முப்பொழுதும் உன் கற்பனைகள்

muppozhudhum-un-karpanaigal-movie-preview விண்ணைத்தாண்டி வருவாயா? கோ போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் இயக்குனராக அவதாரமெடுத்திருக்கிற படம். காதலர் தின வாரத்தில் வந்திருக்கும் இன்னொரு இளைமையான படமாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தொடர் விளம்பரங்களால் ஏற்படுத்தியிருந்தாலும் சொதப்பியிருப்பாரோ என்ற ஒரு எண்ணம் உள்ளுணர்வாய் தோன்றிக் கொண்டேயிருந்தது. அதை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.


muk அதர்வா மார்டன் சாப்ட்வேர் இளைஞன். ஆபீஸில் இருக்கும் பெண்கள் எல்லாம் அவனையே மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவனோ சாரு என்கிற  பெண்ணை காதலிப்பதாகவும், அவளுக்காகத்தான் வார இறுதியில் பெங்களூருக்கு போய் வருவதாகவும் சொல்கிறான். அங்கே காத்திருக்கும் சாருவுடன் சந்தோஷமாய் இருக்கிறான். ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பையனை படு கொடூரமாய் அந்நியன் மேக்கப் போட்டுக் கொண்டு கொல்கிறான். அதே நேரத்தில் சாரு போலவே இருக்கும் அமலாபாலுக்கு அமெரிக்காவில் நிச்சயதார்த்தம் ஆகிறது. சென்னையில் தன் கம்பெனி பொருப்பை ஏற்கவரும் லதா என்கிற அமெரிக்க அமலாபால், அதர்வாவைப் பார்த்து ஆச்சர்யபடுகிறார். ஒரு கொலை முயற்சிக்கு பிறகு, அதர்வாவை மனநல மருத்துவரான ஜெயப்பிரகாஷை விட்டு செக் செய்ய வைக்கும் போது அவர் சாரு என்கிற பெண்ணை உயிருக்கு உயிராய் காதலிப்பதாய் சொல்கிறார். லதா என்கிற அமலா பால் அப்படி இருக்கவே முடியாது ஏனென்றால் அந்த சாரு என்கிற சாருலதா நான் தான் என்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை முடிந்தால் பொறுமையுடன் வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளவும்.

கதை என்று பார்த்தால் நல்ல முயற்சிதான். ஏற்கனவே பார்த்திபனின் “குடைக்குள் மழை’யில் முயற்சி செய்ததுதான்.ஆனால் அதை திரைக்கதையாக்கிய விதத்தில்தான் அத்துனை சொதப்பல்களும். சுவாரஸ்ய பின்னலாய் அமைந்திருக்க வேண்டிய படம் உயிரில்லாமல் போனதற்கு காரணம் திரைக்கதைதான். ஒன்று சாருவுடன் காதல் கொண்ட எபிசோட் க்யூட்டாக இருந்திருக்க வேண்டும். அல்லது தற்போதைய எபிசோட் அசத்தலாய் இருந்திருக்க வேண்டும். அல்லது முடிச்சுக்களை போடும்போதாவது அழுத்தமாய் போட்டிருக்க வேண்டும்.
Atharva Amala Paul in Muppozhudhum Un Karpanaigal Hot Pictures
அதர்வா ஆள் ஸ்மார்ட்டாக இருக்கிறார். நடிக்க முயற்சி செய்கிறார். ஓரளவுக்கு நன்றாக நடனம் ஆடுகிறார். ஆனால் பெண்கள் எல்லோரும் மயங்கி பின்னால் சுத்துவதாய் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு நம்பும்படியாய் இல்லை.

ஒரு நாள் முன்னால் அழகாய் இருந்த அமலாபால் அடுத்த நாள் அழுதுவடிவாரா? வார் என்கிறது இந்த படம். காதலில் சொதப்புவது எப்படி? யில் க்யூட்டாய் மனசை கவர்ந்தவர், படம் முழுக்க நம்மை கலங்கடிக்க வேண்டிய கேரக்டராய் இருந்திருக்க வேண்டியவர் ஒட்டாமலேயே போய்விடுகிறார். இவர் ஹேர் ஸ்டைலிஸ்ட் யார் என்று கேட்டு மண்டை மீது ஓங்கி ஒரு குட்டு வைக்க வேண்டும் படு கேவலமான ஹேர் ஸ்டைல்.

நாசர், ஜெயப்பிரகாஷ், போன்றோர் டிபால்டாய் நன்றாக செய்திருக்கிறார்கள் என்பதை எழுதாமலேயே புரிந்து கொள்ளலாம். ஆனால் ஜெயப்பிரகாஷ் போன்ற சிறந்த நடிகர்களை இப்படி வேஸ்ட் செய்யப்படுவது படு மோசம். சந்தானம் அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார் அவ்வளவே.
muk-movie-stills-010
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் நிறைய ஆங்கிலப் பாடல்களின் தாக்கம். சுனந்தா, கண்கள் நீயே, ஆகிய பாடல்கள் ஓகே. தாமரையின் வரிகளில் கண்கள் நீயே அருமை. பின்னணியிசை இரைச்சலாய்த்தான் இருக்கிறது. ஒளிப்பதிவு ஓகே. பல இடங்களில் கெளதம் படத்தைப் போல எடிட்டிங் ஸ்டைல் இந்தப்படத்திற்கு ஒத்துவரவில்லை.
muk-movie-stills-016
எழுதி இயக்கியவர் எல்ரெட் குமார். கதை விஷயத்தில் ஓகே என்றாலும், திரைக்கதை வசனத்தில் பெரிய கோட்டை விட்டபடியால் படம் பார்பவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தியது மட்டுமே மிஞ்சுகிறது. ஏற்கனவே வேறு ஒரு இயக்குனரை வைத்து கால்வாசி படம் முடித்துவிட்டு, அவருக்கு சரியாய் வேலை தெரியவில்லை என்று இவரே டைரக்டராய் பொறுப்பேற்று முடித்திருக்கிறார். ஒரு வேளை அந்த பழைய டைரக்டர் ஒழுங்கா பண்ணியிருப்பாரோ..?.  படம் ஆரம்பித்ததிலிருந்து ட்விஸ்டு மேல் ட்விஸ்டாய் வைத்து உங்களை அசத்துகிறேன் பார் என்று நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளோடு குழப்பி விட்டிருப்பது வேதனை. சாரு பெயரில் எதற்காக தேவையில்லாமல் ஒரு குருட்டுப் பெண் பேச வேண்டும்? அதர்வாவின் மனநிலை ப்ரச்சனைக்கு காரணம் டிபெண்டெண்டாய் அம்மாவின் நிழலிலேயே வாழ்தது தான் என்று ஒரு அரை மணி நேர கிராமத்து எபிசோடை காட்டுகிறார். அடித்துப் போட்டார் போல தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது.  அமலா பால் சாருவாக இருந்த போது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்வதாய் ஒரு பெரிய அபார்ட்மெண்ட்டில் சேர்ந்து இருக்கிறார்கள்? என்ன ப்ராஜெக்ட் என்றால் ஏதோ என்விரான்மெண்ட் அது இது என்று ஜல்லியடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சம்பந்தமாய் ஏதுவுமேயில்லை. எதற்காக சாருவை அவரது பெற்றோரும் மாமாவும் அர்ஜெண்டா அமெரிக்காவுக்கு கூட்டிக் கொண்டு போக வேண்டும்?. முகத்தில் கலர் பெயிண்ட் அடித்துக் கொண்டு ஆளை கொன்று விட்டால் யாருக்கும் தெரியாதா? கொலை செய்யும் போது அவனது மனநிலை என்ன?  திடீரென அமலாபாலுக்கு நிச்சயம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை ஹோமோ பார்ட்டி என்று ரெண்டு அரைகுறை வெள்ளைக்காரனை கொண்டு வந்து கொலை முயற்சி செய்வது எதற்கு? என்று கேள்வி மேல் கேள்வியாய் எழுந்து நம்மை குழப்பியெடுத்து, நம்மையும் மூன்று இரவு, பகல் நிலைக்குத்தி உட்கார வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. எல்ரெட் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

Unknown said…
@Cable Ji !! :
ippa than padam pathu vanthen ! neenga Olippathiva pathi onnum solla illayee ! sila idangalla editings nalla irunthichu ! but enakku knjm confuse irunthathu ! but SANTHAANAM Varum idam ellam ore Kaithattalgal !!
but enakku padam ! OkkkE! until read ur comments

Regards
M.Gazzaly
Greenhathacker.blogspot.com
ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் நன்றாக வந்தாலும் பின்னால் இடிக்கிறதே???

அதர்வா எனக்கு பிடித்த நல்ல பர்சனாலிட்டியான ஹீரோ. நல்ல எதிர்காலம் உண்டு ... நல்ல படங்கள் தேர்ந்தெடுத்தால்.
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் - இப்படிதான் என் வீட்டுலயும் சொன்னாங்க.. !! என்ன ஒரு தீர்க்க தரிசனம்.
Thava said…
நல்ல படமா இருக்கும் என்று நினைத்தேன்..ஆனால், உங்க விமர்சனம் படித்தப்பிறகு மொக்கையா என்னானு தெரில..பார்க்க கிடைத்தால் மட்டுமே பார்ப்பேன்.நல்ல விமர்சனம்.நன்றி.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
படத்தில் பிடித்தது இடையே வந்த சகுனி ட்ரைலர்.
Jayaprakash said…
//ல்ரெட் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.//

Dear Karthik,

He is my Ex. Boss (in 2004) now (6 months before) i came to know he is making the movies, thanks for your comment, if i have a chance i will inform to him (i dont have direct contact for him, but my friends still do contact him so i will try to inform from my friends!)

i have seen "kadalil sothappuvathu eppadi" its very nice as per your Review

Regards
Jayaprakash
arul said…
thagavalukku nandri

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.