Posts

Showing posts from April, 2009

சந்தோஷம் பொங்குதே..

இன்றைய தினம் மிக சந்தோஷமாய் பிறந்திருக்கிறது.  நேற்று படுக்க போகும் போதிருந்த முதுகுவலி காலையில் லேசாக குறைந்ததினாலா?  காலையில் எல்லாம் நல்ல படியாய் நடந்ததினாலா?  ரொம்ப நாளாய் வர வேண்டிய பணம் திரும்ப வந்ததினாலா? இல்லை ஆஸ்கர் ரவிசந்திரன் நம்மளை புக் செய்யிற மாதிரி கனவு கண்டதாலா?  என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். காலையில் நம்ம பக்கத்தை திறந்து பார்த்ததும் நம்ம பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்திருந்த்து. ஒரு வாரமாய் செஞ்சுரிக்கு முன் தடுமாறும் டெண்டுல்கர் போல 140க்கு அப்புறம் தடுமாறிக் கொண்டிருந்தது தடாலென்று 154 அகி விட்டது. அதுவும் என் சந்தோஷத்திற்கு காரணம். என்னை தொடர்பவர்களுக்கெல்லாம் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏதோ நானும் எழுதுகிறேன் பேர்விழி என்று கடந்த எட்டு மாத காலமாய் தொடந்து எழுதிவருகிறேன்..( அப்படி என்ன எழுதி கிழிச்சிட்டேன்னு… என்பது போன்ற குரல்கள் கேட்கிறது) என்னையும் ஒரு மனுஷனாய் மதித்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு என் நன்றி மீண்டும் உரித்தாகுக.. சந்தோஷம்னா நம்ம சந்தோஷம் மட்டும்தானா.? நம் நண்பர்களின் சந்தோஷம் கூட நம் ...

உலக சினிமா – Lust & Caution (2007)

Image
crouching tigers, Brokeback Mountain போன்ற புகழ் பெற்ற படங்களின் இயக்குனர் Ang Lee இயக்கிய படம். ஒரு அருமையான திரில்லரும், காமமும், காதலும் கலந்த கதை. 1942ல் ஒரு காபி ஷாபிலிருந்து சங்கேதமாய் ஒரு போன் செய்துவிட்டு,  உட்காரும் ஒரு பெண்  தன் வாழ்கையை பின்னோக்கி பார்க்கிறாள். அமைதியான அப்பாவியான இளம் பெண் Wong chai chai ஆனவள். எப்படி மிஸஸ். மேக் ஆகி ஜப்பானிய அரசியம் முக்கியஸ்தரான Mr.Yee ஐ மயக்கி, பழகி, அவனை கொல்ல முயற்சிக்கிறாள் நம்ம சிவாஜி, சரோஜாதேவி நடித்த புதிய பறவை படத்தில் சிவாஜியை லவ் செய்வது போல் பழகி உண்மையை கண்டுபிடிக்க சரோஜாதேவி போவாங்க இல்ல அதுமாதிரி. என்ன அதுல கொலைகாரனை பிடிக்க போவாங்க. இதுல கொல்ல போறாங்க.. Mr.Yee ஏன் கொல்ல முயற்சிக்கிறாங்கன்னா.. அவர் இரண்டாம் உலக போரில் ஜாப்பான் ஆக்கிரமிச்சிருக்கிற சைனாவில் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர். அவர் எடுத்த பல முடிவுகளால் பல பேர் பல உறவுகளை, இழந்து இருப்பதால் அவரை பழிவாங்க அவருக்கு எதிரா ஒரு தீவிரவாத குழு அமையுது. அவங்க இரண்டு மூன்று முறை அவரை மயக்க பெண்களை பயன் ப்டுத்தியும் அவங்க மாட்டிகிட்டாங்க. அதன...

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்

Image
காதல், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு, போன்ற படங்களின் லைவான திரைக்கதை அமைப்பு இயல்பாகவே அந்த படங்களுக்கு  அமைந்தது. அந்த இயல்பு இல்லாமல் வலுக்கட்டாயமாய் திணித்தால், நம்மால் உட்காரமுடியாது.  அதுமட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கை பல சமயங்களில் சினிமாவை போல டிவிஸ்ட் அண்ட் டர்ன்களூடன் இருப்பதில்லை. அதே போல்தான் குங்குமபூவும் கொஞ்சும்புறாவும். தன் தாய் தந்தையரால் அநாதரவாய் விடப்பட்ட துளசி தன் பாட்டியுடன் முட்டத்திற்கு வந்து சேருகிறாள். பக்கத்து வீட்டு இருக்கும் ஹீரோ ராம்கியுடன் பத்தாவது ஒன்றாய் படிக்க, அப்படியே ஒன்னாய் பள்ளியூடத்துக்கு போய் வந்து லவ் அடிக்கிறார்கள். காமெடி என்ற பெயரில் துளசியிடம் வயசுக்கு வர்றதுன்னா என்ன என்பது போன்ற சீன்கள்  எல்லாம் இருக்கிறது. உசிருக்கு உசிராய் காதலிக்கும் இருவரை பற்றி ஒரு வழியாய் இண்டர்வெல் நேரத்தில் ஹீரோவின் அம்மாவுக்கு தெரியவர, துளசியின் தலைமுடியை நறுக்கி அவமான படுத்தி, ஊரை விட்டே வெளியேற்றுகிறாள். ஸ்கூல் டூர் போய் திரும்பி வரும் ஹீரோ, அவளை தேடி ஓடி வர, ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆக, ஹீரோயினுக்கு வேறு இடத்தில்  த...

போர் நிறுத்தம் அறிவிப்பு

25/04/09 பதிவர் சந்திப்பு அனைவரும் கலந்து கொள்ளுங்கள் ஈழத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கபட்டுவிட்டது. தமிழன தலைவர் கலைஞர், தமிழனத்தின் ஒரே காவலர், கடந்த 50 வருடமாய் ஈழத்தமிழர்களை கட்டி காப்பாற்றிவரும் ஒரே தமிழர் தலைவர் எடுத்த கடைசி ஆயுதமான வேலை நிறுத்ததை பார்த்து ஸ்தம்பித்து போனது இலங்கை அரசு. ஆளாளுக்கு தன்னை தூக்கி போட்டு இலங்கை பிரச்சனையில் பந்தாடுவதை தவிர்க்கவும், தான் தான் இன்னமும் தமிழன் காவலர் தான் என்பதை நிருபிக்க,  அரசு வேலை நிறுத்தம் செய்யவில்லை..? திமுக கட்சி வேலைநிறுத்தத்தை அறிவித்து, மாபெரும் வெற்றி அடைந்த போராட்டம் என்று மார் தட்டி கொள்கிறது சன்னும், கலைஞரும். இம் மாதிரி எதையாவது அறிவித்து மாட்டி கொள்வார் என்றுதான்  மற்ற கட்சிகளும் எதிர்பார்த்தது. இந்த வேலை நிறுத்தத்தை கொண்டாடும் வகையில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க, உணவகள் எல்லாம் மூடி கிடக்க, ஏதோ ஒரே ஒரு கடை திறந்திருக்க, அதையும் மூடும் படி போலீஸார் சொல்லி மூட வைத்து விட்டார்கள். நன்றாக சரக்கடித்துவிட்டு சன் டிவியில் திருடா திருடி, சரவணாவையும்,  கலைஞர டிவியில் முரட்டுகாளையும், வெள்ளித்திரையும்,  பா...

எ.வ.த.இ.மா.படம்? – Mumbai Meri Jaan

Image
11-7-2006ல் மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பு ஓவ்வோரு மும்பைகாரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த ஓரு அதிர்சியே. கொஞ்சம் நினைத்து பாருங்கள் அந்த நேரத்தில் அதே ரயிலில்களில் நீங்கள் இருந்திருந்தால் அதிலிருந்து தப்பியிருந்தாலும், உங்கள் மனநிலை என்னவாக இருந்திருக்கும். எப்படி அதிலிருந்து மீள்வீர்கள். அதை பற்றி படம் தான் நிஷிகாந்த காமத என்கிற இயக்குனர் இயக்கிய ஹிந்தி படம். "மும்பை மேரி ஜான்". இன்னும் சில நாட்களில் ரிட்டைய்ர் ஆக போகும் பாடில்(பரேஷ் ராவல்), அவரின் வாழ்க்கை தத்துவம் "எப்பவுமே ஓரமாய் நின்று பார்க்க பழகிக்கொள், அந்த படத்தில் நடிக்க ஆசைபடாதே" என்றும், தன் வாழ்கையில் எந்த ஓரு நேரத்திலும், மிகப் பெரிய திருடனையோ, தீவிரவாதியையோ, பிடித்ததில்லை. என்பதில் எந்த வருத்தமும் இல்லாதவர். பரேஷ் ராவலுக்கு ஓரு லைப் டைம் கேரக்டர்.மனுஷன் சும்மா பின்னியிருக்கிறார். அவருடய அசிஸ்டெண்டாக வரும் கதம் (விஜய் மெளரியா) தனது புது பெண்டாட்டியுடன் ஹனிமூன் போகயிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால், அவருடய லீவ் கேன்சலாகி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த நாளன்று பாரில் லஞ...

ஹாலிவுட் சினிமா - Fast And Furious –4

Image
ஹைவேஸில் கார் டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்தபடி அவர் கிளட்ச் போடும்போது, நீங்களும் கிளட்ச் போட்டு, அவர் பிரேக் போடும் போது நீஙக்ளும் பிரேக் போடுபவரா..? அப்படின்னா நீங்க காலை மடிச்சு வச்சிகிட்டுதான் படம் பாக்கணும். நான் முதல் பாகத்துக்கு அப்புறம் இப்பத்தான் படம் பாக்குறேன். அதனால எதுவும் படம் பாக்கிறதுக்கு பிரச்சனையில்லை. நடுவுல வந்த ரெண்டும் படு சொதப்பல்னு சொன்னாங்க.. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடிதத முக்கிய நடிகர்கள் விண்டென்ஸல், அந்த ஹிரோயின், டென்சலின் நண்பராக வருபவர் ஆகியோர் மீண்டும் நடித்திருக்கிறார்கள். ஒரு மெல்லீசான கதையை வைத்து உட்டாலக்கடி அடித்திருக்கிறார்கள். ஓப்பனிங் காட்சி சேஸிங் படமெடுதிருக்கும் விதமும், ஆக்‌ஷன் அமைப்பும், எடிட்டிங்கும் நம்மை மயிர்கூச்செரிய வைத்துவிடும். அப்படி ஒரு வெறி பிடித்த சேஸிங். நீங்கள் தியேட்டருக்கு செல்லும் போது படம் ஆரம்பிப்பதற்கு முன் செல்லுங்கள், முதல் காட்சியே இந்த சேஸிங் தான், டென்ஸலும் அவனின் காதலியும் விட்ட திருட்டு தொழிலை மீண்டும் செய்துவிட்டு ஆளாளூக்கு பிரிந்துவிட, ஒரு நாள் டென்ஸலுக்கு அவனுடய காதலி கொல்லப்பட்ட விஷய்ம...

I.P.L – ஒரு பார்வை.

Image
இந்த ஐ.பி.எல் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிது, எல்லாருமே பிஸியாட்டாங்க.. இந்த போட்டிய நடத்திறதுனால இந்திய கிரிக்கெட் போர்டுக்கு ஆயிரம் கோடி கிட்ட வருமானம் வருதுங்கிறாஙக், இங்க இந்தியாவில நடத்த முடியாட்டாலும் சவுத் ஆப்ரிக்காவிலாவது நடத்துறாங்க வருமானம் போயிருமென்னு. இந்த ஐ.பி.எல். எதுக்கு ஆரம்பிச்சிதுன்னா, கபில் தேவ் தலைமையில் ஜீ டிவிக்காரஙக..  இந்தியன் கிரிகெட் லீக்னு ஒன்ணை ஆரம்பிச்சாங்க. ஏன் ஆரம்பிச்சாங்கன்னு அவங்க சொன்ன காரணம் இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதற்க்காகன்னு சொன்னாங்க. ஆனா நிஜ காரணம் அது இல்ல.. இவங்களுக்கு கிரிக்கெட் போர்டுக்கும் இவங்க ஜீ ஸ்போர்ட்ஸ் சேனல் ஆரம்பிச்சதும் கிரிக்கெட் போட்டி ரைட்ஸ் வாங்க முயற்சி செய்ய, அது ஏதோ பிரச்சனை வந்ததும், ஆஸ்திரேலியாவில சேனல் 9 ஆரம்பிச்ச மாதிரி ஒரு கிரிகெட் லீக் டீமை ஆரம்பிச்சாங்க.. இவங்க ஏன் இப்படி கிரிகெட், கிரிகெட்ன்னு அலையுறாங்கன்னா.. அதன் மூலமா வர்ற காசு. கொஞ்ச நஞ்சமில்ல.. இவங்க ஆரம்பிச்ச ஐ.சி.எல்.ல விளையாடுற வீரர்களுக்கு, லட்சக்கணக்குல பணம் கொடுக்க, நிறைய வீரர்கள் ஐ.சி.எல் பக்கம் சாய,  முதல் ஐ.சி.எல் ப்ரபரப்பை பார்...

தமிழ்சினிமாவின் 90 நாட்கள்

Image
எவ்வளவுதான் ரிசஷனில் இருந்தாலும் பெரிதாய் பாதிக்கபடாத சில தொழில்களில் சினிமாவும் ஒன்று. மக்கள் பொழுது போக்கிக்கிற்காக, செலவு செய்வதை பெரிதாய் கருதுவதில்லை.  அவர்கள் கொடுக்கும் காசுக்கு தகுதியானது கிடைக்கும் வரை. அப்படி கடந்த 90 நாட்களில்  அதாவது ஜனவரி 1 முதல் மார்ச் வரையில் வெளியான திரைப்ப்டஙக்ளை பற்றிய ஒரு கண்ணோட்டம். ஜனவரி 2009 இம் மாதத்தில் ஏவி.எம். குமரனின் அ.ஆ.இ.ஈ,  வில்லு, காதல்னா சும்மா இல்லை, படிக்காதவன், என்னை தெரியுமா, சற்று முன் கிடைத்த தகவல், வெண்ணிலா கபடிக் குழு ஆகியவை வெளியானது. இதில் அ…ஆ….இ…ஈ மிக்ப் பெரிய தோல்வியை சந்தித்த படம். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு மிகவும் எதிர்பார்க்க பட்ட படம். காதல்னா சும்மா இல்லை திரைப்படமும், தெலுங்கில் கம்யம் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஏனோ தெரியவில்லை தெலுங்கில் பெரிய ஹிட்டான இந்தபடம். தமிழில் வேலைக்காகவில்லை. முக்கியமாய் பாதி படத்தை தெலுங்கிலிருந்து டப் செய்துவிட்டு, ரவிகிருஷணா வரும் காட்சிகளை மட்டும் தமிழில் எடுத்து வெளியிட்டது ஒரு மைனஸ்.. வில்லை பற்றி நாம் சொல்தற்கு ஏதுமில்லை உலகமறிந்ததே...

உலக சினிமா – Death Proof

Image
அர்லின், ஷானா, ஜங்கிள் ஜூலியா மூவரும் ஜங்கிள் ஜூலியாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக டெக்ஸாஸை நோக்கி செல்கிறார்கள். இவர்களை பாலோ செய்யும் ஸ்டண்ட்மேன் மைக் தன்னுடய டெத்புரூப் காரில பயணிக்கிறான். அவன் ஒருவிதமான சைக்கோ.. இந்த மூன்று பெண்களை பற்றிய விஷயங்களை முன்பே அறிந்திருக்கிறான். மைக் பாலோ செய்வதை முன்பே கவனித்திருந்த ஜங்கிள் ஜூலியானா. அவள் ஒரு ரேடியோ ஆர்.ஜே. பெண்கள் மூவரும் ஒரு பாரில் அமர்ந்திருக்க, அங்கே மைக் வர, அவனின் கட்டுமஸ்தான உடலையும், அவனுடய ஆண்மையையின் காரணமாய் அவன் தொடர்ந்து வந்த விஷயம் தெரிந்தாலும், அவனுடன் பழகுகிறாள். அப்போது ஜூலியானாவின் தோழி பாம் பார்ட்டி முடிந்ததும், அவளை தான் ட்ராப் செய்வதாய் கூறி தன்னுடய டெத்புருப் காரில் அழைத்து சென்று அவளை காரை படு வேகமாய் ஓட்டி சென்று, திடீரென ப்ரேக் போட்டே கொன்று விடுகிறான். ஜூலியானாவையும் அவள் தோழிகளையும் தனியே துரத்தி, அவனுடய காரை நேருக்கு நேராய் மோதி அவர்கள் மூவரையும் கொல்கிறான். அந்த விபத்தில் சிறிய காயமடையும் அவன் மீண்டும் பதினான்கு மாதம் கழித்து வேறு ஒரு செட் ஆப் பெண்களை பாலோ செய்கிறான். லி, ரோஸ், மற்றும் மேத்திஸ் இவர்கள...

கார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்

Image
பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \படத்தின் பூஜையின் போது வெளியிட்ட டிசைன் கண்டிப்பாய் வித்யாசமாய் ஒரு படமாய் இருக்கும் என்று கட்டியம் கூறியது. அதன் பிறகு படத்தின் போஸ்டர் டிசைன் மேலும் வா,, வா… என்று அழைக்க, தியேட்டரில் நான். கார்த்திக்கும் அனிதாவும் எதிர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள், சிறு வயதிலிருந்தே சேர்ந்தே எலியும் பூனையுமாய் இருப்பவர்கள். கார்த்திகின் அப்பா கோட்டா சீனிவாசராவ் எதிர்வீட்டு அனிதாவின் அம்மாவை தங்கையாய் பாவிக்க, இருவர் குடும்பமும் உறவு முறை சொல்லி அழைக்கும் அளவுக்கு ஒற்றுமையான குடும்பம். கார்த்திக் அனிதா இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி சண்டைகளில், ஒருவரை ஒருவர் வாரி விட்டு கொண்டிருக்க, ஒரு நிலையில் அனிதாவால் கார்த்திக் காலேஜில் ச்ஸ்பெண்ட் செய்யப்படுகிறான். இந்த இடைப்பட்ட நிலையில் அனிதாவுக்கு கார்த்திக்கின் மேல் காதல் வர, கார்த்திக் அவளை காதலித்தானா.. அனிதாவுக்கு நிச்சயத்த திருமணம் நடந்ததா.? கார்த்திக்கின் அப்பா ஏன் திடீரென்று இற்ந்து போனார் என்பதை வெள்ளிதிரையில் காண்க. கார்த்திக்காக வரும் ரத்தன் நல்ல எதிர்காலம் இருக்கிற...

கொத்து பரோட்டா 13/04/09

பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள்.. சமீபத்தில் போலந்தில் ஒருவர் ஒரு மானை காப்பாற்றியதற்காக கைது செய்யப்பட்டார். ஒரு நாள் காரில் வேலைக்கு செல்கையில் ரோடின் ஓரத்தில் ஒரு மான் படுத்திருப்பதை கண்டு கிட்டே சென்று பார்த்தார், மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தது. சரி இறந்து போய்விட்டது என்று எண்ணி  போகிற வழியில் போலீஸில் சொல்லிவிட்டு போகலாம் என்று நினைத்தவர், மானை எடுத்து பின் சீட்டில் போட்டு விட்டு கிளம்பினார்.  அவசர வேலையாய் ஆபீஸுக்குள் சென்றவர், மானை மறந்தே போனார். மயக்கமுற்றிருந்த மான் தெளிந்து காரினுள் அலைய, வெளியேயிருந்து பார்த்தவர்கள், மிருக வதை தடுப்பு ஆட்களிடம் சொல்ல, காரின் உரிமையாளரை கைது செய்திருக்கிரார்கள். உடனடியாய் ஆஸ்பத்திரியில் சேர்காமல், அடைத்து வைத்ததுக்காக அவருக்கு ஏதாவது குறைந்த படசம் சிறைவாச தண்டனையும், அபராதமும் விதித்திருக்கிறார்கள். நல்லதுக்கு காலமில்ல போலருக்கு.. %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% வர வர பல கடைகளில் ஐம்பது பைசா சில்லறை தருவதேயில்லை. அதற்கு பதிலாய் நாம் கேட்காமலேயே ஒரு சாக்லெட்டை கொடுத்து விடுகிறரர...

ஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்

Image
மறைந்த எழுந்தாளர் தல சுஜாதா எழுதிய விகடனில் தொடர்கதையாய் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் நாவல். அதுவும் நாவலின் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி கேட்டு வந்த கடிதங்கள் எவ்வளவோ என்றனர். அப்படி பட்ட நாவலை காந்திகிருஷ்ணா இயக்குகிறார் என்றதும் சுஜாதாவின் ரசிகர்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு எகிறி போனதென்னவோ நிஜம் தான். அன்று உன் அருகில் என்கிற நாவலை மிக அழகாய் படமெடுத்தவர்தான் இந்த காந்திகிருஷ்ணா.. அதனால் இன்னும், இன்னும் எதிர்பார்ப்பு.. கூடியது. மொத்தமாய் எதிர்பார்ப்பு பானையை ந்டு ரோட்டில் உடைத்துவிட்டார். என்றுதான் சொல்ல வேண்டும்.   வேலை தேடி அலையும் ரகுபதி, பாணதீர்த்ததில் அவனும் அப்பாவும் மட்டுமே இருக்க, உயர் அதிகாரி கோபிநாத்தின் மக்ள் மதுமிதாவை பார்த்த மாத்திரத்தில் ரகுபதி காதலிக்க ஆரம்பிக்க, நிச்சயம் வரை போன காதல், தீடீரென ராட் என்கிற அமெரிக்க ராதாகிருஷ்ணன் புயல் போல வந்து மதுமிதாவை கவர்ந்து போக, சுயமாய் எந்த முடிவும் எடுக்க தெரியாத, விளையாட்டு தனமான மதுமிதா, ராதாகிருஷ்ணன் என்கிறா புயலில் தூக்கி போகப்படுகிறாள். காதலில் தோற்ற ரகுபதி, என்ன முடிவு எடுக்கிறான். மீண்டும் மதுவை சந்தித்தா...

மனைவி அகராதி

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் மனைவி : நமக்கு வேணும் அர்த்தம் : எனக்கு வேணும் மனைவி ; உங்க முடிவு அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம் மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க.. அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க மனைவி : தாராளமா.. செய்யுங்க அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன் மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க.. அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை. மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு அர்த்தம் : வேற வீடு பாக்கணும் மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..? அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன் மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன். மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா? அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு மனைவி : சரி அர்த்தம்   :  நோ.. மனைவி : நோ அர்த்தம் : சரி மனைவி : உங்களுக்க...

பதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.?

Image
சமீபத்தில் கடந்த ஞாயிறன்று சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை பின்புறம் சென்னை பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. புதிய பதிவர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். இதுவரை பதிவர் சந்திப்புக்கு வராதவர்கள் கூட வந்திருந்தார்கள். வழக்கமாய் பதிவர் சந்திப்பு முடிந்தவுடன் உடனடியா போய் வந்த சூட்டோடு பதிவுகள் இடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு பதிவுதான் வந்திருந்தது. ஒன்று வழக்கம் போல டோண்டுவின் பதிவும், இன்னொரு புதிய பதிவர் என்று நினைக்கிறேன். வெறும் படங்களை மற்றும் போட்டிருந்தார். மற்றவர்கள் யாரும் பதிவு போட்டதாய் தெரியவில்லை. பழைய பதிவர்களூம் பதிவர் சந்திப்பை பற்றி எழுதவில்லை. புதிய பதிவர்களும் எழுதவில்லை. இதற்கு காரணம் இந்த முறை எந்த பிரச்சனையை பற்றியும் பேசாமல் பொதுவாய் புதிய பதிவர்களை வரவேற்று சந்திப்பு நடத்தியதாலா..? அல்லாது நிறைய பேர் உட்கார்ந்து பீச்சில் பேசியது ஒழுங்காய் காதில் விழாததினாலா..? புதிதாய் வந்த ஒரு பதிவர் என்னிடம் சொன்ன விஷயம்.. பதிவர் சந்திப்பு வர்றதுக்கு முன்னாடி எப்படி யாரையும் தெரியாதோ.. அதே நிலைமைதான் வந்த பின்னாடியும் என்றார். இனி...

ரமேஷும்.. ஸ்கூட்டி பெண்ணும்..

Image
ஓசியில் பினாயில் கொடுத்தாலும், சந்தோஷமாய் குடிப்பவன் ரமேஷ். உலகமகா கஞ்சன். அதைப்பற்றி சொல்லி அவனை கிண்டலடித்தால் வேறு யாரையோ கிண்டல் செய்வதாய் பாவித்து, அவனும் சிரிப்பான். யாருக்காவது ஏதாவது உதவி தேவையென்றாலும் கூட என்ன ஏதென்று கேட்க மாட்டான்.. ஏன் என்று கேட்டால், “அத கேட்கபோய்..அவங்க நம்ம கிட்டயே எதாவது கேட்டுட்டா..?” என்பான். தலையிலடித்து கொண்டு நகர்வேன். அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தெரியவில்லை.. முடிந்த வரை எனது அலுவலகத்தில் எல்லோரும் அவரை அவாய்ட் செய்வார்கள், அல்லது கிண்டல் செய்வார்கள். அன்று நான் அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கே ரொம்ப லேட்டாகிவிட்டது, கிளம்புகையில் பின்னாடி என் பேரை யாரோ கூப்பிடுவது போல இருக்க.. பார்த்தால் ரமேஷ். “சார்.. என்னை கொஞ்சம் போற வழியில டிராப் செய்றீங்களா..?” என்று கேட்டபடி என் பதிலை எதிர்பாராமல் என் பைக்கின் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான். எனக்கு கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தது.. என்ன விதமான ஜந்து இவன்.. கொஞ்சம் கூட மற்றவர்களை பற்றி யோசிக்காமல்.. நடந்து கொள்கிறானே.. என்று மனதுக்குள் திட்டினாலும், நான் ஓன்றும் அவனுக்காக ஊரை சுற்ற் போவதில்லை. போகிற...

மக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்

இண்டர்வெல் முடிந்து பரபரப்பாய் போய் கொண்டிருந்தது அயன் திரைப்படம், திடீரென்று படம் கட் ஆகியது. மெலொடி தியேட்டரில் டிஜிட்டல் புரொஜெக்‌ஷன் என்பதால் படம் திரும்ப வருவதற்கு சற்று நேரம் ஆனது. (ஏன் என்பதற்கான காரண்ம் பின்னால்).  நொந்து போன ரசிகர்கள்களின்  விசிலும், சத்தமுமாய் தியேட்டரே அல்லோல கல்லோலபட,  திடீரென படம் முதலில் இருந்து ஆரம்பித்தது, திரும்பவும் கட் ஆகி, பாதியிலிருந்து ஆரம்பிக்கபட்டு, கட், மீண்டும் ஸ்டார்ட். ஆனால் இப்போது ஆரம்பித்ததோ நாங்கள் பார்த்து கொண்டிருந்த காட்சியிலிருந்து அரை மணி நேரம் கழித்து வரும் காட்சியிலிருந்து. ஏற்கனவே முதல் காட்சியில் படம் பார்த்திருந்த ரசிகர்கள் காட்சிகளில் ஜம்ப் ஆகிவிட்டது எதிர்த்து புரொஜெக்டரில் துணியை வைத்து மூடி, கலாட்டா செய்ய ஆரம்பித்தார்கள். தியேட்டர்காரர்களோ, அப்படியே ஓட்டினால் சரியாகிவிடுவார்கள் என்று நினைத்து மேலும் படத்தை ஓட்ட நினைக்க, உயரமான ஒருவர் சீட்டின் மீது ஏறி தன்னுடய டவலால் முழு புரொஜெக்‌ஷன் திரையையும் மறைக்க, தியேட்டர் மேனேஜர் ஆட்களுடன் வந்து, மிரட்ட, மக்களும் ஒன்று சேர்ந்து கத்த, வேறுவழியில்லாமல் மறுபடியும் கட் ஆக...

அயன் – திரைவிமர்சனம்

Image
250வது பதிவு பரபரவென ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போன்ற படம் பார்க்க வேண்டுமா.? யஹிஹே ரைட் சாய்ஸ் பேபி. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சும்மா தூள் பரக்க அடித்து ஆடியிருக்கிறார்கள். கள்ளக்கடத்தல் செய்யும் தாஸின் சகாவான சூர்யா, புத்திசாலி, படிப்பாளி, ஸ்மார்டானவன். ஒவ்வொரு முறையும் அவன் கடத்தி வரும் பொருட்களூக்கு எப்பாடு பட்டாவது எந்த்வித பாதகமில்லாமல் கொண்டு வந்து சேர்ப்பவன். அம்மா மீது பாசக்காரன். அப்பா போன்ற தாஸின் அன்புக்கு கட்டுப்பட்டவ்ன். தாஸின் புது எதிரியாய் சவுகார்பேட்டை வில்லன், நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் போட்டு கொடுக்க, அதிலிருந்து ஒவ்வொரு முறையும் தாஸும், சூர்யாவும், தப்பிக்க், பரபர கேட் அண்ட் மவுஸ் கேம். கேமின் உச்சகட்டமாய் திருடனை வைத்தே திருடனை பிடிக்கும் டெக்னிக் அருமை. காங்கோவில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், தமன்னாவுடன் காதல் செய்வதகட்டும், படம் முழுக்க சூர்யா துள்ளித்திறிகிறார். ம்ஹூஹூம்.. ஸ்டாபரி ஐஸ்கிரிமாய், சாக்லெட்டாய்,  கோடை மழையாய், குளிர்கால வெயிலாய்,  தமன்னா, அவருடய கேரக்டர் பெரிதாக இல்லாவிட்டாலும், படம் ம...