Posts

Showing posts from November, 2008

மகேஷ்..சரண்யா..மற்றும் பலர் - திரை விமர்சனம்

Image
இப்படி கவிதையாய் ஓரு டைட்டிலை வைக்க தெரிந்த இயக்குனருக்கு, கவிதையாய் கதை சொல்ல தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த மிக அமெச்சூரிஷான காதல் கதை இது தான். கும்பகோணத்தில் ஓரு பெரிய குடும்பத்தின் ஓரே மகன் மகேஷ். தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்பதற்காக, பரிட்சை முடிந்து சென்னையிலிருந்து கும்பகோணம் வருகிறான். மாப்பிள்ளை பிடித்து போய் திருமணம் வரைக்கும் போகும் போது மகேஷுக்கும், அவன் தங்கைக்கும் விபத்துகுள்ளாக.. அதனால் தங்கையின் திருமணம் தள்ளி போகிறது. தங்கையின் மாப்பிள்ளையின் தங்கைக்கு வேறு மாப்பிளளை பார்த்து திருமண மேடையில், அவளீன் மாப்பிள்ளை ஓடி விடுகிறான். மாப்பிள்ளை தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள மகேஷை கேட்க, அவன் மறுத்து விடுகிறான். ஏன் என்றால் அவனுக்கும், சரண்யாவிக்கும் இருக்கும் காதல். அந்த காதலை சொல்கிறேன் பேர்விழி என்று, படம் ஆரம்பித்தது முதல் க்ளைமாக்ஸ் வரை அவர்களின் காதல் காட்சிகளை பிச்சி பிச்சி தங்கச்சி, அம்மா, அண்ணி, அண்ணன், அப்பா, தாத்தா, குடும்பம் முழுவதும், பார்ட், பார்டாய் படம் முடியும் வரை சொல்லி கழுத்தை அறுக்கிறார்கள். கதை சொல்லும் முறையில் புதுமை புகுத்த நினைத்த இயக்குனருக்க...

பூ - திரைவிமர்சனம்

Image
மனிதனின் வாழ்கையில் ஓவ்வொருவருக்கும் ஓரு கனவுகள், கற்பனைகள், நிஜ வாழ்கையில் ஓவ்வொருவரும் அவர்தம் கனவுகளை, கற்பனைகளை விட்டு கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி மற்றவருக்காக விட்டு கொடுத்து அதனால் அவர் நன்றாய் இருப்பார் என்று நம்பி செய்த தியாகம் வீணாகும் போது வரும் துக்கம் மிகப் பெரிய சோகம். அந்த சோகம் காதலாய் இருந்தால்..? அந்த சோகத்தை இவ்வளவு எளிமையாய், ஒரு கிராமத்து காதல் கதையை வில்லன் இல்லாமல்,குத்துபாட்டு இல்லாமல்,இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், கவிதையாய் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் சசி. தமிழ்செல்வனின் “வெயிலோடு போய்” என்கிற சிறுகதையை திரைகதையாக்கி இருக்கிறார். முழுக்க, முழுக்க, கதாநாயகியை சுற்றியே வரும் கதை. அறிமுக நாயகி பார்வதிக்கு முதல் படமே பேர் சொல்லும் படமாய் அமைந்திருக்கிறது. மாரியம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார். சந்தோஷம், கோபம், துக்கம், காதல், ஏக்கம், பிரிவு, என்று உணர்வுகளின் களஞ்சியமாய் மின்னுகிறார். புதியவர் என்று சொன்னால் நம்பமுடியாது. கதையின் நாயகன் தங்கராசுவாய் ஸ்ரீகாந்த். ஆம் கதையின் நாயகன் தான். முதலில் இந்த மாதிரியான ஹீரோயின் ஓரியண்டட் படத்தில் நடித்...

"வயாக்ரா” பயன்படுத்தும் இரண்டு வயது சிறுவன்.

Image
ஆம் உண்மை தான். உலகிலேயே மிக சிறிய வயதில் வயாக்ரா பயன்படுத்தும் சிறுவனின் பெயர் கெல்வின் முட்டுஸா. பிறந்த மூன்று மாதங்களிலிருந்தே மிகவும் அரிதான ஓரு மூச்சு பிரச்சனை காரணமாய் வயாகராவை உட்கொண்டு வருகிறான். ஓரு நாளைக்கு ஆறு வேளை வீதம் அவன் கடந்த முப்பது மாதங்களாய் வயாக்ராவை பயன் படுத்தி வருகிறான். ”பெல்மோனரி ஆர்டிரியல் ஹைபர்டென்ஷன்” என்கிற அரிதான் வியாதியுடன் அவன் பிறந்ததிலிருந்தே போராடி வருகிறான். அதாவது மிக ஆபத்தான ரத்த கொதிப்பு காரணமாய் அவனுடய இதயம் அவனுடய சுவாசப்பைக்கு அனுப்ப வேண்டிய ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் கஷ்டபடுகிறது. இதனால் அவனுடய இதயம் நான்கு மடங்கு வேலை செய்ய வேண்டியாதாக இருந்தது. கெல்வின் பிறப்பதற்கு முன்பே அவன் பிறக்கும் போதே பவுல் மற்றும் கிட்னி பிரச்சனையுடன் தான் பிறப்பான் என்று டாக்டர்கள் அவனின் தாயிடம் தெரிவித்திருக்கிறார்கள். பிறந்து ஓரே நாளில் அதை கரெக்ட் செய்ய சர்ஜரி நடந்திருக்கிறது அவனுக்கு. கருவிலேயே அவனுடய் குறையை கண்டுபிடித்த டாக்டர்களால் அவனுடய் சுவாசப்பை பிரச்சனையை கண்டு பிடிக்க முடியவில்லை. ஓரு நாள் நான் அவனுக்கு பால் கொடுக்க எழுந்து பார்த்த போது கெல்வின்...

செய்திகளை முந்தி தருவது ...சன், ராஜ், ஜெயாவா..?

Image
ராத்திரி சுமார் 11 மணி இருக்கும் இணையத்தில் உலாவி கொண்டிருந்தபோதுதான் தெரிய வந்தது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி ஓருவர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததும் உடனடியாய் நான் பழக்க தோஷ்த்தில் நம் தமிழ் செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பிக்க, சன்நியூஸ், ஜெயா, என்று எவ்ருமே தங்களுடய சேனல்களில் செய்திகளை அப்டேட் செய்யவில்லை. சாயங்காலம் தங்களது மெயின் சேனல்களில் மழை, புயல், தங்கள் சார்பு, ம்ற்றும் எதிர்ப்பு செய்திகள் என்று ஏற்கனவே காட்டபட்ட விஷயங்களையே திரும்ப, திரும்ப காட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் ஆங்கில, இந்தி செய்தி சேனல்கள் எல்லாமே பரபரப்பாய் சுடசுட செய்திகளை ‘நேரலை’யாய் தந்து கொண்டிருந்தார்கள். மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் தீவிரம் அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட ஓரு போர் நடப்பதை போன்றிருக்கிறது. நம் செய்தி சேனல்கள் இதை பற்றி சற்றும் கவலைபடாமல் இருந்தது அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. ஏன் ஓரு 12 மணிவாக்கில் டிவி9 என்கிற் தெலுங்கு செய்தி சே...

STAR MAKER - ITALIAN FILM

Image
1995ஆம் ஆண்டு வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம். “சினிமா பாரடைசோ” திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம். 1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்னும் ஓருவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில் ஊர் ஊராக சுற்றி தான் ரோமில் இருக்கும், கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்து, எல்லா கிராமங்களுக்கும் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இந்த படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்க்ளில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று நம்பிகையை சொல்லி ஏமாற்றுகிறான். அப்போது ஓரு கிராமத்தில் பியாட்டா என்னும் பேரழகியை சந்திக்கிறான். யாருடய ஆதரவில்லாமல் வீடுகளையும், அலுவலகங்களையும், சுத்தம் செய்து,ஓரு தேவாலயத்தில் தங்கியிருக்கிறாள். தன்னை எப்படியாவது கதாநாயகி...

DASVIDANIYA - FILM REVIEW

Image
தாஸ்விதானியா என்றால் மிக சிறந்த வழியனுப்புதல் ஆங்கிலத்தில் The best ever good bye என்று பொருள். இந்த படத்தின் நாயகன் விநய்பத்க்குக்கு மீண்டும் தன்னை நிருபிப்பதற்கான படம். அமர்கவுல் என்கிற திருமணமாகாத 37 வயது இளைஞனின் கதை. மிக சாதாரணன், இவனைபோல நாம் பலரை சந்தித்திருந்தாலும் மறந்திருபோம்.. அப்படிபட்ட சாதாரணன். தினமும் தான் செய்ய வேண்டிய காரியங்களை Thinks to do என்று பட்டியலிட்டு வாழ்பவன். அவனுக்கு stomach cancer வ்ந்து இன்னும் மூன்று மாதங்களில் அவன் இறந்து போவான் என்றவுடன் எப்படியிருக்கும். ஆடிப்போய் இருக்கும் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் செய்யவேண்டிய பழைய வேலைகளை பட்டியலிட, அவனுடய் மனசாட்சி வ்ந்து அவனை திட்டுகிறது. இது நாள் வரை எந்தவிதமான் ஆசைகளையும் பூர்த்தியடையாமல் வாழ்ந்து என்ன கண்டாய்..? இனி இருக்கும் நாட்களிலாவது வாழ்கையை வாழ்ந்து பார்.. ஆசை பட்டதையெல்லாம் அனுபவி என்கிறது. அதன் படி அவன் ஓரு பட்டியலிடுகிறான் Things to do before I die என்று. புதிய கார், கிடார் வாசிக்க கற்பது, அம்மா, வெளிநாட்டு பயணம், நேகா.., ஆத்ம ந்ண்பன் ராஜூ, செக்ஸ்,பாஸூக்கு பாஸாய் இருப்பது என்று பத்...

VINAYAKUDU - REVIEW

Image
ரொம்ப நாளாகிவிட்டது இவ்வளவு இயல்பான ஒரு காதல் கதை பார்த்து. ஒரு குண்டான இளைஞனுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை பற்றி தான் படம். கார்திக் ஹைதராபாத்துக்கு ஹைடெக் என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர வருகிறான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்பனாவை பார்த்ததுமே விரும்ப ஆரம்பிக்கிறான். இயல்பாகவே ரொம்பவும் சாப்ட் ஸ்போகன் பேர்வழி கார்த்திக். கல்பனாவோ..மிகவும் கோபக்காரி, குண்டான கார்திக்கை பார்த்த முதலே அவளுக்கு பிடிக்கவில்லை. கல்பனாவின் குடும்பம் தங்களுடய தம்பியின் வீட்டு விஷேசத்துக்கு வெளிநாடு செல்ல, கல்பனா தன் தோழியுடன் அவளுடய வீட்டில் தங்குகிறாள்.. கல்பனா,கார்திக்கை முகத்திலடித்தார் போல் எவ்வளவுதான் பேசினாலும், அவன் அதை பற்றி கவலை படுவதில்லை. கல்பனாவின் பெற்றோர் ஊருக்கு போவதற்கு முன் அவளுக்காக ஓரு பையனை பார்த்து, அவ்னுடன் பேசி பார்த்து பிடித்திருந்தால் கல்யாணம் செய்வதாய் ஏற்பாடு செய்துவிட்டு போயிருக்க, கல்பனாவுக்கும், அவளுடய வருங்கால கணவன் ராஜிவுக்கு இடையே காமனான விஷயங்கள் நிறைய இருக்க, கார்திக் தன்னுடய காதலை சொல்ல நினைக்கிறான். இதற்கிடையில் கார்திக்கின் நண்பன் அல்டாபு...

தெனாவெட்டு - திரை விமர்சனம்

Image
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும்.. இ.எல்.கே பிக்சர்ஸ் பி லிமிட்டெட் தயாரிப்பில் வெளிவந்துள்ள புதிய திரைப்படம் “தெனாவட்டு” . ஜிவா, பூனம் பாஜ்வா, கஞ்சா கருப்பு, சரண்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இதெல்லாம் ஓரு படம் அதுக்கு ஓரு விமர்சனம்.. சன் டிவி தனது டிரைலரை எடிட் பண்ணிய குவாலிட்டி கூட படத்தில் இல்லை. பழைய தெலுங்கு படம் பார்த்தா மாதிரி இருக்கு.. எங்கள் தங்கத் தலைவி, பூனம் பாஜ்வாவை தவிர சொல்லிக் கொள்ளும் படியாய் எதுவுமில்லாததால்.. படம் பார்க்க விரும்புவர்கள் வ்.ஆயிரத்தையே பார்க்கலாம்.

வாரணம் ஆயிரம் v/s தெனாவெட்டு

Image
வாரணம் ஆயிரம் படத்தின் வசூலைக் கண்டு சூரிய கம்பெனி சந்தோசஷ குதியாட்டத்தில் இருகிறது. சென்னையை தவிர மிக மோசமான் ஓப்பனிங் இந்த படத்திற்கு. இந்த நிலையில் சூரிய கம்பெனியின் புதிய படமான தெனாவெட்டு படத்தின் ஆடியோ வெளியீடு இரண்டு நாட்களுக்கு முன்பாய் நடந்தது. சூரிய கம்பெனியே தனது இன்னொரு அங்கமாய் சன் ஆடியோ என்று ஆரம்பித்து வெளியிட்டது. இதனிடையில் சினிமாகாரர்கள் வாரணம் ஆயிரம் பிஸினெஸ் முறையை அறிந்து அல்லு விட்டிருகிறதாய் தகவல். முதலில் 17 கோடிக்கு ஒத்துக் கொண்டு படத்தை வாங்கியவர்கள், ரிலீஸுக்கு முன் நாள் லேப்பில் அவ்வளவு எல்லாம் முடியாது என்று சொல்லி 11.5 கோடிக்குதான் வியாபாரம் ஆனதாகவும், 50லட்சம் எங்கள் பிசினெஸ் கமிஷன் என்றும், மீதி 11 கோடியை கொடுத்துவிட்டு, பெட்டிகளை கொடு என்று கேட்டு, அதற்கு மேல் கொடுக்க முடியாது என்று சொல்லி பெட்டிகளை எடுத்து போயிருக்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம், 50 லட்சம் சம்பாதித்தும் இல்லாமல், பேசியபடி வியாபாரம் செய்யாமல் இப்படி பண்ணியது பற்றி கேள்விபட்டு எல்லா தயாரிப்பாளர்களும் செய்வத்றியாது நிற்பதாய் தெரிகிறது. ரிலீசூக்கு முந்தினம் இரவு படத்தின் தயாரிப்பாளர்,இய...

ரமேஷும்..ஸ்கூட்டி பெண்ணும்....

Image
ஓசியில் பினாயில் கொடுத்தாலும், சந்தோஷமாய் குடிப்பவன் ரமேஷ். கஞ்சன். அதைப்பற்றி சொல்லி அவனை கிண்டலடித்தால் வேறு யாரையோ கிண்டல் செய்வதாய் பாவித்து, அவனும் சிரிப்பான். யாருக்காவது ஏதாவது உதவி தேவையென்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க மாட்டான்.. ஏன் என்று கேட்டால், “அத கேட்கபோய்..அவங்க நம்ம கிட்டயே எதாவது கேட்டுட்டா..?” என்பான். தலையிலடித்து கொண்டு நகர்வேன். அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ். “சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?” என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற வழியில...

தோஸ்தானா - திரை விமர்சனம்

Image
ஹிந்தி திரையுலகின் முக்கிய நாயகர்கள் ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கும் படம் என்றதும் ஓரு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. படத்திலும் அவர்கள் வீடூ வாடகைக்கு எடுப்பதற்காக, ஓரின சேர்கையாளர்களாய் நடிக்கிறார்கள். மியாமியில் ஆண் நார்சாய் பணிபுரியும் அபிஷேக், மாடல் போட்டோகிராபரான ஜான் அபிரஹாமும் வீடு தேடும் படலத்தின் போது பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது என்றதால், தாங்கள் இருவரும் ஓரின தம்பதிகள் என்று பொய் சொல்லி வீட்டை பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் வீட்டு ஓனரின் அண்ணன் மகளான பிரியங்காவுடன் தங்க வேண்டும் என்றதும், ஓருவரை ஓருவர் மாற்றி பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய பார்கிறார்கள். அவர்களின் போட்டி பிரியங்காவை காதலிக்கும் வரை போகிறது. பிரியங்காவின் பத்திரிக்கை ஆபிஸில் எடிட்டராக வரும் டைவர்ஸி பாபி டியோலுக்கும், பிரியங்காவுக்கும் காதல அரும்ப, அதை கெடுப்பதற்காக, மின்சார கனவு போல பாபி டியோலுக்கு, பிரியங்காவை இம்ப்ரஸ் செய்ய தப்பு தப்பான ஜடியாக்களை சொல்லி, அவரை ஓரு மாதிரி கோமாளீயாய் சித்தரிக்கிறார்கள்.. அப்படியும் அவர்களின் காதல் நிச்சயதார்த நிலைக்கு வர, அதை கெடுக்க பாபியின் ஐந்து வயத...