Tsotsi (எ) யோகி – திரை விமர்சனம்
Tsosti சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ஸ்லமில் இருக்கும் அநாதை டீன் ஏஜர். சிறுவயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டு முட்டி மோதி இந்த ஸ்லம்மில் செட்டிலானவன். அவனும், அவனுடய கூட்டாளிகளும் வழக்கமாய் இம்மாதிரியான சிறுவர்கள் ஈடுபடும், கொள்ளையில் ஈடுபட்டு பணத்தை திருடி குடித்தும், பெண்களுடனுமாய் அலைய, ஒரு நாள் ஒரு கொள்ளையை நடந்த்திவிட்டு ஓடி வரும் போது ஒரு காரை திருட எத்தனிக்க, அதை தடுக்கும் பெண்ணை சுட்டுவிட்டு, காரை திருடிக் கொண்டுவர, கொஞ்சம் தூரம் ஓட்டி வந்த பிறகு பின்னால் சத்தம் வர, பார்த்தால் ஒரு கைக்குழந்தை, குழந்தையை அங்கேயே விட்டு விட்டு போக மனமில்லாமல் குழந்தையை ஒரு பேப்பர் பேக்கில் போட்டுக் கொண்டு தன் வீட்டில் வைத்து பராமரிக்க ஆரம்பிக்க,ஒரு கட்டத்தில் குழந்தையால் அவனுடய வாழ்கையில் மாற்றம் ஏற்பட, அந்த குழந்தையை ஒரு கட்டத்தில் அதன் தாயிடமே கொண்டு போய் விட போகும் போது அவனை போலீஸ் கொன்று விடுகிறது.
மேலே சொன்ன அத்துனை காட்சிகளும் யோகி படத்தில் வரிசைக்கிரமமாய் அச்சு அசலாய் இருக்கிறது என்ன டீன் ஏஜ் பசஙக்ளுக்கு பதிலாய் நாற்பது வய்து யூத்துகள். அவர்கள் ஸ்லம்மில் சுற்றும் காட்சிகள், மற்றும் கொலை, கொள்ளை செய்யும் காட்சிகள் எல்லாம் இதைவிட லைவ்வாக பல படங்களில் பார்த்தாகிவிட்டது. அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. முக்கியமாய், சென்னை ஸ்லம் ரவுடிகளை பற்றிய படமாக்கும் போது அதனுடய நேட்டிவிட்டியும், லாங்குவேஜ், பாடி லேங்குவேஜ் போன்ற வற்றை படத்தில் பிரதிபலித்தால்தான் படத்தோடு ஒட்ட முடியும், அதுவே இதில் பெரிய சைபர். ஒரிஜினல் படத்தில் கைக்குழந்தையோடு ஒரு பெண் அலைய, அந்த பெண்ணை, மிரட்டி, தன் குழந்தைக்கு பாலூட்ட சொல்வதும், பின்பு அவளுடன் நெருக்கமாவதும், குழந்தைக்கு பாலுட்ட மில்க்மெயிட் ஊட்டிவிட்டு அப்படியே போய்விட திரும்ப வரும் போது குழந்தையை எறும்பு கடித்து அழுவதும், அதே போல் குழந்தையை திருடிய வீட்டிற்கே போய் மீண்டும் கொள்ளை அடிக்க போவது, போய் திரும்பும் போது குழந்தைகளூக்கான பொருட்களை எடுத்து வருவதும், அங்கே நடக்கும் பிரச்சனையில் கூட்டாளியையே போட்டு தள்ளூவது, என்று மிச்சம வைக்காமல் ஒரிஜினல் படத்தின் எல்லா காட்சிகளும்.
அமீர் நடக்கிறார், ஜீன்ஸ் போட்டு நட்க்கிறார், சார்ட்ஸ் போட்டு நடிக்கிறார், ஹை ஸ்பீடில் ந்டக்கிறார், ஆனால் நடிப்பை பார்க்கும் போது பருத்டி வீரன் அமிர் சாரி கார்த்தி தான் தெரிகிறார். முக்கியமாய் கொஞ்சம் கூட சென்னை ஸ்லாங்கில்லாம் மதுரை ஸ்லாங்கிலேயே இழுத்து இழுத்து பேசுகிறார். குழந்தையை கடிக்க வரும் பாம்பை கொல்லும் காட்சி மட்டும் நச்.
கவிஞர் ஸ்நேகன் இன்னொரு ரவுடியாய் வருகிறார். என்ன அவருக்கு பாடி லேங்குவேஜும், ஸ்லாங்கும்தான் வருவேனா என்கிறது. ஒரு வேளை இன்னும் ரெண்டு மூணு ரவுடிகள் படம் வந்தால் அஜயன் பாலாவுக்கு பதிலாய் இவரை போடலாம்.கூட வரும் இரண்டு பேர் சரியான செலக்ஷன்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தெலுங்கு பெண்ணாக, மதுமிதா பெரிதாய் சொல்ல முடியாவிட்டாலும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷனில் ஜெயிக்கிறார். மேலே உள்ள ஒரிஜினல் படத்தில் குழந்தையை தூக்கி போவது போன்ற யோகியிலும் தூக்கி போகிறார். குழந்தையின் அப்பாவாக வின்செண்ட் அசோகன், மனைவி சுவாதி, வேறு ஒருவனுக்கு கர்பமானவள் மனைவி என்று தெரிந்தே திருமணம் செய்து கொண்டு, அந்த காணாமல் போன குழந்தையை கொல்ல துடிப்பவன். அரைவேக்காட்டுதனமான திரைகதை ஆசிரியரின் சொந்த கற்பனை.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கச்சிதம், அமிர் போடும் சண்டை காட்சிகளில் இவரும் எடிட்டரும் ஜெயித்திருக்கிறார்கள். யுவனின் பிண்ணனி இசை அருமை, பாடல்கள் என்று பெரிதாய் இல்லாததால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. செகண்ட் ஹாப் முழுவதும், யோகி தீம் மீயூசிக் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது.
திருடா திருடி சுப்ரமணிய சிவாவுக்கு இது மூன்றாவது படம் தமிழில். அமீர், யுவன், அமிரின் கம்பெனி என்று சரியாகத்தான் செலக்ட் செய்திருக்கிறார். அமிரை சூப்பர் ஹீரோவை போல பில்டப் செய்ய பிரயத்தனபட்ட அளவுக்கு படத்தில் அவ்ரின் உழைப்பு தெரியவில்லை. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒவ்வொரு அடிக்கும் பஞ்ச் டயலாக் பேசி அடிப்பது எல்லாம் தேவையா..? அதே போல் ஹல்க் போல நெஞ்சில் அடித்து கொண்டு அலறுவது எல்லாம் ரொம்பவே ஓவர். கதை இவருடயதாம்.
திரைக்கதை, வசனமெழுதி நடித்து, தயாரித்திருப்பவர் அமீர். இவர் புதியா திரைக்கதை என்ன எழுதினார் என்று தெரியவில்லை. பல இடங்களில் வசனங்கள் கூட ஒரிஜினலின் பிரதிபலிப்பு. முக்கியமாய் மதுமிதா அமீர் வசனங்கள். இவர் திரைகதையில் செய்த மாற்றங்கள் குழந்தையின் தந்தையை வில்லனாக காட்டியதும், இவரின் ப்ளாஷ் பாக் காட்சிகளும் தான். அந்த காட்சிகளில் கூட தள்ளூவண்டியில் பிச்சையெடுக்கும், ஒரு பிச்சைக்காரனைக்கூட தன் அப்பாவாக உருமாற்றியிருக்கிறார். அந்த ப்ளாஷ் பேக்கெல்லாம் படு சொதப்பல்.
ஒரிஜினல் படத்தை பார்க்கும் போது டீனேஜ் பையன்களின் ஸ்லம் வாழ்கையையும், அதில் ஒருவனுடய மன மாறற்மும், அதனால் ஏற்படும் பிரசனைகளூம், நம் மனதில் ஒரு சின்ன நெகிழ்வை உருவாக்கும். இதில் என்ன செய்தாலும் அது வர மாட்டேன் என்கிறது. எந்த இடத்திலும், நம்மால் கதையோடு ஒட்ட முடியவில்லை. யாருக்கோ நடக்கிற உணர்வு தான் படம் முழுவதும். தெரியாத களனை கையிலெடுத்ததால் திண்டாடியிருக்கிறார். நமக்கு என்ன வருமோ அதை செய்வதுதான் உசிதம். அமீர் என்னாச்சு நல்லாத்தானே போயிட்டிருந்தது.?:((((
Tsosti (எ) யோகி – ரோகி
டிஸ்கி: இந்த படத்தை இரண்டு வருஷமாய் எடுக்க என்ன எழவு இருக்கிறது? ஒரு வேளை அஞ்சு லட்சம் அடி பிலிமில் ஷூட் பண்ணி, அதில் பதினாலாயிரம் அடி எடிட் பண்ணி, கொறைஞ்சது ஒரு 150 நாள் ஷுட் செய்தால் படம் ஹிட்டாயிரும்னு அமீர் நினைச்சி எடுத்திட்டிருந்தாரோ..?
Comments
//
நோ டென்சன்.கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்................
பாதி கிழம்னு சொல்லுங்களேன்......ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
//
அதுக்கு எப்படியும் ஒரு நாலு வருஷம் ஆகும்.. அப்ப பாக்கலாம்..
அடப் பாவமே.... (இளநிய அதிக விலைக்கு வச்சு வித்த கவுண்டமணி கதையா இல்ல ஆச்சு..)
சு.சிவா... ப்ளீஸ்.. சொன்னா கேளுங்க...! இதுக்கெல்லாம் போயா.. கெணத்துல குதிக்கிறது..!!
:)
உங்க நக்கலுக்கு அளவே இல்லையா?
”சச்ச ஜுட்டா”வை “நினைத்தை
முடிப்பவன்(எம்.ஜி.ஆர்)”ஆக்கும் லெவலிதான் இன்னும் இருக்கிறார்கள்.
இருந்தாலும் இந்தக்கூட்டணி இப்படி காப்பி அடிக்கும்னு நினைக்கலை.
காப்பி அடிங்க.. வேணான்னு சொல்லலை, ஆனா நாசூக்கா நேட்டிவிட்டியோட பண்ணுங்க..
//அப்பாவாக வின்செண்ட் அசோகன், மனைவி சுவாதி, வேறு ஒருவனுக்கு கர்பமானவள் மனைவி என்று தெரிந்தே திருமணம் செய்து கொண்டு, அந்த காணாமல் போன குழந்தையை கொல்ல துடிப்பவன். அரைவேக்காட்டுதனமான திரைகதை ஆசிரியரின் சொந்த கற்பனை//
முடியலைன்னா விட்டுட வேண்டியதுதானே, ஏன் இப்பிடி மூளையை கசக்கி சொந்தமா அதுவும் சகிக்கமுடியாம சிந்திக்கணும்.?
என்னா பில்டப்புடா சாமீ..
யோவ். காசு உன் காசாய்யா?
எவன்வூட்டுதோ .
என்று மிச்சம வைக்காமல் ஒரிஜினல் படத்தின் எல்லா காட்சிகளும்.
அப்படி போடு.
முக்கியமாய் கொஞ்சம் கூட சென்னை ஸ்லாங்கில்லாம் மதுரை ஸ்லாங்கிலேயே இழுத்து இழுத்து பேசுகிறார்.
அமீரண்ணே இதல்லாம் தேவையாண்ணே, ஏண்ணே நம்மூரு பேர கெடுக்கிற,
பாத்துண்ணே, அடுத்த படத்திலயாவது அலப்பறைய காட்டுண்ணே.
பேசாம ஆர்யா 2 போயிற வேண்டியதுதான்.. (ரிங்கா ரிங்கா பாட்டுக்காகவே போயிருவேன்னு நெனைக்கிறேன்).. அதோட opening நல்ல இருக்குன்னு கேள்விப்பட்டேன்..நீங்க பாத்துட்டீங்களா??
-Toto
www.pixmonk.com
பதிவை பார்க்கவும்.
http://kaveriganesh.blogspot.com/
எங்க நீங்க கேளுங்களேன்...
கார்க்கி நீங்க கேளுங்களேன்..
ஆதி அண்ணே நீங்க கேளுங்களேன்..
அட.. யாரவது கேளுங்களேன்...
போங்க நான் சொல்ல மாட்டேன்...
repeatங்கன்னா...
இதில் அமீர் அண்ணன் மக்கள் டி .வி விழாவில் ரஷ்ய படம் எல்லாம் போடுகிறீர்கள் தமிழ் படத்தையும் போடுங்கள் இதுவும் உலக படம் தான் என்றார் அதனுடைய அர்த்தம் இப்போது தான் விளங்குகிறது.
Tsotsiயின் உல்டா தான் உ.த சொன்னாரு.. ஆனா இப்படி ஈயடிச்சான் காப்பியா..??
அமீர் திரைக்கதைன்னு கொஞ்சம் ஆவலாய் இருந்தேன்..
யாரைத்தான் நம்புவதோ இந்த பிளாக்கர் நெஞ்சம்ன்னு ....
பாட வேண்டியதுதான் போல
சரி ரைட்டு விடுங்க..நந்தலாலாவுக்கு வெயிட் பண்ணுவோம்..
ஆசை யாரை விட்டது..
மற்றொரு படைப்புத் திருடன்.. :)
சங்கர் அண்ணே, நீங்கள் ஒரு களஞ்சியம்(இயக்குனரை சொல்லவில்லை)...
அமீர், மீண்டும் இயக்குனராக வாருங்கள்.. அது போதும்..
//யூர்கன் க்ருகியர் said...
திருடி (கதை மற்றும் காட்சிகள் ) எடுக்கப்பட்ட படத்தை திருட்டு வி சி டி யில் பார்ப்பது தவறா?
//
இல்லவே இல்லை.. நானும் அது தானே செய்யப் போறேன்.. நேரமிருந்தா..
மிகவும் அருமையான படம் Tsotsi. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்தேன். சென்ற ஆண்டு இறுதியில் எஸ்.ராமகிருஷ்ணன் வலைப்பக்கத்தில் அப்படத்தின் விமர்சனம் படித்தபின் மறுபடியும் பார்த்தேன். படம் நெடுக ஒரு இடம் கூட தொய்வில்லாமல், அன்பு, பாசம், விரோதம், துரோகம் என எல்லா பரிமாணங்களையும் சொல்லியிருந்த படம் Tsotsi. Atol Fugard என்பவரின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். அவசியம் பார்க்க வேண்டிய படம்.
000
யோகி படம் நான் பார்க்கவில்லை. பார்க்கப்போவதும் இல்லை.
000
உங்கள் விமர்சனம் அருமை.
- பொன்.வாசுதேவன்
What about Avvai Shanmugi, Panchathanthiram, there are many more copy cats from lots of big guys like Kamal, Manirathnam, Shankar etc, you are saying because these movies are copy cat, one shouldnt watch?
I feel like something more is running behind all these reviews, rather just a movie review.
One of the things might be that people expected the same kinda aura like Paruthiveeran in this movie and they are not getting it and complaining.
இம்ம்ம்...எப்போ ஒரு நல்ல படம் வருமோ?
//
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி, படத்தையும் இழுத்தடித்து, படம் எடுக்கும் எல்லோருக்கும் இது ஒரு பாடம் என்றுதான் நினைக்கிறேன்.
அதே போலப் படம் நம்மை ஈர்த்து விட்டால், நாம் பிற பின்னணி விஷயங்களைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் படத்துடன் ஒன்றி விடுவோம் என்பதுதான் நிதர்சனம்.
NOWADAYS IT IS NOT EASY TO DELETE THE PRELOADED CONCEPTS OF THE VIEWERS AND MAKE THEM INDULGE IN THE MOVIE,THEY ARE WATCHING.
அதையும் தாண்டி வெற்றிப் படங்களைக் கொடுப்பவர்கள்,அறிவாளிகள்,அதிர்ஷ்டசாலிகள்.
தெளிவாக,நேர்மையாக,அழகாக உங்கள் பார்வையைச் சொல்லும் விமர்சனம்,ஷங்கர்.
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/281109c.asp
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2009/November/281109c.asp
அமீர் கிட்டதட்ட 10 கோடி செலவு செய்துள்ளாரே?!
ஏன் இன்னும் 4 வருடம் ஆகும் என்று சொன்னீர்கள்?
ரொம்ப எதிர்பார்ப்பில் இருந்தேன் அமீரின் "யோகியை"!!!
மயிலாடுதுறை சிவா...
இனிமே ரிலிஸ் அன்னிக்கே எப்படியாவது விமர்சனம் போட்டுடுங்க.. காசாவது மிச்சமாகும்!
தப்பிக்கை வைத்தற்கு நன்றி சங்கர் :)
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
அதுக்கென்ன..?:)
@அத்திரி
ஓகே.நீங்களே சொல்லிட்டீங்க
@ராஜ்
அதெப்படி..?
@ராஜூ
:(((((
ஏன் ரெண்டு வாட்டி?
@அன்புடன் மணிகண்டன்
மரியாதையா ஒரு நூறை நமக்கு கொரியர் பண்ணிருங்க..:)
@ஹாலிவுட் பாலா
ஹா.. ஹா..அஹா..
@ஹாலிவுட் பாலா
:)(
ஆமாம் ரவி சார்
@பாலாஜி
இதுவே காட்டமா..?
@கார்க்கி
அந்த பில்டப்பினால் வந்த எரிச்சல் தான் இப்படி எழுத தூண்டியது..
@ஆதிமூலகிருஷ்ணன்
நான் கூட காப்பி அடிக்க கூடாதுன்னு சொல்லலை.. ஆனா இவங்க ஏதோ சினிமாவை காப்பாத்த வந்த தேவ தூதன் போல செய்யிற பில்டப் இருக்கே அப்பா முடியல..
அந்த மட்டும் சந்தோஷமே
@காவேரி கணேஷ்
யார் காசா இருந்தா என்ன ?
கேளுங்கண்ணே..
@பிரசன்னா
எனக்கு கூடத்தான் அமீரை பிடிக்கும் அதனாலதான் அவர் கிட்டேயிருந்து இந்த மாதிரியான படஙக்ள் வந்த துக்கத்தில எழுதினேன்
ஆர்யா 2 இன்னும்பாக்கல
என்னது சிங்கமாதிரியா..இதுவெல்லாம் கொஞ்சம் ஓவர்
@மோகன் குமார்
நிச்சயம் நான் கம்பேரிசன் செய்து விமர்சிக்க வில்லை. அந்த ஒரிஜினல் படத்தின் நெகிழ்வை இவர்கள் கெடுத்துவிட்ட்டர்களே என்ற வருத்தமே
@காவெரி கணேஷ்
நிச்சயம் பார்க்கிறேன்
@அதிபிரதாபன்
அப்ப இது என்ன?
@கார்திக் விஸ்வநாதன்
நான் வரல் இந்த ஆட்டத்துக்கு
என்ன ரிப்பீட்டு
@குசும்பன்
ஆமாண்ணே
@அபபிள் ஜோ
நல்ல கருத்து
@பட்டர் ப்ளை சூர்யா
அமீரின் திரைக்கதை என்று சொன்னால் காமெடியாய் இருக்கும்
@
நன்றி
@ஸ்ரீ
என் பங்க அனுப்பிருங்க..
@வெட்டிபயபுள்ளைக
அப்படியா நன்றி
@யூர்கன் க்ருகியர்
அப்ப கூட நான் திருட்டு டிவிடியில பாக்க வேணாம்னுதான் சொல்வேன்
@லோஷன்
:)
@
நன்றி
@அகநாழிகை
நிச்சயம் வாசு. நல்ல படம் டீன் ஏஜ் சிறுவர்களின் ஸ்லம் வாழ்ககையை, அவர்க்ளுடய உணர்வை கண் முன்னே ஓடும் ஒரு படம்..
@னால்ரோடு
ஆமா அதுவும் இதே படத்தின் உல்டா தான்
@பின்னோக்கி
:)
@ஹாலிவுட் பாலா
பாலாவிடம் யாரும் மெயில் செய்ய வேண்டாம் அவர்ரின் காப்பிரைட் என்கையில..:_)
@
ஏன் நந்தா பெரியசாமி உங்களுக்கு வேண்டியவரா.. இல்ல பாராட்டுற அளவுக்கு அவ்ர் என்ன செய்திட்டா இந்த படத்தில
@ரோமிபாய்
ப்:(((
@ஊர்சுற்றி
:)
@பிரதீப்
ஒரிஜினல் நல்லாவே இருக்கும்
@யெதுமில்லை
நான் காப்பி அடித்ததை பற்றி கூட பெரிதாய் கவலை படவில்லை.. அதில் உள்ள சாரத்தை சரியாய் கொடுத்திருந்தால் நிச்சயம் எனக்கு எந்த விதமான தனிப்பட்ட காழ்புணர்ச்சி கிடையாது.. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு அவர்கள் ஏதோ உலக சினிமா எடுத்துவிட்டோம்.. என்றும் ஒரே பில்டப் செய்வது.. ஒவரே..
நீஙக் தான் சரியா புரிஞ்சிட்டு இருக்கீங்க..
@ரமேஷ் ரொமப் நல்லவன்
அது பெரிய காமெடி
@ம்யிலாடுதுறை சிவா
:(
@
என்ன படம்..?
@கே.எஸ். நாகராஜன்
அதுக்கு கொஞ்சம் செலவாகுமே
@ரபீக் ராஜா
அதே தப்பை தான் நானும் செய்திருந்தேன்..
அதனால தான் கேபிள் இன்னமும் விமர்சனம் மட்டுமே பண்ணறார்..
ஈரம், உன்னை போல் ஒருவன்,
ஓரளவுக்கு ஓகே கண்டேன் காதலை..
கேபிள் சங்கர்
ஆமாம்..:)
ப்ரியன் என்னை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். ஒரு கூற்று உண்மையே.. நான் எந்தஒரு விஷ்யத்தை செய்தாலும் அதில் தனித்து தெரியாமல் போக மாட்டேன். இல்லாவிட்டால் இறங்கவே மாட்டேன். இன்றைக்கு நான் விமர்சனம் எழுதுகிறேன். அதில் நான் யார் என்பது என்னை வந்து படித்துவிட்டு ஆதரித்தோ, அல்லது உங்களை போல பகடியோ செய்யும் அளவிற்கு இந்த துறையில் வளர்ந்து கொண்டுதானிருக்கிறேன்.
அப்படி ரெம்ப கஷ்டப்பட்டீர்கள் என்றால் ஒரு ரெண்டு கோடி எடுத்து வாருங்கள். நான் யார் என்று நிருபிக்கிறேன். நன்றி
Tamilcinema is incarcerated by actors + Directors+ Reviewers இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து மட்டுமே