Posts

Showing posts from August, 2010

எ.வ.த.இ.மா.படம் -Peepli (Live)

Image
எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்னு ஏங்க வைகிற படம் பீப்லி. வெகு சிம்பிளான மேக்கிங். ஆனால் மனதில் அறையும் கதை. மிகவும் கசப்பான விஷயத்தை சிரிப்பு என்கிற மருந்தோடு முழுங்க கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு இயல்பாக ஒரு கதையை சொல்ல முடியுமா? மேக்கப்பில்லாத அழுக்கு முகங்களை வைத்து நம்மை வசீகரீக்க முடியுமா? கொஞ்சம் கூட கமர்ஷியல் இல்லாத ஒரு படத்தை அமீர்கான் தயாரிக்க முன்வந்ததை போல தமிழில் எந்த நிதிகளுக்காகவாவது தைரியம் இருக்கிறதா?. படத்தில் தான் கமர்ஷியல் விஷயம் இல்லையே தவிர படத்தை பொறுத்த வரை கமர்ஷியல் ஹிட் தான். ஏனென்றால் பிவிஆர், சத்யம், ஐநாக்ஸில் தொடர்ந்து வீக்கெண்டில் ஹவுஸ்புல். விவசாயிகள் தற்கொலைதான் படத்தின் அடிநாதம், விவசாயம் நொடித்துப் போய், வறுமையிலும், பேங்க் லோன்கள் கட்ட முடியாமல் கடனிலும் நிலத்தை இழப்பது மானக்கேடு என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை பற்றிய படம்.  நத்தாவும் அவனுடய அண்ணன் புடியாவும் பேங்க் லோன் கட்ட முடியாமல் அவர்களது நிலத்தை பேங்கிடம் இழக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் பணம் புரட்ட முடிய்வில்லை. எனவே லோக்கல் அரசியல் வாதியிடம் போய் ...

கொத்து பரோட்டா-30/08/10

Image
ஒரு வழியாய் விஜய் டிவி மூன்று மாதத்திற்கு முன் எடுத்த நீயா? நானா நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டார்களாம். நான் ஒரு தயாரிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்ததினால் பார்க்கவில்லை. நிகழ்ச்சியை பார்த்து தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸிலும் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி.. வீடியோ லிங்க் http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=14048:neeya-naana-29-08-10-&catid=119:neeya-naana&Itemid=127 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&  வெள்ளி இரவு சுமார் ஒரு மணிக்கு நந்தனம் சிக்னலிலிருந்து தி.நகர் பக்கமாய் டிராபிக் போலீஸால் திருப்பி விடப்பட்டேன். ஏன் என்று கேட்டபோது ட்ராபிக் ஜாம் என்றார்கள். மேலும் கேள்விகள் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.. சீக்கிரமா வீட்டிற்கு போற வழிய பாருங்க சார் என்றார் அவர். நமது ...

உங்கள் பக்கம்

1) என் விரலிடுக்கில் வழிந்தோடும் மழைத்துளி மகரந்தங்களை வெறுக்கும் புதுவகைப் பூக்கள் இன்னும் தொடர்கின்றது அடர்வனத்தின் ஆழத்தில் கறைபடாத மணம்வீசும்   மலருக்கான தேடல் தொலைத்த ஆசைகள் மழலை உடைத்த பொம்மைகளாய் என் தவமோ சபிக்கப்பட்ட காதலை வரமாய்த் தந்த தேவதைகளைத் தேடி... 2) சும்மாத் தான் இருக்கிறேன் கவிதை எழுதும் வேலையாவது கொடேன்! என்று கேட்டேன் கொஞ்சம் முத்தமிட்டுப்போ   என்றாய் வேலைகேட்டால் சம்பளம் தருகிறாயே! 3) சுற்றும் பூமி உன் கால்களுக்குக் கீழ்   என்றேன் தலைதான் சுற்றுகிறது என்று நீ கண் சுழற்றியபோது நிஜமாகவே   சுற்றத் தொடங்கியது பூமி 4) ஆடை அணியாமை பூக்களுக்கு அழகு என்றேன் என்னை இழுத்து   போர்த்திக் கொண்டாய் 5 )கொஞ்சும் குழந்தையாய் உன் தெத்துப்பல் நாவினால் தடவித் தரட்டுமா? டிஸ்கி; இந்த கவிதைகளை எழுதியவர் பதிவர் திரு. விந்தை மனிதன் அவர்கள். மேலும் அவர் படைப்புகளை படிக்க... http://vinthaimanithan.blogspot.com/ உங்கள் படைப்புகள் இந்த பக்கத்தில் வர என்னுடய மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பவும்.. பரிசீலினைக்...

மாஸ்கோவின் காவேரி

Image
அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும்  சமந்தா, ஸ்மார்ட்டான பையன், ஆங்காங்கே பிக்சர்க்யூ ஷாட்டுகள், ஒவர்லாப்பில் வசனங்கள், ஒரே ஜம்ப் கட் ஷாட்டுகள்,  ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் வேறு நடித்திருக்க, ஒரு நல்ல தயாரிப்பாளர் என்று கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும்  படமாக்கிவிட முடிகிறது.. கீழிருக்கும் படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் பாக்யவான்கள். இதற்கு மேல் ஒன்னும் சொல்லி பிரயோஜனமில்லை..     இருக்கிற டைட் ஷெட்யூலில் கஷ்டப்பட்டு நைட் ஷோ வேறு. ட்ரைலரை பார்த்து ஏமாந்து போன சோனகிரிகளில் நானும் ஒருவன். தமனின் கோரே.. கொக்கோரே பாட்டையும் கட் செய்துவிட்டார்கள். ஆ ஒருத்தருக்கு நன்றி சொல்லணும். அது இயக்குனர் ரவிவர்மனுக்கு.. மொத்தமா 100 நிமிஷத்துல படத்தை முடிச்சு அனுப்பினதுக்கு. பி கிரேட் படங்களில் கூட ஏதாவது கதைன்னு ஒன்னு வச்சிருப்பாங்க.. மாஸ்கோவின் காவேரி – வேணாம் இருக்கிற கடுப்புல எதாவது சொல்லிருவேன்.

எண்டர் கவிதைகள்-10

Image
  எதிர் வீட்டு வண்டி குறுக்கே நிறுத்தப்படாமல் இருக்க வேண்டும் காலை அவசரத்துக்கு ஒரு உதையில் கிளம்ப வேண்டும் மேம்பாலத்தில் முன் செல்லும் வண்டியின் பிரேக் சரியாக பிடிக்க வேண்டும் அழுந்த பிடிக்கும் போது க்ளட்ச் வயர் கட்டாகாமல் இருக்க வேண்டும் சாயங்காலம் திரும்ப வருகையில் மூச்சடைக்கும் ட்ராபிக் இல்லாமல் இருக்க வேண்டும் பின்னால் வரும் தண்ணீர் லாரி என் மேல் இடிக்காமல் நிறுத்த வேண்டும் வீடு வந்து சேர்வதற்குள் உயிரோடு இருக்க வேண்டும் என ஆயிரம் வேண்டும்கள் இவ்வனைத்தும் நடந்தால் அடுத்த நாளும் அஃதே நடக்க வேண்டும். டிஸ்கி: எண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று கடிதமெழுதியும், தொலைபேசியிலும் விரும்பிகேட்ட, சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி மற்றும் பலரின் விருப்பத்தின்படியால்.. கேபிள் சங்கர்

Neelathamara(2009)

Image
சமீபகாலமாய் மலையாள படங்கள் பார்ப்பது குறைவாகிவிட்டது. அதையும் மீறி சில நண்பர்கள் ரெகமண்டேஷனில் சில படங்கள் பார்ப்பதுண்டு அப்படி வந்த சிபாரிசில் நான் பார்த்த படம் தான் நீலத்தாமரை. எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில், லால்ஜோஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் என்று சொன்னார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னால் இதே பெயரில் வெளிவந்த படத்தைத்தான் ரீமேக்கியிருக்கிறார்கள் என்பது உபரி செய்தி. வழக்கமாய் மலையாளத்தில் அவ்வளவாக காதல் கதைகள் பார்த்ததில்லை. இது ஒரு காதல் கதை. வயதான முத்தச்சி ஒருத்தி தனியாய் உடல் நலம் குன்றியிருக்க, அவரை பார்க்க, அவரது டாக்குமெண்டரி எடுக்கும் பேத்தியும், மருமகளும் வருகிறார்கள். பேத்தி அவ்வூர் கோயிலில் இருக்கும் ஒரு அதிசயமான காசு வைத்து தொடர்ந்து கடவுளிடம் வேண்டினால் மட்டுமே பூக்கும் நீலநிற தாமரை பூவை பற்றி டாக்குமெண்டரி எடுக்கிறாள். முன்பு அந்த முத்தச்சியின் வீட்டில் வேலை பார்த்த குஞ்சுமோல்  அவரை பார்க்க வருகிறாள். வந்த இடத்தில் மருமகளும், குஞ்சுமோலும் தங்க நேரிட, இரவு இருவரும் தனிமையில் இருக்கும் போது மருமகள், குஞ்சுமோலிடம் உனக்காக என் கணவர் சாவதற்கு ரெண்ட...

சாப்பாட்டுக்கடை

Image
”ஜாம்பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு” என்கிற பாடலில் சைதாப்பேட்டை வடகறி என்று எழுதும் அளவிற்கு பிரபலம் வடகறி எனும் ஒரு சைட் டிஷ். சின்ன வயதில் நான் என் மாமனும் ஓட்டலுக்குப் போய் வடகறி என்பது ஒரு மெயின் டிஷ் என்று நினைத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு வடகறி கேட்க, சர்வ் செய்பவன் எங்களை ஏற இறங்க பார்த்தவனை “அது சரி.. அதுக்கு சைட் டிஷ் என்ன தருவீங்கன்னு” கேட்டு விழிக்க வைத்தவர்கள் நாங்கள். அப்படிபட்ட வடகறி என்கிற பிரபல அயிட்டத்துக்கு பேர் போன கடை தான் சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் இருக்கும் மாரி ஓட்டல். ஒரு காலத்தில் சின்ன டீக்கடை ஓட்டு வீடாய் இருந்த ஹோட்டல் இப்போது கட்டிடமாய் மாறியிருக்கிறது. இவர்களின் ஸ்பெஷாலிட்டி வடகறி, காலையிலிருந்து இரவு வரை வடகறி மட்டும் சின்ன டம்ளர்களிலும், தூக்கு சட்டியிலும், ப்ளாஸ்டிக்கவர்களிலும், இப்போது ஹோட்டல் காரர்களே  ப்ளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து  தர, போய் கொண்டேயிருக்கும், அவ்வளவு சுவை. இது இட்லி, தோசை, பரோட்டா, செட் தோசை என்று எல்லா விதமான அயிட்டங்களுக்கும் சேரும். வடகறி என்கிற அயிட்டம் மீந்து போன வடை வகைகளை வைத்து செய்யப்பட்ட ஒரு சை...

இனிது.. இனிது

Image
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஹேப்பி டேஸ் என்ற படத்தின் ரீமேக், ப்ரகாஷ்ராஜின் தயாரிப்பு என்ற மரியாதை எல்லாம் சேர்ந்து படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம். நான் ஏற்கனவே தெலுங்கு படத்தை ஷாட் பை ஷாட் அறுபது தடவைக்கு மேல் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டபடியால் எந்த காட்சியை பார்த்தாலும் ஒரிஜினல் படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை சிததார்த், மது, சங்கர், சங்கீதா, அப்பு என்கிற அபர்ணா, அந்த எம்.எல்.ஏ பையன், அரவிந்த் எனும் டைசன், சீனயர் ஷ்ர்ப்ஸ் எனும் ஷ்ரவந்தி என்று நான்கு ஜோடிகளை சுற்றி சுற்றி வரும் கதை. இவர்களின் நான்கு வருட கல்லூரி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். தனியாக இவர்களுக்குள் காதல் என்று ஆரம்பித்து ஓட்டாமல், மிக இயல்பாய் நட்பினூடே அலைபாயும் காதலை, அதன் பின் வரும் ஈகோவை மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். எப்போதும் சீரியஸாய் தன் படிப்பு, தன் வாழ்க்கை என்று செல்ப் செண்டர்டாய் அலையும் சங்கர், சும்மா ஜாலிக்காக சுற்றும் சங்கிதா. சீனியர் ஷ்ராப்ஸ், கிராமத்திலிருந்து வந்து படிக்கும் இளைஞன். குண்டு சீனியர் மாணவன். எதையும...

கொத்து பரோட்டா-23/8/10

Image
சினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டிற்கு கடும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருந்து சிறப்பித்த விழா நாயகர்கள் திரு. நா.முத்துக்குமார், திரு.பிரமிட் நடராஜன், ஒளிப்பதிவாளர் திரு. மதி அவர்களுக்கும், வந்து கலந்து கொண்டு வாழ்ததிய நல்லுங்களாகிய நண்பர்களுக்கும், விழாவை சிறப்பாக அமைத்த கிழக்கு பதிப்பக நிறுவனத்திற்கும் நன்றிகள் பல. புத்தகம் அபீஷியலாய் நேற்றுதான் வெளியானாலும், வெளியான வெகு சில நாட்களில் எல்லா கடைகளிலும் விற்று தீர்ந்து, அடுத்த ரீபிரிண்டுக்காக அர்டர் கொடுக்கும் அளவுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நன்றியோ.. நன்றி.. வீடியோ பார்க்க : http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_22.html மேலும் படங்கள் பார்க்க : http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, உயர்வும் செய்துவிட்டார்கள். பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து, ஐம்பதாயிரம் ரூபாய் என்று ஏற்றியும், அது போதாது என்று போராட்டம...

புத்தக வெளியீட்டு படங்கள்

புத்தக வெளியீட்டு படங்கள் உங்கள் பார்வைக்கு காவேரி கணேஷின் கேமராவிலிருந்து. http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html

நான் மகான் அல்ல

Image
ஆயிரம் பாலோயர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றியோ.. நன்றி.. எல்லாரும் நம்ம புத்தக வெளியீட்டுக்கு வந்துருங்கோ...கேபிள் சங்கர் வெண்ணிலா கபடிக்குழு வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம். அப்பாவை கொன்றவனை பழிவாங்கும் வழக்கமான கதை தான். அதை முடிந்த வரையில் இண்ட்ரஸ்டாக சொல்லியிருப்பதில் தான் இயக்குனரின் கைவண்ணம் தெரிகிறது. வாழ்க்கையை பற்றி பெரிதாய் எதுவும் கவலைப்படாத கால்டாக்ஸி ட்ரைவரின் பையனான கார்த்திக்கு ஒரு கல்யாணத்தில் காஜல் அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்துவிட, முதல் பாதி முழுவதும், காதலும், கொண்டாட்டமுமாய் போகிறது. ஒரு இரட்டை கொலை சம்பத்தில் ஈடுபட்ட ஆட்களை கார்த்தியின் அப்பா பார்த்ததினால் அவரை டெம்போ ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க ஆரம்பிக்கும் போது கதையின் டெம்போ ஏறுகிறது. பின்பு அவரை கொன்றவுடன், என்ன கார்த்தி அவரை பழிவாங்க போகிறார் என்று சாதாரணமாக சொன்னாலும் திரையில் பார்க்க ஒரு விஷுவல் பரபரப்பை கொடுத்திருப்பதை திரையில காணுங்கள். கண்களில் பல்பும், உதட்டில் சுழித்த சிரிப்புமாய் படம் பூராவும் சந்தோஷத்தை தவிர எதையும் சந்திக்காத இளைஞனை ...

”காமன்”வெல்த் கேம்ஸும்… எஸ்கார்ட்டுகளும்..

ஆயிரம் பாலோயர்களுக்கு நன்றி.நன்றி..நன்றி.. கேபிள் சங்கர் நேற்றிரவு ஹெட்லைன்ஸ் டுடேவை பார்த்ததும் கொஞ்சம் கிளுகிளூப்பாகவும் அதிர்ச்சியாகவும்  இருந்தது. இரண்டு பெண்கள் கையில் பணத்தை வாங்கியவுடன் சடுதியில் மேல் பனியனை கழட்டி விட்டு சிரித்தது கொஞ்சம் பக்கெனத்தான் இருந்தது. மேட்டர் இதுதான். வழக்கமாய் எல்லா ஊர்களிலும் ஒரு திருவிழா, அல்லது ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்தால் நாலு ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஆட்கள் வருவது சகஜம். அப்படி வருகையில் உள்ளூர் கடைக்காரர்கள், ஹோட்டல்காரர்கள், எல்லோரும் எக்ஸ்ட்ராவாக ஆள்பலம், தயாரிப்பு பலத்தை உருவாக்கிக் கொண்டு  திடீரென உருவாகும் டிமாண்டுக்கு ஏற்றார் போல கஸ்டமர்களுக்கு சப்ளை செய்வார்கள். அந்த ஒரு சில நாட்களில் வியாபாரம் நல்ல சக்கை போடு போடும். அது போலத்தான். உலக கோப்பை, கிரிக்கெட், கால்பந்தாட்டம் என்று நடக்கும் உலகப் போட்டிகள் அனைத்துக்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் டூரிஸ்டுகளை நம்பி உணவு, தங்குமிடம் என்று மட்டுமல்ல..சதை வியாபாரமும் கொடி கட்டி பறக்கும். இப்போது அதே தான் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருமிருந்து எஸ்கார்டுகள் எனப்படும...

Grown ups (2010)

Image
சிறு வயதிலிருந்து ஒன்றாய் பாஸ்கெட் பால் விளையாடிய ஐந்து நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் இருந்தாலும் இவர்களை ஒன்றுபடுத்தி வழிநடத்தி வெற்றி பெற வைத்த கோச்சின் மேல் பெரிய மரியாதை உண்டு. 30 வருடங்களுக்கு பிறகு கோச் இறந்துவிட, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாய் பிரிந்திருந்தாலும் கோச்சின் இறுதி சடங்குக்காக ஒன்று சேர, ப்ளான் செய்கிறார்கள். அவர்கள் ஒரு லேக் ஹவுஸை வாடகைக்கு எடுத்து தங்க முடிவெடுக்கிறார்கள். ஆடம் சாண்ட்லருக்கு, பாஷன் டிசைனிங் மனைவி சல்மா ஹயக். அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு க்யூட் மகள். இன்னொரு கருப்பின நண்பனுக்கு கலப்பின மனைவி, மனைவி சம்பாதித்துக் கொண்டிருக்க, வீட்டோடு கணவனாய் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருப்பவன்,மனைவி மூன்றாவது கர்ப்பம். அவனுடய தாயும் அவனுடனேயே இருந்து அவனை கரித்து கொண்டிருக்கிறாள். மூன்றாவமன் தான் ஒரு பெரிய பிஸினெஸ் செய்வதாய் சொல்லி தன் மனைவி குழந்தைகளுடன் வந்து சேர்கிறான். நான்காமவன் ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி தன்னை விட 30 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஐந்தாமவன் திருமணமே செய்து கொள்ளாமல் ஸ்த்ரிலோலனாய் அ...

புத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..

Image
சினிமா வியாபாரம் புத்தகத்தின் அபீஷியல் வெளியீடு வருகிற சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கிற படியால், பதிவர்கள் வாசகர்கள், நண்பர்கள், அனைவரும் வந்திருந்து சிறப்பித்துக் கொடுக்குமாறு அழைக்கிறேன். நாம் எல்லோரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட்டபடியால் இவ்விழாவை நம் பதிவர் சந்திப்பாகவும் நடத்திக் கொள்ளலாமே.. என்றும் உங்கள் ஆதரவை நாடும் … கேபிள் சங்கர்

காதல் சொல்ல வந்தேன்.

Image
ஒரு பையன் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல முயற்சிப்பதே கதை. இதில் முதல் இயர் படிக்கும் மாணவனான ஹீரோவுக்கு, பைனல் இயர் படிக்கும் ஹிரோயின் மேல் காதல். மற்றபடி இம்மாதிரியான காதல் கதைகளில் பெரிசாக என்ன திரும்ப திரும்ப சொல்லிவிட  முடியும் என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் முடிஞ்சா முடியும்னு சொல்லியிருக்காங்க.. பாலாஜி ஒரு தச்சரின் மகன். பார்த்த மாத்திரத்திலேயே சஞ்சனாவை காதலிக்க ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரெண்ட் ஆகிறார் பாலாஜி. அதுவும் எப்படி? சஞ்சனாவை காதலிக்க ஆசைப்படும் சீனியர் மாணவர்களுக்கு ஹெல்ப் செய்வதை போல தொடர்ந்து சஞ்சனாவுடன் பயணிக்கிறார். எப்படி பாலாஜி தன் காதலை சஞ்சனாவிடம் சொல்கிறார் அதை சஞ்சனா ஏற்றுக் கொண்டாரா..? என்பதுதான் கதை. படம் முழுக்க முடிந்த வரை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினை இம்பரஸ் செய்வதற்காக சீனியர் மாணவரிடம்  அரசு பேருந்து நீ ஏறியவுடன் அரசி பேருந்து என்றெல்லாம் கவிதை எழுதி கொடுப்பது. நாயை கொஞ்சினாள் என்பதற்காக அந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து இலையில் சோறு போட்டு ஊட்டுவதும், அவள் தன்னை விட ரெண்டு வயது பெரியவள் என்றதும், நாயை கல்லை எ...

கொத்து பரோட்டா-16/08/10

Image
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எக்ஸ்பிரஸ் அவின்யூவில பதினைஞ்சு ரூபாய் பார்க்கிங் வாங்க ஆரம்பிச்சிட்டதினாலே இனிமே மத்த மால்லையும் அதிகப்படுத்திருவாங்கன்னு சொன்னேனில்லையா? அது போல இப்போ.. சனி ஞாயிறுல ஐநாக்ஸுல ஹவருக்கு பதினைந்து ரூபாயாம்.. இனிமே பாருங்க.. தியேட்டர்ல டிக்கெட் 120 ரூபாய். பார்க்கிங் டிக்கெட் விலை 60 ரூபா ஆகப்போவுது பாருங்க.. அது கூட கலைஞரோட இந்த ஆட்சி வரைக்கும் அடுத்த அட்சியில அவரு வந்தவுடனே ஏற்றப் போறதுல மல்டிப்ளெக்ஸ் டிக்கெட் விலையும் ஒண்ணு. ஏன்னா.. பேரப்புள்ளைங்க.. ரெண்டு மூணு இடம் வாங்கி போட்டு மல்டிப்ளெக்ஸ் கட்டுறதா கேள்வி.. *********************************************************************************** சென்ற வாரம்  நான், அப்துல்லா, கார்க்கி, வெண்பூ எல்லாம் ரம்சான் ஹைதராபாத் ஸ்பெஷலான ஹலீம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். டெக்கான் ஹெரால்ட் வருடா வருடம் ஹைதையில் எங்கு நல்ல குவாலிட்டி ஹலீம் தருகிறார்கள் என்று சாப்பிட்டு நல்ல ஓட்டல்களை ரெபர் கூடச் செய்தார்கள் நான் அங்கு போயிருக்கும் போது. அப்போது அப்துல்லா சொன்னார். சென்னையில் ஈகா தியேட்டர் அருகில் இருக்கு ஒரு ஹோட்டலி...