ணத்தினாலா? என்று குழம்பியவாறே நான் படம் பார்க்க ஆரம்பித்தேன். சரியாக 10.10 ஓரு கொலை நடைபெறுகிற்து. அந்த கொலையை யார் செய்திருக்கக்கூடும் என்று பல கோணங்களில் இன்வெஸ்டிகேசன் செய்கிறார் "போஸ் வெங்கட்" ஓவ்வொருவரையும் அவர் விசாரிக்கும் போது இவர்தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பது திரைக்கதையில் ஓரு நல்ல உத்தி, ஆரம்பத்தில் அமெச்சூர் தனமான காட்சியமைப்புகள், நடிப்பு, என்று ஆரம்பித்த படம், சோனா வந்தவுடன் சும்மா பாட்டிலிலிருந்து விடுபட்ட தீபாவளி ராக்கெட் போல் சும்மா விர்ரென்று கிளம்புகிறது படம். அதுவும் ஓரு பையன் மேலே பேனை மாட்ட,கீழே சோனா விலகிய மேலாக்குடன் லஞ்சையுடன் மேலே பார்க்க, அதை பார்த்து அவள் வீட்டிலிருக்கும் ஓரு...

குசேலன்????

சமீபத்தில் நான் பார்த்து நொந்து போன படம் குசேலன். ஓரு ஏழை நண்பனுக்கும், ஓரு சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள நட்பை பற்றி "பறையும்" கதை. மலையாளத்தில் மிக அருமையாக, எடுக்கப்பட்ட அருமையான படம். அதை எவ்வளவு கேவலமாக கெடுக்க முடியுமோ, அவ்வளவு அருமையாக கெடுத்திருக்கிறார்கள். ஓரு தனிமனிதனை துதி பாடுவதற்காகவே எடுக்கப்பட்ட படமாக தோன்றுகிறது.தேவையில்லாமல் படம் முழுவதும் ரஜினியை விரவி,அவருக்கு இருக்க்கும் நல்ல பேரையும், கெடுத்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சந்திரமுகி என்ற படத்தை எடுத்து ஓரு நல்ல மலையாள படத்தை கெடுத்த வாசுவுக்கு, மீண்டும் ஓரு நல்ல படத்தை பார்த்ததும் கை சும்மா இல்லை போலிருக்கிறது. ரஜினி என்ற ஓரு காந்ததை வைத்து, பணம் பறிப்பதற்காகவே ஆரம்பிக்கபட்ட படம்தான் குசேலன். சுமார் ஆறு முதல் ஏழு கோடி ரஜினியின் சம்பளம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம், பிரமிட் சாய்மீரா என்ற கார்பரேட் நிறுவனம் சுமார் 65 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து தமிழ் , மற்றும் தெலுங்கில் இரண்டிலும் வெளியிட்டது. தமிழில் பல ஏரியாவில் 20 முதல் 30 லட்சம் வரை MG வாங்கிக்கொண்டு வெளீயிடப்பட்டது, பல தியேட்டர்களீல் முதல் காட்சி வசூ...