புலி வேஷம்
முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
ஆர்.கே ஒரு படிக்காத அனாதை சிறுவன். ஒரு ஆஸ்பத்திரியில் தாமரை என்கிறவருக்காக கட்டுக் கட்டாய் பணம் கொடுக்கிறான். பின்னர் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து ஸ்டைலிஷ் லுக்கோடு பஜுரோவில் வருகிறார். யார் இவர்? எப்படி இப்படி மாறினார்? யார் அந்த தாமரை?. அவர் ஏன் ஒரு பழைய வீட்டில் பனையோலை மறைத்த வீட்டில் வசிக்க வேண்டும்?. கார்த்திக் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர். உடனிருக்கும் ஆபிசர் செய்த துரோகத்தினால் தன் உயிர் நண்பனை இழந்துவிடுகிறார். அந்த கோபத்தில் துரோகம் செய்த போலீஸ்காரர்களை சட்டத்தை ஏமாற்றி கொல்கிறார். ஆனாலும் சஸ்பெண்ட் ஆகிறார். அதற்கு நன்றி சொல்லிவிட்டு, நேரே ஆர்.கேயிடம் வந்து ஊரில் இருக்கும் ரவுடிகளை எல்லாம் காசு கொடுத்து கொல்லச் சொல்கிறார். ஏன்? இப்படி பல ட்டுவிஸ்டுகளை அடக்கிய படம் தான் என்றாலும் முடிச்சவிழ்க்கும் போது வீச்சம் அடிக்கத்தான் செய்கிறது.
கார்த்திக் தான் படத்தின் ஹீரோ போல படத்தின் ஆரம்பம் முதல் வருகிறார். ஏதோ ஹாலிவுட் பட ஹீரோ போல கொழ் கொழவென இங்கீலீஷ் பேசுகிறார். எதோ செய்யப் போகிறார் என்று நினைதால் கான்ஸ்டபிள் கூட கொஞ்சம் நன்றாக யோசிப்பான் போலிருக்கு. சதா நிஜமாகவே சப்பிப் போட்ட மாங்கொட்டை போல இருக்கிறார். நடுவில் ஒரு பாட்டில் அடிப் பாடுவதோடு சரி. அவர் அண்டர் கவர் ஏஜெண்டாம். அதுவும் நான்கு மாதத்தில் ரௌடி ஆனவருக்கு. கொடுமைடா சாமி. கஞ்சா கருப்பு, ஜீவா, மயில்சாமியெல்லாம் இருந்தும் சிரிப்பு ஒண்ணும் விளங்கலை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. ஒளிப்பதிவு எல்லாம் ஓகே. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ஓகே.
புலி வேஷம்.- வெறும் வேஷம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
..... கிலி வேஷம்? ஹா,ஹா,...
அது ஏன் சார்... கான்ஸ்டபிள் என்று சொல்லும்போதே யோசிப்பான் என்ற ன் விகுதியும் வந்துவிடுகிறது.
உங்கள் கட்டுரைகளில் நிறைய இடங்களில் எனக்கு நெருடும் குறைபாடு இது. பதவியை வைத்து ஆளை எடைபோடுவது சரியா கேபிள்ஜி?!
நாளை 'மங்காத்தா" விமர்சனம் எதிர்பார்க்கின்றேன். டிக்கட் எல்லாம் வாங்கியாச்சா? (எப்படி உடனுக்குடன் படம் பார்க்கின்றீர்கள்? பிரிமியர் ஷோக்கு பாஸ் தருகின்றார்களா?
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com