Posts

Showing posts from September, 2010

தமிழ் சினிமாவும் வரி விலக்கும்.

தமிழ் சினிமாவிற்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று ஒரு சட்டம் நம் மாநிலத்தில் இருக்கிறது. இதை பற்றிய நிறைய ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது.  என்ன தான் தமிழ் சினிமாவை வாழவைப்பதற்காக தமிழக முதல்வர் அவர்கள் செய்த பெரும் உதவி என்று திரைத்துறையினர் பாராட்டினாலும். நிஜத்தில் வரி விலக்கு என்று வரும் போது யாருக்கு அனுகூலம் ஆகியிருக்க வேண்டும்?. வருடத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது இச்சட்டத்தின் மூலம். ஒரு காலத்தில் காந்தி, காமராஜ், மற்றும் தேசபக்தியை பறைசாற்றும் திரைப்படங்கள், நல்ல சமூதாய சீர்திருத்த கருத்துகள் சொல்லும் படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்படும் வரிவிலக்கானது பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வரி என்றால் வரிவிலக்கு பெற்ற படத்தின் விலை ஒன்பது ரூபாய்க்கு மக்களுக்கு அளிக்கப்படும். அதாவது வரிவிலக்கின் முழு அனுகூலம் படம் பார்க்கும் பொது மக்களுக்கு அளிக்கப்படுவதால் மேலும் பலர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள். சிறந்த கருத்துகளும் மக்களீடையே சென்று சேரும் என்றும் தான் வரி விலக்கு கொடுக...

Dabangg

Image
வித்யாசமான படங்கள் இந்தியில் வந்து கொண்டிருக்கும் காலத்தில் கஜினி, ஹிந்தி போக்கிரியான வாண்டட் வந்து மீண்டும் ஒரு மசாலா மார்கெட்டை ஓப்பன் செய்த்து என்றால் அதை இன்னும் ஃபோர்ஸாக அடித்து சொல்லியிருக்கிறது தபங்.. தபங் படத்துக்கு போகும் போது ரெண்டு டிக்கெட் வாங்கி போங்கள் ஒன்று உங்களுக்கு, இன்னொன்று உங்கள் மூளைக்கு என்று நம்ம விஜயை கிண்டல் செய்கிறார் போல தொடர் எஸ்.எம்.எஸுகளால் கிண்டல் செய்யப்பட்ட படம் முதல் வாரத்திலேயே சுமார் நூறு கோடியை தட்டியிருக்கிறது. வழக்கமாய் நல்லவன்/ கெட்டவன், ப்ரச்சனை, நல்லவன் ஜெயிப்பது என்ற வரைமுறைக்குள் வரும் கதை என்றாலும் ஆர்டிஸ்ட் ப்ரெசென்ஸ் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இப்படம் உணர்த்தும். சும்மா பூந்து விளையாடியிருக்கிறார் சல்மான் கான். ஆரம்ப சண்டைக் காட்சியிலிருந்து, கடைசி க்ளைமாக்ஸ் காட்சிவரை அவர் ராஜ்ஜியம் தான். ஒரு மாதிரியான அரகன்ஸ், நடை, டயலாக் டெலிவரி எல்லாவற்றையும் பார்த்தால் அவர்கள் சீரியஸாகத்தான் படமெடுத்திருக்கிறார்களா? இல்லை தமிழ் படம் போல கிண்டல் செய்திருக்கிறார்களா? என்ற சந்தேகம் நிச்சயம் வரத்தான் செய்யும் அந்தளவுக்கு நிஜமாகவே சீரியஸாய் ஒரு பக்க...

கொத்து பரோட்டா – 25/09/10

Image
இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery   செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம் . இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் என்னை தொலைபேசி எண்ணிலோ.. அல்லது மின...

எந்திரன் ஃபீவர்

Image
தமிழ்நாடெங்கும்.. அல்ல.. உலகமெங்கும் எந்திரன் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. சாதரணமாகவே ரஜினியின் படங்களுக்கு வெளிவருவதற்கு முன் ஏகப்பட்ட ஹைப் இருக்கும் அதை விட ஏகப்பட்ட ஹைப்பை சன் டிவியின் தயாரிப்பு என்பதால் மேலும் எகிறிக் கொண்டிருக்கிறது. எந்திரன் போஸ்டர் ஒட்டினால் கூட அதற்கு ஒரு நிகழ்ச்சி தயாரித்து விளம்பரப்படுத்துகிறது. இதெல்லாம் இப்படியிருக்க, சென்னை மற்றும் அதன் சப்பர்ப்ஸ் எனப்படும் செங்கல்பட்டு மாவட்ட ஏரியாக்களில் மட்டும் சுமார் என்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. (அது என்ன செங்கல்பட்டு ஏரியா என்று கேட்பவர்களுக்கு உடனே சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கி படியுங்கள்.. சும்மா ஒரு விளம்பரம்தான்.. ஹி..ஹி..) சுற்றிச் சுற்றிப் பார்த்தால் ஒரு வாரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எல்லோரும் படம் பார்த்துவிடுவார்கள். சுமார் இருநூறு கோடியளவில் இந்தியாவிலேயே அதிக செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, உலகமெங்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவி தன் கோட்டையான தெற்கில் முக்கியமாய் ...

எண்டர் கவிதைகள்-13

Image
  இன்றென்ன காட்சி என்ற புதுமுகத்திடம் ஹீரோ ரேப் என்றேன் அவள் தெலுங்கில் முகத்தில் மென் சோகத்துடன் சிரித்தபடி சொன்ன  வார்த்தைக்கு அர்த்தம் கேட்டேன் திரும்பவுமா? என்றத்தமாம். கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள்-12

Image
ஆறு வயதில் உடை மாற்ற வேண்டுமென்றால் தனியறைக்கு போ என்றடித்தவள் பதினாறு வயதிலும் அதையே சொன்னாள் நானும் கதவடைத்து உடை மாற்றினேன் இன்று நூறு பேர் முன்னிலையில் குதித்தாட உள்கச்சை வேண்டாமென்றாள் காரவன் வாசலில் காவல் காக்கும்   என் அம்மா அந்த உதவி இயக்குனனிடம் சொன்னாள் “பேபி.. டிரஸ் மாத்துதென்று அவளுக்கு நான் இன்னமும் பேபி தான்.

Kommaram Puli

Image
சில வருஷங்களாய் தெலுங்கு சினிமா கொஞ்சம் நன்றாக இருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாய் நொந்து நோகடித்துக் கொண்டிருக்கிறது. அந்த லிஸ்டில் இந்த படம் கொம்மரம் புலி. இந்த புலிக்கு சொந்தக்காரர் எஸ்.ஜே.சூர்யா. புலியாக வருபவர் ஆந்திர பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவரது பெயிலியர் படமே கோடிக்கணக்கில் வசூல் கொடுக்கும் நடிகர். இரண்டு வருடஙக்ளுக்கு ஒரு முறையோ, மூன்று வருடஙக்ளுக்கு ஒரு முறையோ ப்டம் வெளியிடுபவர். மொத்த ஆந்திர தேசமே.. காத்துக் கொண்டிருந்த படம். எனக்கு ட்ரைலர் பார்த்த போதே ஒரு பி கிரேட் படம் இதை விட பெட்டராக இருக்கக்கூடும் என்று நினைத்திருந்தேன். அதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது படம். ரொம்ப வருஷங்களுக்கு முன் வந்த பனிஷர் என்கிற படத்தின் உட்டாலக்கடியாக ஆரம்பித்து, அப்புறம் தேவையில்லாமல் அய்யப்ப தரிசனம் படமாய் ஆரம்பித்து அவ்வப்போது பக்தி, நாட்டுபற்று ஜல்லியடித்தால் தேறிவிடும் என்று எந்த நம்பிக்கையில் எஸ்.ஜே.சூர்யா நம்பினார். மகாநடிகன் என்கிற படத்தில் ஒரு காட்சி வரும் அதில் இரண்டு இயக்குனர்கள் சத்யராஜுக்கு கதை சொல்வார்கள். அதில் ஒருவர் ஹீரோவுக்கு ஹீரோயினை விட ஒரு வயசு குறைவு....

கொத்து பரோட்டா 20/09/10

சென்ற வெள்ளி அன்று காலையிலிருந்து வேறொரு இடத்திலும், இரவு பீச் ரோட்  விவேகானந்தா இல்லம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அடுத்த நாள் காலை 5 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. இரவில் பதினோரு மணிக்கு பிறகு, அங்கு யாருடய வண்டியையும் வைக்க அனுமதிப்பதில்லை, போலீஸார். பீச்சில் படுப்பவர்களை கூட எழுப்பிவிடுகிறார்கள்.  பீச் மிகவும் அழகாக்கப்பட்டு, நல்ல கொரியன் லாண்ட் ஸ்கேப் எல்லாம், செய்யப்பட்டு, டைல்ஸுகளால் பளபளக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு செய்தவர்கள் இருபதடிக்கு ஒரு குப்பை தொட்டியை வைத்திருக்கலாமே..? அன்று இரவில் படப்பிடிப்புக்காக கொண்டு வரப்பட்ட சாப்பாட்டு மிச்சங்கள், டீ, காபி பேப்பர்கள் எல்லாமே குப்பை தொட்டி என்று ஒன்று இல்லாததால் கண்ட இடத்தில் போடப்பட்டது. எங்கள் குழுவினருடன் நான் இதை சொல்லி, வேண்டுமானால் ஒரு கோணிப்பையில் எல்லாவற்றையும் சேகரித்து பின்பு குப்பை தொட்டியை தேடி போடலாமே என்று கேட்ட போது.. “வேலைய பாத்துட்டு போங்க சார்.. கவர்மெண்ட்டுக்கே அக்கறையில்லை.. நீங்க பெருசா கவலைப் பட்டு..”என்றனர். அரசு இவ்விஷயத்தை எடுத்துக் கொண்டு கடற்கரை எங்கும் குப்பை தொட்டிகளை இருபதடிக்கு ஒ...

20 தேதி போராட்டம்

Image
இருபதாம் தேதி முதல் எல்லா பெட்ரோல் பங்குகளும் வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்கள். இவர்களுடய கமிஷன் தொகையான   ஏற்றி கொடுக்க வேண்டும் என்றும், புதிதாக பெட்ரோல் பங்குகளை திறக்க அனுமதிக்க கூடாதென்றும் பெட்ரோல் பங்க் வைத்திருப்போர் சங்கம் முடிவெடுத்து, வருகிற 20ஆம் தேதி காலை 6 மணி முதல் எல்லா பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களிலும், கொள்முதலும், விற்பனையையும் நிறுத்தி வைக்கப் போகிறார்கள். இவர்களுடய கோரிக்கைக்காக போராடுவதில் தவறில்லை. ஆனால் அது பொது மக்களை பாதிக்கும் என்று இருக்கும் போது அதற்கான எதிர்விளைவுகளை யோசித்து இவர்கள் போராட்டத்தை நடத்த வேண்டும். ஒரே ஒரு நாள் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் இல்லையென்றால் எவ்வளவு விஷயங்கள் பாதிக்கும். ஒரே நாளில் எவ்வளவு பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும், பொது மக்களுக்கு எவ்வளவு விதமான கஷ்டங்கள். சக்கரம் கட்டி சுழலும் காலத்தில் மொபிலிட்டி என்பது எவ்வளவு முக்கியம் என்று எல்லோருக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போராட்டம் இந்தியாவின் மொபிலிட்டியை முடக்கும் விஷயமாகவே தெரிகிறது. நமது மத்திய அரசும், இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ...

பின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி?

பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதறவங்க, பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை.  ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து. பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பத...

கல்வியா? செல்வமா? தெய்வமா?

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு உடனே ஏற்படுவதில்லை. முக்கியமாய் மக்களுக்கு பயன்படும் விஷயஙக்ளுக்கான முடிவுகள் எப்போதும் உடனே நடந்துவிடுவதில்லை. ரேஷன் கடையில் ரேஷன் சாமான்கள் கிடைப்பதிலிருந்து, தினசரி மின்சார வெட்டு, டாஸ்மாக் எம்.ஆர்.பிக்கு மேல் வாங்கு கொள்ளை, விலைவாசி, அடிப்படை வசதிகள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே போனால் அது நீண்டு கொண்டேயிருக்கும். ஆனால் ரொம்ப நாளாய் மக்கள் தங்கள் மனதில் மட்டுமே பொங்கியெழுந்துக் கொண்டிருந்த விஷயம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின், கல்விக் கட்டணம். அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த தொகையை எல்லா மெட்டிரிகுலேஷன் பள்ளிகளும் எதிர்த்தது.  மீண்டும் அவர்கள் பரிந்துரை செய்த தொகையை ஏற்க முடியாது. அதை மீண்டும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று எல்லா பள்ளிகளும் கோரிக்கை வைத்தனர். இதனால் பள்ளி முதலாளிகள். ஆம்.. முதலாளிகள் தான்.. கல்வியை வியாபாரமாய் நடத்தும் இவர்களை பின் எப்படி அழைப்பது?.. பெரும்பாலான பள்ளிகள் அரசின் பிரஷரின் காரணமாய்  தங்கள் அமெளண்ட்டை குறைத்தும் கொண்டது. சில பள்ளிகளோ.. இப்போது கட்டணத்தை கட்டுங்கள் நாங்கள் கேஸ் போட்டிரு...

பா.வே.படங்கள்- சத்யா

Image
ராம்கோபால்வர்மா தன் முத்திரையை பாலிவுட்டில் பதித்த படம். இந்தியாவில் பல மாநிலங்களில் கேங்ஸ்டர்கள் படம் வருவதற்கு காரணமான படம் இது என்று சொன்னால் மிகையில்லை. மிக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மாபெரும் வெற்றியையும், படம் வெளிவந்த நேரத்தில் எல்லாரையும் ஹா.. என்று வாய்பிளக்க வைக்கும் மேக்கிங் கொண்ட படம் சத்யா. சத்யா ஒரு சாதாரணமானவன். வாழ்வில் காயம் பட்டவன், அநாதை. ஹைதராபாத்திலிருந்து  வேலை தேடி வருபவனை பம்பாய் வசீகரித்துக் கொள்ள, சர்வராய் வேலை செய்யும் இடத்தில் ஒரு லோக்கல் தாதா சத்யாவை அடிக்க, பதிலுக்கு முறைக்க, என்று ஆரம்பிக்கும் படம், தாதாவின் அல்லக்கை கையில் கத்தியை வைத்து மிரட்டும் போது, சரக்கென அவன் முகத்தில் அவன் கையினாலேயே கோடு போடுமிடத்திலிருந்து ஏற ஆரம்பிக்கும் கிராப் அப்புறம் இறங்கவே இறங்காது. லோக்கல் தாதாவால் ஜெயிலில் அடைக்கப்படும் சத்யா அங்கேயும் முரட்டுத்தனமான அமைதியுடன் இருக்க, அங்கே ஒரு கொலை கேஸுக்காக ஜெயிலில் இருக்கும் பீக்கு மாத்ரே என்ற தாதாவுடன் சண்டையில் ஆரம்பித்து நட்பாக மாறி அவன் வாழ்க்கையை மாற்றுகிறது. அதன் பிறகு அவனது வாழ்க்கையை பீக்கு மாத்ரேதான் தீர்மானிக்க...

திருப்பூர்

Image
  பழனியில் மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஆதிக்கும் ஊரில் பணக்கார பசங்களான மூன்று பேருக்கும் ஆதி. ஆதி  நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவன்.. முக்கியமாய் கேசவனுக்கு ஒன்றென்றால் விட மாட்டான். அடித்து துவைத்து விடுவான். அவ்வளவு பாசக்காரன். கேசவன் அபரஞ்சி எனும் ஒரு டாக்டர் பெண்ணை பழனியில் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க, காதலாக மலர்கிறது. காதல் விஷயம் அவளுடய அப்பாவுக்கு தெரிய, என் ஊரான திருப்பூருக்கு வந்து பாரு என்று சொல்லிவிட்டு போகிறார். ஆதி தன் நண்பர்களுடன் திருப்பூருக்கு போய் அந்த பெண்ணை தூக்கி வர, திருமணம் செய்யும் நேரத்தில் ஒரு ரவுடிக் கும்பல் வந்து ப்ரச்சனை செய்து பெண்ணை அப்பாவிடம் ஒப்படைக்கிறது. ரவுடிக்கும்பல் ஏன் உள்ளே வந்தது? ஆதி காதலர்களை சேர்த்து வைத்தானா?, அபரஞ்சியின் அப்பா ஒத்துக் கொண்டாரா? என்பதையெல்லாம் வெள்ளித்திரையில் காண்க. முதல் பாதி முழுவதும், ஆதி, கேசவன் மற்றவர்களுக்குள்ளான நட்பு எப்படி? என்பதற்கான காட்சிகளே மேலோங்கியிருப்பதால்  கொஞ்சம் மெதுவாகத்தான் போகிறது. அதிலும் பல காட்சிகள் பத்து வருஷ பழசு. விக்ரமன படம் பார்க்கிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவ...

கொத்து பரோட்டா- 13/09/10

நண்பர் பரிசல்காரன் தன் வலைப்பூவில் சிறுகதைச் சவால் ஒன்றை விடுத்திருக்கிறார். கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்: 1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். 2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. 3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன் . இந்த மூன்று வாக்கியங்களும் மேலே கொடுத்திருக்கும் வரிசைப்படியேவருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு : கதையில் கனவோ, ப்ளாஷ்பேக்கோ வரக்கூடாது. காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது. இறுதித் தேதி: அக்டோபர் 15. கதைகளை உங்கள் வலைப்பூவில் போட்டுக் கொள்ளலாம். தலைப்பில் நீங்கள் கதைக்குக் கொடுக்கும் தலைப்புக்கு அருகிலேயே “சவால் சிறுகதை” என்று குறிப்பிட வேண்டியது அவசியம். ஆனால் பதிவில் போட்டாலும் அவரது ( kbkk007@gmail.com ) ...

பாஸ் (எ) பாஸ்கரன்

Image
சிவா மனசில் சக்தியின் லைனிலேயே பெரியதாய் கதைக்காக எந்தவிதமான மெனக்கேடும் இல்லாமல், சந்தானத்தை மட்டுமே நம்பி எடுத்திருக்கும் ராஜேஷுன் அடுத்த படம். படத்திற்கு கதாநாயகன் சந்தானம் என்றால் தப்பேயில்லை. டிபிகல் சீரியல் அம்மா, கல்யாணமாகாத வெட்டினரி டாக்டரான 35 வயது அண்ணன், காம்பியரர் மாடுலேஷனில் பேசி அலையும் தங்கை என்ற குடும்பத்தில், ஐந்து வருஷமாய் அரியர் வைத்து முடிக்காமல் வெட்டியாய் அலையும் வெட்டி ஆபீஸ்ர் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். இத்தனை களேபரத்தில் இவருக்கு பார்த்த மாத்திரத்தில் காலேஜ் லெக்சரரான நயன் மேல் காதல் வேறு வந்து தொலைத்துவிடுகிறது. இருந்திருந்து அண்ணனுக்கு ஒரு பெண் அமைய, நயன் அவரது தங்கையாகவே இருக்க, காதலை இன்னும் வலுப்படுத்த முயற்சி செய்யும் போது, அண்ணியிடம் பெண் கேட்க சொல்லும் போது, அண்ணி ஒண்ணுமில்லாத வெட்டிபயலுக்கு யார் பெண் தருவார்கள்? என்று கேட்க, அதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது, தன் தங்கை கல்யாணத்தையும்,  தன் காதலையும் ஜெயித்து காட்டிவிட்டுதான் வீட்டிற்கு வருவேன் என்று சவால் விட்டுவிட்டு வெளியேறுகிறார். அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதை நகைச்...

முரளி

Image
காலையில் ஷூட்டிங்கில் இருந்த போதுதான் மெசேஜ் வந்தது. சட்டென.. ஒரு மாதிரியானது.. ஆளாளுக்கு .. செய்தி பரவி.. ஷூட்டிங்கில் ஒரு சில நிமிடங்கள் எல்லோர் வேலையையும், ஸ்தம்பிக்க வைத்து, முரளி பற்றிய பேச்சும், எண்ணமுமாய் போய்க் கொண்டிருந்தது. இன்னொரு ரஜினியாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று விகடன் இவரது முதல் படமான பூவிலங்குக்கு விமர்சனம எழுதி வரவேற்றது. தொடர்ந்து பல ஹிட் படங்கள். என்பதுகளில் மீடியம் பட்ஜெட் படநாயகன் என்றாலே முரளிதான் என்று ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது. காலேஜ் ஹீரோ கேரக்டர் என்றால் அதுக்கு கேள்வி கேட்காமல் முரளியை தான் ஆப்ஷனாக வைக்குமளவுக்கு தமிழ் திரையுலகில் நிரந்தர யூத்தாக வலம் வந்தவர். சமீபத்தில் அவரது மகன் நடித்து வெளியான பாணா காத்தாடி படத்தில் கூட மருத்துவ கல்லூரி மாணவராக வந்து கலகலப்பு ஏற்படுத்தியவர். இப்படி ஒவ்வொரு டெக்னீஷியன்களுக்கும் ஒவ்வொரு நினைவுகள் முரளியை பற்றி. எங்கள் படப்பிடிப்பு நடக்குமிடத்தின் ஒரு சில கிலோ மீட்டர்கள் அருகிலேயே தான் அவரது வீடு இருந்ததால் பல பேர் மாற்று ஆட்களை வைத்துவிட்டு அவருக்கு அஞ்சலி செய்துவிட்டு வந்தார்கள். ஒரு வெளிப்புற படப்பிடிப்பு முட...

எண்டர் கவிதைகள்-11

Image
இருண்டவானம் ஆகாசக் கனவுகள் மிளிர்ந்த பிறைநிலா கருப்பு நட்சத்திரம் ஆலிலை அபாயம் துவர்க்கும் உதடுகள் நுனிநாக்கில் உப்பு

கொத்து பரோட்டா –06/09/10

நான் இணை இயக்குனராக வேலை செய்யும் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதால் எழுத நேரம் கிடைக்குமா? என்று தெரியவில்லை! அதனால் ஐய்யா.. ஜாலி என்று சந்தோசப் படுபவர்களுக்கு ஒர் எச்சரிக்கை.. திடீர்னு நடுவுல நாலு எழுதி போட்டாலும் போடுவேன். சாக்குரதை. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் மிக நீட்டான உடையணிந்து உட்கார்ந்திருந்தார். நான் யார் என்று கேட்ட போது இயக்குனரை பார்க்க வேண்டும் என்றும், தான் ஒரு தயாரிப்பாளர் என்று சொன்னார். இயக்குனர் வர மாலை ஆகும் என்பதால் என்ன விஷயம் சொல்லுங்கள் நான் சொல்லிவிடுகிறேன் என்றதும், பையிலிருந்து ஒரு போட்டோவை கொடுத்துவிட்டு, நான் தான் வின்னர் பட தயாரிப்பாளர், அவரை பற்றி பட உலகில் இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரியும். வின்னர் படம் வெற்றிப் படமாய் இருந்தும் அதனால் எந்த விதத்திலும் பெரியதாய் லாபம் சம்பாதிக்காதவர். அதே நடிகரை வைத்து அடுத்து பட தயாரிப்பு வேலையில் இறங்கி, அதனால் ஆன ப்ரச்சனை காரணமாய் நொடித்து போன கதை குமுதத்தில் வந்திருக்கிறது. இப்பட...

உங்கள் பக்கம்

1)   பாதை பயணம் நான் … பாதை முடியும் இடம் தேடிய பயணம் எனது தேடிமுடித்தேன் பாதை முடியவில்லை தேடல் மட்டும் முடிந்ததாய் தோன்ற பாதை நீள்கிறது நான் எங்கே ? ______________________________ ______________________________ ________________________ 2)   நான் மரணிக்கிறேன் இந்த சப்தவெளியின் கதறல்கள் துண்டு துண்டாய் கிழிக்கிறது என்னையும் என்னுள்ளிருக்கும் என்னையும் விடுபட்டு ஓடத்துடிக்கும் என்னை கட்டிப்போடுவது என்னுள்ளிருக்கும் நான்தான் ஒருமுறை மரணித்துப் பார் சப்த கதறல்கள் ஒன்றுமில்லாமல் போகும் நான் மரணிக்கப் போகிறேன். ______________________________ ______________________________ ______________________________ _______________ 3)   காற்று வீசுகிறது சொட்டு சொட்டாய் சேகரித்த கோப்பைத் தேநீர் உடைந்து நொறுங்கியது கோட்டை நா வறண்டது கடல் அலை அடித்துக் கொண்டேயிருக்கிறது . ______________________________ ______________________________ ______________________________ ___________ --   என்றும் அன்புடன் தமிழினியன்.சுப www.thamiziniyan.com

சிந்து சமவெளி

Image
நல்லதை மட்டுமே பார்ப்பவர்கள், நல்லதை மட்டுமே பேசுபவர்கள், நல்லதை மட்டுமே கேட்பவர்கள் தயவு செய்து, கலாச்சார காவலர்கள், இந்த விமர்சனத்தையும், படத்தையும் பார்க்காமல் வேறு ஏதாவது உருப்படியான வேலை எதுவும் பார்க்கலாம். இன்னும் சில நாட்களுக்கு, பத்திரிக்கைகளுக்கும், பதிவுகளிலும், சும்மா பின்னி பெடலெடுக்கப் போகும் அவலாய் இப்படம் இருக்கப் போகிறது. அதையும் மீறி நிச்சயமாய் நீங்கள் 18 ப்ளஸ் ஆளாகவும், மன முதிர்ச்சியுடைவராகவும் இருந்தவர்களானால் தொடரவும். ப்ளஸ் டூவில் முதல் மாணவனாக வரும் அன்புவின் தந்தை ஒரு இராணுவ வீரன். நாட்டுக்காக எல்லைப் பகுதியில் போராடும் வேளையில் காலில் குண்டடிப்பட்டு வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டு திரும்ப ஊருக்கு வருகிறார். மகன் மேல், மனைவி மேல்மிகவும் பாசமுள்ள ஒரு அன்பான தகப்பனாய் வாழ்கிறார். என்னதான் அன்பான அப்பாவாக இருந்தாலும், இளமைக் காலத்தை இராணுவத்திலேயே செலவிட்டு, மீண்டும் வந்து வசந்த காலத்தை பார்க்க முயலும் போது மனைவி பாம்பு கடித்து இறக்கிறார். அப்பாவும் பிள்ளையும் தனிமரமாகிறார்கள். அன்புடன் படிக்கும் சுந்தரியிடம் காதல் பிறக்க, பள்ளி படிப்பு மட்டுமே முடித்திருக்கும் அன்ப...

பா.வே.படங்கள் –Trade(2007)

Image
உலகின் புராதான தொழிலான விபச்சாரத்தை பற்றித்தான் படம். ஆனால் ஆரம்பித்த கணத்திலிருந்து முடிவு வரை பதை பதைக்க வைக்கும் லைவ்வான திரைக்கதையால்  படம் நெடுக அதிச்சியடைய வைக்கிறார்கள். பிரேசிலில் ஒரு ஏழ்மையான் தந்தையில்லாத குடும்பம். பதிமூணு வயது தங்கை அட்ரினா, வெளிநாட்டு டூரிஸ்டுகளிடம் செக்ஸியான பெண் வேண்டுமா என்று தனியாய் அழைத்துப் போய் பணம் பிடுங்கும் ஜேர்கே எனும் பையன். ஒரு நாள் தன் தங்கையின் பிறந்த நாளுக்காக ஒரு புத்தம் புதிய சைக்கிளை வாங்கிக் கொடுக்கிறான். தனியாக போகாதே என்று அச்சுறுத்தப்பட்ட பெண் தாயின் சொல்லை மீறி தனியாக சைக்கிள் ஒட்ட கிளம்ப, பின்னால் காரில் துரத்தி வரும் ஆட்களால் கடத்தப்படுகிறாள். அதே கும்பலால் வெரோனிகா என்கிற திருமணமாகி தனியாய் குழந்தையுடன் போலந்தில் வாழும் ஒரு பெண்ணை வேலை வாங்கித்தருவதாய் மோசடி செய்து, ஏர்போட்டிலிருந்து கடத்துகிறார்கள். இரண்டு பேர்களை மட்டுமில்லாமல் மேலும் சில சிறுமிகள் பெண்களை கடத்தி ஒரு கண்டெயினர் லாரி மூலம் வேறு இடத்திற்கு கொண்டு சென்று ஏலத்தில் விட தயாராகிரார்கள். இவர்களை தவிர ஒரு தாயலாந்து சிறுவன் ஒருவனும் இருக்கிறான். தன் தங்கையின் சைக்...

பா. வே. படங்கள் - Company (2002)

Image
ரொம்ப நாளுக்கு பிறகு திரும்பவும் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. படம் வெளியான போது இப்படத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்ததாய் ஞாபகம்.  அந்த மேக்கிங்கும், கதை சொல்லும் நேரேஷனும். ஏற்கனவே ராம் கோபால் வர்மா மொக்கையாக படமெடுத்தாலும் ஒரு தடவைக்கு நாலு தடவை  பார்க்கும் ரசிகன் என்பதால் இப்படத்தை எத்தனை முறை பாத்திருப்பேன் என்று தெரியவில்லை. மும்பையின் கல்லியில் சின்ன சின்ன சில்லுண்டி வேலைகள் செய்து அலையும் சந்து கொஞ்சம் கொஞ்சமாய் மாலிக் பாயிடம் சேர்ந்து அவனது வலது கையாய் மாறி மிகப்பெரிய உயரத்துக்கு போகும் நேரத்தில் ஒரு சின்ன தவறான புரிதலால் இருவரும் எதிரியாகிறார்கள். மும்பையே அல்லோலகல்லோல படுகிறது. ஒரு கட்டத்தில் சந்து போலிஸிடம் சரணடைய, மாலிக் பாயும் கொல்லப்படுகிறான். அண்டர் வேர்ல்ட் கேங்குகளின் தாதாக்களை பற்றிய கதை. நிறைய தெரிந்த கேங்ஸ்டர்கள் பற்றிய விஷயஙக்ள் எல்லாம் புகுத்தி சும்மா தட்டி விட்ட குதிரை போல பரபரக்கும் திரைக்கதையில் அட்டகாசமான கம்பெனி. கதையாய் சொன்னால் ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதையாய் தெரிந்தாலும் மனுஷன் ஸ்கிரீன் ப்ளேயில் பின்னி பெடலெடுத்திருப்பார். அதில் படத்தில்...