Posts

Showing posts from May, 2010

கொத்து பரோட்டா-31/05/10

Image
சென்ற வாரம் மணற்கேணி வெற்றியாளர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்றிருந்தேன், பிரபாகர், தருமி, மருத்துவர் தேவன்மாயம் குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். இதனுடன் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் மணற்கேணி புத்தகம் சென்னையில் என் வீட்டருகில தான் பதிப்பித்திருந்தார்கள். அதை சிங்கைக்கு கொண்டு சேர்க்கும் பிரதான வேலையை என்னிடம் கொடுத்திருந்தார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.. சிங்கை பதிவர்கள் எல்லாரும் ஒருமித்து இனி ஒவ்வொரு வருடமும் இம்மாதிரியான விருதுகளை வழக்க இருக்கிறார்கள். கடந்த 28ஆம் தேதி மணற்கேணி விருதுகள் வழங்கும் விழாவும், மணற்கேணி புத்தக வெளியிட்டு விழாவும் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவை சிறப்பாக ஒன்றுபட்டு ஒருங்கிணைத்த சிங்கை பதிவர்கள் அனைவரையும் பாராட்டுவோம். ஒரு வேண்டுகோள். அடுத்த முறையாவது, நானெல்லாம் கலந்துக்கிறா மாதிரி ஈஸியா ஒரு போட்டி வையுங்கப்பா..:) மேலும் விபரங்களுக்கு http://aammaappa.blogspot.com/2010/05/blog-post_29.html $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ பதிவுலகின் சென்ற வார பிரச்சனை மிகவும் வேதனைபட வை...

சிங்கம்- திரை விமர்சனம்

Image
வழக்கமாய் எம்.ஜி.ஆருக்கு பிறகு வெகு சில நடிகர்களுக்கே 25,50,100வது படமெல்லாம் ஹிட்டாகியிருக்கிறது. சூர்யாவிக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது போல. வழக்கமாய் யாராவது வேண்டாம் என்று ரிஜெக்ட் ஆன ப்ராஜெக்டை இவர் எடுத்து நடித்தால் அது ஹிட்டாகிவிடும்.  இது விஜயால் நிராகரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட். உள்ளூரிலேயே போஸ்டிங் வாங்கிக் கொண்டு சப் இன்ஸ்பெக்டராய் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் சூர்யா, இவருக்கு சமமந்தமேயில்லாத சென்னையில் தாதாகிரி செய்து கொண்டிருக்கு பிரகாஷ்ராஜ், இவர்கள் இருவருக்கும் ஒரு மோதல் ஏற்படுகிறது. அதில் கடைசியில் யார் வெல்கிறார்கள் என்பதே கதை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதை தான் என்றாலும் சும்மா சரவெடி போல படபடவென வெடிக்கிறது சிங்கம். உலக லெவலில் ஒரு மசாலா படம் வெல்வதற்கு மிக முக்கியமான விஷயம் வில்லன் கதாபாத்திரம் தாம். அது காத்திரமாக இருந்தால் நிச்சயம் ஒரு ஹீரோயிச படம் வெற்றி பெற்றுவிடும் அது எவ்வளவு மசாலாவாக இருந்தாலும். உதாரணத்துக்கு, ஆர்னால்டின் பிரேட்ர், டெர்மினேடர் போன்ற படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.ஏன் நம்ம விஜயின் திருப்பாச்சியை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் வில்ல...

ரீவைண்ட்

இந்தியாவில் குறிப்பிட தகுந்த சிறந்த இயக்குனர்களில் பாசிலும் ஒருவர். பாசிலின் வருஷம்16, பொம்முகுட்டி அம்மாவுக்கு,பூவிழி வாசலிலே, போன்ற  படங்களினால் அவர் மேல் அபரிமிதமான காதல் இருந்த கால கட்டம். ஏனென்றால் அவரது படங்களில் இருக்கும் ஒவ்வொரு சின்ன கேரக்டரும் மக்களின் மனதில் நிற்கும் கேரக்டர்களாக வலம் வரும் கேரக்டர்களாக இருக்கும் என்பதால் நான் நடித்து கொண்டிருந்த காலத்தில் பாசில் “ஒரு நாள் ஒரு கனவு” படத்தை ஆரம்பித்தார். அப்போது அவரது அலுவலகம் அசோக்நகரில் போஸ்டல் காலனியில் இருந்தததாய் ஞாபகம். தொடர் முயற்சிக்கு பின்பு அவரை பார்க்க முடியாவிட்டாலும் ஒரு வழியாய் என் போட்டோவை அவர்கள் அலுவலகத்தில் சேர்த்துவிட்டேன். எனக்கு தெரிந்து பாசில் என்றில்லை எந்த மலையாள திரைப்பட இயக்குனர் தமிழில் படம் செய்தால் அதில் பிரதான கேரக்டர்களை தவிர மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஏன் சில சமயம் வசனம் எழுதக் கூட மலையாள ஆட்கள் எழுதி பார்த்திருக்கிறேன். பாசிலின் படங்களில் பார்த்தால் அவரது கேமராமேன் அனந்த குட்டன்,  வசனகர்த்தா கோகுல கிருஷ்ணா மற்றும் படத்தில் வரும் பல கேரக்டர்கள் ஆர்டிஸ்ட் கேரளத்துகாரர்களாகவே இருந...

சாப்பாட்டுக்கடை

Image
பல நேரங்களில் பசிக்கு நாம் சாப்பிடும் போது ருசி பார்ப்பதில்லை. அப்படி ஒரு அவசரத்தில் பசிக்காக சாப்பிடும் போது அவ்வுணவு ருசியாய் அமைந்துவிட்டால் அத்தருணம் அருமையானதாகிவிடும். மீண்டும் மீண்டும் அவ்வுணவகத்தை தேடிப் போக வைத்துவிடும். அப்படி ஒரு பசி வேளையில் போய் இம்பரஸ் ஆன உணவகம் தான் சென்னை செனடாப் ரோடில் உள்ள தாபா எக்ஸ்பிரஸ் என்கிற பஞ்சாபி உணவகம். இவர்கள் மதிய வேளையில் 80 ரூபாய்க்கு அன்லிமிட்டட் வெஜ் பப்பே.. அளிக்கிறார்கள். போனவுடன் நாக்கூறும் சூடான ஜிலேபி. ஜிலேபியை சூடாக சாப்பிட்டிருக்கிறீர்களா?  தேவாம்ரிதமாய் இருக்கும். அதன் பிறகு நான், பட்டர் நான், புல்கா, ரோட்டி என்று கலந்து கட்டி ரோட்டி அயிட்டங்கள், அதற்கு இரண்டு சைட்டிஷ்கள், ஒரு ட்ரை, ஒரு க்ரேவி, ஒரு டால், அது மட்டுமில்லாமல் ஒரு சைனீஷ் சைட்டிஷ், ஒரு பிரியாணி ரைஸ்,அல்லது புலாவ், நூடூல்ஸ், வெறும் சாதம், தயிர்சாதம், ஊறுகாய், Salad என்று வரிசை கட்டி நிற்கும் உணவுகள். ஒவ்வொன்றும் ஒரு சுவை. சாப்பிட்டு விட்டு ஒரு லஸ்ஸியும் ஸ்வீட் பீடாவும் போட்டால்.. ம்ம்ம்ம்ம். டிவைன். இவை ரெண்டும் பப்பேயில் வராது. என்பது ரூபாய்க்கு அருமையான லஞ்ச...

கொலை கொலையாம் முந்திரிக்கா- திரை விமர்சனம்

Image
காமெடி படமெடுக்க வெறும் கிரேசி மோகன் மட்டுமிருந்தால் பத்தாது. நல்ல திரைக்கதையாசிரியரும், அதை வெளிப்படுத்தும் நடிகர்களும் முக்கியம் என்பதை இப்படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். கிரேஸி மோகனின் வசனங்கள் எல்லாமே கமல் நடித்த படங்களில் மட்டும் மிளிர்வதன் காரணம் என்ன என்பதை இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அரத பழசான ஆள் மாறாட்ட கதை. ஒரு சேரின் உள்ளே வைக்கப்பட்ட வைரத்துக்காக இருபது வருடங்களுக்கு பின் நாசூக்கு திருடனான கிருஷ்ஷும், இன்னொரு நாசூக்கு திருடியான வேணியும் அலைய, அந்த வைரத்துக்காகவே இருபது வருஷமாய் அலையும் ஆனந்தராஜ் குழு அலைய, சம்பந்தமேயில்லாமல் எல்லாரையும் விட்டு பிடிக்கும் குடாக்கு போலீஸு ஜெயராம் இவர்களை துரத்த, என்று ஒரு காமெடி படத்துக்குண்டான அத்துனை லாஜிக் மீறல்களுடன் இருக்கிறது கதை. காமெடி செய்வதற்கான அத்துனை சந்தர்ப்பங்கள் இருந்து ஆங்காங்கே கிச்சு, கிச்சு மூட்டுமளவுக்கு இருக்கிறதே தவிர வாய்விட்டு சிரிக்க வைக்க வில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கிரேசி வந்தவுடன் தான் விழுந்து விழுந்து சிரிக்க முடிகிறது. அதிலும் ஆர்டர்…ஆர்டர் என்று டேபிளில் இருந...

Kites –2010

Image
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் தயாரிப்பிலிருந்த படம். இப்படத்தின் ப்ரோமோஷனை உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கேங்ஸ்டர், லைப் இன் மெட்ரோ படங்களின் இயக்குனர் அனுராக் பாசுவின் அடுத்த படம். லாஸ் வேகாஸில் வறுமையின் ஊடே நடனம கற்றுத்தரும் ஜெய் என்கிற ஹிரித்திக், சமயங்களில் இமிக்ரேஷனுக்காக போலி திருமணம் செய்து கொள்பவன். ஹிரித்திக்கை கங்கனா ராவத் காதலிக்க, அவளின் பணத்தை பார்த்த ஹிரித்திக் அவளை காதலிப்பதாக நடிக்கிறான். அவளின் தந்தை கபீர் பேடி ஒரு பெரிய காஸினொவின் ஓனராகவும் மிகப் பெரிய லோக்கல் தாதாவாகவும் இருக்க, அவளின் அண்ணன் திருமணம் செய்யப் போகும் ஸ்பானிஷ் பெண் பார்பரா மோனியை பார்க்கிறான். அவளின் மேல் ஹிரித்துக்குக்கு காதல் பிறக்கிறது. அவளும் கங்கனா ராவத்தின் அண்ணனை பணத்துக்காகத்தான் காதலிக்கிறாள். ஹிரித்திக்கும், பார்பராவும் ஏற்கனவே அவளின் இமிக்ரேஷனுக்காக போலித் திருமணம் செய்தவர்கள் கூட, ஒரு கட்டத்தில் பணமா, அலலது இவர்களுக்குள் இருக்கும் காதலா என்று முடிவெடுக்க வேண்டியை சூழ்நிலையில் காதல் தான் என்று முடிவெடுத்து ஓடிப் போகிறார்கள். க்ளைமாக்ஸ் என்ன என்பதை வெள்ளித்திரையி...

கொத்து பரோட்டா-24/05/10

Image
மங்களூர் விமான விபத்து செய்தி மனதை உலுக்கியது. இறந்தவர்களின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களது பாட்டி ஒருவர் இறந்ததுக்காக கிளம்பி வந்த நேரத்தில் இக்கோர விபத்து நடந்திருக்கிறது. அதே போல தன் தந்தையின் சாவுக்காக கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைத்து வந்த ஒருவரும் இறந்திருக்கிறார். விபத்தில் இறந்தவர்களை பற்றிய தகவல்கள் எல்லாம் ஒவ்வொரு சேனலுக்கும், ஒவ்வொரு பத்திரிக்கைகளுக்கும் வேறுபாடுகள் அதிகம். முடிந்த வரை அதிகப்படுத்தியே செய்திகளில் சொல்கிறார்கள். ஒரு வேலை அதிகமாச் சொல்வதுதான் பத்திரிக்கை, மற்றும் செய்திகளை பார்க்க வைக்கும் உத்தியோ.. பர்வர்ஷன் என்பது இதுதானோ..? ****************************************************************** விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் நான், அப்துல்லா, மணிஜி, நர்சிம், வண்ணத்துபூச்சி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டோம். வழக்கம் போல ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று சொல்லிவிட்டு 12.30 மணிக்கு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். விடியற்காலை மூணு மணிக்கு முடிந்தது. அந்த அகால நேரத்திலும், கோவையிலிருந்து வந்திருந்த இண்ட்ர்ன்ஷிப்புக்காக வந்தி...

கனகவேல் காக்க- திரை விமர்சனம்

Image
நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட, வெறும் சட்டம், சாட்சி மட்டுமில்லாமல் மனசாட்சிக்கும் இடம் கொடுத்து தீர்ப்பு வர வேண்டும் என்று சொல்லும் படம்.  வேலு ஒரு கோர்ட் டவாலி. முதல் காட்சியிலேயே அவன் மினிஸ்டர் கோட்டா சீனிவாராவை கொலை செய்ய முயற்சிக்க, ஆது மிஸ்ஸாகிவிடுகிறது. பின்பு கோர்ட்டில் நிரபராதி என்று தீர்ப்பாகிய குற்றவாளிகளை தேடித், தேடிக் கொள்கிறான். ஏன் கொல்கிறான்? என்பதை முந்தாள் பிறந்த குழந்தை கூட சொல்லிவிடும் திரைக்கதை. கரணின் நடிப்பில் நிறைய இடங்களில் கமலின் பாடி லேங்குவேஜ். அடிப்பார்வை பார்க்கிறார், சம்மந்தமில்லாமல் குத்து பாடலுக்கு ஆடுகிறார். கொலை செய்கிறார். கண்ணில் தண்ணீர் தளும்ப வசனம் பேசுகிறார். சின்ன சின்ன ரியாக்‌ஷனில் இம்ப்ரஸ் செய்ய பார்க்கிறார். ஆனால் என்ன எழவு அவர் கேரக்டர் மேல் ஒரு ஈடுபாடுதான் வந்து தொலைய மாட்டேனென்கிறது. கதாநாயகி புதுசு.. நடிப்பு என்பது சாஸ்திரத்துக்கு கூட வரவில்லை. நான் சாகறேன் என்பதை கூட மொன்னையாய் ஒரு முகத்தை வைத்து சொல்கிறார். வில்லன்கள் கோட்டா சீனிவாசராவ், சம்பத, எல்லாருமே படு மொக்கை. சீனுக்கு சீன் வசனம் பேசுவதோடு சரி. விஜய் ஆ...

சொல்லித் தெரியும் மன்மதக்கலை- No Mires Para abajo (2008)

Image
செக்ஸை இவ்வளவு இயல்பாக  வக்கிரமில்லாமல் காட்ட முடியுமா? நிர்வாணம் இவ்வளவு அழகா? இவ்வளவு தெய்வாம்சம் இருக்குமா? இவ்வளவு கவிதையாய் உடலுறவை காட்ட முடியுமா? என்று ஆச்சர்ய பட வைத்த மேஜிக்கல் ரியலிச படம். எலாய் 19 வயது இளைஞன். சிமிட்டரியில் செய்யும் சிலை செய்யும் தொழிலை செய்யும், பொய்கால் வைத்து உயர நடந்தபடி விளம்பரங்கள் விநியோகிக்கும் தொழில் செய்கிறான்.  அவனுடய அப்பா இறந்து போகிறார். அப்போதிலிருந்து அவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி வருகிறது. தன் தந்தை தன்னுடன் பேசுவதாகவும், தன்னால் தினமும் இற்நதவர்கள் சிமெட்ட்ரிக்கு வெளியே உட்கார்ந்திருப்பதை பார்க்க முடிகிறது என்பதை பற்றியெல்லாம் அவன் அண்ணனிடம் சொல்கிறான்.  ஒரு நாள் இரவு மொட்டை மாடியில் தூக்கத்தில் நடக்கும் போது பக்கத்துவீட்டு மொட்டைமாடிக்கு நடந்து போய்விட, அங்கே ஓப்பன் சீலீங் உள்ள ஒரு வீட்டில் ஒரு அழகிய பெண்ணின் படுக்கையறையில் அவள் மேல் விழுகிறான். அவள் பெயர் எல்விரா. அந்த பெண்ணின் பாட்டி பாரம்பர்ய தாந்தரீகங்களில் கை தேர்ந்தவள். எல்விராவுக்கும், எலாயுக்குமான நட்பு இப்படி ஆரம்பிக்க, மெல்ல அது அவர்கள் இருவருக்குமிடை...

Only Because of You

Image
ஆம்.. நிச்சயமாய் இது உங்களால் தான் நடந்தது. நீங்கள் இல்லையேல் இது சாத்தியமில்லை. எந்த ஒரு மனிதனின் வெற்றியும் அவன் தன் முயற்சியினால் மட்டும் வெற்றி பெறப்படுவதில்லை. அதன் பின்னால் பல பேருடய, ஆதரவும், அன்பும் இருக்கும். ஆனால் அது வெளியே தெரிவதில்லை. வெற்றி பெற்றவர் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் நான் இன்றைக்கு என்னை உற்சாகப்படுத்தியவர்களை, கூடவே இருந்து பயணித்தவர்களை நினைவு கூற கடமை பட்டுள்ளேன். பத்து லட்சம் ஹிட்ஸ்களை வாரி வழங்கி மேலும் ஆதரவளித்துவரும் உங்களுக்கு என் நன்றிகள். தமிழ் பதிவுலகில் யுவகிருஷ்ணாவுக்கு பிறகு பத்து லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்திருப்பது எனக்குத்தான் என்று நினைக்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில். சாதாரண பதிவராய் ஆரம்பித்த என் பயணம், ஒரு சிறுகதை ஆசிரியராய் உருவாகி, விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும், சிறுகதை தொகுப்பு வெளியிடும் ஒரு எழுத்தாளராகவும் உயர உற்சாக ஊற்றாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது நீங்கள தான் என்றால் அது மிகையில்லை. அத்தொகுப்புக்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் பெற்ற வெற்றி அடுத்து வர இருக்கும் ...

தற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறை

ஆம் நண்பர்களே.. தமிழக காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வழக்கமாய் இவர்கள் இம்சை தாங்காமல் மக்கள் தானே செய்து கொள்வார்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இந்த விஷயம் ஏதோ  காவல்துறையை கிண்டல் செய்ய சொல்லவில்லை. நிஜமாகவே தமிழக் காவல் துறையில் தற்கொலைகள் பெருக ஆரம்பித்துவிட்டன. நேற்றைய பேப்பரில் மட்டும் சுமார் மூன்று தற்கொலைகள். ஒருவர் இளைஞர். இவர் இத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டதே இவரது குத்துசண்டை சான்றிதழ்களை வைத்துதான். இவர் இத்துறைக்கு தேர்வானதும், பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவதை கனவாக கொண்டிருந்த வேளையில் உயரதிகாரிகள் இவரை குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை விதித்ததால்,மனம் நொந்து, மன உளைச்சலால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சுமார் 58 வயதான உதவி சூப்பிரண்ட். இவர் ஒரு ஹோட்டல் ரூமில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னை ஒரு பெண் தொந்தரவு செய்வதால் அந்த மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். இவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து, அவளிடமிருந்து விலகியிருந்திருக்கிறார். தன்னோடு...

கொத்து பரோட்டா-17/05/10

Image
பொறுக்கி பதிவர்கள்!!!!!:) சென்னை ட்ரக்கிங் கிளப் நேற்று மெரினா முதல் ஈஞ்சம்பாக்கம் வரை கடற்கரைகளை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் அருமையான பணியினை 6-9 மணி வரை செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து பதிவர்கள், மயில் ராவணன் , தோழி ஆகியோரும் கலந்து கொண்டு சுத்தம் செய்திருக்கிறார்கள். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளூர் ஆள் ஒருவர் இவர்கள் செய்வதை பார்த்து அவரும் தன் பங்குக்கு லோக்கல் ஆட்களை வைத்து ஒரு ரோட்டை க்ளீன் செய்தாராம். மாற்றம் இப்படித்தான் ஆரம்பிக்குமோ..? அரசு ஏன் கடற்கரை பகுதிகளில் நிறைய குப்பை தொட்டிகளை நிறுவக்கூடாது?. குப்பை போடாதே என்று சொல்வதை விட, அதை இம்மாதிரி இடங்களில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு சொன்னால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா?. சிங்கப்பூர் சென்று விட்டு வந்த போது பழக்க தோஷத்தில் கையிலிருந்த பிளாஸ்டிக் பேப்பர் குப்பையை போட குப்பை தொட்டியை தேடினேன் விமான நிலையத்திற்கு வெளியே ஒன்று கூட கண்ணில் படவில்லை. பின்பு இந்திய வழக்கபடி செய்துவிட்டு கிளம்பினேன். சுத்தம், சுகாதாரத்தை பேணும் சிங்கையில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தடை செய்ய படவில்லை. !!!!!!!!!!!!!!!...

சாப்பாட்டுக்கடை

Image
சென்னையில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் சாலை சந்திப்பில் உள்ள பார்சன மனரே என்கிற இடத்தில் முன்பு பாலிமர் என்கிற பிரபலமான ஒரு சைவ உணவகம் இருந்தது. சவுத் இந்தியன், நார்த் இந்தியன் என்று இரண்டு வகை உணவுகளை ரொம்ப காலமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் அங்கு “வெஜ் நேஷன்” என்கிற பெயரில் ஒரு ரெஸ்ட்ராரண்ட் ஆரம்பித்திருப்பதாய் போர்டை பார்த்ததும் உள்ளே சென்றால், பழைய பாலிமர் இப்போது “வெஜ் நேஷ்ன்” ஆகியிருந்த்து. உள்ளே நுழைந்த்தும் மாக்டெயில் பார் வைத்திருந்தார்கள். எலலவிதமான் ஜூஸ், மாக்டெயில்களுக்கான பார் போன்ற சீட் அமைப்புடன் விதவிதமான மெனுவுடன். உள்ளே சென்று உட்கார்ந்தவுடன் நல்ல அறுபது பக்க நோட்டு போல மெத்து மெத்தென ஒரு மெனு கார்டை கொடுத்தார்கள். பக்கா வெஜிடேரியன் அயிட்டங்கள் வரிசைகட்டி நின்றது. குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு குறையாமல் இருந்தது சைட் டிஷ் அயிட்டம் விலையெல்லாம். நான் மீல் பேக்கேஜ் எடுத்துக் கொண்டேன். சவுத் இண்டியன் பேக்கேஜ் 120 ரூபாயும், நார்த் இண்டியன் பேக்கேஜ்130 ரூபாயும். நான் நார்த் இண்டியன். சூப், அன்லிமிட்டட் மூன்று விதமான சப்ஜிகள், ஒரு ட்ரை சைட் டிஷ், ...

Badmaash Company-2010

Image
மீண்டும் ஒரு அக்மார்க் யாஷ் சோப்ரா படம். உறுத்தாமல் நீதி போதிக்கிற ஃபீல் குட படமெடுப்பதையே கடமையாய் கொண்டவர்கள் யாஷ் சோப்ரா குழுவினர். இம்முறை நடிகர் பர்மீத் சிங் டைரக்டராக அவதாரமெடுத்திருக்கிறார். இவர் தில்வாலே தில்ஹனியா லேஜாயேங்கேவில் காஜோலுக்கு மாப்பிள்ளையாய் நடித்தவர். ஷாஹித் கபூர் மற்றும் இரண்டு நண்பர்கள் காலேஜ் முடித்து வெளிவந்தவர்கள். இவர்களுக்கு ஒரு டூட்டி ஃபிரி ஷாப் வைத்திருக்கும் கடத்தல் காரன் ஒருவன் நண்பனாகிறான். அவனுடய பொருட்களை கடத்துவதற்காக, பேங்காக் சென்று திரும்ப, போகிற போது விமானத்தில் அனுஷ்கா சர்மாவை சந்திக்க, அப்புறம் என்ன காதல் தான். இப்படி சந்தோஷமாய் போய் கொண்டிருக்கும் போது வழக்கம் போல் ஷாஹித்தின் அப்பா அனுபம் கெருக்கு மாரடைப்பு வர, பணமில்லாமல் திண்டாடும் போது முடிவெடுக்கிறார் ஷாஹித். அப்பாவை போல 25 வருஷமாய் பெஞ்சு தேய்க்காமல் சீக்கிரமே பணக்காரனாவது என்று முடிவெடுத்து, புத்திசாலித்தனமாய் ஒரு பெரிய டீலை முடிக்கிறான். நேர்மையாய் சம்பாதிக்காத பணத்தை இங்கே வைக்காதே என்று சொல்லும் கெர், ஷாஹித்தை வெளியேற்றுகிறார். நேராக அமெரிக்கா செல்லும் ஷாஹித் குழுவினர் அங்கேயும் ...