Posts

Showing posts from December, 2019

Gantumoote - காதலெனும் சுமை.

Image
எத்தனை சினிமா பார்த்துவிட்டு அசைப்போட்டுக் கொண்டே இருந்திருக்கிறோம்?. என்று யோசித்தோமானால் கொண்ட்டாட்ட சினிமாக்கள் மிக சிலதைத் தவிர மனதுக்கு நெருக்கமான கதைகளை கொண்ட படங்களையே. எல்லா படங்களும் எல்லாருக்கும் பிடித்துவிடுவதில்லை. ஆனால் காதல் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் காதல் கதைகள் பெரும்பாலும் ஆண்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டு பழக்கமாகி விட்டதினால்  ஈஸ்ட்ரோஜோன் குறைவாய் போன பெண் போல ஆகிவிடும். எமோஷனல் வேல்யூ குறைந்து போய்.  இந்த கண்டுமூட்டே ஒன்றும் இது வரை யாரும் சொல்லாத காதல் கதையில்லை. ஆனால் பெரும்பாலும் சொல்லப்படாத பெண்ணின் பாயிண்ட்டாப் வியூவில் சொல்லப்பட்டிருக்கும் கதை. அத்தனை க்யூட். மீரா தேஷ்பாண்டே எனும் பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கும் அவளின் க்ளாஸில் படிக்கும் மதுசூதனுக்கும் இடையே வரும் முதல் காதலைப் பற்றியதுதான்.  சில பள்ளி ஜோடிகளைப் பார்கையில் இந்த பொண்ணு எல்லாம் எப்படி இவனோட சுத்துது என்ற கேள்வி தோன்றாமல் இருக்காது. நாம் அந்த வயதில் சுற்றும் போது அப்படித்தான் அந்நாளைய பெருசுகள் நினைத்திருக்கும். ஹம் ஆப் கே ஹே கோன் இந்தி படத்தை ப...

சாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்

Image
  ரொம்ப வருடங்களுக்கு முன் திருச்செந்தூரில் மணி அய்யர் கடையில் டிபன் சாப்பிட்டிருக்கிறேன். மணி அய்யர் ஓட்டலை நினைத்தவுடன் சட்டென நாக்கில் சாம்பார் நியாபகம் வந்துவிடும் எனக்கு. சென்னையில் பத்து நாட்களுக்கு முன் ஆரம்பித்திருக்கிறார்கள். அசோக்நகரில்.  ஆர்வமாய் போன வாரம் போன போது க்ளோஸ் ஆயிருச்சு என்றார்கள். நேற்றைக்கு நண்பருடன் போனேன். 10.30 மணிக்கு நல்ல கூட்டம். சாம்பாரின் வாசம் மூக்கை துளைத்தது.  நானும் நண்பரும் போய் உட்கார்ந்தோம். எதில ஸ்டார்ட் பண்ணலாம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் “பொங்கல் இருக்கா? “ என்றேன். “இல்லீங்க ஒன்பது மணிக்கெல்லாம் முடிஞ்சிரும்” என்றார்கள். ”சரி ஆளுக்கு ரெண்டு இட்லி கொடுங்க” என்று ஆர்டரை ஆரம்பித்தோம். இட்லி ரொம்பவும் மிருதுவாக இல்லாமல் இருந்தது கொஞ்சம் குறைதான். பட் சூடான சாம்பார். மூன்று சட்டினிகள், கூடவே பூண்டு போட்ட, மிளகாய்பொடி. அதற்கு தனியாய் பணம் எல்லாம் இல்லை. எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு போட்டுக் கொள்ளலாம். சாம்பாரையும், பூண்டு மிளகாய் பொடியும் ஆசம். அடுத்ததாய் நல்ல மொறு மொறு ரவா தோசை. நிஜமாகவே ராவா தோசை என்று சொன்னால் மிகச் ...