Posts

Showing posts from January, 2010

கோவா – திரை விமர்சனம்

Image
சென்னை 28, சரோஜாவின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு டீமிலிருந்து வந்திருக்கும் படம். ஊர்பட்ட கடன் பிரச்சனையில் பஞ்சாயத்துக்களை பார்த்து வெளிவந்திருக்கும் படம். சாதாரணமாகவே ஹாலிடே மூடில் இருக்கும் இவரின் படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஹாலிடே என்றதும் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்தியிருந்த படம். இவர்களும் வழக்கம் போல பழைய தமிழ் சினிமாக்களை கிண்டலடித்தே ஆரம்பிக்கிறார்கள். கிராமத்தில் யாருக்கும் அடங்காமல் ஊர் சுற்றி திரியும் ஜெய், பிரேம்ஜி,வைபவ் மூவரும் பஞ்சாயத்தில் நிற்கும் காட்சியில் தொடங்குகிறது படம். ஏற்கனவே பலராலும் கிழித்து தொங்கவிடப்பட்ட கிராமத்து பஞ்சாயத்து காட்சிகள். பிரேம்ஜி கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சாமி பையன் என்பதற்கான ப்ளாஷ்பேக் சீன் அட்டகாசம். முக்கியமாய் ஷண்முகசுந்திரத்தின் படு காமெடியான் சீனில் அவரின் சீரியஸ் நடிப்பும், ஒரே நேரத்தில் வாந்தியெடுத்து,குழந்தை பிறப்பது வரை வரும் காட்சி நிஜமாகவே ஒரு எதிர்பார்ப்பை எகிறத்தான் செய்ய வைக்கிறது. அதன் பிறகு வரும் காட்சிகளில் ஏதும் பெரிய ப்ளஸ் இருப்பதாய் தெரியவில்லை. பிரேம்ஜியை சாமி கண்ணை குத்துவதாய் வரும் காட்சியும், அதை ஜெய்...

தமிழ் படம் - திரை விமர்சனம்

Image
மீண்டும் குறுகிய நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஏழு லட்சம் ஹிட்ஸுகளை வழங்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த நன்றி.. நன்றி..நன்றி கவுண்டர் காலத்திலிருந்தே நிறைய பழைய படங்களை கிண்டலடித்து காட்சிகள் வ்ந்து பார்த்திருப்பீர்கள், அதன் பிறகு விவேக், வடிவேலு கூட அவ்வப்போது காமெடி காட்சிகளாய் பழைய படங்களிலிருந்து காட்சிகளை உல்டா பண்ணி ரசித்திருப்போம். ஒரு படம் முழுக்க முழுக்க தமிழ்படங்களை கிண்டலும், கேலியும் செய்து வந்ததில்லை என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்தில் ஒரு பெரிய படம் ஹிட்டானால் அதை வைத்து உடனேயே ஒரு ஸ்பூப் படம் வெளிவந்துவிடும். சினிமாக்காரன்பட்டி என்னும் கிராமத்தில் ஆண்பிள்ளைகள் பிறந்தவுடனேயே கள்ளிபால் அதுவும் டெட்ரா பேக்கில் வரும் பாலை கொடுத்து கொலை செய்யும்படி நாட்டாமை உத்தரவால், மீண்டும் பிள்ளையாய் பிறந்த சிவாவை கொல்ல ஆயா டெட்ரா பேக்கை திறக்க, அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது படம்.  அதன் பிறகு சிவா, வெ.ஆடை.மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா அடிக்கும் கூத்துகள் உங்கள் வயிற்றை பதம் பார்க்காமல் போகாது. படத்தில் வரும் ஆரம்ப காட்சியாகட்டும...

எண்டர் கவிதைகள் –7

Image
மீண்டும் குறுகிய நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி ஏழு லட்சம் ஹிட்ஸுகளாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த நன்றி.. நன்றி..நன்றி வழக்கம் போல் முயக்கம் முடிந்து நொடியில் குறட்டை ஒலியெழுப்புபவனுக்கு தெரியுமா? என்னுள் இன்னும் சுரந்து கொண்டிருக்கும் வலியை? வலி பொங்கி காமம் வழிந்தோடும் நேரம் புதிதாய் வந்து அணை கட்டி ஒத்தடம் கொடுத்தவனுக்கும் பழக்கம் ஆனதும் வழக்கம் போல் முயக்கம் முடித்து நொடியில் குறட்டை ஒலியெழுப்பினான் இன்னமும் என்னுள் சுரந்து கொண்டுதானிருக்கிறது. வேறொரு ஒத்தடம் தேட பிடிக்காமல் வலி தாங்க பழகிக் கொள்கிறேன் . Technorati Tags: எண்டர் கவிதைகள் தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான் குத்துங்க..

கொத்து பரோட்டா –25/01/10

Image
போன வாரம் சுவாமி ஓம்கார் வந்திருந்தார். நிறைய முறை தொலைபேசியிலும், சாட்டிலிலும் பேசியிருந்தாலும், முதல் முறையாய் நேரில் சந்திக்கிறேன். .மதியமே அப்துல்லாவின் வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு சாமியாரிடம் பேசும் சங்கடங்கள் ஏதுமின்றி ஒரு நண்பனிடம் பேசுவது போலவே பேசினார். சாயங்காலம் பீச்சில் குழுமியிருந்த “பெரும்” கூட்டத்தில் ஒவ்வொருவரை பற்றியும் கேட்டறிந்து கொண்டு மிக இயல்பாய் பேசினார். அவர் ப்ளாகராவதற்கு ஜெயமோகந்தான் காரணம் என்றார். இயல்பாய் ஜோக்கடித்தார், பாவனாவை பற்றி பேசினார்.. என்ன பேசினார் என்பதை வந்திருந்தவர்களிடம் கேட்டோ, அல்லது அவரது பதிவை படித்தோ தெரிந்து கொள்ளவும். ஒரு முக்கிய விஷயம் வலிக்காமல் ஆன்மீகம் பேசுகிறார் என்பது குறிப்பிடதக்கது. அதற்காகவே அவரிடம் ஆன்மீகம் கேட்கலாம் போலிருக்கிறது. அப்துல்லா என்னை பற்றி அவரிடம் சொல்லும் போது ஒரு ஆன்மீக நாத்திகவாதி என்றாராம். ************************************************************************************* தவிச்ச வாய்க்கு தண்ணி சிக்கிங், கே.எப்.சி. போன்ற இடங்களில் எல்லாம் சாப்பிட வேண்டும் என்று நுழைந்தால் க...

Wasabi – 2002

Image
தமிழ் திரையுலகில் சமீப காலமாய் பரபரப்பாய் பேசப்பட்டுவரும் வரும் படம் வசாபி. ரொம்ப சிம்பிளான நிச்சயம் தமிழிலிலோ, அல்லது இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் எடுத்தாளக்கூடிய கதைகளம். பிரான்ஸில்  அரக்கத்தனமாய் வேலை பார்க்கும் கமிஷனர் ரீனோ. ஒரு முக்கிய வழக்கின் குற்றவாளியை கண்டுபிடிக்க, போகும் இடத்தில் ஒரு பெண்ணை நேருக்கு நேராய் முக்கில் குத்தி கைது செய்து வரும் வேளையில் அவனின் மேலதிகாரியின் மகனையும் யார் என்று தெரியாமல் ஒரு குத்து குத்திவிட்டு வர,  இம்மாதிரியான அரகண்டான வழியில் அவன் நடந்து வருவதை, கண்டித்து வேறு வழியில்லாமல் இரண்டு மாதம் சம்பளத்துடன் சஸ்பென்ஷன் செய்யப்படுகிறான். தனிக்கட்டையான அவனை விரும்பும் பெண்ணிடம் கூட 19 வருடங்களுக்கு முன் தன்னை விட்டு பிரிந்து போன காதலியை நினைவுகூற்கிறான். அவளை மறந்துவிட்டு வா.. அப்போது மீண்டும் சந்திப்போம் என்று பிரியும் அவளை பற்றி பெரிதாய் கவலைபடாதவனுக்கு ஒரு செய்தி வருகிறது. அவனது காதலி இறந்து விட்டாள் என்றும், அவன் பெயரில் ஒரு உயில் எழுதி வைத்திருக்கிருப்பதாகவும் தெரிய வர, ஜப்பானுக்கு கிளம்புகிறான். அங்கே போனால் அவனுக்கும் அவன் காதலிக...

Adhurs – Telugu Film Review

Image
ஜூனியர் என்.டி.ஆரின் இரட்டை வேடம், நயந்தாரா, என்.டி.ஆரின் ஆதர்ச இயக்குனர் வி.வி.விநாயக், தேவி ஸ்ரீபிரசாத், என்று எல்லோரும் சேர்ந்து மிகுந்த எதிர்பார்பை எற்படுத்தியிருந்தபடம். தெலுங்கு சினிமா உலகத்தை திருப்பியெல்லாம் போடவில்லை. வழக்கமான மசாலாதான். இரட்டையர்களாய் பிறநது, பிரிந்து போய். சாரி என்று கோவிலில் பிரம்மானந்தத்திடம் அஸிட்டெண்ட் பூசாரியாய் ஒருவன். கேங்ஸ்டரிடமிருந்து பணத்தை கொள்ளையடித்து போலீஸ் ஆபீசர் சாயாஜி ஷிண்டேவிடம் கொடுக்கும் நர்சிம்மனாக ஒருவன். அவனுக்கு ஒரே எய்ம் போலீஸில் சேருவது. இன்னொரு பக்கம் நரசிம்மனை தேடியலையும் கல்கத்தா டான் மகேஷ் மஞ்ச்ரேக்கர். அவன் எதற்காக தேடியலைக்கிறான் நரசிம்மனை? நரசிம்மனும், சாரியும் சேர்ந்தார்களா? என்பதை வெள்ளி திரையில் காண்க. இரட்டை வேடங்களில் சாரியாகவும், நரசிம்மனாகவும் ஜூனியர் என்.டி.ஆர். நரசிம்மனாக வரும் என்.டி.ஆரைவிட, சாரியாக வரும் என்.டி.ஆர் மனதில் நிற்கிறார் அவரும் பிரம்மானந்தமும் அடிக்கும் காமெடி கூத்தினால். பிரம்மானந்தம் நயந்தாராவை காதலிக்க, நயன் தாரா ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நரசிம்மனை பார்த்துவிட்டு சாரியை காதலிக்க, ஒரு கட்டத்தில் நயனுக்...

போர்களம் – திரை விமர்சனம்

Image
பொங்கல் ரிலீஸில் படத்தின் ட்ரைலர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். பொல்லாதவன் கிஷோர் குமார் கதாநாயகனாய் நடித்து வெளிவந்திருக்கும் முதல் தமிழ் பட்ம். என்று எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம். கிஷோர் மிக அமைதியாய், தனக்கென ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு, தன் ஒரே கம்பெனியான சமையக்காரன், நண்பனாகிய சத்யனுடன் வாழ்பவன். அரசியல் ஆதரவு தாதாவை தற்கொலை முயற்சி செய்து மிரட்டியே கைது செய்ய வைப்பவன், வீரன், தீரன், சூராதி சூரன், ஒரே குத்தில் பழைய ப்ளைமெள்த காரை நகர்த்தி எறிபவன் என்று ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வருகிறார். இவரின் வாழ்க்கையில் அகஸ்மாத்தாய் நுழையும் பெண்ணினால் ஏற்படும், காதல், மோதல், வீழ்ச்சி, எழுச்சி என்றெல்லாம் போகிறது கதை. கிஷோர் என்ன செய்கிறார், ஏது செய்கிறார் என்று தெரியவில்லை. மிரட்டலான பாடி லேங்குவேஜால் அந்த் கேரக்டர் மேல் ஒரு எதிர்பார்ப்பை வரவழைத்துவிடுகிறார். அதை ஓரளவுக்கு பூர்த்தியும் செய்திருக்கிறார். படம் பூராவும் சத்யன் கேரக்டர் பேசிக் கொண்டேயிருக்கிறது. அவரின் பேச்சை விட அதை இடை மறித்து கிஷோர் பேசும் வசனங்கள் நச். ஓடிவரும் பெண் நல்ல குண்டு பப்பாளிப்...

கொத்து பரோட்டா –18/01/10

கெவின் காஸ்ட்னர் என்று ஒரு நடிகர், 1995 என்று நினைக்கிறேன் அன்றைய காலகட்டத்திலேயே ஹாலிவுட்டில் சுமார் 600 மில்லியனுக்கு மேல் செலவு செய்து, கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் கடலின் நடுவிலேயே செட் போட்டு, புயல் மழையில் அதெல்லாம் அழிந்து போய், மீண்டும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு, எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போய் ஒரு வழியாய் முடிக்கபட்ட “வாட்டர் வேர்ல்ட்” எனப்படும் அன்றைய ஹாலிவுட் பெரிய பட்ஜெட் படம். ஒரு சூப்பர் டூப்பர் ப்ளாப். இத்தனைக்கு அவர்கள் கையில் ஸ்கிரிப்டோடு எல்லாவற்றையும் பேப்பரில் இல்லாமல் போகாதவர்கள். இவர்களின் உழைப்பு ஒன்றும் யாருடைய உழைப்புக்கும் கீழ் இல்லை. ஒரு திரைப்படம் என்பது எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை வைத்து இல்லை. சொல்ல வந்ததை எப்படி மக்களிடம் கன்வே செய்திருக்கிறார்கள் என்பதை வைத்துதான். இவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள்.. அப்படி உழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் சிம்பதி காட்டக்கூடாது. அப்படியானால் யார் தான் உழைக்கவில்லை.. உழைப்பு உழைச்சிச்சான்னுதான் பாக்கணும். **********************************************************************************...

குட்டி – திரை விமர்சனம்

Image
தெலுங்கு சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிய படம் ஆர்யா. அல்லு அர்ஜூனில் மார்கெட்டையே மாற்றியமைத்த படம், தமிழ் இயக்குனர் சுகுமார் என்பவர் இயக்கிய படம். இதன் பிறகு அதே இயக்குனர் ஆர்யா-2 என்று படமெடுத்து அதுவும் ஹிட். இப்படி பல பாஸிட்டிவ் விஷயஙகளை கொண்ட படத்தை இவ்வளவு லேட்டாய் தமிழில் ரிமேக்கியிருக்கிறார்கள். ஸ்ரேயாவை கட்டாயப்படுத்தி காதலிக்க வைத்திருக்கும் காதலன், அவனை தான் நிஜமாகவே காதலிக்கிறோமா என்று கேள்வியோடு இருக்கும் ஸ்ரேயா, ஸ்ரேயாவும், எம்பி பையனும், காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் ஸ்ரேயாவை காதலிக்கும் தனுஷ். இதில் யார் காதல் ஜெயிக்கிறது என்பதை மிக இண்ட்ரஸ்டான ட்விஸ்ட் அண்ட் டர்ன்களுடன் அளித்திருக்கிறார்கள். ஸ்ரேயாவின் கொலுசை கன்யாகுமரி கடலில் குதித்தெடுக்க போனவன் யார் என்று தெரியாமல், ராத்திரிகளில் திடுக், திடுக் என எழுத்திருக்கும் காட்சியிலேயே ஸ்ரேயாவின் குழப்பமான சாப்ட் நேச்சர் பெண் என்பதை விளக்கிவிடுவதால் அதன் பின்பு வரும் காட்சிகளில் எம்பி பையன் தற்கொலை செய்யப் போகிறேன் என்று மிரட்டி காதலை பெறும் காட்சியில் அவருக்கு இருக்கும் காதலின் மேல் உள்ள சந்தேகம் நமக்கும் ஓட, அந்நேர...

நாணயம் – திரை விமர்சனம்

Image
கொள்ளையடிக்கவே முடியாத ஒரு பேங்கை வடிவமைத்தவனையே, மடக்கி அவன் மூலமே அந்த பேங்கை கொள்ளையடிப்பதுதான் கதை. இம்மாதிரியான கதைகளை எடுக்கும் போது ஆங்கில படங்களின் பாதிப்பில்லாமல் எடுக்க முடியாது. அதையும் மீறி விறுவிறுப்பாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். பிரசன்னா ட்ரஸ்ட் பேங்கின் முக்கிய பொறுப்பில் உள்ளவர், அவர் கனவெல்லாம் தனியே சொந்த தொழில் செய்வதுதான். அப்படியிருக்க பேங்கில் வேலை செய்து கொண்டே லோன் போட்டு, அதில் வரும் பணத்தை கொண்டு தொழில் ஆரம்பிக்கிறதாய் கனவு. பிரசன்னாவின் காதலி ஏற்கனவே ஒருவனை திருமணம் செய்து டைவர்ஸ் ஆனவள். ஏகாந்தமாய் கடற்கரையில் இருக்கும்போது அவளின் முன்னால் கணவன் வ்ந்து தகராறு செய்ய, அதில் ரவி, அவன் காதலி இருவரும் மயக்கமாக, கண் முழித்து வீடு வந்தால் வீட்டினுள் சிபி உட்கார்ந்திருக்கிறார். காதலியின் கணவனை அவன் கொன்று விட்டதாகவும, பிரசன்னா அவனுடன் சண்டையிட்ட காட்சிகளை படமெடுத்து வைத்திருப்பதாகவும், பிரசன்னா பேங்கை கொள்ளையடிக்க உடன்படாவிட்டால் அந்த போட்டோக்களை போலீஸுக்கு கொடுத்து மாட்டிவிட்டு விடுவோம் என்று சொல்லி மிரட்ட, ப்ரசன்னாவை வைத்தே காதலியின் கணவன் உடலை புதைக்க ...

ஆயிரத்தில் ஒருவன் – திரை விமர்சனம்

Image
35 கோடி பட்ஜெட் படம், நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்த படம், கிட்டத்தட்ட மூன்று வருடம் தயாரிப்பில் இருந்த படம். ஆண்ட்ரியாவின் மாலை நேரம் பாடல் முதல் கொண்டு ஹிட் பாடல்களை கொண்ட படம், செல்வராகவனின் ஃபாண்டஸி படம், கிட்டத்தட்ட மூன்று வருடஙக்ளுக்கு பிறகு கார்த்தி நடித்து வெளிவரும் படம் என்று பல சர்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்த படம். படத்தின் ஆரம்ப காட்சியில் சோழ மன்னன் தன் மகனை வேறொருவனிடம் கொடுத்து பாதுகாக்க சொல்லி அனுப்பும் தெருக்கூத்தோடு ஆரம்பிக்கிறது.அதன் பிறகு அப்படியே ஒரு பாழடைந்த இடத்தில் பிரதாப்போத்தன் உள்ளே செல்ல பின்னால் தொடரும் நிழல் அவரை விழுங்க.. அவரை தேடி அவரது பெண்ணும், அவர் செய்த சோழர் கால ஆராய்ச்சியை தொடர அமர்த்தப்படும் பெண் ரீமா, அவர்களுக்கு அடி பொடி வேலை செய்ய அழைக்கப்படும் கார்த்தி. இவர்களுடன் நம்முடய சோழர்களை தேடும் படலமும் ஆரம்பிக்கிறது. கப்பலில் ஏறும் காட்சியிலிருந்து சல,சலவென ஓடும் ஆறு போல ஓடுகிறது படம். பெரியதாய் கதை ஏதும் நகராவிட்டாலும், ரீமாவின் அதிரடி கேரக்டரும், ஆண்ட்ரியாவின் அமைதியான கேரக்டரும், கார்த்தியின் அடாவடி, தடாலடி வெட்டி பேச்சு க...

சென்னை சங்கமம்

Image
பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றியும்..பொங்கல் வாழ்த்துக்களும்.. சென்னை சங்கமத்தில் எங்களுடய குறும்படஙக்ளை திரையிடும் முகிலன் எங்களை நேற்று மாலை அழைத்திருக்க, போனோம். வாசுவும் தண்டோராவும் ஏற்கனவே அந்த ஏரியாவில் வேலையிருந்ததால் முன்பே வ்ந்திருக்க, நான் ஆறு மணிக்கு மேல் கிளம்பி போனேன். பீச்சுக்கு எதிரே லேடி வெலிங்டன் மைதானமே ஜெகஜோதியாய் இருக்க நல்ல கூட்டம். நடுவே உயராமாய் தனியே வெள்ளை உடையில் ஒருவர் தெரிய அப்துல்லா. ஒரு பக்கம் லோக்கல் ஜிம்னாஸ்டிக்கை சின்னஞ்சிறு சிறார்கள் அனாயசமாக செய்து கொண்டிருக்க, அதை பார்த்த ஒரு குட்டி பெண் இரண்டு வயதிருக்கும், நானும் ஏறுவேன் என்று அடம்பிடித்து அழ, வேறு வழியில்லாமல் ஆட்கள் துணையோடு குட்டி ஆர்வக்குட்டியாய் ஏறியது எட்டடி கழியின்மேல் பயமில்லாமல். இன்னொரு நாலு வயது பெண் குழந்தையொருத்தி, அவர்கள் கால்களை பின்னி பிணைவதை பார்த்து, தடுப்புக்கு போட்டிருந்த இரட்டை கட்டைகளுக்கு இடையே ஒரு காலையும், இன்னொரு காலை அப்படியே தூக்கி மேல் கட்டையிலும...

எண்டர் கவிதைகள்-6

Image
பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி அன்ன நடை விசுக், விசுக்கென துரித நடை குதித்தோடும் அவசர நடை அலுங்காமல் நடக்கும் பதவிசு நடை முலை குலுங்கும் ஓட்ட நடை தடுக்கிவிழுவாளோ என பதறும் நடை செல்பேசி தனக்குள் சிரிக்கும் வெட்க நடை ஐபாட்டை காதில் சொருகி சத்தமாய் பாடும் நடை கொட்டாவி விடும் பேரிளம் நடை வாயால் மூச்சு விடும் பெருத்த நடை நிமிடத்துகொருமுறை முந்தானை சரி செய்யும் நடை பெண்கள் ஒரு மாபெரும் உந்து சக்திதான் இல்லாவிட்டால் நான் எங்கே காலையில் எழுந்து நடப்பது. Technorati Tags: எண்டர் கவிதைகள் , கவிதை தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க எசமான்.. குத்துங்க...

கொத்து பரோட்டா –11/01/10

Image
பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி புத்தக சந்தை இனிதே முடிந்தது. இனி அடுத்த வருஷம் தான் என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. அட்லீஸ்ட் ஆறு மாசத்துக்கு ஒரு முறை வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சென்ற வருட சந்தையில் நிறைய எழுத்தாளர்களை சந்தித்து என்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்திருந்த நேரம். இந்த வருடம் அடுத்த கட்ட வளர்ச்சியாய் நிறைய பேர் என் பேரை சொன்னதுமோ, அல்லது பர்த்தவுடனேயே “என்ன கேபிள்.. எப்படி இருக்கீங்க..?” என்று குசலம் விசாரிக்கும் அளவுக்கு ஒரு நெருக்கத்தையும், எங்கு பார்த்தாலும், பதிவர்களை குழு குழுவாய் சந்தித்ததும், போனிலோ, மெயிலிலோ மட்டுமே அறிமுகமான பல நண்பர்களை நேரில் சந்தித்ததும், நிறைய வாசகர்கள் மெல்ல அருகில வந்து “நீங்க கேபிள்தானே?” என்று கேட்டுவிட்டு அளவளாவியதும், தினம், தினம் பதிவுலக நண்பர்களை சந்தித்ததும் இந்த வருட புத்தக சந்தை கொடுத்த சந்தோஷம் எல்லாம் இந்த பதிவுலகுக்கே சமர்பணம். ********************...

பதிவர் சந்திப்பு படங்கள்

Image
பதினெட்டே நாட்களில் 50,000 ஹிட்ஸுகளை கொடுத்து ஆறரை லட்சத்துக்கு உயர்த்தி அழகு பார்க்கும் அன்பு பதிவர்களுக்கும், நண்பர்களூக்கும், வாசகர்களுக்கும் நன்றி..நன்றி காவல் கோட்டம் நாவல் பிளக்ஸ் விளம்பரம் புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலின் வெளிப்புறம் பப்ளிஷர் வாசுதேவன் வெளிநாட்டு அழகிகளுடன் கோவை பதிவர் சர்ப்பூதீன், அவிங்க ராஜா, சங்கர் பதிவர் அ.மு.செய்யதும் நானும் பப்ளிஷர் வாசுதேவனும், பப்ளிஷர் குகனும் ரோமிபாய், பப்ளிஷர் வாசு, காவேரி கணேஷ், பப்ளிஷர் குகன், கார்க்கி காவேரி கணேஷ், பப்ளீஷர் குகன், தண்டோரா Technorati Tags: பதிவர் சந்திப்பு , புத்த்க கண்காட்சி தமிலிஷிலேயும், தமிழ்மணத்துலேயும் குத்துங்க எஜமான்.. குத்துங்க