மகேஷ்..சரண்யா..மற்றும் பலர் - திரை விமர்சனம்

இப்படி கவிதையாய் ஓரு டைட்டிலை வைக்க தெரிந்த இயக்குனருக்கு, கவிதையாய் கதை சொல்ல தெரியவில்லை. சமீபத்தில் பார்த்த மிக அமெச்சூரிஷான காதல் கதை இது தான். கும்பகோணத்தில் ஓரு பெரிய குடும்பத்தின் ஓரே மகன் மகேஷ். தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்பதற்காக, பரிட்சை முடிந்து சென்னையிலிருந்து கும்பகோணம் வருகிறான். மாப்பிள்ளை பிடித்து போய் திருமணம் வரைக்கும் போகும் போது மகேஷுக்கும், அவன் தங்கைக்கும் விபத்துகுள்ளாக.. அதனால் தங்கையின் திருமணம் தள்ளி போகிறது. தங்கையின் மாப்பிள்ளையின் தங்கைக்கு வேறு மாப்பிளளை பார்த்து திருமண மேடையில், அவளீன் மாப்பிள்ளை ஓடி விடுகிறான். மாப்பிள்ளை தன் தங்கையை திருமணம் செய்து கொள்ள மகேஷை கேட்க, அவன் மறுத்து விடுகிறான். ஏன் என்றால் அவனுக்கும், சரண்யாவிக்கும் இருக்கும் காதல். அந்த காதலை சொல்கிறேன் பேர்விழி என்று, படம் ஆரம்பித்தது முதல் க்ளைமாக்ஸ் வரை அவர்களின் காதல் காட்சிகளை பிச்சி பிச்சி தங்கச்சி, அம்மா, அண்ணி, அண்ணன், அப்பா, தாத்தா, குடும்பம் முழுவதும், பார்ட், பார்டாய் படம் முடியும் வரை சொல்லி கழுத்தை அறுக்கிறார்கள். கதை சொல்லும் முறையில் புதுமை புகுத்த நினைத்த இயக்குனருக்க...