Posts

Showing posts from March, 2019

நிகழாமல் போன அற்புதம் சூப்பர் டீலக்ஸ்

Image
தமிழ் சினிமாவை தற்போதைய வகைப்படி ரெண்டாக பிரிக்கலாம். சோஷியல் மீடியாவுக்கு முன்/ சோஷியல் மீடியாவுக்கு பின் என. ஆரண்ய காண்டம் திரைப்படம் இண்டர்நெட் 1 ஜிபி 300 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அதனால் இத்தனை விந்தோதுதல்கள் இல்லாமல், உனக்கு தெரியலைன்னா உன் பொண்டாட்டி பத்தினி இல்லை என்று சபிக்காமல்,  சரியான வகையில் எடுத்துக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்ட படம் தான். அது தான் ஓடவேயில்லையே அப்புறம் என்ன கொண்டாடப்பட்டது என்று சொல்கிறீர்கள் என்றால் கொண்டாட்டம் என்பது அதன் வியாபாரத்தை வைத்து அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். லெளகீகத்தை வைத்து பேசினால் நிச்சயம் தயாரிப்பாளரின் டார்க் கதையைப் பற்றியும் பேச வேண்டும். அது படைப்பிற்கு தேவையில்லாத ஒன்று. சினிமாவாக எனக்கு மிகவும் பிடித்த படம் ஆரண்ய காண்டம். தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த வித்யாசமான கதை சொல்லல் கொண்ட படம்.  குவாண்டின் படங்களில் வரும் நீண்ட ஷாட்கள். ஷார்பான ப்ளாக் ஹூயூமர். சம்பந்தமேயில்லாத பேச்சு. பின்னணி பாடல்கள் வித்யாசமான மேக்கிங் என அத்தனை விஷயங்களிலும் இன்ஸ்பயர் செய்த படம்...

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் அம்சவள்ளி பவன்

Image
மதுரை சிந்தாமணி அருகில் 1952 முதல் இந்த சீரக சம்பா பிரியாணிக்கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதாம். சென்னையில் அவர்களது ப்ராஞ்சை திறந்திருக்கிறார்கள். நண்பர் பத்திரிக்கையாளர் கெளதம் சொன்னார். முதல் முறை போகும் போது இரவாகிவிட்டதால் அவர்களது ஸ்பெஷல் பிரியாணியை சூடாக சாப்பிட முடியவில்லை. பரோட்டா, அதற்கான சிக்கன், மட்டன் சால்னாவுடன், நல்ல கிரிஸ்ப் கோலா உருண்டையோடு கிளம்பிவிட்டேன். இன்று மதியம் அண்ணாநகர் வரை வேலை. நல்ல பசி என்றார் நண்பர். சரி நல்ல சீரக சம்பா பிரியாணி சாப்பிடுவோமா? என்று வண்டியை கட்டினோ இந்த அம்சவள்ளியை பார்க்க. அப்போதுதான்  தம் உடைத்திருப்பதாகவும் சற்றே காத்திருங்கள் என்றார்கள். தலை வாழை இலை போடப்பட்டு, கால் லிட்டர் வாட்டர் பாட்டிலை வைத்தார்கள். சிக்கன், மட்டன் கிரேவி, வெங்காயப் பச்சடி என வரிசைக்கட்டிவிட்டு, சுடச்சுட பிரியாணி பரிமாறினார்கள். பிரியாணியின் கலரே ஆர்வத்தை தூண்டியது. நல்ல சீரக சம்பா அரிசியின் மணமும், மசாலாவின் மணமும் நாசியிலிருந்து மனசுக்குள் போனது. முதல் பிடி எடுத்து வாயில் வைத்தேன். வாவ். நல்ல மணம், குணம், காரத்துடன், சரியான விகிதத்தில் கலக்கப்ப...

சாப்பாட்டுக்கடை - குப்பம்மாள் மெஸ்

Image
சில மாதங்களுக்கு முன் நண்பர் தீபக் எனக்கு போன் செய்து என் நண்பர் பாண்டிச்சேரி ஹவுஸ் பக்கத்தில ஒரு மெஸ் ஆரம்பிச்சிருக்காரு ஒரு நடை போய் பார்த்துட்டு வந்து சொல்லுங்க என்றார். அந்த வாரத்திலேயே ஒரு நாள் போய் நின்றேன். நண்பர் தீபக் சொன்னதை சொன்னேன். “சார். இன்னைக்கு வேண்டாம். ஏன்னா புதுசா மாஸ்டர் வந்திருக்காரு. ஆளு இன்னும் செட்டாகலை. ஒரு வாரம் போகட்டும் எல்லாம் செட்டானதும் சொல்லுறேன்’ என்றார். அதற்கப்புறம் மறந்தே போனேன். சென்ற வாரம் ஒரு நாள், அந்த பக்கம் க்ராஸ் செய்யும் போது நல்ல பசி. ஒரு நடை எட்டிப் பார்க்கலாம் என்று போய் சாப்பிட உட்கார்தேன். மெஸ் என்றாலே மதிய சாப்பாடுதான் ஸ்பெஷலாய் இருக்கும் என்பதால் ஒரு மீல்ஸ் கொடுங்க என்றதும் நியாபகம் வைத்துக் கொண்டு என்னை கேட்டார். ஆமாம் என்றேன். சார். நம்ம அயிட்டத்துல கறி சோறு மதியத்துல ரொம்ப பேமஸ் அதை ட்ரை பண்ணுங்க என்றார் சுடச்சுட கறிச் சோறு வந்தது. நன்கு வெந்த மட்டன் பீஸுகளோடு, நல்ல பெப்பர் மணத்துடன். வாயில் வைத்தவுடன் பெப்பர் மற்றும் உறுத்தும் காரத்துடனான கலந்த மட்டன் சோறு. மூக்கு பக்கம் எடுத்து வைக்கும் போதே மணத்துடன். அத்துடன் ரெண்...

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -2

Sacred Games இந்திய அளவில் பெரும் விளம்பரத்தோடு வெளியான நெட்ப்ளிக்ஸ் சீரீஸ்.  அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, நவாசுதீன் சித்திக், சாயிப் அலிகான், ராதிகா ஆப்தே என பிரபலங்களை களமிறக்கியிருந்தார்கள். வழக்கமான சாதாரணன் தாதாவான கதை தான் என்றாலும் அதை ப்ரசெண்ட் செய்த விதத்தில் “வாவ்” போட வைத்துவிட்டார்கள். மிரட்டும் நடிப்பு. அதிரடி வசனங்கள். காட்சிகள். பார்வையாளர்களை ஒரே வீச்சில் பார்க்க வைக்கும் திரைக்கதை என மட்டுமில்லாம டெக்னிக்கலாய் அசத்தியிருந்தார்கள். இந்திய அளவில் வந்த நல்ல வெப் சீரிஸ் இது.  அமேசானின் வழியில் நெட்ப்ளிக்ஸும் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் டப்பிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் இரண்டாம் சீசன் களைக் கட்ட போகிறதாம். ஐயம் வெயிட்டிங். Mirzapur நீ வயலண்டாய் சாக்ரட் கேம்ஸை இறக்குகிறாயா? இதோ என் பங்கிற்கு என அதே போல வயலண்ட் ஆக்‌ஷன் சீரிஸை அமேசான் இறக்கிவிட்டிருக்கிறது. சென்ற வருடம் தரமான சம்பவம் செய்த,  அதே இன்சைட் எட்ஜ் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளியாகியிருக்கிறது. மிர்சாப்பூர் என்ற் அஒரு நகரத்தை ஆண்டு கொண்டிருக்கிற அகானந்த்  திர...

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் மற்றும் வெப் படங்கள் – ஒரு பார்வை-1

ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒர் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இண்டர்நெட்டின் வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் சாட்டிலைட் சேனல் உரிமை வியாபாரம் மிகப் பெரிய கேள்விக் குறியாய் இருக்கும் நேரத்தில், ஸ்ட்ரீமிங் உரிமை எனும் இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது. படங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது போலவே,  வெப் சீரீஸ்கள் எனும் புதிய கதவு திறந்திருக்கிறது. வழக்கம் போல இந்தி பெரிய மார்கெட் என்பதால் அனுராக் காஷ்யப், விக்ரம் மோத்வானி, போன்ற பெரும் தலைகள் எல்லாம் சடுதியில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.  மற்ற மொழிகளில் வழக்கம் போல பட்ஜெட் மற்றும் வெப் சீரீஸ்களைப் பற்றிய கண்டெண்ட் அறியாமைகளோடு, களம் இறங்கியிருக்கிறார்கள். இதில் பெரும் கை நெட்ப்ளிக்ஸ் என்றாலும், இந்திய அளவில் பெரும் முதலாளி அமேசான் ப்ரைம் தான். இவர்களுடன் பாலாஜி டெலி பிலிம்ஸின் ஆல்ட் பாலாஜி, ஸ்டாரின் ஹாட் ஸ்டார், கலர்ஸின் வூட், சன் நெட்வொர்க...

கதை திருட்டு

கதை திருட்டு இணையமெங்கும் தற்போதைய பரபரப்பு சர்கார் படக்கதை திருட்டு விஷயம் தான். பாருங்கள் நான்கூட  இக்கட்டுரையை ஆரம்பிக்க கதை திருட்டு என்று சொல்லித்தான் ஆரம்பிக்க வேண்டிருக்கிறது. ட்ரெண்டிங் முக்கியம்  என்னடா இது ஆரம்பித்த பத்தியிலேயே முருகதாஸுக்கு சப்போர்ட் செய்கிறார் போல இருக்கிறதே என்று யோசித்தீர்களானால் நிச்சயம் இல்லை. இக்கட்டுரை யாருக்கும் ஆதரவாக எழுதப்பட்ட கட்டுரையல்ல. உலகம் உருவாக ஆரம்பித்ததிலிருந்து கதை இருக்கிறது. மனிதன் வாய் வழியாய் சொல்லப்பட்டது. மொழி, கலை வடிவத்திற்கு ஏற்ப அதனதன் வடிவில் மறு வடிவம் பெற்றுக் கொண்டேயிருக்கிறது. அந்த மாறுதலே சாஸ்வதம். என்பதை புரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அப்படியென்றால் தெரிந்தே கதையை திருடியவர்களை கேட்பது நியாயமில்லையா என்றால் நிச்சயம் கேட்கப்பட வேண்டிய, உரிமையை கோர வேண்டிய நியாயம் தான். சில வருடங்களுக்கு முன் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் தன்னுடய நிறுவன சுயசரிதையை ஒர் தினசரியில் எழுதினார். எப்போது படங்கள் தயாரித்தார்கள். எங்கிருந்து படங்களின் கதை எடுக்கபட்டது போன்ற பல தகவல்கள் அதில் இருந்தது....

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம்.

வரதன் – ஐரோப்பிய படங்களின் தாக்கம். பொதுவாகவே மலையாள படங்களில் ஐரோப்பிய படங்களின் தாக்கம் அதிகமாய் இருக்கும். பிரியதர்ஷன் காலத்திலிருந்தே அம்மாதிரியான விஷயங்கள் அங்கு அதிகம். அதற்கு முக்கிய காரணம் தனிமையான வீடுகள். அமைதி. நகர்புறதன்மையற்ற கதைகளை எடுக்கக்கூடிய நிலப்பரப்பு. கிருஸ்துவ குடும்ப அமைப்புகள். தனிமை. குடும்பத்தோடு குடிப்பது என்பது போன்ற பல விஷயங்களை சொல்லலாம். நாடே பல மொழிகளில் கொண்டாடிய திருஷ்யம் ஒரு ஜப்பானிய மொழியாக்கம் என்பது இன்றளவில் உள்ளக் குற்றச்சாட்டாக இருந்தாலும் மலையாளிகள் மிகச் சிறப்பாய் கதைகளை அவர்களுக்கான படங்களாய் ஆக்குவதில் வல்லவர்கள். அதற்கு காரணம் அங்குள்ள எழுத்தாளர்கள். இன்றளவில் எழுத்தாளர்களை கதையின் நாயகர்கள் அளவுக்கு கொண்டாடிக்  கொண்டிருக்கும் ஒரே திரையுலகம் மலையாள உலகம் தான். பல சமயங்களில் அசாதாரணமான கதைகளை மிகச் சாதாரணமாய் எழுதிக் கொடுத்துவிடுவார்கள். பட்டர்ப்ளை ஆன் வீல்ஸ் என்ற ஹாலிவுட் படம். நம்ம ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் ப்ரான்சன் நடித்திருப்பார். அது ஒரு த்ரில்லர் வகை படம்  அதை மலையாளத்தில் காக்டெயிலாக்கி கொடுத்திருந்தார்கள்  வெற்ற...

Manmarziyan

Manmarziyan சுவாரஸ்யமான கதைகள் என்று பார்த்தால் அது மனித உறவுகளிடையே ஏற்படும் புரிதல் சார்ந்த பிரச்சனைகள் தான் என்பேன். உறவுகளிடையே இருக்கும் முரண் தான் மிக சுவாரஸ்யம். அந்த வகையில் முன் காலத்தில் எல்லாம் நிறைய படங்கள் அம்மாதிரியான கதைக்களன்களை சார்ந்து வந்து கொண்டிருந்தது. இப்போது உறவுகள் சார்ந்த கதைகள் வராமல் இல்லை. அவையனைத்தும் இளைஞர்கள் சார்ந்த கதைக் களன்களாய் இருப்பதால், நெகிழ்ச்சிக்கோ, காதலைத் தவிர உணர்வு பூர்வமான விஷயங்களுக்கோ முக்யத்துவம் இல்லாமல் வந்து கொண்டுதானிருக்கிறது. அப்படியான இளைஞர்களின் வாழ்க்கை, காதல் கல்யாணம் சார்ந்த நெகிழ்ச்சியுட்டும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை நெஞ்சத்தை கிள்ளாதே. பின்நாளில் மணிரத்னம் மெளனராகம் படம் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணம் காதலும், அது பின் சார்ந்த உளவியம் குழப்பங்களும், அதனால் தற்காலத்தில் ஏற்படும் திருமண பந்த பிரச்சனைகளும் தான். கொஞ்சம் சென்சிபிளாக படமெடுக்க வேண்டி நினைக்கிறவர்கள் ஜாக்கிரதையாய் தொடுவார்கள். அப்படியான படங்கள் மிக சிலவே வெற்றி பெற்றிருக்கிறது. கொஞ்சம் காலமாய் டார்க் படங்களிலிருந்து விலகி, சீர...

சாப்பாட்டுக்கடை - குடைக்கடை பிரியாணி -கே.கே.நகர்

Image
நண்பர் நல்ல பிரியாணி மாஸ்டர். நிறைய முறை அவர் வேலை செய்த ஓட்டலில் இருந்து பிரியாணி கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். நன்றாகவே இருக்கும். இவரின் முதல் அறிமுகமே இன்னொரு நண்பர் கடலூரில் ஆரம்பித்திருந்த பிரியாணி கடையில் மாஸ்டராய்த்தான். பின்பு பல வருடங்களுக்கு பிறகு தற்போது சொந்தமாய் பிரியாணிக்கடை போடப் போவதாகவும், அதுவும் மொபைல் கடையாய் போடப் போவதாய் சொல்லியிருந்தார். சொன்னது போலவே அமாவாசை அன்று கே.கே. நகர், பிரபா ஒயின்ஸுக்கு எதிரே உள்ள ப்ளாட்பாரத்தில் டி.வி.எஸ்.50யில், குடையோடு ஒரு பிரியாணி கடை அமைத்திருந்தார்.  நல்ல தரமான அரிசியில், நன்கு வெந்த சிக்கன் பீசுகளோடு பிரியாணி மணமாய் இருந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் குவாலிட்டி கண்ட்ரோல் செக் செய்து தர நிர்ணையம் கொடுத்துவிட்டேன். நல்ல தரமான சிக்கன் பிரியாணி வேண்டும் என்கிறவர்கள் நிச்சயம் ஒர் ட்ரை செய்ய வேண்டிய இடம்.  வழக்கமாய் கையேந்தி பவன் ஓட்டல்களில் குறித்தும் விலை குறைவான பிரியாணி என்றாலே காக்கா பிரியாணியாக இருக்குமோ என்கிற பொதுபுத்தி பயத்தை வேறு மீடியாக்கள் கிளப்பிவிட்டிருக்க, இந்த மொபைல் கடை அந்த நம்பத்தன...

GHOUL - Web series

Ghoul ஒரு காலத்தில் தமிழில் ஜெய்சங்கர் தொடர்ந்து ஒரே டைரக்டரின் படங்க ளி ல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பார். அந்த படம் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படாமல் தொடர்ந்து நடித்துக் கொடுப்பார். அதே போல ஆர்யா தொடர்ந்து விஷ்ணுவர்தனின் படங்களில் நடித்திருப்பார். அது போல ராதிகா ஆப்தே, அனுராக் கஷ்யப்பின் படங்களில் நடிப்பது. குறிப்பாய் நெட்ப்ளிக்ஸில் இவர்கள் படங்கள் வெளியாக ஆரம்பித்தபிறகு மீம்ஸ் போடுமளவுக்கு ராதிகா ஆப்தேவின் ஆக்ரமிப்பு. சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸில் நடிப்பு மட்டுமில்லாமல் , கதை வசனத்திலும் இவரது பங்களீப்பு இருந்தது. ஒரு புதிய நெட்ப்ளிக்ஸ் படத்தில் ராதிகா ஆப்தேவே எல்லா கேரக்டர்களிலும் நடிப்பது போன்ற ஒரு விளம்பரத்தை ராதிகாவே வெளியிட்டிருந்தார். அது கிண்டலுக்காக வெளியிடப்பட்டது என்று நினைத்தால் நிஜமாகவே அப்படி ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று சொல்கிறார் விக்ரமாதித்ய மோத்வானி. இத்தனை களேபரங்கள், விமர்சனங்களுக்கு நடுவில் ராதிகா ஆப்தே ஒன்றும் திறமையில்லாதவர் இல்லை ஒவ்வொரு  ப்ராஜெக்டிலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டேதானிருக்கிறார். ஒரு சில இயக்குனர்...

சாப்பாட்டுக்கடை - உங்க வீட்டு சாப்பாடு

Image
சாலிகிராமத்தில் சொல்லிக் கொள்கிறார்ப் போல நல்ல தரமான வெஜ் உணவகங்கள் அவ்வளவாக கிடையாது. நான் வெஜ் மட்டும் இருக்கிறதா என்று கேட்டீர்களானால் கொஞ்சம் தள்ளி வளசரவாக்கம், விருகம்பாக்கம் பக்கம் போனால் இருக்கிறது. மீண்டும் சரவணபவன், பார்வதி பவனை விட்டால் சிலாக்கியமாய் ஏதுமில்லாத நிலையில் ஒரு ஷூட் இடைவேளையில் நண்பர் நல்ல சாம்பார் சாதம், தயிர்சாதம் வாங்கி வரச் சொன்னார். எங்கிருந்து என்று கேட்க, விஜயகாந்த் வீட்டுக்கு முன்னால் அபுசாலி தெருவில், மாடியில் சின்னக்கடை இருக்கிறது. தக்காளி சாத ம், புளி சாதம், லெமன் சாதம், சாம்பார் சாதம் என வகை வகையான சித்ரான்னங்கள் வெறும் நாற்பது ரூபாய்க்கு என்றார். அடுத்த வாரமே அங்கே படையெடுத்தோம். படத்தில் காட்டப்பட்டிருக்கும் கருவேப்பிலை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் சேர்த்து எவ்வளவு தெரியுமா? ரூ.40 தான். தனியே வாங்கினால் இதே அளவுக்கு முழு சாதம் தருகிறார்கள். உதவி இயக்குனர்கள் வெகுவாய் சுற்றியலையும் இந்த ஏரியாவில் இம்மாதிரியான உணவகங்கள் அட்சய பாத்திரம். நல்ல தரமான,சுவையான சாத வகைகள். சரவண பவனிலேயே தயிர் சாதத்திற்கு ...

கள்ளச்சிரிப்பு - வெப் சீரீஸ்

கள்ளச்சிரிப்பு சென்ற மாதம் இணையம் எங்கும் பல விளம்பரங்கள். புதிய தமிழ் வெப் சீரீஸ்களைப் பற்றிய அறிவிப்புகள் என இருக்க, கோடம்பாக்கத்தில் ஷார்ட் பிலிம் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் வெப் சீரீஸ் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாது. இவைகளுக்கான மார்கெட் என்ன? எங்கு வியாபாரம் ஆகும்? எப்படி வியாபாரம் ஆகுமென்ற அடிப்படை கூடத் தெரியாமல் சில பல லட்சங்கள் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். சரி வியாபாரம் தெரியாமல் தான் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் வெப் சீரீஸ் என்றால் என்ன என்று கூட தெரியாமல் படமெடுத்துக் கொண்டிருக்கிறவர்கள் நிறைய. பேர். குறிப்பாய் கெட்ட வார்த்தைகளை மிகச் சுலபமாய் பேசக்கூடிய மீடியம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, சரளமாய் ஓ.த்தா.. ந்க்கொம்மா என்று ஆண் பெண் பேதமில்லாமல் பேசுவது தான் வெப் சீரீஸின் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டம் ஒன்று பரவலாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தமிழில் வெப் சீரீஸ் என்றவுடன் நியாபகம் வருவது பாலாஜி மோகனின் “ஆஸ் ஐயம் சபரிங் ஃபர்ம் காதல்” தான். அதில் மிக சாத...

விட்டுக்கொடுப்பதில்லை உன்னை -கவிதை?

விட்டுக்கொடுப்பதில்லை உன்னை நான் உன்னை எங்கேயும் யாரிடத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை நீயும் அது போல் தான் என உறுதியாய் நம்புகிறேன் நீ விட்டுக்கொடுத்ததாய் வரும் செய்தியை கேட்கும் போதும் நான் நம்புவதில்லை ஏனென்றால் நான் உன்னை எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை

Subbura – Blood on Rome -web series

Subbura – Blood on Rome அமெரிக்க படங்களுக்கும் மற்ற நாட்டு படங்களுக்கும் நிறைய வித்யாசம் இருக்கும். குறிப்பாய் ஐரோப்பிய படங்களுக்கும் ஹாலிவுட்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு. ஆக்‌ஷன் கதைகளைக்கூட கொஞ்சம் அழகுணர்வோடுதான் அவர்கள் எடுக்கிறார்கள். கொஞ்சம் எமோஷனுக்கு முக்யத்துவம் கொடுக்கிறார்கள். ஹாலிவுட் போல ப்ளாஸ்டிக் தனமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். நம்மூர்  படங்களுக்கும் கொரிய படங்களுக்கும், உடை, உணவு போன்றவற்றில் வித்யாசம் இருந்தாலும், குடும்ப அமைப்புகளில், உறவுகளில் உள்ள பின்னல்கள் எல்லாம் கிட்டதட்ட தமிழ் படம் போலவே இருப்பதால் தான் மிக ஈஸியாக சுட்டுத்தள்ள முடிகிறது.  படங்களைப் போலத்தான் வெப் சீரீஸ்களும். ஹாலிவுட் சீரீஸ்கள், கொரிய சீரிஸ்கள் என வரிசைக் கட்டி அணிவகுத்திருக்கும் நெட்பிளிக்ஸில் நிறைய ஐரோப்பிய சீரீஸ்களும் உண்டு. சமீபத்தில் பார்த்த சீரீஸ் சுப்பூரா எனும் இத்தாலிய சீரீஸ். வாடிகனுக்கு சொந்தமான நிலம் ஒன்று இருக்கிறது. அதை அடைய சமுராய் எனும் தாதா கும்பலும், அரசியல் பலமுள்ள ஒரு லாபியிஸ்ட் பெண்ணும், அந்த இடத்துக்கு பக்கத்திலேயே இன்னொரு இடம் வைத்திருக்கும் இன்னொரு த...

உயிர் பெரும் பி & சி

உயிர் பெரும் பி & சி ஒரு வளர்ந்து வரும் நடிகன் ஸ்டார் ஆவது பி &சி எனும் ஏரியாக்களில் வெற்றிக் கொடி நாட்டும் போதுதான். அப்படித்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய்காந்த் என வரிசைக் கட்டி வென்றவர்கள். ஆனால் அவர்களுக்கான படங்கள் சமீபகாலமாய் வருவதில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம் வந்தா மட்டும் ஓடிருதா? என்பார்கள். ஆனால் டிஜிட்டல் வருவதற்கு முன் பிலிம் காலங்களில் ஒரு படம் சிட்டிக்களில் ரிலீஸ் ஆகி, மெல்ல, அடுத்தடுத்த செண்டர்களுக்கு சென்று அங்கும் ஒரு பெரிய ரவுண்ட் ஓடி மூச்சு வாங்கி, பிரிண்ட் தேய்ந்து புது பிரிண்டுகள் போடப்பட்ட காலமெல்லாம் இருக்க, இன்று ஒரே நாளில் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை செண்டர்களிலும் படங்களை திரையிட முடிகிறது. அதனால் பி & சி எனும் ஷிப்டிங் மார்கெட்டே இல்லாமல் போய் விட்ட நிலையில், ஒரே நேரத்தில் அத்துனை அரங்குகளிலும் வெளியாகும் படங்களுக்கான வரவேற்பு கிடைக்கிறதா? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். சமீபத்தில் எங்களது “6 அத்யாயம்” திரைப்படத்தை ஒர் பி செண்டர் ஏரியாவில் வெளியிட்டோம். திரையரங்கு உரிமையாளருக...