இசையெனும் “ராஜ” வெள்ளம்-2

இளையராஜாவின் பிண்ணனி இசை பற்றிய ஒரு கட்டுரையை ஆரம்பித்ததும், அவரது இசையை போலவே வழக்கம் போலவே மிக அருமையாய் களை கட்டிவிட்டது பின்னூட்டங்கள். மேலும் தொடரச் சொல்லி உற்சாக ஊக்குவிப்பு. வேறு.. அந்த உற்சாகத்தில் மேலும் தொடர்கின்றேன்.
ilayaraja-maniratnam
சென்ற கட்டுரையில் இளையராஜாவின் பிண்ணனி இசையில் பாரதிராஜா- ராஜாவின் கூட்டணியில் வெளிவந்த சில படஙக்ளை பற்றி சொன்னேன். இந்த முறை மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் வெளிவ்ந்த படங்களை பார்ப்போம்.
பல்லவி- அனுபல்லவி
Pallavi anupallavi
மணிரத்னத்தின் முதல் படம், கன்னட படம், லஷ்மி, அனில் கபூர், நடித்து வெளிவந்த படம். இந்த படத்தில் டைட்டில் கார்டுக்கு ஒரு பிண்ணனி இசை ராஜா போட்டிருப்பார் வய்லினை அடிப்டையாய் வைத்து, புல்லாங்குழல், கிடார் என்று எல்லாம் சங்கமிக்க  ஒரு மினி  இசை ராஜாஙகமே அமைத்திருப்பார். அந்த இசையை இன்று வரை மறுபடி, மறுபடி உபயோகபடுத்தி வருகிறார்கள்.  சிவா மனசுல சக்கி திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் யுவன் அதை உபயோகபடுத்தியிருப்பார். ஐடியா செல்லூலரின் விளம்பர பிண்ணனி இசைக்கு அதை உபயோகபடுத்தியிருப்பார்கள்.  அதே இசையை ராஜாவே “மெல்ல.. மெல்ல என்னை தொட்டு “ என்று ஒரு பாடலாகவே இசையமைத்திருப்பார். இந்த படத்தில் படம் நெடுகிலும் ஒர் அமைதியான, ஆர்பாட்டமில்லாத இசையை ராஜாவும், மணியும் கன்னட திரையுலகத்திற்கு அறிமுகபடுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. 



மெளனராகம்
tamil-movies-mounaragam1

இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு எவ்வளவு என்று சொன்னால் பாதிக்கு பாதி என்பேன்.  ஏனென்றால் படம் முழுக்க இயக்குனருக்கு வலது கரம் போல், பாடல்களில் ஆகட்டும், பிண்ணனி இசையிலாகட்டும்  கூடவே இருப்பார் ராஜா.. முக்கியமாய் கார்த்திக் வரும் காட்சிகளில் இருக்கும் இளமை துள்ளல், கார்த்திக் நடிப்பை மேலும் தூக்கி நிறுத்தி துள்ளல், இளமை, குறும்பு கலந்த ஒரு  பிண்ணனி இசையை க்கொடுத்திருப்பார். அதே போல படம் நெடுக மோகன், ரேவதி வரும் காட்சிக்ளில்  அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிண்ணனி இசை அவர்கள் வெளிபடுத்தாத உணர்வுகளை கூட மணியும்- ராஜாவும் வெளிபடுத்தியிருப்பார்கள்.
இதயத்தை திருடாதே
 
இதிலும் மணியின் வழக்கமான குறும்புத்தனமான ஹீரோயின் கேரக்டருக்கு ஒரு பிண்ணனி பீஜிஎம் படம் முழுக்க வலைய வரும். அவளின் குறும்புத்தனத்தை  நமக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார் ராஜா.  நாகார்ஜுனை தேடி ஹீரோயினின் குட்டி தgeetanjali-bங்கை, அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, அவனின் வீட்டு கதவை திறக்க, அவளுக்கு முன்னால் பனிபுகை மெல்ல, தரையில் ஊர்ந்து போய், எழும்பி, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாகார்ஜுனின் முதுகில் தொட, அவர் திரும்பி பார்க்கும் வரையான காட்சியில் ராஜாவின் பிண்ணனி இசைக்காக, அந்த காட்சி எடுக்கப்ட்டதா, அல்லது காட்சிக்காக இசையமைக்கபட்டதா? என்று கேட்கும் வண்ணம் இரண்டு பேரும் உழைத்திருப்பார்கள்.
மேலும் மணி- ரஜா காம்பினேஷன் படஙக்ளை பற்றி பேச நிறைய இருப்பதால் அடுத்த வியாழன் சந்திபோம். அதுவரை உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்… கேபிள் சங்கர்
முந்தைய பதிவு
இசையெனும் “ராஜ” வெள்ளம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments

dear cable anna very super anna
Unknown said…
அருமை கேபிள் சார்....
அதுலயும் மௌனராகம் சான்சே இல்ல....கார்த்திக் வரும்போதெல்லாம் நம்மளும் குஷி ஆகிடுவோம் அந்த மியூசிக் கினால் ....
GHOST said…
மௌனராகம், இதயத்தை திருடாதே இரண்டு பட பாடல்களும் எவர்கிரீன், அதிலும் அந்த நிலாவே பாடல்ல டாப், நன்றி அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்
ஓ ப்ரியா பாடல் என் ஆல்டைம் பேவரிட். ராஜா மணிரத்னம் சூப்பர் டூப்பர் ஹிட்கள் நாயகனும் தளப்தியும் தான் ஆனால் அஞ்சலியிலும் ராஜா கலக்கியிருப்பார். பல சின்னப்பையன்களையும் பாடவைத்திருப்பார் அவர்கள் தான் இப்போ யுவன் , கார்திக், யுகேந்திரன், பவதாரணி, வெங்கட் பிரபு, சரண் என கொடுகட்டிப் பறப்பவர்கள்.
Unknown said…
”ராஜாபார்வை”யில் ஒரு சீனில் மழைப் பெய்யும்.அப்போது சின்ன வயது கமல்
பேப்பர் கப்பல் விடுவார்.அந்த சீனின் பின்னணி இசையை கேட்டுப் பாருங்கள்.

”டிக் டிக் டிக்”படத்தில் பாரதி ராஜா வைரத்தைப் zoom செய்து ஒரு ஷாட் எடுத்தாராம்."இது எதற்காக” என்று கேட்டதற்கு “ராஜாவின் இசைக்காக என்று சொன்னராம்.
அண்ணா,
அற்புதம்.

இனி ஒரு முறை இருவரும் இணைதல் சாத்தியமா ?
இன்னும் ...இன்னும் ..நெறைய .....வேணும் .........!
IKrishs said…
"Pallavi anu pallvi" padathla vandha anil kappor naditha sila kaatchigalaye manirathnam mounaraagam padathulayum (karthick vara kaatchigal) use panni iruppar...But karthick than best...
Krish
சட்டுனு முடிச்சிட்டமாதிரி இருக்கு...நான் இந்தவாரமே...நாயகன் படத்தை எதிர்ப்பார்த்தேன்...இன்னும் ஒருவாரம் இருக்கா...

இந்த படங்களிலேயே அவரின் ஆளுமை தெரிகிறது....
"Manram Vaa Thentral"
Song i like very much Picture + Songs, really nice .
இனியதொரு இசைப்பகிர்வு.
நல்ல தேர்வுகள்...

மவுனராகத்தில் கார்த்திக் வரும் பகுதியில் வரும்பிண்ணனி இசை ராஜாவின் மேதமை வெளிப்பட்ட இடம்.துள்ள்ளலோடு கார்த்திக் திரியும் காட்சிகளுக்கு சேர்க்கப்பட்டிருக்கும் பிண்ணனி இசையில் மிக மெல்லிய சோகம் வெளிப்படும் வண்ணம் அமைத்திருப்பார். மகிழ்வும் சோகமும் கலந்த பியானோ ஒலிகொண்ட பிண்ணனி இசைக்கோர்ப்பு அந்த காட்சிகள் முழுவதும் இறுக்கத்தை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

விடுபட்ட சில முக்கிய இசைக்கோர்ப்புகள் இடம் பெற்ற படங்கள் காதல் ஓவியம், நினைவெல்லாம் நித்யா, பன்னீர் புஷ்பங்கள். பூந்தோட்டம்

அதிகம் கவனிக்கப்படாத அருமையான பிண்ணனி இசை கோர்ப்பு அமைந்த படம் காதல்கவிதை திரைப்படம். குறிப்பாக லைப்ரரி காட்சியும், டயானா நினைவிடத்திற்கு முன்பான காட்சியும். இதில் சிறப்பம்சம் என்றால் இந்தப்படம் டிசம்பர் 25 வெளிவந்தது, டிசம்பர் 23ல் தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டது. பிண்ணனி இசை கோர்ப்பு நடைபெற்றது டிசம்பர் 21ம் தேதி காலை 9 மணியிலிருந்து 22ம் தேதி காலை 6 மணி வரை.

எனக்கு விபரம் தெரிந்த பிறகு நான் விரும்பிப் பார்த்த படங்கள் 90 சதவீதம் இளையராஜா படங்களே. படம் பார்ப்பதைவிட பிண்ணனி இசையைத்தான் அதிகம் ரசிப்பேன்.

விடிய விடிய பேசலாம் இளையராஜாவின் பிண்ணனி இசையை..
சேது படத்தில் கடைசி 40நிமிடம் ராஜாவின் ராஜ்யம்தான்! நாளிதழில் மிகச்சரியாக சொல்லியிருந்தார்கள் பண்ணைபுரத்தார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று
சேது படத்தில் கடைசி 40நிமிடம் ராஜாவின் ராஜ்யம்தான்! நாளிதழில் மிகச்சரியாக சொல்லியிருந்தார்கள் பண்ணைபுரத்தார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று
ஷங்கி said…
அருமை!, மெல்ல மெல்ல என்னைத் தொட்டு ”சர்வம்” படத்துல உபயோகிச்சிருப்பாங்களே!

மௌன ராகம், கார்த்திக் காட்சிகளின் இசை ஒரு அதி அற்புத அனுபவம். அந்தப் படத்து டைட்டில் கார்டு இசையே நம்மள பிடிச்சி உக்காத்தி வச்சிருமே
Ashok D said…
பிரமாதம்.. வேகம்... இனிமை... தொடருங்கள் காத்திருக்கிறோம்.
இதுபோல் பதிவுகள் வர வேண்டும். படிக்கும்போதே ஒரு இனிய சுகம். வாழ்த்துக்கள்...
கேபிள் சங்கர்.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்......
குறிப்பாக பாரதி ராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், இவர்களது திரைப்படங்களில் இளைய ராஜாவின் இசையின் ஆதிக்கம் தலை தூக்கி நிற்கும்.

எ. கா. பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், மூடு பனி ....
மணி எப்பவுமே இசையமப்பாளர்களிடம் மிக சிறந்தத வெளிய எடுத்து விடுவார்.
Unknown said…
இளையராஜா, பாசில் கோம்பினசின் சான்சே இல்ல . பூவிழி வாசளிலேவில் வரும் அந்த வீணையின் ஓய்ங் ... நம் உடலின் நரம்புகளையே மீட்டுவது போல் இருக்கும். அப்படி ஒரு த்ரில் . அது போல் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் கண்ணே நவமணியே ... நம்மை அப்படியே ஒரு தாயாக்கி விடும்.
Unknown said…
இந்த பதிவுக்கு கமெண்ட் போடுவதற்காகவே நான் கூகிள் அக்கௌன்ட் ஆரம்பித்திருக்கிறேன்
IKrishs said…
//anis said...
1:37 PM
இளையராஜா, பாசில் கோம்பினசின் சான்சே இல்ல . பூவிழி வாசளிலேவில் வரும் அந்த வீணையின் ஓய்ங் ... நம் உடலின் நரம்புகளையே மீட்டுவது போல் இருக்கும். அப்படி ஒரு த்ரில் . அது போல் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தின் கண்ணே நவமணியே ... நம்மை அப்படியே ஒரு தாயாக்கி விடும்.

Idhai repeatugiren...
Andha songa radiola kumbakonam thee vibathuppo oliparappinangha..
Appodhu Kanneerai varavalaitha paadal adhu..
Poove poochoodavaa climax lium appadiye...
Krish
thamizhparavai said…
கலக்கல் கேபிள் சார்..இன்னும் கொஞ்ச்ம அதிகமாக எதிர்பார்த்தேன்...
தொடங்குவதற்குள் முடிந்ததுபோன்ற உணர்வு...
புள்ளி விபரங்களைக் குறைத்து உங்கள் உணர்வுகளை எழுத்தாக்குங்கள் சார்.. waiting for next post....
மௌன ராகம்.இளையராஜா ஒரே BGM படம் முழுக்க Use செய்துஇருப்பார்.சோகம்,துள்ளல் எல்லா வற்றுக்கும் அந்த இசை மாறி மாறி ஒலிக்கும்.
Sanjai Gandhi said…
எங்க ஊருக்கு வியாழன் வந்தாச்சி? உங்க ஊருக்கு? :)
// மணி- ரஜா காம்பினேஷன் படஙக்ளை //

நாயகன்

தளபதி

எதிர்பார்க்கிறேன் :)
இதில் மெளனராகத்தின் பின்னணி இசை ஒரு ரேஞ்சு என்று சொல்லலாம்.

கமல், சொன்னது போல ராஜாவைப் போல் பின்னணி இசை அமைக்கும் சிலர் உலகில் வெகுசிலரே.
மணிஜி said…
கேபிள் ‘ராஜா”ங்கம்
வாவ் கலக்கல்.......அருமை அண்ணே
மௌன ராகம், இதயத்தை திருடாதே .ரெண்டுமே டாப்.........அதிலும் ஓ பாப்பா லாலி பாடலை இப்ப கேட்டாலும்......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்கோ கொண்டு செல்லும்
என்னை மிகவும் கவர்ந்தது ,
சொல்ல மறந்த கதை யின் இறுதியில் சேரன் ரதி வீட்டின் முன்னால் கார் கோளாறாகி நின்றதில் இருந்து அவர்கள் இருவரும் சேரும் வரை வரும் பின்னணி இசை .
சான்சே இல்லை . யாராலும் முடியாது . ராஜாவை தவிர !
manasu said…
மொட்டை-மணி, ரஹ்மான் - மணி எது பெஸ்ட் என்பீர்கள்?
SumDes said…
Maniratnam - Raja combo had some earlier Tamil films like 'Pagal Nilavu' and 'Idhaya Kovil', the latter was only spoken about for its musical score. Every song was a mega hit and so was the BGM.

Raja also scored for Mani's only Malayalam film to date, 'UNaru' (starring Mohanlal and Sabitha Anand), which had some great melodies, including a version of the Koomberi mookkan song, "Roja Ondru Mutham Kaetkum Neram'. The BGM was very subtle and extremely effective.
Prabhu said…
CLASSIC!
தல

ஒன்னும் சொல்லிக்க முடியல...ரசிக்கிறேன் அம்புட்டு தான் ;))

பின்னூட்டம் போடும் அனைவரும் கலக்குறிங்கப்பா ;)))
கேபிள்ஜீ

பதிவை விட பின்னூட்டங்கள் கலக்கல்.

பலர் மனதில் இருக்கும் விஷயங்களை இறக்கி வைக்க உங்கள் பதிவு ஒரு பிளாட்பார்மாய் அமைந்துவிட்டது
Lenin said…
manirathnam's first tamil movie Geethanjali is also good combination of Mani and Raja
/dear cable anna very super anna//

மிக்க நன்றி இந்தியன் ஷேர் மார்கெட்
நன்றி நைனா
நன்றி எஸ்.என்
ஆமாம் கமல், கோஸ்ட்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
/”ராஜாபார்வை”யில் ஒரு சீனில் மழைப் பெய்யும்.அப்போது சின்ன வயது கமல்
பேப்பர் கப்பல் விடுவார்.அந்த சீனின் பின்னணி இசையை கேட்டுப் பாருங்கள்.

”டிக் டிக் டிக்”படத்தில் பாரதி ராஜா வைரத்தைப் zoom செய்து ஒரு ஷாட் எடுத்தாராம்."இது எதற்காக” என்று கேட்டதற்கு “ராஜாவின் இசைக்காக என்று சொன்னராம்.
//

ராஜ பார்வையின் பிண்ணனி இசை பற்றி கமல் ராஜா காம்பினேஷனில் எழுத போகிறேன்.. நன்றி ரவிஷங்கர் சார்.
/அண்ணா,
அற்புதம்.

இனி ஒரு முறை இருவரும் இணைதல் சாத்தியமா ?
//

கண்ணுக்கு தெரிந்து சான்ஸ் இல்லை

நன்றி ஜீவா
நன்றி வந்தியத்தேவன்
/Pallavi anu pallvi" padathla vandha anil kappor naditha sila kaatchigalaye manirathnam mounaraagam padathulayum (karthick vara kaatchigal) use panni iruppar...But karthick than best...
Krish//

சில காட்சிகள் இல்லை யூ. எம்.. கார்த்திக்கின் கேரக்டரே அந்த படத்திலிருந்து வந்ததுதான்.
/சட்டுனு முடிச்சிட்டமாதிரி இருக்கு...நான் இந்தவாரமே...நாயகன் படத்தை எதிர்ப்பார்த்தேன்...இன்னும் ஒருவாரம் இருக்கா...

இந்த படங்களிலேயே அவரின் ஆளுமை தெரிகிறது..//

ரொம்பவும் பெரிசா இருந்தா படிக்க மாட்டாங்களோன்னு ஒரு நினைப்புலதான் .ஹி..ஹி..
நன்றி சிவகுமார்
நன்றி துபாய் ராஜா..
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
/விடுபட்ட சில முக்கிய இசைக்கோர்ப்புகள் இடம் பெற்ற படங்கள் காதல் ஓவியம், நினைவெல்லாம் நித்யா, பன்னீர் புஷ்பங்கள். பூந்தோட்டம்
//

இளையராஜாவின் பிண்ணனி இசைகோர்ப்பு பற்றி எழுத வேண்டுமானால் அவர் இசையமைத்த அத்துனை படங்களிலும் ஏதையாவது செய்திருப்பார்.. நான் இங்கே சொல்வது எல்லாம் சிறந்ததாய் கருதப்படுகிற பட்ங்களுல் சில் .. பாரதிராஜாவின் டிக்,டிக்,டிக், புதிய வார்ப்புகள் எல்லான் என்ன செய்ய..
நன்றி சங்கா
நன்றி அசோக்.. உங்கள் தொடர் ஆதரவிற்கும், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
/இதுபோல் பதிவுகள் வர வேண்டும். படிக்கும்போதே ஒரு இனிய சுகம். வாழ்த்துக்கள்...
கேபிள் சங்கர்.... தொடரட்டும் உங்கள் பதிவுகள்....//

உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க நன்றி ராட் மாதவ்
/குறிப்பாக பாரதி ராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், இவர்களது திரைப்படங்களில் இளைய ராஜாவின் இசையின் ஆதிக்கம் தலை தூக்கி நிற்கும்.

எ. கா. பதினாறு வயதினிலே, உதிரிப்பூக்கள், மூடு பனி //

அது அவருக்கும், இயக்குனருக்கும் உள்ள வேவ்லெந்த்..தான் காரணம்.
/மணி எப்பவுமே இசையமப்பாளர்களிடம் மிக சிறந்தத வெளிய எடுத்து விடுவார்.
//
அதென்னவோ உண்மைதான்.. ஏ.ஆரின் பிண்ண்னி இசை அருமையாய் இருந்தது மணியின் படங்களே..
/இந்த பதிவுக்கு கமெண்ட் போடுவதற்காகவே நான் கூகிள் அக்கௌன்ட் ஆரம்பித்திருக்கிறேன்
//

நன்றி அனீஸ்.. உங்கள் ஆர்வத்திற்கு.. மேலும் உங்கள் பின்னூட்டம் என்னை உற்சாகபடுத்தும்.
//கலக்கல் கேபிள் சார்..இன்னும் கொஞ்ச்ம அதிகமாக எதிர்பார்த்தேன்...
தொடங்குவதற்குள் முடிந்ததுபோன்ற உணர்வு...
புள்ளி விபரங்களைக் குறைத்து உங்கள் உணர்வுகளை எழுத்தாக்குங்கள் சார்.. waiting for next post....
//

முயற்சிக்கிறேன் தமிழ் பறவை.. மிக்க நன்றி..
/மௌன ராகம்.இளையராஜா ஒரே BGM படம் முழுக்க Use செய்துஇருப்பார்.சோகம்,துள்ளல் எல்லா வற்றுக்கும் அந்த இசை மாறி மாறி ஒலிக்கும்.//

ஆமாம் இளவட்டம்..
/எங்க ஊருக்கு வியாழன் வந்தாச்சி? உங்க ஊருக்கு? :)//

அடுத்தவாரம்தான் வ்ரும்..
/நாயகன்

தளபதி

எதிர்பார்க்கிறேன் :)
//

அடுத்த வாரம் நிச்சயமாய் வருகிறது.. புருனோ..
/கமல், சொன்னது போல ராஜாவைப் போல் பின்னணி இசை அமைக்கும் சிலர் உலகில் வெகுசிலரே.//

இதுவும் உண்மைதான் செய்யது.. மிக்க நன்றி
.கேபிள் ‘ராஜா”ங்கம்
//

:) நன்றி தண்டோரா..
/என்னை மிகவும் கவர்ந்தது ,
சொல்ல மறந்த கதை யின் இறுதியில் சேரன் ரதி வீட்டின் முன்னால் கார் கோளாறாகி நின்றதில் இருந்து அவர்கள் இருவரும் சேரும் வரை வரும் பின்னணி இசை .
சான்சே இல்லை . யாராலும் முடியாது . ராஜாவை தவிர !//

நிச்சயமாய்.. அருப்புக்கோட்டை பாஸ்கர்.. எங்க ரொமப் நாளா ஆளையே காணம்.?
/மொட்டை-மணி, ரஹ்மான் - மணி எது பெஸ்ட் என்பீர்கள்?
//

இரண்டுமே இரண்டு விதமான எக்ஸ்டெண்ட்..
/Raja also scored for Mani's only Malayalam film to date, 'UNaru' (starring Mohanlal and Sabitha Anand), which had some great melodies, including a version of the Koomberi mookkan song, "Roja Ondru Mutham Kaetkum Neram'. The BGM was very subtle and extremely effective.//

நன்றி சுமேரு.. உங்கள் தகவலுக்கு..
/தல

ஒன்னும் சொல்லிக்க முடியல...ரசிக்கிறேன் அம்புட்டு தான் ;))

பின்னூட்டம் போடும் அனைவரும் கலக்குறிங்கப்பா ;)))
//

ரொம்ப நன்றி கோபிநாத்..
/கேபிள்ஜீ

பதிவை விட பின்னூட்டங்கள் கலக்கல்.

பலர் மனதில் இருக்கும் விஷயங்களை இறக்கி வைக்க உங்கள் பதிவு ஒரு பிளாட்பார்மாய் அமைந்துவிட்டது//

அப்ப பதிவு நல்லா இலலின்னு சொல்றீங்க.. உண்மையாகவே பின்னூட்டங்கள் பின்னியெடுக்கிறார்கள்.. மிக்க நன்றி.. எல்லோருக்கும்
/manirathnam's first tamil movie Geethanjali is also good combination of Mani and Raja//

லெனின் மணிரத்னத்தின் முதல் படம் பல்லவி அனுபல்லவி.. அது கன்னட படம். அதை இந்த பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்.. மிக்க நன்றி லெனின் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
நன்றி அத்திரி
ந்ன்றி பப்பு.. உங்கள் தொடர் ஆதரவுக்கும், பின்னூட்டத்திற்கும்.
IKrishs said…
Indha thodar padhivil ilayarajavin telugu and malayalam isai jaalangalayum yedhir paarkiren...
Vamsi combination ilayaraja voda hits:
April 1 vidudala -chukkalu chemmana
April 1 vidudala - Okkate asha (idaiyila flute la oru magic panni irupparu)
chettigunda pleadaru-Alli billi ,chalthiga namu gaadi and more.
Malayalam
Poongatinodum (rahman nadichadhu peru theriyala)
Achuvinte amma-yendhu parnjalum.
Latesta oru jayaram padam kooda...
-Krish
idayakoil is the first film of mani rathnam.

Ofcourse, in real sense Tick Tick Tick is the first film of Maniratnam & Kamalhasan's direction. that time his name appear as subramni. Ratnam ayyar is his dad name.
Anonymous said…
www.puthumai.weebly.com

இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்

உங்கள் விளம்பர அளவு

170 pix x 100 pix

GIF Image or JPEG Image

எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்

puthumai@ymail.com
Unknown said…
ஹலோ ராம்ஜி, டிக் டிக் டிக் பாரதிராஜா படம்.
ஆஆஆ.. ரொம்ப சிக்கிரம் முடீஞஜா மாதிரி இருக்கு. ராஜா வின் ராஜாங்கம் நடகட்டும்.
அருமை கேபிள் சார்.
Prabu M said…
Hi Brother...

For me the best in Raja-Mani combination is "Anjali" I am waiting for ur views about it on thursday :)

very nice to read.....
நல்ல தேர்வுகள்...
Unknown said…
Hello sir, pallavi anu pallavi.ku camerava pathi oru vaartha sollaliye.balu mahendra sir evlo alaha camera panniyirupparnu paarunga.
saravanan,
kurumbalur.
http://www.youtube.com/watch?v=tMxYLbgHwDI&feature=c4-overview&list=UU-V48SGTBh-j_OS-VfGt1dw

Raja Sir,,,,,,,,,,, I bow you. I pray God, May Your soul live Longer.
-//பாஸ்கிடார் உபயோகம் குறித்து நண்பர் எட்டியை தவறாமல் பிதற்ற வைக்கும் இன்னொரு பாடல், தேவனின் கோவில்…!

இப்பாடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது பாஸ் கிடார். மிக அழகாக உருவாக்கப்பட்ட crotchetகளுடன் இந்தப் பாடலுக்கு நல்ல ஒரு ரிதம் சேர்க்கிறது பாஸ் கிடார். அதே சமயம் இன்டர்லூட்களில் அவை தனியாக ஒரு counter melodyயை இசைக்கிறது. சரணங்களின் நீண்ட ஸ்வரங்களில் உள்ள வெற்றிடத்தை பாஸ் கிடாரின் நளினமான grooveகள் நிரப்புகின்றன. நாம் பொதுவாகக் கேட்டு ரசிக்கும் ‘தேவனின் கோயில் மூடிய நேரம்…’ என்ற மெலடிக்கு ஈடாக, மறைந்திருந்திருந்து இன்னொரு குட்டி ராஜாங்கத்தையே நடத்துகிறது இப்பாடலின் பாஸ்கிடார். இப்பாடலின் மெலடி, பாஸ் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தி வெளியே வரும்போதுதான் அது முழுமையானதொன்றாக, இளையராஜாவால் மட்டுமே செய்யக்கூடிய சாதனைகளில் ஒன்றாக மாறுகிறது.

எந்த அளவிற்கு இந்தப் பாடல் ஒருவரை பாதிக்க முடியும் என்பதை சுகா தன்னுடைய கட்டுரையில் சொல்லியிருந்தார். என்னைப் பொருத்தவரை என் இசைக்கனவை நிறைவேற்றிக் கொள்ள என்னைப் பதினேழு வருடங்கள் காத்திருக்க வைத்தது இந்தப் பாடல். அந்தப் பதினேழு வருடங்களும் இப்பாடலைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் ஒரு கையில் மெலடியும், இன்னொரு கையில் பாஸும் வாசித்தபடிதான் இருந்தேன். என்னைப் போல், சுகாவைப் போல் இன்னும் எத்தனை பேரோ!
- See more at: http://solvanam.com/?p=23134#sthash.yLSwT3Lb.dpuf//-

ஒரு பாடலை ரசித்து மீண்டும் வாசிக்க 18 வருட காலம் பிடிக்கிறது. இசை கருவியை வாசிக்க தெரிந்த வனுக்கு ,,,,,, அப்படி பட்ட இசை அமைத்தவனை (ராஜா ) குறைந்த பட்சம் மதிக்கவாவது செய்வோம். இதே வரிகள் ரஹ்மானுக்கும் பொருந்தும்..........Long LIVE ராஜா சார் ................
Unknown said…
Sir ungal katturai thodarattum vaazhthukal

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.