Posts

Showing posts from October, 2017

கொத்து பரோட்டா 2.0-44

கொத்து பரோட்டா 2.0-45 மூன்றே வாரத்தில் தமிழக சேட்டிலைட் சேனல்களின் ஜிஆர்.பியில் இரண்டாம் இடம் பிக் பாஸினால். ஊரே கண்டுகொள்ளாமல் இருந்த ஓவியாவுக்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு. இன்னொரு புறம், ஊரே நம்ம ஊரு தமிழச்சி என்று கொண்டாடிய ஜூலி இந்த நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்தே அவரை பிடிக்காமல் போனவர்கள் அதிகம். அது போல போன வாரம் கோபிநாத்தின் விவாத நிகழ்ச்சியில் கல்யாணத்திற்கு முன்னான காதலை சொல்வது நல்லதா இல்லை சொல்லாமல் விடுவது நல்லதா? என்று பரபரப்பாக போனது. நான் சொல்லிடுவேன்,சொல்லியிருக்கேன் என்று சொன்னவர்கள் கூட சொன்னது தப்போ என்று யோசிக்குமளவுக்கு நிகழ்ச்சி போய்க் கொண்டிருக்கையில், நான் எழுதிய துரோகம் எனும் சிறுகதை  நியாபகத்திற்கு வந்தது.   துரோகம் மிக சீரியஸாய் பெட்டுக்கு எதிரில் இருந்த எல்.சி.டியில் “ எஃப் ” டிவியை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு , சட்டென அடுத்த சேனலை மாற்ற … நைட்டியில் வந்த பூஜா ஒரு செகண்ட் அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு , ஏதும் பேசாமல் அவனருகில் படுத்தாள். ஒரு வாரமாய் அப்படித்தானிருக்கிறாள். ” நடந்த...

மின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்

பேஸ்புக் ஹிட் சென்ற வாரம் மலையாளப்படத்தைப் பற்றி எழுதியவுடன் அது என்ன படம் என்று பல பேர் கேட்டிருந்தார்கள். அது நண்டுகளூடே நாட்டில் ஒர் இடைவேளா. நிவின் பாலி நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்தும் அளித்த படம். இந்தக்கதையை எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாய், அழுகாச்சியாய் இல்லாமல் எடுத்தார்கள் என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. வழக்கமாய் இம்மாதிரியான கதைகளில் பார்ப்பவர்களின் தொண்டையை அடைக்கும் சோகமே வெற்றிக்கான அளவுகோல். ஆனால் இவர்கள் இப்படத்தில் கொண்டாடுகிறார்கள்.கண்களில் திரையிடும் கண்ணீருக்கிடையே சிரிக்கிறார்கள். நிவின் பாலி லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது அம்மா சாந்திகிருஷ்ணா.அப்பா லால். வீட்டில் தங்கை, அவளுடய கணவன், வயதான தாத்தா, என ஜாயிண்ட் பேமிலி. ஒர் சுபயோக சுபதினத்தில் சாந்திகிருஷ்ணா தனக்கு மார்பக புற்று நோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அவரே தைரியமாய் டெஸ்டுக்கும் போய் நிற்கிறார். ஆம் ஸ்டேஜ் 2 என்று முடிவான போதும் தளரவில்லை. இதை தெரிவிக்காமல் மகனை உடனடியாய் இந்தியாவுக்கு வரும் படி அழைக்கிறார். இம்மாதிரியான திடீர் அழைப்புகள் எல்லாம் கல்யாணத்துக்காகத்தான் என்று நண்ப...

மின்னம்பலம் கட்டுரை -விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா?

விமர்சனம் பண்ணலாமா இல்லை வேண்டாமா? விவேகம் ரிலீஸ் ஆன நாளிலிருந்து இணையமெங்கும் ப்ளூ சட்டைக்காரர் எனும் விமர்சகரை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள். அதிகாலை காட்சியிலிருந்து வெளிவந்த ரசிகர்கள் உட்பட விமர்சனம் ரெண்டும் கெட்டானாய் இருக்க, இணைய விமர்சகர்கள் ஆளாளுக்கு வலிக்காமலும், வலித்தா மாதிரி காட்டிக் கொள்ளாமலும், படம்னா இதுதாண்டா படம் என்று அஹா ஓஹோ என பாராட்டியும் விமர்சனங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த ப்ளூ சட்டைக்காரர் மட்டும் வழக்கம் போல கழுவி ஊத்தி விட்டார்.  ஒவ்வொரு முறை பெரிய பட்ஜெட், நடிகர் படம் வரும் போதும் இதே பிரச்சனை தான். ஆரம்பத்திலிருந்து இன்று வரை இணையத்தில் வரும் விமர்சனங்களால் எங்களுக்கு ஏதும் பாதிப்பில்லை என்றே சொல்லி வந்தாலும், நிஜத்தில் இதற்கான பாதிப்பு இருக்கிறது என்று  திரையுலகத்தினர் நம்புகின்றார்கள் என்றே தோன்றுகிறது. இல்லாவிட்டால் இத்தனை கூப்பாடு தேவையேயில்லை. ஒரு காலத்தில் பத்திரிக்கை விமர்சனங்களைத் தவிர வேறு விமர்சன ஊடகமேயில்லாத நிலையில் பாஸ் மார்க் வாங்கினாலே ஒரளவுக்கு தப்பிச்சோம் என்று ஒரு பத்திரிக்கை விமர்சனத்துக்காக காத்த...

கொத்து பரோட்டா -2.0-43

கொத்து பரோட்டா 2.0-44 Dialouge in the dark “நீங்கள் அடையப் போவது ஒரு வித்யாசமனா அனுபவம். உள்ளே சென்ற பின் திரும்பி வர நினைத்தால் உங்கள் பணம் திரும்பத் தர இயலாது. அதனால் முடிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் அங்கே செலவிடும் நிமிடங்கள் உங்கள் வாழ்க்கையின் திரில்லிங்கான நிமிடங்கள்” என்பது போன்ற வாசகங்களைப் படித்துவிட்டும் தயாராய் வாசலின் முன் குடும்பத்துடன் நின்றோம். வெளிச்ச மண்டலத்தின் அடுத்த பக்கம். சுவர் முழுவதும் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. ஸ்லைடிங் டோர் திறந்த மாத்திரத்தில் உள்ளிருந்து அழகிய பெண் குரல் கொஞ்சம் ஆளுமையாய். “சுதிர் யாரையும் உள்ளே அனுப்பாதே. ஆட்கள் வருகிறார்கள்” என்றாள். நான்கைந்து பேர் வெளிவந்த மாத்திரத்தில் அழைத்து வந்தவரின் கை பிடித்து நன்றி சொன்னதில் ஆழ்ந்த அன்பு இருந்தது போல தெரிந்தது. அவர்கள் போன மாத்திரத்தில் அதே பெண் குரல் உங்கள் பெயர்களை தெரிந்து கொள்ளலாமா?”  என்றாள். சொன்னோம். அடுத்த கணம் வெளிக்கதவு சாத்தப்பட்டது. சட்டென்று கருகும்மென்ற இருட்டு. லேசாய் வயிற்றை புரட்டியது. ”ஐயம் பீலிம் அன் கன்பர்டபிள் திரும்ப போயிரலாமா?” என்றேன். மனைவியும், மகன...