Posts

Showing posts from January, 2011

கொத்து பரோட்டா 31/01/11

Image
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை எதிர்த்து ட்வீட்டரில் ஒரு பெரிய அலையே எழுந்துள்ளது. இது சம்பந்தமான ஒரு டீவிட்டர்களின் கூட்டம் கூட நேற்று மெரினாவில் நடந்தது. அதே போல ஸ்ரீலங்காவில், கல்லேயில் நடக்கும்  லிட்டரரி பெஸ்டிவல் எனும் புத்தகக் கண்காட்சியை சவுத் ஆப்பிரிக்க எழுத்தாளர் டாமன் கால்குட் என்பவர், மீனவர்கள் மீதான தாக்குதல், மனித உரிமை மீறல் குற்றஞ்சாட்டி கலந்து கொள்ளாமல் பாய்காட் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக இன்னும் சில பிரபல எழுத்தாளர்களும் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் எழுத்தாளர் திஷானி தோஷி, சைனா எழுத்தாளர்களும் விழாவில் கலந்து கொள்கிறார்ளாம். விழாவுக்கு மனித உரிமை சார்பாக எதிர்ப்பு இருப்பது உண்மைதான் என்றும் சொல்கிறார் இவ்விழாவின் அமைப்பாளரும், ஸ்ரீலங்காவின் பிரபல நாவலாசிரியருமான ஷியாம் செல்வதுரை.  #################################################

நண்பனின்….

அன்புள்ள நண்பர் சங்கருக்கு.. உங்களின் கதைகளைப் படித்தேன். “மீண்டும் ஒரு காதல் கதை”யைப் படித்து முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டியது. மறுபடியும் படித்தேன். ‘ஷ்ரத்தா” கேரக்டர் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. சுஜாதாவின்”பிரிவோம்..சந்திப்போம்’ நாயகி மதுமிதா எவ்வளவு தூரம் மனதை பாதித்தாளோ.. அதே அளவு ஷ்ரத்தாவும் என் மனதை பாதித்துவிட்டாள். இப்படிஒருத்தியை வாழ்வில் சந்திக்க மாட்டோமா? என்ற ஏக்கம் வயதையும் மறந்து வருகிறது. (அப்படியொன்றும் வயதாகிவிடவில்லையே.. “நாமெல்லாம் இளைஞர்கள் தானே..”).

பதினாறு

Image
மிர்ச்சி சிவா, இளமையான டிசைன்கள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, அம்சமான டைட்டில் என்றதும் ஏதோ இளமை துள்ளிக் குதிக்கும் கதையாக இருக்கும் என்றெண்ணி துள்ளிக் குதித்து படம் பார்க்கப் போகிறவர்களா நீங்கள்? அப்போது இந்த விமர்சனம் உங்களுக்குத்தான். பாவி மக்கா சாச்சுபுட்டாய்ங்கடா.. சாச்சுபுட்டாய்ங்க

127 Hours

Image
வாழ்க்கையை உற்சாகமாகவே கழிக்கும்  இளைஞன் ஒருவன். ப்ளூ கேன்யானில் ஒரு மலையிடுக்கின்  பாறையில் கை மாட்டிக் கொண்டு, ஐந்து நாட்கள் வாழ்வா சாவா போராட்டம் நடத்தி,  வாழும் வெறி மட்டுமே அவனை உயிரோடு கூட்டி வந்த அதிசயத்தை சொல்லும் படம். இதுதான் கதை என்றதும் இதை ஒரு அரை மணி நேர டாக்குமெண்டரியாக எடுத்தால் பரவாயில்லை ஒரு முழு படத்திற்கு தாங்குமா? என்ற கேள்வி எழுத்தான் செய்யும். ஆனால் படம் ஓடும் ஒன்னரை மணி நேரமும் நம்மை அவனோடு ஆழ பயணிக்க வைத்துவிடுகிறார்கள்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குனர் டேனிபாயலும் அவரது குழுவினரும்.

கவிஞரின் பார்வையில்....

Image
rajasundararajan@gmail.com அன்பின் சங்கர், போக்குவரத்தில் வண்டி ஓட்டிச் செல்கிற போது, நமக்கு முந்தி, பிந்தி, அடுத்து ஊர்கிற வண்டியோட்டிகளின் மன-ஓட்டம் இன்னதென்று அறியக் கிட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த போது, அந்தக் கிழவிக் குணவார்ப்பின் மன-ஓட்டங்கள் அப்படி அப்பட்டமாகப் புரியவர - வியந்தேன் என்று சொல்லமாட்டேன் – திகைத்தேன்! ஏனென்றால், அதுவரை நான் பார்த்திருந்த (தமிழ், ஆங்கில, ஹிந்தி) மசாலாக்களில் ஆக்ஷன், பேச்சு, பின்னிசை அளவிலேயே கதை நகர்த்துதலைக் கண்டிருந்தேன். மெய்ப்பாடுகள் வழியாகத்தான் குணவார்ப்புகள் விளக்கம் பெறுகின்றன. உண்மைதான், ஆனால் கதைக்கள விவரணைதான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆடுகளம்’ படத்தில், நடிகர்கள் ஓரொருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் கதைக்களம் எடுத்துத் தொடுக்கப்பட்ட வகையினாலேயே அக் குணவார்ப்புகள் தனித்தன்மை பெறுகின்றன. அப்படி, இயக்குநரே கர்த்தாவாகிறார். புத்தக வடிவுக்குட்பட்ட உங்கள் கதைகள் அத்தனையையும் வாசித்துவிட்டேன். உண்மையில், வாங்கி இரண்டு நாட்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்துவிட்டேன...

சாப்பாட்டுக்கடை

Image
இந்தக் கடையை அடிக்கடி திருவெல்லிக்கேணியில் சுற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைவிட ரொம்ப காலமாய் தேவியில் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்.  ஏனென்றால் தேவியில் படம் பார்க்க முன் பக்கமாய் அனுமதிப்பவர்கள்,படம் விட்டவுடன் பின்பக்கம் உள்ள அவுட் கேட் வழியாகத்தான் அனுப்புவார்கள்.. அப்போது வெளியே வரும் பெரும்பாலானவர்கள் இங்கே சாப்பிடாமல் போயிருக்க மாட்டார்கள். இப்போது சில சமயம் முன் பக்கம் வழியாகவும் விடுவதால் இன்றைய புது ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது ஸ்பெஷாலிட்டி சமோசா, கச்சோடி, ரசமலாய், ரசகுல்லா அல்லது ஜாமூன், ஜிலேபி, மற்றும் பால்கோவா,  மற்றும் லஸ்ஸி. எப்பவும் அடுப்பிலிருந்து சூடான சமோசாவும், கச்சோரியும் எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பார்கள் அது காலியாகிக் கொண்டேயிருக்கும். சமோசாவென்றால் ஏதோ வெங்காயத்தையும் உருளையையும் சேர்த்து ஃபில் செய்தது கிடையாது. முழுக்க, முழுக்க உருளை மசாலாவை மட்டுமே வைத்து செய்யப்படும் சமோசா.. மவுண்ட் ரோடில் ஒரு ரூபாய்க்கு சமோசா விற்ற காலத்திலேயே இரண்டரை ரூபாய்க்கு விற்றவர்கள். இப்போது இவர்களது விலை ஒரு சமோசா 5 ரூபாய...

கொத்து பரோட்டா 24/01/11

Image
சென்ற வாரம் யுத்தம் செய் படத்தின் ப்ரோமஷனுக்காகவும், உலக சினிமா பற்றி பேசவும், வழக்கம் போல் விஜய் டிவியில் கூப்பிட்டிருந்தார்கள். வழக்கம் போல் போயிருந்தோம். அவர்களும் வழக்கம் போல் இரண்டு மணிக்கு வரச் சொல்லிவிட்டு ஆறரை மணிக்கு ஆரம்பித்தார்கள். மீண்டும் வழக்கம் போல் போய்விட்டு வந்து புலம்புகிறேன். ஆனால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாய் இருந்தது. வருகிற குடியரசு தினத்தன்று ஒளிபரப்பாகிறது. வாட்ச் இட். ########################################### மிஷ்கினிடம் சாருவை பற்றிக் கேட்ட போது சாரு என் நண்பர், நண்பர், இன்னமும் என் நண்பர் என்றார். ஒரு வேளை சேர்ந்திட்டு இவரு நண்பனின் துரோகம்னு புக் போடுறதுக்கும், அவர் நந்தலாலாவுக்குமா ஆட்டம் ஆடுறாய்ங்களோ. அதே போல உலகப் படம் பத்தி கேட்ட போது அவர் சொன்னது தமிழ் நாடும் உலகத்தில தானே இருக்கு என்பதுதான். இதைத்தான் அவருடய நந்தலாலா நிகழ்ச்சியில் சொன்னேன். சேம் பிஞ்ச் ########################################### பதிவுகளில், பத்திரிக்கைகளில், மாத இதழ்களில்  எழுதுவதை தவிர சில புதிய இணைய இதழ்களிலும் எழுதக் கேட்கிறார்கள். அப்படி புதிதாய் ஆரம்பித்திருக்க...

சொல்லித்தரவா

Image
பொங்கல் ரேஸில் வெளிவந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்திய அரசின் சலுகைகளில் படித்துவிட்டு வெளிநாட்டில் போய் செட்டிலாகும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். எஸ்.சிவராமன் என்கிற இயக்குனரின் இரண்டாவது படம். இவர் ஏற்கனவே மறந்தேன் மெய் மறந்தேன் என்கிற படத்தை 2006 எடுத்து வெளியிட்டிருக்கிறார். முதல் படத்தில் ஏதும் கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறது. என்ன தான் சொல்ல வந்த விஷயம் ப்ரெயின் ட்ரையின் என்பது போன்ற சீரியஸான விஷயமாய் இருந்தாலும் படம் பூராவும் ஆளாளுக்கு இங்கிலீஷிலேயே பேசிக் கொண்டிருப்பது.. ஒரே காமெடியாய் இருக்கிறது. பின்ன பாருங்க.. கவுண்டர் சீரியஸா அமெரிக்க ஆக்ஸண்டுடன் இங்கிலீஷ் பேசினால் எப்படி இருக்கும்? இதில் இயக்குனர் வேறு காமெடி செய்கிறேன் என்று பட்லர் இங்கிலீஷ் காமெடி செய்கிறார். மிக அமெச்சூர் தனமான கதை சொல்ல, மேக்கிங், என்று எந்த விதத்திலும் எங்கேயும் பாராட்டி விடக்கூடாது என்பதை கொள்கையாய் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் சீட்டில் உட்கார முடியாமல் தவிக்க வைக்கிறார். சார்.. படமெடுக்கணும்னு ஆசைப்பட்டா.. சொல்லுங்க.. நாங்கல்லாம் இருக்கோம்.. காசை கரியாக்காதீங்க..ப...

வாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்.

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து. அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம். எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது. ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண்....

வாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்

subiah ravi sarvagar@gmail.com Dear sir, I am M.Subbiah, working as an Associate Director. I read your recent  book "Cinema viyabaram". so nice and remarkable one. very useful for me. i want to talk to u sir. can i get your mobile number, please. My hearty wishes to all your further future products, sir. Thank you, regards, subbiah.m. என்னடா இவனும் ஆரம்பிச்சிட்டானா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தன் வாழ்கையில், உணவு, உடை, இருப்பிடத்திற்கு பிறகு அங்கீகாரத்துக்காகத்தான் அலைகிறான். காதல், குடும்பம், உள்பட என்பது என் கருத்து. ஏதோ விளையாட்டுப் போல ஒரு வருடத்தில் மூன்று புத்தகங்கள் எழுதியாகிவிட்டது. பதிவர்கள் நண்பர்கள் எல்லாம் பழகின தோஷத்திற்காகவோ..  அல்லது நிஜமாகவே பிடித்தோ… வாங்கி படித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம். ஆனால் பொது வெளி எனும் போது அங்கு என் புத்தகத்தை வாங்குபவர். புதியவர் அவர்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனங்...

சினிமா வியாபாரம்-2-7

பகுதி 7 புதிய திரைப்படங்கள் வரும் போதுதான் இம்மாதிரியான கட்சிகள், கட்சி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியும். பெரிய கட்சிக்காரர்கள் எல்லாம் முடிந்தவரை டிக்கெட் வாங்கிவிடுவார்கள். ஆனால் அவர்களின் அல்லக்கைகள் தான் பிரச்சனை. லெட்டர் பேட் கட்சிக்காரர்கள் காசு கொடுக்காமல் படம் பார்க்க விரும்புவார்கள். முதலிலேயே அவர்களை எதிர்கொள்ள  பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால். தியேட்டர் அதோகதிதான். தினமும் இருபது பேராவது ஓசியில் படம் பார்க்க வருவார்கள். அவர்களை தடுத்து நிறுத்தியதால் சில பல லோக்கல் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். உதாரணமாய் டிக்கெட் கொடுக்க நேரமாகிறதென்று அங்கிருக்கும் கதவுகளை அடிப்பது, எதாவது கலாட்டா செய்வது, தியேட்டரில் வந்து சேரின் மீது ஏறி குதிப்பது, குடித்துவிட்டு வந்து வாந்தியெடுப்பது என்று பல இம்சைகள் வரும். அப்போது நம் நடவடிக்கைகளையும் கொஞ்சம் கடுமையாய் காட்ட வேண்டியிருக்கும். நம்மிடம் உள்ள விசுவாசிகளை அதற்கு பயன் படுத்த வேண்டும். அவர்களை விட்டு பிரச்சனை செய்பவர்களை கையாள சொல்லிவிடுவோம். பின்பு அது லோக்கல் ஸ்டேஷன் வரைக் கூட போகும் அப்போது அங்கு வைத்து பஞ்சாயத்து செய்ய, வந...

இளைஞன்

Image
படம் வெளியான பொங்கல் நாளன்று காலையிலேயே சூப்பர் ஹிட் என்று கலைஞர் டிவியில் போட்டார்கள். கலைஞர் நியூஸில் படம் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. கலைஞர் படம் பார்த்துட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடம் “என்னய்யா.. தமிழ் படம் எடுப்பேன்னு பார்த்தா.. இங்கிலீஷ் படம் எடுத்திருக்கே” அப்படின்னு கேட்டாராம். இப்படி ஆளாளுக்கு விஜய் படத்தை பத்தி.. சாரி.. பா. விஜய் படத்தை பத்தித்தான் தமிழ்நாடே பேசுது. படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் எது என்று கேட்டால் எந்திரனை விட இளைஞனுக்குத்தான் என்று தமிழ் சினிமா வரலாற்றில் இடம் பெரும் போலிருக்கிறது. அவ்வளவு எதிர்பார்பாம். பாவம் மார்ட்டின் கஷ்டப்பட்டு லாட்டரி வித்து சம்பாதிச்ச காசு.. இப்ப கரியா போகணும்னு விதியிருந்தா யார் மாத்த முடியும். நடிக்கவே தெரியாத ஹீரோ. 1940களில் கூட எடுபடாத கதை திரைக்கதை வசனம், இந்த 50வது  படத்தோட தன் திரைப்பணியை முடித்துக் கொள்ள தைரியம் கொண்ட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு நிச்சயம் தெரியும் இந்தப்படம் என்னவாகுமென..? தலைவர் கலைஞருக்கு மன்னிக்கணும் உங்களுக்கு தெரியாததில்லை..நீங்கள் திரைக்கதை வசனமெழுதிய முந்தின படங்கள் எல்லாம...

காவலன்

Image
அன்புள்ள இளைய தளபதி விஜய்க்கு,   வழக்கமாக உங்களது படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப்படமும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஓப்பனிங் இருக்கும் முக்கிய நடிகர்களில் நீங்களும் ஒருவர். கடந்த சில படங்களாய் உங்களது கேரியர் கிராபில் நிறைய டவுன்ஃபால் என்பதை புரிந்துக் கொண்டு எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று குழம்பிப் போய் எதை எதையோ முயற்சி செய்துவருகிறீர்கள். அப்படி எடுத்த படம் வெளிவருவதற்கு கஷ்டப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பிரச்சனை. தியேட்டர் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சி சதி, அந்த இடத்தில் ப்ரஷர், இந்த இடத்திலிருந்து பிரஷர் என்றெல்லாம் நீங்கள் சொல்லாமல் சொன்னாதாய் நிறைய கதைகள் உலா வருவதும், இப்படம் உங்களுக்கு ஒரு பிரஸ்டீஜ் என ஃபீல் செய்ததால் எப்பாடு பட்டாவது ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலையில் உங்கள் சொந்த காசை போட்டு ரிலீஸ் செய்ததாக சொல்லப்படுவதும் இண்ட்ரஸ்டிங்கான கதை. நிஜத்தில் உங்கள் முந்திய படங்களின் பாதிப்பினால் படத்தை முக்கிய ஆட்கள் வாங்காமல் போக, சக்தி சிதம்பரம் 28 கோடிகளுக்கு வாங்க ஆசைப்பட்டதும், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி வாங்கி ஒரு லாப...

கொத்து பரோட்டா 17/01/11

புத்தக கண்காட்சி-3 ஹரன் பிரசன்னா வைத்த கண்ணில்:) நடுவில் நான்கு நாட்கள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. த்ரோட் இன்பெக்‌ஷன், ஜலதோஷம் என்று எல்லா தோஷங்களோடு போராடி, சனிக்கிழமை போயிருந்தேன். நிறைய போன் கால்கள் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்டு, ஆறு மணிக்கு டைம் சொல்லி அங்கே போனேன் பல நண்பர்களை சந்தித்தேன். புத்தகம் வாங்கினார்கள், திருப்பூரிலிருந்து நண்பர் ராஜ மாணிக்கம் வந்திருந்தார். வழக்கம் போல இலக்கியவாதி மா.ரா. சங்கர் ஆகியோரும் ஆஜர். பின்பு ராஜமாணிக்கத்தோடு டிபன் சாப்பிடலாம் என்று கேண்டீனுக்கு போன போது வழியில் யுவகிருஷ்ணாவை சந்தித்தோம். மூவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டே, அளவளாவ ஆரம்பித்து கண்காட்சியையே மூடிவிட்டார்கள்.  திரைத்துறையில் பணியாற்றும் இரண்டு நண்பர்களை சந்தித்தேன். ஒருவர் ராஜேஷ் திரு திரு துறு துறு உதவி இயக்குனர். விரைவில் அவர் பணியாற்றும் படத்திற்கு வசனமெழுதி தரக் கேட்டிருக்கிறார். இன்னொரு பதிப்பக நண்பர் நாவல் கேட்டிருக்கிறார். புத்தாண்டு பல புதிய ஆஃபர்களை முன் வைக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த ரெண்டு நாட்களில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.  கோபி கிரு...

சிறுத்தை

Image
எஸ்.எஸ்.ராஜமெளலியின்  தெலுங்கு விக்ரமார்குடுவின் தமிழ் ரீமேக். தெலுங்கிலிருக்கும் அதே மணம், குணத்தோடு அப்படியே கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான ரவிதேஜாவின் படங்களுக்கென்றே ஒரு பார்முலா இருக்கிறது. ஒரு மிடில் க்ளாஸ் கேரக்டர், முதல் பாதி முழுவதும் காமெடி, இண்டர்வெல்லுக்கு முன்னால் ஒரு திடீர் பிரச்சனை, க்ளைமாக்ஸில் சுபம். அதற்கு முன்னால் கலர் கலராய் செட்டு போட்டு ஒரு குத்துப் பாட்டு என்பது தான் அது. ஆனால் படிப்பதற்கு மிகவும் சுலபமாய் இருக்கும் இவ்விஷயத்தை திரையில் அதே பரபரப்போடு காட்ட, ரவிதேஜாவின் நடிப்பு எவ்வளவு முக்கியம், திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது அதை ரீமேக்கும் போது தெரியும். அதில் கொஞ்சமும் சளைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார்கள். கார்தியும், சந்தானமும் திருடர்கள். ஒரு பாழடைந்த தியேட்டரில் தாங்கள் ஆட்டையை போட்ட பொருட்களை வைத்துக் கொண்டு சந்தோஷமாய் வாழ்பவர்கள். நடு நடுவே கார்த்தியை பார்க்கும் சில பேர் அவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல முயல்வதும், இவரை பார்த்து சில பேர் பயந்து நடுங்கி போன் செய்வதுமாய் அலைவதும், இன்னொரு கும்பல் இவரை கொல்ல நினைத்து தொடர்வ்துமாய் பரப்ரவென ...

No One Killed Jessica – எ.வ.த.இ.மா.படம்.

Image
பல வருடங்களாய் பேப்பரில் படித்த ஒரு பிரபலமான கேஸ் தான் படத்தின் கதை. அதை இவ்வளவு சுவாரஸ்யமாக, மனம் நெகிழும்படி கொடுக்க முடியுமா? என்று கேட்டால், நல்ல திரைக்கதை, நடிகர் நடிகைகள் என்று முழு இன்வால்வ்மெண்டோடு கொடுத்தால் முடியும் என்றிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் குப்தா. டெல்லியின் ஸ்டார் ஓட்டல்  பாரில் ஒரு அமைச்சரின் பையன், பார் டைம் முடிந்து சரக்கு தராததால் கோபத்தில் ஜெஸ்சிகா எனும் பார் மேனேஜரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிஜக்கதை தான் படத்தின் கதையும். இம்மாதிரியான கதைகளில் என்ன பெரிய திருப்பத்தை எதிர்பார்த்துவிட முடியும்?. அரசியல் வாதியின் பையன் என்றாகிவிட்டால் சட்டம் எப்படி தன் கடமையை செய்யும் என்று எல்லோருக்குமே தெரியுமல்லவா? அதே தான் நடக்கிறது. பின்பு எப்படி ஜெஸ்ஸிகாவின் கேஸ் பெரிய அளவில் பேசப்பட்டு மீண்டும் சர்ச்சையானது என்பது மிக அழகாய், இழைத்து, இழைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.   ஜெஸ்சிகாவாக நடித்த பெண்ணின் துடிப்பு மிக்க நடிப்பு அவரின் மீதான ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்துகிறது. அது படத்தின் மீது நம் கவனத்தை ஈர்க்க காரணமாயிருக்கிறது. அவரது சகோதரி சபரீணாவாக வரு...

சினிமா வியாபாரம்-2-6

பகுதி-6 இந்த போஸ்டருக்கு பின்னால் எவ்வளவு பணம் புழங்குகிறது என்பதை பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் இரண்டு மூன்று தியேட்டர்களுக்கு ஒரே அள் போஸ்டர் ஒட்டுபவராக இருப்பார். அது தவிர அவரிடம் மற்ற அறிவிப்பு போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் என திடீர் திடீரென வரும ஆர்டர்களும் உண்டு. இந்த ஆட்களுக்கு இன்றளவிலும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. மற்ற போஸ்டர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு மார்க்கெட் சினிமா போஸ்டர்களுக்கு மட்டுமே உண்டு. அது என்னவென்றால் ரீ சேல் வேல்யூ. ஆம் ரீசேல் வேல்யூதான். ஒரு சிங்கிள் ஷீட், டூ ஷீட், ஃபோர்ஷீட், சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் முறையே 20,40,60,100 என்று வைத்துக் கொள்வோம். புதுப்படங்கள் ரிலீஸாகும் போது விநியோகஸ்தர்களே இத்தனை போஸ்டருடன் படப்பெட்டியை தருவார்கள். அப்படி விளம்பரத்துக்காக வரும் போஸ்டர்களை ஒட்டாமல் ஒட்டியதாய் கணக்கு காட்டிவிட்டு ஒரு போஸ்டருக்கு இவ்வளவு என்று கணக்கு செய்து பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒவ்வொரு டிசைனிலும் குறைந்தது ஐந்து போஸ்டரையாவது எடுத்து வைத்துக் கொள்வார்கள். அதை கொண்டு போய் தமிழ் சினிமாவின் விநியோகஸ்தர்களின் மைய...

Faster

Image
அண்ணனை கொன்ற கும்பலை பழி வாங்கும்  தம்பியின் கதை. பரபரப்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. ட்வைன் ஜான்சன் ஜெயிலிலிருந்து வெளியேறுகிறார். ஹைஸ்பீடில் நடக்கிறார். லோ ஆங்கிள் ஷாட்களில் நடக்கிறார். டாப் ஆங்கிள் ஷாட்டில் கார் கவரை எடுக்கிறார். அமெரிக்க கார்கள் அவர்களின் சினிமாவின் நிலைக்கேற்ப ஹீரோவுக்கென்றால் பத்து வருஷமானாலும் புதிதாய், தொட்டவுடன் கிளர்ச்சியடையும் பெண் போல கருக்காய் கிளம்புகிறது. சைலன்ஸரிலிருந்து சொட்டாய் விழும் எக்ஸாஸ்ட் துளி அட்டகாசம். திடீரென ராக் என்கிற ஒரு கேரக்டரே செத்துவிட்டதாய் காட்டுக்கிறார்கள். பின் மண்டையில்  சுட்டு செத்தவர் முன் பக்க தாடை வழியாய் வெளியேறி பிழைத்துவிட்டதாய் சொல்கிறார்கள். ஜெயிலை விட்டுக் கிளம்பியவன் நேராக ஒரு ஆபீஸில் போய் ஒருவனை நெற்றி சுட்டுவிட்டு கேமராவை பார்த்துவிட்டு வருகிறான். அப்புறம் போகிற வழியெல்லாம் ஒவ்வொருத்தனாய் போய் கொல்கிறான். போட்டோவும் வீடியோவுமாய் இருப்பவனை பிடிக்க ஒரே ஒரு போலீஸை அதுவும் ஹீரோ கொல்லும் லிஸ்டில் இருக்கிறவன். அவன் மட்டும் போகிறான். என்னா போலீஸ்பா.. க்ளைமா...

பு.க-2

இன்றைக்கு பதிவர் நண்பர் நேசமித்ரனின் ”கார்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்” கவிதை தொகுப்பும், நண்பர் எழுத்தாளர், நடிகர், அஜயன் பாலாவின் புத்தகமும், மாலை ஆறு மணிக்கு உயிர்மையிலும், ஆழியிலும் முறையே வெளியானது. சரியாய் ஆறு மணிக்கு போக வேண்டிய நான் ஏழு மணிக்குத்தான் போனேன். அநியாய ட்ராபிக். “ழ”பதிப்பக கே.ஆர்.பி.செந்திலுக்கு போன் செய்தால் பெரும் இலக்கியவாதிகளோடு காண்டீனில் இருப்பதாக சொன்னார். நேற்றிருந்த கூட்டத்தில் கால் பங்குக்கூட இல்லை. காலார நடந்து ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி புத்தகம் வாங்க சரியான தருணம். காண்டீனுக்கு சென்றால் கே.ஆர்.பி. ஷோபாசக்தி, சாரு, நம் சக இலக்கியவாதி உண்மைத்தமிழன், விந்தைமனிதனுடன் உட்கார்ந்திருந்தார். வழியில் லக்கி, அதிஷா, காமிக்ஸ் உலகம் விஷ்வா ஆகியோர் பணியாரத்துக்காக க்யூவில் நின்றிருக்க, நானும் கூட சேர்ந்து ஆட்டையை போட்டேன்.  ஷோபா சக்தியிடம் உ.த.. என்னைப் பற்றி சொன்னவுடன் கொத்துபரோட்டா எழுதுவாரே அவரா? என்று கேட்டார். எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இலக்கியவாதிகளுக்கும் பரோட்டா பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கியது. நன்றி உ.த. பின்பு லக்க...