நான்.. ஷர்மி.. வைரம்-2

Sexy_girl_by_Brassman07 உடலில் ஒரு பொட்டுத்துணிகூட இல்லாமல், பத்து பெண்கள், மூன்று ஆண்களின் மேல் உழன்று கொண்டிருக்க, ஒரே ஆணின் குறியை மூன்று பெண்கள முற்றுகையிடும் நிகழ்வை பார்த்துவிட்டும் கலாச்சாரம் பற்றி பேசுபவர்களா நீங்கள்?. அப்படியானால் நீங்கள் ஒரு ஹிப்போக்ரேட். நிஜத்தை உள் வைத்துக் கொண்டு, வெளியில் நடிப்பவர். ஆரம்ப நாட்களில் இதில் எனக்கிருந்த பங்கேற்க்கும் ஆர்வம், இப்போது இருப்பதில்லை. பார்க்கத்தான் பிடிக்கிறது. இதற்கு ஏதோ பெயர் சொல்வார்களே.. ஆ.. வாயரிஸம்.
பெரும்பாலான நாட்களில் நான் வெறும் பாகார்டியோ, வோட்காவையோ கையில் வைத்துக் கொண்டு, இங்கே நடக்கும் உடல்களின் உராய்வுகளினால் ஏற்படும் சூட்டை ரசித்துக் கொண்டிருப்பேன். அத்துனைப் பேரின் இழையும் மூச்சும், விதவிதமான முக்கல் முனகல்களும், “கம்மான்..கம்மான்.. கிவ் மி மோர்” “பஃக் மி” “அவளையே ஏன் எல்லோரும்..” போன்ற கத்தல்களையும் கேட்டுக் கொண்டேயிருப்பது ஒருவிதமான உடலுறவு தான். ஒவ்வொருத்தியும் லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள். சில பேர்களுக்கு அவர்களுடய சொத்தே பல கோடிகள்..

வந்திருந்த மூன்று ”ஸ்டப்பு”களும் இரவு முழுவதும் மாற்றி, மாற்றி இயந்திரமாய் இயங்கி, துவண்டு, இயங்கித் துவண்டு, மீண்டும் இயங்கத்தூண்டும் பெண்கள் தன் மீது புரள்வதைக்கூட உணராமால் போதையிலும், சோர்விலும் இருந்தார்கள்.. வெளியிலிருந்து கேட்பவர்களுக்கு கிளர்ச்சியாகவும் ஜாலியாகவும் இருக்கும். ஒரே நேரத்தில் பத்து பேர் என்பதெல்லாம் சொப்ன ஸ்கலிதத்திற்கும், சும்மா அலட்டிக் கொள்ள வேண்டுமானால் வேலைக்காகும். ஆனால் மிகக் கடுமையான வேலை. செக்ஸ் என்பது உணர்வோடு இல்லாமல் வேலையாய் போய்விட்டால், அதுவும் அதை தீர்மானிக்கும் இடத்தில் பெண்களாய் இருந்துவிட்டால்.. ஆணின் ஈகோ தூள் தூளாகிவிடும். ஈ.சி.ஆரில் நடந்த அந்த ப்ரைவேட் பார்ட்டியில் தான் அஜய்யை முதலில் பார்த்தேன்.

அதோ அங்கே கழுத்தில் ஒரு பட்டையை மட்டும்  கட்டிக் கொண்டு ஒருவனின் முகம் மீது உட்கார்ந்திருக்கிறாளே.. ஷோபனா.. அவளால் தான் இந்தத் க்ரூப் எனக்கு அறிமுகம். ஆனால் இதற்கெல்லாம் முன்பே எனக்கு செக்ஸ் என்பது அத்துப்படி. என்னை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சின்னச் சின்ன விளம்பரப்படங்களில், பெரிய பார்ட்டிகளின் வரவேற்ப்புகளின் வாசலில் கலாச்சார உடைகளோடு, அகலமாய் சிரித்து வரவேற்றிருப்பேன். நீங்கள் என்னை கவனிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

“எவ்வளவு நீளமான காலு ஷர்மி உனக்கு..?”

”அதெப்படி இப்படி சரியா உள்ளங்கையில அடங்கியும் அடங்காம ஸ்டிப்பா ஒரு சைஸு.. பார்த்துட்டேயிருக்கலாம் போலருக்கு”

“ஒரு சமயத்தில அசின் போலருக்கே ஷர்மி’

”இப்பக்கூட உன் கண்ணை என்னால நேரப் பாக்க முடியலை”

“இடுப்பா இது.. அதெப்படி இப்படி ஒரு வளைவோட?. அப்படியே கொஞ்சம் குனி”

“ஐ யுட் லைக் டு ஈட் யுர் புஸ்ஸி ஷர்மி.”

ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் டைம் ஷேர், பைனான்ஸ், தேக்கு மரம், கொரியர், ரியல் எஸ்டேட் என்று கை வைக்காத பிசினெஸ்ஸே இல்லை என்றிருந்த அந்தக் கம்பெனியின் எம்.டியை நிறைய முறை டிவியில் பார்த்திருப்பீர்கள். அவர்களின் ஒற்றை மகள் நான். இதற்கு முன்னாள் அப்பா ஒரு சாதாரண சினிமா பி.ஆர்.ஓ. குரூப் டான்ஸர் அந்திர அம்மா.

”ஷர்மி பொறந்துதான் எனக்கு எல்லாமே”

“நம்பாதே ஷர்மி..இப்படித்தான் என்னை கல்யாணம் செஞ்சிட்டப் போது சொன்னார்.. அப்ப..நான்..இப்ப நீ”

எனக்காக முன்பக்கம் சீட் வைக்கப்பட்ட டிவிஎஸ்50யில், என்னையும், அம்மாவையும் வைத்துக் கொண்டு, ராத்திரியில் பீச் ரோட்டில் அப்பா வேகமாய் வண்டியை ஓட்டும் போது, சில்லென வரும் எதிர்காற்று முகத்தில் அறைய.. இன்னும் ஸ்பீடா போ..இன்னும் ஸ்பீடா போ என்று கத்தியபடி வந்தவளுக்கு அடுத்த சில வருடங்களில் அதே சில்லென்ற முகத்திலறையும் காற்று, காரின் ஏசி காற்றாய் மாறியதன் ரகசியம் தெரியவில்லை. ஆனால் டிவிஎஸ்ஸில் கூட வந்த அம்மாவும், அப்பாவும் இல்லை. கார் ஏஸி சந்தோஷமாய்த்தானிருந்தது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

Unknown said…
இவ்வளவு நுணுக்கமாய் தகவல்களை என்கிருந்து பிடிக்கிறீர்கள் தலைவரே...
really getting interesting... nice narration... keep it up.. :)
vinthaimanithan said…
கிகிலோவை மையமாக வைத்து தமிழில் வரும் முதல் நாவல் என்று நினைக்கிறேன்.சதாப்தி ஸ்பீட்! கலக்குங்க தலைவரே!
கலக்குங்க தலைவரே!
உமது புலமையை நினைத்தால் புல்லரிக்கிறது அய்யா
முதல் பத்தியிலேயே , என்னை குற்றம் சொல்லும் நீ ஹிபோகிரேட் என்று சொல்லிவிட்டால் , நாங்கள் அமைதியாக இருந்துவிடுவோமா , நீர் ஆங்கிலத்தில் எழுதியதை அப்படியே தமிழாக்கம் செய்தால் எந்த மானமுள்ள பெண்ணாவது ( உங்கள் வழி தான் ) இதை படிப்பாளா , இதை கலாச்சார சீரழிவு என்று சொல்லாமல் ,நீர் கலாச்சாரத்தை வளர்க்கிறீர் என்று கூறுவதோ ? இந்த சில்லறை விஷயங்கள் தெரியாத எழுபது சதவீதம் பேருக்கு விளக்கு பிடித்து காட்டி வர வேற்கும் உம்மை வாழ்த்துகிறேன் .வாழ்க உமது கலாச்சார சேவை ,

அய்யா ,இதை தலை கவிழ்த்து பாராட்டும் இலக்கிய வாதிகளே ,உங்கள் விட்டு பெண்டிரை அருகில் உட்கார வைத்து , இதை படித்து விட்டுத் தான் நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்பதால் உங்கள் கலாச்சார சேவையும் , ஊக்குவிப்பையும் பாராட்டு கிறேன்
IlayaDhasan said…
insider stories?

http://unmaikaga.blogspot.com/
krish said…
ஐயோ இந்த கலாசார காவலர்கள் தொல்லை தாங்க முடியலப்பா. யாராவது மருந்தடிச்சு கொல்லுங்கப்பா.
sugi said…
Like it:)
jayaramprakash said…
அடுத்த சுஜாதா?
Anonymous said…
வாழ்த்துக்கள் ஜி.
@நர்மதன்
ந்ன்றி

@கே.ஆர்.பி.செந்தில்
ஹி..ஹி..

@மொஹமத் அராபத்
நன்றி

@விந்தைமனிதன்
அப்படியா..?

2திருமலை கநதசாமி
நன்றி

@சே.குமார்
நன்றி
அர.பார்த்தசாரதி

பார்த்தசாரதி, ஹிப்போக்ரேட் என்று நான் உங்களை எங்கே சொன்னேன். ஷர்மி இந்த சமுதாயத்தை பார்த்து சொல்வது.:)

எத்தனை சதவிகிதம் இருந்தால் என்ன? எழுபது சதவிகிதம் பேருக்கு தெரியாதது.. தெரிய வேண்டும் அல்லவா?
:)

அப்புறம் ஏன் வீட்டுப் பெண்டிரை அருகில் வைத்து படிக்க வேண்டும். ஏன் படிக்க கூடாது? குடும்பத்தோடு படிக்க நான் என்ன பல்சுவை பத்திரிக்கையா? ஹி..ஹி.
இளையதாசன்
அப்படியும் இருக்கலாம் தலைவரே
@கிருஷ்
விடுங்க பாஸு.. அவங்களும் எங்கத்தான் அவங்க கருத்துகளை சொல்லுவாங்க..
:)

@சுகுணா
நைஸ்..
Suthershan said…
அடுத்த சுஜாதா, சுபா, ராஜேஷ்குமார் ன்னு எல்லாம் தெரியலை.. உங்க தனி தன்மை சூப்பராக இருக்கு.. விறுவிறுப்பாக இருக்கு.. சூப்பர்..
@கிருஷ்:
தமிழ் டர்டி ஸ்டோரீஸ் , காமலோகம் , மஜா மல்லிகா இந்த தளங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்

@சங்கர்
உங்கள நெறைய பேர் படிக்கிறாங்க , தினமும் விசிட் பண்ற பிளாக் உங்களோடது , நல்ல நடையோட,யாரோட சாயலுமில்லாம இருக்கிற இந்த கதைல “ஐ யுட் லைக் டு ஈட் யுர் புஸ்ஸி ஷர்மி.” இந்த வரி ராவா இருக்கு தலைவரே .
சங்க காலத்திலிருந்து நம்ம இலக்கியங்களில் வராத வரிகளா , காமமா , இன்னைக்கு நம்ம இளசுங்க படிக்கிற சிட்னி ஷெல்டன் , ஜெப்ரி , பிரான் புத்தகங்களில் இதை விட அதிகமாகவே சொல்லப் பட்டிருக்கு ,சுஜாதா விலிருந்து , ஜெயமோகன் வரை எல்லோருமே இதை ஒரு குதிரைய ஓட்டுற நளினத்தோட கையாண்டு இருப்பாங்க , சட் டுன்னு ஒரு வரி (சாரு எழுதுற மாறி )மூஞ்சில அடிக்கிரமாறி வந்தது எனக்கு பிடிக்கல
very good !!
keep it coming !!
vinthaimanithan said…
This comment has been removed by the author.
பார்த்தசாரதி.. இது ஒரு ராவான கதைக் களன். இதில் இதையே நீங்கள் முகத்தில் அடித்தது போல இருந்தது என்றீர்களானால்.. அடுத்து வரும் எபிசோடுகளில் எங்கு அடிக்கும் என்று சொல்வீர்கள் என்று தெரியவில்லையே
raghul said…
கதை சூடு பிடிக்கிறது .
// பார்த்தசாரதி.. இது ஒரு ராவான கதைக் களன். இதில் இதையே நீங்கள் முகத்தில் அடித்தது போல இருந்தது என்றீர்களானால்.. அடுத்து வரும் எபிசோடுகளில் எங்கு அடிக்கும் என்று சொல்வீர்கள் என்று தெரியவில்லையே//

சபாஸ்.சரியான பதில்.
krish said…
மிஸ்டர் பார்த்தசாரதி. கலாசாரம் என்பது ஒரு set of people வாழும் முறை. கலாசாரம் மாறுமே தவிர என்றுமே கெட முடியாது. சங்கர் சொல்வது ராவான நமக்கு ஒத்து வராத கலாசாரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்புறம் இந்த பெண்பிள்ளைகளை பக்கத்தில் வைத்து கொண்டு என்பது போன்ற மொக்கை வசனங்களை தவிருங்கள். வேற ஏதாவது புதுசா யோசியுங்க. அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கிட்டு போனவன் கதை, கட்டுன பொண்டாட்டிய சந்தேகப்படுவது ( ராமாயணம் ). ஒருத்திக்கு அஞ்சு புருஷன், பாக்குற பெண்ணை மணப்பது ( மகாபாரதம், திரௌபதி, கிருஷ்ணன் ). இதை எல்லாம் கண்டு கேட்டும்தான் நாமெல்லாம் வளர்ந்து இருக்கோம். சும்மா காமெடி பண்ணாதீங்க சார். செந்தமிழ்ல சொன்னாலும், ராவா சொன்னாலும் எல்லாம் ஒண்ணு தான்.
அருண் said…
கதைக்களன் புதுசா இருக்கு தலைவா,பட்டய கிளப்புங்க...
-அருண்-

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.