Posts

Showing posts from January, 2009

அக்னிபார்வையின் கேள்விகளும், என் பதில்களும்

Image
200வது பதிவு. இது என்னுடய 200வது பதிவு.. இதுவரை என் பதிவுகளை படித்து ஆதரவு அளித்தமைக்கு நன்றி.. மேலும் உங்கள் ஆதரவை நல்கி வேண்டுகிறேன். சக பதிவர் நண்பர் திரு. அக்னி பார்வை என்னையும் ஒரு கருத்தாய் கொண்டு பேட்டி எடுத்து பெருமைபடுத்தியமைக்கு நன்றிகள் பல.. அந்த பேட்டியின் cut&Past அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள் மீண்டும் ஒருமுறை ‘அக்னியின் கேள்விகள்’ பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த முறை சினிமாவை பற்றி, நம் பார்வையில் சிக்கிக்கொண்டவர் கேபிள் சங்கர்.இவருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்தளவுக்கு பதிவுகளிள் பிரபலமானவர். சினிமா இயக்கும் முயற்ச்சியில் ஈடுபடுபவர், ஒரு நாள் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள். 1. கேபிள் சங்கர் பற்றி? ஒரு சாதாரண பிஸினெஸ்மேன், நடிகன், திரைக்கதையாசிரியன், வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், திரைபட இயக்குனராகும் முயற்சியில் இருப்பவன் சமீபகாலமாய் ப்ளாக்குகளில் எழுதியே மற்றவர்களை நோகடிப்பவன். 2. சினிமாவுக்கும் உங்களுக்குமான் தொடர்பு? சினிமா எனக்கு ஒரு Passion. அதனால் சினிமாவில், தயாரிப்பு, நடிப்பு, உருவாக்குதல், தியேட்டர...

வெண்ணிலா கபடி குழு - திரை விமர்சனம்

Image
சமீப காலமாய் தமிழ் சினிமா பார்த்து வெறுத்து போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சியாய் வந்திருக்கிறது இப்படம். கோடிகளை கொட்டி முட்டாள் தனமாய் படமெடுக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ஒரு பாடமாய் வந்திருகிறது இப்படம். பட்ஜெட் முக்கியமில்லை, ஆர்டிஸ்ட் முக்கியமில்லை, திரும்ப திரும்ப மூளை மழுங்கடிக்கப்படும் டிவி விளம்பரங்கள் தேவையில்லை, சுமாரான கதையும், அதை அழகாய் படமெடுத்தால் போதும் தலையில் வைத்து கொண்டாடுவார்கள் நம் தமிழ் மக்கள் என்பதை மீண்டும் நிருபிக்கும்,என் போன்ற எதிர்கால இயக்குனர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வந்திருக்கும் படம் வெண்ணிலா கபடி குழு. தமிழில் விளையாட்டை வைத்து எனக்கு தெரிந்து வந்த படம் சென்னை 28, அதற்கு பிறகு இந்த படம் தான் வந்திருக்கிறது. இந்தியா முழுவதும் விளையாடப்படும், ஸ்பான்ஸர்கள் யாருமில்லாமல் சீந்துவாரற்ற நிலையில் உள்ள விளையாட்டான கபடிதான் அது. சிறு வயதிலிருந்தே கபடி மீது வெறி கொண்டு விளையாடும் கிராமத்து இளைஞர்கள், ஊருக்குள்ளேயே வெண்ணிலா கபடி குழு என்று ஒரு குழுவை ஆரம்பித்து, பக்கத்து ஊரில் விளையாடி தோற்பதுமாய் இருப்பவர்கள், தங்களது ஊர் திருவிழாவை ...

இஸ்ரேல், பாலிஸ்தீன பதிவர் சந்திப்பு 25/01/09

Image
N.R.I கோவி கண்ணன்(ஸ்வீட் மேன்), விஜய் ஆனந்த்( :):)) முரளிகண்ணன் , அரையிருட்டில் பத்ரி கிழக்கு பதிப்பகம். கணேஷ் படித்துறை என்கிற பெயரில் எழுதுபவர். ராம் சுரேஷ் புதிய பதிவர் அவர்களே வருக..வருக.. லக்கிலுக், மீண்டும் முரளி, அதிஷா.. முரளிக்கு பின்னால் யாருங்க அது..? அக்னிபார்வை, சின்னதிரை இயக்குனர், டாக்டர் புருனோ.. அக்னிபார்வையிடம் நான் இந்த முறை புத்தக கண்காட்சியில பிரபாகரன் புக்கை தடை பண்ணிட்டாங்களாமே..? அட நீ வேற அவங்க பட்டுக்கோட்டை பிரபாகர் புக்கையே எடுத்து வச்சுட்டாங்களாம்!!! இது அக்னியின் பதில். ஆனாலும் நம்ம ஆட்களுக்கு நகைச்சுவை உணர்சி ரொம்பத்தான் அதிகம். இயக்குனர் ஷண்முகப்பிரியன்.. புதிய பதிவர்.. வருக.. வருக.. லக்கிலுக், சென்னை தமிழன்..புதிய பதிவர் வருக.. வருக என வரவேற்கிறோம். இவர்களை தவிர, பாலபாரதி, பெண் பதிவர் லஷ்மி, நர்சிம், கிழக்கு பதிப்பகம் பத்ரி, அருண் என்கிற வாசகர், வெண்பூ, கோவி கண்ணனின் நண்பர்,அகிலன், மற்றும் பலரும் வந்திருந்தார்கள், மற்ற பதிவர்களை படமெடுக்கும் முன் இஸ்ரேல், பாலஸ்தீன பிரச்சனை உருவெடுத்து பெரும் போராய் மாறி ஏவுகணைகளை வீசியதால் படமெடுக்க முடியவில்லை. போரின் நட...

என்னை தெரியுமா- திரைவிமர்சனம்

Image
குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி.. தெலுங்கில் 'நேநு மீக்கு தெலுசா" என்கிற பெயரில் 2008 அக்டோபரில் வெளிவந்த படம். தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் நடிதது தமிழிலும், தெலுங்கிலும் ஒரு சேர எடுக்கப்பட்ட படம். கதை ஒன்றும் பெரிசாக இல்லை. வழ்க்கம போல கஜினி மெமரி லாஸ் கதைதான். என்ன கஜினியில் 15 நிமிடம் என்றால் இதில் ராத்திரி தூங்கி எழுந்தால் முதல் நாள் நடந்தது தெரியாது. தினமும் அன்றைய நிகழ்ச்சிகளை, அவனை பற்றிய விவரங்களை டேப் ரிக்கார்டரில் போட்டு கேட்டு வாழ்கையை நடத்துபவ்ன், மிகப் பெரிய கோடீஸ்வரன். அவனுடய காதலி ரியா சென். அவனுக்கு ஞாபக சக்தி வரும் வரை தன் கண் எதிரே வைத்து பார்த்து கொள்ள அவனுக்கு ஒரு மேனேஜர் வேலையில் அமர்த்தில் தன் கண்காணிப்பில் கவனித்து வருபவர் சித்தப்பா நாசர். அவர் ஒரு நாள் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைபழி மனோஜ் மீது விழுகிறது. சினேகா உல்லால்.. ஐ.பி.எஸ் ஆபீசராக வருகிறார். ப்ளாஷ் பேக்கில் மனோஜும், சினேகா உல்லாலும் காதலர்கள். மனோஜுக்கு ஞாபக சக்தி போனது எப்படி? மீண்டும் ஞா...

பதிவுகளை விகடன் படிக்கிறது..?

Image
குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி.. விகடன் தமிழ் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறது என்பதை பதிவுலகத்திலிருந்து வாரம் ஒரு பதிவை அறிமுகபடுத்துவதிலிருந்தே எல்லோருக்கும் தெரியும். பதிவர்கள் எல்லோரும் விகடன் தங்களை கவனிக்கிறது என்பதை பற்றி பெருமிதபட்டு கொண்டு மகிழ்ந்தார்கள். அதிலும் விகடன் பெயரிட்டு வெளிவரும் பதிவுகளில் உண்மையிருந்தால் அதை வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாய் தவறை களையவும் செய்திருக்கிறது என்பது நிதர்சன உண்மை. அப்படி வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விகடன் ஏன் பெரும்பாலான வாசகர்களின் உணர்வை, எண்ணத்தை, மதித்து ஏன் விகடனை பழைய வடிவிலேயே கொடுக்க கூடாது..? நீங்கள் என்னவோ இளைஞர்களை டார்கெட் செய்து வடிவமைத்து இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை. உங்களுடய புதிய வடிவமைப்பால் நெடுங்கால வாசகர்களை, விகடனை தங்கள் வாழ்கையின் ஒரு அங்கமாய் நினைக்கும் வாசகர்களை நீங்கள் இழந்து விட்டீர்கள். உதாரணமாய் என்னிடம் விகடனை கையில் கொடுத்து புத்தகம் படிக...

பின்னூட்டம் வாங்குவது எப்படி..?

Image
75,000 ஹிட்ஸ்களை தந்த சக பதிவர்கள், வாசகர்கள் எல்லோருக்கும் நன்றி.. பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதற பல பேர் பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. அது என்ன பதிவெழுதறத்துக்கு வீக் எண்ட் விடுமுறையா.? ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன். எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து. பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்ன...

பட வரிசை “பத்து”

Image
10 திருவண்ணாமலை சாமி கண்ணை குத்திருச்சுன்னு சொல்றாங்க.. 9 பஞ்சாமிர்தம் குழந்தைகள் படம்னு சொன்னாலும் தியேட்டர் பக்கம் குழந்தைங்க யாரையும் காணோம். வசூலும் ஒண்ணுமில்லைன்னு சொல்றாங்க.. 8.பொம்மலாட்டம் மல்டி ப்ளக்ஸுகல் மட்டும் சொல்லிக்கிற மாதிரி வசூல். 7 திண்டுக்கல் சாரதி பி அண்ட் சி செண்டர்களில் மட்டும் சொல்லிக் கொள்ளும்படியான வசூல். சன் டிவியில் மட்டுமே நெ.1ல் வரும் படம். 6 சிலம்பாட்டம் லிஸ்டுல இருக்கிறதுக்கு ஒரே காரணம் யுவன் சங்கர் ராஜா. 5.அ.ஆ..இ...ஈ.. அ.ஆ..இ...ஈ.. எலிமெண்டரி.. ஒண்ணும் சொல்லிக்கிறபடியா இல்ல.. 4அபியும் நானும் மல்டிப்ளக்ஸில் கூட ஒண்ணும் முடியலையாம். 3.காதல்னா சும்மா இல்ல.. படமெடுக்கிறதுன்னா சும்மா இல்லைன்னு ராஜ் டிவிக்கு தெரியபடுத்தியிருக்கும் படம்.. என்ன தான் படம் சுமாரா இருந்தாலும்.. வசூல் ரொம்பவே மோசம்.. பொறுத்திருந்து பார்ப்போம். 2.படிக்காதவன் மற்றுமொரு சன் டிவி படம். போட்டியில்லாததால் சரியான ஓப்பனிங்.. இருக்கவே இருக்கு சன் டிவி.. ஆனால் ரொம்ப நாள் தாங்காது. 1.வில்லு பொங்கலுக்கு ரெண்டு நாள் முன்னமே வந்து வசூலை அள்ளிட்டாங்க.. பொங்கலுக்கு அப்புறம் படங்கள் வந்தும் ஒன்ணும்...

MASKA - Telugu Film Review

Image
ஒரு பக்கா மசாலாவான காதல் கதை. சிம்மாச்சலமும, ஷாயாஜி சிண்டேவுக்கும் மத்திய மந்திரி பதவி கிடைப்பதில் போட்டி. சிம்மாச்சலத்தை ஜெயிக்க முடியாத ஷிண்டே அவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஹனிஷ்காவை கடத்தி சிம்மாச்சலத்தின் பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தி, அவனது மந்திரி சான்ஸை கெடுத்துவிட துடிக்கிறான். சிம்மாச்சலமோ.. தன் சொந்த மகளையே கொலை செய்ய துடிக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க.. கிருஷ் என்கிற ராம் மஞ்சுவை காதலிக்க தன் நண்பனின் மூலம் அவளுடய விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்டு, அவளை மடக்க முயற்சிக்கிறான். அப்படியே தமிழ் வாலியில் அஜித் சொல்லும் எபிசோடை எடுத்து கொள்ளுங்கள்.. அப்படியே போகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு கிருஷிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கும் போது.. ராமின் கற்பனை காதலி நேரில் வர.. அப்புறம் ஆரம்பிக்கிறது கூத்து. ராம் சூப்பராக ஆடுகிறார், பவன் கல்யாணை போல துள்ளலாய் நடிக்கிறார். இயல்பாய் காமெடி வருகிறது. நன்றாக சண்டை போடுகிறார். குறித்து வைத்து கொள்ளுங்கள் இவரை. மஞ்சுவாய் ஷீலா.. அழகாய் இருக்கிறார். ஹனிஷ்கா வரும் வரை.. ஹனிஷ்கா ஒரு குட்டி பூமிகா போல இருக்கிறார். அழகாய்,மிக அழகாய் இருக்கிறார் ...

அழுகை

Image
அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான். செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும். இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு. பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்...

படிக்காதவன் - திரைவிமர்சனம்.

Image
கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங்கு.. ஜிங்குன்னு ஆடிச்சாம். அது போலத்தான் வில்லுக்கு போய் நொந்து போய் படிக்காதவனுக்கு போனா அங்கெ அத விட கொடுமை. எங்கேயிருந்துதான் யோசிக்கிறாங்களோ..? எதை நம்பி இந்த நடிகர்கள் எல்லாம் இது எல்லாம் ஒரு கதைன்னு கேட்டு ஓகே பண்ணி.. அதுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யுறாங்களோ..? படத்தோட கதை என்னன்னா..? மெத்த படிச்ச குடும்பத்தில படிப்பே வராதா கடைக்குட்டி தனுஷ். படித்த பெண்ணை காதலித்தால் தான் படிக்காததை சரி செய்துவிடலாம்னு நண்பர்கள் சொன்னதை கேட்டு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல தமன்னாவை லவ் பண்ணுறார் தனுஷ். எல்லாம் கூடி வரப்ப தீடீர்னு அவங்க அப்பா.. ஹெலிகாப்டர்ல வந்து கூட்டிட்டு போயிடுறாரு. அதுக்கு அப்புறம் தமன்னாவை தேடி ஆந்திராவுக்கு விவேக்கோட போறாரு. அங்கே போனா ஓயிட் டிரஸ், ரெட் துப்பட்டா போட்ட சுமன் கும்பலுக்கும், அன்யூனிபார்ம்ல இருக்கிற சாயாஜி ஷிண்டே குருப்பும் ரெண்டு கேங்கு லீடரும் ஒருத்தரை ஒருத்தர் ‘வேசையிண்டிரா..” என்று சொல்லிவிட்டு பின்னால் போய்விடுகிறார்கள். இருவர் கும்பலும் குருஷேத்திர போர் போல கத்தி, கபடா, துப்பாக்கி என்று அடித்து கொள்கிறார...

காதல்னா சும்மா இல்ல.. திரைவிமர்சனம்

Image
சக பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கள் நல்வாழ்த்துக்கள் தெலுங்கில் “கம்யம்’ என்ற பெயரில் வெளிவந்து கமர்சியலாகவும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர அள்ளிய படம். படத்தின் பெயரை வைத்து காதல் கதை என்று நினைக்கிறவர்களுக்கு, காதலை விட மேலான வாழ்கையை நோக்கி செல்லும் படம். தன் காதலியை தேடி அலையும் அபிராம் என்கிற ஒரு கோடீஸ்வர இளைஞன் வழியில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் வாழ்கையை புரிந்து கொள்கிறான். வழக்கமான காதல் கதையாய் இல்லாமல் காதல் மூலமாய் வாழ்கையின் தேடல்களை தர முயற்சித்திருப்பதால் வித்யாசமான படமாய் அமைகிறது. மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்கிற படத்தின் தாக்கம் படத்தில் இருந்தாலும், இயல்பான திரைக்கதையால் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார்கள். அபிராம் ஒரு மிகப் பெரிய கோடீஸ்வரன். ஜானகி என்கிற டாக்டர் பெண்ணை துரத்தி, துரத்தி காதலிக்கிறான். ஜானகி ஒரு சோஷியல் கான்ஷியஸ் இருக்கிற மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே வாழ்கிற பெண். அபிராமோ.. அவனுடய வாழ்கையில் மற்றவர்களுக்கான இடமே இல்லாதவன். இவர்கள் இருவருக்கும் காதல் வர இருக்கும் தருணத்தில் ஒரு விபத்தினால் அவர்கள் பிரிகிறார்கள். அதற்கு பிறகு ஜானகியை க...