Posts

Showing posts from August, 2018

Poomaram -Malayalam film

Image
பூமரம் தமிழ் சினிமாவின் ஸ்ட்ரைக் என்னை போன்ற தீவிர படம் பார்க்கிறவர்களையே தியேட்டர்களை விட்டு தள்ளி வைத்துவிட்டது. எந்த படம் வந்தாலும் முதல் நாளே பார்க்கிறவன் யாராவது பார்த்துவிட்டு சொல்லட்டும் அப்புறம் பார்க்கலாம் என்கிற சோம்பல் வந்துவிடக் காரணம் தொடர் படங்கள் வெளியிடாமை. என்னைப் போன்றவர்களுக்கே இப்படியான எண்ணம் என்றால்.. மாசத்திற்கு ஒரு படம் பார்க்கிறவர்களின் மனநிலை. சரி அதை விடுங்கள். அதையும் மீறி சில படங்கள் பார்க்கச் சென்று அது கொடுக்கும் மனநிறைவு தான் சினிமா.  அப்படியான ஒரு படம் சமீபத்தில் பார்த்த மலையாள படமான “பூமரம்” நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தமிழில் ஏற்கனவே நடித்திருந்தாலும் அவரின்  முதல் மலையாள படம். வழக்கமாய் மலையாளப் படங்களின் படப்பிடிப்பு 25-30 நாட்களுக்குள் மிகச் சாதாரணமாக பெரிய பட்ஜெட் படங்களையே முடித்துவிடுவார்கள். ஆனால் சுமார் ஒன்னரை வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை முடிக்க. அதனாலேயே கதையின் நாயகனை வைத்து சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்த மீம்ஸ்கள் ஏராளம். ஆனால் அத்தனைக்கும் பதில் சொல்கிறார்ப் போல ஒரு படம். ரொம்பவே சிம்பிளான...

மேற்கு தொடர்ச்சி மலை

ட்ரோனை கண்டு பிடிச்சவனை பாராட்டணும். அதை கதைக்கு சரியாய் பயன்படுத்திய தேனி ஈஸ்வருக்கும், லெனின் பாரதிக்கும்  வாழ்த்துக்கள் . மேற்கு தொடர்ச்சி மலை நல்ல சினிமா, யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு, பெஸ்டிவல் படம் பார்க்குறவங்க, சமூக விழிப்புணர்வு உள்ளவர்களுக்கான படம். குட்டிக் குட்டி கேரக்டர்கள். சினிமா வாடையே இல்லாத நடிகர்கள். அது தான் ப்ள்ஸ். சில சமயங்களில் மைனஸ். படம் நெடுக இயல்பாய் வெளிப்படும் அரசியல் கருத்துக்கள் ப்ளஸ்னா கருத்தா ஆயிரம் பேசினாலும், ஒட்டாம இருக்கிறது மைனஸ். ரெங்கசாமியோட வாழ்க்கை தடம்புரண்டதுக்கு காரணம் விவாசாயம் பொய்ததனினால் இல்லை. அவனுக்கு பெரிதாய் சம்பந்தமே இல்லாத கொலையினால் எனும் போது எமோஷனால் இன்வால்வ் ஆக முடியவில்லை. அந்த நிலம் அவனிடமிருந்து பறி போகும் போது பொழைக்க வந்து பெரும் பணக்காரணாய் மாறியவன் மீது கோபம் வருவதற்கு பதிலாய் சரி அவனும் என்னதான் பண்ணுவான் என்ற எண்ணம் மேலோங்கி விடுவதும். இதுதான் நடக்க போகிறது என்கிற ஏழை டெம்ப்ளேட் வாழ்க்கை தெரிந்தபடியால் துணுக்குற முடியவில்லை. அந்த கேரக்டரின் நடிப்பும். அதன் வளர்ச்சியும் நிஜமோ நிஜம். எங்கேயும் எல்லா இடத்திலேய...

கொத்து பரோட்டா 2.0 -63

கொத்து பரோட்டா 2.0 கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன் கொடுத்த மிரட்டல்கள் தான் என்கிற அவரின் கடிதமும் தான். உடனே கந்து வட்டி பைனாசியர், ஏற்கனவே ஜி.வியின் சாவுக்கு காரணமானவர். அரசியல் பலம் காரணமாய் அராஜகம் செய்கிறவர், வீட்டிற்குள் வந்து பெண்களை மானபங்கப்படுத்தி விடுவார் என்றும், பணம் கொடுக்க வேண்டியவரை கூட்டிக் கொண்டு போய் ஒர் அறைக்குள் நிர்வாணமாய் நிற்க வைத்து, திட்டுகிறவர் என்றெல்லாம் டெரர் செய்திகள் மீண்டும் வர ஆரம்பிக்க, தமிழ் சினிமாவே கந்துவட்டியால் அவதிப்படுகிறது என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். உடனடியாய் கந்துவட்டி செழியனை கைது செய்ய வேண்டுமென்று விஷால் ஒரு பக்கம் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் அவரிடம் தொடர்ந்து பணம் வாங்கி படமெடுத்து வரும் பல தயாரிப்பாளர்கள் தேவையில்லாமல் அன்பு செழியன் மீது பழி சொல்கிறார்கள் என்றும், அவர் நல்லவர் எங்கள் வகையில் இது வரை எந்த மாதிரியான தொந்தரவும் செய்ததில்லை என்று பத்திரிக்கையாளர்களைக் ...

சத்யம்ங்கிறது தியேட்டர் இல்லை எமோஷன்

Image
சத்யம் தியேட்டரை மூடப் போகிறார்கள் என்று அறிந்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. எத்தனை நல்ல சினிமா பார்த்திருக்கிறோம் என்று மனம் லிஸ்ட் போட்டது. காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கோலோச்ச ஆரம்பித்த காலத்தில் தேவி, சத்யம், அபிராமி போன்றவர்கள் மட்டுமே இருந்த காலம். தெலுங்கு குஷி எல்லாம் நூறு நாட்களுக்கு மேல் சாந்தத்தில் ஓடிய காலம்.  தனியாய் சினிமா பார்க்க ஆர்மபித்த காலத்திலிருந்து சத்யம் மேல் எனக்கு ஒரு ஈடுபாடு இருந்து கொண்டேயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் சாந்தமில் போடப்படும் க்ளாஸிக் ஆங்கில படங்கள். மிகவும் சிறுவனாய் இருந்த காலத்தில், சாந்தம், பைலட் ஆகிய திரையரங்குகளில் ஆங்கிலப்படங்கள் அதுவும் ஆக்‌ஷன், எல்லாம் இல்லாத நல்ல ட்ராமா, கதை சொல்லும் படங்கள் எல்லாம் காலைக் காட்சி போடுவார்கள். அங்கே தான் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படமான “பரத் அனே நேனு” வின் ஒரிஜினலான “த அமெரிக்கன் ப்ரெசிடெண்டை” பார்த்தேன்.  இண்டர்வெல்லில் தம்மடித்துக் கொண்டு அதீத ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு படப்பெயரைச் சொல்லி, டைரக்டர், ஆக்டரி பேரைச் சொல்லி சிலாகித்துக் கொண்டிருக்கும் மாமாக்...

Love Per Square feet

Love Per Square feet நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள் இந்திய மார்கெட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமேசான் ஒரு புறம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வரும் பிரபல படங்களை உடனடியாய் வாங்கி தன்னுடய ஸ்ட்ரிமிங் லிஸ்டில் அணிவகுக்கும் அதே நேரத்தில், ரியாலிட்டி ஷோக்கள் கூட தயாரித்து வெளியிட ஆரம்பிதிருக்கிறார்கள். சக போட்டியாளரான நெட்ப்ளிக்ஸ் அந்த அளவுக்கு சினிமா கண்டெண்டுகளுக்கு டஃப் பைட் கொடுக்காவிட்டாலும், தங்களது நெட்வொர்க்குக்காக மட்டுமே படங்களை தயாரித்து கொடுக்க, பிரபல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். ப்ராட் பிட், வில் ஸ்மித் போன்ற பிரபல ஹாலிவுட் நடிகர்களை வைத்து நெட்ப்ளிக்ஸுக்காக மட்டுமே படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கின்றார்கள். வில்ஸ்மித்தின் ப்ரைட் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன் முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. இப்படங்களின் வெற்றி மேலும் சுமார் 80 நேரடி ஸ்ட்ரிமிங்கிற்காக மட்டுமே தயாராகும் ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்க நெட்ப்ளிக்ஸ் தயாராகிவிட்டடது. ஜேம்ஸ் காமரோன், கிரிஸ்டபர் நோலன் போன்றோர் வ...

கொத்து பரோட்டா 2.0-62

கொத்து பரோட்டா 2.0-62 கல்வியின் பெயரில் கொள்ளையடிக்கும் இன்ஞினியரிங் கல்லூரி என் மகனை பி.டெக் சேர்க்க பணம் கட்டிய போது கல்லூரி பஸ் வேண்டுமென்றால் 26-30 ஆயிரம் வரை சொன்னார்கள். கிலோமீட்டர் கணக்கிட்டு. அதுவும் ஆப்ஷன் தான் என்ன இப்போதே பணம் கட்டவில்லையென்றால் பின்பு பஸ் வசதியை பெற முடியாது என்ற லேசான பயமுறுத்தல் மட்டுமே இருந்தது. என் மகனின் நண்பன் எஸ்.எஸ்.என் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு கல்லூரி பஸ் பீஸ் 46 ஆயிரம் ரூபாய். நீ பஸ்ஸில் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி.. 46ஆயிரம் பீஸ் கட்டியே தீர வேண்டும். அவனுடன் படிக்கும் பெண் கல்லூரியிலிருந்து நடக்கும் தூரத்தில் தான் வீடு. ஆனாலும் அவள் கல்லூரி பஸ்ஸுக்கு பீஸ் கட்டியாக வேண்டும் என்று வசூலிக்கிறார்கள். கல்லூரி பீஸுடம் இந்த தொகையையும் கட்டாயமாய் கட்டியே ஆக வேண்டும். கல்விக்கான தொகையே பெரும் பாராமாய் பெற்றோர்களுக்கு இருக்க, இம்மாதிரியான கட்டாய கொள்ளைகளை யார் தட்டிக் கேட்பது?. பெற்றோர்களும் நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் போதுமென்று கேள்வி கேட்க வழியில்லாமல் பணம் கட்டி விடுகிறார்கள். இது முதல் வருடம் மட்டுமல்ல நான்கு வருடங்களுக்கும் இத...

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறது? 16

நான் நடுக்கடல்லேர்ந்து சினிமாவுக்கு வந்தவன் சார் என்றார் நண்பர். போனில். என் சினிமா வியாபாரம் புத்தகத்தைப்   சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்துவிட்டு, பல நண்பர்களுக்கு ரெகமெண்ட் செய்திருக்கிறார். அப்போதிலிருந்தே என்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்திருக்கிறது. ஆனால் சமயம் இப்போதுதான் கிடைத்து என்றார். “நன்றி.. அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன நடுக்கடலேர்ந்து சினிமாவுக்கு வந்தேன்கிறீங்க?. “ என்றேன் ஆவல் தாளாமல். “ஆமாம் சார் நான் ஒரு மரைன் இன்ஜினியர். பணம் சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டேயிருந்தாலும் ஏதோ ஒண்ணை மிஸ் பண்றோம்னு தோணிட்டேயிருதுச்சு.  ஒரு நாள் நடுக்கடல்ல என் கேப்டன் கிட்ட சொன்னேன். நான் சினிமாவுக்கு போகப் போறேன். இந்த வேலை வேணாம்ணு. அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். சரி போன்னுட்டு. ஹெலிக்காப்டரை வர வழைச்சு, கரையில இறங்குனவன் நான்.” அவர் சொன்னது எனக்கு த்ரில்லிங் அனுபவமாய் இருந்தது. ஆனால் அப்படி ஆவலாய் தமிழ் சினிமாவுக்குள் வந்தவரின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை கேட்க மனம் பரபரத்தது. “ஆனா பாருங்க. எந்த சினிமாவுக்காக பறந்து வந்து இறங்குனேனோ.. அது ...