Posts

Showing posts from July, 2010

எண்டர் கவிதைகள்

Image
கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன். பழகினால் புரியும் என்றாள் பழகினேன் அவள் பேச்சே கவிதையாய் இருந்தது ஓ.. இது தான் கவிதையா என்றேன் இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு இது வெண்பா என்றாள் அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் சீர், தளை, விருத்தம் என்றாள் கவிதையை முழுதாய் புரிந்தேன் இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.     கேபிள் சங்கர் டிஸ்கி: ரிப்பீட்டு..

சாப்பாட்டுக்கடை

Image
ஒரு மழை நாளில் ஒரு நண்பருடனான மீட்டிங்கை முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டது. அவருடய அலுவலகத்திலிருந்து கிளம்பி வெளியே வந்தால் பெரும் மழை. இரவு மணி சுமார் 12.30 இருக்கும். கோடம்பாக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி வரை திறந்திருக்கும் ஒரு உணவகம் அன்று மூடிவிட்டிருந்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் பசி தெரியவில்லை. ஆனால் இப்போது பசி பின்னி எடுத்தது. அப்போதுதான் எனக்கு சட்டென ஞாபகம் வந்தது. TWILIGHT TAKEOUT. மாலை 7 மணி முதல் அடுத்த நாள்காலை 7 மணி வரை சுடச்சுட உணவு கிடைக்குமிடம். ஆனால் ஒன்லி பார்சல். நுங்கம்பாக்கத்தில் லேக் ஏரியாவில், பார்க் தெருவில் இருக்கிறது. அந்த மழை இரவிலும் படு சுறுசுறுப்பாக வியாபாரம் நட்ந்து கொண்டிருந்தது. நட்ட நடு இரவில் நல்ல சுடச்சுட வெஜ், நான் வெஜ் பிரியாணிகள், நான், பட்டர் நான், ப்ரைட் ரைஸ், மற்றும் சைட் டிஷ்ஷுகள் கிடைக்கும். இதை தவிர இன்னும் நிறைய உணவு வகைகள் கிடைக்கிறது விடிய..விடிய..  போன் செய்து ஆர்டர் செய்துவிட்டு கூட போய் வாங்கிக் கொள்ளலாம். டெலிவரியும் செய்கிறார்கள். நாங்கள் அன்று ஆளுக்கு ஒரு பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு காரிலேயே உட்கார்ந்து சாப்பிட்டோம்...

Maryada Ramanna

Image
தெலுங்கு திரையுலகின் கமர்ஷியல் ஹிட் மேக்கர் எஸ்.எஸ்.ராஜ்மெளலியின் படம் என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்புக்கு ரசிகர்கள் தயாராகிவிடுவார்கள். அதுவும் தெலுங்கு மெஹா ஹிட்டான மகதீராவுக்கு பின் வரும் படம் எனும் போது எதிர்பார்ப்புக்கு குறைவேயிருக்காது. இப்போது முதல் முறையாக காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக்கி ஒரு முழு நீள காமெடி கலந்த செண்டிமெண்ட் படத்தை கொடுத்திருக்கிறார். ராமனின் அப்பா ராயலசீமாவில் நடக்கும் ஊர் பிரச்சனையில் கொல்லப்பட, ராமனை காப்பாற்ற ஹைதராபாத்துக்கு வந்து செட்டிலாகிறாள் அவனுடய அம்மா. அம்மாவின் மறைவிக்கு பிறகு மிகவும் கஷ்டப்படும் ராமனுக்கு அவனது கிராமத்திலிருந்து ஒரு நோட்டீஸ் வருகிறது. 5 ஏக்கர் நிலத்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி வர, சந்தோஷமாய் ரயிலில் ஊருக்கு கிளம்புகிறான். ரயிலில் அபர்னாவை  சந்திக்கிறான், அவளின் அப்பா ராமநீடு ரொம்ப வருஷமாக ராமனை கொல்ல காத்திருக்கிறான். ஏனென்றால் ராமனின் அப்பாதான் ராமநீடுவின் தம்பியை ஊரில் நடக்கும் பிரச்சனையின் போது கொன்றுவிடுகிறார். அதற்கு பழி வாங்க காத்திருக்கிறார் அபர்ணாவின் தந்தையான ராமநீடு. ஊருக்குள் வந்து அபர்ணா விட்டுப் போன புத்தகத்தை...

கொத்து பரோட்டா-26/07/10

Image
சமீப காலமாய் சென்னையின் முக்கிய ரோடுகளில் பாதாள சாக்கடைக்காகவோ, அல்லது வேறு ஏதாவது பிரச்சனைக்காகவோ.. பள்ளம் நோண்டினால், அதை மூடிவிட்டு புதிய ரோடு போடுவதில்லை. நிறைய இடங்களில் ஒரு பாதி ரோடு பள்ளமாகவே இருக்கிறது. ஆனால் சில இடங்களில் அமைச்சர்கள், துணை முதலைமைச்சர் வருகிறார்ரென்றால் உடனடியாக தார் சாலை போடப்பட்டு பளபள ரோடாகிறது. ஒரு காலத்தில் ரோடு போடுவததென்றால் போட்ட ரோடின் மீதே மீண்டும் தார் போட்டு புதுசாக்கிவிடுவார்கள். அது அடுத்த மழை வரைக்கும் தான். ஆனால் இப்போது ஒரு நல்ல விஷயம் செய்கிறார்கள். ஏற்கனவே போட்ட ரோட்டை சுரண்டி எடுத்து, பின்பு பழைய உயரத்துக்கே ரோடு போடுகிறார்கள். மிக நல்ல ஆரோக்கியமான விஷ்யம். ஆனால் என்ன எழவு.. சுரண்டினதை திரும்ப எப்ப போடுவாங்கன்னு தெரியத்தான் மாட்டேங்குது.  பாதி ரோடு சுரண்டியும், பாதி ரோடு மேடு பள்ளமாவும் சென்னையில பல ரோடுகள் இருக்கு.. ஒரு மாதிரி ஜிம்னாஸ்டிக் செஞ்சுதான் வண்டி ஓட்ட வேண்டியிருக்கு. கடவுள் தான் ரோட்டுல போறவுங்களை காப்பாத்தணும். &&&&&&&&&&&&&&&&&&&&...

தில்லாலங்கடி

Image
தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான் ரவி. ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் தில்லாலங்கடிதான் ஜெயம் ரவி. தன் தங்கை  ரவியை காதலிப்பதாய் சொல்ல, தான் கிக்குக்காக எதையும் செய்பவன், மொள்ளமாறி, முடிச்சவுக்கி என்று தன்னை  பற்றி  தன் தங்கையிடம் கேவலாமாய் சொல்லச் சொல்லி அவள்  காதலிப்பதை தடுக்க வேண்டும் என்று தமன்னா ரவியிடம் கேட்கிறாள். ரவியும் அப்படியே சொல்கிறான். ஆனால்  ஃபினிஷிங் டச்சாய், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். தமன்னாவின் தங்கையிடம். நான் உன்னை லவ் பண்ண மாட்டேன் என்று சொல்லும் தமன்னா.. கொஞ்சம் கொஞ்சமாக, அவனது தில்லாலங்கடி தனத்தில் மயங்கி காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் கிக்குக்காக அலையாமல் ஏதா...

ஒரு உதவி இயக்குனர், இயக்குனர் முகத்தில் குத்து விட நினைக்கும் தருணங்கள்.

1. காலையில் அடித்து பிடித்து பக்கத்து ரூம் சாப்ட்வேர் பையனின் பைக்கில் லிப்ட் வாங்கி.. காலை டிபன் சாப்பிட வந்தால். இன்னைக்கு ப்ரொடியூசர் வரலை.. அதனால டிபன் கிடையாதுன்னு சொல்லிட்டு, இவரு மட்டும் ஆறு இட்லி வடகறி சாப்பிட்டு ஏப்பம் விடறப்ப....ஒரு குத்து. 2. தனியா டீ சாப்பிடும் போது இந்த சீனில எனக்கு சரியா செட்டே ஆவுலடா.. என்று புலம்புவதை பார்த்து மனமிறங்கி தன் படத்துக்காக வைத்திருக்கும் ஒரு சீனை வேறு வழியில்லாமல் உருவிவிட்டு, மத்யானம் லஞ்ச் முடிஞ்சதும், “ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு, ஒரு ஸ்பார்க் வந்து, ஒரு சீன் சொல்றேன் பாரு” என்று அவன் முன்னால் வைத்தே தன் சீனாய் சொல்லும் போது ஒரு குத்து 3. கம்ப்யூட்டர் என்றால் ஏதோ ஜீபூம்பா பெட்டி என்று ”அப்படியாடா..ன்னு ” கேட்டு வாய் பிளந்து தமிழில் டைப் அடிப்பதை பார்த்துவிட்டு , ப்ரொடியூசர் வரும் போது. “எல்லாம் ரெடியாயிருச்சு சார்.. இப்பத்தான் என்.ஹெச்.எம் டவுன்லோட் பண்ணி.. கம்ப்யூட்டர்லேயே அடிக்க சொல்லி பழக்கப்படுத்தியிருக்கேன். ரெண்டு நாளில ரெடியாயிரும். இப்பத்தான் பழகறான் அதான் கொஞ்சம் ஸ்லோ பையன்.  ஸ்கிரிப்டு.. டி.டி.பி. செலவு மிச்சம் பாருங்க..” ...

நிதர்சன கதைகள்-21-முற்றுப்புள்ளி

Image
என் முழு உடலையும் எதிரில் தெரியும் கண்ணாடியில் உற்று பார்த்தேன். புதிய சிகப்பு புடவையில் உடலின் வளைவுளும், செழுமைகள்  எல்லாம் கச்சிதமாய் தெரிய, “முப்பத்தி அஞ்சிலேயும் நீ அழகுதாண்டி” என்று மனதுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெளிச்சமாய் தெரிய, உடன் இந்த புடவையில சந்தோஷ் பார்த்தான்னா என்ன சொல்வான்? என்று மனதுள் ஓடிய அடுத்த வினாடி, மின்னல் ஆஃப் ஆகி அமைதியானேன். ”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.” “எனக்கும் தான் ” டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது.  ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது?. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது? காதல் என்றா?. காதலிக்கும் வயசா இது..? ஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா..? இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான்.  என்ன எதிர்பார்க்கிறேன்? எதை தேடுகிறேன்? இன்று நான் எடுத்த முடிவு சரியா? என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில்...

ஒரு கவிஞரின் புத்தக விமர்சனம்

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து. அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம். எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது. ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண்....

கொத்து பரோட்டா-19/07/10

Image
சாரு ராவோடு ராவாக Rawவாக அடித்துவிட்டோ, அல்லது அடிக்காமலோ எழுதி, எடுத்துவிட்ட பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்களை வைத்து ஒரு வாசகனை அப்படி திட்டக்கூடாது, இப்படி பேசியிருக்க கூடாது என்று ஆளாளுக்கு பஸ்ஸிலும், ட்ரைனிலும்.. ச்சே.. சாரி.. டிவிட்டரிலும், பதிவுகளும், எழுதித்  தாளித்து  கொண்டிருக்கிறார்கள். அவராவது பரவாயில்லை.. அவர் பதிவிலேயே எழுதி விட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே எடுத்துவிட்டார். இதை பற்றி பேசுபவர்களில் ஒருவர் அவர் நினைத்ததை அவர் பதிவில் எழுதாமல் வேறு ஒருவர் பெயரில் எழுதிவிட்டு, கண்ட மேனிக்கு மற்றவர்களை குற்றம் சாட்டிவிட்டு, பின்பு தான் தான் எழுதினேன் என்று ஒப்புக் கொண்டுவிட்டு, அதிலிருந்து சில பேரின் பெயர்களை மட்டும் எடுத்தவர். பரவாயில்லையா.. நடு ராத்திரியில் எழுதி எடுத்தாலும் காத்திருந்து படிக்கிறாங்க போலருக்கு.  அப்புறம் இன்னொரு விஷயம் இந்த வார விகடனில் சாருவின் மனம் கொத்தி பறவை அருமை. %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% உலகிலேயே பெரிய மார்பகங்களை (38FFF) கொண்ட பிரேசில் மாடல் ஷைலா ஹெர்ஷே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இவர் இதுவரை முப்பது முறை தன் ...

வெட்டுப்புலி –புத்தக விமர்சனம்

Image
இப்புத்தகத்தை பற்றி நிறைய பேர் சிலாகித்து சொன்னார்கள். எழுதியிருந்தார்கள். ஒரு சினிமாவை பற்றி பதிவெழுதி நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலை இப்படி விமர்சித்து நிறைய பேர் சொன்னது என்னுள் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சொல்லி வைத்து டிஸ்கவரியிலிருந்து வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன். வெட்டுபுலி படம் போட்ட தீப்பெட்டியில் இருக்கும் தன் மூதாதையரான தாத்தாவின் வரலாறு தேடி போவதாய் கதை ஆரம்பிக்கிறது. கொஞ்சம் சினிமாத்தனமான ஆரம்பமாக இருந்தாலும், ஒரு அருமையான் கதை சொல்லிக்கான யுக்தியாய் தான் தெரிந்தது. படிப்பவர்களை மெல்ல கதைக்குள் இழுத்துச் செல்லும் லாவகமான யுக்தி. முப்பதுகளில் ஆரம்பிக்கிறது கதை. லஷ்மணரெட்டி வெள்ளைக்காரனின் குதிரையை உடல் சிராய்த்து, ரத்தம் வழிய ஓட்டப்பழகுவதோடு கதை ஆரம்பிக்கிறது.  முப்பதுகளிலிருந்து இன்றைய காலம் வரை நம் தமிழ் நாட்டு மக்களிடையே, அதுவும் கிராமத்து மக்களிடையே இருந்த கலாச்சாரம், ஜாதி, பள்ளி, பறையன், பாப்பார ஜாதிகளுக்கிடையேயான மதிப்பீடுகள், அரசியல், சினிமா, சுதந்திர தாகம், எதிர்ப்பு, ஆங்கிலேயனுக்கான மறைமுக ஆதரவு, ஆங்கிலேயனை வைத்து பிழைப்பு நடத்தி வசதி வா...

கேட்டால் கிடைக்கும்

Image
நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை  அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம். சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது. “என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?” ”சேஞ்ச் இல்லை சார்..” “நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?” “நாலனாதானே சார்..” “சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?” சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் ...

சாப்பாட்டுக்கடை

Image
மைலாப்பூர் என்றாலே நல்ல பல மெஸ்ஸுகள் ஞாபகத்துக்கு வரும். கற்பகாம்பாள், ராயர் கடை, என்று வரிசைக்காய்.. அந்த வரிசையில் மயிலையில் பிரபலமானது மாமீஸ் மெஸ். கிழக்கு மாட வீதியின் முடிவிற்கு முன் ஒரு சின்ன தெரு போகும், இல்லாவிட்டால் யாரிடம் கேட்டாலும் மாமீஸ் மெஸ்ஸை கேட்டாலும் சொல்வார்கள். முன்பு சின்ன கடையாய் இருந்ததை இப்போது இடித்து பெரிதாக பாஸ்ட் புட் கடைகள் போல நின்று கொண்டு சாப்பிடும்படியாக மாற்றியிருக்கிறார்கள். மாமீஸ் டிபன் செண்டர் என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள். முன்பை விட நீட்டாக உள்ளது. மதியம் புளி, சாம்பார், தயிர், என்று சாத வகைகளும், முப்பது ரூபாய்க்கு அளவு சாப்பாடும் தருகிறார்கள். அளவு சாப்பாட்டில் ஒரு பெரிய கிண்ண சாதம், ஒரு பொரியல், கூட்டு, ஊறுகாய், தொகையல், சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர்.  சாம்பார், ரசம், காரக்குழம்பெல்லாம் அவ்வளவு ருசி.  வீட்டில் செய்து போல. என்ன மோர் மட்டும் ஆஞ்சநேயர் கோயில் ஸ்ரீராம நவமி நீர் மோர் போல கையில் ஒட்டாமல் ஓடியது. மற்றபடி திருப்தியான சாப்பாடு. மாலையில் டிபன் வகைகள் தோசை, இட்லி, பரோட்டா என்று களை கட்ட ஆரம்பித்துவிடுகிறது. நிச...

ஆனந்தபுரத்துவீடு

Image
வழக்கமான பயமுறுத்தும் பேய் படத்தை எதிர்பார்த்து இப்படத்திற்கு போனீர்களானால் நிச்சயம் பெரும் ஏமாற்றம் ஏற்படுவது உறுதி. ப்ளாங் மைண்டோடு சென்றீர்கள் என்றால் உங்களால் என் ஜாய் செய்ய முடியும். ஏற்கனவே சீரியல் உலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர், கதாசிரியர் இணைந்து இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வந்திருக்கும் படம். நந்தா, சயாசிங், அவரது பையனுடன் தங்களுடய கிராமத்து வீட்டுக்கு வெக்கேஷனுக்காக வருகிறார்கள். வந்த இடத்தில் வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதை முதலில் சிறுவன் உணர்கிறான். ஆனால் அவனால் பேச முடியாது. அந்த பேய் வேறு யாரும் கிடையாது  நந்தா சிறு வயதாக இருக்கும் போது ஆக்ஸிடெண்ட்டில் அகாலமாய் இறந்து போன அப்பா அம்மா தான்.  மகன் வந்திருப்பது ஒரு பிரச்சனையில் ஐம்பது லட்ச ரூபாய் கடனை திரும்ப கொடுக்க முடியாமல், அங்கிருந்து பிரச்சனையிலிருந்து தப்ப, யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் நந்தா. நந்தாவை தொடர்ந்து வரும் கடன் கொடுத்த நட்வர்லால் அவன் வீட்டிலேயே ஹவுஸ் அரஸ்ட் செய்து பணம் கொடுத்துவிட்டு வெளியே போ அப்படி இல்லையென்றால் உன் மனைவியை என் பொறுப்பில் வைத்து விட்டு போ...

கொத்து பரோட்டா-12/07/10

Image
சமீப காலமாய் தாய் தந்தையர்களை வைத்து ஒழுங்காக பராமரிக்காத மகன்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் சுமார் மூன்று மகன்களை கைது செய்து சிறையிலிட்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு 102 வயது முதியவர் இம்மாதிரி விஷயத்துக்கு போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்து கொண்டு, தொலைபேசியில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த சில மணி நேரங்களில் அவரது மகனை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்ற் காவலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளார். பெற்ற தாய் தந்தையரை வைத்து போஷிக்க வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு கடமையாகவாவது செய்யக்கூடாதா..? $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ இனிமேல் விவாகரத்து கேஸ்கள் இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக நடக்கும். ஏனென்றால் குடும்ப நல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் அதிகமாக இருப்பதால் இனி சனிக்கிழமைகளிலும் கோர்ட்டு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. What a Pity? $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ இந்த வார காமெடி சன் டிவி டாப் டென் நிகழ்ச்சியில் புதுவரவு பகுத...

மதராசபட்டினம்

Image
  வெள்ளைக்கார பெண், இந்திய ஏழை ஆண் இவர்கள் இருவருக்குமிடையே காதல், சுதந்திர இந்தியா காலத்தின் பின்னணியில் பெரிதாய் என்ன இருந்திருக்க முடியும் என்ற ஒரு எதிர்பார்ப்பும், அவர்களது நிஜமாகவே புத்திசாலித்தனமான டீஸ்ர்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டிருந்தது. இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஒரு காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம். ஆரம்ப காட்சிகளில் டைட்டானிக்கை ஞாபகப்படுத்தினாலும், மெல்ல, மெல்ல, பழம் பெரும் சென்னையை கண் முன்னே விரித்து, அதில் வரும் கேரக்டர்களில் ஒருவராய் நம்மை படத்தினுள் நுழைத்துவிடுகிறார்கள்.    தற்காலத்தில் லண்டனில் ஏமியிடமிருந்து ஆரம்பிக்கிறது கதை. மெல்ல அன்போல்ட் ஆகி 1947 வாழ்ந்த, காதலித்த பரிதியை தேடி, அவன் கொடுத்த தாலியை அவனிடம்  சேர்ப்பதற்காக, என்றோ ஒரு காலத்தில் தலையில் அடிப்பட்டதன் விளைவாய் ப்ளட் க்ளாட் ஆகி உயிருக்கு ஆபத்தான ஆபரேஷனுக்கு முன் பரிதியை சந்திப்பதற்காக இந்தியா வருகிறாள் ஏமி. அவளின் தேடலை, முன்னும், பின்னும் போகும் திரைக்கதையில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாகம் சுமார் 1.40 நிம...