Posts

Showing posts from 2009

தமிழ் சினிமா 2009

Image
வாசகர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் சென்ற ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா? கெட்ட ஆண்டா? என்று சொல்ல மிக குழப்பமாகவே இருக்கிறது. சரி போஸ்ட் மார்டத்துக்கு பிறகு வருவோம். ஜனவரி பொங்கலுக்கு ரீலீசான விஜய்யின் வில்லு, சன்பிக்சர்ஸின் படிக்காதவன், ராஜ்டிவியின் செமி டப் படமான காதல்னா சும்மா இல்லை, ஏவிஎம்மின் அ..ஆ..இ..ஈ.., அதே போல தமிழ் தெலுங்கு இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட என்னை தெரியுமா?, வெண்ணிலா கபடிக்குழு என்று படங்கள் ரிலீஸானதில் விஜயின் வில்லுவை பற்றி நானேதும் சொல்லத் தேவையில்லை.ஏவிஎம்மின் அ..ஆ.. இ… படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆகியிருந்தும் பெரிய தோல்வியை அடைந்தது. ராஜ்டிவியின் காதல்னா சும்மா இல்லை படம் தெலுங்கில் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குனர், படம் நந்தி விருது பெற்றது. தெலுங்கில் அல்லரி நரேஷ் நடித்த கேரக்டரில் ரவிகிருஷ்ணாவை போட்டு அவர் சம்மந்தபட்ட காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி, வடை போச்சே கதையாகிவிட்டது. தனுஷின் பொங்கல் ரிலீஸான படிக்காதவன் படத்தின் ரிப்போர்ட் படு கேவலமாய் இருந...

எண்டர் கவிதைகள் -4

Image
வெண்ணையாய் உருகும் மைசூர்பா பிடிக்கும் நெருக்கக் கட்டிய ஜாதி மல்லி பிடிக்கும் மேகமாய் விரியும் வெண்பட்டு பிடிக்கும் சின்னச் சின்னதாய் மினுக்கும் தங்கம் பிடிக்கும் இப்படி தேடி அலைந்து கொடுத்தபின் ஏதுக்கு இதெல்லாம் என்ற சிணுங்கல் பிடிக்கும் சிணுங்கல் முனகலாய் மாறி முடியும் புணர்தல் பிடிக்கும் புணர்தலுக்கு பின் வெற்று மார்பில் படுத்தபடி நீ கேட்கும் என்னை நிஜமாவே அவ்வளவு பிடிக்குமா? என்ற கேள்வியில் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் காதலை எப்படி உன்னிடம் இறக்கி வைப்பேன் Technorati Tags: கவிதை , எண்டர் கவிதைகள் தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

3 IDIOTS –Hindi Film Review

Image
காணாமல் போன தன் நண்பனை தேடி அலையும் மற்ற இரு நண்பர்கள் தங்களின் கடந்த காலத்து காலேஜ் வாழ்க்கையை நினைத்து பார்க்க என்று ஆரம்பிக்கிறது கதை. இஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மூன்று இளைஞர்களின் கதை. போமன் ஈரானி நடத்தும் டெல்லியின் முக்கியமான இஞ்ஜினியரிங் காலேஜில், பொருளாதார முறையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மூன்று இளைஞர்களான, அமீர், மாதவன்,ஷர்மான். அமீர் ஒரு பணக்கார வீட்டு இளைஞன், மாதவன் ஒரு மிடில்க்ளாஸ், ஷர்மான் வறுமைக் கோட்டுக்கு மிக அருகில் இருப்பவன். இவர்களுக்குள் நடந்த அந்த சில வருட காலேஜ் வாழ்க்கையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் இவ்வளவு சுவைபட சொல்ல முடியுமா..? முடியும் என்றிருக்கிறது இந்த குழு. ஆரம்பத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். மாதவனின் கேரக்டரை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒருபழைய ஏர்கண்டிஷனரை காட்டி தங்களுடய பொருளாதாரத்தை பற்றி மகனிடம் சொல்லும் அப்பா, இன்னொரு பக்கம் ஷர்மானின் வழக்கமான பரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் தங்கை, உடல்நலமில்லாத அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெ...

ஈரோட்டு பதிவர் சந்திப்பு அவுட் புட்

Image
ஆறு லட்சம் ஹிட்ஸுகளையும், 550 பாலோயர்களையும் தந்து என்னை மேலும் ஊக்குவிக்கும் என் அன்பு வாசகர்களுக்கும்,பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி..நன்றிங்கோ.. வண்ணத்துபூச்சி, தண்டோரா, பப்ளிஷர் வாசுதேவன், கார்த்திக்கும் ஞானும் பப்ளிஷர் வாசு( தண்டோராவை வச்சு புக்கு போட்டா விக்குமா..?) தண்டோரா (என்னய்யா..எடுத்தியா..) போட்டோகிராபர் நண்பர் . காலை வேளை வால்பையன் (என்னை பார்த்து சொல்லுங்க.. நானா..??) நாமக்கல் சிபி பிரபல எழுத்தாளர் வா.மு.கோமுவுடன் அப்துல்லா, பின்னே நானும். ஜூனியர் குப்பண்ணா மெஸ், மெஸ் வாசலில் அப்துல்லா, பப்ளிஷர் வாசுதேவன், படமெடுத்தது நான் ஐலேசா..நல்லா தூக்கு ஐலேசா.. வண்ணத்துப்பூச்சி தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் காட்சி ஜாபர், சிறுகதை எழுதுவதை பற்றி பேசிய.. நண்பர், சீனா ஐயா, ஆரூரான் தமிழ்மணம் காசி, பழமைபேசி கார்த்திக், ஜாபர், அப்துல்லா, ஸ்ரீ (என்னமா யோசிக்கிராய்ங்கப்பா..) வால்பையன் (திரும்பவும் சொல்றேன் நான் அவனில்லை.. அவ்னில்லை..அவனில்லை.) கார்த்திகை பாண்டியன், ஈரோடு கதிர்.. முவத்துல என்ன ஒரு வெக்கமய்யா.. வந்திருந்த பதிவர்களின் ஒரு பகுதி, ...