Balupu

ரவி தேஜா ஒரு பேங்க கலெக்டிங் ஏஜெண்ட், அவரது அப்பா, ப்ரகாஷ்ராஜுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். ப்ரம்மானந்தமும், ஸ்ருதியும் பணக்கார வீட்டு ஆட்கள், பொழுது போக்கிற்கு இளவயது பையன்களை காதலிப்பதாய் சொல்லி அவர்களிடமிருந்து பணம் பறித்து அழ விடுவதுதான் இவர்களது வாடிக்கை. இவர்களின் ஆட்டம் தெரிந்த ரவிதேஜா ஸ்ருதிக்கு பாடம் புகட்ட நினைத்து பழக, அவர்களுக்குள் காதல் உண்டாகிறது. எல்லாம் கூடி வரும் நேரத்தில் வில்லன் கும்பல் ஸ்ருதியை கடத்துகிறது. அவர்கள் தேடி வந்த ஷங்கரும், நானாஜியும், வந்தால்தால் தான் ஸ்ருதியை விடுவோம் என்று சொல்ல, பின்பு என்னவாகிறது என்பதுதான் கதை.