Posts

Showing posts from October, 2009

கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Image
thi தன் அம்மா கம்பெனி ஆடிட்டருடன் ஓடி போய், அப்பா இறந்து கம்பெனியில் சேர்ம்ன் போஸ்டுக்கு நிற்க, அதே நேரத்தில் காதலியும் பரத்தை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள, மனம் குழம்பி, டிப்ரஸ்டான நிலையில் எல்லாவற்றையும், விட்டு சாகலாம் என்று ஏதோ ஒரு ரயிலில் ஏறும் பரத், லொட,லொட ஓட்டை வாய் தமன்னாவை பார்க்க, அட காதல் வரப்போகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தமன்னா தான் கெளதம் என்பவனை காதலிப்பதாகவும், ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்ல, பரத்தினால் தமன்னாவும் ரயிலை விட, அந்த ஒரு நாள் டிராவலில் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, நட்பாக , தமன்னா விட்டில் அவரை சந்தானத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்ய, வேறு வழியில்லாமல் அவரும் பரத்தும் வீட்டிலிருந்து ஓடிவிடுகிறார்கள். தமன்னா அவரின் காதலரை பார்க்க, பரத் மீண்டும் தன் பாதைக்கு. பிறகு என்ன? பரத் பெரிய கோடீஸ்வர பையன் என்பதை அவ்ர்கள் சொல்வதால் நம்ப வேண்டியிருக்கிறது. என்ன தான் மேக்கப், ஹேர்கட் என்று மெனக்கெட்டாலும் ஆறுமுகம் முகம் தான். அதிலும், மீண்டும் கம்பெனிக்கு வந்து அவர் பேசும் வசன காட்சி இருக்கிறதே. அய்யோ.. ...

This Is It – A Musical Ecstasy

Image
மைக்கேல் ஜாக்ஸன் இறப்பதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த This is it என்கிற கான்செர்ட்டுக்கான முன் நடந்த ஏற்பாடுகள், ரிகர்சல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு டாகு- மியூசிகல படமாய் வெளிவந்திருக்கிறது. வழக்கமாய் பேக் ஸ்டேஜ் விஷயங்களை பார்ப்பதற்கு எல்லோருக்குமே பிடிக்கும். அதிலும் பிரபலமான ஆட்களின் பேக் ஸ்டேஜ் விஷயஙக்ள் என்றால் நம்முடைய ஆர்வம் இன்னும் அதிகமாய் எகிறும். அப்படியிருக்க, எம்.ஜேவின் பேக் ஸ்டேஜ் ரிகர்சல்கள் என்றால் கேட்க வேண்டுமா..? அதிலும் அவருடய நடக்காத சோல்ட் அவுட் கான்செர்டுக்கான ரிகர்சல் என்றால் ..? உலகம் முழுக்க ரத்தத்தில் அட்ரிலின் எகிற ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர். அதில் நானும் ஒருவன். முதல் காட்சியில் அவருடன் பணியாற்றும் சிலருடய பேட்டியுடன் படம் ஆரம்பிக்கிறது. இளைஞர்கள், மிகவும் இளைஞர்கள், எம்.ஜேவுடன் பணியாற்றுவதே பெரிய பாக்கியமாய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஓவராய் சிரித்து, பேச முடியாமல் கண்களில் கண்ணீருடன் ததும்ப, This is it என்று டைட்டில் ஆரம்பிக்க உலகின் ஈடு இணையில்லா எண்டர்டெயினரின் படம் ஆரம்பிக்கிறது. தியேட்டர் எங்கும் உற்சாக கூச்சல்கள் தியேட்டர் கூர...

தியேட்டரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-2

Image
சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி போன்ற தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கிறது. இவை எல்லாமே சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் ஒற்றை தியேட்டர்களே. இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்? என்பதுகளில் திரையரங்குகளை தவிர வேறு பொழுது போக்கே இல்லை என்ற நிலையில் வந்த தொலைக்காட்சி பெட்டி தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே ஒரு ஆட்டு ஆட்டியது என்றால் அது மிகையில்லை.  வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நேரத்திற்காகவே சாயங்காலமே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகிவிடுவார்கள். திரையரங்குகளீல் மாலை காட்சி காற்றாட ஆரம்பித்தது இந்த காலங்களில் தான். கூடவே ஞாயிற்று கிழமை சினிமா வேறு மக்க...

கொத்து பரோட்டா –26/10/09

Image
சில பேர் தாங்கள் செய்தது தவறு என்று “போதையின்” உச்சத்தில் இருக்கும் போது, தலையில் அடித்து கொண்டு ஒத்து கொண்டதும், அதற்கு சாட்சியாய் தான் போதையின் உச்சத்தில் இருந்ததாய் நிருபிக்க, அங்கிருந்த மருத்துவருக்காக, பின்னூட்ட பெட்டியை திறந்திருப்பதும்,  அடிபட்டவர் நடந்த சம்பவத்தை எழுதிவிட்டார் என்பதும், மேலும் தான் குடித்திருந்ததை நிருபிக்க, வந்திருந்த நண்பர்கள் கூட மதுவருந்தி போதையில் இருந்ததாய் ஆளுக்கொரு ஒரு பீர் அடித்திருந்து, அதுவும் இந்த பிரச்சனையை கேள்விபட்டு டென்ஷனாகி, மூச்சா போய்விட்டு வந்தவர்களை பார்த்து போதையில் இருந்தார்கள் என்று சொன்னது எவ்வளவு மிகைபடுத்தல் என்பதை, கூட இருந்து பீரடித்து, மூச்சா போனவர்கள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட என் பாக்ஸ் திறந்தே இருக்கும். ******************************************************************  செவிக்கினிமை ரொம்ப நாளாகிவிட்டது இந்த பாட்டை கேட்டு, ரட்சகன் படத்தில் நாகார்ஜுன்,  சுஷ்மித சென்னை அலேக்காய் தூக்கிய படி பல மாடி கட்டிடங்களில் படியில் ஏறி போவதாய் காட்சி, “கனவா.. இல்லை காற்றா.?” என்ற ஸ்ரீனிவாஸ் உருகியிருக்கும் அந்த ப...

All The Best- Hindi Film Review

Image
பர்தீனும், அஜெயும், நண்பர்கள், பர்தீனின் பணக்கார அண்ணன் சஞ்செய் தத் மாதம் தரும் லட்ச ரூபாய் பாக்கெட் மணியை வைத்து காலத்தை ஓட்டுபவன். அஜெயும், அவனது மனைவி பிபாஷாவும் ஒரு நொடித்து போன ஸ்டாப் பட்டனை அழுத்தினால் நிற்காத டிரெட்மில்லை வைத்து ஜிம் நடத்தி நொந்து போனவர்கள். பர்தீனும் அவனது காதலியும் கல்யாணம் செய்து கொண்டுவிட்டதாய் அவனது அண்ணனிடம் சொல்லியிருக்க, அதே நேரத்தில் செலவுக்காக லோக்கல தாதா ஜானிலீவரிடம் கடன் வாங்கியிருக்க, அந்த கடனை அடைக்க, பங்களா வீட்டை வாடகைக்கு விட லாட்டரியில் விழுந்த காசினால் பணக்காரனான ஒருவனுக்கு வாடகைக்கு விட அட்வான்ஸ் வாங்கி அந்த பணததை தாதாவிடம் கொடுத்துவிட, அந்நேரத்தில் பர்தினின் அண்ணன், ப்ளைட் கேன்ச்லாகி வெளிநாட்டிலிருந்து வந்து கோவா எர்போர்டிலிருந்து பேச, குழப்பத்துடன் அவரை வீட்டுக்கு கூட்டி வர, வீட்டில் இருக்கும் அஜயின் மனைவி பிபாஷாவை பர்தீனின் மனைவி என்று சஞ்செய் நினைப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது குழப்பம், ஒரே கலாட்டா தான் படம் நெடுக டயலாக் காமெடிதான். பர்தீனை விட அஜய் தூள் பரத்தியிருக்கிறார். க்ளாஸ் டம்பளரில் ஸ்பூனினால் அடித்து சங்கேதமாய் பேசும் தாதா ஜா...

தியேடடரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-1

Image
திபாவளி,பொங்கல் என்ற பண்டிகை நாட்கள் வந்தால்  பண்டிகையை அடுத்து ஞாபகத்துக்கு வருவது சினிமாதான். அதிலும் முதல் நாள் முதல் காட்சி பார்பது என்றால் அதில் இருக்கும் கிக்கே தனிதான் இளைஞர்களுக்கு எந்த காலத்திலும். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தியேட்டர் ராசியாய் இருந்த காலம் இருக்கிறது. சென்னையில் சித்ரா என்று ஒரு திரையரங்கம் இருந்தது அங்கே வழக்கமாய் எம்.ஜி.ஆர்.படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அங்கே வெளியிட்டால் நிச்சய வெற்றி என்கிற நம்பிக்கை ரசிகர்களிடையே இருந்தது.  சிவாஜி படங்கள், பிளாசாவிலோ, அல்லது கொஞ்ச காலங்களுக்கு பிறகு சாந்தியிலேயோ வெளியாகும். இப்படி ஒவ்வொரு தியேட்டருக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. சினிமாவின் மீதுள்ள ஆர்வம் மக்களிடையே அதிகம் ஆக, ஆக, தியேட்டரில் ஆட்கள் உட்கார்ந்து பார்க்கும் இருக்கைகள் அதிகமாகி கொண்டே வர ஆரம்பித்தது. மதுரை தங்கம், திருச்சி, கலையரங்கம் போன்ற அரங்கங்கள் தமிழ்நாட்டிலேயே அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளாய் இன்று வரை இருக்கிறது.. மதுரை தங்கம் தெற்கு ஆசியாவில் பெரிய தியேட்டராய் இருந்தது. இப்போது ...

Blue – Hindi Film Review

Image
நான்கரை லட்சம் ஹிட்ஸ் தந்த பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி...   ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு நம்மூர்ல சொல்வாங்க. ஆனா இவங்க அளக்காம கடல்ல 95 கோடிய போட்டுருக்காங்க. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அக்‌ஷய்குமார், சஞ்செய்தத், லாராதத்தா, காத்ரீனா கைஃப், என்ற நட்சத்திர பட்டாளம், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி என்ற டெக்னீஷியன்கள் பட்டாளம், என்று எதிர்பார்ப்பு எகிற வைத்த படம். 1949ல் Lady of Blue என்கிற கப்பல் இந்தியாவுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷஙக்ளை ஏற்றி கொண்டுவந்த கப்பல் பஹாமாஸ் தீவில் மூழ்கிவிட,  அதை எடுக்க போகும் மூவர் பற்றிய கதை. சஞ்செய், அக்‌ஷ்யின் கப்பல் கம்பெனியில் வேலை செய்பவன், நேர்மையானவன், ஆழ்கடல் நீச்சலில் ஜித்தன், தன் முந்தய அனுபவத்தினால் அந்த பொக்கிஷத்தை அடைய ஆசைபடாதவன் அக்‌ஷய் பணக்காரன், எப்போதும் வெற்றியை மட்டுமே பேசுபவன், ஸ்திரிலோலன், என்றாவது ஒரு நாள் அந்த பொக்கிஷத்தை அடைய சஞ்செய்யை உசுப்பேற்றி கொண்டே இருப்பவன். சாம் அவனுடய வீக்னெஸ் பைக், மற்றும் பைக் ரேஸ்.. ஒரு பிரச்சனையில் தாதா ராகுலி...

கொத்து பரோட்டா –19/10/09

Image
இந்த வருஷம் தீபாவளி அவ்வளவு சுரத்தாவே இல்லைன்னு தோணுது. ரிஸெஷன் கூட ஒரு காரண்ம்னு சொல்றாங்க. ரிலீஸான படங்களும் பெரிசா இல்லை. மக்கள் கையில காசு அவ்வளவா இல்லை. அதனால பட்டாசு, மற்றும் பல விற்பனைகள் கூட மந்தமாயிருந்த நிலையில. ஒரு இடத்தில மட்டும் மந்தமேயில்லாம, கொஞ்சம் கூட சுணக்கமில்லாம இருந்தது எதுன்னா அது டாஸ்மாக்ல மட்டும் தான் மப்பும் மத்தாப்புமா.. சாரி மந்தாரமா வியாபாரம் நல்லா நடந்திச்சி.. தமிழ் நாடு முழுக்க 240 கோடி வசூலாம்.  ஹாப்பி தீபாவளி. அது எல்லாம் சரி மப்புனா புரியுது.. மந்தாரம்னா..? $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ விரைவில் கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப் போகிறது. மிக மட்டமான தியேட்டர் பராமரிப்பு, டி.டி.எஸ், க்யூப் டிஜிட்டல் புரொஷக்‌ஷன், நல்ல சீட்டுகள், முழு ஏசி  போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு கொடுக்காமல், அநியாய கொள்ளையாய் 100,80,70 என்று புதிய படங்களுக்கு டிக்கெட் கொடுத்து கொள்ளையடிக்கும் திரையரங்குக்கு அந்த ஏரியாவை சுற்றியுள்ள, அண்ணாநகர், மதுரவாயல், அமிஞ்சிக்கரை போன்ற இடங்களில் ...

ஆதவன் – திரைவிமர்சனம்

Image
தசாவதாரத்துக்கு பிறகு, கே.எஸ். ரவிகுமார், அயனுக்கு பிறகு சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ் காம்பினேஷன், குருவியின் தோல்விக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் படம் பார்க்க உட்கார்ந்தால், நீங்கள் இதுவரை பார்த்த தமிழ் சினிமாக்களை அத்தனையையும் உங்கள் ஞாபக அடுக்குகளிலிருந்து ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வர வைக்கும் படம். காசு கொடுத்தால் கொலை செய்யும் ஆதவன். அல்வா சாப்பிடுவது போல் கொலை செய்பவன். ஜட்ஜை கொலை செய்யும் முயற்சியில் ஃபெயிலியர் ஆகிவிட, அதனால் பணம் கொடுத்த ஆள் இவர்களை மிரட்ட, இன்னும் பத்து நாட்களில் அவனை கொல்லாமல் விட மாட்டேன் என்று அவர்களின் வீட்டோடு வடிவேலுவை மிரட்டி உள்ளே போக, அதற்கு அப்புறம் என்ன நடக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு தெரியாதது இல்லை. பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் அடுத்த காட்சி என்னவென்று. அவ்வள்வு அற்புதமான திரைக்கதை. ரவிகுமார் ஏற்கனவே மின்சார கண்ணாவில் ஒரு கும்பலை வைத்து செய்த விஷயத்தை மீண்டும் தூசு தட்டி மேலும் குடும்ப கும்பலோடு கொடுக்க நினைத்து இருக்கிறார். சேம் ப்ளட். வடிவேலு, சூர்யா காம்பினேஷனில் படம் பூராவும் வருகிற நகைச்சுவை க...

பேராண்மை – திரைவிமர்சனம்

Image
வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் கேபிள் சங்கரின் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் கோட்டாவில் படித்து பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீஸராய் உயர்ந்து நிற்கும் துருவனும், ஐந்து என்.சி.சி கேடட் பெண்களும் சேர்ந்து நம் நாட்டின் பசுமை புரட்சிக்காக அரசு ஏவ இருகும் ராக்கெட்டை அழிக்க வரும் வெளிநாட்டு கூலிப்படையின் முயற்சியை தடுப்பதே கதை.  மேம்போக்காக பார்த்தால் ஏதோ பாண்டஸி வகையை போல தெரிந்தாலும் படம் முழுக்க இயக்குனரின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு.. ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. என்.சி.சி பயிற்சிக்காக வரும் ஒரு காலேஜ் குரூப் வந்து சேர, அங்கே பயிற்சியாளராக வருகிறார் துருவன் எனும் ஆபீஸர். அவர் பழங்குடியினர் கோட்டாவில் சீட் வாங்கி, படித்து முன்னேறியவர்.  ஊருக்குள் வரும் முன்னரே பழங்குடியினராக பார்த்த ஒருவனை தங்களது  பயிற்சியாளராய் ஏற்க மறுக்கும் ரவுடி பெண்களான ஐந்து பேர். அவரை துரத்த நினைத்து இந்த மாணவிகள் செய்யும் முயற்சிகள் எல்லாம் பாதி வெற்றியும், தோல்வியுமாய் முடிய, அதில் ஒரு பெண் ஒரு தலையாய் அவரை காதலிக்கவே ஆரம்பிக்கிறார்.   ஒரு கட்டத்தில் கடைசி நாளாக இது வரை மக்கள் ந...

நிதர்சன கதைகள்-12- நேற்று வரை

Image
எல்லோரும் இப்படித்தான் பார்ப்பார்களா..? என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. அப்படி எழுந்தாலும் ரோட்டில் இறங்கியவுடன், கண்களும் மனதும் அதை தேடி அலையத்தான் செய்தது நேற்றுவரை. நான் செய்யும் காரியஙக்ள் எனக்கு கேவலமானதாகவோ, அவமானகரமானதாகவோ தெரிந்ததில்லை நேற்றுவரை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாய், இறுக்கமாய், உள்ளங்கை அளவாய், அளவுக்கதிகமாய், அபரிமிதமாய், டென்னிஸ்பந்தாய், தளர்வாய், சரிந்து சாய்ந்தாய், இருக்கா இல்லையா என்று கண்ணாமூச்சி காட்டு சிலதுமாய், டென்னிஸ் கோர்ட்டாய், அவைகளை பார்த்ததும் கிடைக்கும் போதையின் கிறக்கத்தை வேறு ஏதாவது தந்திருக்குமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன் நேற்று வரை. பல சமயங்களில் என்னுள் ஏற்படும் கிளர்ச்சிகளுக்கு வடிகாலாய் அவைகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்று.. என்று பார்தவைகளை வரிசை படுத்தியிருக்கிறேன்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளர்ச்சியின் உ தரும் வித்யாச உச்சம். இவைகள் எல்லாமே எனக்கு அஃறிணைகளாகவே தேன்றியது  நேற்று வரை. இரவுகளின் ஓட்டத்தில், அங்கும் இங்கும் அலையும் வெளிச்சத்தின் ஊடே தெரியும், அந்த வெளிச்சத்திலிருந்து ...

Acid Factory - Film Review

Image
ஒருவன் திடீரென கண்முழித்து பார்க்கிறான். தான் ஒரு பாழடைந்த பேக்டரியில் இருப்பதை உணர்கிறான். தன்னை பற்றி ஏதும் அவனுக்கு தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் ஒருவன் கைவிலங்கிட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, இன்னொருவன் ஒரு சேரில் கட்டப்பட்டு, மயக்கமாக இருக்க, இன்னொருவன் தரையில் மயங்கி இருக்கிறான். ஒவ்வொருவராக மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் யாருக்கும் அவர்களை பற்றிய ஞாபகங்கள் இல்லை. தாங்கள் யார் எதற்காக வந்தோம், தங்களது பெயர் என்ன என்பது கூட தெரியாமல் இருக்க, அப்போது ஒரு போன் வருகிறது அங்கிருக்கும் ஒருவனை கொல்ல வேண்டும் என்று நான்கு ஐந்து பேர்களின் பெயரை ஒருவன் குறிப்பிட, குத்துமதிப்பாக அவனுடன் பேசி, இவர்களுள் யார், யாரை கொல்ல போகிறார்கள் என்று பயத்தினூடே, அலைய, திடீரென இன்னொருவன் வர, அவனை தொடர்ந்து ஒரு பெண்ணும் அங்கே தோன்ற, அவளுக்கும் அதே பிரச்சனை தான் யார் என்பதுதான். அவர்களூடய ஞாபக மறதிக்கு காரணம் அவர்கள் இருக்கும் ஆசிட் பாக்டரியில் உள்ள பெண்டேன் என்கிற ஆசிட்டினால் என்பதை அறிகிறார்கள். இதற்கு நடுவில் கதையின் போக்கில் முன்னும் பின்னும் ஓடுகிறது அதில் படத்தில் காட்டப்படும...

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09

Image
1. நினைத்தாலே இனிக்கும் வழக்கம போல் சன்பிக்ஸர்ஸின் அதிரடி மார்கெட்டிங்கில் கவனிக்கப்பட்ட படம். மிக சுமாரான ஓப்பனிங். படம்மும் பெரிதாய் ஏதும் அதிரடி செய்யவில்லைன் என்றாலும் சென்னை போனற தமிழகத்தின் முக்கிய நகரஙக்ளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூல் என்றே சொல்கிறார்கள். 2. மதுரை  சம்பவம் ஹரிகுமார் நடித்து?? வெளிவந்த இரண்டாவது படம். ராம.நாராயணன் வாங்கி வெளீயிட்டதால் கலைஞர் டிவியின் திரும்ப திரும்ப,  ட்ரைலர் காட்டப்பட்ட படம். மிக மிக சுமாரான ஓப்பனிங். ஹரிகுமாரின் நடிப்பை தவிர படம் மோசமில்லை என்றாலும் அவரே மைன்ஸ் ஆகிபோனதால் வசூல் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. 3. ஈரம் ரியாலிட்டி, லைவ் மேக்கிங் என்று தில்லாலங்கடி அடித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஹாரர்/ த்ரில்லர் வகையில் வந்து கலக்கி கொண்டிருக்கும் படம். 4. உன்னை போல் ஒருவன் இணையத்தில் அந்த இசம், இந்த இசம், இந்துத்துவா, அவா, இவா, என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தாலும், இந்த மாதத்திற்கான சூப்பர் ஹிட் என்றால் மிகையாகாது. மிக பெரிய வசூலை படம் எடுத்து கொண்டிருக்கிறது.  தமிழ் சினிமாவிற்கு தேவையான...