நிதர்சன கதைகள்-1 ‘என்னை பிடிக்கலையா..?’

“என்னை பிடிக்கலையா?.. நான் அழகாயில்லையா..?” என்று மோடாவில் என்னை சாய்த்து, தன் ’மெத்’ மார்பினால் அழுத்தி, என்னை ஆக்கிரமித்து, முகத்தை முட்டுகிற மூச்சு காற்றில் அவளின் மிண்ட் வாசனையுடன் கேட்பவளை பார்த்து என்ன பதில் சொல்வது?
“இ...இ..இல்ல அப்படி ஓண்ணுமில்...” என்று முடிப்பதற்குள்,
“இல்லையில்லை..இல்லையில்ல..”என்றபடி அழுத்தமான முத்தங்களை உதட்டிலும், முகத்திலும் மாறி, மாறி கொடுத்தாள். ஓரு விதமான வெறியுடன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தாள், விலகுவதா? அணைப்பதா என்ற குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் அவளின் அணைப்பும், நெருக்கமும் என்னை மேலும் ஸ்டுமுலேட் செய்ய, அவளை அப்படியே திருப்பி அணைத்து, அவளின் மார்புகளின் இடையே முகத்தை வைத்து முத்த்மிட்டு, அவளை அலேக்காய் அவளுடய பெட்ரூமுக்குள் தூக்கி சென்றேன். அவள் கண்களில் ஓரு பளபளப்பு இருந்தது.
ஐந்து வயதில் ஓரு பையன் இருக்கிறான் என்றால் நம்புகிற மாதிரியா இருக்கிறாள் இவள்?. நல்ல உருவி விட்டாற்ப் போல் உடல்.. நல்ல உயரம்.. நிற்கும்போது அவளை பார்ததைவிட, படுத்திருக்கும் போது அவள்து நீளமான கால்களும், தொடைகளும், என்னுள் அனலை மேலும் தகிக்க வைக்க, அவள் கலைந்திருந்த தன்னுடய மேலாடையை விலக்கி, சினிமாவில் வருவது போல் கைகளை விரித்து, கிறக்கமாய் பார்த்து, ஹஸ்கியாய் ”வா” என்றாள், சென்றேன்..
அவள் பெயர்.. அது எதற்கு உங்களுக்கு. அவள் என் ஹவுஸ் ஓனரின் மனைவி. நான் அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருக்கிறேன். ஓரு முறை அவளை பார்த்தால் கண்டிப்பாய் திரும்பி பார்க்காமல் போக மாட்டீர்கள். அசத்துகிற அழகில்லையென்றாலும் கவனிக்க தக்க அழகு, மிக எளிமையான உடைகளிலேயே ஆடம்பரமாய் தெரிவாள். சிவப்பும் இல்லாமல், கருப்புமில்லாமல் ஓரு மாநிறம். அவளிடமும், அவளின் செயகளிலிலும் ஓரு இண்டுசுவாலிடியும், சிம்பிளான அழகும் இருக்கும். யாரை பார்த்தாலும் சிரித்தபடி கண்களை பார்த்து பேசும் அவளுடய பேச்சு என்று அவளை பார்த்தால் எல்லாருக்கும் பிடித்துவிடும்.
அவள் பாடி நீங்கள் கேட்க வேண்டும், அதிலிருந்து தான் ஆரம்பித்தது. ஓரு முறை நான் மாடியிலிருந்து கீழிறங்கும் போது அவள் ”வசீகரா” பாடி கொண்டிருப்பதை நின்று கேட்டுவிட்டு, மெதுவாய் வீட்டு காலிங்பெல்லை அழுத்தி, அவள் மாவரைக்கும் கையோடு யாரோ என்று வர, என்ன பார்த்ததும்
“என்ன ரமேஷ்” என்றாள் கண்கள் விரித்து,
“ஒண்ணுமில்லை பாட்டு சூப்பர். அதிலேயும் ”எங்கேயும் போகாமல் என் வீட்டிலேயே நீ வேண்டும்”ன்னு நீங்க பாடினீங்களே.. என்னா பீல்.. கேட்டா.. எவனுக்கும் வீட்டை விட்டு போக மனசு வராது. சூப்பர்” என்று பாராட்ட, அவள் முகத்தில் சட்டென்று ஓரு அலையாய் வெட்கம் படர்ந்ததை தவிர்க்க நினைத்தது போல தன் மாவு கையுடன் முகத்தில் கை கொண்டு போக, முகத்தில் ஆங்காங்கே மாவாகி, “சே.. சாரி.. தேங்கஸ்.. தேங்க் யூ வெரி மச்.. “ என்று சொல்லியவாறு முகம் துடைக்க போனது, இன்னமும் என் கண்களிலே இருக்கிறது.
அன்றைக்கு மதியமே.. என்னுடய் செல்லுக்கு போன் செய்தாள்..
”ஹலோ.. இஸ் திஸ் இஸ் ரமேஷ்?’
“எஸ். சொல்லுங்க மேடம்.. என்ன விஷயம் திடீருன்னு போன்ல.. எனிதிங் சீரியஸ்?”
“சே...ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லை... அது சரி எப்படி நான் தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க..?”
“என்ன மேடம் .. உங்க குரல் எனக்கு தெரியாதா..? என்ன விஷயம் சொல்லுங்க? ”
“ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் லைக் தட்.. காலைல நீ.. சாரி.. நீன்னு சொல்லாமில்ல...? “
என்னுடய அனுமதிக்காக காத்திராமல்..
“ஓகே.. அதான் நீ காலையில என்ன ப்ரைஸ் பண்ணத்துக்கு, நின்னு ஒரு தேங்கஸ் கூட சொல்லல.. அதுக்குள்ள முகத்துல மாவு.., நீயும் கிளம்பிட்ட.. அதான்..?
“அதுக்காகவா போன் பண்ணீங்க.. எதுக்கு மே..”
“நோ மோர் மேடம்.. நிஜமாவேவா நான் நல்லா பாடினேன்.? சும்மா சொல்லு..”
” என்ன.. மேடம்.”
“ஏய்.. கட்தட்..மேடம்.. எனக்கு பேரில்லையா..? சும்மா. மேடம்.. ஆண்ட்டின்னுட்டு, டு யூ திங்க் ஐயம் ஓல்ட் இனப் டு பி கால்ட் லைக் தட்..?’ சொல்லு நிஜமாவே நான் நல்லாவா பாடினேன்?.”
நிஜமாகவே அவள் நன்றாகத்தான் பாடினாள்..
“டிவைன்.. கண்ண மூடிகிட்டு கேட்டா பாம்பே ஜெயஸ்ரீயே பாடினா மாதிரி இருக்கு..”
அதற்கு அப்புறம் பேசியது, எல்லாமே அவள் பாட்டு கற்றது, காலேஜ், கல்சுரஸில் பர்ஸ்ட் பிரைஸ், என்று அவ்ளை பற்றியே இருக்க.. முடிக்கும் போது “மீட் யூ இன் த ஈவினிங்” என்று போனை வைத்தாள்
கிட்டத்தட்ட 45 நிமிடம் பேசியிருக்கிறாள்.. எனக்கு தெரிந்து அவள் இவ்வளவு உற்சாகமாய் பேசி கேட்டதேயில்லை.
அதன் பிறகு அன்றைக்கு சாயந்தரமே.. என் வரவுக்காக, காந்திருந்தவள் போல் வாசலிலேயே நின்றிருந்தாள்.. எப்போதும் வழக்கமாய் நான் லெட்டர் பாக்ஸிலேயே எடுத்துக் கொள்ளும் என் கடிதங்களை அவள் கையிலே வைத்தபடி,
“ ஏய்.. ரமேஷ்.. இந்தா உன்னுடய் லெட்டர்ஸ்.. இப்போதான் வந்த்து.. வர டயமாச்சேன்னு கையிலேயே.. வச்சிருந்தேன்.’ கொடுத்தவள் “ வாயேன் உள்ள ஓரு கப் காபி சாப்ட்டு போலாம்..?”
இதற்கு அப்புறம், பல காப்பிகள், அவளுடனும், அவள் கணவனுடனும், அவளது வீட்டிலும், தனியாய் ரெஸ்டாரண்டுகளிலும், அவளுடய ஹஸ்பெண்ட் வேலை விஷயாமாய் திடீரென்று வெளியூர் போக வேண்டியிருந்ததால்.. அவருக்கும் சேர்த்து ரிசர்வ் செய்த படத்துக்கு அவளூடன் சென்றது. கணவனின் அனுமதியுடன்.
எனக்கும் அவளுக்கும் பிடித்த சுஜாதா, அயண் ராண்ட், மணிரத்னம், டாம்ஹாங்ஸ், கார்னாடக இசை.. உன்னி கிருஷ்ணன் என்று பல விஷயங்கள், எங்களுக்கு தினமும் பேச நிறைய இருந்த்து.. தினமும் ஓரு மணி நேரமாவது பேசவில்லையென்றால் எதையோ இழந்த மாதிரி இருப்பதாகவே சொன்னாள்.. தான் திரும்பவும் திருமணத்துக்கு முன்னே இருந்த் மாதிரியான ஓரு உணர்வு தனக்குள் வந்துவிட்டதாய் அடிக்கடி சொன்னாள்.. சில சமங்களின் ஓரு பதினெட்டு வயது பெண்ணைப் போல் என்னை பார்த்தும் ரொம்பவும் எக்ஸைட் ஆனாள்.. அப்படி ஆவது என்க்கு தெரிய வேண்டுமென்று மறைக்காமல் இருந்தது எனக்கு புரிந்த்து. இருவருக்கும் இடையில் அவ்வப்போது தொடுதல்களும், தலை தொட்டு பேசுவதும் இயல்பாய் நடப்பது போல பார்பவர்களூக்கு தெரியும். ஆனால் எனக்கும், அவளுக்கும் இடையே ஓரு நெருக்கம் உருவாவதை எனக்குள் உணர முடிந்தது..
அதை எப்படி தவிர்பது என்று யோசிக்கவே முடியாமல் அவளின் பேச்சு என்னை ராத்திரி அடித்த விஸ்கி போதையாய் ஆக்கிரமிக்க, மீண்டும் ’சே’ எதற்கு இந்த போதை என்று படுக்கும் போது நினைத்து காலையில் எழுந்தால் அவளின் ‘ஹாங் ஓவர்”. அவளால் ஏற்பட்ட ஹாங் ஒவரை சரி செய்ய அவளே வேண்டும்.
எவ்வள்வோ முயற்சிகள்.. அவளின் தனிமையை என்னுடன் கழிக்க, தெரிந்தே.. பல முறை தவிர்த்திருக்கிறேன். ஆனால் இன்று இவ்வளவு கிட்டத்தில், அந்த அனலான மூச்சில்,பஞ்சான மார்புகளின் அழுத்தத்தில், வியர்வையும் அவளும் சேர்ந்த வாசனையில், என்னால் முடியவில்லை.
‘எதுக்குகாக.. இத்தனை நாள் ரமேஷ்? என்னை பிடிக்கலையா.? நான் அழகாய் இல்லையா..?”
நான் அவளின் கன்னத்தை என் விரல்களால் வருடி,
‘உன்னை யாராவது பிடிக்கலைன்னு சொன்னா அவன் முட்டாள்.. இத தள்ளிப்போட எவ்வளவுநாள் ட்ரை பண்ணியிருக்கேன் தெரியுமா..?”
அவள் என்னை பார்த்து, ஓரு ஆச்சர்யத்துடன் “ ஸ்டுப்பிட்.. அப்போ தெரிஞ்சே.. என்னை அவாய்ட் பண்ணியா..? ஏன்..?” என்று என்னுள் மேலும் பரவ,
‘கேக்கிறேன்னு தப்பா நினைக்காதே.. அப்படி என்ன என்கிட்டே ஸ்பெஷல்..? உங்க ரெண்டு பேரையும் பார்த்தால் ‘மேட் பார் ஈச் அதர்’ன்னு தோணும். உனக்கும் உன் ஹஸ்பெண்டுக்கு எதாவத் பிரச்சனையா..?”
இந்த கேள்வியை கேட்டவுடன், சட்டென்று கோபத்துடன் எழுந்து உட்கார்ந்து..
”நீ ஏன் இந்த கேள்வியை என்கிட்ட படுக்கிறதுக்கு முன்னாடியே கேட்கல..?”
எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
”செக்ஸுக்காகதான் உன்னோட படுத்தேன்னு சொன்னா நி நம்புவியா..? நம்ப மாட்டல்ல..?”
“உண்மையை சொல்லணும்னா.. வெறுமை ரமேஷ்.. Vaccum between us.. யெஸ்.. நானும் அவரும் காதலித்துதான் கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். என்னோட பாட்டுன்னா அவருக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா..? என் பாட்டை கேட்டே என் பின்னே சுற்றி வந்து எங்க கல்யாணம் நடந்தது.. நான் பார்த்து, பார்த்து செய்யும், எல்லாத்தையும் அவர் பாராட்டற அழகுக்காகவே. இன்னமும் ஆசையா செய்வேன். அந்த நாட்களில் எவ்வளவு பேசியிருபோம், எவ்வளவு சந்தோஷம், எவ்வளவு சண்டைகள்.. எவ்வளவு சினிமா.. எவ்வளவு ரெஸ்டாரண்டுகள், அவுட்டிங், எவ்வளவு திகட்ட,திகட்ட... செக்ஸ்...
’இந்த ரெட் சூரிதார்ல யூ ஆர் Fabulous’
‘வாவ்.. எப்படி இருந்த ரூமை.. தலைகீழா மாத்திட்டே.. உனக்கு கிரியேட்டிவிட்டி ரொம்ப.. குட்.’
‘உன்னை போல் சமைக்க இன்னொரு ஆள் வரணும்’
‘தயவு செஞ்சி.. ஆபீஸ் போகும் போது, என்னை அப்படி பாக்காதே..’
‘இதோட.. மூணு வாட்டி..’
‘நீ பாடிட்டேயிரு.. நான் உன்னை வாசனை பாத்துகிட்டே...’
இப்படி எல்லாமே ஓரு வ்ருஷம் வரைக்கும் தான்.. அதற்கப்புறம்..? என்னை பாடச்சொல்லி கேட்கும் என் கணவன், காதலன் எங்கேனு தெரியல..?
‘பாடட்டுமா’
“சம் அதர் டைம்’’
’உங்களிடம் பேச வேண்டும்..’
”ஆபீஸ் மீட்டிங்.. நாளை முக்கியமான ஒர்க் இருக்கிறது..”
‘அப்போ.. நான் முக்கியமில்லையா..?’
“சாரி..டியர்.. ஐ டோண்ட் ஹேவ் டைம் டு பைட் வித் யூ.. சம் அதர் டைம்”
இதற்கும் “சம் அதர் டைம்”
”குழந்தை, சொந்த வீடு, பேங்க் பேலன்ஸ், கார் எல்லாம் இருக்கிறது.. நாங்கள் இயல்பாய் ஓருவருக்கு ஓருவர் பேசி எவ்வளவு வருஷமாகிவிட்டது? எங்களுக்குள்ள இருந்த அந்த இண்டிமஸி எங்க..? செக்ஸுல என்மேல அவருக்கு இருந்த ஆர்வம் எங்கே..? எல்லாமே ஓரு பார்மலா.. கடமைக்குன்னு நடக்க் ஆரம்பிச்சு 4 வருஷம் ஆச்சு.. அவருக்கு கம்பெனி, டார்கெட்,ஷேர்ஸ், வீக் எண்ட் பார்டீ, டிவி, பேப்பர், மாசத்தில ஓரு நாள் ரெஸ்டாரெண்ட், ஓரு நாள் செக்ஸ், அதுகூட சில சமயம் மிஸ் ஆயிரும். பார்மலா தினமும், டியர், லவ் யூ, ஊரூக்கு போயிட்டு வந்தா ‘மிஸ் யூ” மட்டும் போதல.
ஓரே புழுக்கமா இருக்கு ரமேஷ்.. I am suffocated. மூச்சடைக்கிறது, தினம் எழுந்தா சமையல், குழந்தை, ஸ்கூல், டிபன், அவருக்கு சமையல், லஞ்ச் பேக், வழக்கமான குட்மார்னிங், லவ் யூ.. எல்லாமே மெஷின் மாதிரி மொனாடனி ஆயிருச்சு..எனக்கும் மனசு இருக்கு ரமேஷ்.. வாழ்கையில எல்லாருக்கும் தங்களுக்கு, தான் செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் ஓரு அங்கீகாரம் தேவைபடுது.. அந்த அங்கீகாரம் தனக்கு தானா கிடைக்கணும், கேட்டு வாங்ககூடாது. ஓரு காதலியா இருந்தப்ப கிடைச்ச இம்பார்டென்ஸ், மனைவியாகிவிட்ட பிறகு எதிர்பார்க்க கூடாதா..? அவருக்கு ஓரு சந்தோஷம்னா, சந்தோஷப்பட்டுகிட்டும், கஷ்டம்னா, ஆறுதலா இருக்கறதுக்கு மட்டுமே பொண்டாட்டின்னா.. அவளுக்கு உணர்வுகளே இல்லையா..? why they always take us granted?.
ஆனா கேக்காமலே உன் மூலமா என்னுடய பல விஷயங்களுக்கு அங்கீகாரம், கிடைச்சது.. நீ என் கூட இருக்கறப்ப என்னால என் ச்ந்தோஷத்தை. .. என்னோட எக்ஸைட்மெண்டை, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.” நீ என் கிட்ட ரசிக்கிற விசயங்கள் அதை நீ என்னிடம் சொல்ற முறை.. எனக்கு கொடுக்கிற இன்பார்டென்ஸ்ன்னு இப்படி எவ்வளவோ சொல்லலாம்.. யு நோ ஓன் திங்.. இப்ப கூட உன்கூட படுத்தது பத்தி ஓரு மூலைல உறுத்தினாலும்... என்னை, என் மனசை, உணர்வை மதிக்கிற ஓருத்தனோட படுத்தது.. என்னயே ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குதான் I Felt like a girl. உனக்காவது புரியும்னு நினைக்கிறேன்.”
என்று போர்வையிலிருந்து நிர்வாணமாய் வெளியேறி, இயல்பாய் நைட்டியை மாட்டிக் கொண்டு, பாத்ரூமுக்குள் சென்றாள்.. அவள் உள்ளே சென்று மூடின கதவையே பார்த்து கொண்டிருந்தேன்.
ஓரு வேளை நான் அவளின் கணவனாய் இருந்திருந்தால், அவளின் அழகு, ஆசைகள், எல்லாவற்றையும் விட தன் குடும்பம், வேலை, பணம் என்று துறத்தி.. நானும் அவனை போல்தான் நடந்திருப்பேனோ..?
Comments
சுஜாதா வர்ணனை நெடி தவிர்க்கலாம்.
ந்ன்றி ரவிசங்கர்
அவரின் வர்ணனையை எப்படி த்விர்ப்பது..? அதை உணர்ந்தால் தானே..? தானா வருது..
கதை என்று சொல்லப்படும் இதுபோன்ற உண்மை சம்பவங்கள் இன்று உலகில் அநேகம் அரங்கேறி வருகிறது. கணவனைவிட்டு கலவியை நாடிய எவளும் எந்நாளும் உருப்பட முடியாது. ஒருவனோடு உள்ளவரைதான் உன்னதம் அடுத்தவனை நாடிவிட்டால் அப்புறம் அது அடங்காத ஆவேசம்.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் சுக துக்கங்கள் உண்டு! அதன் இடையே புகுந்து இன்பம் காணும் இதுபோன்ற கதைகளை தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறேன்!
அருமை.
நான் ரசிப்பதே உங்கள் கதையின் முடிவைத்தான்.
இதிலும் அருமையா முடிச்சிருக்கீங்க.
is that is nead or head?
anyway thanks for your arraival.
அனானி அவர்களே.. வாழ்கையில் ஆயிரம் சுக துக்கங்கள் உண்டுதான். இடையில் புகுந்து இன்பம் காணும் சிலறை பற்றி எழுதினால் தான் எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்கள் தவிர்க்கபடும் என்பது என் கருத்து.. நன்றி அனானி..
Most of the males takes their wife granted very often. that is why i would like to show the female version. (Perversions..???)
நான் ரசிப்பதே உங்கள் கதையின் முடிவைத்தான்.
இதிலும் அருமையா முடிச்சிருக்கீங்க.//
நன்றி அத்திரி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..
oh..its ok.. just for the clarification.. thank you very much for your expression.
ஆமாம் உங்க நிஜ பேர் ரமேஷ் இல்லயே...!
ஆமாம் உங்க நிஜ பேர் ரமேஷ் இல்லயே...!//
தலைவா.. எல்லா கதை நாயகனும் நானாத்தான் இருக்கணுமா..? போகும் போது உங்க ஓட்ட தமிழ்மணத்திலேயும், தமிலிசிலேயும் குத்திட்டு போங்க..
அதெதுக்கு எனக்கு? நான் பனியன்தான் போடுவேன்.
இந்தக் கதையையே அவள் கணவனின் கண்ணோட்டத்திலிருந்து எழுதுங்கள்.
இந்தக் கதை மட்டுமல்ல, உங்கள் மற்ற கதையையும் படித்துவிட்டு, அதற்கு ‘ஜெ’ ஓவியம் போட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்திருக்கிறேன்.
நீங்கள் ஒரு வலையுலக புஷ்பா தங்கதுரை!
உங்களுக்கு கதை பிடிக்கலையோ..?
உங்களுக்கு கதை பிடிக்கலையோ..?//
எனன் அவசரம்னேன். படிக்கப் படிக்க அந்த கமெண்டை அனுப்பணும்னு தோணிச்சு. அனுப்பினேன்.
கதை பத்தி கமெண்ட் அனுப்பீட்டேனே...
நன்றி ஜோ..
நன்றி பரிசல்...
கண்டிப்பாய் முயற்ச்சிக்கிறேன். இருந்தாலும் ஓரு ஆணின் பார்வையில் தான் கதையை முடித்திருக்கிறேன். பரிசல்..
அருமை. அற்புதம். பாதி படித்துக்கொண்டிருக்கும் போதே முடிவில் ஏதாவது அட்வைஸ் இல்லாட்டி பத்தாம் பசலித்தனத்தை வைத்து விடுவீர்களோ என்று பயந்தேன். உண்மையில் அருமை.
அருமை. அற்புதம். பாதி படித்துக்கொண்டிருக்கும் போதே முடிவில் ஏதாவது அட்வைஸ் இல்லாட்டி பத்தாம் பசலித்தனத்தை வைத்து விடுவீர்களோ என்று பயந்தேன். உண்மையில் அருமை.
நன்றி அமரபாரதி..
தலைப்புதான் நல்லால்ல
நிதர்சனக்கதைகளே இருக்கட்டும்..
(பாலியல தூக்குங்க )
தொடருங்கோ..
தலைப்புதான் நல்லால்ல
நிதர்சனக்கதைகளே இருக்கட்டும்..//
நன்றி ஆதிஷா.. முதலில் அதைத்தான் வைத்தேன்..
நான் ஆதரித்து எழுதவில்லை.. எதனால் இப்படி நடக்கிறது என்று அதற்கான காரண காரியத்தை யோசித்து எழுதபட்ட கதை..
Nijama yosikka vendiay visayam
நன்றி அன்பு.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
http://india.nellaitamil.com/upcoming.php
But the concept is too ugly but too true -picturising what is currently happening in the world.
It looks as if the story subtly justifies the deeds of the heroine which is the blunder in the concept line.