Posts

Showing posts from June, 2011

பதிவாயிரம் -1000

பாண்ட் டவுன்லோட் இல்லாமல் தமிழில் இணையதளம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி இணையத்தை தேடிய போது அகப்பட்டதுதான் வலைப்பூ உலகம். அப்படி முதல் முதலாய் படித்தது அந்நாளைய இணைய உலக பிரபலமான லக்கிலுக்கின் பதிவுதான். அவர் சைக்கிள் கற்றுக் கொண்டதை பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு அவரின் மின்னஞசலுக்கு எழுதினேன். அப்போது தோன்றிய விஷயம்தான் வலைப்பூ ஆரம்பிப்பது என்று. ஆனால் அதற்குள் தமிழில் நாடகம்.காம் என்கிற பெயரில் இணையதளத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு டிசைனிங்கில் உதவியவர் இன்றைய பிரபல பதிவர் ஹாலிவுட் பாலா. அப்போது வெறும் பாலாதான். அவர் பாதி டிசைனிங்கிலிருந்த போது எஸ்கேப்பாகிவிட,(அப்போது காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்ததும் இந்த இணையம்தான்)  ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி நானே டிசைனிங்கை முடித்து ஒரு ஆறு மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். அது ஏன் என்பது தனிக் கதை.

ரிலீஸுக்கு முன் – அரும்பு மீசை குறும்பு பார்வை.

Image
  ”அரும்பு மீசை குறும்பு பார்வை”. தயாரிப்பாளர் முதற் கொண்டு இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் நடிக, நடிகைகள் அனைவருமே புதிய்வர்கள் தாம். ஏற்கனவே சென்னை முழுவதும் வித்யாசமான விளம்பர யுக்தியால் மக்களை பேச வைத்தவர்கள். இப்போது வருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் உங்களின் அபிமான திரையரங்குகளில் வெளிவருகிறார்கள். பிரத்யோக காட்சி பார்வையிட்டவர்கள் படத்தை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் குறிப்பாக ஒருவரை பாராட்டுகிறார்கள். அது வேறு யாரையும் இல்லை. படத்தில் வார்டன் கேரக்டரில் முதல் முதலாக அறிமுகமாகியிருக்கும் திரு. மோகன் பாலுவைத்தான். ஐம்பது வயதான இவருக்கு இதுதான் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமவில் ஒரு இடமுண்டு என்றும் சொல்கிறார்கள். வாழ்த்துக்கள்  எஸ்.கே

கொத்து பரோட்டா-27/06/11

Image
டீசல், கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றி விட்டது மத்திய அரசு. அந்த அறிவிப்பு எப்போது வந்ததோ அப்போதிலிருந்து, திமுக தலைவர் வரியை குறையுங்கள், இந்த வரியை குறையுங்கள், நான் என் ஆட்சியில் அப்படித்தான் செய்தேன். என்று அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வது சரிதான் என்றாலும், அய்யா போட்ட எந்த சட்டத்தையும், அய்யா ஆட்சியில் செய்த எதையும் தான் செய்வதில்லை என்ற முடிவில் இருக்கும் அம்மா இதைக் கேட்பார்களா?. தலைவர் தெரிஞ்சுதான் சொல்றாரோ..? ################################################## இனி தமிழ் சினிமாவின் பெயர்கள் ஆங்கிலத்தில் வர ஆரம்பிக்கலாம். ஏனென்றால் தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற சட்டத்தை அமல் படுத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் கமிட்டி சமீப காலமாய் கூடுவதேயில்லை. அதனால் வரி விலக்கு லெட்டர் இல்லாத தமிழ் படங்களுக்கு, வரி வசூலித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். இனி தமிழிலேயே அர்த்தம் சொல்லி புரிய வைக்கக்கூடிய பெயர்கள் இல்லாமல் தமிழ் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். வாழ்க மம்மி. ############################# பிரபல எழுத்தாள...

180 -நூற்றென்பது

Image
விளம்பர உலகில் பிரபலமான ஜெயேந்திரா இயக்கியுள்ள முதல் படம். அருமையான பாடல்களும், ட்ரைலர்களும் கிளப்ப வேண்டிய ஆர்வத்தை சினிமா ஆர்வலர்களிடம் ஏற்றிவிட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இலலையா? என்று பார்ப்போம்.

கள்ளக்காதல்.

ஒவ்வொரு நாளும் தமிழ் தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்த்தால் வயிறு கலங்கித்தான் போகிறது. முக்கியமாய் கொலைகள் பற்றிய செய்திகளை படித்தால் இன்னும் கலங்கித்தான் போகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளக் காதல். ஏதோ நாடு முழுக்கவும் கள்ளக் காதல் ப்ரச்சனைதான் முதலில் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதிலும் தமிழ் தினசரிகளில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள் என்றால் உடனே கள்ளக்காதல் ப்ரச்சனையாக இருக்குமோ என்று ஒரு கேள்வி எழுப்பிவிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் ஒரு மேற்கு மாம்பலத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். போலீஸார் பல விதங்களில் துருவித் துருவி விசாரணை செய்தும் கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினத்தந்தியோ.. கொலை நடந்த நாள் முதல் கள்ளக்காதல் ப்ரச்சனை, போனில் பேசினார்கள். தொடர்ந்து தொடர்பிலிருந்தார்கள். என்று மக்களுக்கு பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாட்டுக்கடை- திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்

Image
பிரியாணி பிரியர்களுக்கு,மொஹல் பிரியாணி, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, தம் பிரியாணி என்று  பலவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும், சமீப காலமாய் சென்னையில் சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட தலப்பாக்கட்டு பிரியாணி பிரபலமாகிக் கொண்டிருப்பது தெரிந்திருக்கும். தலைப்பாக்கட்டு பிரியாணியை போலவே ஏன் அதைவிட கொஞ்சம் நன்றாகவே இருக்கும் பிரியாணி சென்னையில் கிடைக்கிறது. அது நார்த் உஸ்மான் ரோடில் உள்ள திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்ல் தான்.

வேங்கையிலிருந்து சன் விலகியதா?

வருகிற ஏழாம் தேதி தனுஷ் நடித்து, ஹரி இயக்கத்தில் வெளிவர இருந்த வேங்கை திரைப்பட வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, வெளியிடப்படப் போவதாய் விளம்பரம் வந்தது. ஆனால் கடந்த ரெண்டு நாட்களாய் சன் பிக்சர்ஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றார் போல பதினைந்து நாளுக்கு முன்பே தொடர் விளம்பரங்களை ஆரம்பித்துவிடும் சன் டிவி. இன்னும் விளம்பரங்களை ஆரம்பிக்காத போது செய்தி உண்மையோ என்றும் தோன்றுகிறது. எஸ்.கே

தமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா?- சினிமா வியாபாரம்.

தமிழ் சினிமா செத்துக் கொண்டிருக்கிறது என்று சினிமாவில் உள்ள பல பெரிய தலைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான புலம்பல்கள் ஒவ்வொரு ஆட்சியின் ஆரம்பத்திலும் எழுவதுதான் என்றாலும் இம்முறை கொஞ்சம் கூக்குரல் அதிகமாகவே இருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர், தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கே.ஆர், கே.ஆர்.ஜி, தனஞ்செயன், ஆர்.கே.செல்வமணி,  ராஜேந்தர் ஆகியோர் பேசினார்கள். கே.ஆர். தமிழ் சினிமாவிற்கான வரி விலக்கு எடுக்கப்படக்கூடாது என்றும், இரண்டு க்ரவுண்டில் இருநூறு இருக்கைகள் கொண்ட திரையரங்கம் அமைப்பதற்கு சட்ட திட்டங்களை இலகுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். யுடிவி தனஞ்செயனோ.. சிறு முதலீட்டுப் படங்களை தயாரிப்பது ஒன்றும் பெரியதல்ல, ஆனால் அதை சந்தைப்படுத்துவதில் தான் சிக்கலே. குறைந்த பட்சம் ஒன்னரை கோடி விளம்பரம் மற்றும் மார்கெட்டிங்குக்கு இல்லாமல் படம் தயாரிக்கவே வரக்கூடாது என்றும் கூறினார். அவர் கூறியதும் முக்கியமான விஷயம்தான். டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியால் படம் தயாரிப்பது கூட சுலபம். ஆனால் அதை சந்தைப்படுத்துதல் அவ்வள...

நான்.. ஷர்மி.. வைரம்-4

Image
ஷர்மி காரும், ஏஸியும் பழகிப் போய் தனிமை உறைக்க ஆரம்பித்து, கார் ஜன்னல் திறந்து வெற்றுப் பார்வையாய் நிலைத்தது ஏன் என்று புரியாமல் போனது. அப்பா என்னிடமிருந்து தூரமாய் போய்க் கொண்டேயிருந்தார். டிவிஎஸ் 50யில் ராத்திரி எனக்காக சீக்கிரம் வந்து வண்டியோட்டும் அப்பாவை காணமுடிவதில்லை. அம்மாவும் பிஸியாக இருந்தாள். நிதம் ராத்திரி வாடையோடு தூக்கக் கலக்கத்தில் கிடைக்கும் இருவரது முத்தம் மட்டுமே நிரந்தரமாயிருந்த நேரத்தில், ஆயாவும், கார் டிரைவரும் துணையாகி போனது கொஞ்சம் கொடுமையாகவே இருந்தது.

கொத்து பரோட்டா-20/06/11

Image
நம் வாசகர்கள் மிக மென்மையானவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். என் கருத்து என்று ஒரு விஷயத்தை சொன்னால் உடனே உன்னால் செய்ய முடியுமா? என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு பாவமாகத்தான் உள்ளது. எல்லாவற்றையும் ஒருவர் விமர்சிக்க வேண்டுமென்றால் அதை அவர்கள் செய்து காட்டினால் தான் ஒத்துக் கொள்வேன் என்பது எவ்வளவு பெரிய  காமெடியான விஷயம் என்று கூட அவர்களுக்கு புரியவதில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தோஷம் இவ்வளவு பேரும் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று பார்க்க தினம் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதிலிருந்து ஒன்று தெரிகிறது. என் வேலையை நான் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று இதை உணர்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இன்னொருவர் அங்கேயே வெட்டுவோம் என்று பின்னூட்டம் போடுகிறார். தன் சொந்த பெயரையே போட தைரியமில்லாதவர். நடுவில் ஒருவர் யோவான் சொல்கிறார் என்கிற ரீதியில் கிறிஸ்துவ போதனைகளை வேறு விட்டுச் செல்கிறார். சில பேர் நீ என்ன அப்பா டக்கரா ? என்று கேட்பார்கள். அப்பா டக்கர் யார் என்று தெரியாமலேயே.. ############################

குறும்படம் - துரு

Image
நாளைய இயக்குனர் முதலாவது சீசனில் வெற்றிப் பெற்றவர்களுள் ஒருவரான கார்த்திக் சுப்பாராஜின் குறும்படம். இவரது கதைகளில் இருக்கும் இயல்பான நகைச்சுவையும், மேக்கிங்கும் எனக்கு மிகவும் பிடிக்கும். இக்கதையின் முடிவு இயல்புத்தன்மையை மீறிய கொஞ்சம் பேண்டஸியான ட்விஸ்ட் என்றாலும் நடக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கிற காரணத்தை ஒத்தி வைக்க முடியாது. அருமையான நடிப்பு, ஒளிப்பதிவு, இயக்கத்தில் வந்த படம். உங்கள் பார்வைக்கு. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

சாப்பாட்டுக்கடை - பூர்ணா உணவகம்.

Image
சில சாப்பாட்டுக்கடைகள் பெரியதாய் இருக்கும். ஏசி, சோபா செட்டுகள் என்று அட்டகாசமாய் தூள் பரத்தியிருப்பார்கள். ஆனால் உணவு வாயில் வைக்க வழங்காது. ஆனால் அதே சின்னக் கடையில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருக்கும். ஆனால் உணவின் சுவையோ அட்டகாசமாய் இருக்கும். அப்படியொரு உணவகம்தான் இந்த பூர்ணா உணவகம்.

அன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி

Image
நாம் தனி மனிதனாய் எதாவது ஒரு விஷயத்தை செய்தியாக்கவோ, அல்லது அதை பூதாகாரமாய் ஊதி ப்ரச்சனையாக்கவோ முடியுமா? நிச்சயம் முடியாது. இன்றைய கட்டத்தில் அதற்கு செய்தி ஊடகங்களின் ஆதரவில்லாமல் எதுவும் செய்ய முடியாது. சரி செய்தி ஊடகங்கள்தான் அதைச் சரியாக செய்கிறதா? என்றால் அதுவும் பெரிய கேள்விக்குறிதான்.  மற்ற மாநிலங்களில் எல்லாம் கூட பரவாயில்லை. நம் தமிழ் நாட்டு ஊடகங்களில் இரண்டே வகைதான். ஒன்று ஆளும்கட்சி ஆதரவு இன்னொன்று எதிர்ப்பு. இதிலே எதிலும் சேர்த்தியில்லாமல் நடுநிலை என்று முழங்கிக் கொண்டிருக்கும் சில ஊடகங்களை லிஸ்டில் வைத்துக் கொள்ள முடியாது. மீடியா நினைத்தால் எதை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களின் மனதில் பிரளையங்களை ஏற்படுத்த முடியும். உதாரணம் சன் டிவியில் வளர்ப்பு மகன் திருமணத்தைக் காட்டியே ஆட்சியை பிடித்ததும், அவர்கள் கொடுத்த டிவியிலேயே 2ஜி மேட்டர் நாறிப் போய் தோற்றதையுமே சொல்லலாம். ஆனாலும் தமிழில் சொல்லிக் கொள்கிறார்ப் போல டெம்ப்ளேட் செய்திகளைத் அளிக்காமல், நிஜமான தமிழனின் ப்ரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் சேனல்களோ, பத்திரிக்கைகளோ வெகுவாக இலலை என்பது வருத்தத...

ரிலீஸுக்கு முன் - மல்லுக்கட்டு

Image
"மல்லுக்கட்டு" த பிலிம் கம்பெனி வழங்கும் புதிய படம். இப்படத்தின் மூலம் புதிய இயக்குனராக  விக்ரமன் அவர்களின் உதவியாளராய் பணியாற்றிய முருகானந்தம் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகின் புதிய நாயகனாய் அறிமுகமாகிறார் வருண்.  கதாநாயகி ஹனிரோஸ். இவர் ஏற்கனவே சிங்கம்புலி படத்தில் நடித்துள்ளார். பசங்க படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ்நூர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகிறது.  பி.கு வருண் தனுஷின் தம்பியாவார்.  எஸ்.கே

Shaitan -மனித மனங்களின் சைத்தான்.

Image
இந்த வாரம் என்னவென்றே தெரியவில்லை. மிக அருமையான படங்கள் வெளியாகி அசத்துகிறது. ஒரு பக்கம் தமிழில் ஆரண்ய காண்டம் என்றால் இந்தியில் இந்த ஷைத்தான். மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களும் கொஞ்சம் டார்க் வகைகளாக இருந்தாலும் இரண்டுமே அதனதன் தகுதிகளில் மைண்ட் ப்ளோயிங் என்று தான் சொலல் வேண்டும்.

கொத்து பரோட்டா-13/06/11

Image
வைகோவின் தயாரிப்பில் நடந்த வீரத்தாய் வேலு நாச்சியார் வரலாற்று நடன நாடகம் பார்க்க அழைத்திருந்தார் அதன் இயக்குனர் ஸ்ரீராம் சர்மா. எனக்கு நடனம் பற்றி, அதிலும் பாரம்பரிய பரதநாட்டியம் பற்றி எதுவும் தெரியாது. பெரிய ஆர்வமில்லாமல் தான் போனேன். வெள்ளையனை எதிர்த்து போராடிய முதல் பெண்மணி யார்? என்ற கேள்வியை கேட்டால், பெருவாரியான மக்கள் ஜான்ஸி ராணியைத் தான் சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1835ல் தான் ஜான்ஸி ராணி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அதற்கு நூறாண்டுகளுக்கு முன்னமே சிவகங்கையின் வேலு நாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போராடி அவர்களை ஓட, ஓட விரட்டினார். ஆனால் இது மறைக்கப்பட்ட வரலாறு. அதை எடுத்துச் சொல்லும் விதமாய், மிக சுவாரஸ்யமாய் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை நம் கண் முன் ஓடியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினார்கள் இக்குழுவினர். முக்கியமாய் இந்நாடகத்தின் இசை. முழுக்க, முழுக்க கர்நாடக இசையை மட்டுமே வைத்து பாடப்பட்ட, நாட்டிய நாடகமாய் இல்லாமல், பாமரர்களுக்கும் போய் சேரும் விதமாய், எளிமையாய் இசையமைத்து, பாடல்களின் மூலம் கதை சொன்ன விதம் அட்டகாசம். வேலு நாச்சியாராக பாத்திரமேற்று நடனமாடிய செளம்ய குரு...

குறும்படம் - Error

Image
சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட குறும்படம். சமீபத்திய ஐந்து நிமிட பரபரப்பு குறும்படங்களை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் மெதுவாக போவதாய் இருக்கும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் நல்ல மேக்கிங்கில் வந்த படம். ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கியவர் ஆர்.பிரகாஷ்.  கொஞ்சம் ப்ளாக் வகையை சேர்ந்தது என்றாலும், இன்று பார்க்கும் போதும், எடிட்டிங்கில் கொஞ்சம் செதுக்கினால் இன்றும் சுவாரஸ்யமான படமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

ஆரண்ய காண்டம்.

Image
  ”தர்மம் எது?” ”எது தேவையோ அதுவே தர்மம்.” இந்த இரண்டு வரிகள்தான் இப்படத்தின் கதை. ஆங்கிலத்தில் வேண்டுமானால் சர்வைவல் த பிட்டஸ்டு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆங்கில ஹாலிவுட் படங்களை பார்த்து அரைகுறையாய் சூடுப் போட்டுக் கொள்பவர்கள் நிறைய பேர். ஆனால் அதே குவாலிட்டியில் ஒரு படத்தை. அதுவும் குவாண்டின் டொரண்டினோவின் பாணியில் அச்சு அசலாய் ஒரு ப்ளாக் படத்தை கொடுக்க முடியுமா? அதுவும் தமிழில். இதோ.. உங்களுக்காக ஆரண்ய காண்டம். கதை என்று பார்த்தால் வழக்கமான கேங்ஸ்டர்களுக்குள்ளான ப்ரச்சனைதான். ஆனால் ஒரு நாளில் இம்மாதிரி மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் தான் சுவாரஸ்யம். லோக்கல் தாதாவான அய்யா ஜாக்கி ஷாராப்பிடம் வேலைப் பார்க்கும் பசுபதி, எதிர்க் கோஷ்டியான கஜேந்திரனிடமிருந்து டபுள் க்ராஸ் செய்து சரக்கை அடிக்க நினைக்க, அதில் மிகச் சாதாரண மனிதர்கள் எல்லாம் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதில் வரும் சிக்கல்களும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் ஆரம்பக் காட்சியில் வயதான தாதா, சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று கூட்டி வந்து கூத்தியாளாக வைத்துக் கொண்டிருக்கும் ...

என்ன பாட்டு பாட?

Image
பாடுவது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. அது கேட்பவர்களுக்கு எப்படி என்று நான் பாடிக் கேட்டவர்கள் தான் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு காலத்தில் கீதம் வரை  கொஞ்சமே கொஞ்சம் கர்நாடக சங்கீதம் கற்று கொண்டதைத் தவிர பெரிய சங்கீத புலமை கிடையாது. ஆனாலும் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்றைக்கு நான் பாடி என் குரலை நானே கேட்பேன் என்று ஒரு ஆசை மனதினுள் அரித்துக் கொண்டிருதானிந்தது.

உங்கள் பக்கம்.

vijai v vijai_vr79@yahoo.com I just start read your blog 2 months ago.i got intrest and start read almost all your old entries in your blog.i brought your Cinema viyabaram in recent book festival. Hope you reside in saidapet.Glad that i too reside in saidapet,near subramania koil. I read once in your blog about MARI HOTEL VADI KARI.  I tried many times,but iam dont find anything tasty. Have you notice in the film Nandalala,Mari hotel is shown???? Couple of days ago,i have seen you in the film prasanth stars,JAMBAVAN. Is it you or somebody?. which theater you regularly watch films?Do You like watch films in our Saidai RAJ Theater? Regards, Vijai

வைகோவின் தயாரிப்பில் “வீரத்தாய் வேலு நாச்சியார்” நடன நாடகம்

ஆம் வைகோவின் தயாரிப்பில், அவரின் ஊக்கத்தில் ப்ரம்மாண்டமான தமிழ் வரலாற்று நடன நாடகமான “வீரத்தாய் வேலுநாச்சியார்”  நாளை மாலை 6 மணிக்கு நாரதகானசபாவில், நடைபெறுகிறது. ஒரே மேடையில் 60 நடனமணிகள் நடனமாடவிருக்கும் இந்நிகழ்ச்சியில், நித்யஸ்ரீ மகாதேவன், திரைப்பட இயக்குனர் பத்ரி, மற்றும் பலர் பின்னணி குரல் கொடுக்கவிருக்கிறார்கள். இதற்கான ஆய்வு மேற்கொண்டு எழுதி இயக்கியவர் வே. ஸ்ரீராம் சர்மா. அனைவரும் வருக. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

நிதர்சன கதைகள்-27-அழுக்கன்.

Image
தமிழகத்தின் பிரபலமான தொடர் ஓட்டலின் ஃபாஸ்ட் புட்டில் பதினான்கு இட்லியும், ஒரு செட் பூரியும் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தேன். வெளியே ஆக்ரோஷமாய் மழை பெய்து கொண்டிருந்த்து. மழைக்கு சூடான இட்லியை சாம்பாரில் முக்கி அதில் இரண்டு கரண்டி நெய் மிதக்க, இட்லியை ஸ்பூனால் உதிர்த்து, சாமபாரும் நெய்யும் கலந்து பேஸ்டாக ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டது மழைக்கு தேவாமிர்தமாய் இருந்தது. கடை மூடும் ராத்திரி நேரத்திலும் ஐம்பது பேர் நின்றிருந்தார்கள். சுவாரஸ்யமாய் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்த போது, ஷேவ் செய்யாத தாடியுடன், கொஞ்சம் அலங்கோலமாய், லுங்கி சட்டையுடன் அழுக்காய் ஒருவன் நின்றிருந்தான். அருகிலும் இல்லாமல் தூரமாகவும் இல்லாமல் அவன் நின்றிருந்த்தில் ஒரு ஜாக்கிரதைத்தனம் இருந்தது.

மயில்சாமியின் மகன் அன்புவின் ‘பார்த்தோம்.. பழகினோம்”

Image
முன்னூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் மயில்சாமி. இவரது மகன் அருமைநாயகம் (எ) அன்பு, ராசு மதுரவனின் இயக்கத்தில் ”பார்த்தோம்… பழகினோம்” என்கிற புதிய படத்தில் கதாநாயகனாய் நடிக்கவிருக்கிறார். பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களை இயக்கியவர் ராசு மதுரவன். நேசிகா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற  ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அருமைநாயகம் என்று கமல் சூட்டிய பெயரை இயக்குனர் சிகரம் சினிமாவுக்காக அன்பு என்று பெயர் சூட்டி வாழ்த்தியுள்ளார். எஸ்.கே

சாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை

தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் என்பார்கள். ஆம் வருபவர்கள் எல்லாருக்கும் ஏற்ற நகரம் சென்னை. பணக்காரர்கள் முதல் அடிதட்டு மக்கள் வரை அனைவருக்குமான நகரம். அது போலத்தான் சாப்பாடும்.பத்து ரூபாய்க்கு   கலந்த சோறும், பதினைந்து ரூபாய்க்கு மீன் குழம்புடன் சாப்பாடு கிடைக்கிற ஊரில்தான் ஒரு வேளை சாப்பாடு ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.

ரிலீஸுக்கு முன்னால் - ஆரண்ய காண்டம்

Image
தமிழ் சினிமாவில் சிறிய படங்கள் ரிலீஸானவுடன் மக்களிடையே மவுத் பப்ளிசிட்டியில் ரீச்சாவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னாலேயே சினிமா பார்க்கும் மக்களிடையே ஒர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ஆரண்யகாண்டம் திரைப்படம்.  சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஜூரி அவார்ட் வேறு வாங்கி உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Imdb யில் 7.1/10 ரேட்டிங்கை பெற்றிருக்கும் படம். அதுவும் ரிலிஸாகாமலேயே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  மூன்று வருடங்களாய் தயாரிப்பில் இருந்த இந்த படம் வருகிற பத்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. எஸ்.பி.பி சரணின் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணியிசையில், தியாகராஜ குமாரராஜாவின் இயக்கியிருக்கிறார். இந்த படம் வெற்றியடைந்தால் தனக்கு ஒரு பிரேக் கிடைக்குமென நம்பியிருக்கிறார் ரவிகிருஷ்ணா எஸ்.கே

கொத்து பரோட்டா-06/06/11

Image
முப்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி மேலும் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசக, வாசகியர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் என் நன்றிகள் பல.. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர் ஜஸ்டின் பைபர். உலகையே தன் துள்ளலான இசையால் மயக்கி வரும் டீனேஜர். அதிலும் இவனது பேபி பாட்டை கேட்டு ஜுரம் வந்து அலையும் இளைஞர்கள் கோடி. சமீபத்தில் தான் யூடுயூபில் அந்த பாடலைப் பார்த்தேன். பாடலில் இருக்கும் இளமை, விஷுவலாகவும் இருக்க, பின்னென்ன அடி தூள் தான். இவரைப் பற்றி ஏதாவது கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது இணையத்தில் கிடைத்தது அஜயன் பாலாவின் கட்டுரை . அவரின் கருத்தும் என் கருத்தும் ஒரே..ஒரே..  என்னா அழகுடா அந்த பொண்ணுங்களும் அவனின் கொஞ்சம் பெமினைனான குரலும்... ம்ஹும்.

குறும்படம்- அமுதா

Image
முப்பது லட்சம் ஹிட்ஸுகளை அளித்து மேலும் என்னை ஆதரிக்கும் வாசக, வாசகியர்களுக்கும், சக பதிவர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றிகள் பல..சங்கர் நாராயண் @கேபிள் சங்கர் நாளைய இயக்குனர் இரண்டாவது சீசனில் ஹாரர் எபிசோடில் வந்த படம். ஒளிப்பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இதே கான்செப்டில் நிறைய ஆங்கில படங்கள் வந்திருந்தாலும் நன்றாகவே எடுத்திருந்தார்கள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

பாடும் நிலா பாலு.

Image
முப்பது லட்சம் ஹிட்ஸுகளை அளித்து மேலும் என்னை ஆதரிக்கும் வாசக, வாசகியர்களுக்கும், சக பதிவர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் நன்றிகள் பல..சங்கர் நாராயண் @கேபிள் சங்கர் தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், சந்திரபாபு, ஏம்.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் என்று வரிசைக் கட்டிக் கொண்டு தமிழ் சினிமாவையே தங்கள் குரலினால் கட்டிப் போட்டிருந்த பாடகர்கள் எல்லாம் இருந்தாலும் டி.எம்.எஸ் என்ற ஒரு குரல் தான் அரசாட்சி செய்து கொண்டிருந்தது.  அந்தக் காலத்தில் புதிய தென்றலாய் ஒரு குரல் மெல்ல தமிழ் சினிமாவில் மையம் கொண்டு புயலாய் மாறி நம்மை எல்லாம் இசையெனும் சூறாவளிக் காற்றில் அலைக்கழித்துக் கொண்டிருப்பவர் நம் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

ஆண்மைதவறேல்

Image
சமீபகாலமாய் தொடர்ந்து பல இயக்குனர்கள் எடுத்துக் கொண்டுள்ள களம் தான். பெண்கள் விபச்சாரத்துக்காக கடத்தல். அதை விரிவாக சொல்ல் முயற்சித்திருக்கிறது. இந்த டீம்.

குறும்படம் - நிதர்சனம்

Image
இது என்னுடய இரண்டாவது படம் நான் நிறைய கற்றுக் கொண்ட படம். எனக்கு அவ்வளவாக திருப்தியில்லாத படம். எது எதையெல்லாம் ஒத்துக் கொண்டு செய்யக்கூடாது என்று புரிந்து கொண்ட படம்.

உலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.

Image
மணி சார்.. இப்படித்தான் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகத்தினர் அனைவரும் அன்புடன் அழைக்கிறார்கள் மணிரத்தினம் அவர்களை. தமிழ் சினிமாவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களின் முக்கியமானவர் மணிசார். இவரின் படத்தில் நடிப்பதென்றால் இந்தியாவின் பெரிய நடிகர்கள் கூட சம்பளம், டேட் எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்ய தயார் என்று சொல்லுமளவுக்கு இவரின் மேல் மரியாதை. இவருடன் இணையும் தொழில்நுட்ப கலைஞர்கள், உடனடியாய் கவனிக்க பெறுவது இவரின் சிறப்பு.

Hangover-2

Image
ஹாங் ஒவர் பார்ட் ஒன்னை பார்த்தவர்கள் நிச்சயம் இந்த பகுதியை பார்க்காமல் விடமாட்டார்கள். அவ்வளவு சுவாரஸ்யமான படம் ஹாங் ஓவர் முதல் பாகம். அதே சுவாரஸ்யத்தை இரண்டாம் பாகமும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று யோசித்தவர்களை மீண்டும் மூன்றாம் பாகம் வந்தாலும் பார்க்க தயார் என்று சொல்ல வைத்துவிட்டாரக்ள்.  என்ன வழக்கம் போல் படம் பார்த்துவிட்டு முதல் பாகம் மாதிரியில்லை என்ற டெம்ப்ளேட் வசனத்தோடு.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மொட்டை.. என்.. மொட்டை

Image
என் இனிய மொட்டை இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரை வாழ்த்த பிறந்தநாள் பரிசாய் அவர் பாட்டையே அளிக்கிறேன். உங்களுக்கு நீடூழி வாழ்க.. என் இனிய மொட்டை. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

சாப்பாட்டுக்கடை - ரெஸிடென்ஸி

இது நாள் வரை நல்ல ரெஸ்டாரண்டுகளைப் பற்றியும், மிடில் க்ளாஸ் மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் விரும்பும் கையேந்திபவன்களைக் கூட அறிமுகப்படுத்தியிருக்கிறேன். முதல் முறையாய் ஒரு ஸ்டார் ஓட்டல் ரெஸ்டாரண்டைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். சென்னையில் ஸ்டார் ஓட்டல் வகையராக்களில் மிக சில ஓட்டல்களின் ரெஸ்டாரண்டுகள் மட்டுமே நல்ல சுவையான, உணவு வகைகளை அளிக்கிறது என்பது என் கருத்து. அதற்காக அவர்களின் உணவு தரம் குறைந்தது என்று சொல்ல வரவில்லை. தனித்துவமான டேஸ்டென்று இல்லாமல் இருப்பதே அதன் மைனஸ். அதையும் மீறி ஒரு சில ஸ்டார் ஓட்டல்களில் சில ஸ்பெஷல் அயிட்டங்கள் அசத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது ரெஸிடென்ஸி.

மைதானம்

Image
தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம். ஏன் இந்த புலம்பல் என்று கேட்பவர்களுக்கு காரணம் இந்த படம் மைதானம்.தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் பட்ஜெட். தேவையில்லாமல் பல லட்சம் கோடிகளை கொட்டிவிட்டு  எடுக்க முடியாமல் அவஸ்தைபடுவது. சுமார் நாற்பது லட்சங்களில் வெறும் கதையை மட்டுமே நம்பி, புதியவர்களை வைத்து நார்மல் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்தால் டெக்னாலஜி என்பது ஒரு கருவி மட்டுமே. என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். கொங்கு மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் நான்கு நண்பர்கள். கதை நாயகனான நண்பனுக்கு ஒரு தங்கை. அவளூக்கும் நண்பர்களில் ஒருவனுக்கு காதல். ஆனால் நண்பனோ நட்புக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு காதலில் மருகுகிறான். இந்த காதல் விஷயம் இன்னொரு நண்பனுக்கு அரசல் புரசலாய் தெரியும். அவனும்...