Posts

Showing posts from July, 2018

கொத்து பரோட்டா 2.0-61

கொத்து பரோட்டா 2.0-61 மாதக்கடைசி. உதயம் தியேட்டரிலிருந்து காசிக்கு போக அசோக் பில்லரில் ஒரு சிக்னல் இருக்கும். அது ஒன்வே தான் இருந்தாலும் அங்கே முனையில் இருக்கும் கோவிலருகே மக்கள் கிராஸ் செய்ய என அந்த சிக்னல் வைக்கப்பட்டிருப்பதாய் சொல்வார்கள். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து என்றைக்கும், எப்போதும் அங்கே ஆட்கள் கிராஸ் செய்வதோ, அல்லது, வண்டிகள் நின்றோ போனதே கிடையாது. இத்தனைக்கும் பில்லர் அருகே தான் போலீஸ் தன் பரிவாரங்களோடு எப்போதும் இருப்பார்கள். இரவு நேரங்களீல் பேரிகேட் போட்டு, டிரிங் அண்ட் ட்ரைவ் கேஸ் பிடிப்பார்கள். மேற்ச் சொன்ன மாதக்கடைசி நாட்களில் ஒரு நாள் வழக்கம் போல வண்டியை திருப்பினேன். குடுகுடுவென ஓரத்தில் மறைந்திருந்த ஒரு போலீஸ் வண்டியின் குறுக்கே வந்து நின்று ஓரம் கட்ட சொன்னார். காரை ஓரம் கட்டினேன். கதவருகில் வந்து நின்று இறங்குங்க என்றார். நான் வண்டியை ஆப் செய்து சாவியை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டே, இறங்கியபடி. “என்ன விஷயம்? என்றேன். தெரிந்தே. சிக்னல் மீறிட்டீங்க. பைன் கட்டிட்டு போங்க என்றார். அப்படி கட்டணும்னா கட்டுறேன். ஆனால் நீங்க எதுக்கு ஒளிஞ்சுட்டு ஓடி வந்து பிடிக...

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15

கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15 தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு என பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். தயாரிப்பாளர் சொல்லும் வி.பி.எப் கட்டணம் மட்டுமே இதற்கு காரணமல்ல. நீ தியேட்டரில் ப்ரொஜெக்டர் வைப்பதற்கு நான் எதற்கு காசு தரணும் என்பது நியாயமான விஷயம் தான்.   ஆனால் அதே நேரத்தில்  டிக்கெட் விலையை ஏற்ற இவர்கள் யார்? என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டிருப்பது. தயாரிப்பாளர்தான் டிக்கெட் விலையை நிர்ணையிக்க வேண்டும் என்று போராட இறங்கியிருப்பதும் செம்ம காமெடி. ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் எங்கள் டிக்கெட் விலை ஏற்றி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஏற்றிக் கொடுக்க வேண்டும். மும்பையைப் போல ப்ளெக்ஸி ரேட்டிங் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றெல்லாம் கோரிக்கை வைத்தவர்கள். இன்றைக்கு அரசு நிர்ணையித்த விலையான 150+ஜி.எஸ்.டி. + கே.வரி சேர்த்து வாங்கினால் இருநூறு ரூபாய் வந்துவிடுமென்று, பழைய விலையான 120க்கே வரி போட்டு வாங்கியும் தியேட்டரில் ஆள் நடமாட்டம் ...

சாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.

Image
இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று ஒரு தெருவுக்கு ரெண்டு பிரியாணி கடைகளாவது இருக்கிறது. எல்லாக் கடைகளிலுமே கிடைப்பது வழக்கமான பாஸ்மதி முஸ்லிம் பிரியாணி மட்டுமே.  பிரியாணிக்கென ப்ராண்டாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிறுவனமான ஆசிப் பிரியாணி போன்றோர்கள் தக்காளி சாதத்தை பிரியாணி என்று விற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நம்மூர் ஸ்டைலில், மணக்கும் சீரக சம்பா அரிசியில், மணக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி மட்டுமே தருகிறது வெங்கீஸ் பிரியாணி. அதிக காரமில்லாமல், நன்கு வேகவைக்கப்பட்ட துண்டுகளோடு, உதிர் உதிராய் சமைக்கப்பட்ட சீரக சம்பா அரிசி. நெய், மசாலாவோடும், நல்ல தால்சாவுடனும் பட்டையை கிளப்புகிறது. இவர்களது பிரியாணி. கருப்பையா மூப்பனார் பாலத்துக்கு அருகே ஒர் ப்ராஞ்சும், வடபழனி அம்பிகா எம்பயர் பக்கத்தில் ஒரு ப்ராஞ்சும் செயல் படுகிறது. வடபழனியில் இரவு 11 மணி வரை பிரியாணி கிடைக்கும். பிரியாணியோடு கொடுக்கப்படும் தால்சாவும் நல்ல சுவை.  மணக்கும் சீரக சம...

கொத்து பரோட்டா 2.0-60

கொத்து பரோட்டா 2.0-60 இந்த தமிழக அரசு கேளிக்கை வரியால் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. மல்ட்டிப்ளெக்ஸுகளில் 150 ரூபாய் வரை விலையை வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லியும் கூட, அனைத்து மல்ட்டிப்ளெக்ஸுகளும் வேணாம் எங்களுக்கு 120 ரூபாய் போது என்றிருக்கிறார்கள். பி.வி.ஆரும், ஐநாக்ஸும், இரட்டை வரி விதிப்புக்காக கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் தங்கள் திரையரங்குகளை மூடி, எதிர்ப்பு தெரிவித்திருந்த நேரத்தில், மெர்சல் ரீலீசின் போது சத்யமும், ஏஜிஎஸ்ஸும், அவர்களது திரையரங்குகளின் கடைசி நேரம் வரை மெர்சல் புக்கிங் ஆரம்பிக்காமலேயே இருந்தார்கள். காரணம் அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்குமான 150-120 ரூபாய் பிரச்சனைதான். 150 ரூபாய் டிக்கெட் விலைக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி எல்லாவற்றையும் சேர்த்து 204 ரூபாய் வருகிறது. அத்துடன் ஆன்லைன் டிக்கெட் விலையும் சேர்த்தால் 240 வந்துவிடும். முதல் மூன்று நாட்களுக்கு பெரிய நடிகர்கள் படத்திற்கு வேண்டுமானால் ஆட்கள் வருவார்கள். ஆனால் அதன் பின்பு எங்களது அரங்குகளுக்கு புட்பால் குறைந்துவிடும். அப்படி குறைந்தால் எங்களது திரையரங்கின் புட் அண்ட் பிவரேஜ் பிஸ...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -14

சினிமாவில் இருக்கவேண்டும் என்கிறவர்களிடையே எதையாவது புதிதாய் செய்ய வேண்டுமென்ற ஆசையில் உழல்பவர்கள் அதிகம். அதற்காக, காடாறு மாதம், நாடாறு மாதமென காசு சேர்த்து படம் எடுக்கிறவர்கள் ஒரு புறம் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பர் வெளிநாட்டு வாழ் இந்தியராய் இருந்த காலத்திலிருந்து தெரியும். அங்கிருந்தே தொலைபேசியில் பேசிக் கொண்டிருப்பார். இந்தியாவுக்கு நிரந்தரமாய் வந்ததும், அவர் ஆரம்பித்த முதல் விஷயம் சினிமா தயாரிப்பு. அப்போதெல்லாம் டிஜிட்டல் என்பது மப்பும் மந்தாரமுமாய் வெறும் வாயில் பேசிக் கொண்டிருந்த காலம். மனுஷன் அன்றைய லேட்டஸ்ட் பேனாசோனிக் கேமராவை விலைக்கு வாங்கிக் கொண்டுவந்தேவிட்டார். உடன் எடிட் செய்ய சிஸ்டம் எல்லாம் வைத்து , தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்து தொடங்கியாயிற்று. டிஜிட்டல் சிஸ்டத்தில் ஆர்வமுள்ள, அல்லது கொஞ்சம் அதைப் பற்றிய அறிவுள்ள ஒர் குழுவை அமைக்க நினைத்தார். வார இறுதி நாட்களில் அவர் இளைஞர்களைக் கூட்டி டிஜிட்டல் எப்படி சினிமாவை மாற்றப் போகிறது என்பதை பற்றி என்னை பேசச் சொல்லி, டிஜிட்டல் கேமராவை பற்றிய அறிவை பரப்ப ஆரம்பித்த நேரம். அனைவரும் கேட்ட கேள்வி ஏன் நீங்களே இ...

சாப்பாட்டுக்கடை - கோவை சாவித்ரி மெஸ்

Image
சமீப காலமாய் மெஸ் என்று பெயர் வைத்து விட்டாலே ஸ்பெஷல் கவனம் வந்துவிடுகிறது என்பதற்காக எங்கு பார்த்தாலும் மெஸ், மெஸ் என்றே பெயர்கள் தட்டுபடுகின்றது. குறிப்பாய் நான்வெஜ் என்றால் கட்டாயம் மெஸ்ஸில் தான் முடியும். அப்படியான ஒர் தினத்தில் இந்த மெஸ்ஸைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சாலிக்கிராமம் பாஸ்போர்ட் ஆபீஸுக்கு முன் பில்டிங்கில் ஆரம்பித்திருந்தார்கள்.  மிகவும் விசாலமான இடம். டிபிக்கல் கல்யாண வீடு போல வரிசைக்கட்டி டேபிள்கள் போடப்பட்டிருந்தது. நான் போனது இரவு 9 மணிக்கு. கிட்டத்தட்ட மூடும் தருவாயில் இருந்ததால் என்ன இருக்கிறது என்று கேட்டேன். இட்லி, சப்பாத்தி, தோசை இருப்பதாய் சொன்னார்கள். இட்லியும், தோசையும் ஆர்டர் செய்துவிட்டு, சைட்டிஷாய் மட்டன் கேட்ட போது காலியாகிவிட்டது என்றார்கள். பள்ளிப்பாளையம் சிக்கன் இருப்பதாய் சொல்ல, அதை ஆர்டர் செய்தேன். முதற்கட்டமான் ஒரு இட்லி கொடுங்கள் என்று கேட்க, கொஞ்சம் சிக்கன் குழம்பும், சட்னியும், வைத்தார்கள். நல்ல சுர்ரென்ற உறுத்தாத காரம், இட்லியோடு குழைத்து சாப்பிட, அடுத்த இட்லிக்கு சிக்கன் குழம்பு கேட்டால் அதுவும் காலி, மீன் குழம்புதான் என்றார்...