Posts

Showing posts from July, 2009

குற்றாலம் -2

Image
முன்னும் பின்னும் அருவியாகியிருந்தவரை கொண்டு போய் ஒரு ஆஸ்பிட்டலில் சேர்க அழைத்து சென்றோம் அது ஒரு மினி கிளினிக் கம் ஹாஸ்பிடல். நாங்கள் போன பொது அழகான ஒர் இளம் பெண் ஒருத்தி அந்த ஹாஸ்பிடல் வளாகத்திலேயே நடை பயின்று கொண்டிருக்க, நம்ம ஆள் அதற்குள்ளாக, அங்கேயிருந்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு நீர் வார்க்க, வாசலில் மது அருந்தி வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று போர்டில் எழுதியிருந்தது. நடை பயின்ற் பெண் இப்போது அருகே வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாஙக்ள் விஷயத்தை சொல்ல, நேரே உள்ளே போய் டாக்டரிடம் போய் சொல்லி விட்டு, மீண்டும் நடை பயில ஆரம்பித்தாள். இதற்கிடையில் அங்கிருந்த நர்ஸ் நண்பரை உள்ளே அழைக்க, நடுவில் வ்ந்து என்ன நடக்கிறது என்று பார்ட்த்துவிட்டு சில உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, மீண்டும் நடை பழக, உள்ளே வர, நடை பழக உள்ளே வர, என்று நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளே வருவதும், நடைபழகுவதுமாய் இருந்தது கவனத்தை கவர்ந்தது. நண்பர் உடனே சரியாக வேண்டுமானால், ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அல்லது டிரிப்ஸ் ஏற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்ல,  அவரை அட்மிட் செய்துவிட்டு , உடன் வந்த இன்னொரு நண்ப...

நிதர்சன கதைகள்-10- ஆண்மனம்

Image
என்னுடய ஆபீஸுக்கு அருகில் ஆண், பெண், இருபாலர் படிக்கும் கல்லூரி ஒன்று இருக்கிறது.. கல்லூரிக்கு  இரண்டு கட்டிடங்களுக்கு முன் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அந்த கல்லூரி வருவதற்கு முன் அங்கிருந்த ஆஞ்சநேயர் கோயிலில் கும்பலே இருக்காது. ஆனால் இப்போது அப்படியில்லை,  ஜகத்ஜோதியாய் கும்பல். கோயிலுக்கு காலேஜ் போகும் முன் பெண்கள் தினமும் வர, அதனால் அவர்களை தொடரும் பையன்களும் வர, இதற்கு நடுவில் காதலர்களுக்கு உதவும் ஆஞ்சநேயர் என்று புரளி கிளம்பிவிட, ஆஞ்சநேயருக்கு கொண்ட்டாட்டம் தான். தினமும், காலையிலும், மாலையிலும் கொத்து, கொத்தாக ஐஸ்கேண்டி பெண்கள் வருவதை, அவர்கள் என் ஆபீஸை கிராஸ் செய்வதை ஆபீஸ் ஜன்னலிலிருந்து பார்க்க, அக்னி நட்சத்திரத்திலும், இமாலய குளிர்ச்சியாயிருக்கும். அப்படி என்னதான் பேசுவார்கள், அவ்வளவு சிரிக்க, சிரிக்க, பின் தொடரும் பைன்களுக்கு லேசாய் சிக்னல் காட்டும் பெண், அதை பெருமையாய் தன் தோழிகளிடம் கிசுகிசுக்கும் பெண், போகிற போக்கில துரிதமாய் கட்டைவிரலில் புயல் வேக SMS அனுப்பும் பெண், எதை பற்றியும் கவலை படாமல் புத்தகத்தை தன் மார்போடு அணைத்து கொண்டு, நடக்கும் பெண், கும்பல...

மலையன் - திரைவிமர்சனம்

Image
கரண் ஹீரோவாய் வெற்றி பெற்ற படஙக்ள் எல்லாம் வழக்கமான மசாலா படஙக்ளிலிருந்து விலகி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தததால் என்பதால் இந்த படமும் அதே போல் இருக்கும் என்று நினைத்து போயிருந்தால் கொஞ்சம் மட்டு என்று தான் சொல்லவேண்டும் கந்தகபூமியான சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் முதலாளி சரத்பாபுவுக்கு எல்லாமாக் இருக்கும் கரண், அவருக்கு ஒன்றென்றால் துடித்து போய் விடுவார். அவர்களின் தொழில் எதிரிகளாக எம்.எஸ்.கே சன்ஸின் முதலாளிகளான சக்திகுமாரும், அவருட அப்பா ராஜன்.பி.தேவும். இவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டி, பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிற்சாலை தொழிலாளிகளின் வாழ்க்கை, சரத்பாபுவின் பாக்டரியில் நடக்கும் விபத்தில் தன் காதலி உட்பட தன்னுடன் வேலை செய்த தோழர்களையும் இழந்து தவிக்கும் கரணுக்கு, நடந்தது விபத்தல்ல என்ற உண்மையை கண்டுபிடிக்கிறான். அதனால் ஏற்படும் திருப்பம் தான் க்ளைமாக்ஸ்.. படம் முழுக்க கரண் தன்னுடய ஆளுமையை விரவியிருக்கிறார். தன் முதலாளிக்கு ஒன்று என்றால் துடிக்கிற துடிப்பும், துள்ளுகிற ஆவேசமும், அலையும் கரண், கதாநாயகி ஷம்மு ஒரு அதட்டல் விட்டதும் பவர் இறங்கிய டூர...

மோதி விளையாடு - திரைவிமர்சனம்

Image
இந்தியாவின் மிகப்பெரிய பிஸினெஸ் டைக்கூனின் மகன் அவரது மகனில்லை, அவனுடன் இருக்கும் இன்னொரு இளைஞன் தான் அவரது மகன். எங்கே தன் எதிரிகளால் தன் மகனுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்பதற்காக, பினாமியாய் ஒரு மகனை குழந்தை முதல் வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் வில்லன்கள் அவரது மகனை கொல்ல முற்படும் போது ஒரிஜினல் மகன் இறக்கிறான். ஒரே நாளில் பினாமி மகனின் வாழ்க்கை நடுத்தெருவில். அவனை கொல்ல ஒரு பக்கம் எதிரிகள் அனுப்ப்பிய ஆள், இன்னொரு பக்கம் அவன் கொல்லப்படும் நாளை எதிர்பார்க்கும் பிஸினெஸ்மேன். அவன் எவ்வாறு  அந்த மாமலை பிஸினெஸ்மேனுடன் மோதி மீண்டான்? என்பதை சுறுசுறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் சரண். வினய் அந்த கோடீஸ்வர மகனின் கேரக்டருக்கு ஆப்டாய் இருக்கிறார். என்ன  நடிப்பு எழவுதான்  வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.  சொந்த குரலாய் இருந்தால் முயற்சிக்கு பாராட்டலாம். இனிமேல் தொடந்து பேச வேண்டாம். இந்த ஒரு படமே போதும்.   காஜல் அகர்வாலிடம் துளளல் இருக்கிறது. இளைமையாய் இருக்கிறார். ஆடுகிறார், பாடுகிறார். கொஞ்சம் ஜோதிகா போல எக்ஸ்ட்ரா எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார். வேறு ஒன்றும்...

Aa Dinagalu –(2007)

Image
  இளையராஜாவின் இசையில், வேணுவின் ஒளிப்பதிவில், கிரிஷ் கர்னாட்டின் திரைக்கதையில்,பெங்களூரில் நடந்த இரண்டு தாதாக்களுக்கிடையே ஆன சண்டையை மிக இயல்பாக, ஊடே ஒரு காதல் கதையையும் கொடுத்து , ஒரு இடத்தில் கூட ரத்தம் சிந்தாமல் மிரட்டியிருக்கிறார்கள்.  இந்த ஆதினகளு டீன் என்றால் மிகையாகாது. அக்னி ஸ்ரீதரின் நண்பன் சேத்தன் ஒரு பெண்ணை காதலிக்க, அதை தடுக்க அவனின் அப்பா பெங்களூரின் பெரிய டானான கொத்தவால் ராமசந்திராவின் உதவியியை நாடியிருக்க,  கொத்தவால் சேத்தனையும், அவனின் காதலியையும் மிரட்ட,  வேறு வழியில்லாமல் அவனுக்கு எதிரியான இன்னொரு டான் ஆன ஜெயராஜிடம் அடைக்கலமாகிறார்கள். ஒரு பக்கம் கொத்தவாலின் சாம்ராஜ்யத்தை ஒழிக்க துடிக்கும் ஜெயராஜ்,  கொத்தவாலுக்கு உதவியாய் இருப்பது மாதிரியான நடவடிக்கைகளுடன்,  அவனை பழிவாங்க கொல்ல துடிக்கும் அதுல் குல்கர்னியும், அவனைது நண்பர்களும். கொத்தவால் உயிருடன் இருந்தால் தன் காதல் ஜெயிக்காது என்பதால், ஜெயராஜ், அதுலுடன் சேர்ந்து கொஞ்சம், கொஞ்சம் சேத்தனும் கிரிமினலாகுவது என்று மிக இயல்பான திரைக்கதையும், அளவான வசனங்களுடன் .  ஒரு காட்சியில்...

ரசிகர்கள் ”விரும்பும்” தமிழ் சினிமாவின் பத்து.

1. படம் வெளியாகுறதுக்கு முந்தி விகடன்ல, வித்யாசமான ஒரு தமிழ் சினிமாவ கொடுக்க முயற்சி செஞ்சிருக்கோம்னு அந்த டைரக்டர் சொல்வாரே அது பிடிக்கும் 2. படம் ரிலீஸாகி பத்து நாள்ல உலக தொலைகாட்சியில் முதல் முறையா சூப்பர் ஹிட் படம்னு வந்ததும், வேற பேட்டியில புரொடியூசர் சரியா சப்போர்ட் பண்ணலன்னு டைரக்டரும், டைரக்டர் சரியா சப்போர்ட் பண்ணலைன்னு புரொடியூசரும் பேட்டி கொடுப்பாங்களே அது பிடிக்கும் 3. மல்லாக்க படுத்து யோசிச்சாவது விஷாலுக்கோ, விஜய்க்கோ, ஒரு கேனத்தனமான ஓப்பனிங் சீனை பிடிச்சு அதை வச்சி பில்டப் செஞ்சி கால்ஷீட் வாங்கிட்டு,  படத்துல பாக்கயில காரி துப்புற மாதிரி வர்ற ஓப்பனிங் சீன் இருக்கு பாருங்க அது பிடிக்கும் 4. படத்தில விதவையோ, அல்லது கல்யாணமான பொண்ணை ஹீரோ லவ் பண்ணுறாருன்னா அவளோட புருஷன் ஃப்ர்ஸ்ட் நைட்டுக்கு, முந்தி ஆக்ஸிடெண்டுலேயோ, பாம்பு கடிச்சோ, இல்லாட்டி தும்மியாச்சும், இப்படி ஏதாச்சும் ஒரு காரணம் சொல்லி சாகடிச்சு, கதாநாயகி கற்பை, ஹீரோவுக்காக காப்பாத்திறீங்க பாருங்க அது ரொம்ப பிடிக்கும் 5. என்னதான் சொதப்பல் படம் எடுத்தாலும், இந்த சன் டிவி அவங்க படம் தான் ஊர் உலகத்தில நல்ல ஓடுற...

அச்சமுண்டு..அச்சமுண்டு – திரைவிமர்ச்னம்

Image
  அருண் வைத்யநாதன் என்கிற அமெரிக்க வாழ் தமிழர் இயக்கத்தில் முழுவதும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்டு வ்ந்திருக்கும் படம். ப்ரசன்னாவும், சிநேகாவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். புதிதாய் குடியேறிய வீட்டில் பெயிண்ட் அடிக்க வரும் வெள்ளைக்காரனால்  அவர்களின் பெண் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தான் படம் சொல்கிறது. ப்ரசன்னாவும், சிநேகாவும் அந்நியோன்யன் என்றால் அவ்வள்வு அந்நியோன்யம் அவர்களூக்குள் ஏற்படும், காதலாகட்டும், ஸ்மூச்சிங்காகட்டும்,  கோபமாகட்டும், ஊடலாகட்டும்.. வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். வில்லனாக வரும் ஜான் சீ யின் நடிப்பு கச்சிதம். படத்திற்கு முக்கிய பலமே ஒளிப்பதிவாளரும், இசையமைபபாள்ர் கார்த்திக் ராவும் தான். பிண்ணனி இசையில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார்.  செளம்யாவின் குரலில் வரும் நித்ரா பாடல் நெகிழ்வு. இயக்குனர் மிக குறைந்த ஆர்டிஸ்டுகளை வைத்து கோடு போட்டது போன்ற் ஒரு திரைக்கதையுடன் படத்தை எடுத்துள்ளார். ஆனால் படு ஸ்லோ..  என்னதான் காட்சிகளில் நடிகர்கள் நன்றாக நடித்தாலும், எவ்வளவு நேரம் தான் ...

வெடிகுண்டு முருகேசன் - திரைவிமர்சனம்

Image
வெடிகுண்டு முருகேசன் என்றதும் ஏதோ ஒரு பெரிய ஆக்‌ஷன் படமாய் இருக்கவேண்டும், அல்லாது படு காமெடியான படமாய் இருக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் நம் மனதில் வருகிறது அல்லவா.. அதிலும் படத்தின் விளம்பரஙக்ள், செய்திகள் எல்லாவற்றிலும், பசுபதியின் காமெடி, வடிவேலுவின் காமெடியைவிட நன்றாக வந்திருப்பதால் டப்பிங் பேச மறுத்ததாக வந்த செய்திகள் வேறு நம்மை உசுப்பேத்தியிருக்க, முழுக்க, காமெடி படமாவும் இல்லாம, சீரியஸ் படமாவும் இல்லாம ஒரே கொழப்படிச்சிருக்காங்க..பாவம் பசுபதி கருப்பா, பிக்பாக்கெட் கணக்கா இருக்கிறதினாலேயே.. அவரை பார்த்தா இந்த மாதிரி இத்து போனவன், நொந்து போனவன், என்கிற மாதிரி கேரக்டர்களையே தேடி போய் கொடுக்கிறார்கள். அவரும் பாவம் ரொம்ப கொழம்பி போய் தான் நடிச்சிருக்கிறாரு..  ஜோதிர்மயி வேற பாவம்.. அவங்களும் காமெடி பண்ணுறேன்னு நம்மை போட்டு பின்னி எடுக்குறாங்க. வடிவேலு சார்.. சீக்கிரம் நீங்களும் கொஞ்சமாவது புதுசா யோசிக்க வேற ட்ராக் ஆளை பிடிங்க. ஜனங்க இப்ப லேசா சிரிக்கிறதே உங்கள ஸ்கிரின்ல பார்த்தவுடனே சிரிச்சு பழகினதுனாலதான். அம்புட்டுதான் சொல்லிபுட்டேன். இயக்குனர் ஒரு முழுநீள காமெடி படம் ...

வைகை - திரைவிமர்சனம்

Image
புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சிறிய முதலீட்டு படங்களை, தேடி சென்று படம் பார்ப்பேன். 90% சொதப்பியிருப்பார்க்ள். இயக்குனரோ, அல்லது நடித்த நடிகர், நடிகைகளோ.. மேலும் சொதப்பி ஏண்டா பார்த்தோம்னு ஆக்கிருவாங்க..  இதே எதிர்பார்போடு போன இந்த படம் ஒரு அழகான ஆச்சர்யம். வழக்கமான் கிராமத்து பெரிய மனுஷன் பையன், எதிர்வீட்டு தபால்காரர் பொண்ணு, அப்பா சாப்டான ஆனா ஆளையே போட்டு தள்ளுற வில்லன். தன் காதல் விஷயம் தெரிஞ்சு தன் காதலியை போட்டு தள்ளிருவாரோன்னு பயந்து அவளை கூட்டிட்டி ஓடி போய், இரண்டு பேரும் விஷம் குடிச்சிட்டு, ஒருத்தர் சாவை இன்னொருத்தர் பார்க்க கூடாதுன்னு, எதிர், எதிர் ரயிலில் போய் விடுகிறார்கள். ஹீரோவின் ஆட்கள் அவரை ஆபத்தான கட்டத்தில் காப்பாற்றிவிட.. ஹிரோயினுக்கு என்ன ஆச்சு? அதற்கப்புறமான கதையை இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார்கள். பாலா +2 பைல் ஆகி ஊரை சுற்றி திரியும் வளரும் இளைஞன். விசாகா ,பாலா இருவருக்குமான காதல் காட்சிகள் புதுசாய் இல்லாவிட்டாலும், போரடிக்கவில்லை. என்ன ரஜினிகாந்த படத்தில் அவரை இளமையாய் காட்ட அவரை விட “இளமையான” ஆட்களை அவர் நண்பர்களாய் வருவதை போல், கொஞ்சம் பெர...

அழுகை

Image
அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான். செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும். இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும். இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு. பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்...

Evaraina Eppudaina.. Telugu Film Review

Image
  ஏவிஎம் ரொம்ப நாளுக்குபிறகு தெலுங்கில் டைரக்டாய் தயாரித்திருக்கும் படம். இதற்கு முன்னால் தெலுங்கு டப்பிங்கில் அயன் வெளியானது. சரியாக போகவில்லை. வெங்கட் ஒரு துறுதுறுப்பான இளைஞன், அண்ணன் அண்ணியுடன் இருக்கும் அவன், பார்த்த முதல் பார்வையிலேயே மதுமிதாவை காதலிக்க ஆரம்பிக்கிறான். இவன் செய்த ஒரு விஷயதால் இருவரது பாட்டியும் விபத்துக்குள்ளாகி ஒரே ஆஸ்பத்திரியில், ஒரே அறையில் இருக்க அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மதுவுடன் நெருங்குகிறான். வெங்கடின் தவறால் மதுவின் அக்காவின் திருமணம் நின்று போகிறது. அதை மீண்டும் நடத்தி வைத்து எவ்வாறு மதுவின் காதலை பெறுகிறான் என்பதை கமர்சியலாய் சொல்லியிருக்கிறார்கள். வெங்கட்டாக “ஹாப்பிடேஸ்” வருண்.. ஒரு ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் இந்த படத்தில் செய்திருக்கிறார். பாடுகிறார், ஆடுகிறார், சண்டையிடுகிறார். லவ் செய்கிறார்…. காமெடி செய்கிறார். ஒகே அடுத்த தலைமுறை ஹீரோ தயாராகி வருகிறார் என்றே சொல்ல வேண்டும் மதுமிதவாக விமலா ராமன்.. வருணோடு பார்பதற்கு அக்கா மாதிரியிருக்கிறார். ப்ரொபைலில் அழகாய் இருக்கிறார்.  காமெடிக்கு வேணுமாதவ், ஆலி.. ஓகே. வேணுக...

இந்திரவிழா – திரைவிமர்ச்னம்

Image
  கமல், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை நம்பி படமெடுக்கலாம் ஒப்பனிங் நிச்சயம் அதே போல ஒரு ஹீரோயினையும் நம்பி படமெடுக்க முடியுமா  என்று கேட்டால் அதுக்கு பதில் நமிதா என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் கமலா தியேட்டரில் இருந்த 300 பேர் நமிதா ஒருவருக்காகத்தான் வந்திருந்தார்கள். ஒரே விசில் தான். டெமிமூர், மைக்கேல் டக்ளஸ் நடித்து மிகப்பெரிய ஹிட்டான “Disclosure” என்கிற படத்தை ஹிந்தியில் 2004ல் “Aitraaz” என்று எடுத்தார்கள். அதைதான் இப்போது தமிழ் படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய மான லைனே.. ஒரு பெண், தன்னை கற்பழிக்க முயன்றதாக வழக்கு தொடரும் ஹீரோ. என்பதுதான். டெமிமூருக்கு ஈக்குவலாய் நமிதாவை தவிர வேறு யாரையும் நினைக்கு வ்ரமாட்டேன் என்கிறது.  சரியான செலக்‌ஷன்.  படம் முழுக்க நினைந்தபடியே வந்து நம்மை சூடாக்குகிறார். படத்தில் அவரது ஒவ்வொரு பாகமும் நடித்து கொட்டுகிறது. ம்ஹும்… இவரை தவிர இன்னொரு சரியான செலக்‌ஷன் ஸ்ரீகாந்த. . அவர் என்ன செய்வார் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாசர் கோடீஸ்வர நமிதா புருஷனாய் வருகிறார். சில இடங்களில் ஓவராய் இருந்தால...

வாமனன் - திரைவிமர்சனம்

Image
சுப்ரமணியபுரம் ஜெய் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் வாமனன். படம் வெளிவருவதற்கு முன்னாலேயே தான் நடிக்கும் படங்களில் இந்த படம் ஒன்றுதான் நல்ல படம் என்று அறிக்கை விட்டு மாட்டிக் கொண்ட படம். ஒரு திரில்லர் வகை படம். பிகினி உடையில் லட்சுமிராயை ரிமோட் கண்ட்ரோல் ஹெலி கேமரா மூலம் படமெடுத்து கொண்டிருக்கும் ஒரு இயக்குனர். திடீரென்று ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆகி பக்கத்தில் உள்ள ஒரு கார்டனில் மரத்தில் மாட்டி கொண்டுவிட, அங்கே வருங்கால முதல்மைச்சராய் வர இருக்கும் டெல்லி டகணேஷை, சம்பத்ராஜ் ஒரே ஒரு ஆளுடன் கொலை செய்கிறார் அது அந்த டேப்பில் ரிக்கார்ட் ஆக, அந்த டேப்பை தேடி போலீஸும், அமைச்சரும் அலைய, அந்த டேப் லட்சுமிராயிடம் இருப்பதாய் போலீஸும், அமைச்சரின் ரவுடிகளும் அலைய, ஒரு கட்டத்தில் அவளை கொலை செய்கிறார்கள். சினிமாவில் நடித்து பெரிய ஆளாகவேண்டும் என்று சென்னைக்கு வரும் ஜெய் இந்த களேபரத்தில் மாட்டிக் கொள்ள, டேப் இவனிடம் மாட்டிக் கொள்ள,  லஷ்மிராயின் கொலையில் பழி இவன் மீது வந்து ஓட, போலீஸ் துரத்த, ஒரு முறை திரும்பி பார்த்து எதிர்த்து, எவ்வாறு சூழ்ச்சியிலிருந்து வெல்கிறான் என்பதை, பரபரப்ப...

விகடனாரே.. இது ஞாயமா..?

Image
விகடன் டாக்கீஸின் தயாரிப்பில்   போன வாரம் வெளியான ”வால்மீகி” திரைப்படத்தை பார்த்தேன்.  படம் பார்த்து விட்டு நான் அதிர்ந்ததை விட கடைசியில் அவர்க்ள் போட்ட டைட்டில் கார்ட் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படி என்ன அதிர்ச்சி என்றால்.. படம் முடிந்தவுடன் ஸ்கோலிங் எண்ட் கார்டில் “A Film By Vikatan Talkies” என்று போட்டார்கள். என்னால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.  a Film by   என்று போட்டு கொள்வதற்கு அப்படத்தின் இயக்குனருக்கே உரிமை உண்டு.  தயாரிப்பாளர்களுக்கு  Vikatan Talkies Production, Vikatan Talkies Presentatiion.  என்பது போல் வேண்டுமானால் போட்டு கொள்ளலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் எக்காரணத்தை கொண்டும்  a Film By  என்கிற இந்த கார்டை இயக்குனர் மட்டுமே போட முடியும்.  அந்த படம் நல்ல படமோ.. பெயிலியர் படமோ.. அதற்கு அப்பாற்பட்டது இந்த டைட்டில் கார்டு விஷயம். ஒரு இயக்குனர் தன் வாழ்நாளின் முக்கியமான காலத்தை, தன்னுடய உழைப்பை கொண்டு உருவாக்கிய கதையை.. தயாரிப்பாளரான இவர்கள் கேட்டு பிடித்த பட்சத்தில் அதை தயாரிக்க முடிவு ச...

Oy – Telugu Film Review

Image
நாமெல்லாம் அஞ்சலி பாப்பாவாக பார்த்த ஷாம்லி இப்போது குமரி ஆகி நடிக்த முதல் படம். சித்தார்த், ஷாம்லி, யுவன் என்று ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். எதிர்பார்ப்பை கெடுக்கவில்லை என்றுதான் சொல்ல் வேண்டும். அடுத்த செகண்ட் வாழ்க்கையின் என்ன வேண்டுமானும் நடக்கலாம் அதனால் அந்த நிமிட சந்தோஷத்தை மட்டுமே கொண்டாடும், பணக்கார உதய்க்கும். எதையும் தன் வாழ்நாள் முழுவதும் கூடவே வரவேண்டும் என்று நினைக்கும் மிஸ். பெர்பெக்ட் ஹீரோயின். அவளுக்கு எல்லாமே அவள் மட்டும்தான். தான் தன் உலகம், தன் நம்பிக்கை, என்று உழலும் சந்தியாவுக்கும் இடையே நடக்கும் கதைதான். ஒய்… 2009 புத்தாண்டின் போது ஆரம்பிக்கிறது படம். சந்தியாவை எத்தேசையாய் பப்பில் பார்க்க, அவளிடம் பேச போக, அவள் அவனை பற்றி டீடெய்ல் எல்லாம் கேட்டுவிட்டு, உனக்கும் எனக்கும் ஒத்துவராது.. ஏன்னா.. என்னோட நம்பர் 5, உனக்கு 7 அதுனால குட்பைன்னு சொல்லிட்டு போக, அவளை துறத்தி, துறத்து என்று துறத்துகிறான் உதய். அவள் வீட்டிலேயே தான் ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பதாய் சொல்லி பேயிங் கெஸ்ட்டாய் வந்து சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் காதலை சொல்கிறான்....

நோ - பார்க்கிங்

வண்டிய பார்க் பண்ணிட்டு பேங்குக்கு போயிட்டு வெளிய வந்து பார்த்தா உங்க வண்டிய காணோமா..? பதட்டபடாதீங்க.. உடனடியா அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு போய் பாருங்க அங்க உங்க வண்டியிருக்கும், அவ்வளவு சீக்கிரமா உங்க வண்டிய அவங்க கண்டு பிடிச்சிடுறாங்களான்னு நீங்க கேட்டா. நீங்க ரொம்பவே நல்லவருங்க..?.. ஆமா.. வண்டிய எடுத்துட்டு போனவனுக்குதானே.. அதை பத்தி தெரியும். ஆம் பூட்டின வண்டியை, ஆள் வைத்து தூக்கி போவது, நம் காவல் துறைதான். என்ன கொடுமை சார் இது. நகரின் முக்கியமான பகுதிகளில், அதுவும், பிரபலமான தெருக்களில் வணிக வளாகம், அல்லது அரசு அலுவலகமோ, இன்சூரன்ஸ் கம்பெனிகளோ.. யாருடய இடத்திலும் நம்முடய வண்டியை பார்க் செய்ய வசதியிருப்பதில்லை. அதிலும் முக்கியமாய் யாராவது மவுண்ட் ரோடு சிட்டி பேங்க் பார்க்கிங் நிலைமையை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். காவல் துறை பார்க்கிங் ஏரியா என்று அறிவித்திருக்கிற இடங்களை விட நோ பார்க்கிங் அறிவித்திருக்கும் இடம் தான் அதிகம். அவசரத்தில் அதுவும் ஆபீஸ் போகும் நேரத்தில் பேங்க் வேலையாய் வருபவர்கள், பாங்கின் வாசலில் வண்டியை விட்டுவிட்டு போய் வந்து பார்த்தால்.. வண்டியை காணாமல்...

ஞாபகங்கள் - திரைவிமர்சனம்

Image
படம் ஆரம்பத்தில் தன் நண்பர் கதிரவனின் வாழ்க்கையில் நடந்த உண்மைகதை என்கிறார் பா.விஜய். ஆனால் படம் ரிதுபர்னோ கோஷின், ஐஸ்வர்யா, அஜய் தேவ்கன் நடித்து வெளிவந்த ரெயின் கோட் மறுபதிப்பு போல் இருக்கிறது. ஆங்காங்கே சின்ன சின்ன மாறுதல்களுடன். அந்த படமே ஓஹென்றியின் ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம். தேசிய விருது பெற்ற கவிஞர் ஹரித்துவாரில் தன்  பழைய காதலியை ஒரு மழை நாளில் பார்க்க போகிறார். வீட்டிற்கு வந்தவரை வாய் நிறைய வரவேற்று பேசியபடி தான் தன் வாழ்கையை பற்றியே அவனின் காதலி பேசிக் கொண்டிருக்க, இவனின் இன்றைய கவிஞர், தேசியவிருது பற்றி கொஞ்சம் கூட அறியாதவளாய் இருக்க,  ஒரு நேரத்தில் அவள் காய்கறி வாங்க போயிருக்கும் போது, வரும் ஒருவர் அவளின் கணவன் பெரிய டைமண்ட் வியாபாரியாய் இருந்ததாகவும், வியாபரத்தில் லாஸ் ஆனதால் தூக்கு மாட்டி இறந்து போய்விட்டதால், மிகப்பெரிய கடனில் அவள் இருப்பதாகவும், இந்த வீடும் அவளும்தான் பாக்கி அவளை எடுத்து கொண்டு, சின்ன வீடாய் வைத்து கொள்கிறேன் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாள் என்று சொல்லிவிட்டு சொல்ல, தன் காதலியின் அவலவாழ்வு தெரிந்து தன் தேசியவிருதைய...

Newyork – Hindi Film Review.

Image
சமீபத்தில் இம்மாதிரியான ஒரு காத்திரமான கதையம்சம் உள்ள படத்தை ஹிந்தியில் பார்ககவில்லை.  சிறந்த ஸ்கிரிப்ட், நல்ல இயல்பான நடிப்பு, உயர்ந்த புரொடக்‌ஷன் தரம் எல்லாம் சேர்ந்து ஒரு அருமையான படத்தை தந்திருக்கிறது யாஷ் ராஜ். அமெரிக்க 9/11 நிகழ்வுக்கு பிறகு அமெரிக்க உளவு பிரிவான F.B.I, சந்தேகம் என்கிற  பெயரில் பல ஆயிரம் பேர்களை கைது செய்து டிடென்ஷ்ன் செண்டரில் வைத்து சித்திரவதை செய்ததையும், அதனால் மன உளைச்சலில் உழன்று திரியும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்க்ளின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஓமர் ஸ்காலர்ஷிபில் நியூயார்க் யூனிவர்சிட்டியில் வந்த் சேருகிறான். அங்கே மாயாவையும், சாம் என்கிற சமீரை அமெரிக்க இந்தியனான அவனை சந்திக்கிறான். பார்த்தவுடன் மாயாவை ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பிக்கிறான். அவளிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறான். மாயா காதலிப்பது சாமை என்று தெரிய வருகிற் அன்று அமெரிக்க 9/11 நிகழ்வுகள் நடக்கிற்து. ஓமர் பிலடெல்பியா சென்றுவிடுகிறான். சில வருடங்கள் பிறகு நியூயார்க் வரும் ஓமரை F.B.I கைது செய்கிறது. அவன் நண்பன் சாமிற்கு இருக்கு தீவிரவாத தொடர்புகளை அண்டர்கவர் ஏஜெண்டாக இருந்து ...