காந்தி பைசெக்ஸுவலா?
25லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவளித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி...நன்றி..நன்றி
இந்த புத்தகம் இது வரையில் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்து உருவான விவாதங்களினால் சூடு ஏறி, விஷயம் இந்திய அரசின் காதுகளுக்கு எட்டி, இன்று குஜராத்திலும், மஹாராஷ்ட்ராவிலும் இப்பதகத்தை தடை செய்திருக்கிறார்கள்.
புத்தகத்தில் காந்தியை ஒரு நிறவெறியர் என்றும் பைசெக்ஸுவல் என்று சொல்லியிருக்கிறாராம். அதாவது காந்திக்கும் ஜூயிஷ் உடற்பயிற்சியாளர் Herman Kallenbach என்பவருக்கும் இடையே செக்ஷுவல் தொடர்பு இருந்ததாக சொல்லப் பட்டிருக்கிறது.
ஊரில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஆளாளுக்கு திடீரென காந்தி பாசம் ஏறி அறிக்கை விட ஆரம்பித்திருக்கிற நேரத்தில், காந்தியின் பேரனான துஷார் காந்தி இந்த தடையுத்தரவை வன்மையாக கண்டித்திருக்கிறார். தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சாப்பாட்டுக்கடை -கல்யாண பவன் பிரியாணி
Comments
கடைசிவரை தனிமனித வாழ்வில் யோக்கியமாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்த ஒரு தலைவனை இழிவு படுத்தும் ஒருவனுக்கு நீங்கள் விளம்பரம் கொடுப்பதன் அரசியல் எனக்குப் புரியவில்லை :(
காந்தியை அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்காக இறுதிவரை எதிர்த்துவந்த ஈரோட்டுக்கிழவன் தந்தை பெரியார்கூட காந்தி இறந்தபோது "இந்த தேசத்துக்கு காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும்" எனக்கூறும் அளவுக்கு காந்தி என்கிற மனிதனின் தனிமனித வாழ்க்கை இருந்துவந்தது.
இனி சீப் பப்ளிசிட்டிக்காக எவன் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தலாம். தடையில்லை :(((
மகாத்மா சத்திய சோதனையில் தன் அத்தனை விசயங்களையும் நேர்மையாக ஒத்துக்கொண்டிருக்கிறார்...
இது உண்மையாக இருப்பின் அதனையும் ஒத்துகொள்ளும் நேர்மை அவரிடம் இருந்தது..
சற்றுச் சிந்தியுங்கள்: ஒரு திருநங்கையை இழிந்தவராகக் கருத என்ன இருக்கிறது? காந்தி, பை-ஸெக்சுவல் என்ன, ஏ-ஸெக்ஸுவலாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே - அதனால் அவருக்கு இழிவு என்ன? இந்த உடல் அரசியல் ஓர் மனிதனின் செயல் உன்னதத்தை எப்படிக் கலங்கப் படுத்தக் கூடும்?
நம் மண்டக்குள் இப்படி அவியாத அறநெறிகள் இருப்பதால் இழிபட்டுக் கிடக்கிறோமே அன்றி மேற்கத்தியன் கூற்றுகளால் அல்ல.
திராவிட இயக்கங்களின் மயக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் காந்திய சிந்தனையாளர்கள்
கேவலப்படுத்தப்படுவது வெகு சாதாரணமே. ‘தியாகி’ என்ற சொல்லை ஒரு கேலிக்குரிய
விசயமாக பேசுவது திராவிட இயக்கத்தவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் கூட என்னுடைய தாத்தாவைப் பற்றிப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் தலைவர்கள் டால்மியாபுரத்தை, கல்லக்குடியாக மாற்ற போராட்டம் நடத்தியதுதான் தியாகம். இந்திமொழியை எதிர்த்து நடத்தியதுதான் போராட்டம். இன்று அவர்கள் எங்கு சென்று குலாவுகிறார்கள் என்று கேபிள் சங்கர் போன்றவர்களுக்குத் தெரியாது!
அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமல்ல, தெரிந்தவரையில் கூட கேள்வி கேட்பதென்பது இவர்களால் இயலாத ஒன்று
ஆனால் திருப்பி அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் சொம்பு எடுத்துக்கொண்டு ஓடி வருவார்கள்
எவன் ஒருவன் ஆயுதம் இல்லாமலிருக்கிறானோ அவனை தைரியமாய் அடி என்பது இன்றைக்கு திராவிடம் கற்றுக்கொடுத்த வீரம்
நீங்கள் இதனை இப்படியொரு கேள்வியுடன் ஒரு பதிவாக வெளியிட்டிருப்பதும்தான்.
இது ஏனோ இந்தியர்களுக்கு மட்டும் புரிவதே இல்லை.