Posts

Showing posts from May, 2019

எலி - என் கதை.

பெட்ரோல் தாறு மாறாய் விலை ஏறிக் கொண்டிருந்த நேரம். பத்து நாட்களுக்கு மேல் காரை எடுக்கவில்லை. அவசரம் இல்லாமல் போக வேண்டிய வேலை இருந்ததால் காரை எடுக்கப் போனேன். காரின் ஆட்டோ லாக்கிங் சிஸ்டத்தில் இடது பக்கம் ஒர்க் ஆகவில்லை. என்னடா? என்று யோசித்து கொண்டே டாஷ்போர்டை திறந்த போது அதில் வைத்திருந்த பேப்பர்கள் எல்லாம் சுக்கல் சுக்கலாய் இருந்தது. எலி கடித்து ரெண்டொரு புழுக்கையையும் போட்டிருந்தது. காரினுள் எலியா? எப்படி? என்று யோசித்துக் கொண்டே காரிலிருந்து வெளியே வந்து ஒரு சுற்று காரை சுற்றிப் பார்த்தேன். வாட்ச்மேன் தெலுங்குக்காரர் “என்னா சார்?.” “கார்ல எலி பூகுந்துருச்சுப் போல.. பேப்பரை எல்லாம் துண்டு துண்டா கடிச்சி வச்சிருக்கு” என்றேன். ”ஆமா சார். ரேத்திரி பூரா குட்டிக் குட்டி எலிங்கு காரு மேல ஓடுதுங்க..இப்டிதான் என் வீட்டாண்ட ஒருத்தர் புது காரு. ஒரே நாத்தம் அடிக்குதேன்னு டிக்கிய தொறந்து பார்த்தா அழுகுன தக்காளி, முட்டை கோசு எல்லாம் போட்டு வச்சிருக்கு. வயரெல்லாக் கடிச்சி வச்சிருக்கு. பத்தாயிரம் ரூபாய் செலவு.” என்றார். ஒரு பக்க கதவு மட்டும் பிரச்சனை எனவே அதை சரி செய்ய ஜி.பி ரோட...

சாப்பாட்டுக்கடை -கும்பகோணம் சுப்பையா மெஸ்

Image
ஒரு காலத்தில் பவன் என்று சைவ ஓட்டல்களுக்கு பெயர் வைத்தால் பெரிதாய் கல்லா கட்டலாம் என்று நினைத்து ஏகப்பட்ட பவன்கள் திறந்தார்கள். அதில் தரமானது மட்டுமே நிலைத்திருக்க மற்றவை வழக்கம் போல.  அது போலத்தான் மெஸ் எனும் தாரக மந்திரத்தை தற்போது யார் வேண்டுமானாலும் வைத்து பணம் பண்ண பார்க்கிறார்கள். ஆனால் இங்கேயும் அதே விஷயம் தான் தரமும் பணமும் மட்டுமே மெஸ்ஸின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வளசரவாக்கத்தில் ’கும்பகோணம் சுப்பையா மெஸ்” என்ற பெயர் பலகை என் ஆர்வத்தை தூண்டியது. முழுக்க முழுக்க சைவ மெஸ். காலையில் பேக்கேஜாய் பூரி, பொங்கல், இட்லி, வடை, கல்தோசை என வரிசைக்கட்டி டிபன் வகைகள். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு பூரி, கொஞ்சம் பொங்கல் இது 45 ரூபாய்க்கு மினி டிபனும்,  மதியம் 60 ரூபாய்க்கு அட்டகாசமான அன்லிமிடெட் மீல்ஸ். ஒரு கூட்டு, பொரியல், அப்பளம், சாம்பார், ரசம், காரக்குழம்பும், மோர் என சுவையான சாப்பாடு.  அதுவும் ஏசி ஹாலில். பொரியல் வகைகள் நாளுக்கு நாள் மாறுகிறது. வெஜிட்டேரியன் சாப்பாடு அதுவும் மெஸ்களில் அத்தனை சிலாக்கியமாய் இருப்பதில்லை. அப்ப...

உறுத்தல் - விகடன் சிறுகதை.

பாத்ரூமிலிருந்து பாவாடையை மார்பு வரை மேலேற்றிக் கட்டிக் கொண்டாள் தமயந்தி. தலையின் ஈரம் போக துண்டைக் எடுத்து கட்டியபடி, கண்ணாடியில் முகம் பார்த்தாள். ’கருப்பென்னடி கருப்பு. பெருமாள் கூட கருப்புத்தான். ஒலகமே அவன் காலடியில கிடக்கலை. அதும் போல என் தமயந்தி காலடில கிடக்க ஒருத்தன் வராமயா போயிருவான்?” செத்துப் போன லெட்சுமி பாட்டியின் குரல் ஏனோ நியாபகத்துக்கு வந்தது. வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க “சுபா.. யாருன்னு பாரு?” என்று உள்ளிருந்து ஹாலில் டேப்பில் செஸ் ஆடிக்கொண்டிருக்கும் தன் மகளுக்கு குரல் கொடுத்தாள். பரபரவென நெஞ்சிலிருந்த பாவாடையை இடுப்பில் கட்டி, உள்பாடி, ஜாக்கெட்டை போட்டு, சட்டென புடவைக் கட்டி, மீண்டும் ஒரு முறை கண்ணாடி பார்த்து ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு திரும்பிய போது சுபா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து “யாரோ சுந்தர்னு ஒரு அங்கிள் வந்திருக்காரு” என்றாள். சுந்தர் என்று கேட்ட மாத்திரத்தில் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். சுந்தர் மாமாவே தான். நெஞ்சமெல்லாம் படபடவென அடித்தது. @@@@@@@@@@@@@@@ ”நல்ல பையன். அற்புதமான நளபாகக்காரன். நல்ல சம்பாத்தியம...