ஐ லவ் யூ மேன் - சுஜாதா

24 சலனங்களின் எண் புத்தகம் வெளியானதும், பரவலாய் சுஜாதாவின் கனவு தொழிற்சாலையை விடவும் சிறந்த நாவல் என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது . இதோ இன்னொரு சுஜாதா என்ற விமர்சனமும் வந்தது . இவருக்கே தனி சுவாரஸ்ய நடை இருக்க எதற்கு சுஜாதாவை ஆங்காங்கே பிரதியெடுக்கிறார் என்று கூட நண்பர் ஒருவர் விமர்சித்திருந்தார் . இவனெல்லாம் சுஜாதாவா ? சும்மா ஹம்பக் . என்று இன்னொரு பக்கம் வசை பாடியும் கொண்டிருக்கிறார்கள் . எனக்கு எதுவும் மண்டையில் ஏறவே இல்லை . முதல் சிறுகதையான “ எங்கிருந்தோ வந்தாள் ” விகடனில் வெளியான போது ஆசிரியர் கண்ணன் படித்துவிட்டு பழைய சுஜாதா மாதிரி இருக்குனு சொன்னாரு என்று சொன்னார்கள் . உண்மையோ இல்லையோ நூறடி பறந்தேன் . இதோட எழுதவே வேண்டாம் என்று நினைத்தேன் . அத்தனை உற்சாகத்துக்கான காரணம் சுஜாதா . சுஜாதாவை காப்பியடிக்கிறான் என்று என்னை குற்றம் சாட்டினால் வாய் நிறை பல்லாய் நன்றி சொல்லுவேன் . அவரை காப்பியடிப்பது என்பது அத்தனை சுலபமான விஷயமா ?. காப்பியடிப்பதாய் கனவு வேண்டுமானால் காணலாம் . ...