Posts

Showing posts from September, 2009

சன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி

Image
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, ஒரே நாளில், ஒரே நேரத்தில் இரண்டு தொலைக்காட்சிகளில் ஒரே படம் சுப்ரமணியபுரம் திரையிட்டார்கள்.. சன் டிவியிலும், ஜீதமிழிலும். மீடியாவில் உள்ள பல பேருக்கு எப்படி இப்படி நடக்கும் என்று கேள்வி எழுந்தது மட்டுமில்லாமல், பொது மக்களுக்கும் அந்த கேள்வி எழுந்தது. பரபரப்பாக ரொம்ப நாளாக விரைவில், விரைவில் என்று விளம்பரபடுத்தி வந்த் ஜீதமிழ் தொலைக்காட்சியினர் ஏன் திடீரென சன் அறிவிப்பை மறுக்கவில்லை..? அந்த படத்தை பெரிய விலை கொடுத்து தங்கள் டீவியில் ஒளிப்பரப்பும் உரிமையை பெற்றிருந்தார்கள்.. நாடோடிகள் படத்தை கூட அவர்கள் தான் வாங்கியிருக்கிறார்கள் என்று செய்தி.. இப்படியிருக்க இந்த படத்தினால்.. விழா நாளில் ஆவர்களின் சேனலின் டி.ஆர்.பி எகிற வைக்க இருந்த நல்ல வாய்ப்பை எப்படி பகிர்ந்து கொண்டார்கள்..? இதற்கு பின்னால் சன் டிவி, ஜிடிவிக்கும் இருக்கும் 15 வருட பிரச்சனையும் புகைகிறது. கலாநிதிமாறன் முதன் முதலில் சேனல் ஆரம்பிக்க ஐடியா வந்தவுடன், அப்போது இந்தியாவின் முதல் சாட்டிலைட் சானல், ஓரே சேனல் என்கிற புகழோடு இருந்த நேரத்தில் அதில் தினமும் ஒரு மூன்று மணிநேரம் தங்களது தமிழ் ஒ...

கொத்து பரோட்டா -29/09/09

Image
நேற்று சன் டிவியிலும், ஜீதமிழ் சேனலிலும் சுப்ரமணீயபுரம் படத்தை ஒளிபரப்பினார்கள். எனக்கு தெரிந்த தகவல்களின்படி அந்த படத்தின் உரிமை ஜீதமிழ் சேனலே சுமார்45 லட்சத்துக்கு வாங்கியதாய் சொன்னார்கள். ஆனால் எப்படி ஒரே நாளில் அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களில் ஒளிபரப்ப முடியும்? இதன் பின்னால் உள்ள உள்குத்து என்ன என்றே புரியவில்லை.. உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் என்று விளம்பர படுத்தும் காலம் போய், உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாய் இரண்டு சேனல்களில் என்று விளம்பர படுத்தும் காலம் போலிருக்கிறது. ************************************************************************************* செவிக்கினிமை ராஜாவின் இசையில் கண்ணுக்குள்ளே என்றொரு படம் வெளிவந்திருக்கிறது.. அதில் “எங்கே நீ சென்றாலும்” என்கிற பாடல் வருகிறது.. அருமையான மெலடி.. பழைய ராஜாவின் நெடி அடித்தாலும்.. ஆரம்பத்தில் வரும் வயலின் சூப்பர்.. அதே போல் அவரின் இளவல் யுவனின் இசையில் “யோகி” படத்தில் வரும் தீம் மீயூசிக் இசை தொகுப்பில் வரும் சாரங்கி.. ம்ம்ம்.. நெகிழ வைக்கிறது.. ஸ்பெல்பவுண்ட்.. **************************************************...

”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு

Image
சில மாதங்களுக்கு பிறகு பதிவர் சந்திப்பு நேற்று நடந்தது.அலைகடலென திரண்டு வாரீர் என்று சொன்னது.. அடை மழை என்று புரிஞ்சிடுச்சு போலருக்கும் கூட ஆரம்பித்து ஒரு அரை மணி நேரத்தில் எல்லாம் மழை பிச்சிகிச்சு. இருந்த ஓரே மரத்தின் அடியில் ஆயிரம் பேர். தொப்பலாய் நினைந்தபடி, இதற்கு பேசாமல் மழையிலேயே நின்றிருக்கலாம். மீண்டும் மழை நின்றவுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.. பதிவர் முரளிகண்ணன் அண்ணன் பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோருக்கு, சிறுகதை பட்ட்றை, சிறுகதை போட்டி ஆகியவற்றை சிறப்பாக நடத்தியதற்காக நன்றியும், சிங்கை நாதனுக்கு சென்னையில் இருந்து நிறைய பதிவர்கள் உதவியதற்காகவும், அதை முன்னிருந்து ஒருமுனை படுத்திய நர்சிமுக்கும், புதியதலைமுறை வார இதழில் பதிவுலகிலிருந்து பத்திரிக்கையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும், அதிஷா,லக்கிலுக் ஆகியோரை பாராட்டியும், அலெக்ஸா ரேட்டிங்கில் ஒரு குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்குள் வந்தமைக்காகவும், நான்கு லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியதற்காகவும் எனக்கும் ஒரு வாழ்த்தும், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆரம்பிக்கும் “அகநாழிகை” இதழ் வெற்றி பெற வாழ்த்தியும் ஆரம்பித்தார். அவர் பேச ...

திரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்

Image
நான்கு லட்சம் ஹிட்ஸுகளையும், அலெக்ஸா ரேங்கிங்கில் 93,714 கொடுத்த அன்பு சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றிங்கோ.. ரொம்ப நாளாச்சு இவ்வளவு லைட்டான திரைகதையில், பரபரவென, ஸ்லாப்ஸ்டிக்கும், ஒன்லைனரும், கலந்து அடிக்கும் ஒரு லவ்லி கூத்தை.. ஒரு பர்பெக்ட் பெண் ரூபா மஞ்சரிக்கும், அன் பெர்பெக்ட் அஜ்மலுக்கும் இடையே நடக்கும் ரசிக்கும் படியான கதை.அஜ்மல் ஒரு விளம்பர கம்பெனியின் ஆர்ட் டைரக்டர், விஷுவலைசர், ரூபா அவனுடன் வேலை பார்க்கும் பெண், மெளலிக்கு பிள்ளைகள் இல்லாததால் செல்லப் பிள்ளையாய் அஜ்மல் இருக்க, அவனின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு மிக பெரிய கார்பரேட் கம்பெனியின் ஆர்டர் கைநழுவி போக இருக்க, அதை இழுத்த் பிடித்து ரூபாவும், அஜ்மலும் பிடித்து வேலையை ஆரம்பிக்க, அது ஒரு குழந்தைகளுக்கான ப்ராடக்ட், அதற்கான குழந்தை கிடைக்காமல் போக, ஒரு குழந்தையை அஜ்மல் கண்டுபிடிக்க, அந்த குழந்தையின் தாயிடம் அனுமதி வாங்க துரத்த, அவள் ஒரு ஆட்டோவில் அடிபட்டு மயக்கமாக, குழந்தை அஜ்மலிடம் இருக்க, திரும்ப போகும் போது குழந்தையின் அம்மா காணாமல் போயிருக்க, ப்ளாட் இறுகுகிறது. அதன் பிறகு நடக்கும் கூத்துக்கள், மிக இ...

சினிமா வியாபாரம் -6

Image
நான்கு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய, சக பதிவர்கள், வாசகர்களுக்கு, நன்றி.. நன்றி..நன்றியோ.. நன்றி.. எம்.ஜி.(Minimum Guarentee) மினிமம் கேரண்டி என்றால் குறைந்தபட்ச உத்திரவாதம் என்று வைத்து கொள்ளலாம். அதாவது குத்து மதிப்பாய் ஒரு படத்தை அதன் நடிகர், நடிகைகள், மற்றும் டெக்னீஷியன்களை வைத்து, இதற்கு முன் அந்த நடிகர், நடிகை நடித்த படஙக்ளின் வசூல் போன்ற எல்லாவற்றையும் கணக்கிட்டு, இந்த படம் இவ்வளவு வசூல் செய்யும் என்ற அனுமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விலை பேசுவது. நாங்கள் துள்ளுவதோ இளமை என்கிற படத்தை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் சென்னை மாநகர உரிமைக்கு ஐந்து லட்சம் எம்.ஜி. கேட்டார்கள், நாங்களோ அவுட்ரைட்டாக கேட்டோம். அப்படத்தை எம்.ஜியில் எடுத்திருந்தால். படத்தின் வசூல் ஐந்து லட்சம் வரும் வரை நாம் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான பங்கு தொகையும் தர தேவையில்லை. அதே நேரம் அப்படம் ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டால் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தப்படி வசூலை பிரித்து கொள்வார்கள். ஒரு வேளை அப்படம் ஐந்து லட்சம் வசூல் வரவில்லை என்றால் தயாரிப்பாளரை எந்த விதத்தி...

District-9 (2009)

Image
டிவிடியை சும்மா போட்டு பிரிண்ட் செக் செய்வோம் என்று போட்ட அடுத்த செகண்ட் என்னையும் அறியாமல் படத்துக்குள் இழுத்து சென்றது. District9. 1982 சவுத் ஆப்பிரிககவில் ஜோகன்ஸ்பெர்கில் ஒரு விண்கலம் வந்து நிற்கிறது.. அதனுள் தலைவனில்லாத, ஆயிரக்கணக்கான, ஏலியன்கள் உடல்நலமில்லாமலும், சத்தில்லமலும் மயங்கி போய் இருக்க, அவர்களை விண்கலத்திலிருந்து கீழிறக்கி, District 9 என்கிற ஒரு அகதிகள் முகாமை ஏற்படுத்துகிறது அரசு. சில ஆயிரங்களில் வந்த ஏலியன்கள் இப்போது பல்கி, பெருகி, 1.5 மில்லியனாக வளர்ந்து ஒரு ஏலியன் ஸ்லம்மாகவே இருக்கிறது MNU என்கிற மல்டி நேஷனல் யுனைட்டெட் என்கிற தனியா ராணுவ நிறுவனம்தான் இவர்களை கட்டுபடுத்துகிறது. ஒரு கட்டத்தில் இவர்களையெல்லாம் டிஸ்ட்ரிக்ட் 9லிருந்து புதிதாய் ஊருக்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ள டிஸ்ட்ரிக்ட் 10க்கு மாற்ற முடிவு செய்கிறது நிறுவனம்.. அதற்காக அவர்களுக்கு எவிக்‌ஷன் நோட்டீஸ் கொடுக்க போகும் ஒரு அதிகாரியாய் பொறுப்பேற்கிறார். விக்கூஸ்.. அங்கு ஒவ்வொருவருக்காக எவிக்‌ஷன் நோட்டீஸ் கொடுக்கப் போகும் போது பல ஏலியன்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதில் கிரிஸ்டோப்ர் என்று அழைக்கப்படும் ...

சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு

சென்னை பதிவர் சந்திப்பு நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது பதிவர்கள், உலக சினிமா கூட்டம், சிறுகதை பட்டறை என்று சந்தித்து கொண்டாலும், வழக்கமான சந்திப்பு நடந்து நாளாகிவிட்டதால், நிறைய புது பதிவர்கள் வந்திருப்பதாலும், பதிவர் சந்திப்பில் பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் நிறைய விஷயங்கள் இருப்பதாலும், பதிவர் சந்திப்பு நடத்துமாறு பல புதிய பதிவர்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க.. வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை.. சென்னை மெரினா பீச் காந்தி சிலை பின்புறம்(MERINA BEACH GANDHI STATUE BACK SIDE) மாலை 5-7.30 நமது சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது. புதிய பதிவர்கள்,பழம் பெரும் பதிவர்கள், மீடியம் பதிவர்கள் என்று அனைவரும் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். மேல் விபரஙக்ளுக்கு லக்கிலுக்9841354308 அதிஷா 9884881824 கேபிள் சங்கர் 9840332666 முரளி கண்ணன் 9444884964 நர்சிம் 9841888663 மணிஜி 9340089989 உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

மதுரை- தேனி – திரை விமர்சனம்

Image
மதுரையிலிருந்து தேனிக்கு செல்லும் பஸ்ஸில் நடக்கும் ஒரு நாள் கதை. அட போட வைக்கும் லைன் தான்.  வாத்யார் வேலை கிடைத்து தேனிக்கு முன் உள்ள ஒரு கிராமத்தில் வேலையில் சேருவதற்காக மதுரையிலிருந்து தேனிக்கு செல்கிறான் ஹீரோ. பஸ்ஸ்டாண்டில் ஹீரோயினை பஸ் ரிவர்ஸ் எடுக்கும் போது நடக்கவிருந்த விபத்திலிருந்து காப்பாற்றுகிறான். உடனே அவளிடம் மனதை பறிகொடுக்கிறான். பஸ் மதுரையிலிருந்து ஆண்டிப்பட்டி வழியாக, தேனி போவதற்குள் அவன், அவளிடம் காதலை சொன்னானா இல்லையா.. என்பது தான் படம். கதையின் லைன் சொல்லும் போது இண்ட்ரஸ்டாக இருந்தாலும், நிகழும் சம்பவஙக்ள் சுவாரஸ்யமாய் இல்லை. ஆனா.. ஊனா என்றால் காமெடி செய்கிறேன் என்று நெல்லை சிவா, முத்துக்காளை, படத்தில் வரும் ரஜினி ரசிக கண்டக்டர், என்று எல்லோரும் காமெடியாய் தான் செய்ய முயற்சிக்கிறார்கள் ஆனால் சிரிப்புதான் வர மாட்டேன் என்கிறது. ஹீரோவை, ஹீரோயின் காதலிக்க, அவனை புத்திசாலியாகவும், நல்லவனாகவும் காட்ட வைக்கப்பட்ட காட்சிகள், காமெடியின் உச்சம். ஒரு பெரிய ஊர் கூட்டம் பஸ்ஸை மரித்து குடிநீருக்காக போராட, யார் சொல்லியும் கேட்காதவர்கள், ஹீரோ வந்து ஒரு பத்து நிமிஷம் ப...

கண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.

Image
கண்ணுக்குள்ளே திரைப்படத்தின் இயக்குனர் திரு. லேனா மூவேந்தருடன் ஒரு பேட்டி.. உங்க படத்தை பற்றி சொல்லுங்க? ஒரு நல்ல படத்தை, வித்யாசமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை, மனதை வருடும் காட்சிகளோடு, எல்லாத்துக்கும் மேல ராஜா சாரோட இசையோடு கொடுத்திருக்கிறேன்ற, சந்தோஷத்தில இருக்கேன்.. வர்ற 25ஆம் தேதி ரிலீஸ்.. உங்க கதாநாயகனை பற்றி..? கதாநாயகனா கும்மாளம் படத்தில் நடிச்ச மிதுன் நடிச்சிருக்கார். இவரு கிட்ட முதல்ல கதை சொல்லப் போகும் போது, நான் சொன்ன முத விஷயம்.. “சார்.. படத்துல பஞ்ச் டையலாக் கிடையாது, பில்டப் கிடையாது.. ஃபைட் கிடையாது.. ஏன்.. படத்தோட ஆரம்பத்துல முத 20 நிமிஷம் உங்களுக்கு டயலாக்கே கிடையாது.” இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா. ஏற்கனவே ஒரு ஹீரோ கிட்ட நான் கதை சொன்ன போது இதெல்லாம் இல்லைன்னு சொன்னாரு.. அதனால் தான் முதல்லேயே உங்க கிட்ட சொல்றேன். என்றவுடன்.. பரவாயில்லை சொல்ல்லுங்கனு சொன்னாரு. கதை கேட்டவுடன், மிகவும் மகிழ்ந்து ஒப்பு கொண்டார். இந்த படம் மூலம் மிதுன் நிச்சயமாய் தமிழ் சினிமாவில் பேசப்படக்கூடிய நடிகராய் இருப்பார். உங்க கதாநாயகிகள்..? அனு என்கிற கேரள வரவு. மிகவும் குடும்ப பாங்கான, பக்கத்து வீ...

சொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்

Image
காதலுக்கு புது டெபனிஷன் கொடுத்திருக்கும் படம். காதல் ஒரு முறைதான் வரும், காதலுக்காக உயிரையே கொடுக்கணும், போன்ற விஷயங்களையே சொல்லி வந்த சினிமாக்களின் மத்தியில், காதல் என்பது ஒரு நல்ல உணர்வு, இன்று ஒரு பெண்ணை பார்க்கிறோம், அது தோல்வியாகிவிட்டால் நாளை வேறு ஒரு பெண்ணை பார்த்தால் காதலிக்க மாட்டோமா..? அது தானே நிதர்சனமான வாழ்க்கை என்பதை இந்த கால இளைஞர்களின் பார்வையில் ஒரு யூத் பெஸ்டிவலே நடத்தியிருக்கிறார் இயக்குனர். நவ்தீப், அபினவ், சத்யன், மற்றும் சில நண்பர்கள் ஒன்றாய் கூடும் டீக்கடையின் எதிர்வீட்டில் பம்பாயிலிருந்து ஒரு பெண் வருகிறாள்., பார்த்தவுடன் சட்டென நவ்தீப்புடன் ஒட்டிக் கொள்கிறாள்.. சென்னையை சுற்றி காட்ட சொல்கிறாள், கனவில் கூட வந்தாய் என்கிறாள், அவளின் காதலை சொல்லும் நவ்தீபபை, நிராகரிக்கிறாள். தான அவ்விதமாய் பழகவில்லை.. ஒரு நண்பியாகத்தான் பழகினேன் என்று சொல்லி விலகுகிறாள். நவ்தீப்பும் காதலை மென்று முழுங்கி நிற்க, அடுத்து அடுத்து அவன் சந்திக்கும், பெண்கள் ஆளுக்கொரு காரணம் சொல்லி அவனை நிராகரிக்க, இப்படி போகும் வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு காதல் அவனுக்கு மல்லிகா கபூர் மூலம் அமைய வாழ்க்கை ...

உன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்

Image
என்னுடய விமர்சனங்களில் எ.வ.த.இ.மா. படம் என்று சில படங்களை சொல்லி எழுதியிருக்கிறேன். அதாவது எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று.. இப்போது வந்திருக்கிறது.. அப்படி எதிர்பார்த்த ஒரு தமிழ் படம்.. உன்னை போல் ஒருவன். வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு குடும்பஸ்தன். ஒரு சாதாரணன். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்கிறான், நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம். சமீப காலங்களில் படத்தில் வரும் காட்சிகளுக்கு கைதட்டல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதில் பல காட்சிகளுக்கு நாம் நம்மை மறந்து கைதட்டிவிடுவோம் அவ்வளவு ஷார்ப். இரா.முருகனின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், க...

சினிமா வியாபாரம் - 5

Image
பதிவுலக அண்ணன் அப்துல்லா பாடி வெளிவரும் ”சொல்ல சொல்ல இனிக்கும்” படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். சினிமா வியாபாரம் - அறிமுகம் சினிமா வியாபாரம் - 1 சினிமா வியாபாரம் - 2 சினிமா வியாபாரம் - 3 சினிமா வியாபாரம் - 4 திரைப்பட விநியோகம் படம் தயாரானவுடன் ப்ரிவியூ எனப்படும் வியாபார காட்சிகளை திரையிட தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்வார்கள், அதற்கு திரையுலகில் உள்ள முக்கிய விநியோகஸ்தர்கள் எல்லாரையும் அழைத்து தங்களது திரைப்படத்தை காண்பிப்பார்கள். படத்தை பார்க்கும் விநியோகஸ்தர்கள், அல்லது அவர்களது மீடியேட்டர்கள் எனப்படும் இடைநிலை தரகர்கள், படத்தின் விலையை அதில் நடித்த நடிகர், நடிகைகளை வைத்தோ, அல்லது இயக்குனர், மற்றும் டெக்னீஷியன்களின் தரத்தை வைத்தோ, இதற்கு முன்னால் அந்த நடிகரின், இயக்குனரின் படம் ஓடியதை வைத்தோ.. ஏரியா பிஸினெஸ் பேசுவார்கள். பெரும்பாலும் இவர்கள் செய்யும் முடிவுகள் முக்கால் வாசி நேரம் தவறாகவே போயிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் நம்புவார்கள். ஒரு காலத்தில் இவர்களின் அன்பு இம்சையால் படத்துக்கு சம்மந்தமேயில்லாமல் சில்க், அனுராதா, ஏன் ஜெயமாலினி ஆகியோரின் காபரே நடன் காட்...

இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..

Image
சமீப காலங்களில் எனக்குள் கவிதை எழுத வேண்டும் என்கிற ஆவேசம், உன்மத்தம் பிடித்து என்னை ஆட்டுகிறது.. சமூகத்தின் மேல் கோபம் உள்ளவனும், காதலிக்கிறவனும், காதலில் தோற்றவர்கள், தாடி வைத்தவர்கள், ஜோல்னா பை மாட்டியவர்கள் மட்டும்தான் கவிதை எழுதுவார்கள் என்று நினைத்திருந்தேன். கவிதை எழுத இதெல்லாம் தேவையில்லை பதிவிருந்தால் போதும் என்று.. இப்போது என்னை சுற்றி ஒரே கவிஞர்கள் மயம்தான். அதிலும் சரக்கடித்துவிட்டு பேச ஆரம்பித்தால் இந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா.., பேசுவதையே கவிதை மாதிரி ரண்டு, ரண்டு முறை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். சில சமயங்களில் இவர்கள் பேசும் கவிதைகளால், அடித்த சரக்கின் போதை இறங்கி போய்.. நான் மட்டும் தெளிவாய் வீட்டுக்கு போன கட்டாய தினங்கள் நிறைய.. சரி நாமும் கவிதை எழுத கத்துக்குவோம்னு நினைச்சு. சில பேர்கிட்ட கேட்டா, அது எல்லாம் சொல்லி கொடுத்து வராது, தானா வரும்.. ஆனா வராது..னாங்க.. என்ன எழவா போச்சுடான்னு குழம்பி போய், நம்ம உ.த. எழுதின கவிதைய படிச்சேன்.. ரொம்ப சின்னதா ஒரு கவிதை எழுதியிருந்தாரு.. யாரோ அவரோட நண்பர் ஒருத்தர் சரக்கடிச்சிட்டு வந்து படுத்த மேட்டர, உடனே நான் கவிஞர்கள் க...