Posts

Showing posts from November, 2016

கொத்து பரோட்டா -2.0-8

கேட்டால் கிடைக்கும் மால்களுக்கு போனால் அங்கேயிருக்கும் புட்கோர்ட்டுகளில் சாப்பிட வேண்டுமென்றால் அவர்களிடம் 20 ரூபாய் கொடுத்து கார்டு வாங்கி அதில் நம் பணத்தை கொடுத்து சார்ஜ் செய்து  கொள்ள வேண்டும். உள்ளே சாப்பிட பணத்திற்கு பதிலாய் கார்டை ஸ்வைப் செய்தால் போதும். ஆரம்ப காலத்தில் இது என்னவோ அவர்கள் நமக்காக செய்யும் வசதியாக தெரிந்தாலும், நிஜத்தில் மகா கொள்ளை. ஒருவர் ஆரம்பித்த பழக்கம் எல்லா மால்களிலும் தொடர, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். இந்த கார்டு வாங்குவதால் வாடிக்கையாளர்களான நமக்கு என்ன உபயோகம்? இந்த கார்ட்டை நாம் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும்?. இந்த கார்டு கொடுப்பதினால் ஏதேனும் டிஸ்கவுண்ட் கிடைக்குமா? கார்டு வேண்டாம் என்று திரும்பக் கொடுத்தால் ஏன் நம் பணத்தை திரும்பக் கொடுப்பதில்லை? அது எப்படி சரியான வியாபார முறையாகும்? என்கிற கேள்விகளை யாரும் கேட்பதில்லை. ஏனென்றால் பெரும்பாலும்  அப்பன் காசில் செலவு செய்கிறவர்கள். அதையும் மீறி தன் தோழிகளுடன் வரும் போது ஐந்துக்கும் பத்துக்கும் சண்டை போடுகிறவனாய் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. குடும்பங்களுடன் வருகிறவர்களோ.. ...

கொத்து பரோட்டா – 2.0-7

காதல் என்கிற பெயரில் ஸ்டாக்கிங் அதாவது பெண்களை பின் தொடர்ந்து, கம்பெல் செய்து, மனரீதியாய், உடல் ரீதியாய் துன்புறுத்தி, செய்யடுவது தான் காதல்.   என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தும் சினிமாக்களைப் பற்றி பேச அம்பேத்கார் பெரியார் ஸ்டடி சர்க்கிளின் சார்ப்பாக அழைத்திருந்தார்கள். சுவாதியில் ஆரம்பித்து கடந்த ஒரு வருடத்தில் நடந்த ஒருதலைக் காதல் கொலைகளைப் பார்க்கும் போது இது நிச்சயம் தீவிரமாய் பேச வேண்டிய ஒரு விஷயம். ஆனால் அதை சினிமாவை மட்டுமே குறிவைத்து பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   சென்னை போன்ற இடங்களில் கூட ஆண் பெண் இணைக்கமாய் பழக்கக் கூடிய சமூதாய நிலை இன்னும் ஏற்படாத நிலையில், நகரமில்லாத ஊர்களில் ஆணும் பெண்ணும் பேசுவதே ஆச்சர்யம் மிகுந்த விஷயமாய் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணை காதல் செய்ய அவளை பின் தொடர்ந்து   இம்ப்ரஸ் செய்து, தன்   காதலை சொல்வது தான் சரி என்கிற எண்ணம்   இருப்பதும், அதை அவள் ஏற்க மறுக்கும் போது அதை தோல்வியாய், அவமானமாய் பார்க்கும் மனநிலைக்கு ஆண் தள்ளப்படுவதால் நடக்கும் குற்றங்களும் பார்க்கும் போது, சினிமா தான்   இவர்களை கெடுப்பதாய் மனம...

கொத்து பரோட்டா 2.0-6

கொத்து பரோட்டா -2.0-6 நாட்டில் எங்கு பார்த்தாலும் பெண்கள் மீதான வன்முறை அதிகமாகிக் கொண்டுதானிருகிறது. நாட்டில் நடக்கும் பல கற்பழிப்பு சம்பவங்கள் வெளியே தெரிவதேயில்லை. அதையும் மீறி இந்திய அளவில் ஒரிரு சம்பவங்கள் மீடியாவினால் பெரிதாக்கப்பட்டு அதன் பிறகு பேசப்படுவதில்லை. ஆனால் இந்த இழி செயலை செய்பவர்களை சட்டமும் பெரிய அளவில் தண்டிப்பதில்லை. சில வருடங்களில் வெளிவந்து கல்யாணம் செய்து கொண்டு ரேப்பை விட்ட இடத்திலிருந்து ஒரே இடத்தில் பண்ணிக் கொண்டுதானிருக்கிறான். அதிலும் ரெண்டு வயது பெண் குழந்தையிடமெல்லாம் இந்த வேலை செய்கிறவனின் “லுல்லா” வை அறுத்து எரியணும் என்று பெருங்கோபத்தோடு பெருமுகிறவர்கள் இருக்க, சமீபத்தில் அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் கிம்பர்லி வால்ட் எனும் 17 வயது பெண் தன் நண்பர்களுடன் நடந்து போகும் போது ராபர்ட் வில்லியம் எனும் மூன்று முறை தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ட்ரைவுக்கு அழைத்து, வால்ட் மறுத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரை தூக்கிப் போய் கற்பழித்துவிட்டார். அந்த போராட்டத்தில் வால்ட் மயக்கமடைந்துவிட, எழுந்து பார்த்தபோது தன்னை கற்பழித்தவன் குடி போதையில் இருக்க, த...