ஏழரை சங்கரன்.
சாரதியின் இறுதி ஊர்வலத்தில் பழைய கல்லூரி நண்பர்கள் பலர் வந்திருந்தார்கள். 30 வருட கல்லூரி நட்புகளின் சந்திப்புக்கான இடமாய் இல்லாவிட்டாலும், “நம்ம செட்டுல யார் யாரெல்லாம் உயிரோட இருக்காங்க?” என்று பாசிட்டிவாய் பேசிக் கொண்டு வந்தார்கள். கூட்டத்தில் ஒருவனைப் பார்த்த போது லேசாய் அடிவயிற்றில் கத்திக்குத்து. உடன் நடந்து வந்து கொண்டிருந்த மணியை அழைத்து “அவனைப் பார்த்தா நம்ம செட் சங்கரன் போல இல்லை?” என்று கேட்டேன். மணி அவனை உற்றுப் பார்த்தான். எனக்கு அவன் தான் என்று உறுதியாய் மனதில் மணி அடித்தது. வித்யாசமான முகம் அவனுடயது. சின்ன உடம்பில் கொஞ்சம் பெரிய தலை. அதை கொஞ்சம் கம்பரசர் கொண்டு நசுக்கியதைப் போல மண்டை நசுங்கி, மூக்கு மட்டும் பிரதானமாய் நீண்டு, நொடிக்கொருதரம் இடது தோளை ஒரு மாதிரி கரண்ட் ஷாக் அடித்தார்ப் போல விதிர்த்து கொள்ளும் பாடி லேங்குவேஜோடு, ப்ரொபைலில் பார்த்தால் கொஞ்சம் கருடனைப் போல தெரிவான். இத்தனை வருடம் கழித்து அவனைப் பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை. அதுவும் சாரதியின் இறுதி ஊர்வலத்தில். ஆனால் இந்தக்கதை சாரதியைப் பற்றி மட்டும் அல்ல. வீட்டின் காலிங் பெல் அடித்த சத்தம் கேட்டு...