Posts

Showing posts from November, 2010

கனிமொழி

Image
படத்தின் ப்ரீமியர் ஷோ பார்த்தவர்கள் எல்லாரும் ஆளாளுக்கு பயமுறுத்தி விட்டிருந்தார்கள். படு மொக்கை, உட்கார முடியவில்லை என்றெல்லாம். அவனா நீ படத்தையே பார்த்த வீரனாகிய எனக்கு இதெல்லாம் சும்மா.. என்று தைரியமாய் படம் பார்க்க போய்விட்டேன்.   சில பேர் நல்ல நாட் வைத்திருப்பார்கள் ஆனால் அதை சரியாய் சொல்ல முடியாமல் சொதப்பியிருப்பார்கள். சில பேருக்கு மொக்கையான ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல தெரிந்திருப்பார்கள். இப்படத்தின் இயக்குனர் முதல் வகையில் மாட்டிக் கொண்டார்.  இரண்டு இளைஞர்கள் ஒருவன் ஜெய், இன்னொருவர் வசந்த. ஜெய் ஒரு இண்ட்ரோவர்ட், வசந்த ஒரு எக்ஸ்ட்ரோவர்ட், ஜெய் தன்னுள் எழும்பிய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல தயங்கி அவனுள்ளே ஒரு கற்பனை கதையை வடித்துக் கொண்டிருப்பவன். அடுத்த நிலைக்கு கொண்டு போக முடியாமல், இழுத்தடித்துக் கொண்டிருப்பவன். அதே நேரத்தில் வசந்த எல்லா விஷயங்களிலும் தடாலடி. வீட்டிலாகட்டும், காதலாகட்டும் தாட் பூட் தஞ்சாவூர்தான்.  கல்யாணம் வரைக்கும் வந்து வாழ்க்கையில் வெற்றி பெருகிறான். இரண்டு காண்ட்ராஸ்டான கேரக்டர்கள். மிக அருமையாய் செய்திருக்க வேண்டிய படம்.. சவ சவ ஜெய் ...

கொத்து பரோட்டா-29/11/10

மீண்டும் 50,000 ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினேழு லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்த சக பதிவர்கள், வாசக நண்பர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றி..கேபிள் சங்கர் சமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். அதில் கட்சி ரீதியாக பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு முதல் ஆதரவு இருந்தது. ஆனால் முதலமைச்சராக ஜெயலலிதாவை விரும்பியிருக்கிறார்கள் என்று சர்வே சொல்வது எப்படி?. தமிழ் பத்திரிக்கை உலகில் தற்போது விகடன் குழுமம் அதிமுக பக்கமும், குமுதம் திமுக பக்கமுமாய் தான் பிராபகண்டா செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சார்பில்லாமல் இருக்கும் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. அப்பத்திரிக்கைகள் யாருக்கும் தெரிவதில்லை. எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும். ################################################################### நேற்று மாலை ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருடய நண்பி அங்கே வர.. அவர் என்னை அறிமுகப்படுத்தினார். அவள் கண் விரிய எ...

நந்தலாலா

Image
சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து போன தாயை ஒரு முறை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிடவேண்டுமென்று ஸ்கூல் எஸ்கர்ஷனை கட் செய்துவிட்டு சிறுவன் அகி கிளம்புகிறான். இன்னொரு பக்கம் மனநல மருத்துவ மனையில் தன்னை இப்படி விட்டு விட்டு போன தாயை போய் பார்த்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறான் ஒருவன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து உள்ள ஊர்களுக்கே போக வேண்டியிருப்பதால் ஒன்றாக பயணப்படுகிறார்கள். அவரவர் அம்மாக்களை சந்தித்தார்களா? என்பதே கதை. ரோடு சைட் டிராவல் படங்கள் பல இருந்தாலும் இவ்வளவு நெகிழ்ச்சியூட்டும் படம் வந்திருக்கிறதா என்று யோசித்து பார்த்தால் சட்டென ஞாபகம் வரவில்லை. சல சலத்தோடும் நீரோடு இழுத்துக் கொண்டு அலையும் இலை தழையோடு நம் மனதையும் ஒளிப்பதிவாளர் இழுத்துக் கொள்கிறார் என்றால் அது மிகையல்ல.. குறிப்பாக பல வைட் ஷாட்டுகளிலும், லோ ஆங்கிள் ஷாட்களிலும், கால்களுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து அலையும் ஷாட்களிலும், கேமராவாய் தெரியாமல் கதையோடு நம்மை பயணிக்கிறது ஒளிப்பதிவு. அந்த பச்சை பசேல் சுற்றுப்புறமும், நேர் கோடு சாலைகளும் பல இடங்களில்...

என்னடி மீனாட்சி...

Image
ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும். நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்.. அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம ரீரிக்கார்டிங் மியூசிக்கோட வாச்சிக்கிட்டே கதை  சொல்லுவான்.. அப்படி அவ...

சினிமா வியாபாரம்- பாகம்-2- பகுதி-2

பகுதி-2 மூன்று நாட்கள் மட்டுமே ஓடிய அந்த படத்தின் மூலமாய் என் நண்பர் பெரிய லாபம் ஏதும் சம்பாதிக்கவில்லை என்றாலும் நல்ல அனுபவத்தை கிடைக்கப் பெற்றார். அந்த அனுபவம் அவருள் இன்னும் இறங்கி எப்படியாவது ஒரு தியேட்டர் நடத்தணும் என்று முடிவெடுக்க முக்கிய காரணமாய் இருந்தது. இதற்கு நடுவில் “சேது”வில் ஆசைப்பட்டு, உயிரிலே கலந்தது படத்தில் செட்டிலாகி அதை வெளியிட்டு முழு நேர விநியோகஸ்தராக ஆகிய கதை சினிமா வியாபாரம் புத்தகத்தில் பார்த்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்(விளம்பரம்). பின்பு சென்னையில் ஒரு பிரபல பழைய தியேட்டர் ஒன்று லீஸுக்கு வருகிறது என்று கேள்விப்பட.. எங்கள் காட்பாதருக்கு தெரிந்த நண்பர் தான் அந்த தியேட்டர் ஓனர் என்பதால் உடனடியாய் பேச்சு வார்த்தை ஆரம்பித்து வெற்றிகரமாக முடித்தார். தியேட்டர் தொடங்குவது என்று முடிவாகி அட்வான்ஸ் எல்லாம் பேசி.. மாத வாடகைக்கு தியேட்டரை லீஸுக்கு எடுத்தாயிற்று. தியேட்டரை நாமே கட்டி பார்ப்பது என்பது ஒரு வகை. ஆனால் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டரை அதன் அதன் நிலையில் இருக்கும் தியேட்டரை எடுக்கும் போது சில பல பிரச்சனைகள் இருக்கிறத...

சேர்ந்து வாழ்வது

Image
சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம்  லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவ...

நகரம்

Image
சுந்தர் சி ரொம்ப வருடங்களுக்கு பின் பேக் டு பெவிலியன் நடிப்போடு. சுந்தர் சியை நடிகராக ஏற்றுக் கொண்ட தலைநகரம் படத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த நகரம். தலைநகரம் படத்தில் நான்கைந்து ராம் கோபால் வர்மா படம், இரண்டு மூன்று ஆங்கில படம், என்று கலந்து கட்டி அடித்திருந்த படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை எடுபட்டுவிட எல்லாம் சுபம். ஆனால் அதே பார்முலா இங்கே வேலைக்காகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறு வயது நணபர்கள் சுந்தர் சியும் போஸ் வெங்கட்டும், ஒருவர் ரவுடியாகிறார், மற்றொருவர் போலீஸ் ஆகிறார். போஸ் கெட்ட போலீஸ். சுந்தர் சி ஒரு பெரிய கள்ளக்கடத்தல் தாதாவிடம் வேலைப் பார்க்கும் போது மாட்டிக் கொண்டுவிட, அவரை கை காட்டாமல் ஜெயிலுக்கு போகிறார். சுந்தர்சியை போஸ் வெங்கட் வெளியே எடுத்து தன்னுடய இரண்டாம் படை வேளைக்கெல்லாம் உபயோகப்படுத்தி சம்பாதிக்கிறார். நடுவில் சுந்தர் சிக்கும், எதிர் வீட்டு அனயாவுக்கும் காதல் மலர்கிறது. இதற்கிடையில் நண்பனுக்கு பிரச்சனை என்றதும் அவரை காப்பாற்ற மீண்டும் ரவுடித்தனத்தை எடுக்க, அதை பார்த்த அனயா சுந்தரிடமிருந்து விலகுகிறார். தன்னை பற்றி விளக்கி மீண்டும் தனக்கொரு சான்ஸ் கொட...

கொத்து பரோட்டா-21/11/10

சிங்கை பதிவர்கள் எல்லாரும் சேர்ந்து சென்ற வருடம் மணற்கேணி என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி கருத்தாய்வு போட்டி வைத்து அதில் வெற்றி பெற்ற மூன்று பதிவர்களுக்கு சிங்கப்பூர் வரை ஒரு வாரம் சுற்றுலா ஏற்பாடு செய்து, முதல் மலரை வெளியிட்டார்கள். சாதாரணமகவே சிங்கை பதிவர்களின் அன்பைச் சொல்லி மாளாது. அவ்வளவு விருந்தோம்பல் இருக்கும். அவர்கள் இந்த வருடமும் மணற்கேணி2010 என்று கட்டுரை போட்டி  நடத்துகிறார்கள். போட்டியின் விதிமுறைகளை பற்றி அறிந்து கொள்ள http://www.sgtamilbloggers.com/ இணைய தளத்தை பாருங்கள். போன வருடம் நான் கலந்து கொள்ளலாம் என்று அவர்களின் தளத்தை பார்வையிட்ட பிறகு மிகவும் தமிழில் இருந்த்ததால் எஸ்கேப்பாகிவிட்டேன். இம்முறை கொஞ்சம் பரவாயில்லை.. ஹி..ஹி..சும்மா காமெடிக்குத்தான் நண்பர்களே.. சிறந்த முறையில் நடத்தப்படும் ஒரு கருத்தாய்வு போட்டி இது. கலந்து கொள்வோம். சிங்கை செல்வோம்.. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ த மிழ் சினிமாவில் தற்போதைய பிரச்சனையே தியேட்டர் கிடைக்காமல் அலையும் தயாரிப்பாளர்களின் நிலைதான். பெரிய படங்கள் தவிர, பெரிய நிறுவனங்களின் கிழ் இயங்கும் திரையரங்குகங்கள...

மந்திர புன்னகை

Image
இயக்குனர்கள் நடித்து மூன்று படங்கள் வெளி வந்திருக்கிற வாரமிது. மந்திரபுன்னகையில் கரு.பழனியப்பன், நகரத்தில் சுந்தர்.சி, மகிழ்ச்சியில் வ.கெளதமனும், சீமான் ஆகியோர் நடித்து இந்தவாரம் வெளிவந்திருக்கிறது. இதில் வ. கெளதமனும், கரு.பழனியப்பனும் முதல் முறை. வழக்கமாய் கரு.பழனியப்பன் எடுத்தாளும் குடும்ப கதை களன் இல்லாமல் ஒரு வித்யாசமான களனை எடுத்தாண்டிருக்கிறார். பேசும் பேச்சினால் மற்றவர்களின் நெஞ்சை சாட்டையால் அடித்து காயப்படுத்தும் அரகண்ட் கேரக்டர் பழனியப்பனுக்கு. எந்த ஒரு வரைமுறைக்கும் ஆட்படாத ஒரு கேரக்டராய் ஒரு பெரிய கம்பெனியில் ஆர்கிடெக்காய் வலம் வரும் ஸ்திரிலோலன், குடிகாரன், எப்ப்பப்பார் புகைப்பவன் தன்னருகே யாரையும் நெருங்க விடாதவன் என எல்லா விதமாக நெகட்டிவ் விஷயங்களும் உள்ளவனுக்கும், மிகவும் போல்டான, சுதந்திரமான, தன்னம்பிக்கையான, சுய சிந்தனையுள்ள மீனாட்சியுடனான நட்பு காதலாகி கனியும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட்.  பின்பு அந்த ட்விஸ்டை வைத்து க்ளைமாக்ஸ் வரைக்கும் கொண்டு போயிருக்கிறார்கள். படத்திற்கு மிக முக்கியமான, பலமான  ஒரு விஷயம் வசனங்கள். பாஸ்கர்சக்தியின் பெயரையும் போடு...

சினிமா வியாபாரம்-2

பகுதி-1 சினிமா தியேட்டரை வெளியிலிருந்து பார்க்கும் போது எப்போதும் பிரம்மிப்பாகத்தான் இருக்கும். ஜே..ஜே என கூட்டமிருக்கும் இடமாகவும், ஸ்டாலில் விற்கும் பண்டங்களின் விலையை பார்த்து, தீபாவளி அன்று சாப்பிட்டுவிட்டு தியேட்டருக்கு போனாலும், இடைவேளையில் பாப்கார்ன் சாப்பிடவில்லையென்றால் கலாச்சாரக் கேடு என்பது போன்ற எண்ணத்தில் அவர்கள் கொடுக்கும் டகால்டி கூம்பில் போலியாய் வழியும் கார்ன்களை திட்டிக் கொண்டே சாப்பிட்டுவிட்டு, அள்ளுறான்யா.. தலைவர் படம் போட்டு வசூலேயும் அள்ளுறான். ஸ்டாலேயும் ஒரு அள்ளு என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அந்த கூட்டம், நெருக்கடி எல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நிச்சயம் நம்ப மாட்டீர்கள். ஏன் நானே தியேட்டர் நடத்தும் குழுமத்தில் ஒருவனாக போகும் வரையில் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை கொடுப்பதற்கு என்ன கஷ்டங்கள் இருக்கிறதோ.. அதற்கு ஈடான கஷ்டம் ஒரு நல்ல திரையரங்கை நிர்வகிப்பதில் இருக்கிறது. ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் தான் தமிழகத்தில் ஏன் இந்தியாவெங்க...

சினிமா வியாபாரம்-பாகம் 2

Image
மீண்டுமொரு முறை குறுகிய காலத்தில் ஐம்பதாயிரம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய வாசகர்கள்.. பதிவுல நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..கேபிள் சங்கர். எந்திரன் படம் வெளிவரப் போகிறது என்பதற்காக அவசரப்பட்டு தங்கள் படங்களை ரிலீஸ் செய்த படத் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.. இப்படத்துடன் நாம் மோதினால் தாக்கு பிடிக்க முடியாது என்று தங்கள் ரிலீஸை தள்ளிப் போட்ட தயாரிப்பாளர்களும் உண்டு. எது வந்தால் என்ன நல்ல படம் ஓடும். நம்ம படம் சூப்பர் படம் நிச்சயம் ஓடும் ஆனா தியேட்டர் தான் கிடைக்க மாட்டேனென்கிறது. என்று புலம்பித்தள்ளிய தயாரிப்பாளர்களின் புலம்பல் தான் பெரிய பிரச்சனையாய் தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கிறது. அதான் ஊர்பட்ட தியேட்டர்கள் இருக்கிறதே? புதிது புதிதாய் மல்ட்டிப்ளெக்ஸுகள் திறக்கப்படுகிறதே? ஒவ்வொன்றிலும் ஐந்து, பத்தென தியேட்டர்கள் ஆரம்பிக்கப்படுகின்றதே? பின்பு எப்படி தியேட்டர் கிடைக்க மாட்டேனென்கிறார்கள்? என்று ஒரு பக்கம் சில பேர் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இப்படி ஒரு பக்கம் மல்ட்டிப்ளெக்ஸுகளால் புதிய திரையரங்குகள் திறக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் தனித் திரையரங்குகளாய் இயங்க...

The Social Network

Image
மார்க் ஜூகர்பெர்க் 2003ல் ஹார்வேட் மாணவன் ஆறே வருடங்களில் கோடீஸ்வரன். எப்படி? இந்த கேள்விக்கான பதில் தான் இந்த திரைப்படம். கற்பனைகதையல்ல. நிஜத்தில் கண் முன்னே பார்த்து வளர்ந்து ஓங்கி நிற்கும் ஒருவனின் கதை. வழக்கமாய் நிஜ வாழ்க்கை கதைகள் அதிலும் சமகாலத்தில் வாழும் ஆட்களை பற்றிய கதைகளில் பெரிதாய் ஈர்பிருக்காது. அதிலும் வெறும் கம்ப்யூட்டர், வெப்சைட் என்று சுற்றி கொண்டிருக்கும் ஒருவனது கதையை சுவாரஸ்யமாக சொல்ல முடியுமா?என்று யோசிப்பவர்களும் முடியும் என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லில்யிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியரும், இயக்குனரும். கம்ப்யூட்டர் புலியான மார்க்கின் காதல் முறிவுக்கு பின் தான் படிக்கும் ஹாவர்ட்டின் லோக்கல் நெட்வொர்கை உடைத்து facemash.com என்றொரு இணையதளத்தை உருவாக்கி தங்கள் ஹாவர்டில் படிக்கும் மாணவிகளின் போட்டோக்கள் டேட்டாபேஸை திருடி மாணவர்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, அதன் காரணமாக அவனை ஆறு மாதம் படிப்புக்கு தடை பெறுகிறான். ஒரு போதையான மது இரவில் ஹாவர்ட் ரோயிங் டீமிலிருக்கும் இரட்டையர்கள் தங்கள் சைட்டுக்கு வேலை செய்ய மார்க்கை அழைக்கிறார்கள். சிறிது...

கொத்து பரோட்டா-15/11/10

தமிழ் சினிமாவில் உள்ள உதவி இயக்குனர்கள் எல்லாருமே கொதித்தெழுந்து போய் இருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கின் மீதான கோபத்தோடு. போன வாரம் அவர் ஒரு பேட்டியில் இப்போதைய உதவி இயக்குனர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்க்மே கிடையாது. ஆயிரம் முறை சுயமைதுனம் அறிவு தானிருக்கிறது. அப்படிப்பட்டவனிடம் எப்படி ஒரு நல்ல சிறந்த படத்தை பெற முடியும்?. என்றும், தான் இதுவரை இயக்கிய இரண்டு படங்களும் குப்பை என்றும், நந்தலாலா போன்ற நல்ல படங்கள் வெளிவர மாட்டேனென்கிறது என்றும், சமீபத்தில் அவர் ஒன்னறை லட்ச ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி வந்தேன் என்று எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டு நாய்க்குட்டியிடமிருந்து துண்டு பிரசுரம் வரை சொல்லி மாய்ந்துவிட்டார். உதவி இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அவர்களுக்கும் ஒரு மன்னிப்பு கடிதத்தை கொடுத்துவிட்டதாய் கேள்வி. அதில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை என்றும் ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கிறார். மிஷ்கின் புத்தகங்கள் படிப்பதை பற்றி சொன்ன விஷயம் சரியாக இருந்தாலும். அதை சொல்லிய விதம் தான் குடிக்கும் டீயில் தானே எச்சை துப்பி குடிப்பதற்கு சமம். சரி விடுங்க பாஸு.. அவரு இரண்டு ஹிட் கொட...

உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ..?

Image
பத்திரிக்கைத்துறை நண்பர் ஒருவர் அவரை சந்திக்க அழைத்திருந்தார். அவரை சந்திக்க டி.நகர் நோக்கி போய்க் கொண்டிருந்த போது போன் அடித்தது. நண்பர்தான் “சார்.. எங்க இருக்கீங்க?” “டி.நகர் பனகல் பார்க்கிட்ட இருக்கேன் நண்பரே” ”அப்ப 30 மினிட் வந்திருங்க..” என்றார் எனக்கு புரியவில்லை.. பனகல் பார்க்கிலிருந்து நடிகர் சங்கம் போவதற்கு எதற்கு அரை மணி நேரம்? என்று யோசித்தபடி, ‘நண்பா.. அதுக்கு எது அரை மணி நேரம்?” என்று கேட்டதும்.  ‘சரி ஓகே நீங்க நடிகர் சங்கம் வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். நான் நடிகர் சங்கம் போனதும் அதற்கு நேர் எதிரே ஒரு பெரிய போர்ட் வைத்திருந்தார்கள். 30 MINUTES என்று. அதன் வாசலில் நண்பர், பத்திரிக்கையாளர் பாலா நின்றிருந்தார். இப்போது புரிந்துவிட்டது அவரை இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று. என்ன இடம்ணே இது? என்று கேட்டபடி உள்ளே போனேன். அங்கே அழைத்துச் சென்று மேலாளரை அறிமுகப்படுத்தினார். அவர் சொன்ன கான்செப்ட் செம இண்ட்ரெஸ்டிங். அது மட்டுமில்லாமல் யுனிக்காகவும் இருந்தது. பெரும்பாலான பகல் நேரங்களில் பிஸினெஸ் செய்யும் நண்பர்கள், மற்ற துறை நண்பர்கள் எங்காவத...