Dongalamutha- கேனான் 5டி கேமராவும், எட்டு நடிகர்களும், ராம்கோபால் வர்மாவும்
கேனான் 5டி கேமரா ஐந்து, ரவிதேஜா, ஷர்மி, பிரகாஷ்ராஜ், ப்ரம்மானந்தம், சுனில், மற்றும் சில நடிகர்கள் அனைவருக்கும் சம்பளம் கிடையாது. படத்தின் அவர்களும் ஒரு அங்கம். மொத்தம் ஐந்தே ஐந்து நாள் தான் படப்பிடிப்பு, ஒரே லொக்கேஷன், லொக்கேஷனில் கிடைக்கும் வெளிச்சத்தை வைத்தே முழு படப்பிடிப்பு என்று வெறும் ஆறு லட்சத்தில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார். இவ்வளவு நடிகர்களையும், டெக்னிக்கலாக ஒரு சிறந்த குழுவை அமைத்து, வெற்றிகரமாக குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள், நாட்களுக்குள் முடிக்க அருமையான முன்னேற்பாட்டை செய்த ராம்கோபால் வர்மா. கொஞ்சமே கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் ஒரு கல்ட் வெற்றிப் படமாய் அமைந்திருக்கும்.
ரவிதேஜாவும், ஷர்மியும் காரில் வெளியூருக்கு போய்க் கொண்டிருக்க, வழியில் வண்டி ரிப்பேராகி விடுகிறது. அருகில் இருக்கும் ஒரு டொக்கு ரிஸாட்டில் தங்கி காரை சரி செய்து கொண்டு போகலாம் என்று ரூமெடுக்கிறார்கள். அந்த அடாசு ரிஸாட் ஒரு பாழடைந்த மாளிகையைப் போல இருக்க, இவர்கள் தங்கும் அறைக்கு அடுத்துள்ள அறையில் பேய் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் தான் படம்.
கேமராமேனே கிடையாது. EFXகுழுவினரை வைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கேனான் 5டியின் அத்துனை சாதுர்யங்களையும் உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் இயக்குனரின் இதற்கு முந்தைய படங்களிலேயே இந்த கேமராவில் வைக்கப்பட்டிருக்கும் ஆங்கிள்களை விட வித்யாசமான ஆங்கிள்களை சினிமா கேமராவிலேயே வைத்திருப்பார்.நிச்சயம் ஒரு திரைப்படத்துக்கான எல்லா விஷயங்களையும் இதில் செய்ய முடியுமென்று நிருபித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு முன்பே நம் தமிழ் பட உலகத்தினர் சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி என்கிற படத்தில் மிரட்டியிருப்பார்கள்.
Dongalu Mutha- Only For R.G.V
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
http://www.imdb.com/title/tt0309698/
இங்கே உள்ள செய்தித் தாள்களில் படம் சுத்த வேஸ்ட்னு விமர்சனம் எழுதுறாங்க. அப்பள்ராஜூ படத்து மேல உள்ள டோலிவுட்டின் கோபத்தை இந்தப் படத்து மேல காட்டி தீத்துக்குறாங்களோன்னு தோணுது.
இன்னொரு விஷயம், பாட்டே இல்லாத படத்துல கணிசம் காமெடியாவது இருந்தாத் தான் கொஞ்சமாவது ரசிக்க முடியும். ஒரே டயலாகை எல்லா கேரக்டரும் சொன்னது தவிர்த்து எதுவுமே வலிந்து திணித்ததாகத் தோண்றவில்லை.
ஒரு சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம். கேமெரா சார்மியின் இடுப்பையே காட்டிக் கொண்டிருந்தது, ரவி தேஜா ஒரே பாதையில் நடந்து போவதை அடிக்கடி காட்டியது, ப்ரம்மாஜியின் பாடி லேங்குவேஜ், போன்றவற்றைச் சொல்லலாம்.
சரியாகத் தொன்னூறு நிமிடத்துக்கு ஒரு படம் வருவது என்பது தியேட்டர் காரர்களுக்கும் நல்ல விஷயம் தான். ஒன்றிரண்டு ஷோ எக்ஸ்ட்ராவாகக் காட்டலாம். கடந்த ஞாயிறு மதியம் படம் பார்த்தேன். 350 சீட்டுகளுள்ள அரங்கில் 150+ சீட்டுகள் நிரம்பியிருந்தன. வார இறுதியே இப்படி என்றால் வார நாட்களில் இன்னும் குறைவாகத் தான் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் 25000 பேர் இந்தப் படத்தைப் பார்த்தாலே படத்தின் மொத்த செலவையும் எடுத்துவிடலாம்.
டெக்னிக்கல் விஷயங்களில் அதிகம் அக்கறை செலுத்தாத என்னைப் போன்றவர்களுக்குப் இந்தப் படம் நல்ல பொழுது போக்கு தான். வேணும்னா இதை “காமெடி த்ரில்லர்” அல்லது “திரில்லர் காமெடி” என்று வகைப்படுத்தலாம். :)
ஒரு அரசியல்வாதி உருவான கதை
கே.ஆர்.பியாரே
நம்மால் நிச்சயம் முடியும் :)
கவுண்டமணியின் சில மணியோசைகள்
சார்மியின் “நடிப்பை” பற்றி “ஸ்பெஷலா” சொல்றதுக்கு ஒண்ணும் இல்லையோ...
இப்போ எல்லாம் அக்கட பூமியில சார்மிய போட்டு உரிச்சு எடுக்கறாய்ங்களாமே .. அதான் கேட்டேன்....
எனக்கு ராம்கோபால் வர்மாவின் முந்தைய படமான அப்பளராஜுவைப் பற்றிய அங்குள்ள நடிகர் நடிகைகளின் கருத்துப் பற்றி ஆச்சர்யமாக இருக்கிறது. இதை விட கிண்டலடித்து படமெடுத்திருக்கிறார்கள். சாதாரணமாக நம்மூரில் தான் அவ்வளவாக சகிப்புத்தன்மை இருக்காது.
நீங்க சொன்னது போல காமெடி த்ரில்லரா.. அல்லது த்ரில்லர் காமெடியா என்று கொஞ்சம் குழப்பமாய்த்தான் உள்ளது.
பண்ணியிருக்கலாம்தான் யார் வேணாம்னு சொன்னாங்க.. ம்ஹும்.