Posts

Showing posts from November, 2009

கொத்து பரோட்டா –30/11/09

Image
துபாய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்த முறை. மூன்று தமிழ் படங்களை திரையிட போவதாய் சொன்னார்கள். ஒன்று அவள் பெயர் தமிழரசி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம், இன்னொரு படம் ஷங்கர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் “ரெட்டை சுழி”யும், இன்னொரு படம் அமீரின் யோகியும் திரையிடபடுவதாய் சொன்னார்கள். யோகி படம் ஆப்பிரிகக் படமான டிசோஸ்டியின் காப்பி என்று நிருபர்கள் கேட்டபோது அமீர் அந்த படத்தை பார்ககவேயில்லை என்று அப்படி காப்பி அடித்திருந்தால் துபாய் பெஸ்டிவலுக்கு செலக்ட் செய்திருப்பார்களா.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு அதே போல ஒரு கேள்வி எழுகிறது. நிச்சயம் யோகி ப்டத்துக்கு விருது ஏதாவது கொடுத்தால் துபாய் பிலிம் பெஸ்டிவலே ஒரு டுபாக்கூர் பெஸ்டிவல்தானோ என்று கேள்வி எழும்பவே செய்யும். இந்திய சினிமாவில், இந்திக்கு பிற்கு தமிழும், தெலுங்கும் தான் முண்ணனியில் உள்ள துறைகள் எனவே அவற்றை தங்கள் பக்கம் சேர்த்து பெஸ்டிவலுக்கு கலை கட்ட பிரபல இயக்குனர்கள் இயக்கும் படத்தை சேர்த்து மார்கெட்டிங் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. &&&&&&&&&...

நான் அவன் இல்லை-2- திரை விமர்சனம்

Image
அதே ஜீவன், அதே இயக்குனர் செல்வா, அதே கதை, அதே தயாரிப்பாளர், வேறு ஒரு செட் ஹீரோயின்கள் என்று மீண்டும் அதே படத்தை கொடுத்திருக்கிறார்கள் முதல் பாகத்தில் ஏற்கனவே ஏதோ வெளிநாட்டில் தப்பித்து இருப்பதாகவும், மீண்டும் ஒரு பெண்ணை கரெக்ட் செய்யும் காட்சியுடன் முடிந்த இடத்திலிருந்து, ஆர்ம்பிக்கிறது படம். சுவிசர்லாந்தோ என்னவோ ஒரு ஊரில் ஒரு பெரிய திருடி சாமியாரிணியாக மாறி தன்னுடய கடவுள் என்று ஜீவனின் போட்டோ பேப்பரில் வெளிவர, அதை பார்த்த ஒரு தெலுங்கு காரப் பெண், ஒரு அல்ட்ரா மார்டன் திருடி, நடிகை லஷ்மிராய் என்று எல்லோரும் அதை பார்த்து அவனை தேடி சாமியாரிணியை அணுக, இன்னொரு பக்கம் மொட்டை அடித்த ஜீவன் சங்கீதாவின் பின்னால் அலைய, காலை இழுத்து, இழுத்து, நடக்கும், திக்கி, திக்கி பேசும் சங்கீதாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்க, அவருக்கு ஒரு ப்ளாஷ் பேக், அவருக்காக உதவ நினைக்கும் ஜீவன், ஏற்கனவே முதல் பாகத்தில் வந்தது போலவே டெம்ப்ளேட் திரைக்கதையில் நடு, நடுவே சங்கீதாவின் கதை ஓடுவதை தவிர பெரிசசாய் ஒன்றுமில்லை. அல்ட்ரா மார்டன் பெண் ஏற்கனவே கல்யாணமான இந்திய கணவர்களை வலையில் விழ வைத்து, அவனிடமிருந்து பணம்...

Tsotsi (எ) யோகி – திரை விமர்சனம்

Image
Tsosti சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஸ்லமில் இருக்கும் அநாதை டீன் ஏஜர். சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டு முட்டி மோதி இந்த ஸ்லம்மில் செட்டிலானவன். அவனும், அவனுடய கூட்டாளிகளும் வழக்கமாய் இம்மாதிரியான சிறுவர்கள் ஈடுபடும், கொள்ளையில் ஈடுபட்டு பணத்தை திருடி குடித்தும், பெண்களுடனுமாய் அலைய, ஒரு நாள் ஒரு கொள்ளையை நடந்த்திவிட்டு ஓடி வரும் போது ஒரு காரை திருட எத்தனிக்க, அதை தடுக்கும் பெண்ணை சுட்டுவிட்டு, காரை திருடிக் கொண்டுவர, கொஞ்சம் தூரம் ஓட்டி வந்த பிறகு பின்னால் சத்தம் வர, பார்த்தால் ஒரு கைக்குழந்தை, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு போக மனமில்லாமல் குழந்தையை ஒரு பேப்பர் பேக்கில் போட்டுக் கொண்டு தன் வீட்டில் வைத்து பராமரிக்க ஆரம்பிக்க,ஒரு கட்டத்தில் குழந்தையால் அவனுடய வாழ்கையில் மாற்றம் ஏற்பட, அந்த குழந்தையை ஒரு கட்டத்தில் அதன் தாயிடமே கொண்டு போய் விட போகும் போது அவனை போலீஸ் கொன்று விடுகிறது. மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் யோகி படத்தில் வரிசைக்கிரமமாய் அச்சு அசலாய் இருக்கிறது என்ன டீன் ஏஜ் பசஙக்ளுக்கு பதிலாய் நாற்பது வய்து யூத்துகள். அவர்கள் ஸ்லம்மில் சுற்றும் காட்சிகள், மற்றும்...

பி.பி-10

நண்பர் முரளிகுமார் பத்மநாபன் என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். பிடிச்ச பத்து, பிடிக்காத பத்து. கொஞ்சம் இக்கட்டான விஷயமா இருந்தாலும் எழுதிட்டேன். இந்தப் பதிவோட விதிகள்: 1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். 2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம் 3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம். 4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம். 5. இந்த விதிமுறை என்னை தொடருக்கு அழைத்த பரிசலின் எக்ஸ்ட்ரா ஒரு விதிமுறை, இது தொடருக்கு இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டுமென்பதால் நானும் அதை ஆமோதிக்கிறேன்.இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும். மேலுள்ள விதிகளை சில இடங்களில் மீறியிருக்கேன். விதின்னாலே மீறுவதுதானே விதி..!!!!! 1.அரசியல்வாதி பிடித்தவர் : யாருமில்லை.. எல்லாருமே திருட்டு …..பசங் க பிடிக்காதவர்: முக்கியமா ராமதாஸ் 2. நடிகர் பி...

என் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்

Image
“படத்துல கடைசில ஒரு டான்ஸ் பாட்டு வருது பாருப்பா.. ஆது செம போர்.. ஸ்டெரெயிட்டா ஃபைட் போட்டிருந்தா நல்லாருந்திருக்கும்” என்று அப்பாவை பார்த்தேன். அவர் சைக்கிளை தள்ளிக் கொண்டே என்னை பார்த்து சிரித்தார். “உனக்கு படத்தில என்ன பிடிச்சது.?” “எனக்கு கமல், ஸ்ரீதேவி  பிடிச்சது, அந்த ப்ளைட் பாட்டு பிடிச்சது.. சண்டை பிடிச்சது” என்றேன். “உனக்கு பிடிச்சது மாதிரி பெரியவங்களுக்கு பிடிக்கணுமில்ல.. சினிமா உனக்கு மட்டும் இல்ல.. எல்லாருக்கும் அதனால தான் அந்த டான்ஸ்” என்று ஜெயமாலினியின் டான்ஸுக்கு விளக்கம் கொடுத்தபடி எனக்கு சினிமா சொல்லிக் கொடுத்தார்  அப்பா. வேகமாய் நடந்தோம் வீட்டிற்கு. அம்மா ஆபீஸிலிருந்து வருவதற்குள் போக வேண்டும். பத்தாவது பைனல் பரீட்சையின் கடைசி பரிட்சைக்கு இடையே இரண்டும்  நாள் விடுமுறை இருக்க, ரொம்ப நாளாய் நான் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த குரு திரைப்படம் அருகில் உள்ள தியேட்டரில் ஓட, ஒரு வாரம் மட்டுமே என்று போஸ்டரில் போட்டது வேறு என்னுள் உளப்பி கொண்டேயிருக்க, என் உளப்பல் தாங்காமல் என்னை தியேட்டருக்கு அம்மாவுக்கு தெரியாமல் கூட்டி போய் விட்டு வரு...

Kurbaan – Hindi Film Review

Image
முழுக்க, முழுக்க ஹாலிவுட் பாணி பாதிப்பில் எடுத்திருகிறார்கள். நடிகர்கள் மட்டும் ஹிந்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  சாயிப் ஒரு பி.எச்டி. லெக்சரர், அவரும் கரீனாவும் ஒரே காலேஜில் ப்ரொபஸராய் வேலையில் இருக்க, காதல் வசப்படுகிறார்கள். வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த சமயத்தில் கரினாவுக்கு நியூயார்க்கின் ஒரு யூனிவர்சிட்டியில் வேலை வாய்ப்பு வர, அவருக்காக தன் வேலையை துறந்து கரினாவுடன் அமெரிக்காவுக்கு போகிறார் சாயிப். வேலைக்கு போய் சேர்ந்ததும், அங்கேயே இந்தியர்கள் வசிக்கும் ஏரியாவில் போய் ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு செட்டில் ஆக, பக்கத்திலிருக்கும் ஓம்பூரியின் குடும்பத்திலிருந்து, கரினாவுக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஓம்பூரியின் வீட்டில் இருக்கும் மருமகள் ஒருத்தி தன்னை காப்பாற்றும் படி சொல்ல, அவளின் கணவன் அடிப்பதை பார்த்த கரீனா அவள் கொடுத்த ஒரு இந்திய முஸ்லீம் இளைஞன் வேலை செய்யும் நியூஸ் சேனலுக்கு போகிறாள்.  அடுத்த நாளிலிருந்து அவளை காணாமல் இருக்க, அவளை தேடி வீட்டிற்குள் திருட்டுத்தனமாய் நுழைய, அங்கே அவள் காணும் காட்சி, அதிர்ச்சியின் உச்சம்,  அவளின் கணவன...

கொத்து பரோட்டா –23/11/09

Image
திடீர் பதிவர் சந்திப்பு சனிக்கிழமை மாலை ஏற்பாடாகியிருந்தது, என்னால் சரியான நேரத்தில் போக முடியவில்லை. கடைசியாய் டீகடை நேரத்தில் தான் எல்லோரையும் சந்திக்க முடிந்தது. வநத விருந்தினர் ஒரு தீவிர இலக்கியவாதியாக இருந்ததால் எல்லோரும் கவிதைகளை பற்றியே பேசிக் கொண்டிருக்க, எனக்கு ஏதும் புரியாமல் பக்கத்தில் இருந்த பைத்தியக்காரனிடம், ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப். அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..? @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ செவிக்கினிமை ஹிந்தி சீனிகம் படத்திற்கு பிறகு இளையராஜாவின் இந்தி படம் “பா” ஏற்கனவே ஹிட் கொடுத்த டீம், பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை களன் என்று இருந்தாலும் நான் மிகவும் எதிர்பார்த்தது ராஜாவின் இசை, பழைய பாடல்களின் அணிவகுப்பு என்பது நம்க்கு வேண்டுமானால் ஏமாற்றமாய் இருக்கலாம். மனுஷன் ஆர்கெஸ்ட்ரேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார். அதிலும் கும்சும் என்றா பாட்டில் அவர் செய்திருக்கு...

அதே நேரம் அதே இடம்- திரை விமர்சனம்

Image
சென்னையில் தீடீர் பதிவர் சந்திப்பு தமிழில் முக்கியமான இளம் கவிஞர் வா மணிகண்டன். பேசலாம் என்ற வலைப்பதிவில் எழுதிவருகிறார். உயிர்மை வெளியீடாக கண்ணாடியில் நகரும் வெயில் என்ற தொகுதி வந்திருக்கிறது. இவர் நாளை சென்னையில் இருக்கிறார். அதனால் ஒரு பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இடம் வழக்கம்போல் கடற்கரை காந்தி சிலைக்குப் பின்புறம்தான். மாலை 5.30 மணிக்குச் சந்திப்பு துவங்குகிறது. வாய்ப்புள்ள நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். சந்திப்பு நாள் : 21.11.2009 இடம் : சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம் நேரம் : மாலை 5.30 மணி முதல் சந்திப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு : யெஸ்.பாலபாரதி - 9940203132 நர்சிம் - 9841888663 கேபிள் சங்கர் - 9840332666 யுவகிருஷ்ணா & அதிஷா - 9884881824 @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ பல படங்களின் கதை ரொம்பவே சிம்பிளாய் இருக்கும் ஆனால் அதை சொல்லும் விதத்தில்தான் படத்தின் வெற்றி தோல்வி அமையும், அதே போல் இந்த படத்தின் கதையும், தன்னை காதலித்துவிட்டு, வேறு ஒருவனை வசதி வாய்ப்புக்காக திருமணம் செய்த ஒருத்தியை என்ன செய்கிறான் காதலன் என்பதுதா...

காளிதாஸ்

Image
காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார். காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிரு...

காக்கை

இம்மாதிரி விஷயங்களை யாராவது சொல்லும் போது பெரிசாய் முக்யத்துவம் கொடுத்ததில்லை. மிகைப்படுத்தி சொல்வதாய்தான் தோன்றும் இறந்தவர்களின் மேல் உள்ள பாசத்தின் காரணமாக, அவர்கள் உணர்ச்சி பெருக்கில் சொல்வது என்றுதான் நினைத்திருந்தேன் இரண்டு நாள் முன்பு வரை. அப்பா இறந்து மூன்றாவது நாள் காலையில் காலையில் டிபன் சாப்பிட உட்காரும் முன் என் மனைவி என் அப்பாவுக்காக ஏற்றி வைத்திருந்த விளக்கின் முன் காப்பியும், ஒரு ப்ளேட்டில் தோசையும் வைத்துவிட்டு எனக்கு தோசை வைத்தாள். அப்போது வீட்டின் வாசல் கதவை தடாலென திறந்து கொண்டு, பக்கத்து வீட்டு குழந்தை சுமார் ஒன்னறை வயதிருக்கும், ஓடி வர பின்னாலேயே, அவனுடய அம்மா ஓடிவர,  ஓடிவந்த குழந்தை என்னை பார்த்து மழலையாய் தோசை என்று கை நீட்டி கேட்டது. நான் என் ப்ளேட்டை எடுத்து அப்படியே கொடுத்தேன், அவனின் அம்மா, “அய்யோ வேணாங்க இப்பத்தான் பாலைக் குடிச்சிட்டு கீழே வச்சான்.. என்ன ஆச்சோ தெரியல குடுகுடுன்னு ஓடி வந்திட்டான்” என்றாள். என் மனைவிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ”பரவாயில்லைங்க அவன் சாப்பிடாட்டி கூட பரவாயில்லை விட்டுட்டு போங்க நான் கொண்டு விடறேன்” என்றதும் மறுப்பேத...

நெகிழ்வின் உச்சத்திலிருந்து….

போன ஜென்மத்தில்  நான் கடும் தவமோ, அல்லது ஏதோ ஒரு பெரிய புண்ணிய காரியமோ செய்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படியொரு நட்புகள் கிடைத்திருக்குமா.? உன் சந்தோஷம், என் சந்தோஷம் என்பது மட்டுமில்லாமல் உன் துக்கம், என் துக்கம் என  இரண்டு நாட்கள், எடுப்பதிலிருந்து, கரைப்பது வரை  கூடவே இருந்து, என் தந்தையை நல்லபடியாய் வழியனுப்பி வைத்த  பதிவுலக நண்பர்களுக்கு  நான் எப்படி நன்றி கூறுவது என்றே  தெரியவில்லை.  அப்படி நன்றி என்று ஒரு வார்த்தையில் முடிந்துவிடுகிற  விஷயமா அவர்கள் காட்டிய ஆறுதலும், அரவணைப்பும்.? உலகெங்குமிருந்து தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ் மூலமாய்  ஆறுதல் கூறிய முகமறியா நெஞ்சங்களுக்கு என்ன நான் என்ன செய்துவிட்டேன். என் மீது இவ்வளவு அன்பு பாராட்டுவதற்கு? உங்கள் ஆறுதலும், அரவணைப்பும் என்னை மேலும் நெகிழ செய்கிறது. நிச்சயம் என் தந்தை சந்தோஷப்பட்டிருப்பார்,  நிம்மதியாய் இறைவனடி சேர்ந்திருப்பார் என்னை  தனியாய் விட்டு போகவில்லை என்ற  திருப்தியுடன்.  என்ன செல்வது என்று தெரியாத, புரியாத உணர்ச்சி பெருக்கில்,  நெகிழ்ச்சியின் உச்...

2012-(2009)

Image
இன்று மாலை 5-7.30 பதிவர் சந்திப்பு.. ஐந்து லட்சம் ஹிட்ஸுகளை அள்ளி வழங்கிய சகபதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றிங்கோ... 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு கோல் மைனில் சாய்ராம் என்ற இந்தியர் ஒருவர் உலகம் அழியப்போகிறது என்பதை தன் நண்பரான ஒரு கருப்பரிடம் சொல்கிறார். அவர் உடனடியாய் ஆம்னிபஸ் பிடித்து ஊருக்கு போவது போல் அமெரிக்கா போய் உடனடியாய் விஷயத்தை சொல்ல, பேச ஆரம்பிக்கிறார்கள். இதற்கு நடுவில் சைனாவில் அணை கட்ட ஆள் எடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் உலகில் முக்கியமான ஆட்கள் எலலாம் செத்து போகிறார்கள்.  என்று ஆரம்பிக்கும் பில்டப்.. மெதுவாய் சூடேறி.. சூடேறி.. பூமி வெப்பமடைந்து வெடிக்க கிளம்புவது போல் கதையும் பரபரவென வெடிக்க ஆரம்பிக்க.. ஆரம்பிக்கிறது விஷுவல் ஆர்ப்பாட்டம். இம்மாதிரியான டிஸ்ஸாஸ்டர் படங்களுக்கு எல்லாம் ஒரு விதமான டெம்ப்ளேட் திரைககதை ரெடியாய் இருக்கும். எப்படியென்றால் ஹீரோ ஒரு சாதாரணன் ஆனால் புத்திசாலி, அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவி வேறு ஒருவனோடு வாழ்ந்து கொண்டிருப்பாள், ஹீரோவுக்கு பிறந்த பிள்ளைகளில் ஒரு ஆணும், ஒரு பெண் குழந்தையும் நிச்சயம் உண்டு, ...

Villagelo Vinayakudu – Telugu Film Review

Image
ஐந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி..நன்றி.. நன்றிங்கோ... சென்ற வருடம் விநாயகுடு என்று வெளியாகி ஆந்திராவில் மிகப்பெரிய ஹிட்டான படம்.. நந்தி அவார்ட் கூட வாங்கியது.. மிக இயல்பான திரைக்கதையினால் வெற்றி பெற்ற ஒரு ஃபீல் குட் திரைப்படம்.. ஒரு அதி குண்டான வாலிபனுக்கும், சிக்கென்ற ஒரு ஆட் கம்பெனி பெண்ணிற்கும் இடையே ஏற்படும் காதலை மிக அழகாய் காமெடியாய் சொல்லியிருந்தார்கள். இப்போது அதே குருப் அந்த குண்டு வாலிபனை மட்டும் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஹிட்டை கொடுத்திருக்கிறார்கள். இந்த முறை கார்த்திக் என்ற குண்டு பையன் மட்டுமே.. கார்த்திக்கும், சரண்யா மோகனும் ஏற்கனவே காதலர்கள். கோதாவரியின் கரையில் ஒரு நல்ல பார்ம் ஹவுஸ் வைத்து கொண்டு ஸ்ட்ரிக்ட் அண்ட் டிஸிப்ளெயிண்ட் ரிட்டயர்ட் ஆபீசரான அவளுடய அப்பாவிடம் எப்படி தன் காதலை சொல்வது என்று குழப்பத்தில் இருக்க, அப்போது அவருடய சித்தப்பா பெண் திருமணம் வர, தன் அப்பாவிடம் சொல்ல பயந்து, கொஞச்ம் கொஞ்சமாய் தன் அத்தை, சித்தப்பா, பெரியப்பாவிடம் சொல்லி ஆதரவை திரட்ட, ஒரு வழியாய் எல்லோரும் சமாதானமாகும் நேரத்தில் கார...

இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு -14/11/09

Image
சென்ற வாரம் ஏற்பாடாகியிருந்த பதிவர் சந்திப்பு.. லோ டிப்ரஷனாலும், தொடர் மழையினால், ஊரே தண்ணியில் டிப்பாகிவிட்டபடியாலும் தள்ளிப் போடப்பட்டது அறிந்ததே.. டிப்ரஷன் இடம் மாறி விட்டபடியால், வெயில் வெள்ளி முளைத்த தைரியத்தில் வரும் வாரம் 14/11/09 அன்று, போன வாரம் ஏற்பாடாகியிருந்த அதே இடத்தில் வரும் சனிக்கிழமை பதிவர் சந்திப்பை நடைபெறும் நிகழ்ச்சி நிரலில் ஒரே ஒரு மாற்றம் இயக்குனர் திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் வெளியூர் செல்லவிருப்பதால், அவர் அடுத்த சந்திப்புக்கு வருவதாய் இசைந்துள்ளார் அவருக்கு நன்றிகள். அடுத்த சந்திப்பில் அவருடன் கலந்துரையாடி மகிழ்வோம். இம்முறை பேராண்மை புகழ் திரு. சதீஷ்குமார் அவர்கள் தங்களுடய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார். புதிய, பழைய என்றில்லாமல் பதிவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே.. சந்திப்பு நாள் : 14 /11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30 இடம் : Discovery Book Palace No. 6. Mahaveer Complex 1st Floor, Mu...

Up – Review

Image
5 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய என் அன்பு சக பதிவர்களூக்கும்,வாசகர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றிங்கோ...    கார்டூன் மற்றும் அனிமேஷன் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். Lion King, Finding Nemo,வை எல்லாம் மனப்பாடம் செய்யும் அளவிற்கு பார்த்தவன். அதில் அவர்கள் கதை சொல்லும் முறை எனக்கு ரொம்ப பிடிக்கும். நோகாமல் அட்வைஸ் பண்ணுவார்கள். குழந்தைகளுக்கு புரியும் படி.   சரி படத்துக்கு வருவோம். படம் ஆரம்பித்து பத்து, பதினைந்து நிமிடங்களில் ஒரு சிறுவன், சிறுமி நண்பர்களாகி, வளர்ந்து, திருமணம் முடித்து, வயதாகி, மனைவி இறந்துவிட, என்னடா ஒரே டீவி சீரியல் கதையாய் இருக்கிறதே என்று யோசித்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த போது, கதை சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. ஒரு பள்ளி சிறுவன் வயதானவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் ஒரு பதக்கம் பெற இவரை அணுக, அதே நேரத்தில் அக்கம் பக்கம் வீடு கட்டுவதால், ஏற்படும் பிரச்சனை, அது மட்டுமில்லாமல் மனைவியின் ஆசையை ஒரு பெரிய பள்ளத்தாக்கு, அதில் மேலிருந்து கொட்டும் அருவி, அதன் முனையில் ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற இளமையில் அட்வென்சர் செ...