Posts

Showing posts from June, 2010

மிளகா

Image
மதுரைக்கார பசங்க நட்புக்காக உசுரையே கொடுப்பாய்ங்கனு பஞ்ச் லைன் போட்டிருக்காங்க.. அதுக்காகவே ஒரு கதையை ரெடி பண்ணியிருக்காங்க. ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் ரவிமரியா இயக்கியிருக்கிற படம். மிளகா நட்ராஜ் மிளகா மண்டி ஓனரோட பையன். வீட்டுல பொறுப்பில்லாம, ஆனா ஊருக்கும், நட்புக்கும் பொறுப்பா இருக்கிறவரு. அவருடய நட்பு கும்பல்,சிங்கம்புலி, ஜெகன், இன்னும் ரெண்டு பேர். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். நண்பனின் கடனை வசூல் செய்ய உதவும் நட்ராஜை பார்த்து ஊரில் உள்ள ரவுடி பிரதர்ஸின் கஸ்டடியில் இருக்கும் ஒரு பெண், நட்ராஜை வைத்து தன்னை காத்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காக அவர் தன்னை காதலிப்பதாய் பிரச்சனையை கிளம்பிவிட, அதில் மாட்டுகிறார் நட்ராஜ்.. மீதி என்ன எனபது வெள்ளிதிரையில்.   நட்ராஜ் ஒரு மினி ரஜினி என மனதில் நினைத்துக் கொண்டு, அதே போல பேசுகிறார், சண்டை போடுகிறார், மார்கெட்டில் வடக்கத்தி பெண்ணுடன் நடனம் ஆடுகிறார். எல்லா சகவாசங்கள்  இருந்தாலும், நண்பர்களுக்கு என்றால் உயிரை கொடுக்கிறார். திடீரென கருப்பண்ண சாமி பக்தனாகி உக்கிரம் கொண்டு அருவாளெடுக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசையோ...

கொத்து பரோட்டா-29/06/10

Image
வர வர..  நான் எதை எழுதினாலும்  காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுறானுவுக.. இது போல அவ்வப்போது சில சமங்களில் பல பேருக்கு நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது என்றாலும். சமீப காலமாய் என்னுடய திரைவிமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் கூட மாற்றாமல்  காப்பி பேஸ்ட் எடுத்து பதிவிடும் பதிவர்கள் அதிகமாகிவிட்டார்கள். நான் எழுதறதையெல்லாம் எடுத்து போடுவதை பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வளளளவூ நல்லாவா எழுதறேன்?.  எப்படியும் நீங்கள் எழுதியது இல்லை என்று நீங்கள் அடுத்து எழுதும் முதல் வரியிலேயே தெரிந்து விடும். ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் காப்பி பேஸ்ட் எடுக்கும் போது சரி செய்து போட்டால் தன்யனாவேன்.. ####################################################### போன வாரம் காரில் பெங்களூர் சென்றோம், ஒரு அழுத்து அழுத்திவிட்டு நிமிர்ந்தால் ஒரு டோல் வந்துவிடுகிறது. 35,40 என்று பணம் வாங்குகிறார்கள். இங்கிருந்து கர்நாடகா எல்லைக்குள் சுமார் நான்கைந்து இடங்களில் கப்பம் கட்டிவிட்டுத்தான் போக முடியும். கணக்கு பார்த்தால் பெட்ரோல் போட்டு தனியாக காரில் போவதற்கு பதிலாய் ...

பெ”ண்”களூர் படங்கள்

Image
பதிவர் சென், ஆதி, அப்துல்லா    அவுட் ஆப் போகஸ் ஜோசப்பூ, வெண்பூ, கார்க்கி மங்களூர் சிவா, ஜீவ்ஸ், சென், ஜோசப்பு பால்ராஜ்   அதே மங்சிங், ஜீவ்ஸ்,ஜோசப், சந்தோஷ் நமிதாவே பாலோசெய்யும் பிரபல டி.பி.சி.டி.யுடன்.. மேலும் படங்கள். விரைவில்….   கேபிள் சங்கர் டிஸ்கி: கொத்து பரோட்டா நாளை வெளிவரும்

களவாணி

Image
களவாணி போக்கிரித்தனம், செய்து திரியும் இளைஞர்களை குறித்து சொல்லும் தஞ்சை மாவட்டத்துக்காரர்களின் சொல்வடை. வழக்கமாய் உழன்று சேறாகிய மதுரையிலிருந்து சினிமா களத்திருந்து, தஞ்சைக்கு மாற்றியதற்கு நன்றி சொல்ல வேண்டும். விமல் +2 பெயிலாகிவிட்டு, துபாயிலிருந்து அப்பா அனுப்பும் காசை குடித்தும், சீட்டாடியும், பெண்களை சைட் அடித்துக் கொண்டும், நண்பர்களூடன் களவாணித்தனமான வேலைகளை செய்து கொண்டு திரியும் இளைஞன். இவன் இப்படி இலக்கில்லாம திரிவதை அவர் ஜாதகத்தின் காரணமாய் தான் செய்கிறான் என்று சாக்கு சொல்லிக் கொண்டு அவனுக்கு ஆதரவு கொடுக்கும் அம்மா சரண்யாவும், அவன் தங்கை. படத்தின் முதல் பாதி முழுவதும் விமலும், அவன் நண்பர்களும் சேர்ந்து களவாணித்தனம் செய்வதும், குடித்துவிட்டு கலாட்டா செய்வதும், காசுக்காக ஆட்டையை போடுவதுமாகத்தான் போய்ய்ய்ய்ய்ய்ய்க் கொண்டிருக்கிறது. ஓரிரு விஷயஙக்ள் ரசிக்க முடிந்தாலும், படம் முழுவதும் லைவாக எடுக்கிறேன் என்கிற கிளிஷேவை விட முடியாமல் ஒரே ப்ரேமில் நாலைந்து பேர் பேசுவதும், ஓவ்ர்லாப்பில் கத்துவதும் ஸ்…. முடியலப்பா.. தயவு செஞ்சு யாராவது ஒருத்தரை பேசவிடுங்களேன். எல்லா நேரத்திலேய...

திட்டக்குடி

Image
அழுக்கடைந்த டவுசர் தெரிய கட்டிய லுங்கி, மூணு மாச தாடி, வாயில் பீடி, மிச்ச நேரத்தில் சாராயம், ஊரோர இடிந்த வீட்டில் போகிற வருகிற பெண்களையெல்லாம் நொட்டிக் கொண்டிருந்தால்,சட்டை காலரை மேலே தூக்கி விட்டபடி, கொஞ்சம் கால் அகட்டி பின் பக்கமாய் சாய்ந்தபடி “ஏய்.. என்ன மாப்ள்..?” என்று பேசிவிட்டால் பருத்திவீரன் டைப்பில் ஒருகதை ரெடி.. வேலு சின்ன வயதிலேயே தறுதலையாய் ரஜினி, கமல் குருப் போட்டுசினிமா பார்த்து கெட்டொழிந்து, படிப்பை விட்டவன். கொளுத்து வேலைக்கு போக ஆரம்பிக்கிறான். கையில் காசு பார்க்க ஆரம்பித்தவுடன், குடி, கூத்தி என்று பார்க்கிற சித்தாள்கள், ஐயிட்டங்களையெல்லாம் ஊரோரமாகவும், அவர்ரவ்ர் வீட்டில் போயும், கட்டிட இடிபாடுகிடையேவும் நொட்டிக் கொண்டு அலைகிறான். தனக்கு தொழில் கற்றுக் கொடுத்த குருவான மேஸ்திரியின் பெண் வயதுக்கு வந்ததும், அவளை காதலிப்பதாய் சொல்லி, மிகவும் முயற்சி செய்து, ஒரு நாள் மேட்டர் முடித்துவிட்டு, கையில் காசை திணிக்கிறான். அனுபவித்துவிட்டு காசு கொடுத்தவனை கல்யானம் செய்ய மாட்டேன் என்கிறாள் அவள். ஒரு கட்டத்தில் திடீரென திருந்தி வாழ ஆரமித்து அவளை கல்யாணம் செய்ய இருக்க, திடீரென குடு...

எண்டர் கவிதைகள்-9

Image
ஆயிரம் பேர் கூட்டத்திலிருக்க, என்னிடம் மட்டும் நேரம் கேட்டவள்.. நீ மட்டுமே எனக்கு ஸ்பெஷல் என்றவள்.. பதினாறு வோல்ட் மின்சாரமாய் பஞ்சு முத்தமிட்டவள்.. நெஞ்சு அடிச்சுக்குது பாரென்று மூச்சடைக்க வைத்தவள். நேரில் பேச முடியாததை எஸ்.எம்.எஸ்ஸில் பேசியவளை கண்டு கொண்டேன் வேறொரு ஆயிரத்தில் ஒருவனுடன். கூட்டத்தில் உனக்குத்தான் என்னை தெரியவில்லை.. கேபிள் சங்கர்

ஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிபரப்பு.

Image
NDTV HINDU   என்கிற சேனலில் செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்யப்படும், சுமார் 350 கோடி தேவையா? இவ்வளவு பெரிய மார்கெட்டிங் தேவையா?,தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் மொழியை கடை பெயர் பலகையில் போடச் சொல்லி கட்டாயப்படுத்துதல் நியாயமா..? வழக்குறைஞ்சர்கள் தமிழில் கோர்ட்டில் வாதிடுவது குறித்தான போராட்டம் தேவைதானா? தமிழர்கள் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் தமிழ் என்று பேசி உசுப்பேற்றிவிட்டு தமிழகத்தை இன்னொரு மஹாராஷ்ட்ராவாக உருவாக்க நினைக்கிறார்களா? என்பது போன்ற சூடான கேள்விகளுக்கு தமிழில் பதிவெழுதும் பதிவர்களாகிய, அப்துல்லா, வெண்பூ, நர்சிம், கார்க்கி, ஆதி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆகியோருடன் உங்கள் கேபிள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்.. இன்று மாலை 5.30 மணிக்கு என்.டி.டி.வி ஹிந்து சேனலில் ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பு நாளை காலை 7.00 மணீக்கும், இரண்டாம் பாகம், நாளை மாலை 5.30 ம்ணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு அடுத்த நாள் காலை 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். வால்க டமில்.. டிஸ்கி: யாராவது புண்ணியவான் முடிஞ்சா ரெக்கார்ட் செஞ்சு போடு...

சாப்பாட்டுக்கடை

Image
இட்லி என்றவுடன் நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது.. மதுரை ப்ளாட்பார இட்லிகடைகளும், ரத்னா பவன் இட்லி சாம்பாரும்,  முருகன் இட்லிக் கடையும்தான். அதுவும் சமீப வருடங்களில் இட்லிக்கு க்யூ கட்டி வெயிட் செய்து சாப்பிடுகிற ஒரு உணவகமாகிவிட்டது முருகன் இட்லிக் கடை. சென்னை முழுவதும் பல இடங்களில் அவர்களது ப்ராஞ்சுகள் திறக்கப்பட்டாகிவிட்டது என்றாலும், ஒரு இட்லிக்கு 8 ரூபாய் வாங்கினாலும் கூட்டம் குறைந்த பாடில்லை. இப்போது நார்த் உஸ்மான் சாலையில் உள்ள அவர்களது ப்ராஞ்சில் மாலையில் மட்டும் ப்ஃபே சிஸ்டத்தில் உபசரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கு 112 ரூபாயும், சிறுவர்களுக்கு 56  வாங்குகிறார்கள்.. . இட்லி, பொங்கல், சக்கரை பொங்கல், மெதுவடை, தோசை, மசால் தோசை, பட்டர் தோசை, நெய் தோசை, பொடி தோசை, மற்றும் எல்லா வகையான ஊத்தப்பம், ரவா தோசை,  சாம்பார், நான்கு வகை சட்னி, ம்ற்றும் பொடியுடன் என்று எல்லா டிபன் அயிட்டங்களும் அன்லிமிட்டாக த்ருகிறார்கள். எவ்வளவுதான் மோசமாக சாப்பிடுபவராக இருந்தாலும் இங்கு சாப்பிடுவது லாபம் தான். ஏனென்றால் இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை சாப்பிட்டால் குறைந்த ...

கொத்து பரோட்டா –21/06/10

Image
இந்த வார சந்தோஷம் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சிக்கு இன்று பதினோரு மணிக்கு படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார்கள். ஒளிபரப்பு நேரம், மற்ற விவரங்களை படப்பிடிப்பு முடிந்து தெரிந்து கொண்டு உங்களூக்கு சொல்கிறேன். உங்கள் வாழ்த்துக்களுடன்.. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ த மிழ் கம்ப்யூட்டர் இதழில் என்னை பற்றியும், என் ப்ளாக்கை பற்றியும் எழுதியிருக்கிறார்கள். இதற்காக என்னை பேட்டி  எடுத்த பதிவர் விக்கிக்கு நன்றி. அதே போல் நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஷோபாசக்தி, லக்கியுடன், நம்ம ப்ளாக்கை பற்றியும்   ப்ளாக் என்கிற வகையில் எல்லோருடய டெம்ப்ளேடையும் எடுத்து போட்டு இருக்கிறார்கள். நான் இரண்டையும் பார்க்கவில்லை. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ பதிவர் டி.வி.ஆரின் ”கலைஞர் எனும் கலைஞன்” புத்தக வெளியீட்டு விழா சிறப்பாய் நடந்தது. கலைமகள் ஆசிரியர் வெளியிட, அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். இந்த ’இலக்கிய’ சிறப்பு மிக்க விழாவில் ஹைலைட்டான விஷயம் ’அண்ணே’ அப்துல்லா வாழ்த்துரை வழங்கியதும், டிவிஆரின் நகைச்சுவையான ஏற்புரையும் தான். பின்னாளில் ...

ராவணன் – திரை விமர்சனம்

Image
மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிற படம். சமீப காலங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் சிட்டி பார்டர் தியேட்டர்களை சேர்த்து சுமார் 35க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், வெளியாகியிருக்கும் படம். இப்படி ரசிகர்கள் மட்டுமில்லாமல், மொத்த திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ராவணன். எல்லோருக்கும் தெரிந்த இராமாயண கதைதான். மணிக்கு ஏதும் புதிதில்லை, ரோஜா, தளபதி, என்று ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம். வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்த...

கற்றது களவு - திரை விமர்சனம்

Image
நல்லவனாய் வாழ்ந்து ஏதுவும் சாதிக்காமல், ஏமாற்றப்பட்டு வாழ்வதை விட அவர்களை ஏமாற்றி வாழ்வது மேல் என்று முடிவெடுக்கும் இளைஞனின் கதை. முடிந்த வரை விறுவிறுப்பாக சொல்லியிருக்க வேண்டிய கதை. ஒரு ருபாய் முதலீட்டில் ஸ்டூடண்ட் பேங்க் ஆரம்பிக்க நினைத்து அந்த ப்ராஜக்டை சந்தான பாரதியிடம் கொடுக்க, அவர் அந்த ப்ராஜக்டை தன் ப்ராஜெக்ட் என்று பில்டப் செய்து சுவாகாவாக்கிவிடுகிறார். இதனால் காண்டாகும் ஹீரோ, புதியதாய் ஒரு காதலியுடன் சேர்ந்து அவனையும், மற்றும் பலரையும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான். ஒரு கட்டத்தில் மந்திரி ஒருவரிடம் டகால்டி வேளை செய்துவிட, அவர்கள் துரத்த, இன்னொரு பக்கம் லோக்கல் போலீஸ் ஆபீசரும், டெல்லி ஐ.பி ஆபீசரும் துரத்த, இவர்கள் தங்களை காத்துக் கொள்ள ஓடுகிறார்கள். முடிவு என்னவாயிற்று என்பதை வெள்ளித்திரையில் பார்க்க.. அலிபாபா ஹீரோ கிருஷ்ணா, படம் நெடுக ஓடுகிறார், சில இடங்களில் நடிக்க முயற்சித்திருகிறார். பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. கதாநாயகி விஜயலஷ்மி கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். சம்மந்தமில்லாத காட்சிகளில் க்ளிவேஜ் காட்டுகிறார். படத்தில் இம்ப்ரஸிவான நடிப்பு என்றால் அது சம்பத்தின் நடிப்பும், அந்...

சூப்பர் சிங்கர் ஜுனியர்2 V/S சன் டி.ஆர்.பி

Image
சூப்பர் சிங்கர் ஜுனியர் 2வின் பைனல்ஸ் Y.M.C.A க்ரவுண்டில் லைவ்வாக நடைபெற இருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை, ஆர்வத்தை, எழுப்பியிருப்பது நிஜம். நிகழ்ச்சியை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் ஆதரித்தும், எதிர்த்தும் இருந்தாலும், பெரு வாரியான மக்களால் பார்க்கப் படுகிற நிகழ்ச்சியாக இருக்கிறது என்பது உண்மை. ஆரம்பித்த போது மிகவும் ஆவரேஜாக ஆரம்பித்த நிகழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து, எலிமினேஷன் ரவுண்ட், வைல்ட் கார்டு ரவுண்ட், குவாட்டர் பைனல் என்று  வர ஆரம்பித்தவுடன், போட்டியாளர்களீடையே, மிக கடுமையான போட்டியும், ரசிகர்களிடையே அந்த பெண், நன்றாக பாடினாள், ஸ்ரீகாந்த நல்லா பாடினான் என்று ப்ரியங்கா நல்லாத்தான் பாடினாள் என்று தங்கள் வீட்டு பிள்ளைகளை போல நினைத்து உரிமையுடன் பேச ஆரம்பித்தார்கள். வழக்கமாய் விஜய் டிவியின் விளம்பர இம்சை தாங்காமல் பார்ப்பதை தவிர்ப்பவன் நான். அதையும் மீறி சில சமயம் டிவியிலும், இணையத்தில் யூடூபிலும் தொடர்ந்து எல்லா நிகழ்ச்சியையும் பார்த்து வருகிறேன். நிறைய வீடுகளில் மாலை நேரத்தில் கடந்த ஒண்ணரை மாதமாய் விளம்பர இடைவேளையில்தான் மத்த நிகழ்ச்சிகளை ப...

சாப்பாட்டுக்கடை

Image
அசைவ உணவு வகைகளுக்கு நிறைய உணவகங்கள் இருக்கிறது. ஆனால் சைவ உணவகங்களுக்கு நிஜமாகவே டிமாண்ட் தான். அதிலும் வெறும், தோசை, இட்லி என்று தேடினால் நிறைய கிடைக்கும். ஆனால் பொதுவாக நல்ல மெனு, நல்ல சாப்பாடு, சைட் டிஷ், நியாயமான விலை என்று தேடினால் கிடைப்பது அரிது. அதுவும் சைவ உணவகங்களில். அந்த வகையில் எல்லா வகையிலும் சிறநத உணவகம் சென்னை, சாலிக்கிராம,  அருணாச்சலம் ரோடில் மோகன் ஸ்டூடியோ எதிரிலுல்ள, கருணாஸ் சைவ உணவகம். மாலையில் சுடச்சுட, இட்லி, தோசை, அடை, ரவா தோசை, கொத்து பரோட்டா, என்று கலந்து கட்டி அட்டகாசப் படுத்தும் மெனு. சம்பார், சட்னி, கார சட்னி, இத்துடன் காரக்குழம்பு ஒன்று இவர்கள் ஸ்பெஷாலிட்டி. அதே போல மதிய சாப்பாடு. பொரியல், கூட்டு, அப்பளம், வத்தக்குழம்பு என்று நியாயமான விலையில் சுவையான சாப்பாடு, நிச்சயம் அடுத்த நாள் காலையிலோ, இரவிலோ வயிற்றை கெடுக்காத சாப்பாடு. இட்லி காரக்குழம்பு காம்பினேஷன் அடிச்சிக்க முடியாது. விஜய் டிவியின் நீயா நானாவில் கலந்து கொள்ள போய்விட்டு, நேரமாகும் என்பதை தெரிந்து கொண்டு, நான், அப்துல்லா, தண்டோரா மணீஜி, நர்சிம், சூர்யா ஆகியோர் கிளம்பினோம். அவர்களுக்கு ந...

”பிட்” உலகம்

Image
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலேயும் “பிட்” படங்கள் என்று அழைக்கப்படும் “சாப்ட் ஃபோர்ன்” வகையறா படங்களுக்கு பெரிய மவுசு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இம்மாதிரியான படங்களுக்கான தியேட்டர்கள் ஊரோரத்திலோ, அல்லது நகரின் முக்கிய தெருவிலோ, இருக்கத்தான் செய்கிறது. என்பதுகளில் தான் இம்மாதிரியான படங்களுக்கு ஒரு மவுசு வர ஆரம்பித்தது. அதுவும் மலையாள படங்கள் தான் இம்மாதிரியான சாப்ட் ஃபோர்ன் படங்களுக்கான சப்ளையர்களாக இருந்த்து. “அவளோட ராவுகள்” படம் என்னவோ நல்ல படம் தான் ஆனால் பெயரும், படத்தின் கருவும் கொஞ்சம் செக்ஸியாக இருந்தததினால், சென்னையின் முக்கிய தியேட்டரான ஆனந்த் தியேட்டரில் நூறு நாள் ஓடியது என்று நினைக்கிறேன். அதன் பிறகு அஞ்சரைக்குள்ள வண்டி, மாமனாரின் இன்ப வெறி, சாரவலையம், என்றெல்லாம் மலையாள படங்கள், வீடியோவின் வரவால் டல்லடித்துக் கொண்டிருந்த திரை உலகை காப்பாற்றி கொண்டிருந்தது இம்மாதிரியான படங்கள் தான். பல தியேட்டர்களை மூடி விழாவிலிருந்து காப்பாற்றியதும் இம்மாதிரியான படங்கள் தான. சாதாரணமாகவே செக்ஸ் கதை களன்களை மட்டுமே  அடிப்படையாய் கொண்டு தயாரிக்கப்படும் இம்மாத...

கொத்து பரோட்டா- 13/06/10

Image
இந்த வார சந்தோஷம். சாவகாசமாய் ஒரு மாலை நேர கிழக்கு மொட்டை மாடி சந்திப்பில், சினிமாவை பற்றிய வியாபாரங்களை பற்றி பேசிக் கொண்டிருந்த போது பத்ரி “ஏன் நீங்க இதை புத்தகமா எழுதக்கூடாது?” என்றார். முதலில் நானா? புத்தகமா? என்று லேசாக மலைத்தாலும், சரி என்றேன்.  அடுத்த சில நாட்களிலேயே பத்ரி  என்னன்ன  மேட்டர்களை கவர் செய்ய முடியும் என்று ஒரு மெயில் அனுப்ப, பதிவுலகில் தொடராய் எழுத ஆரம்பித்து ஏகோபித்த வரவேற்பை பெற்ற  ”சினிமா வியாபாரம்” தொடர், இப்போது  புத்தகமாய் வெளிவந்துவிட்டது. பதிவில் எழுதாத மேலும் பல புதிய, அறிய தகவல்களுடன்.. என்னுடய முதல் புத்தகமான “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவுக்கு” கொடுத்த அதே ஆதரவையும், அன்பையும் இதற்கும் எதிர் நோக்கி.. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஆ ட்டோ பர்மிட் இப்போது எந்தவிதமான தடையும் இல்லாமல் கிடைக்க அரசு வழி செய்திருக்கிறது. ஒரு காலத்தில் பர்மிட்டை வாங்கி வைத்துக் கொண்டு சேட்டுகள், அதிக விலைக்கு பீரிமியத்தில் விற்ற காலத்தில் பர்மிட்டோடு கூடிய ஆட்டோக்கள் அதிக விலையாயின. ஆனால் இப்போதோ எல்லோர...

சென்னையில் பூமி அதிர்ச்சி..

நேற்றிரவு சுமார் 12.55 இருக்கும் திடீரென நான் உட்கார்ந்திருந்த சேர் லேசாக அதிர்ந்து, நகர்வதுபோலிருக்க.. சிறி து நேரத்தில் நான் உணர்ந்தேன். பூமி அதிர்வென.. சில நொடிகள் தொடர்ந்து அதிர, எல்லோரையும் எழுப்பலாம் என்று நினைப்பதற்குள்.. நின்று விட்டது.. கடவுளே..

ஓர் இரவு – திரை விமர்சனம்

Image
தமிழ் சினிமாவில்.. ஏன் இந்திய சினிமாவில் முதல் முறையாய் பாயிண்ட் ஆப் வீயூவில் எடுக்கப்பட்ட படம். பாயிண்ட் ஆப் வியூ என்றால்? பெரிதாய் வேறொன்றும் இல்லை… கதையின் நாயகன் கண் தான் கேமரா என்று வைத்துக் கொள்வோம் அவன் மூலம்பார்க்கும் பார்வையின் மூலம் கதை சொல்லப்பட்டிருக்கிறது அது தான் பாயிண்ட் ஆஃப் வியூ என்பதாகும். நகுலன் பொன்னுசாமி இறந்துவிடுகிறான். மிஸ்ட்ரி டிவி என்கிற டிவியில் நகுலனின் இறப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் ஆரம்பிக்கிறது. யார் இந்த நகுலன் பொன்னுசாமி? நகுலன் பொன்னுசாமி ஒரு வெற்றிகரமான பாராநார்மல் ஆசாமி. ஆவி, பேய், பூதம் போன்ற அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்பவன். அதற்காகவே லண்டனுக்கு சென்று படித்தவன். இதுவரை 18 கேஸ்களை வெற்றிகரமாக முடித்த அவனுக்கு 19வது கேஸாய், ஆனந்த் என்கிற ஒரு தொழிலதிபர் தான் வாங்கி வைத்திருக்கும் மூணாறு பங்களாவில் ஏதோ அமானுஷ்யங்கள் இருப்பதாய் சொல்லி, அதை கண்டுபிடித்து தரச் சொல்லி பணிக்கிறார். பகலில் பார்த்தாலே நடு முதுகில் சில்லிட வைக்கும் பாழடைந்த பங்களா. அங்கிருக்கும் அமானுஷ்யங்களை பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு நாள் இரவு தங்க முடிவெடுத்து, அங்கிருக்கும் ...

Vedam –2010

Image
எத்தனை நாளாகிவிட்டது இந்த மாதிரி ஒரு ஸ்டன்னிங் படம் பார்த்து… அல்லு அர்ஜுன், அனுஷ்கா, மனோஜ் பாஜ்பாய், மனோஜ், என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படையெடுத்திருக்க, கம்யம் இயக்குனர் இயக்கியுள்ள அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பே படத்திற்கு ப்ளஸ் பாயிண்டாக படம் பார்க்க தூண்டியது. மனோஜ் ஒரு ராக் ஸ்டாராக ஆசைப்படும் மிலிட்டரி குடும்பத்து பெங்களூர்கார இளமை துள்ளும் இளைஞன். அவனுடய தாத்தா, அப்பா எல்லோருமே நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்றி தியாகம் செய்தவர்கள். மனோஜுக்கு ஹைதராபாத்தில் அவனது ராக் குழுவுக்கு ஒரு லைவ் ப்ரோக்ராமுக்கு சான்ஸ் வர, கடைசி நேரத்தில் விமானத்தை தவற விட்டதால், வேறு வழியில்லாமல் பெங்களூர் டூ ஹைதராபாத் காரில் பயணமாகிறான். வழியில் ஒரு சில பிரச்சனைகளை தாண்டி ஹைதராபாத் அடைகையில் ஒரு விபத்திற்குள்ளாகி, அடிபட்ட ஒரு கர்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்க்க வருகிறான். ராமுலு.. ரூலல் ஆந்திர பிரதேசத்தில் ஒரு நில சுவாந்தாரிடம் 50,000 கடன் பெற்று அதை அடைக்க முடியாமல் தவிக்கிறான். அவனது பேரனை கொத்தடிமையாக்கி பணம் கொடுத்தால் பையனை விடுவிக்கிறேன் என்கிறான். வேறு வழியில்லாமல் கிட்னி வாங்கி விற்...