செங்காத்து பூமியிலே..
பவனின் நடிப்பு நன்றாகவே இருக்கிறது. கதைக்கும் அவர் சரியாக சூட் ஆகிறார். காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ரோபோத்தனமான ரியாக்ஷன்கள். மிர்ச்சி செந்திலை இதற்கு முன் முழுக்க, முழுக்க கிராமத்து கேரக்டரில் பார்த்ததில்லை. அதுவுமில்லாமல், அவர் என்னதான் வீராவேசமாய் அருவாளைத் தூக்கிக் கொண்டு அலைந்தாலும், பாடி லேங்க்வேஜ் சுத்தம். கவுண்டமணி ஒரு படத்தில பொண்டாட்டிய வெட்ட அருவாளை தூக்கிட்டு பயந்து ஓடிவருவாரு அந்த மாதிரி இருக்கு. செந்திலின் அப்பாவாக அழகன் தமிழ்மணி. அவரின் முகத்துக்கு இந்த கேரக்டர் நச்சென பொருந்துகிறது. பெரிதாய் நடிக்காமலேயே பெயர் வாங்கிவிடுகிறார். படத்தில் இருக்கும் ஒரே ஒரு ரிலாக்ஸேஷன் சிங்கம்புலி மட்டுமே. படு சீரியசான கதையில் ஆங்காகே கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
வெய்யில் பிரியங்காவும், சுனு லட்சுமி என்கிற புதுமுகமும் தான் கதாநாயகிகள். ப்ரியங்காதான் மெயின் ஹீரோயின். இருவரும் பிழியப் பிழிய அழுகிறார்கள். ப்ரியங்கா மாதிரியான அழகு கதாநாயகிகளை அழுக்காக்கியிருக்கிறார்கள். ஆரம்பக் காட்சிகளிலும், “ஓரம்போ” பாடலிலும் இருக்கும் இளமையும், கிளுகிளுப்பும் அதற்கு பிறகு மிஸ்ஸிங்.
இசைஞானி இளையராஜாவின் இசையாம். ஒன்றும் பெரிதாய் சொல்லிக் கொள் ஏதுமில்லை. எல்லாமே எங்கேயோ, எப்போதோ கேட்டதாகவே இருக்கிறது. க்ளைமாக்ஸில் வரும் சோகப்பாட்டும் சேதுவிலிருந்து ஏகப்பட்ட படங்களில் கேட்டதுதான். பின்னணியிசையில் ஆங்காங்கே ராஜா தெரிவதை தவிர வேறொன்றுமில்லை.
கதை, திரைக்கதை, வசனமெழுதி, இயக்கியவர் ரத்னகுமார். ரொம்பவே அரத பழசான கதை தான் முதல் மைனஸ். அதற்கு அப்புறம் கதையில் வரும் கேரக்டர்கள். சட்டுபுட்டுன்னு கதை சொல்லி முடிக்காம, ஆளாளுக்கு ஆழாக்கு அழுதுட்டுத்தான் பேசுறாய்ங்க. பல சமயங்களில் ஹீரோயின் முகத்தில் வேர்வையும் கிளிசரின் கண்ணிருமாய் சேர்ந்து முல்லை பெரியாறு அணையில் தேக்கி வைத்த தண்ணீரோ என்று தோன்றுமளவுக்கு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆங்காங்கே வரும் வசனங்களில் இயக்குனர், வசனகர்த்தாவாக தெரிகிறார். திரும்பத் திரும்ப கிராமம், ஊரு, பழிவாங்கல் என்று அடுத்த காட்சி என்ன வரும் என்பதை சுலபமாய் கணித்துவிடக்கூடிய ஒன்றாயிருப்பதால் சுவாரஸ்யம் கம்மியாகி, சீக்கிரம் யாராவது ஒருத்தரை வெட்டிட்டு சாவுங்கப்பா என்று சொல்ல வைத்துவிடுகிறார்.
செங்காத்து பூமியிலே - அழுவாச்சி
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
சைக்கோ திரை விமர்சனம்
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Raja music Nalla illaiya?
naan kooda vilambarathai paathu mersel aayittaen...
கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படத்தை கூர்ந்து கவனித்து பார்த்தால் யாருக்காக படம் எடுக்கிறார்கள், அதன் உள்ளார்ந்த அரசியல் என்னென்ன, யாருக்கு லாபம், நஷ்டம், யாருக்கு பெயர் போகின்றது, போகவில்லை..? என்று ஒருபக்கம் இருந்தாலும், Fun, Entertainment ஆக இருந்தால் தான் படம் ஓடும் என்பது ஒரு பொது புத்தி. பதின் வயது முதல் நாற்பது வயது வரை சினிமாவை பொழுதுபோக்கு அம்சம்மின்றி தன் வாழ்வை அதனுள் புகுத்தி தன்னை அந்நிலையில் வைத்து பார்பவர்கள் ஏராளம் என்பேன்.
மதுரை குரு திரையரங்கில் ஒரு படம் பார்க்கும் பொது மனம் எப்படி லயிக்க வேண்டும்மோ அதே மனநிலை தான் சென்னையில் பார்க்கும் போதும் வர வேண்டும்.
யாருக்காக படம் (Multiplex Viewers, Number of Show, No of Audience Occupancy,Box Office) இவர்களுக்கா ? அல்லது யாருக்கு லாபம் (theatre, Producers) இவர்களுக்கா ?
இல்லை படம் ஓடாமல் இருக்கும் பட்சத்தில் இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக என்று கூவும் டீவீகளுக்ககவா???? (Sun,Vijaym,Jeya)
சாதாரண கதையை மிக எதார்த்தமாக சொல்லி வெற்றி படத்தை எடுக்க வேண்டும் என்று முயல்பவர், அசாதாரண மனிதனாக தான் இருக்க வேண்டும். தியாகம் வேண்டும், கூட நேர்மையும் வேண்டும். புத்தர் மிக வேகமாக நடப்பார் என்றும், தனக்காக ஒரு யாசகன் காத்திருப்பான் என்றும் அவன் ஒரு போதும் தனக்காக ஏமாற்றம் அடைய கூடாது என்பது நிகுபு என்று ஒரு மேடையில் எஸ் ரா குறிப்பிட்டார்.
வணிகம் சார்ந்து அல்லாமல், படைப்பை மட்டுமே நம்பும் நல்ல படம் வெகு தூரத்தில் இல்லை.
நன்றி,
பிறைசூடி இ.