Posts

Showing posts from July, 2016

கொத்து பரோட்டா -25/07/16

டெ ல்லியில் 14 வயது தலித் பெண்ணை இரண்டாவது முறையாய் கடத்தி கற்பழித்திருக்கிறார்கள். அதில் அப்பெண் இறந்து போயிருக்கிறாள். இது வரை எந்த மீடியாவும் பெரிதாய் கூவியதாய் தெரியவில்லை. அதே போல கபாலி பட வெளியீட்டன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு ஆலந்தூர் வழியாய் போய்க் கொண்டிருந்த போது உச்சா வர வேறு வழியில்லாமல் ரோட்டோரம் நின்று அடிக்கும் வேலையில் அங்கே ஏதோ ஒரு சத்தம் வர, என்னவென்று பார்த்த போது ஒரு பெண் தன்னை காப்பாற்றும் படி அலறியிருக்கிறார். உடனே அங்கே களத்தில் இறங்கிய போது அங்கே மூன்று வேற்று மாநில இளைஞர்கள் அப்பெண்ணின் உடைகளை களைய முயற்சித்துக் கொண்டிருக்க, தடுக்கப் போன இந்த இளைஞரை மூங்கில் கழி கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இந்த சந்தடியில் அப்பெண் அவர்களிடமிருந்து விலக, அங்கே பாஸ் செய்த ஆட்டோ ட்ரைவர் ஒருவர் துணைக்கு வர, மூவரும் தப்பியோடிவிட்டதாகவும், அவர்கள் அடித்த அடியினால் கிடைத்த காயத்தை பேஸ்புக்கில் போட்டு இதனால் தான்பெருமை கொள்வதாகவும் போட்டிருந்தார். அப்பெண் போலீஸ் கேஸெல்லாம் வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் போலீஸ் கம்ப்ளெயிண்ட் தரவில்லை என்றும் சொல்லியிருந்தார்...

கொத்து பரோட்டா - 18/07/16

மாற்று சினிமாவிற்காக மட்டும் சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாய் கிட்டத்தட்ட சேவை மனப்பான்மையுடனே வலம் வரும் ‘நிழல்’ திருநாவுக்கரசு அவர்கள் புதியதாய் நிழல் பதியம் திரைப்பட  அகாடமி தொடங்கியிருந்தார். அவரது மகன் விஜய் அழைத்திருந்தார். நண்பர்கள் சூழ் கூட்டம். ஆரவாரமில்லாமல் தொடக்க விழா நடந்தேறியது. எம்.பி.இளங்கோவன், டிராஸ்கி மருது, எஸ்.பி.ஜனநாதன், கவிதாபாரதி, மீரா கதிரவன், சக்திவேல் பெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து பேசினார்கள். பின்பு தமிழகம் எங்கும் நிழல் நடத்திய குறும்பட பட்டறையில் பயின்று இன்றைக்கு திரையுலகில் காலூன்றி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறவர்கள் பேசினார்கள். நல்ல அனுபவத்தை கொடுக்கக்கூடிய ஒர் அகாடமியாய் இது இருக்கும் என்பதற்கான சான்று இவர்கள் தான். வாழ்த்துக்கள் நிழல் திருநாவுக்கரசு சார்.. @@@@@@@@@@@@@@@@@@@@@@ எங்கே பார்த்தாலும் கபாலி படத்தின் ப்ரோமோ, அல்லது அதைப் பற்றிய பேச்சாய்த்தான் இருக்கிறது. முதல் நாள் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய் என்று பப்ளிக்காய் போட்டிருக்கிறார்கள். ஜாஸ் சினிமாதான் இப்படத்தின் தமிழக வியாபாரத்தை எடுத்...

கொத்து பரோட்டா - 11/07/16

Image
OzhivuDivasatheKali கதை கதையென்று தேடிக் கொண்டிருக்கிறோம்.. கதை நம்முள்ளேயே கொட்டிக் கிடக்கிறது என்பது இப்படம் உ.கை.நெ.கனி. ஐந்து நடு வயதுக்காரர்கள். நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கம்யூனிட்டி. நாட்டில் தேர்தல் அன்று விடுமுறையாதலால் யாருமில்லாத ஒரு கெஸ்ட் அவுஸில் ஒன்று சேர்ந்து தண்ணியடித்து கொண்டாட ப்ளான் செய்து கிளம்புகிறார்கள். அங்கேயே இருக்கும் வாட்ச்மேன் மற்றும் ஒரு சமையற்காரியை வைத்து கோழி சமைத்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். படம் முழுக்க, இவர்களின் பேச்சுக்கள் மற்றும் குடி தரும் சுகாபனுவத்திலிருந்து மோசமான அனுபவம் வரை. கிட்டத்தட்ட நிறைய காட்சிகள் ஸ்டெடி ப்ரேமாகவோ, அல்லது லேசான பேனிங்குடனோ ஆன காட்சிகள். இரண்டாம் பாதி முழுக்க ஒரே ஷாட். அட்டகாசம் என்றால் அதற்கு இதுதான் உதாரணம். நடிப்பு, வசனங்கள், படமாக்கியவிதம் என கிட்டத்தட்ட கேண்டிட்டாய் நம்மை நாமே காணும் வாய்ப்பு. அரசியல், ஆண் ஆதிக்கம், ஜாதி, வேலை, பெண், காமம், காழ்ப்புணர்ச்சி, நட்பு,  எளியோரை பழிவாங்கும் மன வியாதி. பணம் கொடுக்கும் திமிர், பதவி, பவர் என பேசாத விஷயமில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது க்ளைமேக்ஸ் நம்மை அப்ப...

சாப்பாட்டுக்கடை - சேலம் மங்களம் மெஸ்

Image
சேலத்து மக்களுக்கு இவர்கள் பிரபலம். குறிப்பாய் நாட்டுக் கோழி பிச்சிப் போட்டது என்று ஒரு அயிட்டம் தருவார்கள். ஆவ்ஸமாய் இருக்கும், உடன் மிளகை அதிகமாய் சேர்த்த சிக்கன், மற்றும் மட்டன் குழம்பு வகையராக்கள், கொடுப்பார்கள். சேலத்திலேயே கொஞ்சம் காஸ்ட்லியாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் கொடுக்கும் பிச்சிப் போட்ட நாட்டுக் கோழியை அடிச்சிக்க யாராலும் முடியாது. சில வருடங்களுக்கு முன் சென்னையில் சாலிகிராமத்தில் ஆரம்பித்தார்கள். நாசியில் நாக்கில் அவர்களுடய சாப்பிட்ட ருசி உட்கார்ந்து கொள்ள, அடுத்த நாளே அங்கே ஆஜாராகிவிட்டேன். 

கொத்து பரோட்டா -04/07/16

Image
நேற்று உறியடி, ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, அம்மா கணக்கு படங்களைப் பற்றிய கருத்துபதிவு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். பாஸ்கர் சக்தி, ஷான் போன்றோருடன் ராஜா மந்திரி இயக்குனரும் வந்திருந்து பேசினார். உறியடி இயக்குனருக்கு உடல் நலமில்லாததால் வர முடியவில்லை என்றாலும் அப்படத்தை அவர் எடுக்க, வெளியிட, எத்தனை மாற்றங்கள் போராட்டங்களை தொடர்ந்து இந்த வெற்றி கிடைத்து என்பதை நண்பர் என்கிற முறையில் சொன்னேன். அதே போல ராஜா மந்திரி ஸ்கிரிப்டை முழுக்க ஒரே மணி நேரத்தில் காபி டேயில் படித்ததையும், பின்பு அக்கதைக்கு விவாதம் செய்ததையும் நினைவு கூர்ந்தேன். ஒரு நாள் கூத்து படம் ஏன் எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னதை முழுக்க, கேட்டுவிட்டு, கிளம்பும் போது அப்படத்தின் திரைக்கதை எழுதிய சங்கர தாஸ் வந்து பேசினார். அவரும் நானும் ஏற்கனவே போனவாரம் இயக்குனன் குறும்பட வெளியீட்டில் சந்தித்திருந்தோம்.சீரியஸான விவாதமாய் இல்லாவிட்டாலும் சுவாரஸ்யமாய் சென்றது விழா. அமைத்து நடத்திய விஜயனுக்கும் அவரது பொறுமைக்கும் வாழ்த்துக்கள். @@@@@@@@@@@@@@@@ அவளும் நானும்- குறும்படம் ரொ ம்பவும் சிம்பிளான கதை. ஓவர் பொஸஸிவ்னெஸினால் பிர...