மிளகா
மதுரைக்கார பசங்க நட்புக்காக உசுரையே கொடுப்பாய்ங்கனு பஞ்ச் லைன் போட்டிருக்காங்க.. அதுக்காகவே ஒரு கதையை ரெடி பண்ணியிருக்காங்க. ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் ரவிமரியா இயக்கியிருக்கிற படம். மிளகா நட்ராஜ் மிளகா மண்டி ஓனரோட பையன். வீட்டுல பொறுப்பில்லாம, ஆனா ஊருக்கும், நட்புக்கும் பொறுப்பா இருக்கிறவரு. அவருடய நட்பு கும்பல்,சிங்கம்புலி, ஜெகன், இன்னும் ரெண்டு பேர். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். நண்பனின் கடனை வசூல் செய்ய உதவும் நட்ராஜை பார்த்து ஊரில் உள்ள ரவுடி பிரதர்ஸின் கஸ்டடியில் இருக்கும் ஒரு பெண், நட்ராஜை வைத்து தன்னை காத்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காக அவர் தன்னை காதலிப்பதாய் பிரச்சனையை கிளம்பிவிட, அதில் மாட்டுகிறார் நட்ராஜ்.. மீதி என்ன எனபது வெள்ளிதிரையில். நட்ராஜ் ஒரு மினி ரஜினி என மனதில் நினைத்துக் கொண்டு, அதே போல பேசுகிறார், சண்டை போடுகிறார், மார்கெட்டில் வடக்கத்தி பெண்ணுடன் நடனம் ஆடுகிறார். எல்லா சகவாசங்கள் இருந்தாலும், நண்பர்களுக்கு என்றால் உயிரை கொடுக்கிறார். திடீரென கருப்பண்ண சாமி பக்தனாகி உக்கிரம் கொண்டு அருவாளெடுக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசையோ...