என்னத்தை சொல்ல...?
போன் ஒலித்தது. வெளிநாட்டு நம்பர். வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். “ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பண்றீங்களா?” என்று யார் என்று கூட கேட்காமல் சொன்னேன். லைன் உடன் கட்டானது. பல சமயங்களில் இம்மாதிரி சொல்லும் போது அதை கவனிக்காமலோ, அல்லது நாம் போன் பண்ணியாச்சு பேசித்தான் ஆகணும் என்ற எண்ணத்தில் அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. சரியாய் பத்து நிமிடம் கழித்து கூப்பிட்டார்.
“வணக்கம்ணே.. என் பேரு “ என்று பேரைச் சொல்லி துபாயிலிருந்து அழைப்பதாய் சொன்னார்.
“உங்க பதிவை பல வருஷமா தொடர்ந்து படிச்சிட்டு வர்றேண்ணே.. உங்க பதிவ படிக்கலைன்னா தூக்கமே வர்றது கிடையாது.”
”நன்றிங்க”
“ஆனா பாருங்க சமீப காலமா நீங்க ஒரு சாராரைப் பற்றி தவறான தகவல்களை சொல்லிட்டு இருக்கீங்க?”
“அப்படியா? யாரைப் பத்தின்ணே?”
“விஸ்வரூபம் பத்தி நீங்க எழுதும் போது இஸ்லாமியர்களை கேவலப்படுத்தி எழுதுறீங்க? அது தாண்ணே ஏன்னு புரியலை”
“இல்லையேண்ணே.. அப்படி எதும் எழுதினதா தெரியலை”
”இல்லேண்ணே.. இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள்தானா? வேற யாரையும் தீவிரவாதியா காட்ட மாட்டீங்களா? அப்படி விஸ்வரூபத்துல காட்டினது தப்புத்தாண்ணே”
“ஏங்க இந்தப்படத்தை நீங்க பாத்தீங்களா?”
“இல்லை”
“அப்ப பாக்காம ஏன் இப்படி பேசுறீங்க?”
“அதுல குரானை அவமானப்படுத்தியிருக்காங்க, இது நியாயமே இல்லை”
“இந்தப்படம் அமெரிக்க தலிபான்கள் பற்றிய படம். ஆஃப்கானிஸ்தான்ல முஸ்லிம்ங்கள்தான் இருக்காங்க. அங்க போய் கிறிஸ்டியனையா காட்ட முடியும்?”
“ நமக்கு சம்பந்தமில்லாததை ஏன் படமா எடுக்கணும்? அப்ப வேணும்னே தானே அவரு எடுத்துருக்காரு..’
"ஏங்க ஒரு கதாசிரியனோட இஷ்டம் இல்லையா?”
“அப்ப முஸ்லிம்மை தீவிரவாதியா காட்டக்கூடாது இல்லை.”
“அவரு எங்கங்கங்க காட்டுனாரு.. அதுல தலிபான்களோட நியாயத்தைப் பத்திக்கூட பேசியிருக்காரு. நியாயமா பார்த்தா அமெரிக்காவுலதான் படத்தை தடை செய்யணும். இந்திய முஸ்லிம்களைப் பத்தியோ, அல்லது தமிழக முஸ்லிம்களைப் பத்தியோ ஏதும் இலலிங்க”
“அப்ப முல்லா உமர் கோவைக்கு வந்ததா சொன்னது?”
“தெலுங்குல காக்கிநாடாவுக்கு வந்ததா சொல்லியிருக்காங்க. அங்க யாரும் கேக்கலை?”
”அவனுங்க கேக்கலைன்னா என்ன நாங்க கேட்போம். இஸ்லாத்தை நம்புறவன் குரானை உயிரா மதிக்கிறவன் யாராயிருந்தாலும் கேட்பாங்க”
“ஏங்க.. தமிழ்ல படம் வரும் போது வில்லன் தமிழ் பேசணுங்கிறதுக்காகக்கூட சொல்லியிருக்கலாம். சில பல லாஜிக்கு மேட்டர்காக வச்சிருக்காங்கண்ணே”
“அப்படி காட்டக்கூடாது இல்லை. அதும் குரானை படிச்சிட்டு ஒருத்தன் பாம் வைக்கிறான்னா.”
”ஏங்க அன்பே சிவம் படத்துல நாசர் கேரக்டரை ஒர் சிவ பக்தனா காட்டி, எப்ப பார்த்தாலும் ‘தென்னாடுடைய சிவனே போற்றி”ன்னு சொல்லுறாப்போலக் காட்டி, அவர் தான் பின்னாடி மக்கள் விரோத சக்தியா காட்டுவாங்க.. ஒரு கேரக்டரை அப்படித்தானே விவரிக்க முடியும். என் தெரிந்த முஸ்லிம் ஒருவர். மிக அன்பானவர். குரானை உயிரா மதிக்கிறவர். குடும்பத்தை கண்ணைப் போல காக்குறவர். ஆனா அவர் செய்யுறது எல்லாமே நம்ப்ர் டூ பிஸினெஸ். இப்ப நான் அவரை ஒர் கேரக்டரா காட்டனூம்னா.. அவர் வீட்டுல எப்படி? வெளியில எப்படி?ன்னு ஒண்ணொன்னா காட்டித்தானே அவரோட பின்புலத்தை காட்ட முடியும். நீங்க என்ன சொல்றீங்க.. அவர் முஸ்லிம்னு சொல்லகூடாதுங்கிறீங்க. அவர் குரானை ஓதறத காட்டக்கூடாதுங்கிறீங்க.. பின்ன எப்படிங்க ஒரு கேரக்டரை பிரிஸ்க்ரைப் பண்றது? வேணும்னா சரி.. அந்த வசனத்தை எடுத்துருங்கன்னு கூட சொல்லலாம் படத்தையே தடை செய்யணும்னு சொல்றது எல்லாம் ஓவர்ல்ல”
‘இஸ்லாம் அன்பையே போதிக்கும் மதம்”
“நான் இல்லேங்கலையே.?”
“அப்ப நாளைக்கு உங்க பதிவுல படத்தை தடை செய்தது நியாயம்னு சொல்லுங்க”
“நியாயமே இல்லிங்களே.. தலிபான்களைப் பத்தி படத்துக்கு உங்களுக்கு ஏன் கோவம் வரணும். அப்ப நீங்க தலிபானை ஆதரிக்கிறீங்களா?”
”இஸ்லாம் அன்பை மட்டுமே போதிக்கும் மதம்ங்க. குரான் எங்க உயிருக்கும் மேலான ஒன்று”
“ஒலகத்துல இருக்கிற முஸ்லிம் எல்லோருக்கும் தப்பா தெரியாதது உங்களூக்கு மட்டும் தப்பாதெரியமாதிரி அடிப்படைவாதம் பேச சொல்லிக் கொடுத்திருக்காங்கன்னு தெரியுது. ஒரு விஷயம்ங்க.. உங்களை கருவியாக்குறாங்க.. பார்த்து யோசிச்சு பண்ணுங்க”
“இஸ்லாம் அன்பை மட்டுமே போதிக்கும் மதம்ங்க. குரான் எங்க உயிருக்கும் மேலானது.”
”வர வர பெந்தகொஸ்தே ஆளுங்க மாதிரி பேச ஆரம்பிக்கிறீங்க”
“இல்லிங்க எங்க் மதம் எவ்வளவு அன்பை போதிக்குதுன்னு சொல்ல வர்றேன். இப்ப கூட உங்க வாழ்க்கைக்கு பிறகு நீங்க சொர்கத்தை அடையணுங்கிறதுக்காகத்தான் பேசுறேன்.”
”நான் வாழ்ற வாழ்கையே எனக்கு சொர்க்கம்தான்”
“அப்படியில்லை. உங்களூக்கு புரியலை.. குரானை புரிய வரும் போது, எங்க நியாயம் புரியும்.கமல் இந்தபடத்த எடுத்தது தப்பு.
“அப்ப தீவிரவாதியா, வில்லனா ஒரு முஸ்லிமை காட்டவேகூடாதுங்கிறீங்களா?”
“அப்படி சொல்லைங்க.. ஏன் முஸ்லிமை மட்டும் காட்டுறீங்கனு கேக்குறேன்.’
”இந்த கதை தலிபான்களைப் பற்றியது. அப்ப அவங்களை காட்டக்கூடாதா? அப்ப நீங்க தலிபானை ஆதரிக்கிறீங்களா?”
“ஏன் அவங்களை ஆதரிச்சா என்ன தப்பு?”
“அவங்க எல்லாம் தீவிரவாதிங்க. அடிப்படைவாதிங்க.. இதை உங்க மதத்து ஆள்களே சொல்லியிருககாங்க. ஒலகமே சொல்லுங்க “
“இது அமெரிக்கா புகட்டி வைச்சிருக்கிற விஷயங்க.அவங்க விடுதலை போராட்டம் நடத்துறாங்க..”
“அன்பை மட்டுமே போதிக்குற உங்க மதத்துல, எல்லாருக்கும் கல்வி அறிவு கொடுக்கப்பட வேண்டுமென்று நீங்க உயிரா மதிக்குற குரான்ல சொல்லியிர்க்கு, ஆனா தலிபான்கள் பாகிஸ்தான்ல மலேலங்கிற பொண்ணு எல்லாருக்கும் படிக்கும் வாய்ப்பை கொடுக்கணும்னு சொன்னதுக்காக, துப்பாக்கியால சல்லடையா துளைச்ச போது எங்க போனீங்க உங்க அமைப்பும் ஜமாத் எல்லாம். மொக்கை மேட்டருக்கெல்லாம் மிரட்டல் விடுறத விட்டுட்டு இம்மாதிரியான உங்க சமுகத்துல நடக்குற அவலங்களை அடிப்படைவாதிகளின் அட்டூழியங்களை தட்டிக் கேளூங்க.. உலகமே உங்களை மதிக்கும். தைரியமிருந்தா தலிபானை தடை செய்யணும்னு சொல்லிப் பாருங்களேன். சொல்றவங்களுக்கு பத்வா கொடுத்துருவாங்கன்னு பயமா?”
“எப்படி இருந்தாலும் முஸ்லிம்களை அப்படி காட்டியிருக்க கூடாதுங்க.. குரான் ஓதிட்டு கழுத்தறுக்கிறா போல எல்லாம் எப்ப்டி காட்டலாம்?”
“நீங்க உங்க ஆளுங்க அனுப்புற வீடியோவ பார்த்ததேயில்லையா? அல்ஜிரா டிவின்னு ஒன்னுல எத்தனை முறை வீடியோ போட்டிருக்காங்க தெரியுமா/”
“அப்படியா நான் பார்த்ததேயில்லைங்க..”
”இப்ப என்ன சொல்ல வர்றீங்க? ஓசாமா பின் லேடன் தீவிரவாதியா இல்லையா?
“......”
“உங்களைத்தான் கேக்குறேன் அவர் தீவிரவாதியா இல்லையா?”
“தெரியலைங்க..:”
“எப்படி சொல்றீங்க?
“இதுவரைக்கு ப்ரூப் ஏதுமில்லைங்க. ஒசாமாங்கிறதே அமெரிக்கா உருவாக்குன பிம்பம்.”
முட்டாள்களுடன் பேசி புரிய வைக்க முயற்சிப்பதை விட அடி முட்டாள் தனம் ஏதுமில்லை என்று எல்லா மத நூல்களிலும் சொல்லியிருப்பதால், அவற்றையெல்லாம் உயிராய் நானும் மதிப்பதால் அமைதியாய் தொடர்பை துண்டிப்பது மேல் என்று முடிவெடுத்து போனை கட் செய்தேன். நிஜமாவே இவங்களை மாதிரி ஆளுங்களுக்கு அவங்கள்ல ஒரு பெரியார் தேவைன்னு தோணுது.
Comments
statements like this only hurting the sentiments of a specific group of people.. this shows what kind of attitude you have towards them..you can have your opinion about individual persons but why are you generalizing it, which could easily hurt that a group of people's sentiments..? you should have been very careful while framing that statements. it has not only spoiled the essence of the post but also could hurt the sentiments..
Sathiyanarayanan
அப்ப விஸ்வரூபம் - படத்தையே தடை செய்யணும்னு சொல்றது !!!
மிக எளிய அருமையான வாழ்கை தத்துவம்.....
மிக பெரிய தத்துவம் மிக சாதாரணமாகத்தான் வெளிப்படும்.... அப்படி வெளிப்படுத்திய துபாய் அன்பை மட்டுமே போத்திக்கும் அன்பருக்கு நன்றி
பாவம் உங்ககிட்ட உலக நடப்பு தெரியாத முஸ்லிம் பேசி இருக்கார்னு நினைக்கிறேன்.. ரொம்ப ஈசியா சமாளிச்சிட்டீங்க... நீங்க விஸ்வரூபத்துக்கு விமர்சனம் எழுதி இருக்கீங்கன்னு கேள்வி பட்டேன்.. இருங்க படிச்சிட்டு வர்றேன்...
இதுவே கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது தான்?? ஹி..ஹி..ஹி...
ஒடனே உங்க ஆட்கள் வச்சிருக்காங்கன்னு சொல்லிடாதீங்க, அப்புறம் கடுமையா சிரிச்சிடுவேன்...
நாங்களும் நீங்களும் ஒன்னா?? நாங்க கருத்து சுதந்திரத்தின் எதிர்கள்.. நீங்க ஆதரிக்கிறவர்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்.....
இட்ஸ் ஓக்கே.. ஐ கேன் அன்டஸ்டான்ட்....:-)
ரிவியூவ் படிச்சிட்டு நேரம் இருந்தா வர்றேன்.. ஓக்கே.. இன்னைக்கு பொழுத இங்கயே கழிச்சிடுவோம்...
அண்ணே நீங்க S.S.L.C பெயில்னே.. நான் ஏழாவது பாஸ் னே..
அடே, நான் S.S.L.C டா..
இதுதான் நினைவுக்கு வந்தது தங்கள் பதிவைப் படித்தவுடன்.
இதைப் பற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன். தங்களது கருத்தை எதிர் பார்க்கிறேன்.
http://www.sivigai.blogspot.in/2013/01/blog-post.html
நான் வெறும் Pre KG தாங்க.. சொல்லிட்டேன்
இந்த படம் வந்தால் மற்றவர்கள் எங்களைப்பற்றி தவறாக நினைப்பார்கள் என்று சொன் னார்கள்.
ஆனால் இவர்கள் இப்போது செய்வதை பார்த்தால் தவறாகத்தான் நினைக்கத்தோன்றுகிறது.
நிச்சயம் அவரால சரியான பதில் தரமுடியாது
அண்மை சம்பவங்களின் மூலம் என்னை போன்றோரை இந்து மதத்தை சார்ந்தவர்கள் நாங்கள் என நினைவு படுத்தியமைக்கு நன்றி
ஆம் இதுவரை நாங்கள் எங்கள் மதத்தை பற்றி அதிகம் நினைத்ததில்லை .
அது உண்மை
இதுவரை நாங்கள் அப்துல் கசாப் -ய் பார்த்த பார்வை வேறு
எங்கள் அண்டை வீட்டு இஸ்லாமிய நண்பரை பார்த்த பார்வை வேறு .
தலிபான்களை பார்த்த பார்வை வேறு .எங்களுடன் தொழில் புரியும் முஸ்லிம்களை பார்த்த பார்வை வேறு
எங்கள் பார்வையை புரிந்துகொள்ளாதது நீங்கள் செய்த தவறு
அண்மையில் வெளி வந்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ஒரு காவி கட்டிய சாமியார் வில்லன்களுடன் சேர்ந்து நாட்டுக்கு துரோகம் செய்வது போல் காட்டியதை நாங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை
அதற்காக எல்லா சாமியார்களும் மோசம் என்று நாங்கள் நினைப்பதில்லை
எங்களுக்கும் மதம் இருந்தாலும் நாங்கள் கோயிலுக்கு சென்றாலும்
எங்களுக்குள்ள பகுத்தறிவு எங்களை வழி நடத்துகிறது
வாழ்க்கையின் யதார்த்தை நாங்கள் புரிந்து கொள்ளுகிறோம்
இந்த ஒரு படத்தினால் நம் உறவு முறிந்து விடப்போவதில்லை
எங்கோ அமெரிக்காவில் வெளியான ஒரு படத்திற்கு நீங்கள் சென்னையில் செய்த காரியம் சரியா ?
விஸ்வரூபம் படத்தை ஒரு சினிமா தானே என நினைத்து விட்டிருந்தால் இந்நேரம் தியேட்டரை விட்டே ஓடி இருந்திருக்கும்
ஆனால் உங்களை எல்லோரும் தவறாக நினைப்பார்கள் என நினைத்து (பயந்து )
தடை வாங்கி பிரச்னையை ஏற்படுத்திவிட்டீர்கள் .
ஒன்று கூற விரும்பிகிறேன்
மடியில் கனம் இருந்ததால்தான் வழியில் பயம் இருக்கும்
They will kill Periyar within a day. haha
But for this stance for kamal I support you 200%
நீங்கள் ஏன் அமேசானுக்கு எதிராகப் போராடக்கூடாது ?
டவுசர் அவிழ்த்து விடுவார்கள் என்ற பயமா?
அருமையான வரிகள்! பகிர்வுக்கு நன்றி!
1:48 PM //
அப்ப உலக நடப்பு தெரிஞ்ச நீங்களும் தலிபானா? குட்.. விளங்கிரும்.
ஒன்றல்ல...இரண்டல்ல... இதை போன்று 100 க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்களைக் காட்டமுடியும்.
யாரோ ஒரு அனானி ஃபோன் பண்ணி இருக்கார். அவரை முஸ்லிம் என்று நீங்களும் நம்பி விட்டீர்கள். இதை படித்த மற்றவர்களும் நம்பி விட்டார்கள். இப்பதிவை படிப்போருக்கு தெளிவாக தெரியும் அவர் கள்ளப்பெயரில் வந்த அனானி என்று..!
எப்படி ஏமாந்தீர்கள் என்றால், காரணம் ஊடகம் உங்களின் ஆழ்மனதில் ஏற்படுத்திய பொதுப்புத்தியின் தாக்கம்.
பொதுவாக ஒவ்வொரு செய்திக்கும் இரு பக்கங்கள் உண்டு.
பெரியாறு அணை பற்றி மலையாள செய்திகளை மட்டுமே படித்தால் தமிழன் கடும் விரோதியாகவும் மனித குலத்தின் வில்லனாகவும் தெரிவான்.
கன்னட செய்திகளை மட்டுமே படிப்போருக்கு காவிரியில் வஞ்சிக்கப்பட்ட தமிழ் பாலைவனம் தெரியாது. அநியாயக்காரன் தமிழன் என்று தான் அவன் நினைப்பான்.
இப்படித்தான் நமது பொதுப்புத்தியை அமெரிக்க ஊடக்கம் செதுக்கி வைத்துள்ளது.
அதற்கு நாம் எல்லாரும் பலிகடா..!
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பிறகு 'உங்கள் வீட்டு பெண் பிள்ளைகள் ஸ்கூலுக்கு போக முடியாது'. மீறி போனால்?
இத புரிஞ்சிக்க எதுக்கு மதநூலை புரட்டிப் பார்த்து விளக்கம் சொல்லணும்னே புரியலை.எந்த காலகட்டத்தில் இவர்கள் வாழ்கிறார்கள் என்றே அதிர்ச்சியாய் இருக்கிறது.
Rule# 2. Never argue with a Communist because they never hear your argument.
1:48 PM //
Ivaru pinne pedal eduparunu patha, aru manineram agiyum alla kanaom. Ponga boss.
அதான் அவங்களுக்கு பீஜெ ன்னு ஒரு பெரியார் இருக்காரே மூளை சலவை செய்ய ...
//இப்ப கூட உங்க வாழ்க்கைக்கு பிறகு நீங்க சொர்கத்தை அடையணுங்கிறதுக்காகத்தான் பேசுறேன்.”//
கேபிள்ஜி... சுவனத்துல 72 கன்னி பெண்களை ஜஸ்ட் மிஸ் பண்ணிடீங்கலே ...
உண்மை என்ன, உரைப்பது என்ன, நம் தன்மை என்ன, தனித்துவம் என்ன...
(என் பேஸ்புக்கில் இருந்து...) விஸ்வரூபம் பற்றி இது வரை நான் இங்கே வாய் திறக்கவில்லை, காரணம் என் பேஸ்புக் பக்கத்துக்கு மதச்சாயம் பூசுவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. இப்போது சொல்ல நினைப்பதும் நடுநிலையான கருத்து தான்.
நான் ஒரு முஸ்லிம். அதற்காக பெருமைப்படுகிறேன். என்னுடைய இஸ்லாம் ஒரு மதமல்ல, ஒரு மார்க்கம். அதாவது எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எனக்குக் கற்றுத் தரும் ஒரு ஆசான். அவ்வளவு தான். அது எனக்கு அமைதியைக் கற்றுத் தருகிறது. பொறுமையைக் கற்றுத் தருகிறது. அழகிய வாழ்வியலைக் கற்றுத் தருகிறது. உண்ணுவது முதல் உறங்குவது வரை, திருமணம், உறவு பேணல், கடன், பிள்ளை வளர்ப்பு என அனைத்திலும் எனக்கு அழகாக வழிகாட்டுகிறது. எனக்கு ஒரு போதும் அது தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் கற்றுத் தந்ததில்லை. அதனால் தான் நான் பேஸ்புக்கில் மதம் பிடித்து ஆடுவதில்லை, ஆடுபவர்களை நட்பு வட்டத்தில் அனுமதிப்பதுமில்லை. (பேஸ்புக்கில் இப்பதிவும் கமெண்ட்ஸும்: http://www.facebook.com/sumazla/posts/585331091482190)
உங்களுக்குப் பிடிக்காவிட்டால் படத்தைப் பார்க்காதீர்கள். புறக்கணித்துவிடுங்கள். அதைவிட்டு விட்டு எதற்காக இப்படி ஆர்ப்பாட்டம் செய்து அடுத்தவர் எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறீர்கள்? தண்ணீருக்குள் பந்தை வைத்து அழுத்தினால் தான் அது வேகமாக வெளியே வரும். இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்தை நீக்க நீங்கள் பாடுபடும் அதே நேரத்தில், இஸ்லாமியர்கள் போராட்டக்காரர்கள் என்ற சாயல் படிந்துகொண்டிருக்கிறது. என் மக்களை மதம்பிடித்த போராட்டக்காரர்களாக இந்த சமுதாயம் பார்ப்பதை சத்தியமாக நான் விரும்ப மாட்டேன்.
பல்லாயிரம் வருடங்களாகப் போற்றிப்பாதுகாக்கப்படும் இஸ்லாத்தின் கண்ணியம் ஒரு படத்தினால் பாழ்படும் என்றால்.... எம் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள என் பல கோடி இந்து, கிறுத்துவ நண்பர்கள் ஒரு படத்தினால் தம் இஸ்லாமிய சகோதரர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கத் துவங்குவார்கள் என்றால்... அது முழு முட்டாள்தனம்! குறுகிய மனப்பான்மை!! உன் மார்க்கம் புனிதமான மார்க்கம் என்று நம்பினால், ஒரு சாதாரண திரைப்படம் அதை கெடுத்துவிட முடியுமா? அது என்ன அவ்வளவு சக்தி வாய்ந்ததா?
என்னைப் பொறுத்தவரை, இந்த ஆர்ப்பாட்டங்களே போதும் விஸ்வரூபத்துக்கு விளம்பர செலவை மிச்சப்படுத்த என்பேன். அரசியல் ஆதாயத்துக்காக அதிமுக அரசு முஸ்லிம்களை பலிகடா ஆக்கிவிட்டது என்று தான் தோன்றுகிறது.
மதவெறி கொண்டவர்கள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அவ்வாறு வெறி கொள்ள அவர்கள் மதம் சொல்கிறதா என்றால், இல்லை என்பேன். அப்படி சொல்லும் மதம் சரியான மதமாகவும் இருக்க முடியாது. மற்றபடி இந்துக்கள் என்றென்றும் இஸ்லாமியர்களின் உற்ற தோழர்கள் தான். அவர்கள் இப்படத்தைப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, எம்மை ஒரு போதும் தவறாகவோ, தீவிரவாதிகளாகவோ பார்க்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்! மேலும் விஸ்வரூபம் பற்றிய என் கருத்துக்கள் இங்கே: Vishwaroopam
என் கருத்துக்கள் சரி என்றால், இப்பதிவுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்கள், முடிந்தவரை ஷேர் செய்து மதநல்லிணக்கத்தை உருவாக்குங்கள்
சங்கர்.. நீங்க செய்தது சரியே.. எனக்கும் முஸ்லிம் நண்பர்கள் உண்டு.. இதே விஷயத்தை நான் சொன்னால் "ஆமாண்டா.. என்ன செய்யறது.. எங்க ஆளுங்களை விட்டு கொடுக்க முடியலை.." அப்படின்னு சொல்லுவாங்க.. இது புரிந்து கொள்ள கூடியதே.. அவரவர்க்கு ஒரு சில நம்பிக்கைகள் இருக்கும்.. சில சமயம் அது தவறு என்று தெரிந்தாலும் (மனதுக்கு), வெளி ஆட்களிடம் ஒத்துக்கொள்ள மனம் இடம் கொடுக்காது.. இதே விஷயத்தை இன்னொரு பொதுவான நண்பன் அதே முஸ்லிம் நண்பனிடம் சொன்னால் - "உங்களுக்குள் நடந்த அதே உரையாடல்கள்".. ஐயோ பாவம் நீங்க.. தொடைச்சுக்குங்க ரத்தத்தை
Pls Look at this article at Savukku : Even though many items are true, they wont believe.. Problem is they won't listen and they dont try to understand women feeling.
http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1749:2013-01-29-04-01-16&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19
பதிவை படித்ததும் சிரிப்பு தான் வந்தது..உரையாடிய உங்கள் இருவரையும் நினைத்து..! உங்களிடம் கேள்வி கேட்க ஆவல் !..ஆப்கனில் தான் தாக்குதல் நடக்கிறது..அமெரிக்காவில் அல்ல..ஆப்கனில் அமெரிக்க படைகளுக்கு என்ன வேலை..? ஒரு பெண்ணை தவறுதலாய் சுட்டதால் ஒரு அமெரிக்க படை வீரன் வருத்தப்படும் அளவுக்கு முழுக்க முழுக்க அமெரிக்க சார்பு திரைப்படமாக அமைந்திருப்பதாக பல நடு நிலை கருத்துக்களை பார்த்துவருகிறோம்..இது வரலாற்று திரிபு இல்லையா.? அமெரிக்காவிடம் படத்தை திரையிட்டு காட்டும் அளவிற்கு என்ன அவசியம்..?
நன்றி !!!
ஆசிக், என்னிடம் உண்மையான முஸ்லிம்களே இப்படி வாதாடிஇருக்கின்றார்கள். அவர்கள் சிங்கப்பூரில் நல்ல வேளையில் இருக்கும் இந்திய முஸ்லிம்கள். உங்களுக்கு சங்கருடன் கதைத்தவர் முஸ்லிம் அல்ல என்று எப்படி உறுதியாக தெரியும் ??????
உங்களை போல் அனைத்து முஸ்லிம்களும் தெளிவான அறிவு உடையவர்கள் என்று நினைப்பது தவறானதாகும்.
எனது தனிப்பட்ட அனுபவத்தின் படி பகிர்கின்றேன்.
உங்கள் வார்த்தைகள் அழகாக உள்ளன. இந்த நிலைமையில் உங்களுடன் வாதாட செல்வதை போல ஒரு முட்டாள் தனம் உலகில் ஒன்றும் இல்லை.
உங்கள் விமர்சனத்தில் இருந்து நீங்கள் யாரென தெரிகின்றது.
Coming to the issue of Viswarupam, it is a film based on what one reads about the happenings in Afghanistan and in the World, in general. Of course, the characters and the instances are fictitious. Why does a select set of groups object and why not just express their protest by issuing a statement against certain depictions in the film if they are totally unfounded? If they had happened even once somewhere in the real world, then the freedom to show this is to be given to Kamal - as his point of view. As long as he doesn't use it to emphasize that 'ALL' Muslims are like that. The film is said to be derogatory to Hinduism as well. Best is to let the film run and the audience to decide. If the film was released, most of us would have missed the so called objectionable scenes; now, every one is aware threadbare of the scenes. The pity is the government - rather the CM - has taken sides without bothering to see the film. Whatever the CM has said, I am of the opinion that she has bias agains Kamal.
-R. J.
“அவங்க எல்லாம் தீவிரவாதிங்க. அடிப்படைவாதிங்க.. இதை உங்க மதத்து ஆள்களே சொல்லியிருககாங்க. ஒலகமே சொல்லுங்க “//
அவர்களை வளர்த்துவிட்டது யார், அவர்கள் எப்பேர்பட்ட தீவிரவாதிகளாக இருக்கவேண்டும்? அதை யாரேனும் ஏற்றுக்கொள்வார்களா?
சூட்சம கயிறு எங்கிருந்து நீள்கிறது தெரியுமா?
கிளிக்கி ரெக்க மொலச்சுட்டுது, பறந்து பறந்து போயிட்டுது..
1.அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தான் செப் 11 தாக்குதல் நடத்தியது
2 மும்பை தாக்குதல் நவ 26 மோடி தான் ஆள் அனுப்பி வைத்தார்
3 ஒசாமா அமெரரிக்கா வின் ஆள்
4 பாபர் மசூதியே அத்வானி தான் கடப்பாரை கொண்டு உடைத்தார்
5குஜராத் கலவரம் மோடி முவாயிரம் இஸ்லாமிய மக்களை தன் கையாலே கொன்றார்....
13 வயது இஸ்லாமிய நண்பரும் மேற்குறிய அணைத்திருக்கும் அவர் ஆதாரம் வைத்து இருப்பார் அல்லது ஆணி தரமாக நம்புவர் மேற்குறிய சம்பவத்தை வைத்து விவாதம் நடத்தினால் தனது நிலையில் இருந்து மாறமாட்டார்கள்...
அருமையான வரிகள்! பகிர்வுக்கு நன்றி!
“உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் மதத்தை கையில் எடுத்து வாருங்கள் ....கிழி கிழி என கிழிக்கிறேன்”
இஸ்லாத்தை, குரானை கிழி கிழி என்று கிழிக்கும் ”Satanic Verses” புத்தகம் amazon.com-ல் இப்பொழுதும் கிடைக்கிறது. http://www.amazon.com/Satanic-Verses-Salman-Rushdie/dp/0670825379.
இவர்களுக்கு என்று ஒரு சட்டம்..எதுவாக இருந்தாலும் அவர்களுக்கென்று தனி சட்ட அமைப்பு..இந்தியாவில் சட்டத்தை மதிக்க முடியாதென்றால், கிளம்ப வேண்டியது தானே?
Dr Zakir Nailk......,,
Please Contact;Dr ZAkirNaik.or see his programs on
Many sites.......
4 பாபர் மசூதியே அத்வானி தான் கடப்பாரை கொண்டு உடைத்தார்
5குஜராத் கலவரம் மோடி முவாயிரம் இஸ்லாமிய மக்களை தன் கையாலே கொன்றார்....
..///
in your terms - Osama took each flight and crashed in to each tower right? that is why America declared him a wanted criminal.... sema logic boss...
”நான் வாழ்ற வாழ்கையே எனக்கு சொர்க்கம்தான்”
///
super
அப்புறம் ராமசாமி நாயக்கர் பத்தி சொல்லிருக்கீங்க, அவரு முஸ்லீம்னா பயப்படரவரு, ஹிந்துக்கள்ட்ட மட்டும் தான் அவர் பப்பெல்லாம் வேகும். இது வரலாறு. அதனால ம. வெங்கடேசன் எழுதின ஈ வே ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்கிற புத்தகத்தை கொஞ்சம் கவனமா படிங்கன்னு அண்ணன் கேபிளாரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அப்புறம் இன்னொன்னு சொல்றேன் கேளுங்க, வாஹாபி முஸ்லீம்களால் தான் எங்களுக்குப் பெரிய பிரச்சனை' - சொன்னவர் ஒர் முஸ்லீம் நண்பர்.
அதென்னங்க வாஹாபி முஸ்லீம்? நான் கேட்டேன். 'அதாவதுங்க, முஸ்லீம்கள்ல ரொம்பகாலமா பெண்கள் பொட்டு வெச்சிக்கறது , பூ வெச்சிக்கறது எல்லாம் வழக்கமாக சில பேர்கிட்ட இருக்கு. கருகமணி இருக்குல்ல, அதுல தாலி செஞ்சி கல்யாணத்துக்கு தாலி கட்றதும் எங்க வழக்கத்துல இருக்கு. ஆனா சமீபகாலமா இந்த வாஹாபி முஸ்லீம்க ரொம்ப ஆதிக்கமா உள்ள புகுந்து பொட்டு வெக்க கூடாது பூ வெக்க கூடாது, தாலி கட்ட கூடாது, இதெல்லாம் இஸ்லாத்துக்கு விரோதம்னு பிரச்சாரம் பண்ணி நிறைய முஸ்லீம்களை வாஹாபியிசத்துக்கு மாத்தறாங்க. அவங்கள மாதிரி உள்ளவங்க இப்போ ஒரு சினிமாவைக்கூட பெரிய விஷயமாக்கி எங்களை தெருவுல நடக்க முடியாம பன்றாங்க', நாலு பேரு இருக்கற எடத்துல நின்னு பேசினா நம்ம பேர சொன்னவுடனே அவங்க முகம் மாறிடுது , வேற மனுஷங்களா பாக்றாங்க என்றார். முஸ்லீம்னா வீடு வாடகைக்கு கிடைக்க மாட்டேங்குது..'
நான் குறுக்கிட்டேன்... நீங்க சொல்ற இதே காரணங்களைத் தானே அவங்களும் சொல்லி அதுக்கெல்லாம் இந்த சினிமாக்கள் தான் காரணம்னு சொல்றாங்க ' என்றென்.
அவர் அலுத்துக் கொண்டார். 'இல்லீங்க, இவங்க தாங்க உண்மையான காரணம், பொலிட்டிக்கலா இவங்களுக்கு லாபம் கிடைக்கறதுக்காக போராட்டம், ஆவூன்ன தெருவுல இறங்கி ஆர்பட்டம்னு பன்றது, சண்டை போடும்போது மட்டும் தலைல தொப்பியும் தாடியுமா எல்லா எடத்திலயும் நின்னுக்கிட்டு எங்க பேர கெடுக்கறாங்க.' இவங்களப் பாத்து பயந்து போற மத்தவங்க, எங்கள மாதிரி சாதாரணமா அக்கம்பக்கத்து மனுஷங்களோட வாழறவங்களை ஒரு மாதிரி பாக்க ஆரம்பிச்சிடுறாங்க. இப்டியெல்லாம் பன்றதால இவங்களுக்கு ஏதாவது ஆதாயம் இருக்கலாம்.... ஆனா என்ன மாதிரி ஆளுங்களுக்கு தாங்க கஷ்ட்டம்...!!' என்றார் அந்த முஸ்லீம் நண்பர். என்னன்னவோ நடக்குது நாட்ல!
http://hayyram.blogspot.in/2013/01/blog-post_27.html
You think Malalaa, a girl who tried to get the freedom of education and was shot by Taliban.
Well I'm not trying to Justify Talibaan but the truth is that Taliban has never taken the responsibility of that attack but they are suspected for that attack (like 9/11) by America so you're telling they are terrorist.
But how many of you know about the schools which are been destroyed by American Helicopters and 100 of innocent Students in Afghan and Pakistan were killed due to American air ship attacks.
So is this not against the Humanity, Is this not terrorism.
But when it is just suspected to done by Muslims you blindly call it terrorism.