Posts

Showing posts from March, 2009

தமிலிஷில் பதிவுகளை இணைக்கலாமா..?

Image
போன வாரம் நானும் டாக்டர் புருனோவும் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னார். அது என்னவென்றால் நாம் நம்முடய பதிவுகளை தமிழ்லிஷில் வெளியிடுகிறோம் இல்லையா..? அதை யார் வேண்டுமானாலும் கமர்ஷியலாகவோ, நான் – கமர்ஷியலாகவோ, பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறோம் என்பது தான். இதை அறிந்ததும் உடனடியாக நான் அவரிடம் சார் இது ஒரு புக் மார்க் சைட்தானே அது எப்படி நாம் எவர் வேண்டுமானாலும் எடுத்தாள உரிமை கொடுப்பதாய் அமையும் என்று கேட்ட போது அவர்களது வலைதளத்துக்கே போய் கீழே உள்ள creative common public domains என்கிற லிங்கை கிளிக் செய்து காட்டிய போது, அதில் நாம் இணைக்கும் நமது பதிவுகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் வியாபாரத்துக்காகவோ, தன் சுய பயன்பாட்டுக்காகவோ பயன்படுத்தி கொள்ளலாம் என்று உரிமை உள்ளதாய் அதில் போட்டிருந்தது. இதை பற்றி பதிவு எழுதலாம் என்று ஆரம்பித்த ரெண்டு நாட்களுக்குள், தமிழ்லிஷில் அந்த லிங்க் எடுக்கப்பட்டுவீட்டது. மருத்துவர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் அவர்கள் விளக்கம் அளித்து, அதை எடுத்துவிட்டதாய் சொல்கிறார்கள். இதே போல் தான் மற்ற புக்மார்க தளங்களும். அந்த லிங்கி...

என்னடி மீனாட்சி..

Image
Technorati Tags: shortstory , Meenakshi , சிறுகதை , என்னடி மீனாட்சி.. ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும். நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்.. அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு ...

பட்டாளம் - திரைவிமர்சனம்

Image
இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பு, நதியா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது பட்டாளம். சென்ற மாதமே வரவேண்டிய படம். ஒரு பள்ளியில் +2 படிக்கும் மாணவர்கள். அந்த பள்ளியின் ஹெட்மிஸ்டர்ஸ் நதியா.. வழக்கம் போல் பள்ளியில் இரண்டு குரூப்கள் ஜென்ம விரோதிகளை போல மோதிக் கொண்டிருக்கிறார்கள். நதியா அவர்களை அன்பு கலந்த கண்டிப்புடன் வழிக்கு கொண்டு வருகிறார்.  நதியா ஹெட்மிஸ்டர்சாக மட்டுமில்லாமல்.. டாக்டராகவும், மனநிலை பாதிக்கபட்டவர்களுக்கு தனியாய் ஒரு ஹோம் வைத்து நடத்தி அங்கே தங்கியும் இருக்கிறார். அங்கே அவருடன் தங்கி படிக்க வரும் ஒரு பெண்ணுக்கும் அங்கேயே தங்கி படிக்கும் ஒரு பையனுக்கு காதல், எதிர் குரூப்பில் உள்ள பையனுடன் பழகுவதை வைத்து அவள் மேல் சந்தேகம், பொறாமை, அண்ணன் தங்கை பாசம், கொலை முயற்சி, நண்பன் சாவு, என்று எபிசோட் எபிசோடாக இருக்கிறது. தொடர்ச்சியாய் இடைவேளை வரைக்கும் துண்டு துண்டான காட்சிகள் ஓட, தீடீரென ஒரு தற்கொலை முயற்சி என்று இடைவேளை விடுகிறார்கள். அப்பாடா கதை சொல்ல போறாங்க என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்,  மீண்டும் சொத்தென்று விழுந்து, ரன்னிங் ரேஸ், நண்பர்க்ள்...

பெ’ண்’களூர்

Image
கடந்த ரெண்டு நாட்களாய் பெங்களூரில் அவசர வேலை.. ஒரு பைனாசியரை பார்பதற்க்காக உடனடியாக வர சொல்லி அழைப்பு வர, நானும் என்னுடய புரொடியூசரும் ரயில் டிக்கெட் கிடைக்காமல்  காரிலேயே கிளம்பினோம். திங்கட்கிழமை ஆதலால் பெங்களூர் ஹைவேயே எங்களுக்காக அலம்பி விட்டது போலிருக்க, சுமார் 51/2 மணிநேரத்தில் பெங்களூருக்குள் போய் சேர்ந்துவிட்டோம்.. ஒரே வெயில் ************************************************************************************************] ரிசெஷன்காரணமாய் ஸ்டார் ஓட்டல் எல்லாம் புக்கிங் இல்லாமல் காய்கிறது. நாங்கள் பிரிகேட் ரோடில் உள்ள Iris என்கிற ஓட்டலில் தங்கினோம் ஆறாயிரம் ரூபாய் ரூம் மூவாயிரம் ரூபாய்க்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஃபபே இலவசம். அருமையான கவனிப்பு, அற்புதமாய் உள்ளமைக்கபட்ட ரூம்கள்.. குளு, குளு ஏசி, என்று அருமையாய் இருந்தது. வெளியே கொளுத்தியது. ஏசியை நினைக்கும் போது சுஜாதாவின் ஒரு நடுப்பகல் மரணம் கதையில் ஒரு வசனம் வரும் ”ஏசி ரூம் இருக்குமா?” “பெங்களூர் முழுக்கவே ஏசி தனியா ஏசி வேறயா“ என்பது போல் வசனம்  வரும். குளோபல் வார்மிங். எங் கள் ரூமிலிருந்து பிரிகேட் ரோட் முழுவதையும...

அருந்ததீ -திரைவிமர்சனம்

Image
      லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததீ” ராஜ குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெக்கம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான். இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்ம...

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்…

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம். என்கிற தாரக மந்திரத்தை சொல்லி மீண்டும் ஓட்டு கேட்கிறது திமுக. இவர்கள் என்னத்தை சொன்னார்கள், என்னத்தை செய்தார்கள் என்று கேட்பவர்கள் நிறைய பேர். சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, இலவச டிவி, கேஸ்ஸ்டவ், இலவச மனை, என்று ஆரம்பம் எல்லாமே நல்லாத்தான் நடந்திச்சு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா எல்லாவிதமான விநியோகங்களிலும் குளறுபடி, இந்த கலர் டிவி விஷயத்துல பல பிரச்சனை வந்து கடைசியா ரேஷன் கார்டு வச்சிருக்கிற எல்லாருக்கும் டிவினு சொல்லியிருக்காங்க.. ஆனா எத்தனை பேருக்கு இது வரைக்கும் கொடுத்திருக்காங்கன்னு சரியா சொல்ல முடியல.. ஏன்னா எனக்கு தெரிந்து பல பேருக்கு கலர்டிவி கொடுக்கவேயில்லை ரேஷன் கார்டு இருந்தும். கேட்டா அதுக்கு சரியான பதிலில்லை. அடுத்து கேஸ் ஸ்டவ் பல பேருக்கு கொடுக்கபடவேயில்லை. சரி இதெல்லாம் நம்ம சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள். இவர்களுடய ஆட்சி இன்னும் சில ஆண்டுகாலம் இருப்பதால் அதற்குள் கொடுக்கப்பட்டுவிடும் என்று நம்புவோமாக. ஆனால் கலைஞர் அரசு தனது சுயநலத்துக்காக போடப்பட்ட சட்டங்கள் எத்தனை.. அவர் ஒரு சட்டம் கொண்டு வந்தார் அதாவது தனி தியேட்டர்களில் அதிகபட்ச...

Sasirekhaa Parinayam- Telugu Film Review

Image
Technorati Tags: Sasirekhaa Parinayam , telugu film review வழக்கமாய் கிருஷ்ணவம்சி படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரண கதையை மேக்கிங்கில் அசத்துவார்.  அதிலும் ஜெனிலியா என்றவுடன் ஏகப்பட்ட ஆர்வத்துடன் பார்த்தேன். கண்டிப்புக்கும், முட்டாள்தனமான கோபத்துக்கும் சொந்தக்காரரான சசிரேகாவின் தந்தை அவருக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்ய, அமெரிக்க மாப்பிள்ளையின் தந்தை வரதட்சணை, அது இது என்று பிரச்சனை செய்ய திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார், வழியில் ஆனந்தை சந்திக்கிறார்.  அவர்கள் இருவருக்கும் நடக்கும் சம்பவஙக்ள தான் கதை.. இறுதியில் அவர்க்ளூக்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதை ஒரு சின்ன சஸ்பென்ஸையும் வைத்து முடித்து இருக்கிறார்கள். படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார். அவருடன் நாம் அதே உணர்வுகலை உணர்கிறோம்.  சசிரேகாவாக வாழ்ந்திருக்கிறார் ஜெனிலியா. ஆனந்தாக தருண், படம் முழுவதும் வியாபித்திருக்கும் ஜெனிலியாவுடன் ஈக்குவலாய் போட்டி போடுகிறார். விஜயவாடா பற்றி கேவலமாய் ஜெனிலியா பேசுமிடத்தில், அதன் பெருமைகளை...

என்னன்னு சொல்றது..?

Image
நான் வலைப்பூ 2006 அக்டோபர்ல.. மொத்தமா அந்த வருஷத்துல ஒரு 16 பதிவுதான் போட்டிருந்தேன். அதே போல 2007லேயும் மொத்தமே எட்டு பதிவுகள் தான்.  இப்படி சொங்கி போன லெவல்ல போயிட்டிருந்த என்னுடய வலைப்பயணம், திடீர்னு ஒரு நாள்  2008 ஆகஸ்ட் மாசம் மீண்டும் பதிவெழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஞாயமா சொல்லப் போனா  இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்னா (அதுவும் மொக்கையா)  அது மிகையாகாது. அந்த ஆகஸ்ட் மாசத்துக்கு அப்புறம் நோ லுக்கிங் பேக்.. சும்மா விறுவிறுன்னு ஜூரம் கணக்கா நம்ம பதிவுகளும் ஏறிச்சி, நம்ம பதிவ வந்து படிக்கிறவஙகளும் அதிகமாயிட்டேயிருந்தாங்க. நாளைக்கு நூறு ஹிட்ஸே வர்றாதுக்கு மூக்கால தண்ணி குடிக்கவேண்டியிருந்த காலத்தில, சும்மா 100, 200. 300ன்னு ஏறி மாசத்துக்கு 10, 000 ஹிட்ஸ், ஜஸ்ட் லைக் தட் ஒரு லட்சம் ஹிட்ஸ்செல்லாம் தாண்டியிருச்சு. என்னடா இவன் இப்படி தற்பெருமை பேசுறானேன்னு நினைக்கிறீங்களா..? தற்பெருமை இல்லைங்க.. சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் யாரு.. நீங்க தான். வாசகர்கள், பதிவர்களாகிய நீஙக்தான். முதல்ல பின்னூட்டம் வாங்கிறதே குதிரை கொம்பா இருந்த காலத்துலேர்ந்து என்னை ஊக்குவிச்சவர், ஜ...

உலக சினிமா - காஞ்சீவரம்

Image
Technorati Tags: உலக சினிமா , காஞ்சிவரம் எவ்வளவு நாட்களுக்குதான் நாம் வேற்று மொழி படங்களையே பார்த்து உலக் சினிமா என்று பெருமைபட்டு கொண்டிருப்பது. இதோ இப்போது நம் மொழியில், நம் தமிழ் மொழியில். ஊருக்கெல்லாம் பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளியின் வாழ்கை போராட்டத்தை உள்ளம் உருக, நெகிழ்வாக சொல்லியிருக்கிறார்கள். வேங்கடம் ஜெயிலிலிருந்து பரோலில் வருவதிலிருந்து ஆரம்பிக்கிறது படம். பெரும் மழையினூடே ஓடும் அந்த கால பஸ்ஸில் தன் வாழ்கையை நினைத்து பார்க்கிறான் வேங்கடம். தனக்கு பெண் குழந்தை பிறந்த நாளில்  அவளின் திருமணத்துக்கு பட்டு புடவை தருவதாய் சொன்னதை ஊரே பேராசை என்று சொல்லும்போதே அந்நாளைய நெசவாளர்களின் வாழ்கை நிலையை கண் முன்னே விஸ்தாரமாய் விரிகிறது. குறைந்த கூலி, அந்நாளின் வேலை செய்யும் முறை. முதலாளிகளீன் அடக்குமுறை. ஏழை நெசவாளிகளின் வாழ்க்கை. என்று ஒவ்வொரு காலகட்டத்தையும் விரிக்கிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும்.  தன் பெண்ணின் பட்டுபுடவைக்காக வைத்திருக்கும் பணம் தன் தங்கையின் வாழ்க்கை பிரச்சனைக்கு செலவாகி போக, வேறு வழியில்லாமல்  தறியிலிருந்து வாயினுள் பட்டு ந...

உலக சினிமா – Perfume(2006)

Image
பத்து வருடங்களுக்கு முன்னால் பாட்ரிக் சுசண்ட் ஆல் எழுதபட்ட நாவல். பிரபல இயக்குனர்கள் ஸ்டன்லி க்யூப்ரிக், மார்டின் சாசரஸ், ரிட்லி ஸ்காட் போன்றவர்கள் இயக்க ஆசைப்பட்ட நாவல். கடைசியாய் ரன் லோலா ரன் இயக்குனர் டாம் டிவியுக்கர் வெற்றி பெற்றார்.  ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலிக்கு மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்க படும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. ஊரே திரண்டு வந்திருந்து அவனை எப்படியெல்லாம் கொல்ல வேண்டுமென்ற வெறியுடன் கூச்சலிட்டு கொண்டிருக்க, மெதுவாய் கேமரா அவனுடய மூக்குக்குள் போக.. ப்ளாஷ் பேக். மீன் மார்கெட்டில் நாற்றத்தின் நடுவே பிறந்து  தன் முதல் சுவாசத்தை ஆரம்பிக்கிறான் ஜீன் பேப்டிஸ்ட் கெரொனொலி.  கெரொனொலியின் தாய் இல்லீகல் கர்பத்தால், குழந்தையை விட்டு போக முயற்சித்ததால், காவலர்களால் தூக்கிலடப்படுகிறாள். ஒரு அனாதை ஆசிரமத்தில் வளரும் அவனுக்கு ஒரு ஸ்பெஷல் திறமை நுகர்வது.. எவ்வளவு தூரத்திலுள்ள விஷயமாய் இருந்தாலும் துல்லியமாய் நுகரும் தனித்திறமையுடவனாக வளர்கிறான். ஒரு முறை முதல் முறையாய் மார்கெட்டுக்கு போகும் ஒரு பெண்ணின் வாசனையை பிடித்து போய் அவளை தொடர்கிறான். அவள...

சினிமா டுடே – ஒரு பார்வை.

Image
Technorati Tags: Cinema Today. exhibition , சினிமா கண்காட்சி சென்ற வருடம் சினிமா டுடே கண்காட்சிக்கு போனபோது எப்படி இருந்ததோ அதே போல் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல்  இந்த வருடமும் இருந்தது. வழக்கம் போல்  சினிமாவுக்கு சம்மந்தமில்லாத, சாப்ட்வேர்,  ஸ்டால்களும், பாப்கார்ன், காபி, போன்றவை உள்ளே, வெளியே என்று நிறைய இடத்தில் வைத்திருதார்கள்..                                                                   REDONE ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்க்கு உபயோகித்த SL.-2K டிஜிட்டல் கேமரா டொமோவுக்காக வைக்க பட்டிருந்தது. இந்த கண்காட்சியின் ஹீரோ அந்த கேமராதான். நிறைய கேமராமேன்கள் அதை சுற்றியிருந்தார்கள். ARRIயின் டிஜிட்டல் சினிமா கேமராவான D21  வந...

1977 - திரைவிமர்சனம்

Image
ஒரு கிராமமே கொண்டாடும் பெரியவர் ஒருவர், அந்த கிராம மக்களுக்கு தெரிந்து ஊரை விட்டு வெளியே போகாதவர், ஒரு நாள் திடீரென ஒரு தினசரியில் வந்த படங்களை பார்த்துவிட்டு ஊரை விட்டு போக நினைக்கிறார். ஆனால் இறந்து போகிறார். அவர் எங்கே போக நினைத்தார்?, எதனால..? என்பதை தேடி அலைய ஆரம்பிக்கிறான் மகன். போக, போக தெரிகிறது தன் தந்தை 108 பேரை கொன்ற ஒரு கொலை குற்றாவாளியென்றும், தூக்கு தண்டைனையிலிருந்து தப்பித்துவிட்டவர் என்றும். தன் தந்தையின் கடந்த காலத்தை கண்டுபிடித்து, அவர் மீது உள்ள பழியை தீர்பதே கதை. இதை படிக்கும் போது அட பரவாயில்லையே ஒரு மசாலா படத்துக்கு தேவையான எல்லா விஷயங்களும் உள்ள  கதைதானே என்று நினைப்பவர்களுக்கு.. கதையாய்  சொல்லும் போது நல்லாத்தானிருக்கு.. படம்.. ம்ம்ம்..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பாவம் சரத்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், ரொம்ப நாளாக, சொந்த படமே எடுக்க கூடாது என்று நினைத்து கொண்டிருந்த போது, இயக்குனர் தினேஷ் குமார் சொன்ன கதை என்னை படமெடுக்க வைத்துவிட்டது என்று. என்ன பண்றது..? விதி அப்படிதான் சொந்த செலவில சூனியம் வச்சிக்க சொல்லும்.. இந்த கதைக்கு எதுக்க...

யாவரும் நலம் – திரைவிமர்சனம்

Image
ரொம்ப நாளாச்சு தமிழ்ல ஹாரர் படம் பார்த்து..   அதிலும் நம்ம பி.சி, மாதவன், பிக் பிக்சர்ஸ் என்று பெரிய தலைகள் எல்லாம் ஒன்ணு சேர்ந்திருக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுது.. அந்த எதிர்பார்பை ஓரளவுக்கு பூர்த்தி பண்ணியிருக்காங்னுதான் சொல்லணும். புதுசா தன் மனைவி, அண்ணன், அண்ணி, அவர்களின் இரண்டு குழந்தைகள், தங்கை, அம்மா என்று எட்டு பேர் கொண்ட கூட்டு குடும்பம் பதிமூன்றாம் மாடியில் உள்ள 13பி என்கிற ப்ளாட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். ஆனால் மாதவன் மனதில் மட்டும் ஒரு சின்ன கிலேசம் ஏற்படுகிறது.. அதிலும் அந்த லிப்ட் மேட்டரிலிருந்து, அதன் பிறகு செல்போனில் அவரை எடுக்கும் போட்டோ.. என்று ஆரம்பித்து,, அவர்கள் வீட்டில் மட்டுமே வரும் ‘யாவரும் நலம்’ என்கிற சீரியலில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே அவருடைய வாழ்கையிலும் நடக்கிறது. முதலில் நம்ப மறுக்கும் அவர், பின்னால் நடக்கும் சம்பவங்கள் மூலம் விஷயம் உறுதியாக. தன் போலீஸ் நண்பன் மூலம் சால்வ் செய்ய முயல்கிறார். நிஜமாகவே பேய் இருக்கிறதா..? எதனால் இவருடய வீட்டை மட்டும் தாக்குகிறது,? பேய்களிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறாரா..? எ...