எண்டர் கவிதைகள் -20


பால்கனியின் ஜன்னலை

பூட்டுப் போட்டு வைத்திருக்கிறேன்

எதிர்வீட்டு இளைஞனோடு 

அவள் ஓடாதிருக்க

பூட்டிற்கு வெளியே தெரு 

விளக்கொன்று மினுக்கி

 மினுக்கி எறிகின்றது

இருட்டினிலிருந்து பார்த்தாலும்

வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது

அவளுக்கு அவன் சிகரெட் முனையும்

அவனுக்கு அவள் மூக்குத்தி ஒளியும்

உடைகளை களைந்து பூட்டி வைத்தேன்

இருட்டில் நிர்வாணம் பொருட்டல்ல

மனமே பிரதானமென்று

 பூட்டியும் பிரயோஜனமில்லை
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

க ரா said…
முடியல....
கிளிக்கு ரெக்கை மொளச்சிடுத்து... ஆத்த விட்டே பறந்துடுத்து...
@இராமசாமி
உனக்கு பொறாமை.. நம்மாள இப்படி எழுத முடியலையேன்னு..?)
Paleo God said…
இருட்டினிலிருந்து பார்த்தாலும்

வெளிச்சம் மின்னத்தான் செய்கிறது//


பூட்டியும் பிரயோஜனமில்லை//

திக்கற்றவர்களுக்கு எண்ட்டரே துணை!
aotspr said…
உங்கள் கவிதைக்கு நன்றி.......
தொடர்ந்து எழுதுங்கள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
IlayaDhasan said…
//முடியல....
கவித இன்னும் 'முடியல ', அடுத்து என்ன நடந்துச்சுன்னு ஆர்வமா கேட்குராருங்கோ!
வாட் எ பென்டாஸ்டிக் போயம்! ரியலி அவ்சம்!
(தமிழே மறந்துடுச்சுங்கோ)
mani sundaram said…
கேவலமா இருக்கு
Unknown said…
சிறை காக்கும் காப்பு என்செயும்..?

வள்ளுவர் கேள்வி!

புலவர் சா இராமாநுசம்

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.