கொத்து பரோட்டா - 26/10/15
சாப்பாட்டுப் சிறப்பிதழ் வெளிவர இருக்கிறது. சாப்பாடுன்னு முடிவானதுக்கு அப்புறம் நீங்க எழுதலைன்னை எப்படி? ஒரு கட்டுரை அனுப்புங்க என்றார் பிரியா கல்யாணராமன். இணையத்தில் ஆரம்பித்து, விகடன், கல்கி, இணைய இதழ்கள், தமிழ் இந்துவென பத்திரிக்கைகளிலும் எழுத ஆரம்பித்து வருடங்கள் ஆனாலும், குமுதத்திற்காக உத்தம வில்லனுக்காக எழுதிய சிறு பத்தி தவிர எழுதியதில்லை. முதல் முறையாய் ஒரு கட்டுரை. அதுவும் சாப்பாடு குறித்த என் அனுபவத்தை குறித்து. குமுதத்தில் எழுதுவது என்பது பிக் பட்ஜெட் கமர்ஷியல் படத்திற்கு ஈடான விஷயம். அவர்களுடய வாசகர் வட்டம் அவ்வளவு விரிவானது. படிச்சிட்டு சொல்லுங்க.