Posts

Showing posts from February, 2009

உலக சினிமா - STAR MAKER -

Image
1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்பவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில், ஊர் ஊராக சுற்றி, தான் ரோமில் இருக்கும் கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு கிராமமாய் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இவன் படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்களில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று சொல்லி ஏமாற்றுகிறான். அப்படி டேரா போட்டிருந்த ஓரு கிராமத்தில் பியாட்டா என்பவள், தன்னை எப்படியாவது பெரிய கதாநாயகியாக்கிவிடுமாறு வ்ந்து கேட்கிறாள். யாருடய ஆதரவில்லாமல் வீடுகளையும், அலுவலகங்களையும், சுத்தம் செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டு, ஓரு தேவாலயத்தின் ஆதரவில் இருக்கும் தன்னிடம் அவன் கேட்குமளவுக்கு பணம் இல்லை என்கிறாள். ஓரு கட்டத்தில் அவளின் அழகு அவனை இறங்கி வர...

கலைஞர் “டிவி”

Image
அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தின், நான்காவது கட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், அதை பற்றிய செய்தியை தினசரியில் பார்த்து கொண்டிருந்தபோது, எனது நண்பர் ஒருவர் காச் மூச்சென்று கத்த ஆரம்பித்தார். என்னவென்று கேட்டதும் பெரும ஆரம்பித்தார். நண்பருக்கும் இலவச டிவி கிடைத்திருக்கிறது. வாங்கி மூன்றே மாதத்தில் வழக்கம் அது தன் வேலைய காட்டி பீஸாகி விட, டிவிக்கு வாரண்டி கார்டு இருக்குமே என்று அதை தேடி பார்த்து, அதிலிருந்த அட்ரஸுகளை தேடியிருக்கிறார். நண்பர் கோடம்பாக்கம் அருகில் உள்ளதால், அருகேயிருந்த கோடம்பாக்கம் அட்ரசுக்கு போய் தேடியிருக்கிறார். தெருமுழுக்க தேடியதில் அதில் குறிப்பிட்டிருந்த 34ஆம் நம்பர் மட்டும் காணவில்லை, மிகுந்த பிரயாசைக்கு பிறகு, தேடியதில் ஒரு குட்டி சந்தினுள், சிறிய பெட்டி கடை போன்ற அமைப்பில் கொஞ்சம் கூட சர்வீஸ் செண்டருக்கான முகாந்திரமும் இல்லாத, ஏதோ துணிகளையெல்லாம், வைத்து ஒரு பெரியவர் வியாபாரம் செய்து கொண்டுருந்திருக்கிறார். ...

வானமெனும் வீதியிலே..

Image
அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி எப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட உறவுக்காரங்களோட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம். நானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, சென்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்து 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி இரண்டு மணி நேரம் முன்னாடி போவது கஷ்டம்தான். அவசரமாய் ஹைதைக்கு போக வேண்டியிருந்ததாலும், ரயிலில் டிக்கெட் இல்லாததாலும், இதை சாக்கா வச்சி எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து, ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு ...

ஏ.ஆர். ரஹ்மானின் - DELHI -6 - Hindi Film Review

Image
அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் நினைய விருப்பமா..? அப்படியென்றால் உடனடியாய் டெல்லி-6 ஐ பார்கவும். படம் நெடுகிலும் பொங்கி வழியும் காதலாகட்டும், கோபமாகட்டும், கவாலியாகட்டும், பிண்ணனி இசையாகட்டும், மனுஷன் சும்மா பொங்கி பிரவாகமாகியிருக்கிறார். படத்துக்கு வருவோம். ரங்கே தே பஸந்தி திரைபடத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ஒரு இந்துவுக்கு, முஸ்லிமுக்கும் பிறந்த அபிஷேக் தன் பாட்டியின் கடைசி கால ஆசையின் காரணமாய் டெல்லி-6 வருகிறான். அங்கு இருக்கும் தஙகளின் பழைய வீட்டில், செட்டிலாகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்து எதை பார்த்தாலும் ‘ஆவ்சம்’ என்றபடி, சந்தோசப்பட்டுக் கொண்டு, பார்பதையெல்லாம் ஆச்சர்யத்தோடு இருப்பவன், மெல்ல மெல்ல தனக்கே தெரியாமல் இங்கேயுள்ள சமூக அமைப்பின் பிரச்ச்னைகளில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து அவர்களை மீட்க போராடுவது என்பது தான் கதை. இண்டியன் ஐடியலாக ஆசைப்படும் பக்கத்து வீட்டு பெண் பிட்டு, அவளின் அப்பா ஓம்பூரி, அவரது ஜெ...

த நா. 07.அல.4777 - திரைவிமர்சனம்

Image
மூன்று அஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த எ.ஆர்.ரகுமானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி... நன்றி.. நன்றி. ஆங்கிலத்தில் Changing Lanes என்கிற பெயரில் சாமுவேல் ஜாக்சனும், பென் அஃலெக்கும் நடித்த படம். அது அப்படியே இந்தியில் டாக்ஸி நெ.9211 என்கிற பெயரில், நானா படேகர் நடித்த வெளிவந்தது, இதனின் தமிழ் பதிப்புத்தான் பசுபதி, அஜ்மல், மீனாட்சி ஆகியோர் நடித்து வெளிவந்துள்ள தநா.07.அல.4777. வீட்டில் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருப்பதாய் பொய் சொல்லிவிட்டு, கால்டாக்ஸி டிரைவராய் வேலை பார்க்கும், முன் கோபக்கார பசுபதி. மிகப் பெரிய கம்பெனியின் வாரிசான கவுதம் ஐய்யங்காருக்கு தன் சொத்தை காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கோர்டுக்கு போய் கொண்டிருக்கும், திமிர் பிடித்த பணக்கார திமிர் பிடித்த ஒரு முதலாளீத்துவ இளைஞன், அவனின் காதலியாய் மீனாட்சி. மேற்சொன்ன இருவரும் ஒரு சந்தர்பத்தில் பசுபதியின் காரில் பயணம் செய்ய நேரிடுகிறது. அந்த நிகழ்வு அவர்கள் இருவரது வாழ்கையையும் புரட்டி போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள்? என்பதை பரபரப்பான ஒரு இரண்டு மணி நேர பயணமாய் கொடுத்திருக்கிறார்கள். ...

லாடம் - திரை விமர்சனம்

Image
கொக்கிக்கு பிறகு கொஞ்சம் வித்யாசமான மேக்கிங் உள்ள படங்களையே அளித்து வந்த பிரபு சாலமனின் அடுத்த படம். சென்ற படஙக்ளை போலவே வித்யாசமான ஒரு கதை களத்தை எடுத்து கொண்டிருக்கிறார். ஊரிலிருந்து சென்னையில் வேலைக்கு சேருவதற்காக வந்த குஞ்சிதபாதம் என்கிற இளைஞனை, அவன் தங்கியிருந்த ரூமில் உள்ள சுப்ரமணீயத்த்க்கு பதிலாய் “பாவாடை சாமி’ என்கிற ஒரு ரவுடியின் கும்பல் தூக்கி கொண்டு போக, பாவாடை சாமியின் எதிரியான வேம்புலி பாவாடையின் மகனை போட்டு தள்ளிவிட, வேம்புலியை அழிக்க பாவாடையால் அனுப்பப்படும் ஆட்கள் எல்லாம் இறந்து போய் போட்டோவாக வர, தன் ஓட்டை வாயால் ஐடியா கொடுக்கிறேன் பேர்விழி என்று நம்ம குஞ்சிதபாதம் மூளையை யூஸ் பண்ணனும் என்று எதையோ சொல்ல, 16 நாளுக்குள் தன் எதிரி வேம்புலியை அவன் தான் கொல்ல வேண்டும், அப்படி கொல்லாவிட்டால் 17 அவனுக்கு பால் என்கிறான். அடுத்த நிமிஷமே எதிர் வீட்டு வேம்புலியிடமும் மாட்டி விடுகிறான். வேம்புலி அவனை உயிரோடு புதைக்க, அவன் அதிலிருந்து தப்பித்தானே..? 16ஆம் நாள் வேம்புலியின் மகனை கொன்றானா..? இடையில் அவனுக்கு சார்மிக்கு ஏற்படும் காதல் என்னவாயிற்று என்பதை போன்ற பல கேள்விகளுக்கு, பல சமயம...

வாசகர்கள் பதிவர்களை பார்த்து கேட்க நினைக்கும் 10 கேள்விகள்?

Image
1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?. 2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்..? படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..? 3 . கொஞ்சம் முகம் தெரிய ஆரம்பிச்ச உடனேயே உங்களுக்குள்ளேயே குருப் சேர்த்துகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் _______ விட்டுக்கிறீங்களே அது ஏன்..? 4 . அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.? 5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..? 6 . பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவ...

வி.த.வ.போ.படம்- Happy Days

Image
ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.. படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம். தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா.. ...

விலைவாசி...

Image
ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நாட்டின் பொருளாதாரம் சூப்பராய் இருந்த காலத்தில் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட், காய்கறிகள், மளிகை சாமான்கள் என்று எல்லாமுமே ஏறுமுகமாய் இருந்தது. அப்போது இதற்கெல்லாம் காரணம் இந்த சாப்ட்வேர் ஆசாமிகள் என்று மற்ற துறையினர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. அவர்களால் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் போன்றவைகள் விண்ணை தொடும் அளவுக்கு ஏறியது. பின்பு நாட்டில் பணவீக்கம் அதிகமாகி பொருளாதாரம் சிக்கலான போது, அதை காரணம் காட்டி விலைவாசி கிடுகிடுவென ஏறியது. ஸ்டார் ஹோட்டலிலிருந்து, கையேந்திபவன் வரை அசுர வேகத்தில் ஏறியது. ஒரு ரூபாய் பரோட்டா 2.50 ஆனது, வாட்டர் பாக்கெட் கெட்ட கேட்டுக்கு 1.50 ஆனது. காய்கறி மற்றும் உணவு பொருட்கள் எல்லாமே ராக்கெட் விலை உயர்வு உயர்ந்தது. அதற்கு காரணம் காட்டியது பெட்ரோல் விலையையும் தான். ஹோட்டல்களில் பொதுமக்கள் சாப்பாட்டுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமையில், அரசே தலையிட்டு மலிவு விலையில் சாப்பாடு கொடுக்க சொல்லி உத்தரவிட்டது தெரிந்ததே.. அது வெறும் ...

ரஜினியை அவமானத்துக்கு உள்ளாக்காதீர்கள்..

ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ரஜினி என்கிற பெயர் ஒரு மந்திரச்சொல் என்று அவருடய ஆதரவாளர்கள் சொல்லிவருகிறார்கள். ரஜினி என்று பேசினாலோ, எழுதினாலோ, உடனடியாய் கவனிக்க படுகிறார்கள் என்று சொல்கிறார்கள். ரஜினி ஒரு படம் நடிக்கிறார் என்றால் தமிழ் திரையுலகமே பரபரப்பாகிவிடுகிறது என்றும் சொல்கிறார்கள். ரஜினி கையை காட்டினால் அதற்கு ஒரு தனி மரியாதை வந்துவிடும் என்கிறார்கள். ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடே பூபூத்த நந்தவனமாகிவிடும் என்று மிகைப்படுத்தி சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது எல்லாம் உண்மையா என்று யோசித்தால், இதெல்லாம் எந்த அளவுக்கு மீடியா ஏற்படுத்திய மித் என்று அவருடய ஆதரவாளர்களின் புத்திக்கு தெரிந்தாலும்,மனம் ஏற்றுக் கொள்ள ஏற்றுக் கொள்ள மாட்டேனெங்கிறது. தமிழ்நாட்டில் ஒர் பரபரப்பான அரசியல் நிலையில், ரஜினி ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன “இந்தம்மாவுக்கு ஓட்டு போட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது” என்ற கூற்றால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்றது ரஜினியால் என்று அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்...

சிவா மனசில சக்தி - திரை விமர்சனம்

Image
ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ஆணுக்கும்,பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்து அன்பேவா, தில்லானா மோகனாம்பாள், குஷி, திருடா திருடி என்று பல படஙகள் வந்திருந்தாலும், இந்த கருவை வைத்து இண்ட்ரஸ்டாக திரைக்கதை அமைத்தால் நிச்சயமாய் வெற்றியடையும். அதே நேரம் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் ஆங்காங்கே இழுவையாய் போகும் வாய்ப்பும் உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி இரண்டாம் வகை. ரெயிலில் நடக்கும் முதல் சந்திப்பிலேயே சிவாவுக்கு காதல் வந்துவிடுகிறது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றி தங்களை பற்றி பொய் சொல்ல, அது தெரியும் போது, தாஙகள் ஏமாற்றபட்டதால் காண்டாகி போய் ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இருவரின் ஈகோவும் உடைந்து தங்கள் காதலை சொன்னார்களா இல்லையா? அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா..? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். ஜீவாவுக்கு ஏற்ற வேடம்.. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவரும், சந்தானமும், சில சமயம் கிச்சு,கிச்சும், சில சமயம் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு ...

Koncham Istam Koncham Kastam- Telugufilm review

Image
அடுத்த பதிவு..S.M.S.திரைவிமர்சனம் வர வர தெலுங்கில இனிமையான, இளமையான படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. அப்படியான படம் தான் கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம். படம் முழுவதும் ஒரு இளமை ஜுரம் பரவியிருக்கிறது. புதுசான கதை கிடையாது. ஆனாலும் சுவாரஸ்யமாய் தெரிவதற்கு நம்ம தமன்னா இருக்கும் போது என்ன் குறை. பொண்ணு ஸ்டாபரரி ஐஸ்கிரீம் மாதிரி சும்மா பார்த்தாலே.. சில்லுன்னுகுது. ரம்யாகிருஷ்ணனும், பிரகாஷ்ராஜும் கணவன் மனைவி ஆனால் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களின் மகனான சித்தார்த் காலேஜில் லெக்சரராய் இருக்கும் தாயுடம் ஹைதராபாத்தில் தனியே இருக்க, அவனின் தந்தை வெளிநாட்டிலிருந்தவர் இந்தியா வருகிறார். கீதா சுப்ரமணீயம் என்கிற தமன்னா வேறு ஊரிலிருந்து ஹைதராபாத்துக்கு மேல் படிப்புக்காக வர, இருவருக்கும் இருக்கும் பொதுவான ஏரியா நண்பர்கள் மூலம் நண்பர்கள் ஆகி, பின்பு காதலர்கள் ஆகிறார்கள். தங்கள் காதலை தமன்னாவின் அப்பா நாசரிடம் சொல்ல, அம்மாவும், அப்பாவும் பிரிந்திருக்கிற குடும்பத்தில், குடும்பத்தின் வேல்யூ தெரியாத வீட்டில், என் பெண்ணை கொடுக்க மாட்டேன் என்கிறார். அவர்கள் இருவரையும், சேர்த்து வைத்துவிட்டு உங்கள் பெண்ணை திருமணம...