ஏ.ஆர். ரஹ்மானின் - DELHI -6 - Hindi Film Review
அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் நினைய விருப்பமா..? அப்படியென்றால் உடனடியாய் டெல்லி-6 ஐ பார்கவும். படம் நெடுகிலும் பொங்கி வழியும் காதலாகட்டும், கோபமாகட்டும், கவாலியாகட்டும், பிண்ணனி இசையாகட்டும், மனுஷன் சும்மா பொங்கி பிரவாகமாகியிருக்கிறார்.
படத்துக்கு வருவோம். ரங்கே தே பஸந்தி திரைபடத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ஒரு இந்துவுக்கு, முஸ்லிமுக்கும் பிறந்த அபிஷேக் தன் பாட்டியின் கடைசி கால ஆசையின் காரணமாய் டெல்லி-6 வருகிறான். அங்கு இருக்கும் தஙகளின் பழைய வீட்டில், செட்டிலாகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்து எதை பார்த்தாலும் ‘ஆவ்சம்’ என்றபடி, சந்தோசப்பட்டுக் கொண்டு, பார்பதையெல்லாம் ஆச்சர்யத்தோடு இருப்பவன், மெல்ல மெல்ல தனக்கே தெரியாமல் இங்கேயுள்ள சமூக அமைப்பின் பிரச்ச்னைகளில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து அவர்களை மீட்க போராடுவது என்பது தான் கதை.

இண்டியன் ஐடியலாக ஆசைப்படும் பக்கத்து வீட்டு பெண் பிட்டு, அவளின் அப்பா ஓம்பூரி, அவரது ஜென்ம பகையாளியாக ஓரே வீட்டிற்குள் ஒரு சுவரை எழுப்பி பிரிந்து வாழும் அவரது தம்பி, அவரது மனைவி, ஜிலேபி போடும் முஸ்லிம் இளைஞன், கோயில் பூசாரி அதுல் குல்கர்னி, சமீபத்தில் புதிய சின்ன வயசு பெண்ணை திருமணம் செய்திருக்கும் லால்ஜி பிரேம்சோப்ரா, கையில் ரசம் போன கண்ணாடியை வைத்து கொண்டு திரியும் பைத்தியக்காரன், பலரின் ஆசைகளை தூண்டி விட்டு அதில் குளிர்காயும் போட்டோகிராபர் சைரஸ், தெருவில் குப்பை பொறுக்கும் பெண், எதற்கெடுத்தாலும் கை நீட்டி அடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் ராஸ், இந்து முஸ்ஸிம் என்று பாரபட்சமில்லாமல் எல்லோருக்கும் கல்கண்டு கொடுக்கும் முஸ்லிம் பெரியவர், ஆண்டனா சாமியார், பஜ்ரங்தள் எம். எல். ஏ என்று விதவிதமான கேரக்டர்களை வைத்து ஒரு ஜுகல்பந்தியே நடத்தியிருக்கிறார் இயக்குனர்.

இதற்கு நடுவில் படத்தின் ஆரம்பத்திலிருந்து குரங்கு மனிதன் ஒருவன் டெல்லியை சுற்றி வருவதாய் வதந்தி பரவி, அது கடைசியில் அந்த குரங்கு மனிதன் இந்துவா, முஸ்லிமா என்கிற பிரச்சனை முற்றி தாயாபிள்ளையா பழகின இரு மதத்தினரிடமும், பிரிவினை ஏற்பட்டு ஏரியாவே கந்தர்கோளமாகிவிட, இதனிடயில் அபிஷேக்குக்கு, பிட்டு மேல் காதல் வந்துவிட, பிட்டுவின் அப்பா ஓம்பூரி அவளுக்கு திருமணம் செய்ய வேறு மாப்பிள்ளை பார்த்ததால் இந்த களேபரத்தில் வீட்டைவிட்டு கேமராமேன் சைரசுடன் ஓட முயல, அதிலிருந்து தன் காதலியை காப்பாற்றுவதற்காக, குரங்கு மனிதன் வேஷத்தில் அபிஷேக் போக, மக்களிடையே மாட்டிக் கொண்ட அபிஷேக் அவர்களாலேயே அடித்து போடப்பட, என்று பதைபதைப்போடு எடுத்திருக்கிறார்கள்.
ரஹ்மானின் இசை படம் நெடுகிலும் பரவியிருக்கிறது. அதிலும், மடக்களி என்கிற அந்த பாடல், சூப்பர். அதே போல் பெண்கள் எல்லாம் ஊறுகாய் போடுவதற்காக மாடியில் உட்கார்ந்தபடி ஒரு லோக்கல் பாட்டை பாட, அதை அப்படியே வெஸ்டர்ன் பீட்டுக்கு மாற்றி நம்மை எழுந்து ஆட செய்கிறார். அதே போல் பின்னால் வரும் கவாலி பாடல் மனதை உருக்கும். அதை தியேட்டரில் படத்தோடு பார்த்தால் தான் உணரமுடியும்.
அபிஷேக் அழகு, மிக ஈஸியாய் நடித்திருக்கிறார். அதே போல் அவரின் அப்பாவின் நண்பராய் வரும் ரிஷிகபூர், அபிஷேக் அவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை? ஏதாவது காதல் மேட்டரா? என்று கேட்கும் போது, ஆமாம்.. அந்த பெண்ணை உங்கப்பா தூக்கிட்டு போயிட்டார் என்னும் இடத்தில் அபிஷேக்கின் எக்ஸ்பிரஷன் அருமை.

பக்கத்து வீட்டு பிட்டுவாக சோனம் கபூர். இயல்பாய் நடிக்கிறார். அழகாய் இருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போன்ற இயல்பு. ஒம்பூரியும், அவரது தம்பியும் சரிக்கு நிகர் சரி சமமாக பின்னியிருக்கிறார்கள். படம் முழுக்க வரும் கேரக்டர்கள் யாரும் சோடை போகவில்லை.
இயக்குனர் ராகேஷ் மிக இயல்பாய் கதையை ஆரம்பித்து, படத்தில் ஆரம்பம் முதலே குரங்கு மனிதன் கேரக்டரை, நம் மனக்குரங்கின் உருவமாக சித்தரித்திருப்பது அருமை. அதே போல் ஓவ்வொருவரும் மனிதகுரங்கை தங்கள் பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கும், அதை வைத்து அரசியல் ஆதாயம் பெறுவதற்க்கும் எப்படியெல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதை கேமராகாரன் சைரசுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் வயதானவரின் பெண்டாட்டி தன் கணவனிடம் மாட்டாமல் இருப்பதற்காக குரங்கு மனிதன் தன்னை கெடுக்க வந்ததாய் கதை கட்டி விடுவதும், அரசியல்வாதிகளும், டிவிக்காரர்களும் ஒண்ணுமேயில்லாத பிரச்சனையை பெரிதாக்கிவிடுவதும், ராம்லீலா நாடகத்தை ஒரு கதாபாத்திரமாகவே உபயோகித்திருப்பதையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஹாட்ஸ் ஆப். ராகேஷ்.
பினோத் பர்தானின் ஒளிப்பதிவு அருமை.டெக்னிக்கலாய் ஒரு குறையும் சொல்ல முடியாது. படம் முடிந்தவுடன் அங்கேயிருக்கும் ஒரு கண்ணாடியில் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களும் தங்களுடய முகத்தை பார்த்து கொள்வது போல் ஒரு காட்சி வரும். அதில் ஒவ்வொருவரின் முகபாவனைகளை பாருங்கள் அவர்களின் மனகுரங்கின் சேஷ்டைகளை. சூப்பர். மெதுவாய் சென்றாலும் படம் பார்த்துவிட்டு வரும் போது கொஞ்சம் மனதுள் அசைபோடும்படுயான படம்.
டெல்லி-6
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை மழையில் நினைய விருப்பமா..? அப்படியென்றால் உடனடியாய் டெல்லி-6 ஐ பார்கவும். படம் நெடுகிலும் பொங்கி வழியும் காதலாகட்டும், கோபமாகட்டும், கவாலியாகட்டும், பிண்ணனி இசையாகட்டும், மனுஷன் சும்மா பொங்கி பிரவாகமாகியிருக்கிறார்.
படத்துக்கு வருவோம். ரங்கே தே பஸந்தி திரைபடத்தின் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், ஒரு இந்துவுக்கு, முஸ்லிமுக்கும் பிறந்த அபிஷேக் தன் பாட்டியின் கடைசி கால ஆசையின் காரணமாய் டெல்லி-6 வருகிறான். அங்கு இருக்கும் தஙகளின் பழைய வீட்டில், செட்டிலாகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்து எதை பார்த்தாலும் ‘ஆவ்சம்’ என்றபடி, சந்தோசப்பட்டுக் கொண்டு, பார்பதையெல்லாம் ஆச்சர்யத்தோடு இருப்பவன், மெல்ல மெல்ல தனக்கே தெரியாமல் இங்கேயுள்ள சமூக அமைப்பின் பிரச்ச்னைகளில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து அவர்களை மீட்க போராடுவது என்பது தான் கதை.

இண்டியன் ஐடியலாக ஆசைப்படும் பக்கத்து வீட்டு பெண் பிட்டு, அவளின் அப்பா ஓம்பூரி, அவரது ஜென்ம பகையாளியாக ஓரே வீட்டிற்குள் ஒரு சுவரை எழுப்பி பிரிந்து வாழும் அவரது தம்பி, அவரது மனைவி, ஜிலேபி போடும் முஸ்லிம் இளைஞன், கோயில் பூசாரி அதுல் குல்கர்னி, சமீபத்தில் புதிய சின்ன வயசு பெண்ணை திருமணம் செய்திருக்கும் லால்ஜி பிரேம்சோப்ரா, கையில் ரசம் போன கண்ணாடியை வைத்து கொண்டு திரியும் பைத்தியக்காரன், பலரின் ஆசைகளை தூண்டி விட்டு அதில் குளிர்காயும் போட்டோகிராபர் சைரஸ், தெருவில் குப்பை பொறுக்கும் பெண், எதற்கெடுத்தாலும் கை நீட்டி அடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் ராஸ், இந்து முஸ்ஸிம் என்று பாரபட்சமில்லாமல் எல்லோருக்கும் கல்கண்டு கொடுக்கும் முஸ்லிம் பெரியவர், ஆண்டனா சாமியார், பஜ்ரங்தள் எம். எல். ஏ என்று விதவிதமான கேரக்டர்களை வைத்து ஒரு ஜுகல்பந்தியே நடத்தியிருக்கிறார் இயக்குனர்.

இதற்கு நடுவில் படத்தின் ஆரம்பத்திலிருந்து குரங்கு மனிதன் ஒருவன் டெல்லியை சுற்றி வருவதாய் வதந்தி பரவி, அது கடைசியில் அந்த குரங்கு மனிதன் இந்துவா, முஸ்லிமா என்கிற பிரச்சனை முற்றி தாயாபிள்ளையா பழகின இரு மதத்தினரிடமும், பிரிவினை ஏற்பட்டு ஏரியாவே கந்தர்கோளமாகிவிட, இதனிடயில் அபிஷேக்குக்கு, பிட்டு மேல் காதல் வந்துவிட, பிட்டுவின் அப்பா ஓம்பூரி அவளுக்கு திருமணம் செய்ய வேறு மாப்பிள்ளை பார்த்ததால் இந்த களேபரத்தில் வீட்டைவிட்டு கேமராமேன் சைரசுடன் ஓட முயல, அதிலிருந்து தன் காதலியை காப்பாற்றுவதற்காக, குரங்கு மனிதன் வேஷத்தில் அபிஷேக் போக, மக்களிடையே மாட்டிக் கொண்ட அபிஷேக் அவர்களாலேயே அடித்து போடப்பட, என்று பதைபதைப்போடு எடுத்திருக்கிறார்கள்.
ரஹ்மானின் இசை படம் நெடுகிலும் பரவியிருக்கிறது. அதிலும், மடக்களி என்கிற அந்த பாடல், சூப்பர். அதே போல் பெண்கள் எல்லாம் ஊறுகாய் போடுவதற்காக மாடியில் உட்கார்ந்தபடி ஒரு லோக்கல் பாட்டை பாட, அதை அப்படியே வெஸ்டர்ன் பீட்டுக்கு மாற்றி நம்மை எழுந்து ஆட செய்கிறார். அதே போல் பின்னால் வரும் கவாலி பாடல் மனதை உருக்கும். அதை தியேட்டரில் படத்தோடு பார்த்தால் தான் உணரமுடியும்.
அபிஷேக் அழகு, மிக ஈஸியாய் நடித்திருக்கிறார். அதே போல் அவரின் அப்பாவின் நண்பராய் வரும் ரிஷிகபூர், அபிஷேக் அவரிடம் நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை? ஏதாவது காதல் மேட்டரா? என்று கேட்கும் போது, ஆமாம்.. அந்த பெண்ணை உங்கப்பா தூக்கிட்டு போயிட்டார் என்னும் இடத்தில் அபிஷேக்கின் எக்ஸ்பிரஷன் அருமை.

பக்கத்து வீட்டு பிட்டுவாக சோனம் கபூர். இயல்பாய் நடிக்கிறார். அழகாய் இருக்கிறார். பக்கத்து வீட்டு பெண் போன்ற இயல்பு. ஒம்பூரியும், அவரது தம்பியும் சரிக்கு நிகர் சரி சமமாக பின்னியிருக்கிறார்கள். படம் முழுக்க வரும் கேரக்டர்கள் யாரும் சோடை போகவில்லை.
இயக்குனர் ராகேஷ் மிக இயல்பாய் கதையை ஆரம்பித்து, படத்தில் ஆரம்பம் முதலே குரங்கு மனிதன் கேரக்டரை, நம் மனக்குரங்கின் உருவமாக சித்தரித்திருப்பது அருமை. அதே போல் ஓவ்வொருவரும் மனிதகுரங்கை தங்கள் பிரச்சனைகளிலிருந்து தப்புவதற்கும், அதை வைத்து அரசியல் ஆதாயம் பெறுவதற்க்கும் எப்படியெல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதை கேமராகாரன் சைரசுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் வயதானவரின் பெண்டாட்டி தன் கணவனிடம் மாட்டாமல் இருப்பதற்காக குரங்கு மனிதன் தன்னை கெடுக்க வந்ததாய் கதை கட்டி விடுவதும், அரசியல்வாதிகளும், டிவிக்காரர்களும் ஒண்ணுமேயில்லாத பிரச்சனையை பெரிதாக்கிவிடுவதும், ராம்லீலா நாடகத்தை ஒரு கதாபாத்திரமாகவே உபயோகித்திருப்பதையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஹாட்ஸ் ஆப். ராகேஷ்.
பினோத் பர்தானின் ஒளிப்பதிவு அருமை.டெக்னிக்கலாய் ஒரு குறையும் சொல்ல முடியாது. படம் முடிந்தவுடன் அங்கேயிருக்கும் ஒரு கண்ணாடியில் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களும் தங்களுடய முகத்தை பார்த்து கொள்வது போல் ஒரு காட்சி வரும். அதில் ஒவ்வொருவரின் முகபாவனைகளை பாருங்கள் அவர்களின் மனகுரங்கின் சேஷ்டைகளை. சூப்பர். மெதுவாய் சென்றாலும் படம் பார்த்துவிட்டு வரும் போது கொஞ்சம் மனதுள் அசைபோடும்படுயான படம்.
டெல்லி-6
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இந்த படதோட Trailer பாத்தப்ப RDB அளவுக்கு இருக்காதோ அப்படின்னு ஒரு சந்தேகம் இருந்துச்சு இப்ப தீர்ந்து போச்சு..
ஐயா, சா.....மி, நெல்லைக்கே அல்வாவா? திருப்பதிக்கே லட்டா ? தமிழர்களுக்கே அழைப்பா? நல்லா இருங்க. நல்லா இருங்க.
/*குரங்கு மனிதன் ஒருவன் டெல்லியை சுற்றி வருவதாய்*/
இதில் ஏதோ அரசியல் உள் குத்து இருக்குதுன்னு நெனைக்கிறேன்.
/* பிட்டு மேல் காதல் வந்துவிட, பிட்டுவின் அப்பா ஓம்பூரி அவளுக்கு திருமணம் செய்ய */
எனக்கும் மலையாள பிட்டு மேல தீரா காதல் தான் இருந்தும் யாரும் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்ங்றாங்களே???
* * * * *
விமர்சனத்திற்கு நன்றி. இன்னைக்கே பார்த்து விடுகிறேன்.
அண்ணா.! கடை சாவியை "வடக்கு விநாயகம்" கைலே கொடுத்துட்டியலா?
ஏன் இந்த மாற்றம்?
எல்லாரும் வாங்க இன்னிக்கு அண்ணன் கடையிலே கும்மி இலவசம்.
இந்த கேபிள் பதிவுலே என்னை தனியா கும்மி அடிக்க விட்டு நீ போய்ட்டே.
சூடா போடும் விமர்சனம் பாரு...
மொக்கை படம் பார்க்கும் போதும்
பச்சை புள்ளை சிரிப்பை பாரு...
இவன் பேருக்குள்ளே கேபிள் உண்டு பாரடா..
இவன் ஜாதகத்தை மாத்தி வச்ச பாவி யாரடா..
மசகலி பாட்டு'லே சோனம்கபூர் வாயை கொப்பளிச்சு அபிஷேக் மேலே துப்பிட்டு ஒரு லுக் விடுவா பாருங்க....
ஹி ஹி சான்ஸே இல்லை..... :)
என்னை ஓவரா புகழாதீங்க
ஹி... ஹி...
“தன் 31 வயதில் பதினேழுவயதான கஸ்தூரியை ஆர்.கெ.சேகர் மணம்புரிந்துகொண்டார். திருப்பதியில் அவர்களின் திருமணம் நடந்தது, சென்னையில் வாழ்ந்தனர். முதல் குழந்தை காஞ்சனா. அதன் பின் அவரது ஒரே மகன் திலீப். பாலா, ரேகா ஆகியோர் மற்ற இரு குழந்தைகள்.”
http://shajiwriter.blogspot.com/2009/02/oh-dear-life-what-is-missing-why-my.html
A R Rahman: From R K Sekhar to Oscar
“R K Sekhar was the son of Harikatha exponent Rajagopal Bhagavathar of Kizhanoor near Chennai and his full name reads Rajagopal KulaSekhar. He started his career in Tamilnadu Electricity Board as an Electrician. But he did not waste much time there before joining Malayalam film music industry as an assistant to composer Dakshinamurthy. R K Sekhar who learnt the grammar of music by and large on his own, garnered the framework of Carnatic music from Dakshinamurthy. It is said that even composers like S.D. Burman, recognizing his talent in arranging music, invited him to assist him in Hindi film music.
“At his age of 31, R.K. Sekhar, married 17 years old Kasthuri. Their wedding was conducted in Tiruppathi and they lived in Chennai. Kanchana, the daughter was their first child. Then came Dileep their only son, followed by the girls Bala and Rekha.”
நீங்க விமர்சனம் எழுதி அடிச்சு தொவச்ச பல பேருல மஜினி ரசிகர்களும் இருக்காங்க.
சொல்லுங்க...
சொல்லுங்க...
லுங்க...
.....
பாம்பெய்லே நீங்க என்ன செஞ்சிகிட்டு இருந்தீங்க...?
சூடா போடும் விமர்சனம் பாரு...
மொக்கை படம் பார்க்கும் போதும்
பச்சை புள்ளை சிரிப்பை பாரு...
இவன் பேருக்குள்ளே கேபிள் உண்டு பாரடா..
இவன் ஜாதகத்தை மாத்தி வச்ச பாவி யாரடா..//
அட்ரா.. சக்கை.. அட்ரா.. சக்கை..!!
முடியலைங்க..!!! ஹா.. ஹா.. ஹா...! கலக்கல்.
கும்மிக்கு ஆளே சேர மாட்டேங்குது.
கும்மிக்கு ஆளே சேர மாட்டேங்குது.//
அடிச்சிட்டா போவுது.. யாரது இந்த கேபிளு..?
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல....உஙக 10 கேள்வில ஒரு கேள்வி....//
டக்ளஸண்ணே.. அந்த கேள்வியெல்லாம் கேட்டது எவனோ ஒரு நாதாரி வாசகனாம்.. அது நானில்லை.. நானெல்லாம் பதிவருங்கோ...கோ..கோ.. பதிவருக்கு எக்கோ..
பாம்பேலயா.. புரியலையே நைனா..?
ஹி... ஹி.../
உங்களையில்லையாம் நைனா..
மசகலி பாட்டு'லே சோனம்கபூர் வாயை கொப்பளிச்சு அபிஷேக் மேலே துப்பிட்டு ஒரு லுக் விடுவா பாருங்க....
ஹி ஹி சான்ஸே இல்லை..... :)//
படம் பாருங்க ராம்.. பாடல்கள் படத்தோடு பார்க்கும் போது மிக அருமை. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
பாம்பேலயா.. புரியலையே நைனா..?*/
அது பேச்சு வழக்கிற்கு வந்தது அண்ணா
சூடா போடும் விமர்சனம் பாரு...
மொக்கை படம் பார்க்கும் போதும்
பச்சை புள்ளை சிரிப்பை பாரு...
இவன் பேருக்குள்ளே கேபிள் உண்டு பாரடா..
இவன் ஜாதகத்தை மாத்தி வச்ச பாவி யாரடா..//
நைனா.. அந்த லாஸ்டுல லைனுல என்ன திட்டுறீங்களா.. வருத்தபடுறீங்களா..?
மிக்க் நன்றி சார்.. மிக நெகிழ்வாக இருக்கிறது சார் உங்கள் பாராட்டை பெறுவதற்கு.. நன்றி. சார்.
எங்களுக்காக நீங்க மொக்கை படம் எல்லாம் பார்க்குறீங்க. so, பாராட்டு தான்.
அவ்வளவு மோசமாக அபிஷேக் நடிக்கவில்லை வித்யா.. நிச்சயமாய் பார்க்கலாம். அப்ஷேக் எடுப்பார் கைபிள்ளை.. சரியான டைரக்டரிடம் அகப்பட்டால் மிளிரக்கூடியவர்.. கண்டிப்பாய் படம் பார்க்கவும்.
மெதுவாய்தான் எழுதலாமென பார்த்தேன். ரஹ்மானின் அஸ்கர் உடனடியாய் எழுத தோன்றியது.. நன்றி முரளி..
http://www.shortfilmindia.net/ShortAccident.html
http://www.shortfilmindia.net/short%20nitharsanam.html
இதுல போய் பாக்கலாம் நைனா..
* * * * *
விமர்சனத்திற்கு நன்றி. இன்னைக்கே பார்த்து விடுகிறேன்.//
நைனா பேசறா மாதிரியா பேசறே.. படம் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. நைனா.
நான் எப்ப வருவேன் என்று தெரியாது. ஆனா மொக்கை கமண்டு போட சரியான நேரத்திற்கு வருவேன்.
என்ன பண்ண போறீங்க..? நைனா..?
???:):):)-
இது இன்னொரு குறும்படம் நைனா..
ஒன்னும் பயப்பட வேண்டாம்.... உங்க பின்னூட்ட பெட்டியை பஞ்சராக்க போறேன்.
ஆமா திடீர்னு ஏன் கமண்டு மாடுரேசனை எடுத்து விட்டீங்க? அந்த சந்தோசம் தான்.
ஆமா திடீர்னு ஏன் கமண்டு மாடுரேசனை எடுத்து விட்டீங்க? அந்த சந்தோசம் தான்.//
கொஞ்சம் வெளிய வேளையிருந்ததால், மாடுரேஷனை எடுத்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல்.. கும்மி அடிக்கலாம்னுதான்.
http://www.shortfilmindia.net/short%20nitharsanam.html
இதுல போய் பாக்கலாம் நைனா..*/
உபயோகமான தகவலா இருக்கு அண்ணா. மிக நன்றி.
ஆனா கேபிள் அண்ணா நீங்க இன்னும் ஒரு சில பேருக்கு பதில் கொடுக்கலே. அதை கொடுத்திருங்க. நான் கொஞ்சம் நேரம் கழித்து வருகிறேன்.
அப்படி எனக்கு தெரிய வில்லை.
DOSTANA பாருங்கள் நல்லாவே பண்ணி இருப்பார்.
ஹ்ம்ம்ம்ம்ம்
விடமாட்டேன் நான்..... என்கிட்டே கிணறு வெட்டின ரசீது இருக்கு.
இதில் நனைஞ்சா ஜலதோஷம் பிடிக்குமா?
இப்ப தான் தெரியுது .... ஸ்லம்டாக் படத்துக்கு ஏன் இத்தனை ஆஸ்கர் என்று?
அதுக்காக திருப்பியும் வச்சிராதீங்க?
Slumdog millioner அஸ்கருக்கு தகுதியான படமே நைனா.
தம்பி பேரு இட்லியா?
ஆமாம் அண்ணா. நானும் பார்த்தேன். அவார்டு நிகழ்ச்சியை காலையில் 5.30 மணிக்கே எழுந்து உக்காந்து 10.15 மணி வரைக்கும் பார்த்தேன் அண்ணா.
ஆமாம் நைனா..
Bye see you.
We will meet tomorrow.
Untill then... TAATAA bye see you from
-NAIYAANDI NAINA-
(ஹை.. டிவி கம்பனிலே வேலை கெடைக்கும் போல இருக்கே)
உங்கள் விமர்சனம் நேர்மையாக இருந்தாலும், படத்திலே இயக்குனர் என்ன மையக் கருத்து சொல்றாருன்னு நீங்க குறிப்பிடலை....
அந்த குரங்கு மனிதன் பாத்திரம், ஒரு surreal கதாப்பாத்திரம் போல கையாளப்பட்டுள்ளது.
படத்தின் முடிவில் "நம் அனைவரின் உள்ளேயும் ஒரு குரங்கு மனிதன் இருக்கிறான்... அவனை எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் வாழ்வின் சூட்சுமம் உள்ளது" என்று அபிஷேக் பச்சன் சொல்கிறார்.
எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. ரகுமான் கலக்கிட்டார்..குறிப்பா அந்த ghenda phool (செவ்வந்தி பூ - மொட்டை மடியில் பெண்கள் பாடும்) பாடல்.
நன்றி,
சபரிநாதன்,
பெங்களூரு
//இயக்குனர் ராகேஷ் மிக இயல்பாய் கதையை ஆரம்பித்து, படத்தில் ஆரம்பம் முதலே குரங்கு மனிதன் கேரக்டரை, நம் மனக்குரங்கின் உருவமாக சித்தரித்திருப்பது அருமை.//
மிக்க நன்றி உஙகள் வருகைக்கும்,கருத்துக்கும்.
கேந்தா பூல் பாட்டு கிராமியமும் மேற்கும் புண்ர்ந்து புதுமையா இருக்கு.
இந்து, இஸ்லாம் இரண்டடிற்குமான ஆராதனை பாடல்களை ஒரே ஆள் எப்படி தான் இப்படி அருமையாக போடுறாரோ தெரிலைங்க....
இந்த மாநகர் மதுரையில இந்த படம் ரிலீஸ் ஆக ஏன்்தான் இப்படி லேட் ஆகுதோ!!!!!!!!!
கேந்தா பூல் பாட்டு கிராமியமும் மேற்கும் புண்ர்ந்து புதுமையா இருக்கு.
இந்து, இஸ்லாம் இரண்டடிற்குமான ஆராதனை பாடல்களை ஒரே ஆள் எப்படி தான் இப்படி அருமையாக போடுறாரோ தெரிலைங்க....//
ரிப்பீட்ட்டேய்ய்ய்ய்.. நன்றி பிரபு.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி மருத்துவர் அசோக் அவர்களே..
திரை இசை ...அதாவது இசைக்கருவிகளை கொண்ட இசையை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே தோன்றுகிறது. இஸ்லாமில் pop பாடல்களுக்கோ, இசைக்கருவிகளுக்கோ இடமில்லை. இதை பலர் கூறியுள்ளனர்
இயற்கை சப்தங்கள் ...அதாவது பரவை ஒலி, மனித குரல் இவற்றை கேட்கலாம்.
The seventeenth-century Muslim scholar Chelebi distinguishes three categories of music: that coming from birds, from the human throat and from instruments. He states that in Islam it is permissible to listen to the melodies produced by birds, and to those produced by the human throat, subject to certain conditions and rules. To listen to instruments that are blown or struck however, is never permissible
இசைக்கருவிள் வாசிப்பதை ஸல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பது பற்றி பல ஆதாரங்கள் இருக்கின்றன. ஒரு சில ஆதாரங்கள் மட்டும் எடுத்து போட்டு இருக்கிறோம்...
மேலும் :
http://amsuruvani.blogspot.com/2009/03/blog-post.html