Posts

Showing posts from April, 2010

Darling –2010

Image
ப்ரபாஸ், கருணாகரன், காஜல் அகர்வால், நம்ம் பிரபு, ஜி.வி.ப்ரகாஷ்குமார் என்று ஆந்திராவில் சம்மருக்கு எதிர்பார்ப்பை ஏற்றியிருந்த படம். ப்ரபாஸ் ஒரு ஜாலியான இளைஞன், அவனை ஒரு பெண் ப்ரபோஸ் செய்கிறாள். ஆனால் பரபாஸோ மறுக்கிறான். இதனால் மனம் உடைந்த அந்த பெண் சூசைட் செய்ய முயல்கிறாள். அந்த பெண்ணின் தாதா அப்பன் ப்ரபாஸின் நண்பர்களை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெண்ணை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்ட, தான் ஏற்கனவே காதலித்தவன் என்றும், அவள் தற்போது ஒரு விபத்தினால் கோமாவில் இருப்பதாகவும் அவளுக்காகத்தான் உயிர் வாழ்வதாய் சொல்கிறான். இவனின் கதையை கேட்ட தாதா, மனம் இறங்கி அவனையும், நண்பர்களையும் விடுவிக்கிறான். நிஜ வாழ்வில் அவன் சின்ன வயதிலிருந்து மனதில் இருக்கும் நந்தினியை நினைத்து சொல்லிய கதை, நிஜத்தில் அவள் வரும் போது நடந்ததா? என்பதுதான் கதை படம் முழுவதும் ப்ரபாஸ் இளமை துள்ளலோடு வளைய வருகிறார். ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் நன்றாக இருக்கிறது. படத்தில் நம் மனதை அள்ளுபவர் காஜல் அகர்வால். அவ்வளவு க்யூட். அதுவும் சுவிட்சர்லேர்ந்து எபிஸோடில் அந்த லொக்கேஷன்களும், அதில் தேவதை ட்ரஸில் சுற்றும்...

City Of Gold –(2010)

Image
மகேஷ் மஞ்ரேக்கர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல முகம் கொண்டவர். ஆனால் இவர் இயக்கியிருக்கும் ப்டம் தான் சிட்டி ஆப் கோல்ட்.  சிட்டி ஆப் ஆப்பர்சூனிட்டி என்றழைக்கப்படும் மும்பையை பற்றிய படம். மும்பை பம்பாயாய் இருந்த 80களில் அங்கே இருந்த மில்களையெல்லாம் மூடிவிட்டு, ரியல் எஸ்டேட் ஏறுமுகமாய் இருந்த நேரத்தில் மில்கள் எல்லாம் மால்களாய் மாறிய நேரத்தில் நடந்த கதை. மில்லை மட்டுமே நம்பி இருக்கும், குடும்பங்களையும், அவர்களின் வாழ்க்கையையும், சொல்லும் கதை. மில் தொழிலாளி குடும்பதலைவன், தலைவி, அவளின் எழுத்தாளர் மகன், கிரிக்கெட் பைத்திய, பக்கத்து வீட்டு குழந்தையில்லா மாமியுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இரண்டாவது மகன், மிடில் க்ளாஸ் மனப்பான்மையில் கனவுகளூடன் வாழும் மகள், அந்த ஏரியாவிலேயே ரவுடித்தனம் செய்து வாழும் கடைசி மகன், பக்கத்து வீட்டு குழந்தையில்லா மாமி, அவளின் குண்டு கணவன், மகளின் மளிகைகடை காதலன், மில் ஓனரின் மகன், யூனியன் தலைவர் ராணா, அவரது உதவியாளர் கோவிந்த், அவரின் திக்குவாய் மகன், லோக்கல் தாதா, ஹிஸ்டரிக்கலாய் மாரோ..மாரோ என்று உன்மத்தம் பிடித்தலையும் அந்த சிறுவன் என்று கேர...

கொத்து பரோட்டா –27/04/10

யுனிவர்சலின் அராஜகம் சமீபத்தில் புதிய மொபைல் வாங்குவதற்காக யூனிவர்சல் தி.நகர் பிராஞ்சுக்கு சென்றிருந்தேன். ஏற்கனவே விசாரித்து வைத்திருந்த சில மாடல்களை பற்றி மீண்டும் விசாரித்தேன். வெளியே நான் விசாரித்த விலையை விட சுமார் 500-600 அதிகமாக இருந்தது. ஏன் இவ்வளவு அதிகமாக சொல்கிறீர்கள்? இதே தியாகராயா ரோடில் இருக்கும் கடையில் இதை விட இன்னும் குறைவாக விற்கும்போது இவ்வளவு அதிகம் விற்றால் எப்படி? என்றதும். அவர்கள் நான் குறிப்பிட்ட மாடல் நம்பரை கேட்டார்கள். நான் மீண்டும் சொன்னவுடன், நாங்கள் சொன்னது அடுத்த மாடல் என்றார்கள். சரி நான் கேட்ட மாடலின் விலையை சொல்லுங்க. என்றதும். நீங்க கேட்குற விலைக்கு எல்லாம் வாங்க முடியாது. என்று விவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். எனக்கு கோபம் வந்தது. என்னுடன் வாருங்கள் நான் உங்களுக்கு வாங்கித்தருகிறேன். என்றதும், நீ கேட்கிற ரேட்டுக்கு பர்மா பஜார் பீஸ் தான் கிடைக்கும்.. நாங்க ஒரிஜினல் பீஸ் தான் தருகிறோம் என்று ஒருமையில் ஆரம்பிக்க, உன்னை யார் கடைக்கு வர சொன்னது போன்ற கேள்விகளை கேட்டவர் அக்கடையில் ஓனராக இருந்தாலே தவறு. ஊழியர் ஒருவர் கேட்க பெரிய ப்ரச்சனை ஆக, வேறு ஒருவர்...

ரெட்டச்சுழி – திரை விமர்சனம்.

Image
தமிழ் சினிமாவின் இமயமும், சிகரமும் இணைந்து நடித்திருக்கும் படம், இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பு, அங்காடித்தெரு அஞ்சலி நடித்திருக்கும் படம், என பலவிதமான எதிர்பார்புகளோடு வெளியாகியிருக்கும் படம்.. ஒரு ஊரில் இரண்டு தாத்தா இருந்தார்கள். இருவருக்கும் நாற்பது வருஷ பகை. இவர்களின் பகை இவர்களின் கடைக்குட்டி வாரிசுகளுக்கும் தொற்றிக் கொள்ள, இரண்டு பக்கமும் பகை. ஒரு கட்டத்தில் பாலசந்தர் வீட்டு பையனும், பாரதிராஜா வீட்டு பெண்ணும் காதலிக்க, இதை தெரிந்த இரண்டு வீட்டு குட்டி பசங்கள் ஒன்று சேர்ந்து காதலர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா? பெரிசுகளிடையே இருந்த பகை தீர்ந்த்தா என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்ப காட்சி முதலே ஒரு குழப்பம் கிளம்பிவிடுகிறது. இது சீரியஸ் படமா? அல்லது காமெடி படமா? என்று. ஏனென்றால் பாலசந்தர், பாரதிராஜா இருவரது நடிப்பும் ஒருவர் மேல் ஒருவர் காட்டும் காழ்ப்புணர்ச்சி ஏதோ காமெடி பட சீன்கள் போல இருக்கின்றதே தவிர கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லை. அப்படி காமெடி படம் தான் என்றால் அதிலும் சீரியஸ்னெஸ் இல்லை. அதிலும் இந்த தள்ளாத...

”ஆமென்”

”ஆமென்” என்கிற புத்தகம் வெளிவந்த ஆறே மாதங்களில் 12 பதிப்புகளை கண்டிருக்கிறது. இதை எழுதிய பெண் தலைமறைவாக இருக்கிறாராம். அவர் பெயர் சகோதரி ஜெஸ்மி. இவரது புத்தகத்தில் பாதிரியாரால் பாலியல் ரீதியான பலாத்காரத்துக்குள்ளாகி தான் பட்ட வேதனைகளை, கொடுமைகளை பற்றி எழுதிய புத்தகம் தான் அது. இப்புத்தகம் உலகம் முழுக்க பலமான அதிர்வுகளை ஏற்படுதியுள்ளது என்றால் அது மிகையில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் இவர் ஆமென் புததகத்தின் இரண்டாவது பாகத்தை எழத ஆரம்பித்திருக்கிறார். இவர் எழுதிவரும் புத்த்கத்தின் மூலமாய் வறுமையினால் வாடும் அப்பாவி பெண்கள் சேவைக்காக தங்களை அர்பணித்து திருச்சபைகளில் கன்யாஸ்த்திரிகளாய் தஞ்சம் அடைபவர்களை, பாதிரியார்கள் பாலியல் ரீதியாய் சித்திரவதை செய்வதை பற்றி வெளிச்சத்துக்கு கொண்டு வரும் புத்தகமாய் இருக்கும் என்கிறார் ஜெஸ்மி. சமீபத்தில் கூட ஊட்டியில் ஜோசப் பழனிவேல் ஜெயபால் என்கிற பாதிரியார் மீது அமெரிக்காவில் பெண் குழந்தைகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாய் குற்றம் சாட்டப்பட்டு அது கிட்டத்தட்ட நிருபிக்கப்பட்ட நிலையில் இவர் அங்கிருந்து தப்பி இங்கே ஊட்டியில் குஜாலாக இருந்திருக்கிறார். ...

Phoonk 2 –(2010)

Image
x ஏற்கனவே முதல் பாகம் பார்த்தவர்களுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. முதல் பாகத்தில் தன்னுடன் தொழில் செய்யும் ஒரு பெண் தன்னை ஏமாற்றுகிறாள் என்று கண்டுபிடித்து அவளை வெளியே அனுப்புகிறான் கதாநாயகன். அவள் அவனை பழி வாங்க.. அவனின் வீட்டிற்கு பில்லி சூனியம் வைக்கிறாள். அதனால் அவனது பெண்ணுக்கு பேய் பிடித்து எக்ஸார்ஸிஸ்ட் போல ஆகிவிட, பேய் பூதங்களை நம்பாத கதாநாயகன் அவளுக்கு மருத்துவ ரீதியாய் ட்ரீட்மெண்ட் செய்ய, இன்னொரு பக்கம் அவனது மனைவி மாந்திரீகத்தை அணுக, இருக்கும் பிரச்சனைகளுக்கு நடுவே மாந்திரீகம் இருக்கிறது என்று மனைவியும், இல்லை என்று கணவனும் சண்டைப் போட்டுக் கொள்ள், ஒரு கட்டத்தில் கணவன் நம்பி ஒரு கண் தெரியாத மாந்திரீகனை அழைத்து பில்லி சூனியத்தை கண்டுபிடித்து, பேயிடமிருந்து விடுவிக்கிறான். ஏவிவிட்டவள் இறக்கிறாள். இரண்டாவது பாகத்தில் இறந்து போன அந்த பெண் ஆவி ரூபமாய் கதாநாயகனின் குடும்பத்தை தொடர்கிறாள். காட்டில் குழந்தைகள் மூலமாய் ஒரு பொம்மை ரூபத்தில் வீட்டிற்குள் நுழைய, கொஞ்சம், கொஞ்சமாய் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவனின் மனைவிக்குள் பேய்யா இறங்கிவிடுகி...

கொத்து பரோட்டா – 19/04/10

Image
கோபிக்கு போயிருந்தேன் நம்ம ஈரோட்டு கதிருக்கு போன் செய்தபோது மாலை ஒரு நிகழ்ச்சி இருப்பதாகவும் நிச்சய்ம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். என்னை பிக்கப் செய்து கொள்வதற்கு ஒரு ஏற்பாட்டையும் செய்து வைத்தார். அந்த விழா மரங்களின் தந்தை என்றழைக்கப்படும் அய்யாசாமி அய்யாவுக்கும். காஞ்சிக் கோவில் நாகராஜன் அவர்களுக்கும், நாமக்கல் கலெக்டர் சகாயம் அவர்களால் பாராட்டு விழாவுக்கான லயன்ஸ் க்ளப் ஏற்பாடு செய்திருந்த விழாதான். அய்யாசாமி அய்யா இதுவரை 3000 மரங்கள் வளர்த்திருக்கிறார். திரு நாகராஜன் அவர்கள் அவருடய ஏரியாவை சுற்றி சுமார் பத்தாயிரம் மரங்கள் வளர்த்திருக்கிறார். அவர்களுடன் காரில் பயணித்த போது பேசியது மிகவும் சந்தோஷமாக இருந்த்து. உடல் நிலை மற்றும் வயது காரணமாய்  தளர்வடையாமல் இன்னமு தங்கள் கஷ்ட ஜீவனத்தினூடே இதை செய்து கொண்டிருக்கும் இருவரையும் வாழும்பெரியார் என்று கலக்டர் அவரக்ள் பாராட்டியது தகும். நாகராஜனின் பேரன் அவனது பள்ளியில் இரண்டு மரங்களை வளர்க்கிறானாம். இதை பற்றிய விரிவான ஈரோடு கதிரின் பதிவை படிக்க … ############################################################ ...

சிவப்பு மழை- திரை விமர்சனம்

Image
கின்னஸ் சாதனைக்காகவே எடுக்கப்பட்ட படம். அதாவது மொத்த படத்தையும் 12 நாட்களில் தயாரித்து, வெளியிட தயாராக்கிய படம். என்று கின்னஸ் சாதனை செய்த படம். மத்திய அமைச்சரின் பெண்ணை கடத்தி வைக்கிறான் ஒரு இலங்கை இளைஞன். அவனுடய ஜெயில்வாசி சகாக்களை விடுதலை செய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறான். அதை செய்ய மறுத்தால் மத்திய மந்திரியின் பெண்ணை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். ஒரு பக்கத்தில் போலீஸ் மந்திரியின் பெண்ணை மீட்பதற்காக போராடுகிற்து. இன்னொரு பக்கம் மந்திரி பெண்ணுக்கு தன்னை கடத்திய இளைஞன் தீவிரவாதி இல்லை நல்லவன் என்று புரிந்து அவனுக்கு உதவுகிறாள்.  அவன் ஏன் இவளை கடத்தினான், எதற்காக அந்த இரண்டு ஜெயிலில் உள்ள ஆட்களை விடுதலை செய்யச் சொன்னான் என்பதை முடிந்தவரை இண்ட்ரஸ்டாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். முதல் பாதி ஓரளவுக்கு பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் ரெண்டாவது பாதியில் வரும் இலங்கை பிரசசனையில் வில்லன்கள் தமிழ் பேசுகிறார்கள். அவர்கள் ராணுவ உடை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் சிங்கள வீரர்களா..? அல்லது விடுதலை புலிகளா..? சிங்கள ஆள் என்றால் அவன் ஏன் தமிழ் நாடி...

ஜில்லுனு காத்து . .. ஜன்னலை சாத்து.

ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்... சில மாதங்களுக்கு முன் சென்னை  உள்ள பெண்கள் கல்லூரியில் நடந்த கல்சுரல்ஸ் நிகழ்ச்சி ஒன்றுக்கு நடுவராய் கூப்பிட்டிருந்தார்கள். பம்மலில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது,  ரயில்வே ஸ்டேஷனில் நின்றபடி, சைட் அடிப்பதற்காகவே பல்லாவரத்தில் இறங்காமல் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி எல்லோரையும் ”அனுப்பி” வைத்துவிட்டு அடுத்த ரயிலை பிடித்து அவசர அவசரமாய் காலேஜுக்கு போன நாட்கள் ஞாபகம் வந்தது. இப்போது அந்த காலேஜில் நடக்கும் விழாவுக்கு நடுவர். உள்ளே நுழைந்ததும் எங்கே பார்த்தாலும் பிஸியாய் மாணவிகள் அலைந்து கொண்டிருந்தார்கள். கல்சுரல்ஸ் என்பதால் மற்ற கல்லூரியிலிருந்து மாணவர்களும் வந்திருந்ததால், அவர்களுடன் சில மாணவிகள் மட்டும் தைரியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள்  பேசிக் கொண்டிருப்பதை மற்ற பெண்கள் பார்க்கிறார்களா? என்று நோட்டம் விட்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படி பேசும் போது அவர்களின் பாடி லேங்குவேஜ் ம...

பார்கிங் எனும் பகல் கொள்ளை

Image
ஒன்பது லட்ச ஹிட்ஸுகளையும், எழுநூற்றி சொச்ச பாலோயர்களையும் அளித்து மென்மேலும் என்னை ஊக்குவிக்கும் வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும் நன்றியும்.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும்... சென்னையில் எனக்கு தெரிந்து ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் கூட சைக்கிளுக்கு 3 ரூபாயும், பைக்குக்கு 5 ரூபாயும், கார்களுக்கு 10 ரூபாயும் வாங்கி கொண்டிருந்தார்கள். பின்னாளில் பல காம்ப்ளெக்ஸ் தியேட்டர்களில் சைக்கிள் பார்க்கிங் என்பதே இல்லாமல் வழக்கொழிந்துவிட்டது. சென்னையில் பைக் பார்க்கிங்குக்கு பத்து ரூபாய் வாங்கிய புண்ணியத்தை கட்டிக் கொண்டவர்கள் சென்னையில் ஏன் தமிழ் நாட்டிலேயே முதல் முதலாய் மல்ட்டிப்ளெக்ஸ் எனும் கான்செப்டை அளித்த சத்யம் தியேட்டர் நிறுவனத்தினர் தான். அருமையான உள் கட்டமைப்பு வசதியோடு ஒளி, ஒலி அமைப்புடன், முதல் தரமான வசதிகளூடன் அமைக்கப்பட்ட தியேட்டருக்கு மக்களின் அமோக ஆதரவினால் இன்றளவிலும் சென்னையின் மிக சிறந்த மல்ட்டிப்ளெக்ஸாக உருவெடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. முதலில் பைக்குக்கு பத்து ரூபாய் என்பது கஷ்டமாக இருந்தாலும், மெல்ல, மெல்ல அது பழகிவிட...

கொத்து பரோட்டா –12/04/10

விரைவில் வரப்போகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நக்கீரன் கோபாலிடம் ஒரு நேர்காணல் படப்பிடிப்பு நடத்தினோம். நேர்காணலில் புலனாய்வு பத்திரிக்கையாளரின் பணி மற்றும் அப்பணியின் பிண்ணனி என்ன என்பது பற்றி நிறைய பேசினார். அப்போது பல சமயம் பணம் கொடுத்துக் கூட செய்திகளை பெற்றிருக்கிறதாக சொன்னார். பேட்டி எடுத்தவர் சட்டென அதை பிடித்துக் கொண்டு மற்றவர்கள் லஞ்சம் வாங்கினால் அதை பற்றி உங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு அவர்க்ளின் முகத்திரையை கிழிக்கிறீர்களே? இப்போது நீங்களே லஞ்சம் கொடுத்து செய்தியை பெறுகிறீர்கள் என்று சொல்கிறீர்களே..? என்று மடக்கியவுடன், நக்கீரன் கோபால் சிரித்தபடி அண்ணாசாலையில் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும், அதை மீறி போனால் அவர்களை பிடித்து தண்டிப்பதுதான் ஒரு போலீஸ்காரன் வேலை. அதிக வேகத்தில் வண்டி ஓட்டிப் போகிற ஒருவனை சட்டப்படி ஓட்டக்கூடிய 50 கி.மீட்டரில் அவனை துரத்தினால் 100.கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டுபவனை பிடிக்க முடியுமா? அதனால் அவனை பிடிக்க 110 கீ.மீட்டர் வேகத்தில் ஓட்டினால் தான் பிடிக்க முடியும். அது போலத்தான் பணம் கொடுத்து செய்திகளை சேகரிப்பது என்றாரே பார்கலாம். இண...

Omkara-2006

Image
    எப்படி இந்த படத்தை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. மக்பூல் பார்த்த போதே விஷால் பரத்வாஜின் கதை சொல்லும் முறையில் இம்ப்ரஸானவன் நான். அதிலும் இப்படத்தில் விஷால், அஜய்தேவ்கன், சாயிப் அலிகான், கரீனாகபூர், விவேக் ஓபராய்,கொங்கனா சென் என்று நடிகர் பட்டாளம் அணிவகுத்திருக்கும் இப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் விட்டது ஆச்சர்யமாகத்தானிருக்கிறது. ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ”வை தழுவி எடுக்கப்பட்ட படம். ஓமி என்கிற ஓம்கார் உ.பியில் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திவரும் ஒரு தலைவன். அவனுக்கு இடதும் வலதுமாய் லங்டாவாய் சாயிப் அலிகானும், கேசுவாக விவேக் ஒபராயும் இருக்க, ஓமி தன்னுடய கிராமத்தின் அடுத்த தளபதி போன்ற போஸ்டுக்கு கேசுவை தெரிவு செய்துவிடுகிறான். இதனால் அவன் மேல் பொறாமை பட ஆரம்பிக்கும் லங்டா, கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பற்றிய பல விஷயங்களை தவறாய் ஓமியிடம் போட்டு கொடுக்க ஆரம்பிக்க, ஓமியின் காதலியான டாலிக்கும், கேசுவுக்கும் இடையே காதல் என்கிற திரியை போட்டு கொளுத்த ஆரம்பிக்க,  ஒமியின் குடும்ப நகையை, அதுவும் டாலிக்கு கொடுத்ததை, இந்து அதை திருடி கொண்டு விட, அதை வைத்து லங்டா பற்ற வைக்கும் திரி பற்ற...

Joyfull சிங்கப்பூர்-7 நிறைவு பகுதி

Image
அடுத்த நாள் காலையிலேயே குளித்து முடித்து ரெடியாகிவிட்டேன். பதிவர் ரோஸ்விக் விக்டர் பிரபாவின் வீட்டிற்கே வந்து விட்டார். அவருடய நண்பரும் என்னுடய வாசகருமான ராஜ் உடன். ராஜ் பதினைந்து வருட சிங்கப்பூர்வாசி. நல்ல டால் அண்ட் ஸ்லிம் பர்சனாலிட்டியாய் இருந்தார். மணக்க, மணக்க கொங்கு தமிழ் பேசுகிறார். பார்த்தவுடன் ரொம்ப நாள் பழகியவர் போல் பழகுகிறார். அவ்வளவு இயல்பு. பழகிய ஒரே நாளில் நெருக்கமாகி போனவர். இவர் டன்ஹில் புகைக்கும் ஸ்டைல் நன்றாக இருக்கும். இவர் ஒரு தகவல் களஞ்சியம். சிங்கப்பூரை பற்றி பல விஷயங்களை அருமையான ஜுராங்பார்க் டிரைவின் போது சொல்லி வ்ந்தார். அவரின் ஜிபிஎஸ் பெண் அவ்வப்போது நேராக போ, லெப்டில் திரும்பு, ரைட் திரும்பு, கேமரா இருக்கிறது, என்று சொல்லிக் கொண்டே வந்தது. வழி மாறிவந்துவிட்டால் கூட அடுத்த கணம் மாற்று வழி காண்பித்தது. சிங்கப்பூரை விட மலேசியாவில் பெட்ரோல் விலை குறைவாம். அதற்காகவே ரோட் வழியாக கிட்டத்தட்ட காலி டாங்குடன் மலேசியா சென்று அங்கிருந்து புல் கேங்குடன் வருவார்களாம். அதை கண்காணிக்க அங்கே ஆட்கள் இருக்கிறார்களாம். சிங்கப்பூரில் ...