கொத்து பரோட்டா –30/11/09
துபாய் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் இந்த முறை. மூன்று தமிழ் படங்களை திரையிட போவதாய் சொன்னார்கள். ஒன்று அவள் பெயர் தமிழரசி என்கிற மோசர்பியர் தயாரிப்பில் கதிரவன் இயக்கதில் இன்னும் வெளிவராத படம், இன்னொரு படம் ஷங்கர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் “ரெட்டை சுழி”யும், இன்னொரு படம் அமீரின் யோகியும் திரையிடபடுவதாய் சொன்னார்கள். யோகி படம் ஆப்பிரிகக் படமான டிசோஸ்டியின் காப்பி என்று நிருபர்கள் கேட்டபோது அமீர் அந்த படத்தை பார்ககவேயில்லை என்று அப்படி காப்பி அடித்திருந்தால் துபாய் பெஸ்டிவலுக்கு செலக்ட் செய்திருப்பார்களா.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு அதே போல ஒரு கேள்வி எழுகிறது. நிச்சயம் யோகி ப்டத்துக்கு விருது ஏதாவது கொடுத்தால் துபாய் பிலிம் பெஸ்டிவலே ஒரு டுபாக்கூர் பெஸ்டிவல்தானோ என்று கேள்வி எழும்பவே செய்யும். இந்திய சினிமாவில், இந்திக்கு பிற்கு தமிழும், தெலுங்கும் தான் முண்ணனியில் உள்ள துறைகள் எனவே அவற்றை தங்கள் பக்கம் சேர்த்து பெஸ்டிவலுக்கு கலை கட்ட பிரபல இயக்குனர்கள் இயக்கும் படத்தை சேர்த்து மார்கெட்டிங் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது. &&&&&&&&&...