ஏர்டெல் கொள்ளை
இரண்டு கம்பெனி, மூன்று கம்பெனி என்று இப்போது, ஏர்டெல், ஏர்செல், வோடோபோன், ரிலையன்ஸ், டோகோமோ, எம்.டி.எஸ், யுனிநார், என்று ஜி.எஸ்.எம்மிலும், சிடி.எம்.ஏ டெக்னாலஜியிலும் நிறைய மொபைல் சர்வீஸ் கொடுக்கும் கம்பெனிகள் வந்தாலும் நமக்குதான் விடிய மாட்டென் என்கிறது.
அளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அந்த ஸ்கீம், இந்த ஸ்கீம் என்று அறிவித்தாலும் எல்லோரும் பேசி வைத்துக் கொண்டு ஒரே கணக்கை மாற்றி மாற்றி காட்டுகிறார்கள் அவ்வளவுதான் அது போஸ்ட்பெய்ட்டாக இருந்தாலும் சரி. ப்ரிபெய்ட்டாக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே கணக்குத்தான். சரி பண விஷயத்தை விடுவோம்.
ஆனால் கஸ்டமர் சர்வீஸ் விஷயத்தில் மட்டும் ஒரு சில நிறுவனங்கள் பரவாயில்லாமல் இருந்தது. அதில் ஒன்று ஏர்டெல் அதுவும் கூட என்னை பொருத்த வரையில் என்று தான் சொல்வேன். ஏனென்றால் சில பேருக்கு ஏர்டெல்லில் கூட பிரச்சனையிருப்பதாய் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவர்களின் சர்வீஸை பற்றி புகழ் பாடிக் கொண்டிருந்த எனக்கு அவர்கள் செய்திருந்த ஒரு விஷயம் கடும் கோபத்தை ஏற்றிவிட்டது. என்னுடய போனில் மொபைல் இண்டெர்நெட் வேலை செய்ய வில்லை அதற்காக, அவர்களுடய கஸ்டமர் கேர் நம்பரான 121க்கு போன் செய்தேன் வழக்கமான ஆட்டோமேட்டட்வாய்ஸில் ஒன்னை அழுத்து, இரண்டை அழுத்து என்று எலலாவற்றையும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு அழுத்தி விட்டு கடைசியாய் கஸ்டமர் கேர் ஆளிடம் பேச வேண்டும் என்று 9 ஐ அழுத்தினால், ஒரு அறிவிப்பு வ்ந்தது. இனி பேசும் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கு 50 பைசா கணக்கில் சேர்க்கப்படும் என்ற அறிவிப்புதான்.
ஒரு கஸ்டமருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால்தான் போன் செய்யப்போகிறான் அப்படி பிரச்சனையை சொல்லவே காசு பிடுங்க ஆரம்பித்தால் என்ன அநியாயம்?. பகல் கொள்ளையாக அல்லவா இருக்கிறது. இதை விடக்கூடாது என்று மேற்கொண்ட காலை தொடர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு பின் ஒரு கஸ்டமர் கேர் ஆள் லைனில் வர, எப்படி நீங்கள் சர்வீஸ் கால்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் அதுவும் உங்கள் நெட்வொர்க் போனிலிருந்து கூப்பிடும் போதே? என்று கேட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல் “ஆமாம் மாற்றி ஒரு மாதமாகிவிட்டது. “ என்றார் தெரிமுனை. “யாரை கேட்டு செய்தீர்கள். இது பற்றி நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்களா..? கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறீர்களே.. இதையும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி தொலைத்திருக்கலாமில்லையா..?” என்றேன் கோபத்தோடு. எதிர்முனை இன்னமும் அமைதியாய் “அறிவித்தாகிவிட்டது சார். பேப்பரில் சின்ன விளம்பரம் போட்டோமே..?” என்றார். எனக்கு இன்னும் கோபம் ஏறிவிட்டது “ஏன்யா புது ஆபர்.. விலை ஏறுகிறது என்றால் பத்து தடவை அனுப்புகிறீர்கள். இம்மாதிரியான விஷயஙக்ளுக்கு மகக்ளிடம் எதிர்ப்பு வரும் என்பதால் பேப்பரில் சின்ன விளம்பரமா..?” என்றதும் “சார். நாங்க டிராய் கிட்ட அனுமதி வாங்கிட்டு தான் செய்யறோம்.” என்றார்.
எனக்கு இன்னும் பிரஷர் எகிறியது. டிராயின் ரூல்ஸ் என்ன தெரியுமா.? வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடய சர்வீஸிலோ, அல்லது அதற்கான பண விஷயமோ எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக ஒவ்வொரு வாடிக்கையளர்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்ற ரூல்ஸ் இருக்கிறது என்று சொன்னதும். “இருங்க காலை என் ஆபீஸருக்கு மாற்றுகிறேன்” என்று என் லைனை ஹோல்ட் செய்யும் முன், “சார்.. 198 என்று ஒரு நம்பருக்கு போன் செய்தால் அதற்கு டோல் ப்ரீதான் என்றார்.
டிரான்ஸ்பர் செய்த கால் கட் செய்யப்பட்டது. இது வரை 28 நிமிடங்கள் நான் பேசியிருகிறேன். இவர்களுடய சர்வீசை குறை சொல்ல எனக்கு செலவு. அடுத்து 198க்கு போன் செய்தால் எடுத்தவுடன் அவர்களும் ஆட்டோமேட்டட் வாய்ஸில் நம்பர் அழுத்த சொல்லி மேலும் விவரஙக்ளுக்கு 121 ஐ காண்டேக்ட் செய்ய சொல்கிறார்கள். மறைமுகமாய் மீண்டும் அதே நம்பருக்கு அழைக்கச் சொல்லி பணம் பிடுங்கவே முயல்கிறார்கள். அதையும் தாண்டி வெயிட் செய்து கஸ்டமர் கேர் ஆளிடம் பேசிய போது இது டோல் ப்ரீதான் சார். அந்த நம்பரை பற்றி பேச நீஙக் அந்த நம்பரில் போன் செய்து கம்ப்ளெயிண்ட் செய்யுங்க்ள் என்றார். இங்கு பேசிய பிரகஸ்பதி.
எப்படியெலலாம் மக்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களை கேட்க ஆளேயில்லையா..? ஏற்கனவே இருக்கும் ஸ்கிமை விட இன்னும் குறைந்த விலையில் ஸ்கீம் மாற்றினாலும் நாமாக கேட்டாலே ஒழிய அவர்கள் சொலல் மாட்டார்கள். வந்த வரைக்கும் லாபம் தானே. இப்படி கொள்ளையடிப்பதையே வழக்கமாய் கொண்டவர்களூக்கு கஸ்டமர் கேருக்கு போன் செய்பவர்களுக்கு சார்ஜ் செய்துவிட்டால் பிறகு எவனும் போனே செய்ய மாட்டான். கேள்வி எதுவும் கேட்க மாட்டான், அப்படியே கேட்டாலும் காசு கட்ட வேண்டும் என்று திரும்ப திரும்ப போன் செய்ய மாட்டான் என்று நினைக்கிறார்கள் போலும். இதை பற்றி ட்ராயும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.
என்னால் முடிந்த்து அதே ஏர்டெல் 121க்கு STOP CHARGING FOR CUSTOMER CARE என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறேன். இதுவரை ஒரு பத்து மெசேஜ் அனுப்பியுள்ளேன். நீங்களும் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளராய் இருந்தால் உடனே 121க்கு SMS அனுப்புங்கள். இது டோல் ஃப்ரி நம்பர் தான். இவர்களுக்கு காட்டும் எதிர்ப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாய் அமையும்.
கேபிள் சங்கர்
Comments
ஹலோ என்றதும் பட்டென்று அழைப்பு தூண்டிக்கப்படும் 49 பைசா அவர்களுடைய கருமாந்திர செலவுக்கு.. இப்படியாக பல நூறு ரூபாய்கள்.. மாவொயிஸ்ட்கள் ஏன் உருவாகிறார்கள என்று மிக சுலபமாக புரிபடுகிறது.. ஏனெனில் நான் மிக சாதாரணமாண சுயதொழில் செய்து பிழைப்பவன்.. இதற்காக யாரை கேட்பது என்று தெரியாமல் வெறியோடுதான் அலைகிறேன்..நான் ஒரு நிறுவனத்துக்கு பணத்தைக்கொடுத்து மன நிலை தவறும் வியாதியை வாங்கிக்கொண்டிருக்கிறேன்...
Transparent billing is the main aspect of BSNL.
They intimate the changes in the telephone bill itself.
இதையும் மீறி மற்ற கம்பெனிகளுக்கு மக்கள் செல்ல ஒரு காரணம் அலை வரிசையை சமமாக கொடுத்தது. குறைந்த சந்தாதாரர்கள் உள்ள கம்பெனி நிறைவான சேவை கொடுப்பது போல் ஒரு மாயை. That is because of the bandwidth shared by few customers rather than of the service.
சில தகவல்களை சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.
athe
ஏர்டெல் பெங்களூரில் பதினைந்து நிமிடத்திற்கு மேல், கால் டிராப் ஆகிவிடும். அதனால் நான் வைத்திருப்பது வோடபோன் தான். வீட்டில் டாட இண்டிகாம், ஒரே நெட்வர்க் வேண்டாமே.
ப்ரீ பெயிடில் அவர்களுக்கு லாபம் இல்லை. அதனால் சார்ஜ் தான்! போஸ்ட் பைடில் சர்வீஸ் கால் இலவசம் என்று தான் சொல்கிறார்கள்.
நம்ம காசை பேங்கில் வைத்திருக்க நாம் சர்வீஸ் சார்ஜ் கொடுக்கும் கதை தான் இது. அமெரிக்காவில் டோல் ப்ரீயில் கூப்பிட்டாலும் ஒரு என்கொயரிக்கு ஒரு டாலர் சார்ஜ் செய்வார்கள், சிறு அக்கவுண்டிற்கு. டெக்சாஸ் பேங்கில் ஒரு அக்கவுன்ட் இன்றும் வைத்துள்ளேன், வருடம் ஐம்பது டாலர் மினிமம் மெயண்டைனன்ஸ் சார்ஜ் செய்கிறார்கள். ஆன் ஹோல்ட் அக்கவுன்ட் வைக்க வருடம் நூறு டாலர். அதற்கு இது பெட்டர்.
சிடிபேன்க்கில் ஒரு ஆயிரம் ருபாய் செக்கை நேரில் சென்று டெல்லர் மூலம் டெபாசிட் செய்தால், முந்நூறு ருபாய் ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ் பனால். ஐ.சி.ஐ.சி.ஐ யில் நூற்றி ஐம்பது ப்ளஸ் சர்வீஸ் டேக்ஸ. சர்வீசுக்கே சர்வீஸ் டேக்ஸ். போனில் கூப்பிட்டு திட்டினால், வீட்டிற்கே ஒருவர் வந்து செக் வாங்கி செல்வார்.
மக்கள் தான் புறக்கணிக்கனும். ட்ராய்க்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்.
http://www.trai.gov.in/ConsumerInterest.asp
Nodal Offier/ Appellate Authority..
TAMIL NADU (Incl. CHENNAI)
(a) 198 (Toll Free) (b) For Chennai: PostPaid-9840012345,Prepaid-9840198401 (Toll Free from Airtel Mobiles in Home Network) ( c) For TN : PostPaid-9894012345,Prepaid-9894198941 (Toll Free from Airtel Mobiles in Home Network)
Nodal Officer;
Vasim Unissa Oceanic Towers, 8th Floor, 101 Santhome High Road, Chennai 600 028, Tamil Nadu Phone:9952434865,Fax:9840198600,E-mail:nodalofficer.tn@airtel.in
Appellate Authority:
Radhika Ramesh Oceanic Towers, 8th Floor, 101 Santhome High Road, Chennai 600 028, Tamil Nadu Phone:9940644865,Fax:9840198600,E-mail:appellate.tn@airtel.in
More Details:
http://www.trai.gov.in/sp/AIRTEL.pdf
நாம இப்படி வேதனைப் பட்டு கத்திகிட்டே இருக்க வேண்டியதுதான். TRAI எல்லாம் ஒரு காமெடி பீஸுண்ணா, புண்ணாக்கு மூட்டை ....ம் ... கொஞ்சம் லாஜிக்
நானும் ஏர்டெல்தான். உங்க பதிவை படிக்கும்வரை 121-க்கு கால் செய்தால் சார்ஜ் என்பது எனக்குத் தெரியாது. சின்ன விளம்பரம் கொடுத்தா சரியாயிடுமாமா? நாயிங்க.
【♫ஷங்கர்..】 ™║▌│█│║││█║▌║ - உங்கள் தகவலுக்கு நன்றி. இப்போழுதே நானும் ஒரு கம்ப்ளெய்ன்ட் அனுப்புகிறேன்.
ஏர்டெல்லுமா எல்லா பயலும் கூடி பேசிட்டு தான் கொள்ளை அடிக்கிறானுங்களா
அதே சமயம், வண்டி பழுதாகி விட்டது. ஆள் அனுப்புங்க. என்று அழைத்துக் கிண்டல் செய்தால், அவர்களும் என்ன தான் செய்வார்கள்.
இனி, ஒரு மணித்துளிக்கு 3 ரூபாய் என்று கட்டணம் வசூலித்தால் இது போன்ற அனாமதேய அழைப்புகளைத் தவிர்க்கலாம் என நினைத்திருக்கலாம்.
இப்பவே எஸ் எம் எஸ் செய்றேன். வேற யார் செஞ்சீங்கப்பா?
சிவா
தகவலுக்கு மிக்க நன்றி திரு.கேபிள் சங்கர் அவர்களே.
நான் டயலொக் தான் பிரதானமாகப் பயன்படுத்துகிறேன், அவ்வப்போது ஏனைய வலையமைப்புக்களைப் பயன்படுத்திப் பார்த்ததுண்டு ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவர்கள் சொல்லும் ஒஃபர் எல்லாம் பொய்ப் பித்தலாட்டங்கள் தான் - கூட்டிக்கழிச்சுப்பார்த்தா எல்லாமே ஒரே கணக்குதான்!
கேபிள் SMS அனுப்பியாச்சு
// என்னோட நோக்கியா 1100 மொபைலிலும் இன்டர்நெட் வேலை செய்யமாட்டேங்குது தோழர், அப்புறம் ஒழுங்கா அயன் செய்யும் பொழுது ஹீட்டும் டக்கு டக்குன்னு போய்விடுது, அப்புறம் துணியை எல்லாம் ஒழுங்கா துவைக்கமாட்டேங்குது தோழர் இந்த நோக்கியா 1100 என்ன செய்யலாம் கொஞ்சம் சொல்லுங்களேன். யாருக்கும் SMS அல்லது தந்தி அனுப்பி விளையாடலாமா?:))
எஸ்எம்எஸ் அனுப்பினா நீதி கிடைக்குமா தோழர்
”அவரிடம்” கேட்டால் அழகிரி நம்பர் தருவார், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்!
எல்லாருமே கூட்டுக் களவாணிகளாக இருக்காங்களே..!
கொள்ளையடிக்காதவன் யாராவது இருந்தா கை காட்டுங்க.. அவங்ககிட்ட போலாம்..!
தேவையான பதிவு C, கடந்த முறை இந்தியா வந்த பொழுது GPRS எனேபிள் செய்ய படாத பாடு பட்டேன், கஸ்டம் கேருக்கு போன்செஞ்சாலு போகவில்லை, நானே நேரா போய் என்னாடா சர்வீஸ் கொடுக்குறீங்க என்று நல்லா நாக்கை புடுங்கிக்கிறமாதிரி நாலு கேள்வி கேட்டேன் C, மொபைலை வாங்கி பார்த்துட்டு கூடவே ஒரு 10 ரூபாய் டாப் அப் கார்ட் கொடுத்தான் அதுதான் என்ன எழவுக்குன்னே புரியல C. கொஞ்சம் அது ஏன்னு கேட்டு சொல்லுங்களேன்.
@குசும்பன்
எஸ்எம்எஸ் அனுப்பினா நீதி கிடைக்குமா தோழர்
//
நீதியோடு கூடவே ஒரு மணியும் கொடுப்பாங்க தோழர், அடுத்த முறை நீதி கிடைக்க மணி அடிச்சா போதுன். ஓடி வந்து நீதி கொடுப்பாங்க இல்லை என்றால் நம்மை குப்புற போட்டு தேரை மேலே ஏத்துவாங்க தோழர்.
அதென்ன C , சி பார் கேட்டா?
மும்பை எக்ஸ்பிரஸ் படம் பார்க்கலையா?
தேவையான பதிவு C..//
அதென்ன C , சி பார் கேட்டா?
//
இல்லை தோழர், ஜீ வட மொழி சொல், அதுமட்டும் இல்லாமல் பையா இயக்குநர் லிங்கு சாமி கூட பையா விளம்பரத்தில் ஜீன்னு ஒரு படம் எடுத்ததையே தமிழ் மொழி ஆர்வத்தினால் அதை போடவில்லை.
நான் சுத்த அக்மார்க் தமிழ் வலைப்பதிவர் தோழர் ஆகவே வடமொழி சொல்லை உபயோகிப்பது இல்லை.
வடமொழி சொல்லை உபயோக்கிகாதோர் பேரவை-துபாய் கிளை
எனக்கும் இப்படியே சொன்னாங்க , இப்போலாம் கொஞ்ச நாளா நானும் கஸ்டமர் கேர் ஆளுங்ககூட சண்டைதான் போடுறேன் . நெட் பயன்படுத்தாமலே சார்ஜ் பண்ணாங்க அதுக்கும் போன் பண்ணி திட்டினேன் . இல்லாத ஒன்ன நான் subscribe பண்ணதா சொன்னாங்க . நான் திட்டினா உடனே கால் கட் பண்ணிடுவாங்க . அப்புறம் மொபைல் ஆபீஸ் வொர்க் அகவே இல்ல . உங்களுக்கு வந்த அதே பிரச்னை 50 பைசா . அப்புறம் நான் பைசா செலவில்லாமலே மொபைல் ஆபீஸ் அக்டிவேட் பண்ணேன் . *121 # பண்ணுங்க .அதுல சில options வரும் . அதுவும் நேரிடையா நெட் option நமக்கு புரியும்படி இருக்காது other services ல வரும் . ஆனா அதுல இருக்குற ஒரு option தான் . அந்த நம்பர் பிரஸ் பண்ணா அடுத்தடுத்து options வரும் . செட்டிங்க்ஸ் அனுப்புவாங்க . எப்படி ? ஆனா நாம பேசினதும் உங்களுக்கு எங்கள் சேவை திருப்தியாய் இருந்ததா பிரஸ் Y /N என்று வருமே . நான் இதுவரை N தான் பிரஸ் பண்ணேன் . ரொம்ப நாளா யூஸ் பண்றேன் மாத்தவும் மனசு வரல . இதுவரை சண்டை போட்டே 80 ருபாய் வாங்கிருக்கேன் . ஒரு முறை 50 ருபாய் எடுத்துட்டாங்க 1 வாரம் சண்டை போட்டேன் . அப்புறம் 1 வாரம் பிறகு 50 பைசா கிரெடிட் ஆகுது tensionla புடிச்சு நல்லா கத்தின பிறகு 49 .50 மறுநாள் கிரெடிட் ஆனது . எவ்வளவு லொள்ளு பாருங்க .
அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்
ஆனால் Airtel Broadband-க்கு செக் கொடுத்தா உடனே Update ஆகுது. அதுக்கான Conformation Message வருது. அடுத்த பில் அனுப்பும் போது, நாம் கொடுத்த செக் தேதி, செக் நம்பர் எல்லாமே வருது.
I would just need to look at the latest TRAI directive which has approved the telephone service providers to charge customer service calls. The reasons cited are: 1) To support telephone service providers, whose margins hve been squeezed lately out of intense competition.
2) To discourage indiscriminate calling.
I would really expect a respectable blogger like you to keep abreast of all news items. I agree with service executives response, except the way your call was cut abruptly.
We need to take this up with TRAI. I hope TRAI will change or modify this particular directive soon.
நேற்று திடீரென ஃபோன் செய்து இரண்டு இலவச சிம் கார்டுகள் போஸ்ட் பெய்ட்-ல் தருவதற்காக என்னை தேர்ந்தெடுத்திருப்பட்டிருப்பதாக ஹைதை நம்பர் ஒன்றிலிருந்து ஃபோன் வந்தது. நானும் சரி என்று சொன்னேன். சிறிது நேரம் கழித்து சென்னை கிளையிடமிருந்து கன்ஃபர்மேஷன் கால் வந்தது. மாலை வருவதாக பேச்சு.
பிறகு எனக்கு ஏதோ சரியில்லையே எனத் தோன்ற, சென்னை ஆசாமிக்கு ஃபோன் செய்து மனதை மாற்றிக் கொண்டேன் என்றும் இலவச சிம் கார்டுகள் வேண்டாம் என்றும் ஃபோன் செய்து விட்டேன். ஹைதையிலிருந்து மறுபடியும் ஃபோன். உறுதியாக அங்கும் மறுத்து விட்டேன்.
இப்பதிவை பார்த்ததும் நான் செய்தது சரிதான் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு
உங்கள் தகவலுக்கு நன்றி....
பஸ் ஸ்டாப்,ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் ஏர்டெல் போடுமாட்டி
பிச்சை போடவும் என்று வைதால் நல்ல சில்லறை தேறும்...
செய்தாலும் செய்வார்கள்...
மொபைல் சர்வீஸ் இந்தியாவில் கொடுமை தான். காளை மாட்டிலும் பால்கரக்கும் கும்பல்கள் தான் நெடொர்க் நடத்துகிறார்கள் போலும்.
தல நானும் பதிவு எழுதலாம்னு இருக்கேன் .இங்க பாருங்க என் முதல் பதிவு
http://ethirvinaigal.blogspot.com/
kalil
ஏழு வருடமாக ஏர்டெல் உபயோகிக்கிறேன். பதிவரொருவர் சொன்னதுபோலவே சேவையில் உள்ள குறைபாடுகளும்கூட கம்பெனி மேல் உள்ள கவர்ச்சியினால் கண்ணைமறைத்துவிடுகிறது. நாளாக,நாளாக இதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். தலையெழுத்து!
இந்த தனியார் கம்பெனிகள்ல் செய்வது வியாபாரம்,
பி.எஸ்.என்.எல் செய்வது சேவை.
பி.எஸ்.என்.எல்,லில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அரசை கேள்வி?! கேட்கலாம்.
பி.எஸ்.என்.எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளபோதே இவ்வளவு செய்பவர்கள் அதுவும் தனியார்மயம் ஆகிவிட்டால் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள்!
பி.எஸ்.என்.எல், எல்.ஐ.சி, போன்றவற்றை தனியார்மயமாக்கும் முயர்ச்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டேவருகிறது.
இவையனைத்திற்கும் காரணகர்த்தா அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளே!
இவர்களை நொந்து என்னபயன்!?
Repeating ...
இந்த தனியார் கம்பெனிகளால் கொடுக்கமுடிந்த,முடிகின்ற ஆபர்களை
பி.எஸ்.என்.எல் ஏன் கொடுக்கமுடியவில்லை?
இவையனைத்திற்கும் காரணகர்த்தா அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளே!
வரதராஜலு .பூ said...
vanuronline said...
eddu than air tell kku our telling.
//
செஞ்சிட்டாலும் அட நீஙக் வேற
ஹலோ என்றதும் பட்டென்று அழைப்பு தூண்டிக்கப்படும் 49 பைசா அவர்களுடைய கருமாந்திர செலவுக்கு.. இப்படியாக பல நூறு ரூபாய்கள்.. மாவொயிஸ்ட்கள் ஏன் உருவாகிறார்கள என்று மிக சுலபமாக புரிபடுகிறது.. ஏனெனில் நான் மிக சாதாரணமாண சுயதொழில் செய்து பிழைப்பவன்.. இதற்காக யாரை கேட்பது என்று தெரியாமல் வெறியோடுதான் அலைகிறேன்..நான் ஒரு நிறுவனத்துக்கு பணத்தைக்கொடுத்து மன நிலை தவறும் வியாதியை வாங்கிக்கொண்டிருக்கிறேன்..//
என் நண்பர் ஒருவருடய பி.எஸ்.என்.எல் லைனுக்கு போன் செய்தால் இன்கம்மிங்காக இருந்தாலும் சரி அவுட் கோயிங்காக இருந்தாலும்சரி.. பத்து நிமிஷம் தான்.
Transparent billing is the main aspect of BSNL.
They intimate the changes in the telephone bill itself.
இதையும் மீறி மற்ற கம்பெனிகளுக்கு மக்கள் செல்ல ஒரு காரணம் அலை வரிசையை சமமாக கொடுத்தது. குறைந்த சந்தாதாரர்கள் உள்ள கம்பெனி நிறைவான சேவை கொடுப்பது போல் ஒரு மாயை. That is because of the bandwidth shared by few customers rather than of the service.
சில தகவல்களை சொல்ல இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்//
மேடம் எனக்கு தெரிந்து பி.எஸ்.என்.எல் கஸ்டமர் சர்விச்
பற்றி பாராட்டிய ஒரே ஆள் நீங்கதான்னு நினைகிறேன்.
அப்படியெல்லாம் நினைக்காதீஙக்..
@சுரேஷ் குமார்
எலலவற்றிக்கும் நாம் கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் கிடைக்கும்
@ஷங்கர்
நிச்சயம் அனுப்புகிறேன் தலைவரே
@தராசு
அப்படியெல்லாம் விட்டுற முடியாதுன்ணே
@வரதராஜுலு.பூ
நன்றி
@சிநேகன்
அது பற்றி எழுதினா பதிவு பத்தாது..:)
@வால்பையன்
இருந்தா சொல்லுங்களேன்
@பனித்துளி சங்கர்
நன்றி
@தஞ்சை ஜெமினி
எல்லோரும் கூட்டு சேர்ந்துதான் கொள்ளையடிப்பாங்க
@செ.சரவணக்குமார்
நிச்சயம்
2விக்னேஷ்வரி
அதானே
@வெயிலான்
எவனோ ஒருவன் செய்ததற்காக இவர்கள் சொலலாமல் கொள்ளாமல் விதிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது..
2அதிஷா
ஆமா ம்
@அப்பு சிவா
எல்லோரும்
ஒரு மெயில் கூட அனுப்புங்க
@வனுஆன்லைன்
நன்றி
@அசோக்பரன்
உங்களூரில் வருவதற்கு கொஞ்சம்லேட்டாகும். வேறு வழியில்லாம கொள்ளையடிகக் ஆரம்பித்தவுடன் ஸ்டார்ட் பண்ணிடுவாஙக்
யாரை சொல்றீங்க
@பாலா
:(
@ஷண்முகா
எல்லாரும்கூட்டு களவாணிங்கதான்
2புதுவை சிவா
ஆமா
@கே.வி.ஆர்
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
2ஜாக்கிசேகர்
சேம் ப்ளட்
2குசும்பன்
காமெடி..
@அதிஷா
நீயும் காமெடி...
@கரிகாலன்
நீங்கமேல பின்னூட்டம் போட்டவங்களை சொல்றீங்களா..
@வால்பையன்
எவரு அவரு.?
@உண்மைத்தமிழன்
நீ சொல்லேன்
@நேசன்
நன்/றி
:)
@மதார்
நம் உரிமைகளை கேட்டாலே நிச்சயம் பலன் கிடைக்கும் நேரமில்லை, யார் கேட்பார்கள என்று இருந்தால் நிச்ச்யம் வேலைக்காகாது..
2வெங்கடேஷ்
நன்றி
@தங்கவேல் மாணீக்கம்
தலைவரே.. மொபைலிலிருந்து மொபைல் பற்றிய குறைபாடுகள் சொல்வதற்கு கஸ்டமர் கேர் நேரடி ஆளுடன் பேச என்று சொன்னால் சார்ஜ் உண்டு. அதே 198ல் கிடையாது. அவர்கள் சார்ஜ் செய்கிறார்கள் இலலை அது இல்லை பிரச்சனை அதை கஸ்டமர்களீடம் அறிமுகப்படுத்தவேயில்லை டேக் தெம் க்ராண்டட் என்று அவர்கள் இஷ்டம் போல செய்லபடுவதுதான் அநியாயம்
@மணி
அதுக்கு தனி பதிவே போடணும்..
அப்படி காம்படீஷனில் என்ன சார்ஜஸ் குறைந்துவிட்டது. இதெல்லாம் கண் துடைப்பு வேலை. அவர்கள் ஓகே சொன்னாலும் கூட அதே ட்ராயின் ரூல்ஸ் படி ஒவ்வொரு கஸ்டமருக்கும் அவர்களூடய சார்ஜ் விஷயஙக்ள் மாறும் போது சொல்ல வேண்டியது அவர்களது கடமை.
நிச்சயம் ட்ராய் இதற்கு பதில் சொல்லியே ஆகவேணும்
@டோண்டு
ஏர்டெல் மட்டுமிலலை தலைவரே.. எல்லோரும் இதே கதிதான்
@மலர்
வாழ்த்துகக்ள்
@தங்கவேல் மாணீக்கம்
ஆமாம் ட்ராயே அதை செய்தாலும் நிச்சயம் நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது..
2உழவன்
:(
@
வாழ்த்துகள் கலீல்
@ரவி திருப்பூர்
அரசை குறை கூறுவதை விட்டு விட்டு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடினால் நிச்சயம் விடிவு கிடைக்கும்
@நேசமித்ரன்
:0
2இராமசாமி கண்ணன்
:(
@மிஸ்டர் இட்லி
:(
Once before some months all the network operators took a survey about the customer calling facility. In that survey they found that the top 10 queries are including more crank calls[not necessary or mokkai]. So all are decided to get ride that by charging the calls.
By their side they made a big mistake
"They wont properly inform to their customers "
All is Well
Thanks for sharing.
S.Selvamani
ஆடோமேடேட்சர்வீஸ்.
புரியற மாதிரி இல்லேன்னா அதுபாட்ல மெசெஜ டெலீட் பண்ணிட்டே இருக்கும். பாதிக்கப்பட்ட எல்லாரும், ட்ராய் க்கு மின்னஞ்சல் அனுப்பறதுதான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.
Be aware about ombudsman, it will be useful for all customer grievances
வாஸ்தவமான புலம்பல், இது தேவையான பகிர்வுதான்..! இதே போல் ஏர்டெல் நெட்வொர்க்கின் கசப்பான அனுபவம் என் நண்பருக்கும் நடந்திருக்கு சார்..! நீங்க சொன்ன அத்தனையும் உண்மை, நாளேக்கு முதல் வேலையா அவர் ஃபோனை பிடுங்கி, அந்த 121 நம்பருக்கு SMS அனுப்புறேன்..! நான் வோடாஃபோன் நம்பர் வச்சிருக்கேன். அது என்னிக்கி பிரச்சினை பண்ணப்போகுதோ..!
-
DREAMER