Posts

Showing posts from February, 2021

சாப்பாட்டுக்கடை - கறி தோசை

Image
சாலிகிராமத்தில் ப்ரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரே பிரபல டீக்கடையான காவேரி கார்னர் பக்கத்தில் சட்டென தெரியாத வண்ணம் ஒரு கறி தோசை கடை உதயமாகியிருப்பதை கண்டு கொண்டேன்.  சரி ஒரு நடை போய் பார்ப்போம் என்று மெனுவைப் பார்த்ததில் கறி தோசையில் சிக்கன், மட்டன் கறி தோசை வகைகள் மட்டுமில்லாமல், பன் பரோட்டா எல்லாம் போட்டிருந்தார்கள். சரி முதல் முயற்சியாய் மட்டன் கறி தோசை சாப்பிடுவோம் என்று ஆர்டர் செய்தேன். அதற்கு முன்னால் ஒரே ஒரு பன் பரோட்டா டேஸ்ட் செய்வோம் என்று ட்ரை செய்ததில் பரோட்டாவை பன்னாக செய்து ஹாட் பேக்கில் போட்டு வைத்திருந்ததினால் பன் அமுங்கிப் போயிருந்தாலும், கூட தொட்டுக் கொள்ள, மட்டன், நாட்டுக்கோழி க்ரேவி, மீன் குழம்பு, குடல் குழம்பு என அதகளப்படுத்தினார்கள்.  டிபிக்கல் கிராமத்து ஸ்டைலில் இருந்தது குழம்பு வகைகள். குறிப்பாய் மட்டன் மற்றும் நாட்டுக் கோழி குழம்பைச் சொல்ல வேண்டும். கொஞ்சம் பொறுமையாய் காத்திருந்த பின் மட்டன் கறி தோசை பிட்ஸா போல வெட்டப்பட்ட பீஸ்களாய் வந்தது. வழக்கமாய் கொஞ்சம் தடிமனாய் இருக்கும் கறி தோசை கொஞ்சம் மெலிந்திருந்தார்ப் போல இருந்தது. அடித்தளம் நல்ல கிரிஸ்பியாகவும், ...

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -2

Image
  பு(து)த்தகம் நான் ஷர்மி வைரம் (A) நாவலுக்கு A சர்டிஃபிகேட் கொடுத்தமைக்காகவே எழுத்தாளர் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள் . சாதாரண வைர கொள்ளை கடத்தல் தான் நாவலின் கரு.ஆனால் அதை மிகவும் ரசிக்கும் படியாய் காமத்தோடு கதையையும் எழுதியிருப்பது தான் மிக சிறப்பு.1998 - 2000 வாக்கில் எப்பொழுதோ கேள்விபட்டிருக்கிறேன் கோவாவில் ஆண் ஐட்டங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.வெளிநாட்டினரோடு செக்ஸ் வைத்துக் கொண்டு பணமும் மகிழ்ச்சியையும் பெறுவர் என்று. அவர்களின் பெயர் ஜிகிலோ என்று இன்றைக்குத் தான் அறிந்து கொண்டிருக்கிறேன்.சென்னையில் இதற்கென ஒரு கூட்டமே இயங்கி வருவதை கண்டு மனம் அதிசயமும் ஆச்சர்யமும் அடைகிறது.கேபிள் சங்கர் தன் வசீகர எழுத்தில் இவர்களின் செயல்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாக எழுதி இருப்பதை பார்க்கும் போது கதை தானே என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை. மிகவும் டிடெய்ல்டு ஆன நாவல்.கதையும் விறுவிறுப்பாகவே செல்கிறது. நான் என்கிற ராஜன், ஷர்மி என்கிற பெண், வைரம் என்கிற ஆள் அல்லது வைரக் கடத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.மூவரையும் தனித்தனியாய் விவரித்துக் கொண்டு ஒற்றைப் புள்ளியில் இணைத்து பின் கதையை ஆச்சர்யத்...