Posts

Showing posts from August, 2009

Quick Gun Murugan

Image
90களில் சேனல் வீ யை பிரபலபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கேரக்டர். அப்போதே மிக பெரிய ஹிட்.. அதை தொடர்ந்து படமாய் வெளீவந்திருக்கிறது. முருகன் ஒரு இந்தியன் அதிலும் சவுத் இந்தியன் Cow களை காப்பாற்றும் Cowboy. ரைஸ் ப்ளேட் ரெட்டி என்பவன் ஊரில் உள்ள எல்லா சைவ உணவகங்களையும் தன்னுடய கவுபாய் கூட்டத்தை வைத்து, மிரட்டி எழுதி வாங்கி, அசைவ உணவகங்களாய் மாற்றுகிறான். அதை ஒரு கட்டத்தில் எதிர்த்த குயிக் கன் முருகனுக்கு, ரெட்டிக்கு தக்ராறு வர அதில் குயிக் கன் முருகன் கொல்லப்படுகிறான். மேலோகத்துக்கு போகும் கன் முருகன், சித்ரகுப்தனிடம் போராடி தான் போய் தான் உலகை காப்பாற்ற வேண்டுன் என்று சொல்லி மீண்டும் அங்கிருந்து டிரான்ஸ்பர் ஆகி,  பூமிக்கு வருகிறான். வரும் போது 2007 ஆண்டு, அப்போது ரெட்டி மேக் தோசா என்று அசைவ தோசையை தயாரித்து உலகையே ஆள நினைக்கிறான்.  சரியான டேஸ்டான் தோசைக்கான ரிஸிப்பிக்காக அலைகிறான். தோசை மாமிகளை கடத்துகிறான். இதில் ரெட்டியா/ முருகன் இருவரில் யார் வென்றார்கள் என்பது க்ளைமாக்ஸ். கதையை படிக்கும் போதே தெரிந்திருக்கும். காமெடி செய்வதற்கென்றே எழுதப்பட்டதாய் இருக்கிறது. முதலில் ...

இசையெனும் “ராஜ” வெள்ளம்-2

Image
இளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன். சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம். பல்லவி- அனுபல்லவி மணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க  ஒரு மினி  இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள்.  சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள்.  அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என...

Crossing Over –2009

Image
மீண்டும் ஜெயாடிவியில் ஒரு நிகழ்ச்சி. இன்று படப்பதிவு.   அமெரிக்கா என்கிற ஒரு ஆதர்ச நாட்டை நோக்கி வரும் விட்டில் பூச்சிகளான சட்டவிரோதமான குடியேறிகளை பற்றிய கதை. ஹாரிஸன் போர்ட் ஒரு நேர்மையான ஆனால் மனதில் ஈரம் உள்ள ஒரு இல்லீகல் குடியேறிகளை கண்டுபிடிப்பவர்,  ஒரு சமயம் ஒரு டைடில் ஒரு மெக்ஸிகன் பெண்ணை சந்திக்க, அவள் தன்னை கைது செய்ய வேண்டாம் என்றும், அவளது மகன் காப்பாற்ற வேறு வழியில்லாமல் தான் இருப்பதாகவும் சொல்ல, கடமையுணர்ந்து அவளை கைது செய்து, அவளின் மகன் இருக்கும் முகவரியை கண்டுபிடித்து, அவனின் தாத்தா, பாட்டியிடம் கொண்டு போய் சேர்க்கிறார். ஒரு பங்களாதேஷியின் மகள் ஸ்கூலில் டெரரிஸத்தை பற்றி அவர்களுக்கு ஆதரவாய் அமைவதாய் ஒரு கட்டுரை எழுத போக, அதனால் அவளின் குடியுரிமை பிண்ணனி தெரிய வர,  அவளுடய தங்கை தம்பிகள் இங்கே பிறந்த்தால் அவர்கல் இங்கிருக்க, சட்டம் அனுமதிக்க,  குடும்பத்தை பிரிந்து திரும்பவும் பங்களாதேசுக்கு அவளும் அவள் தாயும், பிரிந்திருக்க, ஏர்போர்ட்டில் நேரில் வந்து வழியனுப்ப வந்தால் தானும் கைதாக போகக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஒளிந்து கொண்டு மகளை பிரியும் தகப்...

விஜயகாந்தின் “பஞ்ச்”

Image
1 படிச்சா என்ன சர்டிபிகேட் வேணும்னாலும் வாங்கலாம்.. ஆனால் உன்னால் உனக்கு டெத் சர்டிபிகேட் வாஙக முடியுமா? ..ம்கும். 2 நீ ஏர்டெல் வச்சிருக்கலாம், ஏர்செல் வச்சிருக்கலாம், ஆனா நீ தும்மினா ஹட்சுன்னுதாண்டா தும்மணும் 3 இன்ஜினயரிங் காலேஜில படிச்சா இன்ஜினியர் ஆகலாம், அனா பிரசிடெண்ட்ஸி காலேஜில படிச்சா பிரசெடெண்ட் ஆக முடியாது. 4 மெக்கானிகல் இன்ஜினியர் மெக்கானிக்கா ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜினியர் சாப்ட்வேர் ஆக முடியுமா? 5 டீ கப்புல டீய பாக்கலாம் வேர்ல்ட் கப்புல வேர்ல்ட பாக்க முடியுமா? 6 கீ போர்டுல கீயை பாக்க முடியும், மதர் போர்டுல மதரை பாக்க முடியுமா? 7 பஸ் ஸ்டாப்புல் பஸ்ஸை எதிர்பாக்கலாம். புல் ஸ்டாப்புல “ஃபுல்”ல எதிர்பார்க்க முடியுமா? Technorati Tags: நகைச்சுவை , மொக்கை , விஜயகாந்த் உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

கந்தசாமி - திரைவிமர்சனம்

Image
ரொம்பவும் மோசமான நிலையில் உள்ள தமிழ் சினிமா உலகம் மிகவும் எதிர்பார்த்த ஆக்ஸிஜன்  படம். பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட்,  கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் இழைத்து, இழைத்து செய்யப்பட்ட படம்.. மிக பெரிய ஓப்பனிங் எதிர்பார்க்கப்பட்ட படம். கந்தசாமி. படம் ஆரம்பித்ததும், கதை என்னவென தெரிந்துவிடுகிறது. அந்நியன், ரமணா, ஜெண்டில்மேனில் செய்ததை மறுபடியும் வேறு நிலைப்பாட்டில் செய்திருக்கிறார்கள். அதில் ஸ்பிலிட் பர்சனாலிட்டி, இதில் தெரிந்தே..  ஜெண்டில்மேனில் சரண்ராஜ் என்றால் இதில் பிரபு, என்ன அதில் எல்லாம் நல்ல திரைக்கதை என்று ஒன்று இருந்தது. இதில் அது இல்லை. ஆரம்ப காட்சி அதிரடியாய் ஆரம்பித்தாலும், ஏற்கனவே பார்த்த பீலீங் வந்துவிட்டதாலும், தெரிந்த கதையாகி போனதினாலும் பெப் இருக்கவே இல்லை. ஸ்ரேயாவின் பழிவாங்கு நடவடிக்கை, காதல், மோதல் என்று ஆரம்பித்ததும் சூடேறும் காட்சி, மீண்டும் வேறு எங்கே, எங்கேயோ பயணித்து, கலைத்து போட்ட சீட்டு கட்டாய் ஆகிவிடுகிறது. கந்தசாமி சேவல்  கோழியின்  கெட்டப்பில் ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியவர்கள் அதை சஸ்பென்ஸாய் வைத்திருக்காமல் நம்ப முடியாத ஒர...

இசையெனும் ”ராஜ” வெள்ளம்

Image
நேற்று ஒரு படம் பார்த்து கொண்டிருந்தேன். மிக முக்கியமான கட்டம் க்ளைமாக்ஸ், பிண்ணனி இசையினாலேயே நம்மை அள்ளி இழுத்து கொள்ள வேண்டிய இடம்,  அங்கே தன் ஆளுமையை காட்டவில்லை அந்த படத்தின்  இசையமைப்பாளர், அதே போல் காமராஜர் படத்தின் டபுள் பாஸிடிவ் பார்க்க சென்றிருந்தேன். அப்போது படத்தில் இயக்குனர் சில புட்டேஜுகளை விட்டிருந்தார்.  அவர் ஏன் விட்டிருந்தார் என்று எனக்கு புரிந்தது. அது பிண்ணனி இசை கோர்வைக்காக விடப்பட்டிருந்தது. இசை கோர்ப்பு முடிந்ததும் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அந்த படத்தின் இசையமைப்பாளர் “இசைஞானி’ இளையராஜா. எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது பிண்ணனி இசை படத்தில் இயக்குனர் சொல்லாமல் விட்ட விஷயங்களை கூட சொல்லிவிடும், இவரது பிண்ணனி இசையால் சாதாரணமான க்ளைமாக்ஸ் காட்சிகள், படம் பார்க்கும் பார்வையாளனின் உணர்வுகளை தூண்டப்பட்டு மிக சிறந்த க்ளைமாக்ஸாக மாறிய படங்கள் எத்தனையோ. இன்றளவில் என்னுடய...

Kaminey – Hindi Film Review

Image
இரட்டை பிற்வி, உருவ ஒற்றுமை, ஒருவன் நல்லவன், இன்னொருவன் கெட்டவன்,  உருவ ஒற்றுமை காரணமாய் ஆள் மாறாட்டம். என்று பார்த்து, பார்த்து சலித்து போன ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல முடியுமா..? அதுவும் 135 நிமிட படத்தில் ஒரு பத்து நிமிஷம் மிஸ் செய்தால் கூட புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதையில். சும்மா அனல் போல பறக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் பரத்வாஜ், ஓம்கார், மக்பூலின் இயக்குனர். சார்லி, குட்டூ இருவரும் இரட்டை பிறவி சகோதரர்கள், மும்பய் தாராவியில் வாழ்க்கை நடத்த, ஒரு கட்டத்தில் இருவரின் ஆசாபாசங்களும் வேறு வேறு விதமாய் இருக்க, சார்லி குறுக்கு வழியில் சம்பாதிக்க ஒரு வழியில் போக, குட்டு ஒரு என்.ஜி.ஓவில் ட்ரைனியாய் வேலைக்கு சேர்ந்து ஒரு கார்பரேட் தலையாக, முதல் படியை வைக்க, மூன்று வருடங்களாய் சந்திக்காமல் இருக்கிறார்கள்  சகோதரர்கள். ஒரு  நாள் வருகிறது. அந்த ஒரு நாள் அவர்களின் வாழ்கையில் அவர்களுக்கு ஒரு மாறுபட்ட ஒரு நாளாய் அமைகிறது. அந்த நாள்  அவர்களின் வாழ்கையை பணயம் வைக்கும் நாளாய் அமைகிறது. சார்லிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் போது மும்பை போலீஸின் வண்...

பயோடேட்டா – கேபிள் சங்கர்

Image
பெயர் : கேபிள் சங்கர் Original பெயர் :  பி.சங்கர் நாராயண் வயது :  யூத்துகளின் வயதுதான். தொழில் : சுயதொழில், சினிமா உபதொழில் :  சினிமா நண்பர்கள் : சினிமா பற்றி பேசும், சிந்திக்கும்,எல்லோரும் எதிரிகள் :  எனக்கு வாய்ப்பு தராதவர்கள் :) பிடித்த வேலை : சமீபத்தில் பதிவு எழுதுவது பிடிக்காத வேலை :  அப்படி ஏதுமில்லை பிடித்த உணவு : எது எங்கே கிடைத்தாலும் அதில் பெஸ்ட் எதுவோ அது. பிடிக்காத உணவு :  தெரியல விரும்புவது : சினிமாவில் வெற்றி பெற்று   ஒரு கார்பரேட் கம்பெனியின் தலைமையாக. வேண்டும் விரும்பாதது :   யோசிக்கணும் புரிந்தது :   சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நிறைய உழைக்கணும்ங்கிறது புரியாதது : எப்படி சில பேருக்கு வாய்ப்பு கிடைக்குதுன்னு?(இதை காண்டுன்னு கூட சொல்லலாம்) சமீபத்திய எரிச்சல் :  பொக்கிஷம் நீண்டகால எரிச்சல் :  நம்ம ஊர் வெயில்தான் சமீபத்திய சாதனை : மூன்று குறும்படங்கள் இயக்கியது, இரண்டு சீரியலுக்கும், இரண்டு திரைப்படங்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதியது.  எழுதியது இரண்டு...

பொக்கிஷம் – சேரனுக்கு ஒரு கடிதம் (திரைவிமர்சனம்)

Image
சுதந்திரதின வாழ்த்துக்கள் அன்பான சேரன் அவர்களுக்கு, உங்களது இயக்கத்தில் வந்த படங்களை ரசித்து பார்த்து வந்த ரசிகன் எழுதுவது. மனதை வருடும் காதலை சொல்லும் படத்தை இலக்கிய ரசனையோடு கொடுக்க நினைதது உருவாக்கிய ஒரு கதையில் எப்படி சார் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள்.  மனசாட்சி என்பது உங்களுக்கு கிடையவே கிடையாதா..? கொஞ்சமாவது உங்கள் மனத்திரையில் உங்கள் கதாநாயகனை ஓட்டி பார்த்திருந்தால், உங்களுக்குள் இருக்கு இயக்குனர் கண்டிப்பாக இப்படி ஒரு அழுமூஞ்சி முத்திய முகத்தை தன் கதாநாயகனாய் ஏற்றிருக்கமாட்டார். நடிகர் சேரன் அவரை வென்று விட்டார் போலும். கொஞ்சம் யோசித்து பார்த்தால் படத்தில் உங்கள் மகனாய் வரும் ஆர்யன் ராஜேசை ப்ளாஷ் பேக் ஹீரோவாக்கி விட்டிருந்தால் அட்லீஸ்ட் தெலுங்கிலாவது டப்பிங் ரைட்ஸ் போயிருக்கும். அது சரி கதைக்கு வருவோம். பழைய ட்ரங்க் பெட்டியில் இறந்து போன அப்பாவின் பழைய பொக்கிஷமாய் கருதும் கடிதங்களை, மகன் படித்துபார்க்க, அவரின் காதல் கதை 1970களில் விரிகிறது. உங்களின் தந்தை உடல் நலமில்லாமல் இருக்கும் போது பக்கத்து கட்டிலில் வந்து சேரும் வயதான பெண்ணின் மகளான நதிரா என...

Anjaneyalu –Telugu Film Review

Image
மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..   ஆஞ்சநேயலு துறுதுறுப்பான கேர்ஃபீரி இளைஞன். பாசக்கார அப்பா, அம்மாவுக்கு ஒரே மகன். ஒரு டிவி கம்பெனியில் வேலை செய்கிறான்.  நடுரோட்டில் ரவுடிகளிடமிருந்து ஹீரோயினை காப்பாற்றி லவ் செய்கிறான். திடீரென ஊரில் உள்ள மிகப்பெரிய ரவுடியிடம் சேர்ந்து, அவனை பற்றிய தொடர்புகள், சதிகள் எல்லாவற்றையும் தன் டிவி சேனல் மூலம் வெளியிருகிறான். ஏன்? எதற்காக? என்பதுதான் கதை. முழுக்க முழுக்க ரவிதேஜாவை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம். அவரின் படங்களில் வழக்கமாய் வரும் காமெடி முதல் பாதி முழுவதும் இருக்கிறது. லாஜிக் என்ற ஒரு வஸ்துவை படம் முழுக்க எங்கு தேடினாலும் கிடைக்காது. செகண்ட் ஹாப்பில் போக்கிரி படம் போல உளவு வேலை அங்குதான் படம் தொம் என்று விழுகிறது. எழுந்திருக்கவேயில்லை. நயந்தாராவா அது முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷாகவே இல்லாமல் அசோகவனத்து சீதை போல சோகத்துடன், ஏதோ கடனுக்கு நடித்ததுபோல் நடித்திருக்கிறார். ரொம்பவே உத்து பார்த்து தான் நயந்தாரா என்று உறுதி செய்ய...

ஆதியிடம் பின்னூடட டெலி மார்கெட்டிங்.

மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ப்ளாக் எழுதறதே பைசாக்கு பெறாத வேலையத்த வேலை, ராத்திரி பகலெல்லாம் லொட்டு, லொட்டுனு அந்த பொட்டிய தட்டிட்டி இருக்கீங்களே. என்னைய கட்டிகிறதுக்கு பதிலா அந்த பொட்டிய கட்டிக்க வேண்டியதுதானேன்னு திட்டு வாங்கிட்டாவது எழுதிட்டிருக்கிறா நிலமையில  ஒரு பின்னூட்டம் வாங்கறதுக்குள்ளே கண்ணு முழி பிதுங்கி போவுது.  ஆயிரம் தான் நாம பதிவு எழுதினாலும், மார்கெட்டிங்குனு ஒண்ணு இல்லியானா எதுவுமே வேலைக்காவாது. அதனால ஒரு டெலி மார்கெட்டிங் கம்பெனி மூலமா மார்கெட் பண்ணினா என்னான்னு தோணுச்சு.  அதுக்கான முதல் கள பலியா நம்ம அண்ணன் (நான் யூத்தில்ல)  ஆதிக்கு ஒரு ட்ரிங்..ட்ரிங்.. ”ஹலோ.?” “நாங்க கேபிள் சங்கர் ப்ளாக்லேர்ந்து ரீட்டா பேசறேன். நீங்க மிஸ்டர் ஆதிதானே?’ “ஆமாங்க.. தாமிரா என்கிற ஆதிமூல கிருஷணன் நாந்தான்.” உள்ளேயிருந்து ஆதியின் தங்கமணி “ஆமா இதுல ஒண்ணும் கொறைச்சலில்ல.. கடைக்கு போய் நாலு வெள்ளை பூண்டு வாங்கிட்டு வாங்கன்னா அதுக்கு கிளம்பக்காணும் என...

Hangover

Image
மூன்று லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர் அன்பும், ஆதரவும் தந்து கொண்டிருக்கும் சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நான்கு நண்பர்களில் ஒருவனது திருமணத்துக்கு ரெண்டு நாளுக்கு முன் லாஸ்வேகாஸுக்கு டிரிப் போக, ஓட்டலில் ஒரு பெரிய சூட்டை போட்டு தங்குகிறார்கள். ராத்திரி ஹோட்டலின் மொட்டை மாடியில் பார்ட்டியை ஆரமிபிக்க, விடிந்தால் ஹோட்டல் ரூமே கந்தர்கோளமாகியிருக்க, பாத்ரூமில் போனால் உச்சா போகுமிடத்தில் பச்சாவாக ஒரு புலி உட்கார்ந்திருக்க, வெளியே ஒரு சேவலும், கப்போர்டில் ஒரு குழந்தையும், ரூமில் உள்ள ஒருவனது பல் மொத்தமாய் போயிருக்க,  கல்யாண பையனை காணோம்.  சரி காரை கொண்டு போய் தேடலாம் என்றால் ஒரு போலீஸ் காரை ஓட்டல் நிர்வாகம் கொடுக்கிறது. இதைத்தான் நீங்கள் ராத்திரி ஓட்டி வந்தீர்கள் என்று. முதல் நாள் இரவு நடந்தது எதுவும் யாருக்கும் ஞாபகமில்லை அவ்வளவு மப்பு. சரி என்ன நடந்த்து என்று தேடிப்போனால் திடீர், திடீர் என ஒரு சைனீஸ் மாப்பியா கும்பல் ஒன்று துரத்துகிறது. இதற்கு நடுவில் மூவரில் ஒருவர் ஸ்டிரிப்பர் க்ளப்பில் உள்ள ஒரு பெண்ணை ராவோடு ராவாக திருமணம் செய்திருக்க, அ...

ஈசா - திரைவிமர்சனம்

Image
  விக்னேஷும், ஏதேதோ செய்து கொண்டுதானிருக்கிறார். வருடத்துக்கு இரண்டு படங்களாவது நடித்து கொண்டுதானிருக்கிறார் ஆனால் ஒன்றும் சொல்லும்படியாய் இருக்க மாட்டேன் என்கிறது. அந்த வரிசையில் ஈசாவும் வந்திருக்கிறது. சுடலைஈசா என்கிற ஒரு அனாதை உப்பளத்தில் வேலை பார்க்கிறான். மணிகட்டில் முட்டை தூக்கும் கம்பியோடு அலைகிறான் தனியனாய் இருக்கும் ஒருவனை கொலை செய்கிறான். கொலை செய்தவனை தன்னுடய் வீட்டிற்கு கொண்டு வந்து தன் மனைவியிடம் காட்ட, அவள் வெறி கொண்டு கையில் ஒரு கத்தியை எடுத்து இறந்தவனை மேலும் குத்துகிறாள். ஈசா ஒரு விதமான எக்ஸ்செண்ட்ரிக் ரியாக்‌ஷனோடு ஓங்காரமாய் ஆரவாரமாய் சிரிக்கிறான். இப்படி ஆரம்பிக்கும் படம் இடைவேளையின் போது கொஞ்சம் ஜெர்க்காகத்தான் செய்கிறது. பின்பு ப்ளாடாகி விழுந்துவிடுகிற்து. விக்னேஷ் அதிக பட்சமாய் இரண்டு பக்கத்திற்கு மேல் வசனம் பேசவில்லை.  தேவையில்லாமல் இவரின் கேரக்டரை பிதாம்கன் விக்ரம் போலவும், காட்டாமல், கோபக்காரனாகவும், காட்டாமல் இரண்டும் கெட்டானாக காட்டியிருப்பதால் அவரின் மேல் எந்தவித உணர்வும் வரமாட்டேன் என்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் பேக் வாட்டரில் வாழைமட்ட...

சினிமா வியாபாரம் – அறிமுகம்.

Image
மீண்டும் இந்த வாரம் மட்டும் சுமார் ஆறு தமிழ் திரைப்படஙக்ள் வெளியாகிறது. அனைத்தும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். ஒரு விதத்தில் சின்ன பட்ஜெட் படங்களால், நிறைய புது தயாரிப்பளர்களின் வருகையால், சில வருடங்களுக்கு முன் கார்பரேட் நிறுவனங்களினால் சீரழிந்து போக இருந்த  தமிழ் சினிமாவை காப்பாற்றியதே இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் என்றால் தவறில்லை. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களால் பல புதிய  இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. என்றாலும், பெரும்பாலான   நல்ல படஙக்ள் கூட மக்களிடையே சென்றடைய முடியாமல், வந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறது. அதற்கான காரணம் என்ன? ஒரு திரைபடத்துக்கு என்ன தேவை? என்ற கேள்வியை வைத்தால் யாராக இருந்தாலும் உடனடியான ஒரு பதிலை வைத்திருப்பார்கள். அது தான் கதை. நல்ல கதை இருந்தால் போதும் நிச்சயமாய் வெற்றி என்று அடித்து கூறுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எவ்வளவோ நல்ல படஙக்ள் நல்ல கதை இருந்தும் ஓடாமல், பிற்காலத்தில் டிவியில் போடும் போது பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கு பொறவு ஏன் ஓடலைன்னு யோசிக்க வைக்க...

மலை.. மலை –திரைவிமர்சனம்

Image
கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் சென்னைக்கு வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெரிய ரவுடியை சந்திக்கிறான். அவன் யார் என்று தெரியாமலே அவனை அடித்துவிட, அவனை அழிக்க வில்லன் அலைகிறான். கேட்டு, கேட்டு புளித்து போன கதையாய் தெரிந்தால் அதுக்கு ஒண்ணும் செய்யமுடியாது இதுதான் மலை..மலை திரைப்படத்தின் கதை.   பழனியில் அருண் விஜயும், பிரபுவும் இணைபிரியா சகோதரர்கள், எங்கே தனக்கு கல்யாணம் ஆனால் வருகிறவள் தன் தம்பியை பிரித்துவிடுவாளோ என்று எண்ணி திருமணமே முடிக்காமல் இருக்கும் பாசக்குழம்பு பிரபு. இரண்டு பேரும் பெரும் சண்டியர்கள், பிரபுவுக்கு பழைய சப்பி போட்ட மாங்கொட்டை கஸ்தூரி ஜோடி, கோயிலுக்கு வரும் வேதிகா வழ்க்கம்போல் ரவுடி ஹீரோவுக்கு ஜோடி, பார்த்த நாலாவ்து சீனில் காதல் செய்கிறார்கள், அவளை தேடி பழனியில் வேலையிழந்த அருண்விஜய், சென்னை வர, வ்ந்த இடத்தில் சென்னையின் நெ.1 தாதா பிரகாஷ்ராஜை சந்திக்க, வழக்கம் போல் முதல் சீனில் சண்டை போடாமல் பத்து சீன் தள்ளி, அதுவும் ஆளுக்கட்சி இடைதேர்தலுக்காக தன் பலத்தை காட்டும் ஊர்வலத்தில் அவர் என்று தெரியாம அருண்விஜய் அடித்துவிட, அவனை கொல்ல துடிக்கிறார் பிரகாஷ். கதை...

தமிழ்சினிமாவின் 30 நாட்கள்- ஜூலை09

கடந்த மாதம் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமும், மோசமான மாதமும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் அதிகபட்சமான நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியான மாதம் என்றால் அது சென்ற ஜூலை மாதம் தான். இருபத்தியோரு தமிழ் படங்கள் வெளியாகியிருக்கிறது.  பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் நடித்த படங்களைவிட சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளிவந்ததுதான் அதிகம். 1  சிரித்தால் ரசிப்பேன் இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியான ஒரு முழு நீள நகைச்சுவை படம்.  குறைந்த அளவு பிரிண்டுகளே போடப்பட்டு, விளம்பரமும் இல்லாததால் ஒரு வாரத்தில் சுருண்டது. நல்ல காமெடி இருந்தது என்று பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். 2 ஞாபகங்கள் பாடலாசிரியர் பா.விஜய் எழுதி நடித்த திரைப்படம்,  ஹிந்தி ரெயின் கோட்டை திரும்ப தமிழில் தன் நண்பரின் கதை என்று உட்டாலக்கடி விட்டாலும், செல்ப் எடுக்காத படம். பாவம் பல படஙக்ளில் பாட்டெழுதி சம்பாதிச்ச காசு.. :( 3 உன்னை கண் தேடுதே .ஏ.எல். அழகப்பனின் மகன் உதயாவின் மறு அவதார முயற்சி..  ஒரு வாரம் கூட ஓடியதாய் தெரியவில்லை. 4 இந்திரவிழா நமிதாவை பெரித...