எஸ்.எஸ்.ராஜமெளலியின் தெலுங்கு விக்ரமார்குடுவின் தமிழ் ரீமேக். தெலுங்கிலிருக்கும் அதே மணம், குணத்தோடு அப்படியே கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான ரவிதேஜாவின் படங்களுக்கென்றே ஒரு பார்முலா இருக்கிறது. ஒரு மிடில் க்ளாஸ் கேரக்டர், முதல் பாதி முழுவதும் காமெடி, இண்டர்வெல்லுக்கு முன்னால் ஒரு திடீர் பிரச்சனை, க்ளைமாக்ஸில் சுபம். அதற்கு முன்னால் கலர் கலராய் செட்டு போட்டு ஒரு குத்துப் பாட்டு என்பது தான் அது. ஆனால் படிப்பதற்கு மிகவும் சுலபமாய் இருக்கும் இவ்விஷயத்தை திரையில் அதே பரபரப்போடு காட்ட, ரவிதேஜாவின் நடிப்பு எவ்வளவு முக்கியம், திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பது அதை ரீமேக்கும் போது தெரியும். அதில் கொஞ்சமும் சளைக்காமல் அடித்து ஆடியிருக்கிறார்கள். கார்தியும், சந்தானமும் திருடர்கள். ஒரு பாழடைந்த தியேட்டரில் தாங்கள் ஆட்டையை போட்ட பொருட்களை வைத்துக் கொண்டு சந்தோஷமாய் வாழ்பவர்கள். நடு நடுவே கார்த்தியை பார்க்கும் சில பேர் அவரிடம் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல முயல்வதும், இவரை பார்த்து சில பேர் பயந்து நடுங்கி போன் செய்வதுமாய் அலைவதும், இன்னொரு கும்பல் இவரை கொல்ல நினைத்து தொடர்வ்துமாய் பரப்ரவென போகும் போது, நடுவே தமன்னாவுடனான காதல் வேறு. இதற்கிடையில் ஒரு குழந்தை வேறு கார்த்தியை அப்பா என்று அழைத்துக் கொண்டு அவருடன் வந்து செட்டிலாகிறது. இவர் திருடனாயிருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஒரு குழந்தைக்கு தகப்பன் என்பதை மறைத்துவிட்டார் என்று காதலி தமன்னா வேறு பிரிந்துவிடுகிறார் (என்னா ஒரு லாஜிக்பா..) பல குழப்பத்திலிருக்கும் கார்த்தியையும், குழந்தையையும் கொல்ல ஆட்கள் வரும் போது திடீரென இன்னொரு கார்த்தி வருகிறார், துவம்சம் செய்கிறார் இண்டர்வெல் விடுகிறார்கள். பிறகு நடந்தது என்ன? என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.
நல்ல அதகளமான ஆந்திரா மசாலாவை, காரத்தை ருசிக்க, ஜீரணிக்க தைரியமிருப்பவர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம். அதிலும் முதல் பாதியில் கார்த்தியும், சந்தானமும் அடிக்கும் லூட்டி இருக்கிறதே கண்களில் நீர் வரவழைக்கும் காமெடி. பின்பாதியில் வில்லன்கள் செய்யும் சில விஷயங்கள் படத்திற்கு சீரியஸாய் இருந்தாலும் நமக்கு காமெடியாய் தோன்றி, ரசிக்க முடிகிற இடங்கள்தான். படு சீரியஸாய் போக வேண்டிய இரண்டாவது பாதியை முதல் பாதி கார்த்தியை வைத்து படு நகைச்சுவையாய் கொண்டு போயிருப்பது ப்ளஸ். கார்த்தி வர வர மெருகேறிக் கொண்டேயிருக்கிறார். ராக்கெட் ராஜா கேரக்டருக்கும் ரத்னவேல் பாண்டியன் கேரக்டருக்குமான டிரான்ஸிஷன் அபாரம். காமெடி அநாயாசமாய் வருகிறது இவருக்கு. சந்தானத்துடன் இவர் அடிக்கும் லூட்டியும், தமன்னாவுடய இடுப்பைக் கிள்ள கைபரபரக்கும் குஜாலும், மனுஷன் அனுபவிச்சு செய்திருக்கிறார். நான் முன்பே சொன்னது போல மசாலா படங்களில் மிளிர தன்னை முன்னெடுத்துக் கொண்டு பிரசண்ட் செய்யும் நடிப்பு வேண்டும். அது கார்த்திக்கு வசமாகிவருகிறது.
சந்தானம் இம்முறையும் ஒரு வெற்றிப் படத்திற்கான முக்கிய ப்ராப்பர்டியாகிவிட்டார். அதே போல மயில் சாமி ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் குலுங்க, குலுங்க சிரிக்க வைக்கிறார். (படம் முழுவதும் காமெடி என்பதால் ப்ளோவில் மறந்துவிட்டேன். நன்றி மதுரமல்லி) தமன்னா சினிமா வழக்கப்படி லூசுப் பெண்ணாய் வருகிறார். சடுதியில் காதல் வயப்படுகிறார். இரண்டு மூன்று பாடல்களை பாடுகிறார். க்ளைமாக்ஸில் அறுந்துவிழுகிற அரத பழசான பாலத்தில் தொங்கி ஊசாலாடுகிறார். அவ்வப்போது தன் தக்குணூண்டு இடுப்பை காட்டி கிள்ளச் சொல்கிறார். இந்த இடுப்பை பார்த்து கிரங்குகிறவர்கள் எல்லா தெலுங்கு அனுஷ்கா காட்டும் இடுப்பை பார்த்தால் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை.
கொஞ்சமும் சூடு குறையாத டெம்ப்ளேட், விறுவிறு திரைக்கதையோடு சரியாக ப்ரெசெண்ட் செய்திருக்கிறார் இயக்குனர் சிவா. வேல்ராஜின் ஒளிப்பதிவுவும், எடிட்டிங்கும் நன்றாக இருக்கிறது.
கடந்த ஒரு வாரமாய் ஏகப்பட்ட கால்கள். வழக்கமாய் ஒரு 30-50 போன்கால்கள் வரும். பிஸியான நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூட கூடும். ஆனால் என்னுடய இன்னொரு எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்ததேயில்லை. மிகவும் சில நபர்களுக்கே அந்த நம்பர் தெரியும். கடந்த ஒரு வாரமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள். மிஸ்ட் கால்கள். வாட்ஸப்பில் “கந்தி” மெசேஜுகள் என குவிய ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம்? நம்ம காயாடு லோஹர் தான். எனக்கும் அவருக்கும் ஸ்நானப் ப்ராப்தி இது வரை கிடையாது. எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது என்றாலும் வருகிற போன் கால்களில் எல்லாரும் கூப்பிடுவது பெரும்பாலும் வடக்கன்கள் “கயாடு லோஹர்?” என்று கேட்க, நான் என் கந்தர்வக்குரலில் ‘ஹலோ” என்றதும், டக்கென கட் செய்து விடுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். வெறும் “ஹலோ” மட்டுமே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பார்கள். நானும் பொழுது போகாத நேரங்களில் “மெளனமான நேரம்” விளையாட ஆரம்பித்துவிட்டேன். சமயங்களில் கயாடு லோஹர் குரலில் “ஹலோ” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, செம்ம சுவாரஸ்யமாய் சமயங்கள் போகும். அலோ மேட்டர் எல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமாய் கயாட...
3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும் மணி வடைகடையில் வடை எப்போதுமே சூடாய் போடப் போட காலியாகிக் கொண்டேயிருக்கும். நானும் எனது நண்பர்களும் எப்போதும் அங்கே மாலை வேளையில் வடை சாப்பிட போய்விடுவோம். அப்படியான ஒரு மாலை வேளையில் வடை சாப்பிட்டுவிட்டு கிளம்பிய போது இரண்டு சிறுவர்கள் அல்லது பையன்கள் என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட ஆவிச்சி ஸ்கூல் திருப்பத்திலிருந்து ஓடி வந்தார்கள். எங்களைப் பார்த்ததும் என்ன தோன்றியதோ இரண்டு பையன்களும் நின்றுவிட்டு, அதில் சிகப்பாய் சேட்டுப் பையன் போல இருந்தவன் “சார்.. இவருக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?” என்று பக்கத்திலிருந்த டிபிக்கல் பிகாரி லுக்கில் இருந்த பையனை காட்டி நல்ல தமிழில் பேச ஆரம்பித்தான். “என்ன தம்பி என்ன பிரச்சனை?” “சார். ஆவீச்சி பஸ் ஸ்டாண்டுல இறங்குனேன் அப்ப இவரை சுத்தி ரெண்டு மூணு அரவாணிங்க நின்னுட்டு இருந்தாங்க. பேசிட்டி இருக்கும் போதே அவரோட பர்ஸுலேர்ந்து பத்தாயிரம் ரூபா எடுத்துட்டாங்க. நான் அதைப் பார்த்ததும் என்னான்னு கேக்கப் போனப்ப என்னோட செல்ல புடுங்க வந்தாங்க. இவரோட செல்லையும் புடுங்க பின்னாடி துறத்துனாங்க. அதான் ஓடி...
ஒவ்வொரு முறை அவரின் ஊரூக்கு செல்லும் போது அவரை சந்திக்க வேண்டுமென்று தோன்றிக் கொண்டேயிருக்கும். அவரின் குரலும் என் குரலும் இருவருக்கும் பரிச்சயம். நேரில் பார்த்திருக்கிறோமா? இல்லையா? என்றே நியாபகத்தில் இல்லை. என் நியாபகத்தில் இதுவரை நான் அவரை பெயர் சொல்லி அழைத்ததாய் நினைவில்லை. அவருக்கு என் பெயர் தெரியும். கேபிள் சங்கர் என்றோ அல்லது சங்கர் என்றோ சொன்னால் போதும். நானும்வ் அவரும் ஒரே தொழிலில் இருப்பது எங்கள் பேச்சுக்கு காரணம். அதைத்தாண்டி நாங்கள் இதுவரை பேசியதாய் கூட நினைவில்லை. இந்த முறை அவரது ஊருக்கு போன பின் உடனடியாய் அவரை அழைத்து பேச வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். காரணம் எத்தனை நாள் தான் தயக்கம் கொண்டு அவரை சந்திக்காமல் இருப்பது?. தயக்கத்திற்கு காரணம் மெய்யழகன் பிரச்சனை தான். என் மொபைலில் அவரது பெயரில்லாமல் சேவ் செய்திருந்ததும் ஒரு காரணம். ஒவ்வொரு முறை அவர் வாத்சல்யமாய் போனில் பேசும் போதும் சாரி உங்க பேர் மறந்துட்டேன் அப்படி என்று கேட்க அவமானமாய் இருந்தது. உடனே மெய்யழகனுக்கு சொன்னது போல பெயர் கண்டுபிடிக்கிறது எல்லாம் பெரிய விஷயமா? எத்தனையோ டெக்னாலஜி இருக்கு? என...
Comments
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
This happened to me in the theatre..! The comedy with Mayilsamy was the highlight of all...!
சின்னப்பசங்க :-))
அனுஷ்காவுக்காக விக்ரமார்குடு பார்க்கப் போறேன் :-)
ATTN: JACKIE SEKAR
ஜி.. எப்பவாச்சும் நம்ம கடை பக்கம் வந்திருக்கிங்களா?
////
இதையும் பாருங்க .....
http://www.youtube.com/watch?v=qD9ArbLgkUQ
இன்னுமா பாக்கலை மதி?
@டாக்டர்.ஏ
ஆமாம்
@மதுர மல்லி
சேத்திட்டேன்
@கே.வி.ஆர்
அதைச்செய்யுங்க முதல்ல
2காவேரி கணேஷ்
நல்லா போடராய்ங்கய்யா முடிச்ச..
2ஹரீஷ் குமார்
போட்டுரலாம்
@நடராஜ்
ஹா..ஹா..
@சிவகுமார்
என்ன சரி..:))
@சக்தி ஸ்டடி செண்டர்
ஒரு வாட்டி வந்திருக்கேன்னு நினைக்கிறேன்..
@பன்பட்டர்ஜாம்
ஆமா பாருங்க..
@சான்
போட்டுட்டா போச்சு
2